Wednesday, 16 March 2016

காதல் எல்லாம் செய்யும் ! - love stories


காதல் வாழ்வில் எல்லாம் தரும் !
இன்பம்
துன்பம்
வீரம்
கோபம்
லட்சியம்
இலக்கு
இரக்கம்
என
காதல் விட்டு வைத்தது என
சொல்ல எந்த உணர்வும்
மீதம் இல்லை !

அலெக்ஷாண்டார் கிரகாம் பெல் :


அலெக்ஷாண்டர் க்ரஹாம் பெல் அவரது மனைவி மபெல் ஹப்பர்ட் , அவர்களது மகள்கள் எல்சியா மற்றும் மரியன்



பெல் தன்னிடம் படிக்கச் வந்த காது கேளாத மபேளை விரும்பி திருமணம் செய்து கொண்டவர்!
இப்படி சொல்லவதை விட மாபெல் எனும் பெண் தன்னைவிட 10 வயது மூத்தவரை விரும்பி
அவரையே மணந்தார் !

மாபெலின் காதல் பிரதிபலிப்புதான் 
காது கருவியும் 
தொலைபேசி கருவியும் !
பெல் 1922 ஆகஸ்ட் 2 ம் நாள் இறந்தார் !
மாபெல் 1923 ஜனவரி 3 ம் நாள் இறந்தார் !
இந்த இடைப்பட்ட 5 மாதங்கள் 
அவள் , அவளது கணவனை 
காண காத்திருந்த மாதங்கள் !
அவன் இல்லாமல் அவள் 
ரணப்பட்ட மாதங்கள் !

அவன் அவள் காது கேளாமை குறை தீர
வழி தேடினான் .
அவளோ அவன் வாழ்வோடு இணைவது
ஒன்றே
வாழ்வென மாறினாள் !

வாலெண்டினா தெரஸ்கோவா :

valentina tereshkova க்கான பட முடிவு

வாலண்டினா தெரஸ்கோவா

இவர் தான் விண்வெளிக்கு சென்ற முதல் பெண்.
1959 ல் சோவியத் ரஷ்யா வில் இருந்து விண்வெளியில் நடந்த முதல் ஆண் யூரிகாகரின் 
அதன் பிறகு பெண் யாரேனும் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பலாம் என்று முடிவெடுக்க பட்டது
500 விண்ணப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தகுதியானவர் தான்
வாலண்டினா தெரஸ்கோவா !

அப்போது அவர் ஒருவரை காதலித்து கொண்டிருந்தார் .
அவர் வேறு யாரும் இல்லை !
முதன் முதலாக விண்வெளியில் இருந்து தொலைக்காட்சி நிகழ்சிகளை 
ஒலிபரப்பியவர் அண்டெரியன் நிகோலயாவ் 
வோஸ்டாக் 3 மற்றும் சொயச 9 எனும் இரண்டு space flights ஐ உருவாக்கியவர் .
1962 ல் வெற்றிகரமாக இவரது லட்சியங்கள் நிறைவேறின .

உடனே தெரசகொவாவிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார் .
அவரோ உங்கள் பெயர் வரலாற்றில் இடம் பெற்றதுபோல் என் பெயரும் இடம்பெற்ற பின்னரே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி விட்டு

அதற்காக இடையறாது உழைத்தார் . கடுமையான பயிற்சிக்கு பின்னரே விண்வெளி செல்லும் வாய்ப்பு 1963 ஜூன் 13 ல் அவருக்கு கிடைத்தது .

வெற்றிகரமாக 2 நாட்கள் 23 மணிநேரம் 12 நிமிடங்கள் விண்வெளியில் இருந்து விட்டு , தன லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் தான்
தன காதலனை கை பிடிக்கிறார் .
அதே ஆண்டு 1963 ல் நவம்பர் மாதம் தன காதலனை , மணந்து கொண்டார் வாலண்டினா தெரஸ்கோவா !


தன கணவருடன் வாலண்டினா

காதல் கண்டுபிடிப்பை கொடுக்கும் !
காதல் விண்வெளி ஆய்வை வளர்க்கும் !
உணர்ச்சி பிழம்பாய் மாற வைக்கும் !

வென்ற காதல் கொடுத்தது !
தோற்ற காதல்
இல்லை இல்லை
தோற்கடிக்க பட்ட காதல்
கொஞ்சம்
பழிவாங்கியது !
அதுதான் ஔரங்கசீப் காதல் !


aurangzeb க்கான பட முடிவு

1637 ம் ஆண்டு ஔரங்கசீப் , டில்ராஸ் பானு பேகம் என்ற பெண்ணை மணக்கிறார் . அத்திருமணம் அவர் மனத்தால் ஒப்பிய திருமணம் அல்ல .



அவர் ஹிரா பாய் என்ற தக்கான தேசத்து பெண்ணை விரும்புகிறார் .
எப்போதும் ஔரங்கசீப், இங்குதான் இருக்கிறார் .

அவளை ஆட சொல்லி ரசிக்கிறார் !
அவள் அழகில் மயங்கி , சிந்தனையற்று வாழ்கிறார் !

அவருக்கு அவள் மீது கொள்ளை ஆசை !
அவளோ அடிமை பெண் !

எப்படி சமுதாயம் ஒப்பு கொள்ளும் !
இருப்பினும் அவன் இளவரசன் அல்லவா ?

எனவே ராஜபுடின அரசுகள் அவரை எதிர்த்து கேட்கவில்லை !
இருப்பினும் மேல் இடத்து உத்தரவு

நடனம் ஆடிகொண்டிருந்த ஹீரபாய்
அவன் கண் முன்னே சரிந்து இறந்து போகிறாள் !

தாளாத துக்கம் 
வெளிவர விரும்பவில்லை அவன் 
அவள் , அவன் முன்னே இனி ஆட மாட்டாள் 
அவனால் அவளை இனி ரசிக்க முடியாது 

அவன் பார்த்து பார்த்து ரசித்த
கண்கள்
இனி அவனோடு பேசாது !

அவள் பாடல் இனி ஒலிக்காது
இவனும் இனி மயக்கத்தில் இருக்க மாட்டன் .

அப்போதுதான்
ஷாஜஹான் , தன மனைவிக்கு தாஜ்மஹால் எனும்
அற்புதத்தை எழுப்புகிறான்.

கோபம் கொண்ட ஔரங்கசீப்
டெல்லிக்கு விரைகிறான்
ஷாஜஹானை சிறை பிடிக்கிறான் !

மூத்த சகோதரர்களை அழிக்கிறான் !
நான் தான் மன்னன் என 
தானே அறிவித்து கொள்கிறான் !

சமாதனம் பேச வந்த 
குருனாக்கிடமும் 
கொடூரமாய் நடந்து கொள்கிறான் !

ராஜபுடின அரசுகளை எல்லாம் ஆட்டி படைக்கிறான்
ராஜபுதின அரசுகளின் கீழ் இருந்த இந்து மக்களுக்கு
வரி மேல் வரி விதித்து
கொடுமைகாரன் என்று பெயரும்  எடுக்கிறான் !

அவன் நெஞ்சில் ஈவு இல்லை
இரக்கமும் இல்லை
கோபத்திற்கு மட்டும்
அவனிடத்தில்
பஞ்சமில்லை !

பழிவாங்கும் உணர்விற்கு
ஒரு துளியும்
குறைவில்லை !


அவன் பானு பேகத்திற்கு பிறகு
யாரையும் மணக்க வில்லை !

அவன் முதுமை காலத்திலும்
அவன் நினைவுகளோடு வாழ்ந்தது
ஹீரா பாய் மட்டும்தான் !

அவன் செய்த எல்லா தவறுக்கும்
அடித்தளம் போட்டது
ஹீரா பாயின் மரணம் மட்டும் தான் !

அன்று அழிந்தது ராஜபுதின அரசுகள் மட்டுமல்ல !
முஹல் வம்சத்தின் அழிவும் தான் ஆரம்பமானது !

காதல் எல்லாம் செய்யும் !

இந்த மனித சமுதாயத்தின் ஆரம்பம் முதல் 
எல்லா தொடக்கமும் , முடிவும் 
உருவானது 
காதாலால் மட்டுமே !

காதலை வாழவைத்தால்
 அது
ஆக்க வேலைகள் செய்யும் !

காதலை
அழிக்க நினைத்தால்
அழிவு வேலைகள் செய்யும் !

லவ் பண்ணுங்க - நல்லா பண்ணுங்க !

லவ் பண்ணுங்க அப்புடி சொல்லித்தான்
லவ் பண்ணனும்னு அவசியமில்ல !

இளைய தலைமுறைக்கு எல்லாம் தெரியும்!
இணையங்கள் சொல்லி தருகின்றன !

எல்லாம் இணையத்தால் சொல்லி தர முடியும்
அனால் அன்பை சொல்லி தராது இணையம் !

காதல் சுவாரஸ்யமானது என்று சொல்லி தராது !

love images க்கான பட முடிவு



தூரத்தில் இருந்து பார்த்து ,
அவளும் பார்ப்பாள் என்ற ஏக்கத்தை
அந்த நிமிடத்தின் இதய படபடப்பை ,
வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத
அந்த உணர்வை சொல்லி தராது !

அவன் அறிவாளியானவன்
இவன் நம்மை நினைக்க மாட்டானா ?
எவன் எவனோ நம் பின்னால் வரும் போது
இவன் மட்டும் வரவில்லையே
ஏன் ?
என்ற வினா எழுப்பும் உள்ள குமுறலை
அள்ளி தராது !

கல்லூரிகள் , இணையங்களை விட
வேகமாக
தன சுயநலத்திற்க்காக
ஆண் , பெண் என்ற உணர்வை
அழித்து கொண்டு இருக்கின்றன !
எல்லா வகையிலும் !

