Showing posts with label Edison vs Nicolo tesla in tamil. Show all posts
Showing posts with label Edison vs Nicolo tesla in tamil. Show all posts

Thursday, 29 June 2017

எடிசனா அல்லது நிகோலா டெஸ்லாவா ?



இவர் நிகோலா டெஸ்லா .

இவருக்கு இந்த உலகம் பல பெயர்கள் கொடுத்துள்ளது.
பைத்தியக்காரன்!
மனநலம் சரி இல்லாதவன் !
பிழைக்க தெரியாதவன்!
கேனையன் இன்னும் பல பெயர்கள் உண்டு இவருக்கு !

உண்மையில் யார் இவர் ?

இந்த அறிவியல் உலகம் என்று வணிகத்திற்கு அடிமையானதோ , அதில் மாட்டி சிக்கி சின்னாபின்ன மான ஒரு அறிவாளி !
அறிவியலின் மாமேதை!
20 ம் நூற்றாண்டுக்கு சொந்தக்காரர்!
மின்னியல் மற்றும் காந்தவியலின் உடைமையாளர்!
ரோபோக்களின் தகப்பன்!
ரிமோட்டை 1880 களிலேயே புழக்கத்தில் கொண்டு வந்த ஞானி !
ரேடியோவின் உரிமையாளர்!
எக்ஸ் ரே என்பதின் சொந்தக்காரர்!
மின்சாரத்தின் முழு உரிமையாளர்!
இன்னும் பல!

அப்படியா ?

இல்லை இல்லை , இருக்க முடியாது !
மின்சாரத்தை கண்டறிந்தவர் எடிசன் 
ரேடியோவை கண்டறிந்தவர் மார்க்கோனி 

நம் பள்ளி பாடங்கள் அப்படிதான் நமக்கு சொல்லி தருகின்றன!ஏன் நம்  புத்தகங்கள் இப்படி சொல்ல வேண்டும் .  காரணம் என்ன ?

சொன்னால் நம்பமாட்டோம் .ஆனால் உண்மை இது தான் ! டெஸ்ட்லே பெயர் வர வேண்டிய இடத்தில எல்லாம் வராமல் போக காரணம் 

இலுமினாட்டிகள் !


டெஸ்ட்லே ஆஸ்திரிய நாட்டின் 1856 ல் பிறந்தார். அது ஒரு செர்பிய குடும்பம். நல்ல அறிவு .ஞானம் இவரது தாயார் சிறு சிறு வீட்டு உபயோக பொருட்களை செய்வதை பார்த்து பழகிய டெஸ்லா . அறிவியலில் தன்னால் எல்லாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உடையவர். இவரது அறிவு பயன்பட வேண்டும் என்று விரும்பிய அவரது நண்பர் ஒருவர் உதவியுடன் , அமெரிக்காவில் உள்ள எடிசனின் ஆய்வகத்தில் உதவியாளராக பணியில் சேர்கிறார். இப்போது தான் எடிசனின் ஆய்வகம் பரபரப்பாகிறது .

இதற்கு இடையில் , எடிசன் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்வோம். எடிசன் சிறு வயதில் ஒன்றும் பணக்காரர் அல்ல. அவரது தகப்பனார் ஒரு தச்சர் . மற்றும் சில நாட்கள் களங்கரை விளக்க காவலாளி . ஆனால் எடிசனுக்கோ அறிவியல் ஆர்வம்  இருந்தது. ஆனால் அவரது காது கேளாத தன்மையினால் பள்ளிகள் அவரை புறக்கணித்து விட்டன. வீட்டிலேயே இருந்து , மைக்கேல் பாரடே வின் மின்சக்தி  பயிற்சி ஆய்வுகள் செய்தார். ரிச்சர்ட் பார்க்கர், மற்றும் தாமஸ் பைன் எழுதிய நியூட்டன் தியரி ஆகியவற்றை பயின்றார். ஓரளவிற்கு அறவியல் ஆய்வில் பெயர் வாங்க ஆரம்பித்தார். 

இது போதுமே இலுமினாட்டிகளுக்கு !

ஒருவர் கொஞ்சம் திறமையானவராக இருக்க வேண்டும்! 
பெற்றோர் இல்லாமல் இருக்க வேண்டும்.அல்லது பெற்றோர் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடி வந்தவராக இருக்க வேண்டும்.அல்லது பெற்றோர் மிகவும் ஏழ்மையாக இருக்க வேண்டும்!
சிறு உடல் குறைபாடு இருக்க வேண்டும் !
இதையும் தாண்டி இலுமினாட்டிகளின் கடவுளை அல்லது அந்த கடவுளின் வடிவங்களை வணங்க வேண்டும் !
கொஞ்சம் பொய், கொஞ்சம் சூது ,  இதெல்லாம் இருக்க வேண்டும் !

