Monday, 5 February 2018

பக்தி இயற்கையை அழிக்குமா ?


சபரி மலை , பழனி மலை , மேல்மருவத்தூர், வேலூர் அம்மா , வேளாங்கண்ணி ,என்று நம் சுயலாபத்திற்காக , பெரிய பணக்காரன் ஆகணும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு இறைவனை தேடி செல்லும் பக்த கேடிகளே ,
தயவு செய்து , பிளாஸ்டிக் பொருள்களை மலைகளிலோ , கடலிலோ கொட்டாதீர்கள் .
உங்களால் அங்கு வாழும் உயிர்கள் அழிகின்றன .

2004 சுனாமி யில் அதிக நஷ்டம் ஏற்பட மூலகாரணம் , வேளாங்கண்ணி விரிவாக்கப்பட்டதுதான் . சுற்றிலும் பாதுகாப்பிற்காக இருந்த மரங்களை அழித்து தான் , பக்தர்களுக்காக வேளாங்கண்ணி விரிவாக்கப்பட்டது. 

இன்று திருவண்ணாமலை , சுற்றிலும் கிரிவலத்திற்க்காக , பல்வேறு வகையான மரங்கள் அழிக்கப்படுகின்றன .

சமயபுரத்தில் , ஒரு ஆறே மூடப்பட்டு பக்தகோடிகளுக்காக ஏதோதோ வேலை நடக்கிறது.

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் வழி நெடுகிலும் எவ்வளவு புண்ணை மரங்கள் இருக்கும் தெரியுமா ? சமுத்திரக்கரை நிறைய நீரோடும் தெரியுமா ? அத்தனையும் பக்தகோடிகளுக்காக சாலைகள் விரிவாக்கம் என்ற பெயரில் அழிக்கப்படுகிறது.


இயற்கையை அழித்து பக்தகோடிகளுக்காக வேலை நடக்கிறது என்றால் தெரிந்து கொள்ளுங்கள் , 
அங்கு நடப்பது வழிபாடு அல்ல . 
வியாபாரம் !
ஆம் பக்தி என்பது வியாபாரம் .
போக்குவரத்து தொழில் வளர்கிறது . தேவை இல்லாமல் உயோகிக்கப்படும் பெட்ரோல் கூட , இயற்கை அழிவே !
ஹோட்டல்கள் பணம் பார்க்கிறது . அந்த கட்டுமானம் கூட மரங்களை அழித்து தான் !
கோவில்களில் , வழிபாடும் நேரத்தை விட அதிக நேரம் , ஷாப்பிங் நேரம் .
அதன் பெயர் , சொல்லி தெரியவேண்டியதில்லை .

நீங்கள் இறைவனை வணங்கும்  நுகர்வோராக இருக்க ,
இயற்கை அழிக்கப்பட்டால் ,
எந்த இறைவனும் உங்களுக்கு ஆசி வழங்கமாட்டான் . 
சாபம் தான் கொடுப்பான் .

எந்த ரிஷி முனிவராவது இறைவனை தேடி கோவில்களில் தவம் செய்த கதையை எங்காவது நீங்கள் கேட்டது  உண்டா ? 
காடுகளுக்குள் , நீருக்குள் , நெருப்பிற்குள் தான் தவம் செய்வார்கள் .

ஆனால் நவீன கால பக்தர்கள்தான் , காட்டையும் , நீரையும் அழித்து விட்டு இறைவனை தேடுகிறார்கள் .

முதலில் எப்போப்பார்த்தாலும் , கோவிலுக்கு போகணும்னு அவசியம் இல்லை .
அப்படி நீங்க அடிக்கடி கோவிலுக்கு போவது உங்கள் வழக்கம் எனில் , உங்களுக்கு 
கோவில் என்றால் என்ன என்று தெரியவில்லை என்றே பொருள் !

கோவில் பிரசாரம் , 
இயற்கையை அழிக்கும் எனில் அப்படி ஒரு வழக்கம் தேவை இல்லை .



Monday, 29 January 2018

நாட்டு புற வங்கியர் - Indigenous bankers

இன்றைக்கு தான் வங்கிகள் இருக்கின்றனவா ?

இல்லை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வங்கிகள் இருந்து வருகின்றன .
அவர்களுக்கு வழங்கப்படும் பெயர்தான் நாட்டுப்புற வங்கியர்

பொதுவாக இந்தியாவில் நான்கு விதமான சமூத்தை சேர்ந்த மக்கள் , வங்கியராக செயல்பட்டு வந்துள்ளனர் .
அவர்கள்

செட்டியார்கள் - தென்னிந்தியா
சேத்துக்கள் - மேற்கு வங்காளம்
மார்வாரிகள் - அஸ்ஸாம் , ராஜஸ்தான்
ஷ்ரோஆஃ மக்கள் ( shroff caste )


ஷ்ரோஆஃ மக்களை பற்றி குறிப்பிடும் போது , அவர்கள் தெற்கு ஆசியாவிற்க்கே கடன் கொடுத்தவர்கள் . கடல்கடந்து சென்று வணிகம் செய்தவர்கள் .

மார்வாரிகள் இந்தியா முழுவதும் கடன் கொடுத்தவர்கள் .

சேத்து மக்களும் , செட்டி இன மக்களும் ஒன்றோ என்று கூறுபவர்களும் உளர் .ஆனால் , தொழில் அடிப்படையில் , சேத்துக்கள் , செட்டியார்களை விட பலம் பொருந்தியவர்கள் .

செட்டி மக்கள் தென்னிந்தியா மற்றும் கிழக்காசிய பகுதிகளிலே கடன் கொடுத்த வங்கியர்கள் .




 இவர் ஜகத் சேத்
ஊர் : மூர்ஷிதாபாத் , மேற்கு வங்காளம் .
- இந்தியாவின் தலையெழுத்தை மாற்றியவர்.
இந்தியாவின் ரோத்ஸச்சைலட் என்று அழைப்பட்டவர் .


நாட்டுப்புற வங்கியர்கள் பொதுமக்களுக்கும் , வணிகர்களுக்கும் மட்டும் கடன் வழங்கவில்லை. அதையும் தாண்டி மன்னர்களுக்கு கடன் கொடுத்தனர்.
அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் , போர் செய்யும் இரு நாட்டு மன்னர்களுக்கும் கடன் கொடுப்பதும் , அவர்கள்  இருவரில் யார் வெற்றி , தோல்வி கண்டாலும் , தங்கள் தொழிலை பாதிக்க கூடாது என்று ஒப்பந்தம் போடுவதும் இவர்களின் வழக்கம் .

அது போல தான் 1757 ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிளாசி போர் நடந்தது.
இதை சிராஜ் உததௌலா விற்கும் ராபர்ட் கிளைவிற்கும் இடையே நடந்த

போரில் , கடன் கொடுத்தார் ஜகத் சேத.

அந்த போருக்கு பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் கடன் கொடுத்தார் .
பல போர்களில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற அதிக பண உதவியும் செய்துள்ளார்.

இன்றும் , இவர்கள் எந்தவிதமான சொத்து பாத்திரமும் இல்லாமல் கூட , கையொப்பம் பெற்று கொண்டு கடன் வழங்குகிறார்கள் .

இந்த செட்டியார்  மற்றும் மார்வாரிகளிடம் இருந்த வங்கிகள்தான் , இந்திராகாந்தி அம்மையாரால் நாட்டுடையாக்கப்பட்டது.



இந்தியா சுதந்திர போராட்டத்தில் மிகமுக்கிய பங்கு வகித்தது சைமன் கமிசனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் .
இது உண்மையில் நாட்டுப்புற வங்கியருக்கும் , ஆங்கிலேய வங்கியார்க்கும் இடையே  போராட்டம் ஆகும் .
சைமன் குழு , இந்தியாவில் உள்ள வங்கிகளை கையகப்படுத்தும் நோக்கத்தோடு , சில விதிமுறைகளை , சைமன் கமிசனில் கூறி இருந்தது .
அப்போது பஞ்சாப நேஷனல் பேங்க் நிறுவனர் லாலா லஜபதி ராயல் நடத்தப்பட்ட போராட்டம் தான் சைமன்  Go Back எனும் போராட்டம் !

ஆங்கிலேயர்களிடம் நாட்டை ஒப்படைக்க காரணமும் நாட்டுப்புறவங்கியர்தான் .
அவர்களை எதிர்த்து போராடியதும் இவர்களேதான் !

இன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பதும் இதே நாட்டுப்புறவாங்கியர்களே !

இன்றும் , எல்லா ஊர்களிலும் , உள்ள அடமான கடைகளை பெரும்பாலும் நடத்துவது நாட்டுப்புறவாங்கியர்களே !

பின்குறிப்பு :

வங்கிகளும் அதனை உருவாக்கிய செட்டியார்களும் !