நம் சமுதாயம் ஒரு போதும்
காதலை எதிர்த்ததில்லை !

எதிர்த்திருந்தால்
வள்ளுவன் காமத்து பால்
எழுதி இருக்க மாட்டன் !







குறுந்தொகையும் , நற்றிணையும்
வந்திருக்காது !

தமிழில்
காதல் மற்றும் வாழ்வியல் சார்ந்த நூல்களுக்கு தான்
பதினென் மேல் கணக்கு என்று பெயர் .

துறவு மற்றும் அறிவுரைகள்
கூட
பதினென் கீழ் கணக்கு என்று பெயர் பெற்றுள்ளன !

ஆகவே
காதலை தமிழியம்
எதிர்த்ததில்லை !
மறுத்ததில்லை !
வெறுத்ததில்லை !

ஆனால்
காதல் செய்யும் வழிகள்
திருமணதிற்கு முன்பே
எல்லாம் முடித்து
அநாதை ஆசிரமங்கள்
பெருக்கும்
தவறான உணர்ச்சி பெருக்கை தான்
தவறென கருதுகிறது !

இதை தவிர்த்து வாழ்வில்
வெற்றி பெற்ற மனிதனின்
காதல்
தோற்றதே இல்லை !

ஆதலால் இளைங்கர்களே

நீங்கள் பார்க்காமல்
காதல் கொள்ள வேண்டாம் !

தொலைபேசி காதலில்
தொலைந்து போக வேண்டாம் !

ஈமெயில் காதலிலும்
பேஸ் புக் காதலிலும்
உறைந்து போக வேண்டாம் !

கண்ணோடு கண் பார்த்து பேசுங்கள் !

கை கோர்த்து நடக்காமல்
காதலித்து பாருங்கள் !

கடற்கரையில்கால் நனைக்காமல்
காதலித்து பாருங்கள் !

பேருந்தில் உரசாமல்
காதலித்து பாருங்கள் !

உணவு விடுதிகளை
நிறைக்காமல்
காதலித்து பாருங்கள் !

சினிமா தியேட்டரில்
எல்லாம் செய்யலாம் என்ற நப்பாசை விட்டு
காதலித்து பாருங்கள் !

அதுதான் சுவாரஸ்யம் !
அதுதான் அழகு !
அத்தனையும்  இன்பம் !
வாழ்நாள் முழுக்க தொடரும்
அதீத இன்பம் !


தூர நின்ற காதல்
லட்சிய காதலாக வரலாறுகளில்
வாழும் !

மற்றவையெல்லாம்
திருமணம் வரை கூட செல்லாமல்
காசை கரைத்தே சாகும் !


மாப்ள சிங்கம் - விமர்சனம்




கூபுடாத பஞ்சயாத்துக்கு , நாட்டமை பண்ண வந்த அவந்தாண்டா தெலுங்கனும், பிரமணனும் .!

இந்த படத்துக்கும் , இந்த வார்த்தைக்கும் என்ன சம்பந்தம் .

இந்த படத்தோட மைய கருத்து என்ன வேனில் திடீர்னு தமிழ் , தெலுங்கு அப்புடின்னு பிரிச்சு பேசாதீங்க ! வாங்க எல்லோரும் ஒத்துமையா இருப்போம்.

அட நல்லதா தானே சொல்லறான் !

ஒத்துமையா இருப்போம்னு சொல்றதுள்ள என்ன தப்பு.!

டேய் , இதை நீங்க முன்னாடியே யோசிச்சி சொல்லி இருக்கணும் .

யார் கிட்ட தமிழ் நாடு முழுக்க இருக்கானே தெலுங்கு காரன் அவன்கிட்ட !

இப்போ தமிழ் மக்கள் எல்லாம் உரிமை கேட்குறாங்க அப்புடினதும் , எப்புடிடா அது , அடிச்சிகாதிங்க , எங்கள பிரிச்சி பேசாதேங்க அப்புடின்னு டயலாக் பேசுறீங்க !

இத்தனை நாள்ல பிரிவினையை ஏற்படுத்தி அதுல குளிர் காஞ்சியே பழகிட்ட உங்களுக்க நல்ல என்னம்மேல்லாம் வருது .

எப்போதும் போல , இவங்க தான் நம்மள பயமுறுதிக்கிடே இருப்பனுன்களே !
அதே மாதிரியே இந்த படத்துலயும் , நம்ம மட்டும் ஒத்துமையா இல்லையின்ன மறுபடியும் வெள்ளக்காரன் உள்ள வந்துருவான் .
அப்புடின்னு முடிக்கிரானுங்க !

விமல் நாயிடு , அஞ்சலி நாயிடு , ராதாரவி நாயிடு , ஜெயப்ரகாஷ் நாயிடு , குயிலி நாயிடு மதுபால என்ற ஸ்ரீலங்கா கேரளா நாயிடு  இப்புடி படைத்தல நடிச்சவன் , படத்த எடுத்தவன் , தயாரிப்பு செய்தவன் எல்லாருமா சேர்ந்து தமிழ் மக்கள் நல்லா இருக்கணும் அப்புடின்னு , தமிழ் மக்களுக்கு கருத்து சொல்லி இருக்காங்க !

அவங்க பயம் , தமிழனத்தின் எழுச்சியை வெளிபடுத்துகிறது .

Tuesday, 15 March 2016

ஜாதியின் பெயரால் அழியும் பூர்வீகம் !


Chinnappa of the Paraiyar Caste, Aged 21, 1827-35 Giclee Print
இவர் சின்னப்பா என்பவர் . பறையர் இனத்தை சேர்ந்தவர் .1827 ல் வாழ்ந்தவர் . நாரயனனுக்காகவே வாழ்ந்தவர் . ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இல்லாத இன வெறி தற்போதுதான் நடக்கிறது . ஏன் தெரியுமா ?  தொழில் நுட்ப வளர்ச்சி !
இதை வளர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வான் தொழில் முனைவோனும் , அதற்க்கு உதவும் அரசியல் வாதியும் .




 தன ஜாதியை தானே இழிவென்றும் , உயர்வென்றும் எண்ணுவதும் ,
அதற்காக மாற்று சிந்தனைகளை கையில் எடுப்பதும் , குல தொழிலை சுத்தமாக வெறுப்பதும் இன்று வழக்கமாகி விட்டது .

அடுத்த ஜாதி காரனுக்கு மரியாதை கிடைகிறது என்றால் , அவன் செய்யும் தொழிலை தானும் செய்வது , அவன் படிக்கும் படிப்பை தானும் படிப்பது என்று யாரோ ஒருவரை துரத்தி கொண்டே இருக்கிறோம் .

நம் மீது நமக்கு பல நேரங்களில் நம்பிக்கை இல்லை 
நாம் செய்யும் தொழில் மீதும் மரியாதை இல்லை 

உன்னால் மரியாதை கொடுக்க படாத எந்த ஒரு தொழிலும் உன்னை உயர்த்தாது .

எந்த தொழிலும் !

தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் !
தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் !

இன்று அனேக வேலை வாய்ப்பு இல்லாத நிலை உருவாக காரணமே இது தான் !




பால் கறப்பதும் ,
வேளாண் செய்வதும்
செருப்பு செய்வதும்
மரம் இளைப்பதும்
கட்டிடங்கள் கட்டுவதும்
குப்பை அள்ளுவதும்
பறை அடிப்பதும்
முடி திருத்துவதும்
படகு செய்வதும்
பாதுகாப்பு பணியில் இருப்பதும்
வாய்கால் வெட்டுவதும்
கிணறு வெட்டுவதும்
இசை கருவிகள் வாசிப்பதும்
நகை செய்வதும்
பானை செய்வதும்
கூரை வேய்தலும்
கூடை முடைவதும்





இழிவென்று என்று முதல் நினைக்க ஆரம்பித்தோமோ , அன்று முதல் ஆரம்பித்தது நம்மை ஆட்டுவிக்கும் உயர்ஜாதி வழக்கம் .



ஒருவன் உன் தொழிலை இழிவாக பேசினால் , 
நீ நிருபித்து காட்டு இதுதான் உன்னை விட சிறந்த தொழில் என்று !

அதை விடுத்து அவனது ஜாதிக்கு மாறி விடலாம் என்று நினைப்பது 
உன் மேல் உனக்கே மரியாதை இல்லை என்பதையே காட்டும் .


நன்றாக யோசித்து பார்த்தால் நாம் எந்த தொழிலை எல்லாம் அசிங்கம் , கேவலம் என்று ஒதுக்கி வைத்தோமோ அவற்றின் காலி இடங்களைத்தான் தொழில் நுட்பம் எனும் பேய் நிரப்பி கொண்டு இருக்கிறது .

உண்மையில் எந்த தொழிலும் கேவலம் இல்லை . ஒருவன் ஒரு புதிய தொழில் நிட்பத்தை கண்டறிந்து விட்டால் . ஏற்கனவே அதை சிறப்பாக செய்பவனை பார்த்து , உன்னுடைய தொழில் கேவலமானது என சிலருக்கு சம்பளம் கொடுத்து  பேச சொல்லி , அதந்த தொழிலுக்கான இடத்தை காலியாக்கி அதை நிரம்ப்புவதே மார்க்கெட்டிங் செய்யும் வேலை 


உன்னிடம் எப்படி உன் தொழில் கேவலம் என்று கூறப்பட்டதோ , அப்படிதான் இதை பயன்படுத்துவோர் எல்லாம் ஏழைகள் என்றும் , பொருளாதரத்தில் பின் தங்கியவர்கள் என்றும் ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது .

இந்த வேலையை சரியாக செய்து பலரையும் பயன்படுத்த விடாமல் தடுத்ததும் , வேலை வாய்ப்பின்மையை உருவாக்கியதும் அரசியலும் , அதை விட முக்கிய பங்கு கொண்ட சினிமா எனும் அரக்கன் .

