Thursday 29 June 2017

எடிசனா அல்லது நிகோலா டெஸ்லாவா ?



இவர் நிகோலா டெஸ்லா .

இவருக்கு இந்த உலகம் பல பெயர்கள் கொடுத்துள்ளது.
பைத்தியக்காரன்!
மனநலம் சரி இல்லாதவன் !
பிழைக்க தெரியாதவன்!
கேனையன் இன்னும் பல பெயர்கள் உண்டு இவருக்கு !

உண்மையில் யார் இவர் ?

இந்த அறிவியல் உலகம் என்று வணிகத்திற்கு அடிமையானதோ , அதில் மாட்டி சிக்கி சின்னாபின்ன மான ஒரு அறிவாளி !
அறிவியலின் மாமேதை!
20 ம் நூற்றாண்டுக்கு சொந்தக்காரர்!
மின்னியல் மற்றும் காந்தவியலின் உடைமையாளர்!
ரோபோக்களின் தகப்பன்!
ரிமோட்டை 1880 களிலேயே புழக்கத்தில் கொண்டு வந்த ஞானி !
ரேடியோவின் உரிமையாளர்!
எக்ஸ் ரே என்பதின் சொந்தக்காரர்!
மின்சாரத்தின் முழு உரிமையாளர்!
இன்னும் பல!

அப்படியா ?

இல்லை இல்லை , இருக்க முடியாது !
மின்சாரத்தை கண்டறிந்தவர் எடிசன் 
ரேடியோவை கண்டறிந்தவர் மார்க்கோனி 

நம் பள்ளி பாடங்கள் அப்படிதான் நமக்கு சொல்லி தருகின்றன!ஏன் நம்  புத்தகங்கள் இப்படி சொல்ல வேண்டும் .  காரணம் என்ன ?

சொன்னால் நம்பமாட்டோம் .ஆனால் உண்மை இது தான் ! டெஸ்ட்லே பெயர் வர வேண்டிய இடத்தில எல்லாம் வராமல் போக காரணம் 

இலுமினாட்டிகள் !


டெஸ்ட்லே ஆஸ்திரிய நாட்டின் 1856 ல் பிறந்தார். அது ஒரு செர்பிய குடும்பம். நல்ல அறிவு .ஞானம் இவரது தாயார் சிறு சிறு வீட்டு உபயோக பொருட்களை செய்வதை பார்த்து பழகிய டெஸ்லா . அறிவியலில் தன்னால் எல்லாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உடையவர். இவரது அறிவு பயன்பட வேண்டும் என்று விரும்பிய அவரது நண்பர் ஒருவர் உதவியுடன் , அமெரிக்காவில் உள்ள எடிசனின் ஆய்வகத்தில் உதவியாளராக பணியில் சேர்கிறார். இப்போது தான் எடிசனின் ஆய்வகம் பரபரப்பாகிறது .

இதற்கு இடையில் , எடிசன் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்வோம். எடிசன் சிறு வயதில் ஒன்றும் பணக்காரர் அல்ல. அவரது தகப்பனார் ஒரு தச்சர் . மற்றும் சில நாட்கள் களங்கரை விளக்க காவலாளி . ஆனால் எடிசனுக்கோ அறிவியல் ஆர்வம்  இருந்தது. ஆனால் அவரது காது கேளாத தன்மையினால் பள்ளிகள் அவரை புறக்கணித்து விட்டன. வீட்டிலேயே இருந்து , மைக்கேல் பாரடே வின் மின்சக்தி  பயிற்சி ஆய்வுகள் செய்தார். ரிச்சர்ட் பார்க்கர், மற்றும் தாமஸ் பைன் எழுதிய நியூட்டன் தியரி ஆகியவற்றை பயின்றார். ஓரளவிற்கு அறவியல் ஆய்வில் பெயர் வாங்க ஆரம்பித்தார். 

இது போதுமே இலுமினாட்டிகளுக்கு !

