Monday 31 August 2015

யுக கதையும் - தமிழ் மொழியும் !

பன்னெடும் காலமாக இந்த பூமி சில யுகங்களை கடந்து வருகிறது என்று ஹிந்து மதம் கூறுகிறது.



யுகம் குறித்து ஹிந்து மதம் என்னதான் சொல்கிறது .

     
     யுகங்கள் மொத்தம் 4.அவை

                                           கிரேத யுகம்
                                           திரத யுகம்
                                           துவாபர யுகம்
                                           கலி யுகம்

 இந்த யுகங்கள் எத்தனை ஆண்டு காலங்கள் இருந்தன. இருக்க போகின்றன என்பதையும் குறிப்பிடுகின்றன . அவற்றில் கிரேத யுகம் அதிக காலத்தையும் , அடுத்தடுத்த யுகங்கள் படிப்படியாக குறைந்துகொண்டும் வருகின்றன. அதன் படி தற்போது கலியுகம் நடைபெறுகிறது.


கிரேத யுக மக்கள் சத்தியமானவர்கள்
த்ரேத யுக மக்கள் கொஞ்சம் தவறு செய்தவர்கள்.
துவாபர யுக மக்கள் கொஞ்சம் அதிக தவறு செய்தவர்கள்
கலி யுக மக்கள் மிக அதிக தவறு செய்பவர்கள்.


மத்ஸ்ய அவதாரம்  ( மீன் )
கூர்ம அவதாரம்  ( ஆமை )
வராக அவதாரம் ( பன்றி )
நரசிம்ஹ அவதாரம் ( சிங்கம் )
வாமன அவதாரம் 
பரசுராம அவதாரம்

     இந்த 6 அவதாரங்களும் கிரேத யுகத்தில் உருவானது .

ராம அவதாரம்

    த்ரேத யுகத்தில் உருவானது.


கிருஷ்ணா அவதாரம்

பலராம அவதாரம் 

     இவை இரண்டும் துவாபர யுகத்தில் உருவானது.


கல்கி அவதாரம்

    கலி யுக கதை இது. இது நடக்கிறதா ? நடக்க போகிறதா என்பதை நம் காலம்

தான் கணிக்க போகிறது.

ஏனெனில் இதற்கு  முன்பு நிகழ்ந்தாக கூறப்படும் எந்த அவதாரத்தையும்

நம்மில் எவரும் கண்டிருக்க  முடியாது .  

ஆனால் கலி அவதாரம் பிறந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். அந்த

அவதாரத்தின் பெயர் பிராம ஸ்ரீ  ஷ்யம சரண்  ( மஹா அவதார் பாபாஜி )

இவர் கலி யுக இறுதியில் தொடங்கி மறு சுழற்சியில் மீண்டும் கிரேத யுக

தொடக்க அவதாரமாகவும் கருதப்படுகிறார் . எனில் நாமெல்லாம் மீண்டும்

தொடங்கப்பட்ட சத்தியயுக தொடக்கத்தில் வாழ்கிறோம்.








கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் யுகங்கள் எனப்படுவது

எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும் என்ற கருத்தும் உண்டு .

அதனால் சுழற்சியின் அடிப்படையில் மீண்டும் கலி யுகம் கடந்து    துவாபர

யுகத்தில்  இருக்கிறோம், என்கின்றனர்.

ஏன்னெனில்  ஒவ்வொரு யுகத்திற்கும் மனிதனின் அறிவு வளர்ச்சியை

கொண்டு சில கணக்கீடுகள் கொடுக்கின்றனர் .

அதன்படி

 கிரேத யுகத்தில் சத்தியத்தை கற்று கொண்டான். ( TRUTH AGE )                    

த்ரேத யுகத்தில்  மன வளர்ச்சியை கற்று கொண்டான் ( MENTALAGE )           

 துவாப யுகத்தில் மின்னியலை கற்று கொண்டான். ( ELECTRICAL AGE )

 கலி யுகம் இருண்ட காலமாகத்தான் இருக்கும் .( DARK AGE )

 என்று கூறுகின்றனர் .





இவையெல்லாம்  யுகங்கள் குறித்து ஹிந்து மதம் குறிப்பிடுவன.

ஆனால் தமிழ் இதனை வேறு வடிவில் கூறுகிறது என்கிறது

 தமிழ் சிந்தனையாளர் பேரவை .

கிரேத யுகம் எனபடுவது கிரி யுகம் .

அதாவது தமிழில் கிரி என்றால் மலை என்று பொருள்.

கரி என்னும் தமிழ் சொல்லானது மருவி கிரி என்றானது .

எனில்  இது மலையும் மலையை சார்ந்த இடமும் ஆகும் .

த்ரேத யுகம் எனப்படுவது தரைத்தள யுகம் .

இது மருவி தரே என்றானது .