இதை எல்லாம் யோசிக்காமல் ,

 ஜாதி மாறி விட்டால் வாழ்வாதாரம் உயர்ந்து விடும் என்று
நினைப்பது ம் , பூணூல் போட்டு கொண்டால் என்னையும் எல்லோரும் மதிப்பார்கள் என்று நினைப்பதும்,
கோனார் எனும் பெயரை யாதவர்கள் என்று மாற்றுவதும்
பொற்கொல்லர் எனும் பெயரை விஸ்வகர்மா என்று மாற்றுவதும்
பள்ளர் என்பதை தேவேந்திர குல வெள்ளாளர் என்று கூறுவதும்
தன ஜாதி பெயரில் தேவர் எனும் பட்டதை இணைப்பதும்
இவ்வாறு சம்ஸ்கிருத பெயராக தன ஜாதி பெயரை மாற்றி விட்டால் நம்மை எல்லோரும் மதிப்பார் கல் என்று நினைப்பதும்
நம்மை நாமே இழிவு படுத்துவதற்கு சமம் .

என் தாயும் , தகப்பனும் ,
என் பாட்டனும் , பூட்டனும்
என்ன ஜாதியால் இழிவுபடுத்தபட்டார்களோ
அதே பெயரால் ,
எவன் எம்மை வீழ்த்தி னானோ
அவனை வீழ்த்தி காட்டுவேன் என்று கூறினால்
அது தான் வெற்றியின் முதல் அடி !

சூரியனை நிலவென்று பெயர் மாற்ற வேண்டாம் !
சுட்டெரிக்கும் சூரியனாய்
தன்னை தான் உணர வேண்டும் !

நினைவிற் கொள்க !
போற்றுவார் போற்றலும் ,
தூற்றுவார் தோற்றாலும்
இந்த உலகின் இயற்கை !


Monday, 14 March 2016

FORWARD CASTE எனும் பன்னாடைகள்

13- 3- 2016 அன்று திருப்பூர் அருகே உடுமலைபேட்டை யில் , 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட கீழ்ஜாதி ஆணும் , மேல் ஜாதி பெண்ணும் சாலையில் , பகல் நேரத்தில் வெட்டி சாய்க்க பட , அந்த ஆண் சில நிமிடங்களிலேயே இறந்து விட்டான். அந்த பெண் மோசமான நிலையில் மருத்துவ மனையில் உள்ளார் .

இதில் முக்கிய விஷயம் என்னவெனில் விஜயகாந்த் தவிர்த்து வேறு எந்த அரசியல் கட்சிகளும் இதற்காக பேசவில்லை . தேர்தல் நேரத்தில் எதையாவது பேசி வாக்குகளை இழக்க யாரும் தயார் இல்லை .

அந்த மேல் ஜாதி பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிவிட்டார் . அவருக்கு நன்றாக தெரியம் . வெளியில் வந்து விடலாம் என்று .!



ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலம் 
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்  என்றான் பாரதி 

ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை ?

எவண்டா இங்க உயர்ந்த ஜாதி ?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல , இந்தியாவின் எந்த கடைகோடியிலும் தன்னை உயர்ந்த ஜாதி என்று கூறிக்கொள்ள எவனுக்கும் தகுதி இல்லை .

வெட்க பட வேண்டும் நீயெல்லாம் .!

பொருளாதாரத்தால் நீ உயர்ந்த ஜாதியா ?

அந்த சொத்து அனைத்தும் உன் பாட்டனும் , பூட்டனும் எதோ ஒரு மன்னனின் காலத்தில் மன்னனுக்கு ஜால்ரா அடித்து  சேர்த்த சொத்து !

வெட்க படு ஏதேதோ தவறுகள் , அல்லது காட்டி கொடுப்பது , ஏழைகளை ஏமாற்றுவது எதோ ஒரு தவறுகாளால் உருவான சொத்து .!

ஒ !  நான் வீரன் ! அதனால் நான் உயர்ந்த ஜாதி என்று கூறுகிறாயா ?

அதற்கும் கூட இந்தியாவில் எவனுக்கும் தகுதி இல்லை !

200 ஆண்டுகள் ஆங்கிலேயனிடம் அடிமை பட்டு கிடந்த பொது வாளும் , வேலும் எடுத்து கொண்டு போய்  நாட்டை காப்பாற்றி விட்டாயா ?

உனக்கு பின்னால் பத்து பேர் வருகிறான் என்பதால் நீயெல்லாம் உயர்ந்த ஜாதியா ?

ஜெயலலிதாவின் காலில் விழுந்து கும்பிட்ட பன்னீர்செல்வம் 1000 கோடி க்கு சொந்த காரராம் . உன் பின்னால் வருபவன் மட்டும் அல்ல , உன் காலில் விழுபவன் கூட உன் பணத்தை சுரண்ட வரும் துரோகிதான் .

உன் பட்டன் , பூட்டன் இவர்களெல்லாம் சேர்த்த துரோக சொத்து , உன் பின்னால் வரும் துரோகிக்கும் சொந்தம் !

பார்பனர்களை பின் பற்றி , அவர்களுக்கு பெண் கொடுத்து , பெண் எடுத்ததால் நீ உயர்ந்த ஜாதியா ?

பார்பானுக்கு கொள்கையெல்லாம் கிடையாது .

கல்யாண வீடுன்ன மாப்பிள்ளை அவன்தான் .
சாவு வீடுன்ன பிணமும் அவன்தான் .

எல்லா இடத்திலும் தனக்கு முன்னுரிமை வேண்டும் என்பது மட்டும்தான் அவனது லட்சியம் .

ஹிந்து அரசன் ஆட்சியில் இருந்தாலும் பிராமணன் தான் அமைச்சன்.
இஸ்லாமியன் இருந்தாலும் அவன்தான் அமைச்சன் .
கிறிஸ்தவன் இருந்தாலும் அவன்தான் அமைச்சன் .

கோழைகளாய் வாழ்ந்து , நாட்டை எவன் எவனுக்கோ விற்று விட்டு எங்கள் குளம் க்ஷத்ரிய குலம் , நாங்க உயர்ந்த ஜாதி என்று கூறுவது வெட்கம் .
வெட்க படவேண்டிய உனக்கெல்லாம் என்ன ஜாதி பித்து

கொலை செய்வதே பாவம் .
அதற்க்கு ஒரு சப்பகட்டு ஜாதி

நெஞ்சில் வீரம் இருந்தால் , உனக்கு இணையானவன் என்று கூறி கொள்ளும் அதே உயர்ந்த ஜாதி காரனோடு போட்டி போடு .

ஒரு விபசாரம் செய்யும் பெண்ணை கொள்வது கூட வீரம் இல்லை .

ஒரு பெண் பிள்ளையை கொள்வதும்  , கையில் ஆயுதம் இன்றி நிற்பவனையும் கொள்வதும் இழிபிறவியிலும் , இழி பிறவி என்பதை காட்டும் அத்தாட்சி ! மானகெட்ட உயர்ந்த ஜாதி !

போங்கடா நீங்களும் உங்க ஜாதியும் !


தஞ்சாவூர் - நாயக்கர்கள் ஆட்சி


கிருஷ்ணா தேவ ராயர்


அச்யுத தேவ ராயரும் , கிருஷ்ணா தேவ ராயரும் சகோதரர்கள் .

விஜயநகர அரசின் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர்கள்  திம்மப்பா நாயக்கரும் அவரது சகோதர் நாகம்ம நாயக்கரும் .

கிருஷ்ணதேவ ராயரும் , அச்சுத தேவ ராயரும் துளுவ வம்சத்து மன்னர் துளுவ நரச நாயக்க ரின் மகன்கள் .
இவர்களின் தளபதி கள் இருவர் . ஒருவர் திம்மப்பா நாயக்கர் , மற்றொருவர் நாகம்ம  நாயக்கர் .

இந்த திம்மப்பா நாயக்கரின் மகன் தான் செவப்ப நாயக்கர் .
இவர்தான் தஞ்சையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தவர் .


நாகம்ம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயகர்.
இவர்  தான் மதுரையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தவர் .








அச்யுத தேவ ராயர் மற்றும் அவரது மனைவி  திருமலம்பா

திம்மப்பா நாயக்கருக்கு 4 மகன்கள் . அவர்களில் இரண்டாவது மகன்தான் செவப்ப நாயக்கர் . இவர் அச்யுத நாயக்கரின் மனைவியாகிய திருமலம்பாவின் தங்கை மூர்திம்பவாய் திருமணம் செய்த கொள்கிறார் .
அப்போது தனக்கு சீதனமாக தஞ்சாவூரை தர வேண்டுமென அச்யுத நாயக்கரிடம் கேட்டு பெற்று கொண்டு , தஞ்சையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தார் .1509 முதல் 1530 வரை கிருஷ்ணா தேவ ராயர் ஆட்சியின் கீழ் மட்டமே தஞ்சை இருந்தது .

1530 ல் கிருஷ்ணதேவ ராயர் தனது சகோதரர் ஆட்சிக்கு வரட்டும் என்று கூறி விட்டு இறந்து விடுகிறார் .
தன்னுடைய சகளையாகிய அச்சுத தேவாரயருக்கு கப்பம் கட்ட மறுத்து தானே இனி தஞ்சையின் மன்னன் என கூறி தனக்கென தனி அரசை உருவாக்குகிறான் செவப்ப நாயக்கன் .

பிறகு 1532 முதல் 1580 வரை ஆட்சி செய்துள்ளார் செவப்ப நாயக்கர் .