இந்தியன் பேங்க் - ராமசாமி செட்டியார்
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் - சிதம்பரம் செட்டியார்
முருகப்பா பைனான்ஸ்      - முருகப்பா செட்டியார்
கரூர் வைஷியா பேங்க்  - கிருஷ்ணா செட்டியார் , வெங்கடராம செட்டியார்
லட்சுமி விலாஸ் பேங்க் - இராமலிங்க செட்டியார்

இந்தியாவில் உள்ள ஹைபிரிட் நிறுவனங்கள் ( Hybrid companies in india ) - சுருக்கமாக



Nuziveedu seeds - ஹைதராபாத் 

Hybridவிதைகளை உற்பத்தி செய்யும் பொதுநிறுவனம் தான் Nuziveedu seeds limited . இங்கு 350 விதமான விதைகள் ஹைபிரிட் முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5.5 மில்லியன் விவசாயகளிடம் இந்த நிறுவனம் விதை விற்பனை செய்கிறது. அதிகவிதைகள் ஆந்திராவில் தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
1973 முதல் ஹைபிரிட் விதை உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், இந்தியாவின் Agriculture Leadership விருதை வாங்கி உள்ளது.

No automatic alt text available.






மஹாராஷ்டிரா மாநிலத்தின் உள்ள ஹைபிரிட் நிறுவனம் தான் , மிகப்பெரிய அளவில் ஹைபிரிட் விதைகளை உற்பத்தி செய்வது .

1963 முதல் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்தோ அமெரிக்கன் விதைகள்
நிறுமம் பெங்களூர்  லால்பாக் பூங்காவில் தனது 50 வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகிறது.
தேதி : 21.1.2018
அவ்வளவும் Hybridவிதைகள்.
இதில் 50 ஆண்டுகளாக மாடி தோட்டம் முதல் வயல்வெளிகள் என எல்லா இடங்களிலும் தன் விதைகளை தூவியுள்ளது
Indo American hybrid seeds (India) pvt ltd
Bangalore











மாடி தோட்டம் , இலைகளே பூக்கள் போல் ஜொலிப்பது எல்லாம் , உருவாக்கி பெருமை கொள்கிறது இந்தோ அமெரிக்கன் ஹைபிரிட் சீட்ஸ் நிறுவனம் 

Wednesday, 24 January 2018

இந்தியாவும் பணக்கார நாடுதான் !

ஜனவரி 2017 ம் ஆண்டு இந்தியா ரூபாய்க்கு இலங்கையின் மதிப்பில் ரூபாய் .1 .28 ஆக இருந்தது .
ஜனவரி 2018 ம் ஆண்டு இந்தியா ரூபாய்க்கு இலங்கையின் மதிப்பில் ரூபாய் 2 .48 ஆக உயர்ந்துள்ளது.
இதன் அர்த்தம் இந்தியா முன்னேறியது அல்ல . அதீத வளர்ச்சி என்ற பெயரில்இலங்கை தன பொருளாதாரத்தை அமெரிக்காவிடம் இழந்து வருகிறது.



ரொம்ப காலமாக நாம் , இந்தியாவை விட பணக்கார நாடுகளையே பார்த்து கொண்டு இருக்கிறோம்.

கொஞ்சம் நம்மை பணக்காரர்களாக பார்க்கும் நாடுகளை பாப்போம்.

ஏமன் , = 3.93 ரியல்
டிஜிபோட்டி  = 2.79 பிரான்க்
உஸ்பேகிஸ்தான்  = 127.53 som
சிலி                = 6.58 பெசோ
ஜப்பான்      = 1.73 yen
ஐஸ்லாந்து = 1.60 Krona
ஹங்கேரி  = 3.94 Forint
கோஸ்டரீகா  = 8.89
மங்கோலியா  = 38.39 Tugrik
கம்போடியா  = 63. 11  ரியல்
பராகுவே  = 87.84 Guarani
இந்தோனேசியா  = 209.32 பைசா
வியட்நாம்   =  356.78 dong
அல்கெரிய   = 1.79 பைசா
ஸ்ரீலங்கா  = 2.42 பைசா


ரொமப் சீக்கிரம் பணக்காரராக்கும் bitcoin மதிப்பு தெறிச்சிக்குவோம்.




தேதி  : 24.1.2012

இந்தியாவும் பணக்கார நாடுதான் !

Tuesday, 23 January 2018

வேலூர் பொற்கோவில்

100 ஏக்கர் நிலத்தில் 1500 கிலோ தங்கத்தை இளைத்து கட்டப்பட்ட கோவில் வேலூரில் உள்ள மலைக்கொடி என்ற ஊரில் அமைந்திருக்கும் அம்மா கோவில் .


இதை ஸ்ரீ நாராயணி அம்மா என்றும் லட்சுமி அம்மா என்றும் அழைக்கிறார்கள் .
இந்த கோவிலின் விமானம் மட்டுஎம் 750 கிலோ தங்கத்தை சுமந்து கொண்டு இருக்கிறது.



கீழே உள்ள படத்தில் உள்ளர்வர் தான் பங்காரு அடிகளாருக்கு போட்டியாக 2007 ல் இந்த கோவிலின் அம்மாவாக மாறியவர் . 



முக்கிய குறிப்பு மற்றொரு படத்தில் அந்த அம்மா வுடன் இருப்பவர் நம்ம குடியரசு தலைவர் , ராம் நாத் கோவிந்த் அவர்கள் ! பீஹார் ஆளுநராக இருந்தப்பவே வந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போனாராம் !



நட்சத்திர வடிவில் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .




Monday, 22 January 2018

வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா

மக்களின் வாழ்வாதாரம் , அடிப்படை கட்டமைப்பு , சுற்று சூழல் , ஆரோக்கியம் இவற்றை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்
வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில்

இந்தியா 62 வது இடம் பிடித்து சாதனை .

நேபாளம் 22-வது இடத்திலும்,
அமெரிக்கா 23 வது இடத்திலும்
ஜப்பான் 24 வது இடத்திலும் ,
சீனா 26-வது இடத்திலும்,
 வங்காள தேசம் 34-வது இடத்திலும்,
இலங்கை 40-வது இடத்திலும்,
பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன.

இந்தப்பட்டியலில் லித்துவேனியா முதல் இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் 60-வது இடத்தில் இருந்தது.
தற்போது முன்னேறி 62 வது இடத்தை அடைந்தது .

நான் பெரிய இவன் , நாங்கள் இதில் வல்லவர்கள் என்று அலட்டி கொள்ளும் நாடெல்லாம் முதல் தர வரிசையில் இல்லை .என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு நல்லது செய்யாமல் , அமெரிக்காவும் , ஜப்பானும் , சீனாவும் முன்னேறி என்ன செய்ய போறாங்க ?

இதில் இந்தியா 100 வது செயற்கை கோள் வேற விட்டாச்சு !
மக்களின் வாழ்க்கை தர பட்டியல் பின்தங்கி உள்ளது.
ரொக்கெட் விடுறதை விட ,
தண்ணிக்கும் , கழிவறைக்கும் தட்டுப்பாடு இல்லாமல் செய்வதே
மிக பெரிய சாதனை !




வடக்கு ஐரோப்பாவில் , ஒரு மூலையில் இருக்கும் லிதுவேனியா தன நாட்டிற்கு முழு வசதியும் செய்து தந்துள்ளது.

அந்த நாடு இதுவரையிலும் எதற்கும் அலட்டி கொண்டதாக தெரியவில்லை .

1990 ,ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாடு இது .
62300 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் மொத்த மக்கள்தொகை 36 லட்சம் .


வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா 

Friday, 19 January 2018

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிமிடெட் SETC TN LTD

Ltd  என்பது லிமிடெட் என்பதன் சுருக்கம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிமிடெட் என்ற வரிசையில் தான் வருகிறது.
லிமிடெட் என்ற வார்த்தை எங்கு சேர்க்கப்படுகிறது என்றால் , பங்குகள் வெளியிடப்பட்ட ஒரு நிறுவனத்தில் தான் சேர்க்கப்படும் . அதாவது அது ஒரு கம்பெனி .

தனியாக 20 பேர் முதல் அதிகபட்சம் 50 பேர் இணைந்து பங்கு முதல் போட்டு ஆரம்பித்தால் அதன் பெயருக்கு பின்னால் ( P ) Ltd என்று இணைத்திருப்பார்கள் . அதாவது இது தனியார் நிறுவனம் என்று பொருள் . பிரைவேட் லிமிடெட் .
அதுவே பொதுதுறை என்று வரும் போது, பொதுமக்களின் பங்கு முதல் பெற்று ஒரு கம்பெனி ஆரம்பிக்கும் போது அதில் வெறும் லிமிடெட் மட்டுமே இணைக்க வேண்டும் .
இதன் பங்குகளை , பங்கு சந்தையில் யார் வேண்டுமானாலும் வாங்கலாம் , விற்கலாம் என்றும் பொருள் கொள்ளலாம் .

லிமிடெட் என்பது என்ன வென்றால் , ஒரு நிறுவனத்தின் முதலில் நாம் 1000 ரூபாய் மதிப்புள்ள 10 பங்குகளை வாங்கினால் , 10000 ரூபாய் செலுத்தி இருப்போம் . அவ்வாறு பணம் செலுத்தி நாம் பங்கு வாங்கிய அந்த நிறுவனம் திடீரென நட்டத்திற்கு வந்தால் , நமக்கு அந்த 10000 மட்டுமே நட்டம் ஆகும் . மேற்படி அந்த நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் , அதோடு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் நம்மிடம் எந்த தொகையும் கேட்க கூடாது என்று பொருள் . அது தான் அந்த லிமிடெட் என்பதன் பொருள் .

