Wednesday 7 April 2021

உலக நீர் தினம்

 உலக நீர் தினம் இன்று!

சந்தையில் 150 வகையான பிரபல நீர் பாட்டில்கள் கிடைகின்றன. இது அல்லாது ஒருங்கினைந்த நிறுவனம் என்ற வகையில் 3000 பாட்டில் நீர் நிறுவனங்களும், பதிவு செய்யப் படாமலேயே 12000 நிறுவனங்களும் இயங்கி வருகின்றன

_--------------------------------------


இன்றைய தேதிக்கு, நீரின்றி அமையாது இவ்வுலகு என்று கூறக் கூடாது.

பாட்டில் நீரின்றி அமையாது இவ்வுலகு என்று தான் கூற வேண்டும்.


சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலி நிறுவனம் bisleri யை, felice bisleri என்பவர் தொடங்கினார்.


இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தொடங்கப்பட்ட தொழில்களில் மிக முக்கிய நிறுவனம் parle G எனும் நிறுவனம்.

இன்றும் உலகின் பிஸ்கட் விற்பனை யில் முதலிடம் பெற்றுள்ள நிறுவனம் parle G.


இன்னிறுவனம் 1965 ல் bisleri நிறுவனத்தை வாங்கியது.

1969முதல் இந்தியாவில் தனது bottle water விற்பனையை தொடங்கி சிறப்பாக செய்து வருகிறது Parle G நிறுவனம்.


இன்னிறுவனத்தை தொடர்ந்து coca cola வின் kinley water

Pepsico வின் Aquafina water

Himalayan water,

Kingfisher என்று பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பாட்டில் நீர் விற்பனையை இன்று வரை அமோகமாக செய்து வருகின்றன.


Parle G க்கு மட்டும் இந்தியா முழுவதும் 140 இடங்களில் water plants உள்ளது.

மொத்த மாக எல்லா நிறுவனங்களும் சேர்த்து இந்தியாவில் கிட்டத்தட்ட 1000 -திற்கும் மேற்பட்ட water plants அமைத்துள்ளன.


சந்தையில் 150 வகையான பிரபல நீர் பாட்டில்கள் கிடைகின்றன. இது அல்லாது ஒருங்கினைந்த நிறுவனம் என்ற வகையில் 3000 பாட்டில் நீர் நிறுவனங்களும், பதிவு செய்யப் படாமலேயே 12000 நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.


1990-91 ல் தான் முதல் முதலாக 20லிட்டர் தண்ணீர் can விற்பனைக்கு கொண்டு வந்தது bisleri நிறுவனம்.

இந்த 20 லிட்டர் can தான், தண்ணீர் can வரலாற்றை வேகமாக வளர்ச்சி பெற செய்தது.


அதே போல வட்டார மொழிகளில் விளம்பரம் என்ற யுக்தியை பயன்படுத்தி முதல் முதலாக 14 மொழிகளில் label ஒட்டியதும் bisleri நிறுவனம் தான்!


இப்போ குடிக்கிற தண்ணீர் முற்றிலும் விற்பனைக்கு வந்து விட்டது. அடுத்து விவசாயம், borewell கொண்டு வரப்பட்டது. பிறகு, பாசனம் என்பது சொட்டு நீர் என்ற வரையறையின் கீழ் வருகிறது.


மூன்றாவது, பயன்பாட்டு நீர்!

1954ல் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் தான் Degremont நிறுவனம்.

Paris நகரில் 1939 ஆம் ஆண்டு Suez' என்ற நீர் நிறுவனம் தொடங்கப்பட்டது.

சம காலத்தில் தமிழகத்திலும் வீட்டுக்கு வீடு குழாய் நீர் அமைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த Suez நிறுவனம் ஏற்கெனவே 2012 முதல் டெல்லி, பெங்களூரு போன்ற ஊர்களில் தன் பணியை தொடங்கி விட்டது.

இந்நிலையில் 2018 ல் கோவை நகரை நாங்கள் தான் காப்போம் என்று கூறி 26 ஆண்டு கால ஒப்பந்தம் ஒன்றை தமிழக அரசுடன் செய்துள்ளது. அதுவும் 400மில்லியன் டாலர் செலவில்!


பாக்டீரியா என்ற ஒருவன் தான்,

பாட்டில் நீர் என்ற ஒருவனை வாழ வைக்கிறது.


எனவே, இனி வருங்காலங்களில் 

Bottle நீரும், நிறுவனங்களும் இன்றி வாழாது இவ்வுலகு!


நன்றி.

 தகவல்கள் அனைத்தும், விக்கிபீடியா விற்கு சொந்தம்!


22.3.2021

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...