அச்யுத தேவ ராயரின் நினைவாக தனது மகனுக்கு அச்யுத நாயக்கர் என்று பெயர் இட்டார்


நிறைய அக்ரஹரன்களை தஞ்சையில் எழுப்பி உள்ளார் .
நீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்து கொண்டார்.
திருமலா கோவிலுக்கும் , ஸ்ரீசைல கோவிலுக்கும் நிறைய நன்கொடைகள் அளித்துள்ளார் .

தஞ்சையில் இருந்து செய்யப்பட்ட வரிவசூலானது திருபதிக்கும் , ஸ்ரீசைலதிர்க்கும் , பிராமணர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது .

தஞ்சை பெரிய கோவில் சுற்று சுவர் பராமரிப்பு பணியை செய்துள்ளார் .


செவப்ப நாயக்கன் வாழும்போதே 1560 களில் இவரது மகன் அச்சுத நாயக்கனும் ஆட்சிக்கு வருகிறான். இருவரும் இணைந்து 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர் .

1614 வரை ஆட்சியில் இருந்த அச்சுத நாயக்கரும் கோவில் திருப்பணிகள் பல செய்துள்ளார் .

ஸ்ரீரங்கம் சுற்று சுவர்


இவர் காலத்திலேயே 1600 களில் இவரது மகன் ரகுநாத நாயக்கன் ஆட்சிக்கு வருகிறான் . தஞ்சாவூர் வரலாற்றிலேயே மிக முக்கிய ஆட்சியாக அமைந்தது ரகுநாத நாயக்கனின் ஆட்சிதான்.

தஞ்சையின் வரலாற்றில் , மாற்றங்களை கொண்டு வந்தவர் ரகுநாத நாயக்கர் .நாயக்க வம்ச முடிவிற்கும் , ஐரோப்பிய வணிகர்களின் வருகைக்கும் அஸ்திவாரம் போட்டவரம்   ரகுநாத நாயக்கர்தான்  .

--------------------------------

தஞ்சாவூர் - ரகுநாத நாயக்கர்



ரகுநாத நாயக்கர் , அச்சுத நாயக்கரின் வாரிசு ஆவார் .


இவர்  திருவாரூர் கோவிந்தா தீட்சிதரின் சீடர் . இவர் காலத்தில் சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக நூல்களும் , பாடல்களும் எழுதப்பட்டன. எனவே இவரது ஆட்சியானது அப்போது தஞ்சையில் வாழ்ந்த பிராமண , தெலுங்கு , கன்னட மக்களுக்கு பொற்காலம் ஆகும் .




தஞ்சை அக்ரஹார வீதிகள் .



தஞ்சை வாழ் பிராமணர்களுக்கு புத்தி அக்ரஹாரங்களை கட்டினார் . தஞ்சையின் வடிவமைப்பை மாற்றினார் .

வர் இசை க்கும் கலைக்கும் இத்தனை முக்கியத்துவம் கொடுக்க காரணமாய் இருந்தவர் அவரது மனைவியருள் ஒருவராகிய ராமபத்ரம்பா ஆவார் . இவர் தெலுங்கு மொழிகளில் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார் .

இந்த ரகுநாத நாயக்கர் காலத்தில் தான் மும்மூர்த்திகள் என்று வழங்கப்படும் சியமா சாஸ்திரி,தியாகராயர் , கோவிந்தா தீட்சிதர் ஆகியோர் தெலுங்கு மொழியை  தஞ்சையில் வளர்த்து நீர் விட்டு மரம் ஆக்கினார்கள் .

இவரது காலத்தில் தான் தஞ்சையின் இசை , கர்நாடக சங்கீதம் ஆனது . நாயக்க வம்சமானது கர்நாடக மாநிலம் ஹம்பி யில் இருந்து ஆரம்பித்தாலும் , புரந்தர தாசருக்கு மரியாதை செய்யும் வகையிலும் , தஞ்சை இசை கர்நாடக சங்கீதம் என்று பெயர் மாற்றப்பட்டது .





ஏழிசை என்று வழங்கப்பட்ட இசை கருவியானது நாதஸ்வரமாகி போனது .



சதிர் ஆட்டம் 







இவரை தொடர்ந்து வந்தவர்களும் அவர்கள் பங்கிற்காக தஞ்சையின் போர் முறைகளை கற்று தர உதவும் சதுர் என்ற நடனத்தை பாரத நாட்டியம் என்று பெயர் மாற்றினர் . ஆனாலும் இதே உத்திகளோடு விளையாடப்பட்ட , சதுரங்கம் இன்றும் அதே பெயரில் உள்ளது .

தஞ்சையை ஆண்ட நாயக்கர்களிலேயே மிகவும் நல்லவர் இந்த ரகுநாத நாயக்கர்தான் .

அவருக்கு எதெல்லாம் பெருமைக்கு உரிய விஷயமாக இருந்ததோ அதயெல்லாம் தெலுங்கிற்கு ம் , கன்னடத்திற்கும் மாற்றி தன மொழி பற்றை நிரூபித்தவர் .

அதோடு தெலுங்கு புத்தகங்களை பாதுகாக்க கருதி இன்று தஞ்சையில் இருக்கும் சரஸ்வதி  மகாலை  உருவாக்கியவர் .
அப்போது அவர் இட்ட பெயர் சரஸ்வதி பண்டு .
இதையே பிற்காலத்தில் சரபோஜி I I  சரஸ்வதி மகாலாக மாற்றினார் .



இவர் தான் முதன் முதலில் டச்சுகாரர்களோடு ஒப்பந்தம் போட்டவர்.
இதனை அடிப்படையாக கொண்டுதான் பிற்காலத்தில் போர்துகீசியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்.கும் தஞ்சையை வணிக மையமாக மாற்றலாம் என்ற யோசனைக்கு வழிகாட்டியாக அமைந்தது .

இந்த ரகுநாத நாயக்கரும் கோவில் திருப்பணிகள் பல செய்துள்ளார் .

இதற்கிடையில் விஜயநகர பேரரசில் மிக பெரிய சிக்கல் உருவாகியது .
அது என்னவெனில் அப்போது ஆட்சியில் இருந்த இரண்டாம் வெங்கட ராயருக்கும் அவரது அன்பு மனைவி ஒபயம்மாவிர்க்கும் திருமணத்திற்கு முன்பு பிறந்தவர் ஆட்சிக்கு வரவேண்டுமா ? திருமணத்திற்கு பின்பு பிறந்தவர் ஆட்சிக்கு வர வேண்டுமா ? என்பதே அந்த பிரச்னை .

திருமணத்திற்கு முன்பு பிறந்து ஆட்சிக்கு வந்த ஜக்கு ராயரை , மதுரை நாயக்கனும் , செஞ்சி நாயக்கனும் ஆதரவு அளிக்க

திருமணத்திற்கு பின்பு பிறந்த ராம ராயரை , நம் ரகுநாதர் ஆதரவு கொடுத்து

அதனால் ஏற்பட்ட போரில் வெற்றியும் பெற்று ராம ராயரை ஆட்சியில் அமர வைக்கிறார் .

இது தான் இவரது ஆட்சியில் நடைபெற்ற மிகபெரிய போர் .
mannargudi rajagopalaswamy க்கான பட முடிவு
மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில்

1634 லில் விஜய ராகவ நாயக் ஆட்சிக்கு வருகிறார் . இவர்தான் தஞ்சை நாயக்க வம்சத்தின் கடைசி மன்னர் . இவர் 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களை தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார் . இவருக்கு மன்னாரு தாசு என்ற பெயரும் உண்டு . கரரணம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் சுற்று சுவர், கோபுரம் என பல திருப்பணிகள் செய்துள்ளார் .



விஜய நகர பேரரசின் வாரிசு உரிமை போரில் ரகுநாதன் , ராம ராயருக்கு ஆதரவு கொடுத்து வெற்றியும் பெற்றான் அல்லவா ! அப்போது தோற்று போனது ஜக்கு ராயர் மட்டுமல்ல மதுரை நாயக்கனும்தான் .

இதனால் ஏற்பட்ட கோவத்தை தணிக்க மதுரை சொக்க நாயக்கன் , விஜய
ராகவ நாயக்கனின் மகளை மனம் முடித்து தர சொல்கிறார் . ஆனால் தஞ்சை நாயக்கனோ மறுக்கிறான் . இதனால் தஞ்சை அரண்மனையை பலபடுத்தி அங்கு தன குடும்பத்தை பாதுகாக்க முற்படுகிறார் .

ஆனால் மதுரை  சொக்க நாயக்கனோ பீரங்கி குண்டுகளை பயன்படுத்தி கோட்டை சுவரை உடைத்து விஜய ராகவ நாயக்கனின் மகளை மணக்கிறான் .
மதுரை சொக்க நாயக்கன் தனது தம்பி அழகிரியை தஞ்சைக்கு மன்னனக்கினான்.

விஜய ராகவ நாயக்கனின் மகன் தனது அரசை மீண்டும் மீட்டு தர உதவி கேட்டு பீஜப்பூர் சுல்தான்களிடம் போக , அவர்கள் மராட்டியர்களை கைகாட்ட ,
வெங்கோஜி தஞ்சைக்கு வருகிறான் .

அன்று முதல் நாயக்க அரசு முடிந்து மராட்டி அரசு தஞ்சையில் உதயமாகிறது .

-----------------------------------------




Sunday, 13 March 2016

பாகுபலி - அக்ஷய திருதியை

முன்பொரு காலத்தில் அனேகமாக கி.மு.1000 வது ஆண்டில் வினிதா என்ற நாட்டின் ராணியார் கற்பமாக இருக்கும் பொழுது ஒரு கனவு காண்கிறார் . அந்த கனவில் அவர் வித்யாசமான பொருகளை எல்லாம் காண்கிறார் .மறுநாள் காலையில் தன கணவரிடம் கூறுகிறார் .