இப்போ நம் தமிழ்நாட்டின் போக்குவரத்து கழக பேருந்தை நன்றாக பாருங்கள் .
அதில் Tamilnadu Govt undertaking என்று மட்டுமே இருக்கும் .
SETC TN Ltd என்றும் இருக்கும் .
இதன் பொருள் அரசு போக்குவரத்து கழகத்தின் முடிவுகள் , அரசை சார்ந்தது மட்டும் அல்ல . பங்குதாரர்களை சார்ந்தது .




1984 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் , ரூபாய் .77.21 கோடி ரூபாய்க்கு தமிழக போக்குவரத்த்து துறையின்  பங்குகள் விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் முகமதிப்பு ரூபாய் .10  ஆகும்.
அதன்  பங்குதாரர்கள்  தற்போது இந்தியாவில் இல்லை .

 பேருந்து கட்டண உயர்வு என்பதும் , இங்கு நடக்கும் பிரச்சனைக்கும் தீர்வு அவர்கள்  தான் சொல்ல வேண்டும் .

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்.
அவன் எங்கோ இருந்து கொண்டு இயக்குகின்றான் . 

Thursday, 18 January 2018

கல்வியின் தண்டனை மரணம்






நேற்று ( 18.1.2018 ) சென்னை Don Bosco பள்ளியில் நரேந்திரன் என்ற 10 ம் வகுப்பு மாணவர் , இறந்து இருக்கிறார்.
காரணம் என்ன என்று பள்ளி தலைமை கூறுகையில் , திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டான் என்று கூறி இருக்கிறார்கள் . பிறகு பள்ளியின் CCTV கொடுத்த தகவலின் படி , மாணவர் பள்ளிக்கு காலதாமதமாக வந்ததற்காக  உடற்பயிற்சி ஆசிரியர் ,  dock walk எனும் தண்டனை வழங்கி உள்ளார் . அப்போது தான் மாணவர் மயங்கி விழுந்து இறந்து போய் இருக்கிறார். நான் இன்று பணியில் இல்லை என்றாலும் ஒரு ஆசிரியராக என் மனம் ஏற்க இயலாத சம்பவம் இது.!




இதில் காவல் துறை எடுத்த நடவடிக்கை ,
அந்த உடற்பயிற்சி ஆசிரியரை கைது செய்து இருக்கிறது.
முடிந்து விட்டது பிரச்னை !
எப்போதும் போல் அந்த பள்ளி இயங்கும். அதில் எப்போதும் போல் பிற மாணவர்கள் படிப்பார்கள் .
நாளை நம் மகனுக்கும் இப்படி தண்டனை வழங்க வாய்ப்புள்ளது என்ற எண்ணம் எந்த பெற்றோருக்கும் வர போவது இல்லை .

உண்மையிலேயே தவறு பெற்றோர் பக்கம் தான் !

தன குழந்தையை அடிமையாக்கும்  அவலத்தை தன கையில் செய்பவர்கள் பெற்றோர்கள் தான் !
காலையில் 6 மணிக்கே , அவன் காலை கடன்களை கூட முடிக்க முடியாமல் அவனை வேனில் தள்ளி விட்டு , என்ன சாதிக்கிறார்கள் பெற்றோர்கள் !

பள்ளியின் வாசலிலே , குழந்தையின் டைரியில் கூட your Ward என்று பள்ளி துணிந்து கூறுகிறது . நம் குழந்தை , பள்ளிக்கு மாணவனாக இருக்கலாம் எப்படி வார்டு என்று அழைக்கலாம் என்று எந்த பெற்றோரும் பள்ளியிடம் சண்டை போடுவதே இல்லை .
( வார்டு என்றால் , சட்டத்தின் கீழ் , நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் வளர்க்கப்படும் குழந்தை என்று அர்த்தம் )

அவன் கழிவறை செல்ல  அனுமதி வழங்கப்படுமா ? கழிவறை இருக்கிறதா ? விளையாட அனுமதிப்பீர்களா ? விளையாட்டு திடல் உண்டா ? என்று எத்தனை பெற்றோர்கள் , பள்ளியில் சேர்க்கும் போது கேள்வி எழுப்புகிறார்கள் ?

பெற்றோர்களே அடிமை போலும் , பூம் பூம் மாடு போலும் , கேட்ட பணத்தை கொடுத்து விட்டு ஒரு வார்த்தை பேசாமல் வரும் போது குழந்தை மட்டும் , எப்படி அறிவாளியாக , தைரியம் உள்ளவனாக , கேள்வி கேட்கும் திறன் உள்ளவனாக வளர்வான் !

தனக்கு பின்னால் தன பெற்றோர் வருவார்கள் என்ற தைரியம் உள்ள குழந்தை , ஆசிரியரின் அதட்டலுக்கு மயங்குமா ? சரிந்து விழுமா ?
நாம் கொடுக்காத தைரியத்தை எங்கிருந்து பெறுவான் ?

தன குழந்தையை அடிமையாக்கும் கேவலமான பெற்றோர் உள்ளவரை ,
அவன் உணர்விற்கு மதிப்பளிக்காமல் , ஆசிரியரை பார்த்து அஞ்சும் பெற்றோர் உள்ளவரை
பல நரேந்திரங்கள் சரிந்து விழத்தான் செய்வான் .



ஒரு பள்ளியில் ,  மாணவன் ஒருவன் விடுமுறை எடுத்ததற்காக , பெறப்பட்ட பைன் ரசீது இது !


கேள்வி கேளுங்கள் !
நீங்கள் அரசியல் வாதிகளை எந்த கேள்வியும் கேட்பதே இல்லை !
மருத்துவரிடத்தில் எந்த கேள்வியும் கேட்பதே இல்லை!
சட்டம் சார்ந்த விஷயத்தில் கேள்வி கேட்பதே இல்லை !
அரசு அதிகாரிகளை கேட்பதே இல்லை !

குறைந்த பட்சம் குழந்தைகளின் தைரியத்திற்காக
ஆசிரியரையும் ,
பள்ளிகளையுமாவது
கேள்வி கேளுங்கள் !

நீங்கள் கேள்வி எழுப்பினால் உங்கள் குழந்தை பாதிப்புக்கு ஆளாகும் எனில் ,
அந்த பள்ளியையே தூக்கி எறியுங்கள் !

அந்த பள்ளி சிறந்தது , இந்த பள்ளி சிறந்தது என்று மனதிற்குள் இருக்கும் கோட்டையை
உடைத்து எறியுங்கள் !
படிப்பறிவு இல்லாத கடந்த தலைமுறை பெற்றோரே நம்மை எல்லாம் நன்றாக படிக்க வைத்து இருக்கிறார்கள் என்றால் ,
நாம் இன்னும் அதிகப்படியாகவே படிக்க வைக்க முடியும்!

அதை பள்ளிகள் தான் செய்யும் எனில் ,
நாம் ஏன் படித்திருக்க வேண்டும் ?

ஓட்டையான பள்ளியில் படித்த நாமெல்லாம் , திறமையானவர்கள் தான் எனில் ,
அதே பள்ளி நம் பள்ளிக்கு மட்டும் நல்ல கல்வியை கொடுக்காதா ?


Sunday, 7 January 2018

இலுமினேட்டி - மதங்கள்

இலுமினேட்டி , கார்பொரேட் அட்டூழியம்னு பேச ஆரம்பித்ததும் ,
பைபிள் படித்தால் தெரியும் என்கிறது கிறிஸ்தவம்.
குரான் ஒன்றுதான் இதற்க்கு தீர்வு என்கிறார் இஸ்லாமியர்.
இதெல்லாம் தாண்டி ,
1 மணி நேரத்திற்கு மேல் பேசி எங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் பலர்.
கார்பொரேட் அதை பண்ணுது , இதை பண்ணுது என்று கூறி
அதில் இருந்து விடுபட பைபிள் வேண்டாம் .
யேகோவா பிறக்க போகிறார். 
எங்களோடு இணைந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள் .
புத்தர் பிறக்க போகிறார்.
இங்கு இருந்து இறைவன் அருள் பெற்று , கார்போரேட்டை விரட்டுவோம்
என்கின்றனர்.

ரவிசங்கர் குழுவிடம் இணைய சொல்லி பேசுகிறார்கள்.

சாய்பாபா வும் , ஹரே ராமா , ஹரே கிருஷ்ணாவும் சோறு போட்டு
கார்போரேட்டை அழிக்க
அழைப்புவிடுக்கிறார்கள்.

அன்னை அரவிந்தரும் , சாரதா தேவியும்
இன்னும் பல அம்மாக்கள் 

குறுக்கும் , நெடுக்கும் வருகிறார்கள்.
புதிதுபுதிதாக
ஏகப்பட்ட சாமியார்கள் ,
தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் .