ஒருவர் கொஞ்சம் திறமையானவராக இருக்க வேண்டும்! 
பெற்றோர் இல்லாமல் இருக்க வேண்டும்.அல்லது பெற்றோர் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடி வந்தவராக இருக்க வேண்டும்.அல்லது பெற்றோர் மிகவும் ஏழ்மையாக இருக்க வேண்டும்!
சிறு உடல் குறைபாடு இருக்க வேண்டும் !
இதையும் தாண்டி இலுமினாட்டிகளின் கடவுளை அல்லது அந்த கடவுளின் வடிவங்களை வணங்க வேண்டும் !
கொஞ்சம் பொய், கொஞ்சம் சூது ,  இதெல்லாம் இருக்க வேண்டும் !

இவ்வளவுதாங்க இலுமினாட்டிகளின் குழுவில் சேர அடிப்படை தகுதிகள் ! 
அத்தனையும் எடிசனிடம் இருந்தன. ஆமா அவர் வணங்கியது ஜீயஸ் எனும் கடவுளை ! அது டைஸம் எனும் மதத்தை சேர்ந்தது . இந்த ஜீயஸ் வேறு யாரும் அல்ல . இலுமினேட்டி அடையாளத்தில் உள்ள கண்ணுக்கு சொந்தக்காரரான குரோசின் மறுஉருவம் !

இப்போ எடிசன் கிடுகிடு என வளர்ந்தார். ஆய்வுகளுக்கு தேவையான பணம் அதிகமாகவே கிடைத்தது . 1880 ல் அறிவியல் பத்திரிக்கை  ஒன்றை ஆரம்பித்தார் எடிசன்.அது அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா அரசின் அறிவியல் பத்திரிகையாக மாறியது. அந்த அளவிற்கு செல்வாக்கு பெருகியது எடிசனுக்கு!

இவர் 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்பு உரிமம் பெற்றுள்ளார். இதில் 90 % இவரது ஆய்வக ஊழியர்கள் கண்டறிந்தது என்று கூறப்படுகிறது.

எடிசனின் விளக்கத்தை இத்தோடு நிறுத்தி கொள்வோம்! 




இந்நிலையில் தான் 1884 ல் டெஸ்லா எடிசனின் ஆய்வகத்தில் பணிக்கு சேர்ந்தார். அப்போது முடிக்க முடியாத சில வேலைகளை டெஸ்லா செய்து காட்டுவதாக , எடிசனுக்கு டெஸ்லாவிற்கும் இடையே ஒரு சிறு சவால்.

எடிசன் கூறுகிறார் , இதை மட்டும் நீ முடித்து விட்டால் , உனக்கு 50000 டாலர் பரிசு தருகிறேன் என்று !

இதை நம்பி டெஸ்லாவும் செய்து விடுகிறார். அப்போது சிரித்து கொண்டே எடிசன் கூறுகிறார், உனக்கு அமெரிக்கா ஜோக்குகள் பற்றி தெரியாதா ?

நான் கூறியது எல்லாம் ஜோக் என்று கூறி விட்டார் எடிசன். கிட்டத்தட்ட மிகப்பெரிய ஏமாற்றம் டெஸ்ட்லேவிற்கு !

அங்கு இருந்து வெளியேறினார். காப்புரிமை வழங்கும் அதிகாரி உதவியுடன் இரு பெரும் பணக்காரர்களை சந்தித்தார். ( ராபர்ட் லேன் மற்றும் பெஞ்சமின் வேல் ) டெஸ்லா எலக்ட்ரிக் லைட் அண்ட்  உற்பத்தி நிறுவனம் உருவானது .
( Tesla Electrc Light & Manufacturing )
மிகுந்த சந்தோசத்துடன் மீண்டும் ஆய்வில் ஈடுபட்டார். இப்போது தான் எடிசன் இவர் உருவாக்கிய கோட்பாடுகளை கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை  உருவாக்கி அதற்க்கு காப்புரிமையும் பெற்றார். மீண்டும் இப்போது பிரச்சனை . அந்த இரு பணக்காரர்களுக்கும் இடையே சண்டை !நிதி உதவி தடைபட்டது. 