அதாவது காடும் காடு சார்ந்த இடமும் .

துவாபர யுகம் என்றால் இரட்டை யுகம் என்று பொருள் .

துவா என்னும் வார்த்தை தமிழின் தோ என்னும் எழுத்தின் மருவிய வடிவம் .

" தோ  " என்னும் எழுத்தில் தொடங்கும் எல்லா வார்த்தைகளும் இரட்டை

செயல்வடிவம்  கொண்டது .

உதாரணம் :  தோல் , தோள் , தோசை, தோகை , தோடு

இதன் அடிப்படையில் தோபர யுகம் , துவாபர யுகமானது .

அந்த இரட்டை செயல்பாடு என்னவெனில் , சமகாலத்தில் செயல்வடிவம்

பெற்றதுதான்

வயலும், வயல் சார்ந்த இடமும் ,

கடலும் , கடல் சார்ந்த இடமும்

எனில் கலி யுகம் மட்டும் ஹிந்து மதத்தில் கூறிய முறைப்படி சரியானது .

இந்த உலகின் எல்லா இடங்களும் அழிக்கபட்டு பாலைவனம் போல்

மாறுவது .

தவறுகள் நடைபெற சாத்திய கூறுகள் இருக்கிறது  என்கிறது

 தமிழ் சிந்தனையாளர் பேரவை .



ஆனால் கலி யுகம் எனப்படுவது கலி அல்ல . வளி யுகம்.

மனிதன் ஆதி காலத்தில் மலைகளை பயன்படுத்தினான்  . இன்னும் முருகன்

ஆலயங்கள் அனைத்தும் மலைகளின் மீது உள்ளது .

பிறகு காடுகளை பயன்படுத்தினான் .

பிறகு காடு திருத்தி வயல்வெளிகளை உருவாகினான்.

கடலை கடந்து கடல் பரப்பையும் பயன்படுத்தினான்

தற்போது நடப்பது கலியுகம்தான் . ஆனால் இது கலியுகம் அல்ல . வளி  யுகம்.

வளி  என்றால் காற்று என்று அர்த்தம் .

இன்று மனிதன் காற்றை பயன்படுத்தி கொண்டிருக்கிறான்  .

ரேடியோ ,தொலைக்காட்சி , தொலைபேசி , மொபைல் , இன்டர்நெட்  எல்லாம்

காற்றை கடந்து நம்மை வந்தடைகிறது .

அதனால் எந்த  நாளிலும் கலி காலத்தில்தான்

தவறுகள் அதிகம் நடக்கும் என்பதை காரணமாக எடுத்துகொள்ள வேண்டிய

அவசியமில்லை.

எல்லா கால கட்டத்திலும் தவறுகள் நடந்தன. ஆனால் தற்போது மட்டும் இது

கலிகாலம் என்பதை காரணம்காட்டி இப்படிதான் நடக்கும் என்றெல்லாம்

கற்பிக்கப்படும் கற்பிதங்களை அறிவில்

எடுத்துகொள்ள வேண்டிய தேவையும்  இல்லை.


எந்த யுகமும் முடிவதும்  இல்லை . எந்த யுகமும் பிறப்பதும் இல்லை .

ரேடியோ , தொலைகாட்சி, அலைபேசி அனைத்தும் தற்காலத்தில் தான்

கண்டுபிடிக்கப் பட்டது. என்று எண்ணினால் அது தவறு.

சங்க காலத்திற்கு முந்தைய காலத்திலும்  காற்றை மனிதன் பயன்படுத்தி 

கொண்டுதான் இருந்தான்.

ஆனால் அது அனைவரும் பயன்படுத்தும் வகையில் இல்லை. இன்று

அனைவர் கைகளிலும் அது பயன்பாட்டில் உள்ளது. 

     மலைகள், காடுகள், வயல்கள், கடல், மற்றும் காற்று இவற்றை மனிதன்

எப்போதும் பயன்படுத்தி கொண்டுதான் இருந்தான்.  பயன்படுத்தும் வரை எந்த

தவறும் நிகழாது.

ஆனால் மனிதன் அவற்றை ஆள நினைக்கிறான்.

அங்குதான் தவறுகள் ஆரம்பமாகின்றன.

தன்னை ஆட்சி செய்ய நினைப்பவர்களை அழிப்பது

இயற்கையின் நோக்கம் அல்ல.

தன்னை சரி செய்து கொள்ள முயற்சிக்கும் போதுதான் அழிவுகள்

நடக்கின்றன. இயற்கையை யாரும் ஆள முடியாது.

இயற்கையை 

   நன்முறையில் பயன்படுத்துவோம் . பேரழிவுகளை தடுப்போம் .



( தமிழ் சிந்தனையாளர் பேரவைக்கு நன்றி . ஐந்திணைக்கு புதிய விளக்கம் தந்தமைக்கு !)


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...