கார்ப்பரேட் அழிவதாக தெரியவில்லை.
மாறாக அதன் பெயரில்
கார்பொரேட் அனுப்பிய மதங்கள்
வளர்கிறது.
எந்த மதமும் தீர்வு இல்லை!
தற்சார்பும் , இயற்கை சார்ந்த வாழ்வும்
போதும் .
எல்லா மதமும் பிறந்த இடம் ஒன்றே !
மெசபடோமியா !

பங்காளிகள் தத்தமது வணிகத்தை வளர்க்க
தனித்தனி குழுவாக அமைத்து
ஒரே தாய் தகப்பனின் கதையை
வேறு வேறு பெயர்களில் சொல்லி
ஊரெல்லாம் சண்டை மூட்டி விட்டு அதில் குளிர் காய்ந்து
வணிகம் வளர்க்கிறார்கள் !
அவனே
அவன் வணிகத்தை அழிக்க போகிறானாம் !
அதற்க்கு தன்னார்வலர்கள் என்ற பெயரில்
MNC யில் பணியாற்றும் ஊழியர்கள்
பெங்களூரில் வீதி வீதியாக பேசுவது
கால கொடுமை!
மக்களுக்கு ஒரு நம்பிக்கை இப்போதெல்லாம்
சாப்ட்வேர் என்ஜினீர்ஸ் கொஞ்சம் அறிவாளிகள் என்று !
அவர்கள் சொன்னால் மக்கள் நம்புகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு ,
அதையும் பயன்படுத்தி கொள்கிறார்கள்
மத நிறுவனர்கள் !

இவர்கள் கல்வி மற்றும் வேலைக்கு மரியாதையும் கொடுத்து
அவர்களை கடப்பது என்பது
சாமானியரால் நிச்சயம் முடியாது!

விழித்து கொண்டெரெல்லாம்
பிழைத்து கொண்டார் !




Thursday, 4 January 2018

ஆந்திராவில் shopping mall ஆக மாறும் ரேஷன் கடைகள்

ஆந்திராவில் shopping mall ஆக மாறும் ரேஷன் கடைகள்






டிசம்பர் 31 அன்று , ஆந்திரா முதல்வர் சந்திர பாபு நாய்டு , குண்டூர் மற்றும் விஜயவாடாவில் , 4 இடங்களில் இருந்த ரேஷன் கடைகளை , ஷாப்பிங் மால் களாக மாற்றி , திறப்பு விழா நடத்தினார்.

நல்ல விஷயம் . இதன் மூலமாக , கிடைக்க போகும் பயன்கள் :

1. ஆந்திராவில் உள்ள கிராமங்களுக்கும், நகர்ப்புற பொருள்கள் சென்றடையும். கிராமங்களில் இனி எல்லா பொருள்களும் கிடைக்கும்.

 2. ரேஷன் கார்டிலேயே எல்லா பொருளும் கிடைப்பது இன்னும் சந்தோசம் .

3. ஆந்திரா முழுவதும் 6500 கடைகள் ஆரம்பிக்க பட இருக்கின்றன.

4. இதன் மூலம் 25000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

5. கிரிஜான் கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் , பொருள்கள் வாங்கி விற்க படஇருப்பதால் , மலைவாழ் மக்களுக்கு லாபம். GCC ( Girijan Cooperative Corporation ) என்பது, 1932 ம் ஆண்டு மலைவாழ் மக்கள் தங்கள் உற்பத்தி பொருளாகிய தேன் , மஞ்சள் , தினை , கிராம்பு ,போன்ற பொருள்களை விற்பதற்காக உ ருவாக்கப்பட்டது . 1956 ம் ஆண்டு முறையாக நிறுவனம் வடிவம் பெற்றுள்ளது. சுமார் 100000 ரூபாய் மதிப்பீட்டில் , 1000 பங்குகள் பங்குக்கு 100 ரூபாய் என்ற மதிப்பில் , 1000 பங்குதாரர்களோடு உருவாக்கப்பட்டுள்ளது.

6. 500 வகையான பொருள்கள் விற்கப்பட இருக்கின்றன.

7. 3 % முதல் 40 % வரை டிஸ்கோவுண்ட் பெற வாய்ப்புள்ளது.

8.தரமான பொருள்கள் மற்றும் பேக்கிங் பொருள்கள் பெற முடியும்.

இத்தனை நன்மைகள் நிறைந்த திட்டம் இந்த ஷாப்பிங் மால் திட்டம் .




இதன் உண்மை நிலை என்ன தெரியுமா ?

1. Village Mall என்ற பெயருடன் , உருவாக்கப்பட்டுள்ள  ரேஷன் கடைகள் 

Walmart , Reliance மற்றும் Future Group ஆகிய மூன்று தனியார் அமைப்புகளோடு சேர்ந்து ஆந்திர அரசு அமைத்துள்ளது.

2.வால்மார்ட் எனப்படுவது, அமெரிக்காவின் retailar நிறுவனம் . இது ஏற்கெனவே ஆந்திராவில் 15 கடைகளை வைத்துள்ளது. இந்தியா முழுக்க 8 மாநிலங்களில் தனது கடைகளை திறந்துள்ள , வால்மார்ட் , தனது அமெரிக்கா நிறுவன பொருள்களை விற்பனை செய்யும் சந்தையாகவே இந்தியாவை பார்க்கிறது.

3. இந்த இடங்களில் விற்கபடும் பொருள்கள் மீது , 3% முதல் 40% வரை மட்டுமே , ஒரு ரேஷன் கார்ட் வைத்திருப்பவர் தள்ளுபடி பெற முடியும்.

4. அந்த 40 % தள்ளுபடிக்கு உண்டான தொகையில் 25 % ஆந்திர அரசும் , 25 % மத்திய அரசின் முத்ரா திட்டமும் வழங்கும்.

5. 500 வகையான பொருள்கள் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது .
GCC எனும் ஆந்திரா கூட்டுறவு அமைப்பிடம்  இருந்து 30 பொருள்கள் மட்டும் , தான் இந்த கடைகள் கொள்முதல் செய்ய இருக்கின்றன . மீதம் 470 பொருள்களை அமெரிக்காவில் இருந்து பெற இருக்கிறது Village Mall .

6. உள்ளூர் கொள்முதல் என்பது , கண்ணுக்கெட்டாத தூரத்தில் நகர, ஆந்திராவில் உற்பத்தி ஆகும் மரபு மாற்றப்பட்ட உணவு பொருள்கள் தமிழகம் மற்றும் கர்நாடகம் போய் சேரும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே அதைத்தான் செய்து வருகிறார்கள் .

7. நேற்று வரை 1 ரூபாய் க்கு ரேஷன் கடையில் வாங்கப்பட்ட அரிசி , இன்று 25 ரூபாய் க்கு வாங்க வேண்டும்.

8. எல்லா பொருள்களும் ரேஷன் விலையில் இல்லை . மாறாக , நிறுவன விலையில்  40 % வரை தள்ளுபடி மட்டுமே ! 

9. அமெரிக்கா வின் நல்ல சந்தையாக மட்டுமே  , ஆந்திரா தன்னை முழுமையாக மாற்றியுள்ளது. 

10 . ஏழைகளின் வாழ்வாதாரம் , சில்லறை வணிகர்களின் வாழ்வு இதெல்லாம் வால்மார்ட் , ரிலையன்ஸிடம் ,விற்கப்பட்டு விட்டது.

11. ஏற்கெனவே அனந்தபூர் மக்கள் வாழ்வாதாரம் தேடி பெங்களூர் வீதிகளில் , குடிசை போட்டும் , வாட்ச்மன் வேலை பார்த்தும், கட்டிட வேலை பார்த்தும் வாழ்ந்து வருகிறார்கள் . 

12. அந்த வரிசையில் விரைவில் , குண்டூர்  , விஜயவாடா இணையும் .

பின்குறிப்பு :







Monday, 25 December 2017

வேலைகாரன்

வேலைகாரன் என்றொரு திரைபடம் பார்த்தேன். பாவம், Dr.சிவராமன், ஹீலர் பாஸ்கர் போன்றோரின் உழைப்பு வீணடிக்க வழி கூறும் திரைபடம் அது.


இந்த திரைப்படத்தில் சில முக்கிய விஷயங்கள் பேசப்படுகிறது .

1. தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் , பட்டியல் மக்கள் என்றும் வழங்கப்படுபவர்களை, அவர்களின் தலைவர்கள் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று  விளக்கப்பட்டுள்ளது.பாராட்டுக்கு உரியது.

2.  அதே போல் , அந்த தலைவர்கள் , கார்பரேட்டுக்காக வேலை பார்க்கிறார்கள் என்பதும் கூறப்பட்டுள்ளது அருமை .

3. பெண்களை கொண்டு நடத்தப்படும் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளின் உண்மை விளக்கப்படுகிறது . அதுவும் அருமை .

4. கடைகளில் பொருள்கள் எடுக்கப்படும் விதம் மற்றும் , விற்பனை முறை விளக்குவதும் அருமை .

5. 8 மணி நேர மார்க்கெட்டர் தான் 16 மணி நேர consumer என்று கூறுவதும், ஒருவர் பாக்கெட்டில் இருந்து , மற்றொருவர் பாக்கெட்டுக்கு பணம் மாற்றுவதே வணிகம் . இதுவும் அருமை .

