Monday 17 August 2020

மொழி எழுத்துரு

 தொடர்ந்து சில வரலாற்று ஆய்வாளர்கள், வணிகர்களால் மட்டுமே தமிழ் வாழ்ந்தது என்றும், சில வரலாற்று ஆசிரியர்கள், வணிகர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள எழுத்தை எல்லாம் கொண்டு வந்து தான், இம்மொழி எழுத்துரு கொண்டு வளர்ச்சி பெற்றது என்றும் பதிவு செய்கிறார்கள்.


இது தொடர்பாக இரண்டு கேள்விகள் :

ஒன்று :
இம்மொழி எழுத்துரு வணிகத்தால், வணிகர்களுக்காக உருவானது எனில், அவ்வணிகர்களுக்கு கீழ் பணியாற்ற விரும்பும் மக்கள் கற்பதில் தவறு இல்லை. ஏன் எல்லோரும் படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இம்மண்ணில் விதைக்கப்பட்டது?


இரண்டு :
ஒரு வணிகன், தன்னுடைய வணிகம் தொடர்பான கணக்குகளை பதிவு செய்ய எழுதுவான்.
இன்னொன்று, தான் பிற நாடுகளில் கண்டதை, கேட்டதை பதிவு செய்வான்.
ஆனால் இலக்கணம் எல்லாம் எழுதுவானா என்ன?

இரண்டில் எது சரி?


முதல் கேள்வி சரி எனில், இலக்கியம், இலக்கணம் என்று பெருமைகளில் இருந்து விலக கற்று கொடுங்கள்.


இரண்டாவது கேள்வி சரி எனில், வரலாற்று ஆசிரியர்கள்,
வணிகத்தால் இம்மொழி எழுத்துரு வளர்ந்தது என்று பதிவு செய்வதை நிறுத்துங்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’உலகளாவிய வணிகத்தில் முன்னோடிகளாய் விளங்கிய பழந்தமிழ் வணிகர்கள்’ எனச்சொல்லும் உரை

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...