மீண்டும் எடிசனின் எதிரி நிறுவனமாகிய வெஸ்டிங் ஹவுஸ் எனும் நிறுவனத்தோடு இணைந்து ஆய்வு மேற்கொள்கிறார். இங்கு ஒப்பந்த அடிப்படையில் கையொப்பம் பெற்று கொண்ட அந்நிறுவனம் இவரது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்று கொள்ளை லாபம் ஈட்டியது.
இவருக்கு கிடைத்தது சொற்ப வருமானமே !
இங்கும் ஏமாந்து போனார். 

1894 எக்ஸ் ரே எடுத்து வெளியிடுகிறார் டெஸ்லா. அதோடு டெஸ்லா சுருள் உருவாக்குகிறார் .



1896 ம் ஆண்டு ஒரு தொழில் அதிபரை சந்திக்கிறார் டெஸ்லா . அவர் பெயர் ஆஸ்டின். இவர் யார் என்பது ஓரளவிற்கு இலுமினேட்டி பற்றி தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். இங்குதான் விவேகானந்தரையும் சந்திக்கிறார் டெஸ்லா . ( விவேகானதரும் ஒரு பிரேமசினரி )

அப்போது விவேகானந்தர் கூறுகிறார். அறிவியலை வேதங்கள் மூலமாக விளக்குகிறார். ஆனால் டெஸ்லாவிற்கோ நியூட்டன் கொள்கை மீது அபார நம்பிக்கை . எனர்ஜி சார்ந்த அவரது வேதத்தை ஏற்க முடியாது  என்று கூறுகிறார். 

பின்னாளில் இதை நிரூபித்த டெஸ்லா , அதை விவேகானந்தர் எப்படி கூறினாரோ அவர் கூறிய அதே கோட்பாட்டை , அதே சமஸ்க்ரிதத்தில் பதிவிடுகிறார். 

இதற்க்கு இடையில் , 1898 ல் ரேடியோ கதிர்களை கண்டறிந்தார். அதனை ராணுவத்தில் பயன்படுத்தலாம் என்று கோரிக்கை விடுத்தார் . அது ஆய்வுக்கு பிறகு, ஏற்கப்படும் என்று கூறப்பட்டது. பிறகு மார்கோனி அதை கண்டறிந்தார் என்று 1906 ல் வெளியிடப்பட்டது. அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் உறவினர் தான் மார்கோனி என்று கூறப்படுகிறது.




இப்போ 1901 ல் ஜே.பி.மோர்கன் , ரொக்பெல்லேர் , வார்பார்க் எனும் இலுமினேட்டி கூட்டத்தின் நிதி உதவியோடு ஆய்வு களை தொடர்கிறார். இவர் எடிசனைதான் எதிர்க்க நினைத்தார்.ஆனால் எடிசனின் கூட்டாளியோடு போய் கூட்டு சேர்கிறார்.

இவரது கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் பரிசோதனைக்கு எடிசனிடம்தான் செல்லும். எடிசன் எந்திரன் திரைப்படத்தில் வரும் professor பேசும் அதே வசனத்தை தான் கூறுவார்.இது மக்களுக்கு ஆபத்தானது. இதனால் எந்த பயனும் இல்லை என்று !

அதையும் தாண்டி காப்புரிமை குழுமத்தால் , அவரது கண்டுபிடிப்பை பயன்படுத்தி நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டது . அன்று முதல் அமெரிக்கா ஒளி வெள்ளத்தில் மிதந்து ,அறிவியலின் சொர்க்க பூமிபோல் ஆகியது. அதற்க்கு காரணமாக டெஸ்லாவை மறந்து விட்டது.