ஆனால் ,




சினிமா எல்லா பிரச்சினைகளையும் சரியாக கூறி, தவறான தீர்வை மக்களுக்கு கொடுக்கும். அந்த Formula இந்த திரைபடத்திலும் உண்டு.
உற்பத்தியாளன் செய்ய கூடிய சந்தையிடுதல் (Marketing) பற்றி பேசாமல், விற்பனையாளனின் சந்தையிடுதலை நிறுவனம் விளக்குகிறது.
முதலாளிகளை குறை கூறாமல், பணியாளர்கள் மாற வேண்டும் என்று கூறுகிறது.
(Consumer ) நுகர்வோர் கடைசி வரை , தற்சார்புக்கு செல்லாமல், கடைகளில் விற்கும் Noodles, Jam, Bread, Biscuit, Energy Drink போன்றவற்றை தான் உண்ண வேண்டும் என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்திருக்கிறார்.
Junk Food வேண்டாம் என்று கூறி, விழிப்புணர்வு கொடுக்கும் Dr.சிவராமனை பேச வைத்து, அதை நல்ல முறையில் தயாரித்தால் உண்ணலாம் என்று தவறான முடிவு சொல்கிறது திரைபடம் .
Junk Food தொடர்ந்தால் மலட்டு தன்மை வரும் என்பதை மட்டும் கதையில் சொல்ல வே இல்லை.
வேலைகாரன்
கார்ப்பரேட்டுக்காக உழைத்து, மக்களை அதற்குள்ளேயே வைக்க
உழைத்திருக்கிறான்.
திரைபடத்தில் வோல்கா to கங்கா எனும் புத்தகம் பற்றியும், தாய் வழிசமூகத்தில் இரவில் பெண் எந்த ஆணுடன் இருக்க வேண்டும் என்பதை தானே முடிவெடுத்தாள் என்றும் கதாநாயகி கூறுகிறார்.
அது 4000 ஆண்டுகளுக்கு முன் உருவாகிய ஆரிய வம்சாவளி கதை
தமிழர்களுக்கும் அதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
வேலைக்காரன் தவறான மூளையை சொல்லி தருகிறான்.
பலபேரின் உழைப்பை உறிஞ்ச போராடுகிறான்.

Friday, 15 December 2017

ராஜா ராஜா சோழன் என்ன ஜாதி ?

ராஜ  ராஜ சோழன் என்ன ஜாதி ?

இப்படி ஒரு பதிவை இன்று படிக்க நேரிட்டது.
அட அட அட என்னமா நம் மக்கள் சண்டை போட்டு கொல்கிறார்கள் .
பெருமையாகத்தான் இருக்கிறது.

சோழன் என்றாலே , நெல் , விளைவிப்பன் எனில்

வேளாளர் ஜாதியாம்.

அவன் கல்வெட்டுலேயே , பெரு உடையார் என்று தான் கூறி இருக்கிறான் .
அப்போ

உடையார் ஜாதி .

ராஜராஜ சோழனின் உண்மையான பெயர் , அருண்மொழி தேவன் .
எனில் ,

தேவர் ஜாதியாம்.

11982 ல் இந்திராகாந்தி அம்மையார் தஞ்சை வந்து சதயவிழாவில் பங்கு கொண்டபோது , தேவேந்திர குல வெள்ளாளர்கள் தான் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டாடினார்கள் . எனில் ,

தேவேந்திர குல வெள்ளாளர். மற்றும் பள்ளர் , மள்ளர் எல்லாம் !
பள்ளர் என்பதில் குடும்பர், குடும்பி என்னும் பல உள்ளது.
(  இந்த குடும்பர் ஜாதியும் ஆந்திர ரெட்டி ஜாதியும் ஒன்று என்று கூறிதான் , அதன் அடிப்படையில் விஷால் தமிழராம் .)

ராஜராஜ சோழன் பூ நூல் அணிந்து தான் அவனது சிலைகள் உள்ளன .
எனில் ,

பிராமணர்.

சோழர்களே தெலுங்கர்கள் தான் .
எனில்

தெலுங்கர்.

இன்னும் பலரும் ,

ஒரே சண்டை.

அப்பப்பா , முடியல ,
.
தேவர், தேவேந்திரர், தெலுங்கர், பிராமணர், உடையார் எல்லாரும் ஒண்ணா அடிச்சிக்கிட்டு கிடங்க !

தேவர் , தேவேந்திரர் , இதெல்லாம் ஜாதி கிடையாது. பட்ட பெயர்கள் .இதனை யார் வேண்டுமானாலும் போட்டு கொள்ளலாம். அதுவும் பிராமண சொம்புதூக்கிகளுக்கு கொடுக்கப்படுவது.
பிராமணர் தமிழர்களே கிடையாது.
தெலுங்கர் பார்சி ஒட்டு !
உடையார் என்ற வார்த்தையானது, ஜாதி அல்ல .
பெருமை உடையார் , கருத்து உடையார் என்பன போன்று

அங்கிருக்கும் சிவன் பல பெருமைகளை கொண்ட , பெரிய உருவம் உடையவர் என்று பொருள் தானே தவிர ஜாதி அல்ல.

தேவர் , தேவேந்திரர் போன்ற வார்த்தைகளே தமிழ் இல்லை . ராஜராஜசோழன் காலத்தில் , சைவம் , வைணவம் என்று பௌத்தத்தை அழிக்க வேறு மதங்களை பயன்படுத்த வேண்டிய நிலையில் ,
பிராமணர்களுக்கு முக்கித்துவம் கொடுக்கும் நிலையில் இருந்திருக்கிறார்கள் .
அதன் அடிப்படையில் , உயர்ந்தவர் என்று பொருள் கொள்ளும் தேவர் என்ற வார்த்தையை , சோழன் பயன்படுத்தினான் .
அதனால் அவன் தேவர் ஜாதி அல்ல .தேவர் என்பதும் , முக்குலத்தோர் என்பதும் ஜாதியே அல்ல. கள்ளர் , மறவர், அகமுடையார் இணைந்து வைத்து கொண்ட பட்ட பெயர்.

சோழர்கள் சில காலங்கள் ஆந்திராவை ஆண்டதும் , ராஜராஜ சோழனின் மகளை தெலுங்கு மன்னருக்கு  பெண் கொடுத்ததும் உண்மைதான் .
ஆனால் , ஆந்திராவிலேயே , நாங்கள் தெலுங்கு பேசுபவர்கள் அல்ல என்று அவர்களே கல்வெட்டில் குறித்து விட்டார்கள் .

ஆமா , இந்த தேவேந்திரன் யார் ?
தமிழருக்கும் , இவருக்கும் என்ன சம்பந்தம் ?
பள்ளர் , கள்ளர் , மள்ளர் எல்லாம் கூட பரவா இல்லை .
இந்த தேவேந்திர குல வெள்ளாளர் என்பது தான் மிகவும் குறையாக உள்ளது.

மக்களே ,

ராஜராஜன் என்ன ஜாதியாக இருந்தால் என்ன ?
இன்றைய நிலைக்கு ,
தன ஜாதி பெரியது என்று அலட்டி கொள்ள ஒருவனுக்கும் தகுதி இல்லை. தமிழ்நாடு தெலுங்கர் வாசமும், இஸ்லாமியர் வசமும் , ஆங்கிலேயர் வசமும் இருந்த போது அவர்களை எதிர்த்த ஜாதியெல்லாம் யார் ?


இன்று வசனம் பேசும் எல்லா சத்திரிய ஜாதிகளும் எங்கே போய் இருந்தன ?
வாள் தீட்டப்படாமல் இருந்ததா ?

உங்களில் ஒருவர் , கையில் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயனை எதிர்த்தேன் என்று கூற முடியுமா ? போர் செய்து என் குலமே அழிந்தது என்று கூற முடியுமா ?

வீரம் பெண்ணிடம் காட்டப்படுகிறது.
இளம் காதலர்களிடம் காட்டப்படுகிறது.
அக்காலத்தில் இருந்த , எந்த மன்னனும் கூட ஒப்பு கொள்ளமாட்டான், உங்களின் வீரத்தை !




சண்டையிடும் பலரும் பல எழுத்தாளர்களையும், புத்தகங்களையும் உதாரணம் கூறும் போது  தான் தெரிகிறது,
எழுத்தாளர்களின் எழுத்தை தவறாக பயன்படுகிறார்கள் என்று!

ஐயா , ஆண்ட பரம்பரைகளே ,
எல்லா பரம்பரையும் எங்கோ தோற்று தான் போயிருக்கும் . தோற்றபிறகு வீராப்பு எதற்கு ?

சோழர் வம்சம் கூட முற்றிலும் அழிந்து விட்டது. அப்படி இருக்க , அவருக்கு , உரிமை கொண்டாடுவது அசிங்கம் .
தமிழனுக்கு , தமிழனே செய்யும் கேடு !





Wednesday, 13 December 2017

தேவதாசிகளின் உண்மையான வரலாறு

தேவதாசிகளின் உண்மையான வரலாறு


தேவதாசிகள் உருவான கதை கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் அது தமிழ் ஏமாந்த கதை . தமிழர்கள் ஏமாற்றப்பட்ட கதை .

