Monday, 7 June 2021

நெய்

 நெய் இல்லா உண்டி பாழ்..

இலக்கியமும் உணவுக் குறிப்புகளும்
தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என அமையும் சங்க நூற்களில் உணவு முறை பற்றிய பல்வேறு குறிப்புகள், புலவர்களால் வருணனைகளாகவும், உவமைகளாகவும் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
தொல்காப்பியத்தின் இலக்கண நூற்பாக்களில் தேன், எள், எண்ணெய் ஆகியன பழக்கத்தில் இருந்தன என்பதற்குரிய சான்றுகளைக் கூறு கின்றன.
சங்க இலக்கியமான பத்துப்பாட்டிலும் பல்வேறு உணவுக் குறிப்புகள் கிடைக்கின்றன.
விருந்தோம்பும் பண்பு சங்கத் தமிழரின் உயிர்ப் பண்பாக விளங்கியது.
அல்லில் ஆயினும் விருந்தினரை உவப்போடு வரவேற்கும் பண்பு, செல்விருந்தோம்பி, வருவிருந்தினை நோக்கிக் நிற்கும் மாண்புடைய மக்கள், சங்க கால மக்கள்.
தலைவன்-தலைவியின் வாழ்க்கையை விவரிக்கும் இடமாயினும், பாடல் பெறும் அரசனின் புகழைப் பாடும் இடமாயினும், புலவர்கள் உணவு முறைகளைப் புகுத்தித் தங்கள் பாடலை இயற்றினர்.
பொருநர், பாணர், கூத்தர் என்னும் கலைவாணர்கள் பேரரசர்களையும், சிற்றரசர்களையும், செல்வந்தர்களையும் கண்டு தத்தம் கலைகளை விளக்கிப் பரிசில் பெறச் செல்லுங்கால் மன்னர்கள் அவர்களுக்கு நல்லாடை கொடுத்து நல்ல சுவையான உணவு படைத்துப் பொருளுதவியும் அளித்தனர்.
இவ்வாறு பரிசில் பெற்ற கலைஞர்கள் தாங்கள் பரிசில் பெற்ற இடத்தின் உணவுப்பழக்கங்கள் குறித்து பாடத் தவறவில்லை.
அவர்களின் பாடல்களிலிருந்து கிடைக்கும் விவரப்படி ஐவகை நிலப்பாகுபாடிற்கேற்ற உணவு முறைகளைக் காண்போம்.

குறிஞ்சி நிலத்தார் உணவு:-
சோழ நாட்டுக் குறிஞ்சி நில மக்கள் தேனையும் கிழங்கையும் உண்டனர்.
பிற நிலத்தார்க்கும் இவைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக மீனும், நெய்யும், நறவையும் வாங்கிச் சென்றார்கள்.
நன்னன் என்னும் குறுநில மன்னனின் சவ்வாது மலையின் அடிவாரத்தில் இருந்த சிற்றூர் மக்கள், நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினைச்சோறு உண்டதாகக் குறிப்பு கிடைக்கின்றது.
இவைமட்டுமின்றி, உடும்பின் இறைச்சியையும், பன்றி இறைச்சியையும், மானின் இறைச்சியும் உண்டனர்.
நெல்லால் சமைத்த கள்ளையும் மூங்கில் குழையினுள் முற்றிய கள்ளையும் பருகினர்;
மூங்கில் அரிசிச் சோற்றுடன் பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் கொண்டு தயாரித்த குழம்பு சேர்த்து உண்டதாகவும் அறிகின்றோம்.
மலை நாட்டைக் காவல் புரிந்த வீரர்கள் உட்கொண்ட இறைச்சியும் கிழங்கும், மலைமீது நடந்து சென்ற கூத்தர்கள் தினைப்புனக் காவலனால் கொல்லப்பட்ட காட்டுப் பன்றியின் இறைச்சியை வாட்டித் தின்றமையும் இக்கருத்திற்குச் சான்றாகும்.
பாலை நிலத்தார் உணவு:-
பாலை நிலத்து மக்கள் இனிய புளியங்கறி இடப்பட்ட சோற்றுடன் ஆமாவின் இறைச்சியை உண்டனர்.
தொண்டை நாட்டினைச் சேர்ந்த பாலை மக்கள் புல்லரிசியினை நில உரலிற் குற்றிச் சமைத்து அதனுடன் உப்புக் கண்டம் சேர்த்து உண்டிருக்கின்றனர்.
விருந்தினர்க்குத் தேக்கிலையில் விருந்து படைத்தனர். மேட்டு நிலத்தில் விளையக்கூடிய ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றுடன் உடும்பின் பொரியலையும் அவர்கள் உட் கொண்டனர்.

முல்லை நிலத்தார் உணவு:-
நன்னனது மலைநாட்டு நிலத்தார் அவரை விதைகளையும் மூங்கில் அரிசியையும், நெல்லின் அரிசியையும் கலந்து புளி கரைக்கப்பட்ட உலையிற் பெய்து புளியற்கூழாகக் குழைத்து உட் கொண்டனர்.
அதுவுமின்றிப் “பொன்னை நறுக்கினாற் போன்ற அரிசியுடன் வெள்ளாட்டிறைச்சி கூட்டி ஆக்கிய சோற்றையும் தினைமாவையும் உண்டனர்”.
தொண்டை நாட்டு முல்லை நிலத்தார் பால் கலந்த திணையரிசிச் சோறும் வரகரிசிச் சோற்றுடன் அவரைப் பருப்பு கலந்து பெய்த கும்மாயம் என்று பெயர் பெற்ற உணவையும் உண்டிருந்தனர்.


மருத நிலத்தார் உணவு:-
நீர் வளமும் நில வளமும் நிறைந்த இந்நிலத்து மக்கள் கரும்பையும், அவலையும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து அவர்களிடமிருந்து மான் இறைச்சியையும் கள்ளையும் பெற்றனர்.
ஒய்மாநாட்டு மருத நிலத்தார் வெண் சோற்றையும், நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையையும் உண்டனர்.
தொண்டைநாட்டு மருத நிலச் சிறுவர்கள் பழைய சோறு உண்டனர்.
அவலை இடித்து உண்டனர்.
தொண்டை நாட்டு மருதநில மக்கள் நெற்சோற்றுடன் பெட்டைக் கோழிப் பொரியல் உண்டதுடன் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் உண்டனர்.


நெய்தல் நில மக்களின் உணவு:-
நெய்தல் மக்கள் கடல் இறால், வயல் ஆமை இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டனர். பனங்கள், நெல்லரிசிக் கள் போன்றவற்றை உண்டனர்.
கள் விற்கப்படும் இடங்களில் மீன் இறைச்சி, விலங்கிறைச்சி ஆகியனவும் விற்கப்பட்டன.
ஓய்மாநாட்டு நெய்தல் நிலத்தார் உலர்ந்த குழல் மீனின் சூடான இறைச்சியுடன் கள் உண்டதாகத் தெரிகின்றது.
தொண்டை நாட்டுப் பட்டினத்தில் கொழுக்க வைத்த கருப்பஞ்சாறு பருகினர்...
அரண்மனைகளில் நாவிற்குச் சுவையான உணவுடன், சுவையான கள்ளும் தரப்பட்டது.
உணவில் இனிப்புகள், முல்லையரும்பு ஒத்த அன்னம், பாலைக் காய்ச்சி அதனோடு கூட்டின் பொரிக்கறிகளும், கொழுத்த செம்மறிக் கடாவின் இறைச்சியினைச் சுட்டும் வேகவைத்தும் படைக்கப்பட்டன.
விருந்தின் முடிவில், குங்குமப்பூ மணக்கின்ற தேறல் பருகத் தரப்பட்டது.
தொண்டை நாட்டுத் தலைவன் இளந்திரையன் பலவகையான இறைச்சி உணவைத் தயாரித்து விருந்து படைத்தது மட்டுமின்றிச் செந்நெற்சோறு வடித்துச் சர்க்கரை அடிசில் ஆக்கிச் சிறியவர்கட்குச் சிறிய வெள்ளிக் கலங்களிலும், முதியோர்க்குப் பெரிய வெள்ளிக் கலங்களிலும் அளித்து மகிழ்வித்தான்....