ஒரு வழியாக 300 பொருள்களுக்கு காப்புரிமை பெற்றார் .அதில் இருந்து நிதியும் பெற்றார்.

மோர்கன் நிதிஉதவியால் , டெஸ்லாஸ் வார்டய்ணகிலிஃப் பிளான்ட் உருவாக்கப்பட்டது .( Tesla 's  Wardencliff Plant )
இலவச மின்சாரம் தயாராகிவிட்டது. டெஸ்லா கூறுகிறார்.மின்சாரத்திற்க்காக நிலக்கரி தோண்டாதீர்கள் ! காஸ் எடுக்காதீர்கள் ! ஆயில் எதுவும் பயன்படுத்தாதீர்கள் ! நம்மை சுற்றிலும் எனர்ஜி பரவி கிடக்கிறது ! அதில் இருந்து அனைவரும் இலவசமாக மின்சாரம் பெற்று கொள்ளலாம் என்று !


தன சொந்த லாபத்திற்காக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று டைட்டானிக் கப்பலை மூழ்கடித்து , லாபம் தேடிய மோர்கன் ஒப்பு கொள்வானா ? நிதியை நிறுத்தினான்.

காப்புரிமை மூலம்  பெற்ற நிதி உதவியும் முதலாம் உலக போரை காரணம் காட்டி  நிறுத்த பட்டது. 

அவரது கண்டுபிடிப்பு அழிக்க பட்டது.




இதற்க்கு மேலும் டெஸ்லாவை விடுவது சரியில்லை என்று இலுமினேட்டி கூட்டம் முடிவு கட்டியது .

விளைவு மனநோயாளி என்று நிரூபிக்கப்பட்டார். இதில் ஒரு கதையும் உண்டு. சிறுவயதில் அவரது இளைய சகோதரர் அவர் கண் முன்னாள் இறந்தார் என்பதால் எப்போதுமே அவர் கொஞ்சம் மனநலம் சரி இல்லாமல் தான் இருந்தார் .இப்போது இன்னும் பெரிதாகி விட்டது என்று நிரூபிக்கப்பட்டது.

1943 ல் இந்த மாமேதை ,தனது அறையில் இறந்து கிடந்தார்.

இதில் முக்கிய விஷயம் என்னவெனில் 2 ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்கா நீதிமன்றம் ரேடியோவை கண்டறிந்தது டெஸ்லாத்தான் ,மார்கோனி அல்ல என்று தீர்ப்பளித்தது .

இந்த செய்தி என்று நம் நாட்டு புத்தகங்களில் இடம் பிடிக்குமோ ?


குறிப்பு :

(இந்த பதிவில் டெஸ்லாவின் அறிவியல் குறித்து போதிய குறிப்புகளை நான் கொடுக்க வில்லை. ஆனால் அவர் யாரால் ஏமாற்றப்பட்டார் என்பதை கூறுவதே இந்த பதிவின் நோக்கம். பலரும் டெஸ்லாவை ,ஏதோதோ பெயரில் அழைப்பதை நிறுத்தவேண்டும் என்பதே இதன் நோக்கம். குறிப்பாக எடிசனின் அபிமானிகள் )


இவரது கண்டுபிடிப்பு பயன்பாட்டில் இருந்திருந்தால் இன்று நம் நிலவளம் கொள்ளை போயிருக்காது . 

Monday 5 June 2017

ஜாதியா ? பட்டமா ?


ஜாதியே தமிழ்நாட்டில் இல்லை.
ஜாதி என்பது தமிழனின் அடையாளம் அல்ல என்று ஒரு சாரார் கருத்து கூறுகிறார்கள் .

ஆனால்

ஜாதி தமிழனின் அடையாளம் . ஜாதிய வேறு பாடுகளோ , அடிதடியோ தமிழனின் அடையாளம் அல்ல .