தொடக்க கால வரலாறு :


நம் இதிகாசங்கள் , புராணங்கள் கூறுகின்றன . நம் நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் அத்துணை பேருக்கும் 20000 முதல் 60000 மனைவி இருந்ததாக கூறுகின்றன. அத்தனை பேருடனும்  மன்னர் வாழ்ந்தாரா என்ற கேள்விக்கு எந்த காவியமும் பதில் எழுதவில்லை.
எப்படி ஒரு மன்னருக்கு இவ்வளவு மனைவியர் இருக்க முடியும் ?
எந்த பெண் வேண்டும் என்றாலும் திருமணம் என்ற பெயரில் அந்த பெண்ணை அரண்மனை அழைத்து வர மன்னருக்கு உரிமை உண்டு . அதன் அடிப்படையில் தான் தசரதனுக்கு 60000 மனைவி . க்ரிஷ்ணனுக்கு 16000 மனைவியாம்.

இதே அடிப்படையை ராவணன் பின்பற்றினால் மட்டும் அது தவறாம. என்ன நியாயம் இது ? இது தனி கதை .

சரி நம்ம கதைக்கு வருவோம்.

அவ்வாறு அழைத்து வரப்பட்ட பெண்களோடு மன்னர்கள் வாழ்வது கிடையாது. அழகிகள் , அறிவுள்ள பெண்கள் , எதிரியின் வீட்டு பெண்கள் இங்கு தான் இருக்க வேண்டும் .அது தான் அவர்களுக்கு மரியாதை .
அனால் , இவ்வளவு பெண்களுக்கும் உணவு ,  உடை என்று எவ்வளவு செலவுகள் ? ஒரு வேலையும் செய்யாமல் மன்னரின் கவுரவத்தை காப்பாற்ற அதீத செலவுகள் மன்னர்கள் செய்து வந்தனர் . இந்த செலவுகளை ஈடுகட்ட வரியும் அதிகம் விதித்தார்கள் .

அப்படிதான் கி.பி.590 களில் விக்ரமாதித்தன் என்று வழங்கப்பட்ட ஹர்ஷவர்தனும் பல மனைவியரோடு வாழ்ந்து வந்தான். அவரது அவையில் இருந்த புலவனும் , ஹர்ஷனின் நெருங்கிய நண்பனும் ஆகிய , பணப்பட்டான் , மன்னரிடம் எல்லா விஷயங்களும் பேசும் உரிமை பெற்றவன்.

அவன் , மன்னனிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான்.
ஏன் இவ்வளவு பெண்கள் ?
இவர்களால் மக்களுக்கும் வரி சுமை அதிகரிக்கிறது .
இதை தவிர்க்க கூடாதா ?

மன்னரோ ,
நான் என்ன செய்யட்டும் . இது வழக்கமாக இருப்பது தானே . இதற்க்கு என்ன வழி என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் இதை விடவும் முடியாது என்று பதில் கூறுவார்.

இந்நிலையில் பௌத்த மதம் தொடர்பாக பேசவும்,  மஹாபாரதம் பற்றி கூறவும் , தென்னிந்தியா விற்கு வந்தார் பணப்பட்டார்.
அதே சமயம் மத்தியில் ஆட்சி செய்து கொண்டு இருந்த , மேலை சாளுக்கிய மன்னன் 2 ம் புலிகேசியும் தென்னிந்தியாவிற்கு வந்திருந்தான்.

அந்நேரம் தென்னிந்தியாவை ஆட்சி செய்தது பல்லவர்கள் .மஹேந்திர வர்ம பல்லவனின் ஆட்சி அது. பணப்பட்டர் நேரடியாக , அவைக்குள் வரவேற்கப்பட்டார். அப்போது தான் அது நடந்தது.

ஒரு அழகிய பெண், உடலை காக்கும் அத்துணை முத்திரைகளையும் பயன்படுத்தி நடனம் ஆடினாள் . என்ன ஆச்சர்யம் ! முத்திரைகளை கொண்டு நாட்டியமா ? வியந்து போனார் பணபட்டர் .

இதே நிகழ்ச்சியை பின்வாசல் வழியாக நோட்டம் விட்டு வேடிக்கை பார்த்தவன் புலிகேசி . அதன் பிறகு அந்த நாட்டிய பெண் கடத்தப்பட்டாள் . மத்திய இந்தியா முழுக்க இந்த நாட்டியத்தை பரப்பினான் புலிகேசி . அவளது ஒவ்வொரு முத்திரை அசைவையும் கொண்டு அஜந்தாவும் , எல்லோராவும் உருவாகின.

இதன் அழகிய பதிவுதான் திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய , சிவகாமியின் சபதம் .

அதே சமயம் , தான் கண்ட நிகழ்வை ஹர்ஷரிடம் கூறினான், பாணபட்டன்.
அதை நேரில் பார்க்க ஆசை கொண்டான். அங்கனமே , பல்லவ சாம்ராஜ்யம் உதவியது. இதனை கொண்டு , தன அரண்மனையில் இருந்த பெண்களுக்கெல்லாம் நடனம் கற்று தர பட்டது. பிறகு அப்பெண்கள் தேவர் அடியார்கள் என்று பெயர் சூட்டப்பட்டு , கோவிலில் நடனம் ஆட அனுமதிக்கப்பட்டனர்.

முதன் முதலில் , மத்தியபிரதேசம் , உஜ்ஜயினியில் உள்ள , மஹாகாளேஸ்வரர் என்ற ஜோதிர்லிங்கேஸ்வரர் கோவிலில் தான் தேவர் அடியார்கள் என்ற வரலாறு தொடங்கியது.


                                            மஹாகாளேஸ்வரர் திருக்கோவில்


இந்த காலகட்டத்திற்கு பின் , மன்னர்கள் அதிகஅளவில் திருமணம் செய்வது நிறுத்தப்பட்டது. ,மேலும் பெண்கள் கவுரவமாகவே நடத்தப்பட்டார்கள் .இம்முறையானது எல்லா மன்னர்களும் பின்பற்றினார்கள் . இஸ்லாமியர்கள் வரும்வரை !

சில இஸ்லாமிய படையெடுப்பில் இப்பெண்கள் , மற்றும் மன்னரின் மனைவியர் தவறாக நடப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன., இதற்க்கு பயந்து பலர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். அதுவும் கூட மொகலாய ஆட்சியில் இல்லை .

அதேசமயம் தமிழ்நாட்டில் , சோழர்கள் அப்பெண்களை , மிகுந்த மரியாதையோடு நடத்தினார்கள் . அவர்களுக்கு என்னென்ன செய்ய பட்டது என்றும் எவ்வளவு நிலங்கள் தரப்பட்டன என்பன போன்ற தகவல்கள் கொண்டுள்ளது சோழர்கள் கால கல்வெட்டுகள் .
ராஜராஜ சோழன் காலத்தில் மட்டும் 400 பெண்கள் நாட்டியம் ஆடி இருக்கிறார்கள்.

தவறான வாழ்க்கையின் துவக்கம் :

கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு பிறகு , இஸ்லாமியர், பிரிட்டிஷார் , மற்றும் போர்த்துகீசியர்கள் போன்றோரின் வருகை நம் நாட்டை புரட்டி போட்டது அனைவரும் அறிந்ததே ! இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

அவர்களின் சொத்தை எல்லாம் பறித்து கொண்ட பிரிட்டிஷார் , அவர்களை தவறாக பயன்படுத்தினர். அவர்களின் விருந்தாளிகளுக்கு பரிசாக மாற்றினர் .

தேவர் அடியார்களாகிய இருந்த , தலித் சமுதாய பெண்கள் மிகுந்த துன்பத்தை அனுபவித்தனர். அதிலிருந்தது விட , கிறிஸ்தவ மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டனர்.

மேலும் , மேலும் நசுக்கப்பட்டனர். பல பெண்கள் , வீதிகளில் பிட்சை எடுத்தனர். வீதிகளில் நடனம் ஆடினார். தவறான தொழிலும் புரிந்தனர்.
வறுமை தவறுக்கு வழி செய்தது.

1919 ம் ஆண்டு தேயோசோபிக்கால் சொசைட்டி நடத்திய நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் ஒரு தேவர் அடியார் ஆடுவதை பார்த்த

ருக்மணி தேவி எனும் பிராமண பெண், தானும் அந்த நடனத்தை கற்று கொள்ளவேண்டும் என்று அடம் பிடித்து கற்று கொண்டார். ஆனால் அது தேவர் அடியார்கள் ஆடிய சதுர் ஆட்டம் அல்லவா , பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள் ?

பெயர் மாற்றப்பட்டது .
பரதநாட்டியம் உருவானது . அன்றுதான் பரதநாட்டியம் என்ற பெயரே வைக்கப்பட்டது. அதற்குள் அதற்கு ஒரு புராணமம் எழுதி விட்டார்கள் . இது பாரத முனி கொடுத்தது என்று ! அபத்தம் !

உடை அமைப்புகளை மாற்றினார். இசை கருவி வாசிப்பவர்களை எப்படி எப்படி  அமர வேண்டும் என்று மாற்றி அமர வைத்தார்.