பல்வகை உணவுகள்:-

சங்க காலத்தில் கரிய சட்டியில் பாகுடன் வேண்டுவன கூட்டி நூல் போல அமைத்த வட்டிலும், பாகில் சமைத்த வரிகளையுடைய தேனிறாலைப் போன்ற மெல்லிய அடைகள், பருப்பையும் தேங்காயையும் உள்ளீடாகக் கொண்ட கண்ட சருக்கரை கூட்டிப் பிடித்த மோதகம், இனிப்புடன் மாவு கரைத்துத் தயாரித்த சிற்றுண்டிகள் ஆகியவற்றைத் தயாரித்து உண்டனர்.
தென்பாண்டி நாட்டுப் பரதவர்கள், கொழுத்த இறைச்சியிட்டுச் சமைக்கப்பட்ட சோற்றைப் பெரிதும் விரும்பி உண்டனர்.
பாண்டியர் தலைநகரான மதுரையில் ஏழைகளுக்கென உணவுச்சாலைகள் அமைக்கப் பெற்று, அங்கிருந்த எளியவர்களுக்கு, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், முந்திரிப்பழம், பாகற்காய், வாழைக்காய், வழுதுணங்காய், இனிப்புச் சுவையுடைய பண்ணியங்கள் சமைக்கப் பெற்ற கிழங்கு வகைகள், பாற்சோறு ஆகியன படைக்கப்பெற்றன.
தோப்புகளில் வாழ்ந்த உழவர்கள், பலா, வாழை, இளநீர், நுங்கு ஆகியவற்றை வழிநடை செல்லும் பாணர்க்கு அளித்து விருந்தோம்பினர்.
எட்டுத் தொகை கூறும் உணவு முறைகள்:-
உளுந்து மாவினை நெய்விட்டுப் பிசைந்து கொடி போன்று கயிறு திரித்து வெய்யிலில் உலர்த்தினர். இக்காலத்து ‘வடாகம்’ போன்று அமைவது இது.
எயினர்கள் முள்ளம்பன்றியின் ஊனை உண்டனர்.
சோறு வேறு, ஊன் வேறு எனப் பிரிக்க இயலாதவாறு, ஊன் குழையச் சமைத்த உணவு பற்றிய குறிப்பினைப் பதிற்றுப்பத்தில் காணலாம்.
செவ்வூணுடன் துவரையைக் கலந்து துவையலாக்கி உண்டனர்.
அவரை முதலானவற்றை உணவில் கூட்டிச் சர்க்கரை கலந்து உண்டனர்.
இறைச்சியைத் துண்டித்து வேக வைத்து நெய்விட்டுத் தாளிதம் செய்தனர்.
கடுகைக் கொண்டு நெய் கலந்தும் தாளிதம் செய்தனர்.
பாலுடன் கலந்த சோற்றில் தேன் கலந்து உண்டனர்.
பழஞ்சோறு, புளிச்சோறு ஆகியவற்றையும் உணவாகக் கொண்டனர்.
மட்பாண்டங்களில் சமையல் செய்தனர். உணவு உண்ணும்போது, சோற்றில் நெய் பெய்து உண்டனர்.
குறமகள் தன் பசி தீரத் தினைமாவினை உண்டாள்.
முற்றிய தயிரைப் பிசைந்தும், ‘புளிப்பாகன்’ எனும் கழம்பைத் தலைவனுக்கு அளித்தும் தலைவி மகிழ்ந்தாள்.
பாலை நிலத்து வழிச் செல்வோர் நீர்வேட்கை தணிய நெல்லிக்காய் உண்டனர். பசி தீர விளாம்பழம் உண்டனர்.
மருதநில உழவன் நிலம் உழுதற்குச் செல்லுமுன் விடியலில் வரால்மீனைச் சோற்றில் பிசைந்து உண்பார்.
கார் காலத்து மழை பெய்தபின் புற்றில் இருக்கும் ஈசலை இனிய ஆட்டு மோருடன் பெய்து அத்துடன் புளிச்சோற்றைக் கலந்து உண்பர்.
மறவர், வெண்சோற்றுடன் பன்றி இறைச்சியைக் கலந்து உண்டனர்.
இறைச்சியுணவு தெவிட்டி வெறுத்தால், பால் கலந்து செய்தனவும் வெல்லப்பாகு கொண்டு செய்தனவுமான பணியாரங்களை உண்டனர்.
இறைச்சி கலந்த சோற்றுணவில் நெய்யை நீரினும் மிகுதியாகப் பெய்து உண்டனர். நெய்யால் வறுக்கப்பட்ட வறுவலையும், சூட்டுக்கோலால் சுடப்பட்ட கறியையும் சுவைத்தனர்.
உழவர்கள் வாளை மீன் பொரியலுடன் பழைய சோற்றை உண்டனர்.
குடிவகை:-
சங்ககால மக்கள் பல்வேறு மூலப்பொருள்களிலிருந்து தயாரித்த மதுவையும் கள்ளையும் பருகி மகிழ்ந்தனர்.
தென்னங்கள், பனங்கள், அரிசிக்கள், தேக்கள், யவன மது தோப்பிகள், நறும்பிழி, குங்குமப்பூ மணம் கமழும் தேறல் போன்ற பல்வகை மதுவையும், கள்ளையம் அவரவர் விருப்பத்திற்கும் வாழ்க்கைத் தரத்திற்குமேற்ப தயாரித்துப் பருகினர்.

பத்திய உணவு:
பிணியுற்றபோது உணவுக் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்தனர். கடும் பிணிகள் உற்றபோது பிணியாளன் விரும்பிய உணவு வகைகளைக் கொடுக்காமல் மருந்தின் தன்மைக்கேற்ப உணவை ஆய்ந்து கொடுத்தனர். இக்காலப் பத்திய உணவுக்கு இணையாக இதனைக் கருதலாம்.
குழந்தை உணவு:
குழந்தைகட்கு நெய்ச் சோறு ஊட்டினர்.
விரத உணவு:
பார்ப்பனர் எனும் பிரிவினர் எப்போதும் விரத உணவு கொள்வர்.
இதனைப் படிவ உண்டி என்று குறுந்தொகை குறிப்பிடும். காமத்தின் இயல்பைக் கட்டுப்படுத்தும் தன்மை இப்படிவ உண்டிக்கு இருந்தது என்பதை உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.
அறிவர் உணவு:
அறிவர் எனும் முக்காலமும் உணரும் துறவியர் நெல்லால் சமைத்த சோற்றுடன் வெண்ணெயைக் கலந்து உண்டனர். அதன்பின் ‘வெப்பத் தண்ணீர்’ அருந்துவர். இதற்கெனச் சேமச் செப்பினையும் உடன் வைத்திருந்தனர்.
கைம்மை மகளிர் உணவு:
கணவனை இழந்த பெண்டிரை ‘உயவர் பெண்டிர்’ ‘கழிகல மகளிர்’ என்று அக்காலத்தில் அழைப்பர்.
இவர்கள் உணவில் நெய் போன்றவை சேர்க்கப்படவில்லை. கைகளில் இலையை இட்டு அதில் வெறும் நீர்விட்டுப் பிழிந்த சோற்றுடன் எள்ளுத் துவையலையையும், புளி கொண்டு வேக வைத்த வேளைக் கீரையையும் உண்பர். சிலர் அல்லி அரிசியை உண்பர்.
அந்தணர் உணவு:
பாற்சோறு, பருப்புச்சோறு, நெற்சோறு, மிளகு கலந்த நெய்யுடன் கூடிய கொம்மட்டி மாதுளங்காய், மாவடு ஊறுகாய் போன்றவற்றை உண்டனர். அத்துடன் பலாப்பழம், வாழை, இளநீர், நுங்கு ஆகியவற்றையும் உண்டிருக்கின்றனர்.
உணவைச் சமைக்கும் முறை:
இக்காலத்தில் சமையற்கலையைக் கற்பிக்கும் நூல்கள் பல இருப்பதைக் காணலாம்.
சங்க காலத்தும் ‘மடை நூல்’ என்னும் பெயரில் சமையற் கலை நூல் இருந்தது என்பதையும் அந்நூலினை வீமசேனன் எழுதினான் என்பதையும் அந்நூலில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ள உணவு களையெல்லாம் அக்காலத்தவர் சமைத்து உண்டனர் எனும் செய்திகளைச் சிறுபாணாற்றுப் படைப் பாடல் மூலம் அறியலாம்.
சங்க கால மக்கள் மண்பாண்டத்தில் சமைத்துப் பானையில் சோறு உண்டனர்.
உலக்கைக் கொண்டு நெல்லைக் குற்றி அதனை உலையில் பெய்து சமைத்தனர். அரிசியை அரிக்கும் பழக்கத்தால் அதில் உள்ள பல சத்துக்கள் கழிநீரில் வீணாகி விடுகின்றனர். எனவே, அரிசியை அரிக்காமல் அப்படியே உலை பெய்து சமைத்தலே நல்லது. சங்க கால மக்கள் இயல்பாகவே அரிசியை அரிக்காமல் உலையில் இட்டுச் சமைத்தனர்.
பழந்தமிழரின் சமைக்கும் முறைகள் இயல்பாகவே இக்கால அறிவியல் நெறிக்கேற்ப அமைந்திருப்பது எண்ணி மகிழத்தக்கது.
உண்ணும் முறை:
சங்க காலத்து மக்கள் உணவை வாழை இலையிலும் தேக்கிலையிலும் இட்டு உண்டனர்.
வெள்ளி, பொன் போன்ற கலங்களிலும் உண்டனர்.
சமைத்த உணவைச் சுடச்சுட உண்டு வயிர்த்தனர். உணவை நாவினால் புரட்டிக் கொடுத்து மென்று விழுங்கினர். இதனை “நாத்திறம் பெயர்ப்ப உண்டு” என்று புறநானூறு அழகுற விளக்கும்.
நன்றி: மூலிகை மணி