அவர் அந்நாட்டின் தலைசிறந்த ஜோதிட சாஸ்திர வல்லுனர்களை அழைத்து இந்த கனவிற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார் . அவர்கள் அனைவரும் அரசியாரின் கனவில் என்னென்னன பொருட்கள் வந்தனவோ அவற்றை ஒன்றாக இணைத்து , நீண்ட நெடிய ஆய்விற்கு பிறகு , பிறக்க போகும் ஆண் மகன் ஒரு புதிய தத்துவத்தை அடிப்படியாக கொண்டு புதிய மதத்தையே உருவாக்க போகிறான் என்று கூறுகிறார்கள் .


ராணியின் கனவில் வந்த பொருட்கள் 

அங்ஙனமே ஒரு ஆண்மகனை பெறுகிறாள் . அவன் சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறக்கிறான். அந்த நாளே பின்னாளில் அச்ய திருதையாக , கொண்டாடடப்படுகிறது . அவன் வளரும் போதே திறமைசாலியாகவும் , வீரனாகவும் வளர்கிறான் .

அவனுடைய இளமை பருவத்தில் இரண்டு பெண்களை மணந்து கொள்கிறான் .
முதல் மனைவி சுனந்தாவிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் .அவள் பெயர் பிராமி .
இரண்டாம் மனைவி யசவதி தேவிக்கு 99 மகன்கள் மற்றும் ஒரு மகள் அவள் பெயர் சுந்தரி .

ஆக மொத்தம் 100 மகன்கள் மற்றும் 2 மகள்கள் .

காலபோக்கில் இல்லறம் என்ற நிலையில் இருந்து விலகி , துறவறம் கொள்ளலாம் என என்னும் போது  நாட்டை இரண்டாக பிரித்து முதல் மனைவியின் மகனுக்கு வினிதா நாட்டையும் இரண்டாம் மனைவியின் மகனுக்கு தக்ச ஷீல த்தையும் கொடுக்கிறான் .

பிறகு துறவறம் கொண்டு ஊரை விட்டு வெளியேறுகிறார். அவருக்கு என்ன உணவு தர வேண்டும் என்பதில் அனைவருக்கும் குழப்பம் ஏற்பட 11 மாதங்கள் கழித்து கரும்பு சாறு கொடுக்கிறார்கள் . இதன் அடிப்படையில் தான் அக்ஷ திருதியை அன்று கரும்பு வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது .


ரிஷபானந்தா 

அப்படி வெளியேறி துறவறம் பூண்டவர் தான் பாகுபலியின் தந்தை ரிஷபானந்தா .
இவர்தான் சமண மதத்தை தோற்றுவித்தவர் . 

சமண மதத்தின் முதல் தீர்த்தங்காரர் .

இவரது முதல் மனைவி சுனந்தாவின் மகன்தான் பாகுபலி .


------------ தொடரும் 


இந்த ரிஷபானந்தா வின் பிறந்த நாள் தான் அக்ஷய திருதியை . 
இந்த நாளில் தான் வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுத ஆரம்பித்தார்  என்று மகாபாரதம் கூறுகிறது .
இன்றும் இந்நாளை சமண மத துவக்க நாளாக கொண்டாடுகிறார்கள் சமணர்கள் .
இந்நாளில் அடுத்தவருக்கு உணவு அளித்தால் , தன வீட்டில் அக்சய பாத்திரம் போல் உணவு பொருட்கள் நிறைய பெருகும் என்பதையே , தற்காலத்தில் சுயநலமாக தங்கம் வாங்கினால் பெருகும் என்று மாற்றி விட்டனர் .


--------------------------------------------------

சமண மதத்தை தோற்றுவித்த முதல் தீர்த்தங்கரர் ரிஷபானந்தா வின் முதல் மனைவி  சுனந்தாவின் மகன் பாகுபலி ( தற்போதைய அயோத்தி நகரம் ) வினிதா நாட்டை ஆண்டு வந்தான் .

அவரது இரண்டாம் மனைவி யசவதி தேவி யின் 99 மகன்களில் முதல் மகனாகிய பரதன் தக்ச ஷீல நாட்டை ஆண்டு வந்தான் .

ரிஷபானதாவின் முதல் மனைவின் மகள் பிராமி ஆவாள் . பிற்காலத்தில் இவளது பெயரால் தான் பிராமி எழுத்து தோன்றியது என்ற கருத்தும் உள்ளது .

இரண்டாவது மனைவியின் மகன்கள் 99 பேரை அடிப்படையாக வைத்துதான் மகாபாரதம் எழுதப்பட்டது என்ற கருத்தும் உள்ளது. இதன் அடிப்படையில் தான் பௌத்தமும் , சமணமும் மகாபாரத கதைகளை  ஒப்புக்கொள்ளவில்லை .
மேலும் ரிஷபானந்தவிர்க்கு பிறகு சமண மத துறவிகளாக வந்தவர்கள் தான் கர்ணனும் , கிருஷ்ணனும்  என்பதால் சமண மதத்தை யும் , அதன் தீர்தங்கர்களையும் கொண்டு எழுதப்பட்டதே மகாபாரதம் .

எனவே ரிக், யஜூர் , அதர்வண வேதங்களை மட்டுமே கொண்டுள்ளது பௌத்தம். அதிலிந்து முக்கிய கருத்துகளை மட்டுமே கொண்டுள்ளது சமணம்.

இப்போது பாகுபலி சிறப்புற ஆட்சி செய்வதால் மக்கள் அவனை பற்றி பெருமையாக வினிதா நாட்டை தாண்டி தஷ நாட்டிலும் பேசி கொள்கிறார்கள் . இரண்டு நாடுமே ஒரே மன்னனின் கீழ்தான் இருந்தன என்பதால் , மக்கள் இடம்பெயர ஆரம்பித்தனர் .

இதனால் கோபம் கொண்ட பரதன் , பாகுபளியை எதிரியை போல் பாவிக்க ஆரம்பிக்கிறான்.

அதன் விளைவு , ஒரு சில ஆண்டுகள் கழித்து போர் மூழ்கிறது . பாகுபளிக்கும் , பரதனுக்கும் மிக பெரிய போர் . இருபுறமும் மக்கள் அழிந்து கிடக்கின்றனர்.

இறுதியில் பாகுபலி வெல்கிறான். பரதன் தோல்வி அடைந்த போதிலும் பாகுபலி அவனை வெறுக்க வில்லை . ஆனால் இந்த போருக்கு பிறகு பாகுபலி நாட்டில் இல்லை .

பரதன் தான் பாகுபளியை கொன்றிருப்பான் என்றும் கூட நம்ப ஆரம்பித்தனர் மக்கள் . ஆனால் பாகுபளியை யாரும் கொலை செய்யவில்லை .

போர் நடந்த பின்னர் , அப்போரின் பாதிப்பில் இருந்து மீளாத பாகுபலி , மீண்டும் நாட்டிற்கு வந்து தனது சகோதரனாகிய பரதனிடமே அனைத்து பொறுப்பையும் விட்டுவிட்டு தெற்கு நோக்கி நடக்கிறான் .

கர்நாடக மாநிலத்தின்  ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சரவண பெலகுள  என்னும் இடத்திற்கு வந்து சமணத்தை தழுவி , மன அமைதி அடைகிறான் .
Shravanabelagola

கோமுட்டீஷ்வரர் என்று வழங்கப்படும் பாகுபலி



மக்களுக்கு நல்ல சிந்தனைகளை கூறுகிறான் . வயது முதிர்ந்த காலத்தில் மீண்டும் இமயமலைக்கு சென்று அங்கு முக்தி அடைகிறான்.

பாகுபலி முக்தி அடைந்ததை அறிந்து வினிதா நாட்டின் ( அயோத்தி ) மூலம் 58 அடி சிலை இவருக்காக செய்யப்பட்டு அது சந்திரகிரி , தீர்த்தகிரி மலைகளுக்கு நடுவில் உள்ள சரவணா பெலகுள என்ற இடத்தில் வைக்கபடுகிறது .

இந்தியாவிலேயே மிக உயரமான சிலை இந்த பாகுபலி சிலை தான் . அனால் இவரை கோமுட்டீஸ்வரர் என்றே அழைப்பர் .

இதில் என்ன சிறப்பு எனில் இந்த சரவண பெலகுள என்படுவது சரவணா வெள்ளை குளம் ஆகும் .

இதற்கு முன்பு இங்கு இருந்தது முருகன் கோவில் . இக்கோவிலில் நேரடியாக பார்க்கும்போது நாம் தெரிந்து கொள்ளலாம்  ஏற்கனவே இருந்த சிலையை நகர்த்தி விட்டு பாகுபலி சிலையை வைத்திருக்கிறார்கள் என்பதை! .

இது 647 படிகளை கொண்டது . இங்கு தற்போது பாகுபலி சிலையே இருந்தாலும் , உலகின் எந்த மூலையிலும் மலை மீது கோவில் அமைத்த ஒரே ஒரு இனம் தமிழ் இனம் . 

என்னதான் சிலையை மாற்றி வைத்தாலும் , இங்கு நடக்கும் எந்த ஒரு விசேசமும் மாறவில்லை . முருகனுக்காக என்ன வெல்லாம் கொண்டாடப்படுகிறதோ அது வேறு பெயரில் கொண்டாட படுகிறது .

இன்றும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மக விழாவும் , பங்குனி உத்திர விழாவும் , தை பூச விழாவும் கொண்டாடப்படுகிறது .

மன அமைதி விரும்புவோர் செல்ல வேண்டிய இடம் .

சரவணவெள்ளை குளம் . ( சரவண பெலகுள ) நிச்சயம் இதற்க்கு உத்தரவாதம் உண்டு .

தமிழனை தமிழன் தான் ஆள வேண்டுமா என்ன ?

மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் . திடீரென்று ஒரு இனம் ஆள கூடாது என்று கூறுவது சரியல்ல - ட்ராபிக் ராமசாமி 


மனிதனை மனிதானாக பார்க்கும் திறம் இன்று யாரிடமும் இல்லை . இருந்திருந்தால் கர்நாடகத்தில் தமிழர்கள் பதட்டதோட வாழ்ந்த நிலை உருவாகி இருக்காது. இலங்கை தமிழன் , அகதியாகவும் , ஒரு சில தவறுகளின் அடையாளங்களாகவும் மாறி இருக்க மாட்டான். ராஜ் தாக்கரேவை அடிகடி எல்லோரும் உதாரணத்திற்கு கொண்டு வரவேண்டிய அவசிய இல்லை. தமிழர்கள் அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து விடவில்லை. 
ilangai agathigal க்கான பட முடிவு


மொழி வாரி மாநிலங்கள் பிரித்த போதும் கூட ,  ஜாதியும் , மொழியும் பாராமல் பிறரை அரியணை ஏற்றிய பூமி இது. ஒரு கற்பனையாக எண்ணி பாருங்கள் ஒருவேளை இலங்கையை ஒரு தமிழன் ஆட்சி செய்திருந்தால் எந்த சிங்கலனாவது அகதியாக மாறி இருப்பானா ? 

ஆள வரவில்லை என்றால் , இவன் ஆளுமை என்ற தகுதி இல்லாதவன் என்று கூறுகிறீர்கள். எவனோ ஒருவன் ஆள்கிறேன் என்றால் , இப்படி எல்லாம் பிரித்து பார்க்க கூடாது என்கிறீர்கள். யாருக்கு ஆள தெரியாது . அடிமைபடுத்ததான் தெரியாது . அடிமைபடுத்தி அதன் வழியாக எடுத்த அடுத்தவர் பொருளை தன பெயரில் மாற்றிக்கொள்ள தெரியாது 

விட்டு விடுங்கள் 1400 களில் ஆரம்பித்த அடிமைதனம் கொஞ்சம் வெளியேற முயற்சிக்கலாமே ! இந்தியாவிலேயே நீண்ட நெடிய அடிமை வாழ்க்கை வாழ்வது தமிழர்களாகத்தான் இருக்கும். ஆங்கிலேயனுக்கு முன்னமே நாம் அடிமையாகி விட்டோம் அதனால்தான் ஆகிலேயர்களை எதிர்த்து யாரும் பெரிதாக போராட வில்லை . 

வட இந்திய சுதந்திரமாக இருந்தது , ஒருவன் அடிமை படுத்திய உடன் அவனுக்கு ஏற்பட்ட வித்தியாச உணர்வை விடுதலை போராட்டமாக மாற்றினான். அனால் தமிழ்நாடு அப்படி இல்லை . எந்த ஒரு வித்தியாச உணர்வும் தமிழனுக்கு ஏற்படவில்லை. ஒரு வேலை இதையும் தவறென்று யாரும் கூற விரும்பினால் ஆங்கிலேயனை எதிர்த்ததும் தவறாகும் . 

சரி தவறென்றே வைத்து கொள்வோம் . ஆனால் ஜாதியின் அடிபடியில் தான் எல்லாம் இயங்குகிறது . தமிழர்கள் மட்டும்தான் ஜாதி போடுவதில்லை . மற்ற எல்லோரும் ஜாதியின் பெயரை தன தகப்பன் பெயர் போலத்தான் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் .

ஏன் தெரியுமா ? தமிழர்கள் மட்டும் ஜாதி போட வேண்டாம் என்ற கூறினார்கள் .அடிமையில் என்ன உயர்ந்த அடிமை , தாழ்ந்த அடிமை . எல்லா அடிமையும் ஒன்றுதானே 

சரி , பெண்கள் தன மார்பை மறைக்க வரி கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்ட அரசு எது ? ஆங்கில அரசா ? தைரியமான ஆட்கள் யாரேனும் இருந்தால் துணித்து உரக்க கூற சொல்ல சொல்லுங்கள் .

துணியை போட்டு எல்லாவற்றையும் மறை என்று கூறி , அதன் பிறகு அதில் ஒரு பாகம் தெரிந்தாலும் அதை கவர்ச்சி என்று கூறி காசு பார்க்க நினைத்தவன் ஆங்கிலேயன். 

ஆனால் இன்ன ஜாதி போடலாம் , இன்ன ஜாதி போட்டால் வரி கட்ட வேண்டும் , இன்ன ஜாதி காரிகலேல்லாம் போடவே கூடாது என்று கூறியது யார் ?

அதெல்லாம் பழைய கதை . ஆமாம் அதெல்லாம் பழைய கதைதான் . ஆனாலும் அப்போது சம்பாதித்த சொத்தை கணக்கில் கொண்டு தான் அம்மக்களேல்லாம் உயர்ந்த ஜாதி அட்டவணையில் இன்றும் இருக்கிறார்கள் .
அப்போது சம்பாதித்த சொத்து சொந்தமெனில் அப்போது சம்பாதித்த பாவம் சொந்தமில்லையா ?

இன்றும் இதே ஜாதியின் பெயரில் தான் , இதே இனத்தின் பெயரில் தான் முன்னுரிமை கொடுக்க படுகிறது . இந்த இட ஒதுக்கீடு எனபடுவது ஒரு கட்டுக்கதை . இது உண்மை எனில் எல்லா மத்திய , மற்றும் மாநில அரசு அலுவகங்கலிலும்  நாமம் போட்ட ஆண்களும் , பெண்களும் , நாய்டு மற்றும் ரெட்டி மக்களும் மேல் மட்ட  பணியில் இருப்பது எப்படி ? இவர்களுக்கு இடையில் தான் SC மக்களுக்கு இட ஒதுக்கீடு அமைகிறது . பிற ஜாதி மக்களெலாம் கீழ் தட்டு பணிகளில் மட்டுமே இருப்பதன காரணம் என்னவோ ?

எப்போதும் எது செய்தாலும் , ஓடி வந்து ஏதேனும் ஒரு கதை சொல்லி , பயமுறுத்தும் கெட்ட வழக்கத்தை இவர்கள் எம்மக்களிடம் விதைப்பதை நிறுத்த முடியுமா ?


traffic ramaswamy க்கான பட முடிவு

உங்களை போன்ற நாமம் போட்ட மக்களில் எத்தனை பேர் நல்லவர்கள் என்று நீங்கள்தான் கூற வேண்டும் .

இந்தியா விடுதலை பெரும் முன்பு திராவிட கட்சியின் தாயாகிய தென்னிந்தியா சமூக நல இயக்கம்  எதன அடிப்படையில் உருவாக்கபட்டது . இன அடிப்படையில் ! வட இந்தியன் மற்றும் தென்னிந்தியன் .இது சரியா ?

இந்த இயக்கத்தை யாரெல்லாம் சேர்ந்து உருவாக்கினார்கள் ? பிராமணர்கள் , தெலுங்கர்கள் மற்றும் நாயக்கர்களை எப்போதும் ஆதரித்து சொத்து சேர்த்த முதலியார்கள் . 

இந்த இனங்களுக்குள் பிரிவினை வந்த போது  பிராமனகளை பற்றி தவறாக பேசியது தெலுங்கர்கள் . தெலுங்கர்களை பற்றி தவறாக பேசியது பிராமணர்கள் .

இன்று இரண்டுக்கும் நடுவில் இது என் நாடு என்று கேட்க யாரவது ஒருவர் வந்தவுடன் , ஏன் இத்தனை பதட்டம், இத்தனை அறிவுரை . பிரிவினை வேண்டாம் . நாமெல்லாம் ஒன்றுதான் . என்றெல்லாம் !

இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சுந்தர் என்றொரு இழிபிறவி தமிழ் துரோகி திருமணம் செய்து கொண்ட குஷ்பு , தமிழ் பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பே கொண்டுமன் பயன்படுத்தும் முறைகளை கற்று கொடுத்தால் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்று கூறிய பொது சத்தமில்லாமல் அதற்க்கு ஆதரவு தெரித்தது தெலுங்கு மக்கள்

எம்மினம் இழந்தது இன உணர்வை மட்டும் அல்ல . சொத்துகளை மட்டுமல்ல .அதெயெல்லாம் கடந்து
அறிவியலை !
பொறியியலை !
மருத்துவத்தை !
இதை எல்லாம் மீட்டெ டுக்காவாவது வழி விடலாமே !

இது சீமானுக்கு ஆதரவானது அல்ல . எம் தமிழ் இனத்திற்கான விழிப்புணர்வு பதிவு !

தீதும் நன்றும் பிறர் தர வாரா ! - புறநானூறு .

Thursday, 10 March 2016

தமிழக அரசியல் குடும்பங்கள்



மன்னராட்சி முடிந்து மக்கள் ஆட்சியில் இருக்கிறோம் என்று வைத்து கொண்டாலும் வாரிசு அரசியல் என்பதும், ஜாதி அரசியல் என்பதும் தவிர்க்க முடியாமல் நம்மோடு ஒட்டி கொண்டே இருக்கிறது . 

தமிழ் நாடும் விதிவிலக்கு அல்ல . 

சுதந்திர போராட்ட காலத்தில் , போராட்ட தலைவர்களாக இருந்தவர்களில் பலரும் பெரும் பணக்காரர்கள். அவர்களே , பின்னாளில் தேர்தலிலும் நின்று வெற்றி பெற்றனர் . ஏனெனில் மக்களாட்சியின் தத்துவம் அவர்களுக்கு மட்டுமே புரிந்தது போலும் !