பிரிட்டிஷார் தான் ஜாதி குறித்து வரைந்து வரைத்து புத்தகங்கள் வெளியிட்டது. ஏனெனில் அவர்களுக்கு புதிது . அதனால் இதெப்படி சாத்தியம் .அடித்து கொள்ளாமல் ஒரு கூட்டம் வாழுமா ? கூடாது என்று முடிவு எடுத்தனர். அதன் விளைவாக அவர்களே ,உயர்ந்த ஜாதி என்றும் தாழ்ந்த ஜாதி என்றும் பிரிவினையோடு புத்தகங்கள் எழுதினார். அதை நடைமுறை படுத்த இடஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்தனர். ஆங்கலேயர்களிடம் பேச வரும் போது , குறைந்த பட்சம் 2 தாழ்ந்த ஜாதியினர் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் . அன்று ஆரம்பித்தது இடஒதுக்கீடும் , ஜாதிய வேறுபாடும் ! நமக்கு உதவுவது போலவே சிண்டு முடித்து விடுவதில் வல்லவர்கள் ஆங்கிலேயர்கள் .

Castes and Tribes of Southern india - எழுதியவர் Edgar Thurston - ஆண்டு 1909

 நம் தமிழிலக்கியங்களில் தாழ்ந்த ஜாதி  என்றோ உயர்ந்த ஜாதி  என்றோ எங்கேனும் குறிப்பு இருக்கிறதா ?தேடுங்கள் !

ஆனால் ஜாதியின் பெயர்கள் உண்டு .

கணிகையர் என்பது ஜாதியின் பெயர். இது தான் கணிமேதாவியார் .
இந்த ஜாதியைத்தான் கணிகை பார்ப்பான் என்று இருந்தது. அதை தான் பிராமணர்கள் கற்று கொண்டு பார்ப்பனர் ஆனார்கள் .

வள்ளுவர் என்பது ஜாதியின் பெயர். இன்றும் அந்த ஜாதி மக்கள் வாழ்கிறார்கள் .

ஒவ்வை என்பதே ஜாதியாக இருக்க வாய்ப்புண்டு. அவர் ஒரு பெண் என்றும் , பிற்கால அவ்வையார் அந்த ஜாதியை சேர்ந்த ஆண் என்றும் கூறப்படுகிறது

பரதர் என்று மீனவர்களுக்கு பெயரும் உண்டு .

வலையர் என்ற பெயரும் உண்டு.

மருதம் மற்றும் நெய்தல் நிலம் சார்ந்த ஜாதிகள் அனைத்தும் ஒரே பெயர் பெயர் கொண்டவை .


ஆனால் பட்டப்பெயர்கள் மன்னர்களால் வழங்கப்பட்டவையே அன்றி , ஜாதி கிடையாது . அந்தந்த காலகட்டத்தில் யாரெல்லாம் மன்னருக்கு ஜால்ரா போட்டார்களா அவர்கள் பெற்றது தான் பட்ட பெயர் .

அதாவது

பிராமணர்களை நாம் பார்ப்பார் என்று ஜாதியின் பெயர் சொல்லி அழைக்கிறோம். ஆனால் அய்யர் என்பது அவர்களது பட்டப்பெயர்.

இதே போல் , செட்டியார் என்பதும் , முதலியார் என்பதும் , தேவர் என்பதும் , ஜாதி பெயர்கள் அல்ல . பட்ட பெயர்கள் ஆகும் .


எந்த ஜாதி பெயரை குறிப்பிட்டாலும் , அது சார்ந்த தொழில் நமக்கு விளங்கவில்லையாயின் அது பட்ட பெயர் ஆகும் .

வன்னியர் சமூகம் மட்டும் 500 வகையான பட்டப்பெயர்களை பெற்றுள்ளது .

செட்டியார் இன மக்களும், சேட்டு இன மக்களும் ஒன்று தான் என்ற ஐயப்பாடு கொண்டு , ஒரு சில ஆய்வுகளும் வந்துள்ளன.
இதுவும் பட்ட பெயர்தான்.