Sunday, 6 June 2021

சூப்பர் நெல்

 இஸ்ரேல் இப்போ புதிய வகை நெல்லை கண்டுபிடித்து விட்டது .அதனால்,நெல் உற்பத்தியின் மீது மிகப்பெரும் குற்றச்சாட்டு வந்துள்ளது.அரிசி உற்பத்தியினால் தான் உலகம் வெப்பம்அடைகிறதாம்.




தொழிற்சாலைகளோ ,சுரங்கம் அமைப்பதோ ,மீத்தேன் ,பெட்ரோல் எடுப்பதோ காரணம் இல்லை போல !நெல் உற்பத்தி செய்வது தான் காரணமாம்.அதிக படியான நீரை நெல்லுதான் உறிந்து இந்த மண்ணின் நீர் வளத்தை கெடுகிறதாம்.

ஏற்கெனவே,எங்கெல்லாம் தொழிற்சாலைகள் அதிகமோ அங்கெல்லாம்,மக்கள் நீர் பிரச்னைச்சை எழுப்ப கூடாது என்பதற்காக ,சொட்டு நீர் பாசனம் அறிமுகப்படுத்தி அம்மக்களிடம் இருந்து வர வேண்டிய கேள்விகளை தடுத்தாகி விட்டது.

இப்போ அதையும் தாண்டி புதிய வகை நெல்லை இஸ்ரேல் கண்டுபிடித்து விட்டது.




இங்கு விவசாயத்தில் நடந்த எல்லா மாற்றங்களும் இஸ்ரேல் அவங்க நாட்டின் பற்றாக்குறை நீர் ஆதாரத்துக்காக கண்டுபிடித்தது.

ஆனால் அங்கு பலன் தர'வில்லை.

அதனால் இஸ்ரேலுக்கு ஏற்ற சிறந்த சந்தையாக இந்தியா விளங்குகிறது .

இப்போ இஸ்ரேல் புதிய நெல் வகையை கண்டுபிடித்துள்ளது.நீர் அதிகம் தேவையில்லாத விதை அது .அந்த 

சூப்பர் நெல் தான் உலகம் வெப்பமயமாதலை தவிர்க்குமாம்.

எனவே 

புதியவகை நெல்லுக்கு அறிமுகமாக ,நெல் உற்பத்திதான் அதிக மீத்தேனை வெளியிடுகிறது என்று கூறப்படுகிறது .

எனில் இங்கு தண்ணீர் பிரச்சனையே இருக்காதாம் !இது அப்பட்டமான பொய் அல்லவா?

கார் உற்பத்தி,பேப்பர் உற்பத்தி ,ஆடை உற்பத்தி என்று ஏகப்பட்ட நிறுவனங்கள் இருக்க நெல்லின் மீது பழி போடுவது ஏன்?

ஏனெனில் புதிய  நெல் வருவது மட்டும் காரணம் அல்ல.

அதிகஅளவில் மின்சார கார்களும் உற்பத்தி ஆகப்போகிறது. எனவே விவசாயத்திற்கு போக வேண்டிய நீர், நீர்மின்சக்திக்கு பயன்படப்போகிறது.

மின்சார கார் மாசை கட்டுப்படுத்தும் என்று எண்ணினாலும்,அதன் உற்பத்தி பயன்தரும் என்றாலும் ,

புதிய வகை நெல்லில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பது விளைச்சலுக்கு பிறகே வெளியில் வரும்.


https://www.bbc.com/tamil/science-57365399





தண்ணி இல்லாமல் ,மண்ணு இல்லாமல் விவசாயம் செய்வது என்று எதுவெல்லாம் இயற்க்கைக்கு எதிரானதோ அதையெல்லாம் ,மக்களிடம் விற்பனை செய்ய இப்போ கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் போல,
இந்த உலகம் வெப்ப மயமாதல் !




Wednesday, 2 June 2021

அற்புத மருத்துவ அறிவியல்

 தமிழில் உடல் உறுப்புகளுக்கு மண்ணீரல் ,கல்லீரல்.நுரைஈரல் என்றே பெயர் வைத்துள்ளார்கள்.இவை அத்தனைக்கும் மிகச் சரியான அறிவியல் விளக்கங்கள் அந்த பெயர்களிலேயே உள்ளது.

உடலில் 4448வியாதிகள் உள்ளதா என்ற

கேள்விகளுடன் தமிழ் மருத்துவம் பற்றி வரும் எல்லா தகவல்களும் பொய்யானது என்ற மனப்போக்கில் கடந்து செல்கிறார்கள் .

தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடு இது.

படித்து பாருங்கள்.

தற்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமானஅறிவு  நம் உடல் சார்ந்த அறிவு மட்டுமே !

https://bit.ly/2RFF9Xy


https://bit.ly/2RFF9Xy





உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்தேனே !

இது எதோ தமிழின் பெருமைகள் என்று மட்டும் கருதி நாம் கடந்து சென்றால்,அதுதான் நாம் தமிழுக்கு செய்யும் துரோகம் ஆகும்!

உடல் என்றால் என்ன என்று தேடினால் 

இயற்கை உருவாக்கிய அற்புத மருந்து தொழிற்சாலை தான் இந்த உடல்

என்ற புரிதல் ஏற்பட்டால் அது தான் 

தமிழுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும் !





தமிழ் என்பது தொல்காப்பியம் படிப்பதும்,சங்க இலக்கியங்கள் படிப்பதும் மட்டும் அல்ல .

தமிழ் என்பது இந்த உலகின் அற்புத மருத்துவ அறிவியல் ஆகும்.