இவ்வளவுதாங்க இலுமினாட்டிகளின் குழுவில் சேர அடிப்படை தகுதிகள் ! 
அத்தனையும் எடிசனிடம் இருந்தன. ஆமா அவர் வணங்கியது ஜீயஸ் எனும் கடவுளை ! அது டைஸம் எனும் மதத்தை சேர்ந்தது . இந்த ஜீயஸ் வேறு யாரும் அல்ல . இலுமினேட்டி அடையாளத்தில் உள்ள கண்ணுக்கு சொந்தக்காரரான குரோசின் மறுஉருவம் !

இப்போ எடிசன் கிடுகிடு என வளர்ந்தார். ஆய்வுகளுக்கு தேவையான பணம் அதிகமாகவே கிடைத்தது . 1880 ல் அறிவியல் பத்திரிக்கை  ஒன்றை ஆரம்பித்தார் எடிசன்.அது அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா அரசின் அறிவியல் பத்திரிகையாக மாறியது. அந்த அளவிற்கு செல்வாக்கு பெருகியது எடிசனுக்கு!

இவர் 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்பு உரிமம் பெற்றுள்ளார். இதில் 90 % இவரது ஆய்வக ஊழியர்கள் கண்டறிந்தது என்று கூறப்படுகிறது.

எடிசனின் விளக்கத்தை இத்தோடு நிறுத்தி கொள்வோம்! 




இந்நிலையில் தான் 1884 ல் டெஸ்லா எடிசனின் ஆய்வகத்தில் பணிக்கு சேர்ந்தார். அப்போது முடிக்க முடியாத சில வேலைகளை டெஸ்லா செய்து காட்டுவதாக , எடிசனுக்கு டெஸ்லாவிற்கும் இடையே ஒரு சிறு சவால்.

எடிசன் கூறுகிறார் , இதை மட்டும் நீ முடித்து விட்டால் , உனக்கு 50000 டாலர் பரிசு தருகிறேன் என்று !

இதை நம்பி டெஸ்லாவும் செய்து விடுகிறார். அப்போது சிரித்து கொண்டே எடிசன் கூறுகிறார், உனக்கு அமெரிக்கா ஜோக்குகள் பற்றி தெரியாதா ?

நான் கூறியது எல்லாம் ஜோக் என்று கூறி விட்டார் எடிசன். கிட்டத்தட்ட மிகப்பெரிய ஏமாற்றம் டெஸ்ட்லேவிற்கு !

அங்கு இருந்து வெளியேறினார். காப்புரிமை வழங்கும் அதிகாரி உதவியுடன் இரு பெரும் பணக்காரர்களை சந்தித்தார். ( ராபர்ட் லேன் மற்றும் பெஞ்சமின் வேல் ) டெஸ்லா எலக்ட்ரிக் லைட் அண்ட்  உற்பத்தி நிறுவனம் உருவானது .
( Tesla Electrc Light & Manufacturing )
மிகுந்த சந்தோசத்துடன் மீண்டும் ஆய்வில் ஈடுபட்டார். இப்போது தான் எடிசன் இவர் உருவாக்கிய கோட்பாடுகளை கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை  உருவாக்கி அதற்க்கு காப்புரிமையும் பெற்றார். மீண்டும் இப்போது பிரச்சனை . அந்த இரு பணக்காரர்களுக்கும் இடையே சண்டை !நிதி உதவி தடைபட்டது. 

மீண்டும் எடிசனின் எதிரி நிறுவனமாகிய வெஸ்டிங் ஹவுஸ் எனும் நிறுவனத்தோடு இணைந்து ஆய்வு மேற்கொள்கிறார். இங்கு ஒப்பந்த அடிப்படையில் கையொப்பம் பெற்று கொண்ட அந்நிறுவனம் இவரது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்று கொள்ளை லாபம் ஈட்டியது.
இவருக்கு கிடைத்தது சொற்ப வருமானமே !
இங்கும் ஏமாந்து போனார். 

1894 எக்ஸ் ரே எடுத்து வெளியிடுகிறார் டெஸ்லா. அதோடு டெஸ்லா சுருள் உருவாக்குகிறார் .



1896 ம் ஆண்டு ஒரு தொழில் அதிபரை சந்திக்கிறார் டெஸ்லா . அவர் பெயர் ஆஸ்டின். இவர் யார் என்பது ஓரளவிற்கு இலுமினேட்டி பற்றி தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். இங்குதான் விவேகானந்தரையும் சந்திக்கிறார் டெஸ்லா . ( விவேகானதரும் ஒரு பிரேமசினரி )

அப்போது விவேகானந்தர் கூறுகிறார். அறிவியலை வேதங்கள் மூலமாக விளக்குகிறார். ஆனால் டெஸ்லாவிற்கோ நியூட்டன் கொள்கை மீது அபார நம்பிக்கை . எனர்ஜி சார்ந்த அவரது வேதத்தை ஏற்க முடியாது  என்று கூறுகிறார். 

பின்னாளில் இதை நிரூபித்த டெஸ்லா , அதை விவேகானந்தர் எப்படி கூறினாரோ அவர் கூறிய அதே கோட்பாட்டை , அதே சமஸ்க்ரிதத்தில் பதிவிடுகிறார். 