அதனை தொடர்ந்து அவர்களது வாரிசுகளும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்  

காமராஜர் போன்ற விதிவிலக்கும் உண்டு . அவரின் பாரம்பரியம் , சராசரி மனிதனோடு ஒத்து போனதால் தான் அவர் ஆட்சி தமிழ்நாட்டின் மிக சிறந்த ஆட்சியாக இன்றும் உள்ளது .

அதன் பின்னர் எத்தனை ஆட்சிதனை தமிழகம் கடந்த போதிலும் , அவரோடு ஒப்புமை கொள்ள இன்னும் எந்த அரசியல்வாதியும்  வரவில்லை 

ஒருவேளை தற்காலத்தில் இருக்கும் பல அரசியல் வாதிகள் தன்னிச்சையாக நின்று நற்பெயர் வாங்காது , தாத்தா பெயரை , தகப்பன் பெயரை பயன்படுத்துவதலோ என்னவோ ?

அப்படி வாழ்ந்து வரும் அரசியல் வாரிசு கள் யார்யார் என தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது .

அரசியல் வாரிசுகள் 

பி .சுப்பராயன் குடும்பம் 




பி.சுப்பராயன்  -  மெட்ராஸ் ப்ரெசிடன்யின் முன்னாள்                                                                             முதல்வர் - நீதி கட்சி 

       மோகன் குமாரமங்கலம் - சுப்பராயன் அவர்களின் மகன் .
                                                              இவரது வாரிசுகள் :

                                                                 காளியண்ணன் 

                                                                  ரங்கராஜன் குமாரமங்கலம் 

                                                                  லலிதா குமாரமங்கலம் 

பார்வதி கிருஷ்ணன்  - சுப்பராயன் அவர்களின் மகள் 

P .T. ராஜன் குடும்பம் :


      
Ptrajan.jpg

திரு . பொன்னம்பல தியாகராஜன் 

          

P .T. ராஜன் - 1892 முதல் 1974 வரை - மெட்ராஸ் ப்ரெசிடன்யின் முன்னாள்                                  முதல்வர் - நீதி கட்சி 


                           பழனிவேல் ராஜன்  1932 முதல் 2006 வரை 


பக்தவச்சலம் குடும்பம் 



 பக்தவச்சலம்  - முன்னாள் முதல்வர் 

ஜெயந்தி நடராஜன் - பக்தவச்சலம் அவர்களின் மகள் வழி பேத்தி 


ஈ .வீ .கே . சம்பத் குடும்பம் 



ஈரோடு வெங்கட நாயக்கர் சம்பத் 
கன்னடம் பேசும் தெலுங்கர் 

ஈ.வீ.கே . சம்பத் 

                         ஈ.வீ.கே.எஸ். இளங்கோவன் 

                         ஈ.வீ.கே.எஸ். இனியன் 

ஈ.வீ.கே.எஸ்.ஈ. திருமகன் - ஈ.வீ.கே.எஸ். இளங்கோவன் மகன் 




குமரி அனந்தன் குடும்பம் 




குமரி மாவட்டத்தை சேர்ந்த அனந்த கிருஷ்ணன் - நாடார் சமூகம் 

குமரி அனந்தன் -  காங்கிரஸ் 

                            தமிழிசை சௌந்தரராஜன் - குமரி ஆனந்தனின் மகள் - பா.ஜ.க 

வசந்த் குமார் - குமரி ஆனந்தனின் சகோதரர் 

ராமாசாமி படையாச்சி குடும்பம் 

ராமசாமி படையாச்சி  - வன்னியர் சங்கத்தை அடிப்படையாக கொண்ட தமிழக                                               உழைப்பாளர் கட்சி 

                எஸ்.எஸ்.ஆர் .ராமதாஸ் - ராமசாமி படையாட்சியின் மகன் - பாட்டாளி                                                                       மக்கள் கட்சி 

                                     அன்புமணி ராமதாஸ் - டாக்டர் ராமதாசின் மகன் 


ஜி .கே. மூப்பனார் குடும்பம் 



கோவிந்த சாமி கருப்பையா மூப்பனார் 


ஜி.கே.மூப்பனார் - தமிழ் மாநில காங்கிரஸ் 

                  ஜி.கே.வாசன் 


கருணாநிதி குடும்பம் 

கருணாநிதி - திராவிட முன்னேற்ற கழகம் 
                      வாரிசுகள் 
                      ஸ்டாலின் 
                      அழகிரி 
                      கனிமொழி 

முரசொலி மாறன் - கருணாநிதியின் அத்தை மகன் 
                     தயா நிதி மாறன் - முரசொலி மாறனின் மகன் 


இதில் நன்முறையில் ஆட்சி செய்த காமராஜர் திருமணமே செய்து கொள்ளவில்லை 

அவருக்கு பின் நன்முறையில் ஆட்சி செய்த 
திரு. அண்ணாதுரை அவர்களுக்கும் , திரு .எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கும் வாரிசு இல்லை .

வாரிசுகளும் தகப்பனை போலவே ஆட்சி செய்வர் என்று எதிர்பார்க்க கூடிய யாருக்கும் வாரிசு இல்லை . மீதம் சொல்ல முடிய வில்லை !

( ஆட்சி என்று குறிப்பிடபடுவது முதல்வர் பதவி மட்டும் அல்ல. ஒவ்வொரு சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் தான் )

Tuesday, 8 March 2016

ழ கரம் எனும் சிறப்பு - என்ன பண்ணலாம் இவங்கள

தமிழின் சிறப்புகளில் ஒன்று கர எழுத்து .


அழகு

புகழ்

இகழ்

மகிழ்

என்று அடிக்கி கொண்டே சொல்லலாம் தமிழில் வரும் ழ எனும் எழுத்து கொண்ட அழகு வார்த்தைகளை .

இது தமிழில் மட்டுமே உள்ளது .

மற்ற மொழிகளில் எல்லாம் ல , அல்லது ள என இரண்டு எழுத்துகள் மட்டுமே உள்ளது .

அப்படி இருக்க சில கிறுக்கர்கள் தமிழில் உள்ள ழ எனும் எழுத்தை பயன்படுத்தி வரும் எந்த ஒரு தொழிலும் நட்டத்தை அடையும் .

எனவே இந்த எழுத்தை பயன்படுத்தாதீர் என்று எச்சரிக்கை கொடுகிறார்கள்




இதோ பழமுதிர் சோலைகள் எனும் பெயரில் வைக்கும் கடைகள் எல்லாம்
சீக்கிரத்தில் இழுத்து மூடி விடுவார்களாம் . என்ன செய்யலாம் இது போல் தமிழை இழிவு படுத்தி பேசியும் , எழுதியும் வரும்  கிறுக்கர்களை !

இதில் பொதுநலம் வேறு ! இது போன்ற எழுத்துகளே வேண்டாம் என்று !

எங்கே இருந்துய்ய வர்றீங்க ?

இன்னுமா , உங்களை போன்ற நரிகளின் கதைகளுக்கு தமிழினம் செவி சாய்க்கும் என்று எதிர்பார்கிறீர்கள் .

உங்கள் கூட்டம் தமிழ் நாட்டை விட்டு வெளி ஏற வேண்டாம் !
தமிழை புகழ  கூட வேண்டாம்
பயமுறுத்தி பயமுறுத்தி தமிழனத்தை அழித்து விடலாம் என்ற கெ ட்ட எண்ணத்தை விட்டு விடுங்கள்

இதுவும் எச்சரிக்கைதான் !

Monday, 7 March 2016

தஞ்சாவூர் -ஆப்ரஹாம் பண்டிதர்

மும்மூர்த்திகள் என்று வழங்கப்படும் ஷ்யாமா சாஸ்த்ரி , தியாகராயர் , முத்துசாமி தீட்சிதர் மூவரும் சமகாலத்தை சேர்ந்தவர்கள் .

ஷ்யாமா சாஸ்திரி 1762 ல் பிறந்தவர்

தியாகராயர் 1767 ல் பிறந்தவர்

முத்துசாமி தீட்சிதர் 1775 ல் பிறந்தவர்

இவர்கள் மூவரும் எழுதிய தெலுங்கு , சம்ஸ்கிருத மற்றும் மணிபிரவாள நடை பாடல்கள் தான் இப்பொழுதும் பாடபடுகின்றன .

அனால் இப்பாடல்களின் அடிப்படை தஞ்சாவூர் இசை .

தஞ்சாவூர் இசை என்று வழங்கபடாது இப்பாடல்கள் கர்நாடக இசை என்ற பெயரால் வழங்கபடுகின்றன .

இப்பாடல்கள் அனைத்தும் தமிழ் இசைதான் என்றும் , அதன் பூர்வீகம் தஞ்சை தான் என்றும் நிரூபித்தவர் திரு. ஆப்ரஹாம் பண்டிதர் அவர்கள் .






திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பின்னர் சித்த மருத்துவம் பயின்று , தஞ்சையில் குடியேறி , இங்கு வாழும் மக்களின் கலையே இன்று கர்நாடக சங்கீதமாக ஒலிகிறது என்பதை நிருபிபதற்க்காக தானும் சங்கீதம் பயின்று , தன பிள்ளைகளுக்கும் வீணை பயிற்சி அளித்து , 1910 ம் ஆண்டு முதல் 1914 ம் ஆண்டு வரை 6 இசை மாநாடுகளை தஞ்சையில் நடத்தி காட்டினார் ஆபிரகாம் பண்டிதர் .

இவர் நடத்திய இசை மாநாடுகள் அனைத்தும் இவரது சொந்த செலவில் நடைபெற்றவை .

பிறகு வயது முதுமை காரணமாக , தொடர்ந்து நடத்த முடியாமல் 1919 ல் இயற்கை எய் தினார் .

இவர் சங்கீத கர்நாமிர்தம் என்ற நூலை எழுதி உள்ளார் . 1395 பக்கங்களை இந்த புத்தகம் 95 வகையான ராகங்கள் தமிழ் இசை தான் என்று நிறுவி உள்ளது  .