Thursday, 27 May 2021

மேற்கத்திய சந்திரமுகி

 மருத்துவமனை செவிலியர்கள் பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் , இஞ்சி இவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து , வடிகட்டி குடியுங்க என்று கூறி விட்டார்களாம் . இவையெல்லாம் வாட்சப் forward msg கள் . இவற்றையெல்லாம் செவிலியர்கள் கூறுகிறார்கள் என்று பலரும்  கோபத்துடன் பதிவு செய்கிறார்கள் முகநூலில்! .

போற போக்கை பார்த்தால் , இனி மருத்துவர்கள் , செவிலியர்கள் மனம் மாறி உள்ளூர் காய்கறிகள் ,கீரைகள் உண்ணுங்கள் என்று கூறி விட்டால் கூட , அதையும் குற்றம் கூறுவார்களோ ! 

முற்றுலும் மேற்கத்திய சந்திரமுகியாக மாறி வருகிறது போல இந்த சமூகம் !




கொரோனா ஆய்வு தகவல்கள் வரவில்லையே ஏன் ?

 கொரோனா ஆய்வு தகவல்கள் வரவில்லையே ஏன் ?


2019 இறுதி முதல் கொரோன இந்த  உலகையே ஆட்டி படைக்கிறதாம் . இருந்தும் என்ன பயன் ?

இது யாரையெல்லாம் பாதிக்கிறது ?

இது வரை இறந்தவர்கள் ஏற்கெனவே நுரையீரல் நோயாளிகளா ?இல்லை திடீரென பாதிக்கிறதா ?

இது வரை இறந்தவர்களுக்கு ஏதேனும் பொதுவாக ஒத்து போக கூட பழக்கங்கள் உள்ளதா ?

இது வரை நோய் தொற்றுக்கு ஆளானவர்களில் ஆண்கள் அதிகமா ? பெண்கள் அதிகமா ? வயது என்ன ?

அவர்களின் உணவு பழக்கங்கள் ஏனெனென்ன ?

மது பழக்கம் கொண்டோர் எத்தனை பேர் ? புகை பழக்கம் உள்ளோர் எத்தனை பேர் ?

இவர்களையெல்லாம் பாதிக்கிறதா ? அல்லது எந்த குடிப்பழக்கமும் இல்லாதவர்களை அதிகம் பாதிக்கிறதா ?

இதுவரை எந்த மாதிரியான காலநிலையில் 

இந்த பாதிப்புகள் அதிகம் உள்ளன ?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கிறதா ? 

இது நாள் வரை ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் , உடலில் நோய் எதிர்ப்பு திறன் இருக்காது என்று கூறி வந்த இந்த அறிவியல் உலகம் திடீரென வயது முதிர்ந்தோருக்கு தடுப்பூசி பரிந்துரைக்கிறதே ? இப்போது மட்டும் எதிர்ப்பு திறன் வளர்ந்து விடுமா ?


ஏன் எந்த தகவல் தொகுப்பும் இந்த உலகம் இது வரை தொகுக்கவே இல்லை .இரெண்டு ஆண்டுகள் ஆக போகிறது .கொரோன சண்டை ஆரம்பித்து !

இனிமேலாவது தொகுப்பார்களா ?


காவேரி வாழ்க !

இப்படி ஒரு வழி காட்டிய  , வருங்கால தலைமுறையை எண்ணி கவலை கொண்டு உருவாக்கிய அரசு, மற்றும் அதிகாரிகள் அத்தனை பேரையும் வாழ்த்தியே ஆகணும் ! இந்த வாழ்த்தில் நிகழ்கால அரசு,கடந்த கால அரசு என்றெல்லாம் இல்லை . அனைவருக்கும் பங்குண்டு என்பதால் , அனைவருக்குமே வாழ்த்துக்கள் போய் சேரட்டும் !

காவேரி வாழ்க !

நிலத்தடி நீர் சேமிப்பு மீது  அக்கறை கொண்டவர்கள் அரசும் ! அதிகாரிகளும் !



Wednesday, 26 May 2021

மதுவந்தி - ஒரு மாநிலத்தில் ஆளுநராக !

 

ஆரியம் vs திராவிடம் 


நாள்: 27.5.20021 - வியாழக்கிழமை 

இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்கள் முழுக்க ஒரு பள்ளியும் அதன் உரிமையாளரும் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உட்பட்டு எழுதப்படுகிறார்கள் .
அந்த பள்ளியின் ,வணிகவியல் ஆசிரியர் இணைய வழி வகுப்பில் ஒரு மாணவியிடம் தவறாக ,புலன வழியில் குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார் . அதை அடிப்படையாக கொண்டு தான் பிரச்னை!
அந்த ஆசிரியர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து விட்டது.

அந்த பள்ளியின் பெயர் பத்மா சேஷாத்ரி பள்ளி ,சென்னை
அதன் உரிமையாளர்கள் : நடிகர்: ஒய் .ஜி .மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தி . 
              
இந்த சமூகம் விழித்து கொண்டது.எல்லாவற்றிக்கும் போராட ஆரம்பித்து விட்டது .எனவே உடனுக்குடன் நீதி கிடைத்து விடும் என்றெல்லாம் எண்ணி விட்டால் , நம் அறிவிற்கு சில விஷயங்கள் இன்றும் புரிய வில்லை என்றே அர்த்தம் !



நம் அன்றாட வாழ்வில் நாம் செய்து வரும் மிக முக்கிய விஷயம் .
எப்போதும் தொலைக்காட்சிகளில் அல்லது நேரிலோ கூட மானை புலி துரத்தினால் ,மானுக்காகவே பரிந்து பேசுவோம் . புலியை திட்டி தீர்த்துவிடுவோம்.
மான் தப்பித்து விட்டால் , மனம் திருப்தி அடைந்து விடும் . பிறகு நாம் கோழியோ,ஆட்டையோ அடித்து உண்போம் .இது தான் உலக வழக்கும் கூட !

இது என்ன மனநிலை ? நம்மிடம் இரக்க குணம் உண்டு என்றெல்லாம் நாம் அலட்டி கொள்ள கூடாது .
வனவிலங்கு சட்டம் 1972 க்கு முன்பு வரை 
எல்லோரும் மான் கறி உண்டவர்கள் தான் !மானின் எண்ணிக்கை குறைந்து விட்டது ,பிறகு மான் பாவம் என்ற போதனைக்கு ஆட்பட்டது .

இப்போ கதைக்கு வருவோம். இதை உளவியல் எப்படி கூறுகிறது என்றால் , இந்த சட்டம் வரவில்லை என்றாலும் நாம் மானுக்காகதான்  பேசி இருப்போம் . ஏனெனில் நமக்கு எதிரி , உணவு எதிரி தான் புலி  !
அதனால் நாம் புலியை விரட்டுவதில் எந்த தவறும் இல்லை . என்றே கூறுகிறது .


அப்படித்தான் , இந்த பள்ளிக்கூட விஷயத்திலும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது .இங்கு யாரும் அந்த பெண்ணிற்காக பேசவே இல்லை . மாறாக அதன் உரிமையாளரை எப்படியெல்லாம் பேச வேண்டுமோ ,அப்படியெல்லாம் பேசுகிறார்கள் .

பிறகு தான் அடிப்படை புரிந்தது . பள்ளியின் உரிமையாளர்கள் பிராமண சமூகம் . திட்டுபவர்கள் எல்லாம் திராவிடம் !
எனில் இந்த சண்டை நியாயம் தானே !

இங்கு நல்லது செய்து பெயர் வாங்குவது கடினம் .ஆனால் அல்லது செய்து விளம்பரமாவது மிகச் சுலபம்!
திட்டி திட்டியே ஒருவருக்கொருவர் விளம்பரம் கொடுப்பதில் வல்லவர்கள் ஆரியம் மற்றும் திராவிடர்கள் ! 