அவர் வெள்ளைக்காரனாகிய ஜார்ஜ் அருந்தலே என்பவரை மணந்து கொண்டார். அவர் தான் லண்டன் Animal Welfare Board ன்  தலைவர்.மிகுந்த செல்வாக்கு ஆங்கிலேயர்கள் மத்தியில்! அதன் பிறகு  வேலை துரிதமாக நடந்தது . கலாஷேத்ரா ஆரம்பிக்கப்பட்டது. அன்னிபெசன்ட் மற்றும் பல ஆங்கில பெண்மணிகள் உதவி புரிந்தனர். பிரமாணமும், பிரிட்டிஷும் இணைந்தது .

முழுமையாக நாட்டியம் கைமாறியது. இனியும் தேவர் அடியார்கள் இருப்பது ருக்மணிக்கு பிடிக்க வில்லை . 1935 ல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. இனி அவர்கள் வேறு வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள் . ஆனால் எந்த வேலையும் எவரும் தரவில்லை . தொடர்ந்து நடனம் ஆடினார்கள் .


பின் 1947 ம் முத்துலட்சுமி ரெட்டி , தேவதாசி முறை சட்ட படி குற்றம் என்று அறிவித்தார். ஆனால் 1949 ம் தஞ்சாவூர் பாலசரஸ்வதி ( வீணை தனம்மாள் அவர்களின் பேத்தி , தேவதாசி பரம்பரையை சேர்ந்தவர்.) ருக்மணியின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் . என்ன பயன் ? ருக்மணி இந்திய அரசின் , Animal Welfare Board யின் தலைவியாக நேரு அவர்களால் 1962 ல் அறிவிக்கப்பட்டார். அப்போ விதைத்த விதைதான் ஜல்லிக்கட்டு போராட்டம் .

ஆனால் ருக்மணியின் செல்வாக்கை அரசுதான் உயர்த்தியது. வெளியில் தேவதாசிகளின் நடனம் தான் செல்வாக்கோடு இருந்தது. இது பிராமண சமுதாயம் விரும்பவில்லை. எல்லா திரைப்படங்களிலும் , இழிவானவர்களாக சித்தரிக்க பட்டாட்கள் . அவர்கள் வாழ்க்கை , ரஜினி , கமல் போன்றோரால் விமர்சிக்கப்பட்டது. ( எதோ சினிமாவில் உள்ளவன் எல்லாம் யோக்கியன் போல ) பிறகு , அம்மக்கள் முற்றிலுமாக நடனத்தை இழந்தனர்.
வறுமை வாட்டும்போது நடனம் சாத்தியமா ?

முற்றிலும் பிரமாணம் அதிகாரம் செய்து திருடியது தமிழ் நடனத்தை , இசையை !

சதுர் நடனம் தன வாழ்வை தேவர் அடியார்களோடு சேர்ந்து இழந்தது !

இன்று தேவர் அடியார்களின் நிலை :

தமிழ்நாட்டில் முற்றிலும் இல்லை என்று கூறி , அரசு அம்மக்களையே அழித்து விட்டது.

கர்நாடகத்தில் , இம்மக்கள் கோவில்கள் கழுவி விட, சுத்தம் செய்ய போன்ற வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 16000 ரூபாய் வரை அரசு சம்பளம் கொடுக்கிறது.

ஆந்திராவில் அரசு 20000 ரூபாய் வரை சம்பளம் கொடுக்கிறது. அதே கோவில் பணிகளுக்காக !

மஹாராஸ்ராவில் , சுமார் 1735 பேர் 8000 ரூபாய் பென்ஷனாக வாங்குகின்றனர்.

ஒடிசாவில் , பூரியில் வாழ்ந்த ஒரு பாட்டி இருந்த பிறகு , முற்றிலும்
ஒழி க்கப்பட்டுவிட்டதாக அரசு கூறுகிறது.

தெலுங்கானாவில், மட்டும் இப்போதும் பொட்டுக்கட்டிவிடும் வழக்கத்தின் அடிப்படையில் சுமார் 80000 பெண்கள் இருக்கின்றனர். புதிய அரசு இது .பொறுமையாகத்தான் நடவடிக்கை எடுக்கும் .என்று கூறப்படுகிறது.

ஆமா , பொட்டுக்கட்டி விடுவது என்றால் என்ன ?


எங்கிருந்து இந்த பழக்கம் வந்தது ?


சிறு வயதிலேயே 8 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை , கோவிலில் விட்டுவிடுவது. அவர்கள் அப்பெண்ணுக்கு தாலி கட்டி , அவளை அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் மனைவி என்று அறிவிப்பார்கள் . அதன் பிறகு , ஊரில் பெருசுகள் எல்லாம் அந்த பெண்ணை பயன்படுத்தி கொள்ளும்.

ஊரில் உள்ளவர்கள் விவசாய வேலைக்கு அழைத்து செல்லலாம் . வீட்டு வேலைக்கு அழைத்து செல்லலாம். ஆனால் சம்பளம் தர வேண்டியது இல்லை. ஒரு வேலை சாப்பாடு . அதுவும் கூட தேவை இல்லை . அவர்கள் பிட்சை எடுத்து கொள்ள வேண்டும் .

இன்றும் இதே நிலைதான் தெலுங்கானாவில் உள்ளது. இது கொடுமை அல்லவா ?

கோவிலில் நடனம் ஆடும் பெண்கள் வேறு ! ஆனால் இவ்வாறு உருவாக்கப்படும் பெண்கள் வேறு ! ஆனால் இருவரையும் ஒன்றென கூறி , நாட்டியதை திருடி , பெண்குழந்தைகளை கேவலப்படுத்தும் முறைகளை எங்கிருந்து கற்றுக்கொண்டோம் .

நமக்கெல்லாம் பெண் விடுதலை , பெண் சுதந்திரம் என்றெல்லாம் வியாக்கியானம் சொல்லி தந்ததே அந்த வெள்ளை அரசு கொடுத்த பரிசு இது .
2011 ம் ஆண்டு போலந்து நாட்டில் ஒரு கன்னியாஸ்திரி ஹரே ராம , ஹரே கிருஷ்ணா என்ற அமைப்பின் மீது வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்தது .

நீதிபதி : என்ன வழக்கு ?
 கன்னியாஸ்திரி : ISKON அமைப்பை தடை செய்ய வேண்டும் .

என்ன காரணம் ? இது நீதிபதி

அதில் கிருஷ்ணன் 16000 மனைவியரை திருமணம் செய்து கொள்கிறார். இது பண்ணை இழிவு படுத்தும் விதமாக உள்ளது. இது கன்னியாஸ்திரி .

சரி தானே , இதற்க்கு உங்கள் கருத்தென்ன ,  ISKON அமைப்பின் வழக்கறிஞரை பார்த்து கேட்கிறார் நீதிபதி .

 ISKON வழக்கறிஞர், அந்த கன்னியாஸ்திரியிடம் கேட்கிறார்,

நீங்கள் கன்னியாஸ்திரி ஆகும் போது என்ன உறுதிமொழி எடுப்பீர்கள் ? அதை கொஞ்சம் சத்தமாக கூற வேண்டும் . அது ஒன்று மட்டும்தான் எனது கேள்வி . முடித்து விட்டார்.

சத்தமாக கூறினார். வழக்கு முடிந்து விட்டது.  ISKON அமைப்பை தடை செய்ய இயலாது என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

என்ன உறுதிமொழி தெரியுமா ?

கன்னியாஸ்திரியாக மாறும் நான் இன்று முதல் ஜீசஸின் மனைவியாகிறேன் .

என்பது. எனில் ஏசு கிறிஸ்துவிற்கு எத்தனை மனைவிகள் ?

1965 ல் மட்டும் அமெரிக்காவில் 200000 பேர் கன்னியாஸ்திரிகளாக இருந்துள்ளனர்.
இன்று  அமெரிக்கா , ஐரோப்பா எல்லாம் கூட்டினாலும் 50000 கூட வராது.

காரணம் ? அதை விடுங்க ! யாருக்கும் சேவை செய்ய புடிக்கல !

கன்னியாஸ்திரியாக மாறும் நாள் அன்று , மணப்பெண் போல் அலங்காரம் செய்யப்பட்டு , தேவாலயம் அழைத்தது வரப்பட்டு , அங்கு அவர்களுக்கு மோதிரம் அணிவிக்கப்படுகிறது. யார் போடுவார்? தேவாலயத்தில் உள்ள பாதிரியார் .




இப்போ , நம் நாட்டின் பொட்டு கட்டி விடும் பழக்கத்தை ஒப்பிட்டு பாருங்கள் .
இரண்டும்  ஒன்று என்பது எல்லோருக்கும் புரியும் .
எனில் இந்த பழக்கம் யார் நமக்கு தந்தது ?
ஆங்கிலேயர்கள்  தந்த கொடிய வழக்கம் இது!

இதில் நாட்டியம் ஆடிய பெண்களும் கலக்கப்பட்டு , மிகப்பெரிய சமுதாய சீரழிவை செய்து விட்டு , பெண் விடுதலை , பெண் சுதந்திரம் இதெல்லாம் பேசுகிறது ஆங்கில கலாசாரம். என்ன கொடுமை இது ?