நாயக்கர்களும் , பிராமணர்களும் சொந்தம் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்று நிறுவி உள்ளார் .

ஆனால் இன்றும் தியாகறார் பிறந்த திருவையாறில் , அவர் பிறந்த பிப்ருவரி மாதத்தில் திருவையாறு உற்சவம் நடத்துவதை பிராமணர்களும் , தெலுங்கு மக்களும் பெருமையாக கருதுகின்றனர்.

ஆனால் இவர்கள் போன்றவர்களின் பின்னால் சென்ற பாவத்திற்காக தமிழ் இசை மாநாடு பண்டிதர் காலத்திற்கு பிறகு யாராலும் நடத்த படாமல் உள்ளது .

மீண்டும் நம் இசை மலர வேண்டும் . தமிழ் இசை மாநாடுகள் நடை பெற வேண்டும் . நம் இசை தான் பெயர்மாற்றி கர்நாடக இசை என்று உலா வருகிறது என்று உலகிற்கு உணர்த்த வேண்டும் .

அந்நாள் விரைவில் மலரும் .!

லிங்கம் - சிவ ராத்திரி

இன்று மகா  சிவராத்திரி - 7 - 3- 2016







லிங்கம் எனப்படுவது ஆணும் பெண்ணும் இணைந்த நிலை என்று கூறப்படுகிறது .

லிங்க் எனும் ஆங்கில சொல்லானது இணைப்பு என்று பொருள் தருகிறது .
ஆங்கில வார்த்தைகள் பல சமஸ்கிருதத்தை மையமாக கொண்டவை . அதன் அடிப்படையில் இந்த லிங்க் எனும் சொல் சம்ஸ்கிருத வழியாக வந்தது . இந்த சொல்லை அடிப்படையாக கொண்டே லிங்கம் என்பது ஆணும் , பெண்ணும் இணைந்த நிலை தான் கூறப்படுகிறது.

அனால் சம்ஸ்கிருத வார்த்தைகள் , தமிழை அடிப்படையாக கொண்டவை .

ஒழுக்கம் எனும் சொல் 

ஒ வை விடுத்து ழுக்கம் என்று மாறி அது பிறகு 

லிக்கம் ஆகி லிங்கம் ஆகியுள்ளது .

ஒருவனின் ஒழுக்கமான வாழ்வு எனப்படுவது அவனது இல்வாழ்க்கையை அடிப்படியாக கொண்டது.

அந்த இல்வாழ்க்கையே , அவனின் மற்ற எல்லா செயல்களுக்கும் அடிப்படியாக கொண்டது .

வள்ளுவரும் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தின் கீழ் 10 குறட்பாக்கள் எழுதியுள்ளார்.

இல்வாழ்க்கையை அடிப்படையாக கொண்டே , மற்ற எல்லா இடங்களிலும் ஒருவன் ஒழுக்கமாக  வாழ வேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகிறார் .

அதே சமயம் கூடா ஒழுக்கம் என்ற அதிகாரத்தின் கீழும் 10 குறட்பாட்கள் எழுதியுள்ளார் .

இந்த கூடா  ஒழுக்கத்திற்கு வழங்கப்பட்ட தண்டனையையும் இதில் குறிப்பிடுகிறார் .

நீட்டலும் மழித்தலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின் 

என்று கூறுகிறார் .

இதையே தான் நடைமுறையில் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுகின்றனர் .

இந்த ஆண் பெண் இணைவு எனும் அந்தரங்கத்தை , கூற வேண்டிய அவசியம் என்ன உள்ளது . என்று தோன்றும் .

கடந்த 200 முதல் 300 ஆண்டுகளாகத்தான் தமிழில் இது போன்று கருத்துகள் கூறுவது , அந்தரங்கம் என்ற கோட்பாட்டுக்குள் வருகிறது .

தமிழில் எழுதப்பட்ட எல்லா பாடல்களும் , களவு மற்றும் கற்பு நிலை காதலை அடிப்படையாக கொண்டவை .

2000 ஆண்டுகளாக பௌத்தர்களும், சமணர்களும் கொடுத்த சில பல தவறான கருத்துகளை நாம் பின்பற்றியுள்ளோம் .
மேலும்
ஆங்கிலேயர்களுக்கு  , அதற்கு முன்பு ஆட்சி செய்த நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்கள் இது குறித்து அறிவில்லாத நிலையில் , ஆணும் பெண்ணும் இணைந்த நிலைதான் லிங்கம் என்பதே அறியாத அறிவிலிகள் . எல்லா சிவாலயங்களிலும் தனியாக அம்பிகைக்கு என்று கோவில் எழுப்பி உள்ளனர் .

நம் தமிழ் மக்களின் அறிவு உலகலாவ விரிந்த அறிவு .  இன்று புணர்ச்சி என்பது குறித்து ஆயிரம் கேள்விகள் எழும்பினாலும் , அதற்க்கு விடைகள் சிவாலயங்களில் உள்ளது .


இது தஞ்சாவூர் மாவட்டத்தில் , பாபநாசம் என்ற ஊரில் உள்ள 108 சிவாலயம் .
இங்கு 108 வகையான லிங்க வடிவங்கள் உள்ளன.

இதை கடந்து சுயம்பு எனப்படுவது பெண்ணுடன் இணையாத லிங்கம் ஆகும் .




இது போன்ற அமைப்பு கொண்ட ஆண் வடிவானது எந்த ஒரு பெண்ணுடனும் இணைய இயலாது என்ற அறிவியலும் சேர்த்து தான் நமக்கு பாடமாகியுள்ளது . இதன் வடிவமைப்பை நேரில் பார்க்கும் போது நாம் தெரிந்து கொள்ள முடியும் .
சற்றே தவறான கருத்து என்று நம் மனம் கூட கூறலாம் . அப்படிதான் நம்மை அறிவிலிகளாக மாற்றி உள்ளனர் . இதன் காரணமாகவே வள்ளுவத்தின் காமத்துப்பால் முதல் பதினென் மேல் கணக்கில் உள்ள 18 வகையான இலக்கியங்கள் வரை நமக்கு பாடப்புத்தகங்களில் இடம் பெற இயல வில்லை .

எப்பொழுதும் இராமாயணம் , மகா பரதம் , மற்றும் வியாசர் எழுதிய கட்டுகதைகள் , இதையே வெவ்வேறு வடிவங்களில் நமக்கு பாடமாக தருகின்றனர். இதை கடந்து பௌத்த  மற்றும் சமண காபியங்களாகிய ஐம்பெரும்காப்பியங்களும் , ஐஞ்சிறுகாபபியங்களும் நமக்கு பாடமாகியுள்ளன .

இளமையில் கல் என்று ஒவ்வையார் கூறியது 

இளமையை பற்றியும் தான் .

ஆனால் நம்மால் , நம் இலக்கியங்களை படிக்க முடியாத நிலைக்க தள்ள பட்டுள்ளோம் .

இவர்களே நம் பூர்வீக அறிவை நம்மிடமிருந்து அழித்து விட்டு , பள்ளிகளில் செக்ஸ் கல்வி பற்றி வைக்கலாமா , வேண்டாமா என்று ஆய்வும் நடத்துகிறார்கள் . தேவையே இல்லை . எம் தமிழ் இனத்தின் இலக்கியங்கள் கிடைத்தாலே போதும் . வள்ளி கதைகள் , குறவஞ்சி , நற்றிணை ,குறுந்தொகை, இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .

வாழ்கை என்றால் என்ன என்றும் , உடலியல் கூறுகள் குறித்தும் அறிவியல் பூர்வமாக கூறுகிறது  நம் இலக்கியங்கள் .


இந்த சிவ லிங்க கதைகளை விட மிக மோசமாக உள்ளது சிவராத்திரி கதைகள் .

இயல்பாக ஒவ்வொரு அமாவாசைக்கும் , முந்தைய நாள் , நேர கணக்காக பார்த்தால் சரியாக இருக்கும் . சிவராத்திரி வரும்  . அந்நாள் பொழுதில் ஆண் , பெண் இணைவு உடலுக்கு கேடு தரும் . அதிலும் மாசி மாதத்தில் ஏற்படும் அமாவசைக்கு முந்தைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது . ஏனெனில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சியின் அடிபடையில் சூரிய கிரகணம் மாசி மாத அமாவாசை அன்று வருகிறது .

177 நாட்களுக்கு ஒரு முறை சூரிய கிரகணம் எழும் . இந்த சூரிய கிரகனமானது அமாவாசை நாள் பொழுதில் தான் வரும் என்பது அனைவரும் அறிந்ததே . 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் ஆரம்பித்து 177 நாட்கலுக்கு ஒருமுறை சூரிய கிரகனமாக வருகிறது . அதே மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் ஏற்படுகிறது . அதுவும் 177 நாட்களுக்கு ஒருமுறை வந்து மீண்டும் மாசி மாதத்திலேயே முடிகிறது .

அமாவாசையே இணைவிற்கு இசையாத நாள் எனில் , சூரிய கிரகணம் , வரும் பொது சொல்லவும் வேண்டுமா என்ன ? நிச்சயம் உடலுக்கு தீங்கு . எனவே சூரிய கிரகனதிர்க்கு முன்பு உள்ள சிவராத்திரி முதல் இணைவு இல்லாமல் இருப்பதே நலம் தரும் . எனவே தான் அன்று இரவு முழுவதும் அனைவரும் ஒன்றாக இணைந்து இறைவனை எண்ணி வணங்க வேண்டும் என்று கூறுகிறது தமிழ் மரபு .

இந்த இறை எனப்படுவதும் ஒழுக்க நெறியே ஆகும் .

மார்ச் 9 அன்று சூரிய கிரகணம் .

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...