பொள்ளாச்சி பிரச்னை நடந்தது ,அதில் சம்மந்தப்பட்டவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள் !
நிர்மலா தேவி என்ற பெண் பேராசிரியர் , பெரும் புள்ளிகளுக்காக கல்லூரி மாணவிகளை அனுப்பி வைக்கும் தரகர் வேலை பார்த்தார் . என்ன நீதி கிடைத்து விட்டது . இங்கு யார் தண்டிக்கப்பட்டார்கள் .எதுவும் இல்லை.
காசி என்ற கயவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சனையின் தீர்வு என்ன ?

எதுவும் இல்லை !
மாறாக இவர்களெல்லாம் பிரபலமானார்கள் என்பது மட்டுமே உண்மை !நாளையே காசி தேர்தலில் நின்றால்  கூட வெற்றி பெற்று விடுவான் .

ஏனெனில் மக்களுக்கு நல்லது , அல்லது இரண்டிற்கும் இடையில் நினைவில் இருக்கும் பெயருக்கு மட்டும் தான் வாக்களிப்பார்கள் .

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ,மதுவந்தி என்பவரை யாருக்கும் தெரியாது .
தமிழிசை சௌந்தர்ராஜன் , தெலுங்கானா ஆளுநர் ஆவதற்கு முன்பு வரை மதுவந்தி வெளியில் பெரிதாக பேசப்பட்டதே இல்லை . ஆனால் , தவறாக பேசுவது , அதற்கான விமர்சனங்கள் என்று எதிர்மறை விளம்பரங்கள் மூலம் , மிக விரைவில் விளம்பரமாகி விட்டார் .

எதிர்பார்ப்போம் விரைவில் , மதுவந்தி ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆளுநராக !
அது வரையில் ஆரிய , திராவிட சண்டை என்ற பெயரில் விளம்பரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் !

அப்போ நாம் என்ன செய்வது ?
எப்போதும் போலத்தான் வேடிக்கை பாப்போம் !





Monday, 24 May 2021

அறிவாளிகள்

 தமிழ் மருத்துவத்தில் 3நாள் பத்தியம் என்ற உடன் ,வேண்டாம் என்று கூறிய இந்த அறிவு தான்,வாழும் காலம் வரை சர்க்கரை,உப்பு சேர்க்காதே என்று கூறியவுடன் ஏற்றுக்கொள்கிறது!    முரண்!


வடஇந்தியாவை எப்போதும் எதிர்க்கிறோம் !ஏன்?

அவர்கள் வோல்காவில் இருந்து வந்தவர்கள் !அவர்களை நாம் மதிக்க கூடாது.

சரி தான் !ஆனால்,

நாம் மட்டும் என்னவாம் ,

நாம் அந்த பக்கம் போகாமல் ,இந்த பக்கமாக அதே வோல்கோ நதிக்கரை மேற்கத்தியதை பின்பற்றுவோம்!

நாம் உண்மையிலேயே அறிவாளிகள் தான் !எப்படியெல்லாம் நாம் ஆரியத்தை எதிர்க்கிறோம்!பெருமை!


தமிழ் வானியல் வேண்டாம் !

தமிழ் மருத்துவம் வேண்டாம்!

தமிழ் அறிவியல் வேண்டாம் !

தமிழ் மக்களும் வேண்டாம் !

ஆனாலும் தமிழ் வாழ்க!

யாருக்காக ?



வீண் வேலை

 பேசும்போது மட்டும் தமிழ் தமிழ் என்று உரக்க பேசுவது .ஆனால் செயல் என்று வந்தால் தமிழ் மருத்துவதையோ ,தமிழ் அறிவியலையோ மதிப்பதே இல்லை.

உடனே ஓடி போய் தடுப்பூசி போடுவது!என்ன தமிழ் அறிஞர்களோ !இந்த லட்சணத்தில் தமிழ் வளர்ந்து விடுமாம்!

தமிழ் மக்களையே நம்ப வில்லையாம்!இவர்கள் எல்லாம் தமிழை மட்டும் காப்பாற்றுகிறார்களாம் !வேடிக்கை தான்!

தமிழின் அறிவியலை ,மருத்துவத்தை சமைத்தல் என்னும் உருவாகும் நிலைக்கு உருவாக்காமல்,ஆண்டாண்டு காலமாய்,சமஸ்கிருதம் எனும் கல் பொறுக்கும் வேலைக்கு மட்டுமே பயன்படுத்தும்  தமிழ் ஆய்வாளர்கள் ,தமிழ் மருத்துவத்தையும் வளர்ப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை தான்!


Sunday, 23 May 2021

கொரோன பற்றி பேசும் போது நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

 கொரோன பற்றி பேசும் போது நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் 


1. இது நுரையீரலை பாதிக்கும் நோய் .

எனில் ஏற்கெனவே, அதாவது காரோண வருவதற்கு முன்பே  நுரையீரல் பாதிப்புக்கு ஆட்பட்டவர்கள் இந்தியாவில் மொத்தம் எத்தனை பேர் ?

5 கோடியே 80 லட்சம் பேர் 

----

2. அதிகம் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலம் எது ? அந்த மாநிலத்தில் ஏற்கெனவே நுரையீரல் நோயாளிகள் எவ்வளவு பேர் ?


மஹாராஷ்டிரா, உத்தரபிரதேஷ் , சத்தீஸ்கர், டெல்லி, போன்ற மாநிலங்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் .

இந்தியாவில் அதிக அளவில் கொரோனாவிற்கு முன்பே நுரையீரல் நோயாளிகளை கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியல் 

https://timesofindia.indiatimes.com/india/tb-still-a-bigger-killer-than-covid-in-india/articleshow/76602706.cms


Uttar Pradesh
In 2019, Uttar Pradesh had the highest share of tuberculosis notifications in India with 20 percent. Maharashtra and Madhya Pradesh followed with relatively lower notification rates with nine and eight percent, respectively.11-Mar-2021
இந்தியாவில் அதிக அளவில் கொரோனாவிற்கு முன்பே நுரையீரல் நோயாளிகளை கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பெறுவதும் உத்தர பிரதேசம் தான் .
-----
3. அதிகம் கொரோனவால்  பாதிக்கப்பட்ட மாநிலங்களில் காற்று மாசு அடைந்த மாநிலங்கள் எவை எவை ?
சந்தேகம் இல்லாமல் உத்தரபிரதேசம் .
பிறகு மூச்சு பிரச்னை வரமால் வேறென்ன செய்யும் ?
---
4. கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள தொழிற் சாலைகளின் எண்ணிக்கை ?
அதனால் ஏற்படும் காற்று மாசு , நீர் மாசு மற்றும் மண் மாசு .
இதற்கு பதில் கூறமாட்டோம் . ஏனெனில் பழியை தான் கொரோன மீது போடமுடியும் . தொழிற்சாலைகள் மீது கூற யாருக்கும் முடியாத காரியம் .
--
5. அவரவர் வாழும் சூழல் மற்றும் உண்ணும் உணவு, வறுமை , புகை பழக்கங்கள் மற்றும் மது பழக்கம்.
கருப்பு பூஞ்சை வந்தால் கண் பார்வை மங்கும் . ஆமாம் அதீத மது பிரியர்களுக்கும் , உடலில் வைட்டமின் A சத்து குறைந்தவர்களுக்கு கண் பார்வை மங்கத்தான் செய்யும் .
வெள்ளை பூஞ்சை நோய் ஏற்பட்டால் குடல் பாதிக்கப்படும் . மது குடித்தவர்கள் குடல் எல்லாம் ஏற்கெனவே அழுகித்தான் இருக்கும் .

எனவே அச்சம் தவிர்ப்போம் ! 
வாழ்க வளமுடன் !







கொரோனாவின் கணக்கு வழக்கு

 கொரோனாவின் கணக்கு வழக்கு 


இன்று 24.5.2.21 வரை மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள் கொரோனவால் உயிர் இழந்துள்ளதாக செய்தி தாள்கள் கூறுகின்றன .

இதன் காரணமாக மேலும் அதீத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .


வணிகவியல் பாடத்தில் ஒரு பகுதி உண்டு . அதாவது , ஒரு நிறுவனத்தின் லாபம் மற்றும் நட்டம் என்பதை மட்டும் தான் கணக்கியல் வழியாக கணக்கிட்டு கூற முடியும். அதில் காரணங்கள் என்ன என்பது இடம் பெறுவதே இல்லை . இதனால் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடையே ஏற்படும் சண்டை , சமாதானம் எதுவும் வெளியில் தெரியாது . ஆனால் லாபமும், நட்டமும் அங்குள்ள தொழிலாளர்களின் ஒற்றுமையை அடிப்படியாக கொண்டது . இவை எந்த கணக்கிலும் இது பதிவு செய்யப்படுவது இல்லை . நிறுவனர் அல்லது பங்குதாரர் திறமைசாலியாக இருந்து , இதை ஆய்வு செய்து விட்டால் லாபம் தொடரும், நட்டம் குறையும் . ஒரு வேளை , அவர் கவனிக்க தவறி விட்டால் விரைவில் நிறுவனம் மூடப்படும் .

எனவே வெறும் கணக்கு வழக்கு என்பது ஒரு நிறுவன தொடர் வளர்ச்சியை அல்லது தொடர் நட்டத்தை விளக்காது .

இது கொரோனாவிற்கும் பொருந்தும் !

உலகம் முழுவதுமே , கொரோன இறப்பு என்று தினம் ஒரு பட்டியல் வாசிக்கப்படுகிறது .ஆனால் அங்கு 

உள்ள காற்று மாசு 

நீர் மாசு , மண் மாசு , மக்களின் வாழ்க்கை முறை , உணவு பழக்கவழக்கம் , புகைபிடித்தல் , ஏற்கெனவே நுரையீரல் நோயாளிகள் என்றெல்லாம் பல்வேறு விஷயங்கள் மறைக்கப்படுகிறது .அல்லது கணக்கில் கூறப்படுவது இல்லை .

ஏன் என்பது தெரியவில்லை .

இந்தியாவில் , ஏற்கெனவே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 கொடியே 80 லட்சம் பேர் . இன்று வரை இறந்தவர்கள் வெறும் 3 லட்சம் பேர் தான் !

அதே சமயம் ,

மருத்துவர்கள் ஒரு நோயாளியை அனுமதிக்கும் போதே நோயாளியின் history எழுதிய பிறகு தான் நோயிற்கான மருந்தையே கொடுக்க முடியும் எனும் போது , ஏன் மருத்துவ துறையில் கூட இறந்தவர்களில் இத்தனை பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் என்று கூற முடியவில்லை .

மருத்துவ தர்மம் தடுக்கிறதா ?

இதை தனித்தனி எடுத்து கூறி மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய கடமை பத்திரிகையாளர்களுக்கு இல்லையா ? பத்திரிக்கை தருமம் தடுக்கிறதா ?

இங்கு ஜாதியை பற்றி கூட பேசி கொண்டே இருக்கும் எழுத்தாளர்கள் , மக்களின் அச்சத்தை போக்க எழுதுவது இல்லை . எழுத்து தர்மம் தடுக்கிறது .

இந்தியா தலை சிறந்த மருத்துவர்களையும் , எழுத்தாளர்களையும் கொண்டு உள்ளது .

ஆனால் ,ஏனோ மௌனம் சாதிக்கப்படுகிறது .

இந்த கணக்கு வழக்கு பார்க்காமல் இருப்பது சரிதானா ?




https://scroll.in/latest/991807/coronavirus-180-people-have-died-after-vaccination-in-india-till-march-29

Saturday, 22 May 2021

எங்கெல்லாம் கொரோன அதிகம் உள்ளது ?

 எங்கெல்லாம் கொரோன அதிகம் உள்ளது ?




தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோன அதிகமாக உள்ளது?

கிட்டத்தட்ட 8 மாவட்டங்களில் கொரோன பரவல் அதிகமாக உள்ளது.

சென்னை,கோவை,சேலம்,திருப்பூர்,திருச்சி,கன்னியாகுமரி,தூத்துக்குடி,

மதுரை.

ஏன் இங்கெல்லாம் அதிக பரவல் உள்ளது ?

ஒரே வார்த்தையில் கூறி விடலாம்.

இங்கெல்லாம்  காற்று மாசு ஏற்பட்டுவிட்டது .இங்கெல்லாம் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கையை விட,தொழில் துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகம்.விவசாயம் செய்வது மனதில் தரும் அமைதியை,தொழில்துறைகள்  தருவதும் இல்லை,காற்று தூய்மையாகவும் உள்ளது.

இங்கெல்லாம் கல்வி நிலையங்கள் அதிகம்.கற்றோர் என்ற பெயரில் விழிப்புணர்வு என்ற பெயரில் அச்சம் அதிகம் விதைக்கப்பட்டு விட்டது .

நம்மை சுற்றி நிகழ்வதை பகுத்து ,ஏற்றுக்கொள்ள பழகிவிட்டால்நோய் விலகி ஓடி விடும்.





உங்களுக்கு கொரோனா அச்சம் அதிகமாக உள்ளதா ?

 உங்களுக்கு கொரோனா அச்சம் அதிகமாக உள்ளதா ?


காரணம் தேடுவோம் ,

1.நீங்கள் அதிகம் படித்தவர் 


2.உங்கள் வீட்டில் அனைவரும் அதிகம் மேற்கத்திய கல்வியில் ஊறி போனவர்கள் .

3.உங்கள் வீட்டின் அருகில் சுகாதார மையம் அல்லது மருத்துவமனை உள்ளது.


4.உங்கள் வீட்டின் அருகில் செவிலியருக்கு படித்தவர்கள்,செவிலியர் பணியில் உள்ளவர்கள்,மருத்துவமனை ஊழியர்கள் உள்ளனர்.


5.உங்கள் நண்பர்கள் வீட்டில் உள்ளவர்கள் மருத்துவத்துறையில் பணியில் இருப்பவர்கள் .


6.நீங்கள் அதிகம் செய்தி தாள்கள் படிப்பவர் அல்லது தொலைக்காட்சி முன்னாலேயே அமர்ந்து இருப்பவர்கள் .


7.உங்கள் வீட்டில் அல்லது அருகில் ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் உள்ளனர் .


8.நீங்கள் ஏற்கெனவே சிறந்த அறிவாளி என்றும் நன்கு கற்றவர் என்றும் பிறரால் புகழ்ச்சிக்கு ஆளானவர்கள் .


9.உங்கள் உறவினர்கள் யாரவது  இறந்து இருப்பார்கள்.ஏற்கெனவே நோய்வாய் பட்டு இறந்தவர்களை கூட கொரோன சுமக்கிறது .எய்ட்ஸ் வந்து இறந்தால் கூட இப்போது அது கொரோன தான்.


இது உளவியல் அடிப்படியில் உங்களை வாட்டும் விஷயங்கள்!

அதே சமயம் ,

உடலியல் ரீதியாக,உங்களுக்கு மூலம் எனப்படும் மலப்பிரச்சனை நோய் இருந்தால் ,இயல்பாக உங்கள் உடலில் கோழை எனும் சளி உறைந்து விட்டது என்று பொருள்!

கோழை என்றால்,நெஞ்சுக்கூட்டில் சளி படிந்து கூடு சுருங்குகிறது என்று பொருள் !

நீர்சத்து பற்றாக்குறையும் ,இரும்பு சத்து பற்றாக்குறையும் உள்ளது என்றும் பொருள்!இதை அதிகரித்தால் இயல்பாக பயம் உங்களை விட்டு விலகும்!




10.உங்கள் பிள்ளைகள் அல்லது உறவினர் யாரோ சிங்கப்பூர் ,அமெரிக்காவில் வாழ்கிறார்கள் அவர்கள் உங்களிடம் அலைபேசியில் அதைசெய்,இதை செய் என்று கூறி கொண்டே இருக்கிறார்கள் .