இதற்க்கு இடையில் , 1898 ல் ரேடியோ கதிர்களை கண்டறிந்தார். அதனை ராணுவத்தில் பயன்படுத்தலாம் என்று கோரிக்கை விடுத்தார் . அது ஆய்வுக்கு பிறகு, ஏற்கப்படும் என்று கூறப்பட்டது. பிறகு மார்கோனி அதை கண்டறிந்தார் என்று 1906 ல் வெளியிடப்பட்டது. அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் உறவினர் தான் மார்கோனி என்று கூறப்படுகிறது.




இப்போ 1901 ல் ஜே.பி.மோர்கன் , ரொக்பெல்லேர் , வார்பார்க் எனும் இலுமினேட்டி கூட்டத்தின் நிதி உதவியோடு ஆய்வு களை தொடர்கிறார். இவர் எடிசனைதான் எதிர்க்க நினைத்தார்.ஆனால் எடிசனின் கூட்டாளியோடு போய் கூட்டு சேர்கிறார்.

இவரது கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் பரிசோதனைக்கு எடிசனிடம்தான் செல்லும். எடிசன் எந்திரன் திரைப்படத்தில் வரும் professor பேசும் அதே வசனத்தை தான் கூறுவார்.இது மக்களுக்கு ஆபத்தானது. இதனால் எந்த பயனும் இல்லை என்று !

அதையும் தாண்டி காப்புரிமை குழுமத்தால் , அவரது கண்டுபிடிப்பை பயன்படுத்தி நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டது . அன்று முதல் அமெரிக்கா ஒளி வெள்ளத்தில் மிதந்து ,அறிவியலின் சொர்க்க பூமிபோல் ஆகியது. அதற்க்கு காரணமாக டெஸ்லாவை மறந்து விட்டது.

ஒரு வழியாக 300 பொருள்களுக்கு காப்புரிமை பெற்றார் .அதில் இருந்து நிதியும் பெற்றார்.

மோர்கன் நிதிஉதவியால் , டெஸ்லாஸ் வார்டய்ணகிலிஃப் பிளான்ட் உருவாக்கப்பட்டது .( Tesla 's  Wardencliff Plant )
இலவச மின்சாரம் தயாராகிவிட்டது. டெஸ்லா கூறுகிறார்.மின்சாரத்திற்க்காக நிலக்கரி தோண்டாதீர்கள் ! காஸ் எடுக்காதீர்கள் ! ஆயில் எதுவும் பயன்படுத்தாதீர்கள் ! நம்மை சுற்றிலும் எனர்ஜி பரவி கிடக்கிறது ! அதில் இருந்து அனைவரும் இலவசமாக மின்சாரம் பெற்று கொள்ளலாம் என்று !


தன சொந்த லாபத்திற்காக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று டைட்டானிக் கப்பலை மூழ்கடித்து , லாபம் தேடிய மோர்கன் ஒப்பு கொள்வானா ? நிதியை நிறுத்தினான்.

காப்புரிமை மூலம்  பெற்ற நிதி உதவியும் முதலாம் உலக போரை காரணம் காட்டி  நிறுத்த பட்டது. 

அவரது கண்டுபிடிப்பு அழிக்க பட்டது.




இதற்க்கு மேலும் டெஸ்லாவை விடுவது சரியில்லை என்று இலுமினேட்டி கூட்டம் முடிவு கட்டியது .

விளைவு மனநோயாளி என்று நிரூபிக்கப்பட்டார். இதில் ஒரு கதையும் உண்டு. சிறுவயதில் அவரது இளைய சகோதரர் அவர் கண் முன்னாள் இறந்தார் என்பதால் எப்போதுமே அவர் கொஞ்சம் மனநலம் சரி இல்லாமல் தான் இருந்தார் .இப்போது இன்னும் பெரிதாகி விட்டது என்று நிரூபிக்கப்பட்டது.

1943 ல் இந்த மாமேதை ,தனது அறையில் இறந்து கிடந்தார்.

இதில் முக்கிய விஷயம் என்னவெனில் 2 ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்கா நீதிமன்றம் ரேடியோவை கண்டறிந்தது டெஸ்லாத்தான் ,மார்கோனி அல்ல என்று தீர்ப்பளித்தது .

இந்த செய்தி என்று நம் நாட்டு புத்தகங்களில் இடம் பிடிக்குமோ ?


குறிப்பு :

(இந்த பதிவில் டெஸ்லாவின் அறிவியல் குறித்து போதிய குறிப்புகளை நான் கொடுக்க வில்லை. ஆனால் அவர் யாரால் ஏமாற்றப்பட்டார் என்பதை கூறுவதே இந்த பதிவின் நோக்கம். பலரும் டெஸ்லாவை ,ஏதோதோ பெயரில் அழைப்பதை நிறுத்தவேண்டும் என்பதே இதன் நோக்கம். குறிப்பாக எடிசனின் அபிமானிகள் )


இவரது கண்டுபிடிப்பு பயன்பாட்டில் இருந்திருந்தால் இன்று நம் நிலவளம் கொள்ளை போயிருக்காது . 

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...