கன்னியாஸ்திரிகள் நிலை என்ன என்று தெரியுமா ?

உள்ளே ஆயிரம் நடக்கிறது. எல்லாம் ரகசியம் . ஆனால் அதையும் மீறி கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் , AMEN ( தி ஆட்டோ பிரோக்ராபி ஆப் எ நன் )  புத்தகம் எழுதி உள்ளார்.
அதில் ஒரு கன்னியாஸ்திரியை உடல் ரீதியாக என்னென்ன கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள் என்று எழுதி உள்ளார். முற்றிலும் தேவதாசி முறை !




மற்றொரு கன்னியாஸ்திரி , கூறுகையில் , குளிக்கும் போது அதை படம் எடுப்பது, இன்னும் ஏகப்பட்ட விஷயங்களை அவர் பதிந்து இருக்கிறார்.மேலும் அவர் , ஒரு நாள் கன்னியாஸ்திரி உலகம் வாயை திறக்கும் . அன்று ஒரு சுனாமி உருவாகவும் என்றும் கூறுகிறார்.



எந்த மதமாக இருந்தாலும் பெண்ணை இழிபடுத்துவது மிக கொடுமை !

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ,
தமிழர்கள் இழிவு செய்வது மிக அபத்தம் !

நம் நடனம் திருடப்பட்ட , ஒரு சமுதாயம் இழிவு படுத்தப்பட்டு , இன்றும் இந்த கேவலத்தை சுமந்து கொண்டு வாழ்வதா ?

சிந்திப்பீர் தமிழர்களே !
நம் கலாசார உரிமைகளை மீண்டும் உயிர்ப்பிப்போம்.!






Friday, 8 December 2017

குமரி மீனவா !

மீனவர்கள் மறந்த தொலைத்து விட்ட கடல்சார் அறிவியல் .
பல்வேறு காரணங்களுக்காக மதம் மாறிய தமிழன் ,
தமிழ் இனம் தந்த அறிவியலை தொலைத்தது ஏனோ?

மதம் மனிதனின் மனதை கட்டு படுத்தத்தான், அறிவை மறைக்க அல்ல .

விவசாயிகள் மறந்து போயினர் . ஆண்டுக்கு ஒரு முறை நிலத்தை விவசாயம் செய்யாமல் விடவேண்டும் என்பதை !
அதனால் தானே சித்திரை வைகாசி ஆனி முடிந்து ஆடியிலே பட்டம் காட்டினார்கள் .
அதனால் தானே அந்த மூன்று மாதங்களிலும் கோவில் திருவிழாக்கள் , திருமண விசேஷங்கள் நடத்தினார்கள் .
அனால் இன்று விவசாயி , எல்லா நாளும் உரத்தை நம்பி விவசாயம் செய்து , மண்ணை மலடாக்கி விட்டு , நஷ்ட ஈடு கேட்டு அழைந்து கொண்டு இருக்கிறான்.

மீனவர்களும் அப்படிதான்.
ஐப்பசியில் அடைமழை ,
கார்த்திகையில் கனமழை என்பதை மறந்து போயினரோ?
கார்த்திகையில் மீன் பிடிக்கலாமா ?
மீன்கள் இன விருத்திக்காக மற்றும் காலநிலை மாற்றத்திற்கேற்ப வேறு இடங்களுக்கு சென்று விடும். கடலின் தூர பகுதிகளுக்கு சென்று மீன் பிடிப்பதும் ஆபத்து.
இது மீனவர்கள் அறிய மாட்டார்களா ?
மோட்டார் வாகனங்கள் கொடுத்த தைரியம் , நம் விவசாயிகளுக்கும் , மீனவர்களுக்கும் !
விவசாயி தொலைத்த காளை இனத்திற்காகத்தானே ,ஜல்லிக்கட்டு போராட்டம் !
இதே ஆண்டின் இதில் மீனவர்கள் தொலைத்த , அதே அறிவியலுக்காக
கன்னியாகுமரியில் போராட்டம் !

நம்மை காக்க எவரும் தேவை இல்லை .
நம் அறிவியல் கைகொடுக்கும்.
வலு பார்த்து கடலுக்குள் இருங்க கற்று கொள்வோம்.
நீரோட்டம் பார்த்து , படகுகள் எடுக்க பழகி கொள்வோம்.
கால் கட்டை விறல் அழுத்தி , கடல் அலை எது வரை வரும் என்பதை அறிந்து கொள்வோம்.
மின்னல் திசை அறிய பழகி கொள்வோம்.
மீண்டும் பழமைக்கு வாருங்கள் !

அரபி கடல் ஓரம் மீனவர்கள் , மோட்டார் படகுகளில் செல்லும் போது பயந்து ஓடுகின்ற டால்பின்கள் பாவம் இல்லையா ?
கடலை அசுத்த படுத்தி , இரட்டை வலை யிட்டு ,
வணிகத்திற்கு உதவியாக வாழ்வது
 அதர்மம் இல்லையா ?



கன்னியாகுமரி மீனவர்கள் கேரளத்தோடு இணைக்க கோருகிறார்கள் .

யார் இதன் மூல காரணம் :

கிறிஸ்த பாதிரியார்கள் .
யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கூறுவதும்,
யாரை விரட்ட என்று கூறுவதும்,
எப்போது போராட வேண்டும் ,
எப்போது போராட்டத்தை கைவிடவேண்டும் என்று கூறுவதும் ,
எப்போதும் மக்களை , வாலை ஆட்டும் நாய்கள் போல் வைத்திருப்பதும்,
பிரசங்கம் என்ற பெயரில் , மக்களை மயக்கத்திலேயே வைத்திருப்பதும் ,

பாதிரியார்கள் .

கன்னியாகுமரி , நாகர்கோவில் இவற்றை ஆள்வது யார் ?
மத்திய மாநில அரசுகளா ?
இல்லை ,
கிறிஸ்த பாதிரியார்கள் !

அதனால்தான் ,
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பேச்சுக்கு போராடியது குமரி .
முதலில் வாபஸ பெற்றதும் குமரி யே !

பி.ஜெ.பி க்கு தமிழகத்திற்குள் நுழைய தைரியம் கொடுத்தது குமரி !

எந்த மீனவனுக்காகவும் போராடாமல் ,
பாதிரியார்கள் பின்னால் சென்றதும் குமரியே !

இன்றும் போராட்டம் ஆரம்பித்ததும் ,
அதே போதிரியார்களால் தான் !

எத்தனை முறை ராமேஸ்வர மீனவன் , குண்டடி பட்டு இறந்து போய் இருப்பான் .
ஏன் ?
இன்று ரயில்வே தண்டவாளத்திற்கு வந்த தலைகள் ஒருநாள் கூட ,
ராமேஸ்வர மீனவர்களுக்காக வரவே இல்லையே ? ஏன் ?

கடலில் எண்ணெய் கொட்டி , நொச்சி குப்பம் மீனவர்கள் கஷ்ட்ப்பட்டபோது குமரி மீனவர்களுக்கு அப்படி நடந்த செய்தியே தெரியாதே ! ஏன் ?

ஏன் என்றால் ,

பாதிரியார்கள் சொன்னால்தான் எல்லாம் நடக்கும்.

மத மாற்றம் என்பது ,
தமிழனின் அறிவியலை அழித்து, வணிகத்தின் அடிமையாக வைக்கத்தான் .

மீண்டும் தமிழனாக மாறு !
அன்றுதான்
விவசாயிகளுக்கும்,மீனவர்களுக்கும் விடிவு காலம் !
அது தமிழகத்தின் சுதந்திர காலம் !




பங்காரு அடிகளும் , நிதியானத்தாரும்  மக்களை மயக்குகிறார்கள் எனில் 
பாதிரியார்களும் அதே வரிசையே !



Monday, 6 November 2017

குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :

1. ஆவாரம்பூ 

2. ரோஜா இதழ்கள் ( நாட்டு ரோஜா இதழ் )

3. செம்பருத்தி பூ  ( சிகப்பு செம்பருத்தி சிறப்பு )

4. பூவந்திக்காய்  ( பூந்திக்காய் )

5. வெந்தயம் 

6. வெட்டிவேர் 

7. நெல்லிக்கனி  ( கொட்டைகளை நீக்கி விட வேண்டும் )

சம அளவில் எடுத்து நன்கு உலர்த்த வேண்டும்.

பின் அதை மிக்சியில் அரைத்து ஈரம் புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும் .

பயன்படுத்தும் முறை :

குளிக்க போவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தேவையான அளவு எடுத்து , தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதிக நீர் விட கூடாது.
சாந்து போல குழைத்து வைத்து கொள்ள வேண்டும்.

குளிக்கும் நேரத்தில் , உடலில் பூசி பின் குளிக்கவும்.

சோப்புகள் பயன்படுத்துவதால் , உடலில் பல நோய்கள் ஏற்படும்.
ஆனால்
குளியல் பொடி ,
உடலுக்கு குளிர்ச்சியும்,
மனதிற்கு உற்சாகமும்,
நாள் முழுக்க உடல் மணமாகவும் இருக்க உதவும் .



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...