Zombie ---கொரோனா

 Zombie என்றொரு தலைப்பில் பல திரைப்படங்கள் வந்துள்ளன்ன.தமிழில் கூட நடிகர் ஜெயம் ரவி நடித்து இருப்பார் .அதன் மைய கருத்து ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுவது .அதனால் மனிதர்கள் அழிவது .ஒரு புரிதலுக்காக இதை இங்கே கூற வேண்டியுள்ளது.

இது கொரோனாவிற்கு பொருந்துமா என்பதை அவரவர் கருத்துக்கே விட்டு விடுவோம்.

மேலும் கீழே உள்ள கருத்து புரிதலை ஏற்படுத்தும் என்றால் ,அது தான் கொரோனா அழிவின் முதல் வழி .அதே சமயம் நம்ம ஊர்களில் ஒரு கருத்து வழக்கில் உண்டு.மூக்கு உள்ளவரை சளி அழிந்து  போகாது !உறவுமுறைகள் என்றுமே அழியாது என்பதற்காக கூறப்படும் பேச்சு வழக்கு இது !ஆனால் அதன் அடிப்படை சளி என்பதற்கு எதிர்ப்புத்திறனை உருவாக்கி கொண்டு வாழ்வதே தீர்வாகும் .ஏனெனில் அதை அழிக்க இயலாது .





https://kreately.in/covid-19-vaccines-are-creating-variants-explains-nobel-prize-winner-french-virologist-luc-montagnier/

தீர்வு தேடும் கொரோன எனும் இடியாப்ப சிக்கல்

 மருந்தே இல்லை என்றால் அதன் பெயர் மருத்துவமே அல்ல !ஆனால் அதே இடத்திற்கு எல்லோரும் வர வேண்டும் என்றால் அங்கு Trial and Error முறையில் பரிசோதனைக்குள் வர எல்லோரும் எலிக்குட்டிகளும் அல்ல !

மனசாட்சி உள்ள ஆங்கில மருத்துவர்களும் இங்கு வாழத்தான் செய்கிறார்கள் .ஆனால்,ஊடகம் பேசுவதை விட அதிகமாக கோழைகள் பேசுகிறார்கள் !

பள்ளிகளுக்கு எப்போதுமே விளம்பரம் பள்ளிகள் கொடுப்பது இல்லை .மக்கள் தான் கொடுக்கிறீர்கள் .ஏனெனில் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் தான் எல்லோரும் படிக்க வேண்டும் .இதை தாண்டி வேறொரு பள்ளியில் படித்து அடுத்தவரின் குழந்தைகள் ஒரு விஷயத்தில் கூட தனித்துவம் பெற கூடாது என்ற எண்ணம் எல்லா தாய்மார்களிடமும் உண்டு .அதை தான் கொரோன விஷயத்திலும் பெரும்பாலும் பின்பற்றி வருகிறோம் .

எல்லோர் மனதிலும் அங்கு இறந்து விட்டார்களா ,இங்கு இறந்து விட்டார்களா என்று தேட ஆரம்பிக்கும் மனநிலைக்கு வந்து விட்டோம்.

தேடலை மாற்றுவோம் !உலகின் மூத்த குடி இது!மூடர் குடி அல்ல !

ஹிப்போகிரட்டீஸ் இன்று இருந்திருந்தால் கூட நிச்சயம் ஆங்கில மருத்துவ நிலை எண்ணி வருந்தி இருப்பார்.!

எட்வர்ட் ஜென்னர் இன்று இருந்திருந்தால்,இந்நிலைக்கு விடிவு கூறி இருப்பார் !

உங்க ஊரில் விளைச்சல் என்ன?

உங்க ஊரில் மழை எப்படி ?

உங்க பையனுக்கு கல்யாணம் எப்போ?

என்று கேள்விகளை மாற்றுவோம் !

இடியாப்ப சிக்கலுக்கு விடியல் தேடுவோம்!


கொரோனவும் கோழையும் !

 நுரையீரல் பாதிப்பு பற்றிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இது !

கொரோன என்பதை ஒழிக்க முடியாதா ? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உள்ளது .இதனால் உடலால், மனதால் ,பொருளாதாரத்தால் எல்லோரும் எதோ ஒரு வகையில் பாதிப்படைந்து வருகிறோம் . எனவே நிச்சயம் தீர்வு தேட வேண்டும்.

பகுத்தாய்வு என்ற ஒன்று உண்டு .

ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் எல்லோரும் வெற்றியாளனாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார். அப்படி உண்மையிலேயே விரும்பும் ஆசிரியர் என்ன செய்வார் ? நன்றாக படிக்க கூடிய மாணவர்களையும் , கொஞ்சம் தொய்வு உள்ள மாணவர்களையும் தனித்தனியாக அடையாளம் காண்பார் .பிறகு தொய்வு உள்ள மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார் . அப்படி செய்யும் போது , இயல்பாகவே அந்த வகுப்பில் எல்லோரும் நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவார்கள் .

கொரோனாவும் அப்படிதான் !

கொரோன என்பதை எங்க ஊரு வழக்கு மொழியில் சொல்ல வேண்டும் என்றால் கோழை என்று அர்த்தம் . 

கோழைகளை போர் காலத்திற்கு அழைத்து செல்லும் வழக்கம் நம் நாட்டில் எந்த மன்னனிடமும் இல்லை . கோழை என்றவுடன் அச்சம் என்ற பொருள் இல்லை . அவனுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது என்று பொருள் .

கொரோனவும் கோழை உள்ளவர்களாக மாற்றுகிறது . இதில் யாருக்கு முதல் பாதிப்பு வரும் . கோழைத்தனம் உள்ளவர்களுக்கு !எனில் ஏற்கெனவே கோழை உள்ளவர்களை அடையாளம் காண்பது அத்தனை கடினம் இல்லையே !

இன்றுவரை கொரோன விழிப்புணர்வு என்ற பெயரில் ஊடகம் மரண செய்தி கூறும்போதெல்லாம் இதில் ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் என்று எந்த தனி விளக்கமும் தரவே இல்லையே !

எனில் அதில் ஏற்கெனவே நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் தானே அதிகம் இறந்து இருப்பார்கள் . அதை ஏன் எந்த செய்தியும் கூறுவதே இல்லை .

கோழை மரணத்தை காட்டி அச்சத்தை கூட்டுவது சரியல்லவே !

ஆஸ்துமா , பிறவியிலேயே நுரையீரல் பாதிப்பு , நுரையீரல் புற்றுநோய் என்று ஏகப்பட்ட நுரையீரல் நோயாளிகள் இங்கு உள்ளனர் . 2016 முதல் 2018 வரை மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 2 கோடியே 80 லட்சம் முதல் 5 கோடியே 33 லட்சம் மக்கள் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று இந்திய கணக்கெடுப்பு கூறுகிறது . எனில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்களாகவும் இருக்கலாம் இல்லையா ?

ஆண்டுக்கு 80 கோடி கிலோ புகையிலை உற்பத்தி இந்தியாவில் நடக்கிறது . உலகில் சீனாவிற்கு அடுத்து புகையிலை உற்பத்தி அதிகம் செய்வது இந்தியாவில் தான் ! அதன் அதிகப்படியான நுகர்வோரும் இந்தியர்கள் தான் !

இதில் ஆண்டுக்கு 3.3 % அளவிற்கு நுரையீரல் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது .

மேலும் நுரையீரல் நோய்கள் அதிகரிக்க நம் உணவும் , அமரும் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் , கழிவறையில் அமரும் முறை உட்பட , உறங்கும் படுக்கை மாற்றங்கள் எல்லாம் காரணம் .!

வைட்டமின் A மற்றும் வைட்டமின் டி உள்ள உணவு பொருள்களை அதிகம் எடுத்துக்கொண்டாலே போதும் .நுரையீரல் பாதிப்பில் இருந்து விடுபடலாம் .சூரியஒளியின் ஆற்றல் நுரையீரல் பலப்படுத்தும் .முருங்கை , கருவேப்பிலை ,மீன் ,இறைச்சி , உள்ளூர் கொடி காய்கறிகள் எல்லாம் நமக்கான நன்மைகளை செய்ய காத்து இருக்கின்றன .

தேடலும் விடையும் , அதற்கான முடிவுகளும் நம்முடைவை என்பதை நினைவிற் கொள்வோம் !

கொரோன எனும் மணிமுடி சண்டையில் இருந்து ஒதுங்கி வாழ்வோம் !



Thursday, 29 April 2021

நடப்பு நிகழ்வுகள் 30 .4 2021

 நடப்பு நிகழ்வுகள் 30 .4 2021 


* இன்று  National Honesty Day ஐக்கிய நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது .



*.இன்று தேசிய அளவில் ஆயுஷ்மான் பாரத திவாஸ் அனுசரிக்கப்படுகிறது . பிரதான மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்ற திட்டம் இதில் சிறப்பு பெறுகிறது .


* 500  பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா இணைந்துள்ளார் .


* 2021 ம ஆண்டு உலக பருவநிலை உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் " எழுமின் விழுமின் " என்ற விவேகானந்தரின் வார்த்தைகளை பேசியுள்ளார் . கொரோனவில் இருந்து விடுபடுவதற்காக கூறப்பட்ட வாக்கியம் அது !

இந்த காணொளி வழி கூட்டத்தில் 40 நாடுகள் பங்கு கொண்டுள்ளன .


* ஆந்திராவில் 1 .6 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் , ஆந்திராவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது .


* 23 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது .




*கர்ப்பிணி பெண்களுக்கு இந்த கொரோன நேரத்தில் உதவி செய்ய தேசிய மகளிர் ஆணையம் ( NCW )  9354954224 என்ற வாட்சப் எண்ணை கொடுத்துள்ளது .


* துருக்கியில் நடைபெறும் இஸ்தான்புல் டென்னில் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில், ஸோரோனா சிருஷ்டி பட்டம் வென்றுள்ளார் .




The woman's History என்ற நூலை ரோசலான்ட் மில்ஸ் என்பவர் எழுதியுள்ளார் .



How to Avoid a Climate Disaste என்ற நூலை பில் கேட்ஸ் எழுதியுள்ளார் .

நடப்பு நிகழ்வுகள் 29 ஏப்ரல் 2021

 நடப்பு நிகழ்வுகள் 29 ஏப்ரல் 2021 


* அசாம் மாநிலத்தில் நேற்று 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .


 * உத்தரகாண்ட் மாநிலத்தில் இலவச தடுப்பூசிக்காக 400 கோடியை அந்த அரசு ஒதுக்கியுள்ளது .



* UPI மூலம் பணப்பரிவர்த்தனை ,  என்ற வகையில் ஒரு பில்லியன் பரிவர்த்தனைகள் phone pe மூலம் நடைபெற்றுள்ளது . இந்தியாவில் முதல் முறையாக ஒரு பில்லியன் தொட்டது phonepe செயலி தான் .


* கிரிப்டோ கர்ரெனசி முறையை துருக்கி நாடு தடை செய்துள்ளது .



* உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்ற இடத்தை பென் ஸ்டாக் பெற்றுள்ளார் .


* புதிய தடுப்பூசி - சீனாவின் சினோபார்ம் .


* ஆக்சிஜென் தேவைக்காக உலக நாடுகளிடம் டேங்கர் மற்றும் ஆக்சிஜென் தொடர்பான வசதிகளை கேட்டு வருகிறது . இதனை ஆக்சிஜென் மைத்திரி என்ற பெயரில் நடைமுறை படுத்துகிறது .


*WILD ELEMENTS  Foundation - சுற்றுசூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதாக கிருதி காந்த் என்ற பெண் 

விஞானிக்கு ,WILD Innovator Award'.  என்ற விருது வழங்கியுள்ளது . இதுவே அமைப்பிடம் இருந்து இந்தியா வில் , ஆசியாவில் பெறும் முதல் விருது .



* பைத்தான் 5 எனும் ஏவுகணை வெற்றிகரமான சோதனைக்கு பிறகு , 5 ம் தலைமுறை தேஜஸ் விமானத்தில் இணைக்கப்பட்டுள்ளது .


Wednesday, 28 April 2021

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 28 2021

 நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 28 2021 


2030 க்குள் 50 மில்லியன் உயிர்களை காப்பாற்ற உலகளாவிய நோய் தடுப்பு மூலத்தை அறிவிக்க போவதாக WHO அறிவித்துள்ளது .


இங்கிலாந்தில் உலகின் மிக சக்தி வாய்ந்த காலநிலை மாற்றத்தை அறிவிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் தயாராகி வருகிறது . இது மைக்ரோ சாஃப்ட் நிறுவனமும் , UK வானிலை அமைப்பும் இணைந்து தயாரித்து வருகினறன .


வில்வித்தை உலகக் கோப்பை போட்டி அமெரிக்காவில் குவாத்தமாலா நகரத்தில் நடக்கிறது .  3 தங்க பதக்கங்களை இந்திய அணி பெற்று தந்துள்ளனர் தீபிகா குமாரி , அங்கிதா பகத், கோமாளிக பாரி ஆகிய மூவரும் ! இதில் மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வெல்கிறார் தீபிகா குமாரி .

கலப்பு இரட்டையர் பிரிவில் அதானு தாஸ் மற்றும் அங்கீத பகத் இருவரும் இணைந்து வெண்கல பதக்கம் வென்றுள்ளனர் .

இந்த வெற்றியின் மூலம் அதானு தாஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட தேர்வாகி உள்ளார் .

அதானு தாஸ் மற்றும் தீபிகா குமாரி இருவரும் தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது .


ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் வெளியுறவு தணிக்கையாளராக திரு .கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார் .


சென்னையில் காரோண சிகிக்சையை கண்காணிக்க திரு தரேஸ் அகமது IAS அவர்கள் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் . முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளை இவர் கண்காணிப்பார் . மேலும் கொரோன சிகிச்சைக்காக ஒப்பந்த அடிப்படியில் 150 மருத்துவர்களும் 1560 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் .


இந்திய மற்றும் பிரெஞ்சு கடற்படை இரு தரப்பு பயிற்சியாக வருணா 21 பயிற்சி 19 வது பயிற்சியாக அரபி கடலில் ஏப்ரல் 25 முதல் 27 வரை நடைபெற்று முடிந்தது .


2022 ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பேர்கிங்கம் நகரில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் T 20 நடைபெற உள்ளது . இதில் இந்திய அணியும் பங்கு பெற உள்ளது . இந்த காமென்வெல்த் போட்டிகளில் மொத்தம் 72 நாடுகளை சேர்ந்த 4500 பேர் பங்கு பெற உள்ளனர் . ஜூலை 28 - ஆகஸ்ட் 8 2022 ல் நடைபெற உள்ளது.



உலக ஆற்றல் மாற்ற பட்டியலை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 115 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 87 வது இடம் பிடித்துள்ளது. முதல் 5 இடங்கள் பின்வருமாறு : ஸ்வீடன், நார்வே, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா . கடைசி இடம் ஜிம்பாபவே !


UNICEF நல்லெண்ண தூதர் திரு .டேவிட் பெக்காம் உலகளாவிய தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்து செல்ல விழிப்புணர்ச்சி செய்கிறார் .


இங்கிலாந்தில் நடைபெறும் லீக் கால்பந்து போட்டிகளில் மான்சேஸ்டெர் அணி வெற்றி பெற்றுள்ளது .



Living Mountain என்ற நூலை ஞான பீட விருது எழுத்தாளர் திரு .அமிதவ் கோஷ் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார் . இது நடப்பு கால உலகளாவிய பரவல் தொடர்பாக எழுதப்பட்டது .



Whereabouts என்ற நூலை ஜும்பா லாஹரி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் . இது ஏற்கெனவே இவரே இத்தாலி மொழியில் எழுதிய நாவல் ஆகும் .



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...