முதலியார் எனப்படும் பட்ட பெயர் , கிருஷ்ணா தேவராயர் காலத்தில் , மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் , நாயக்க மக்களுக்காக பணியாற்றிய வெள்ளாள ஜாதி மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்ட பெயர்.
இந்த காலத்திற்கு முன்பு முதலியார் எனும் பட்ட பெயர் தமிழ் மக்கள்
 மத்தியில் கிடையாது .

பட்டப்பெயர்கள் என்பது காலத்திற்கு காலம் ,ஆளும் அரசனை பொறுத்து அவருக்கு வேண்டியவர்களை பொறுத்து , பல்வேறு நபர்கள் பெற்றுள்ளார்கள் . ஆனால் அது ஜாதி அல்ல .

உண்மையில் தமிழ்ச்சமூகத்தில் எந்த ஜாதி மக்களும் அடித்து கொள்ளவில்லை. இந்த பட்ட பெயர் வாங்கிய மக்கள்தான் , தன ஜாதி என்ன என்பதை மறந்து விட்டு , இல்லை தொலைத்து விட்டு , அந்த பட்டப்பெயர் சொல்லி அடுத்தவரை அடிப்பதும் , கொள்வதுமாக இருக்கிறார்கள்!

உண்மையில் தமிழ் சமூகம் அழிக்க வேண்டியது ஜாதியை அல்ல .

பட்ட பெயர்களை !

இங்கு ஜாதி எல்லாம் இழிவு படுத்த பட்டுவிட்டது. அதன் விளைவாக பல தொழில்கள் தமிழ்நாட்டில் இல்லை .

மீனவ சமூகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 500 பிரிவினர் இருந்தாராம். இன்று இல்லை. அவர்களை இழிவு படுத்தி அவர்கள் மதம் மாறி , இனம் மாறி இன்று கப்பல் கட்டும் தொழில் என்பதை நாம் தொலைத்து விட்டோம். இவர்கள் இருந்ததால் தானே அன்று ராஜராஜ சோழன் கப்பல் படை வைத்திருந்தான் .
இன்று கப்பல் எந்த மரத்தில் செய்வது என்பது மீனவ நண்பர்களில் பலபேருக்கு தெரியாது.

பனைமரத்தின் கதை ஊர் அறிந்தது . இன்று பனைமரம் வளர்க்க வேண்டும் என்று கூறியவுடன் எதிர்ப்பது யார் தெரியுமா ? அந்த மக்கள் தான் ! மீண்டும் நம்மை தாழ்த்தி விடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள் . அதன் நுட்பங்கள் எல்லாம் கிட்டத்தட்ட அழிந்து விட்டது.

மருத்துவர் என்று ஒரு ஜாதி ,ஊரில் யாருக்கு என்ன நேர்ந்தாலும் , நாடி பிடிக்கும் முன் , முகம் பார்த்து கூறி விடுவான். இன்று அந்த ஜாதி இல்லை .

பள்ளர் சமூகம் இன்று தேவேந்திர குல வெள்ளாளராக மாறி விட்டது. விளைவு எந்த ஆற்றிலும் பராமரிப்பு இல்லை . குளங்கள் இல்லை . ஏரிகள் என்பது ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது.

கோனார் சமூகம் யாதவ சமூகம் ஆகி விட்டது. இன்று நாமெல்லாம் நாட்டு மாடு வேண்டும் என்று கூவி கொண்டு இருக்கிறோம். இதில் என்ன சிறப்பு என்றால் செஞ்சி மலையை ஆண்ட ஆனந்த கோனார் எனும் மன்னர் தன பெயரை ஆனந்த கோன் என்று அந்த காலத்திலேயே ஸ்டைலாக வைத்திருந்தாராம் .அந்த சமூகம் தன ஸ்டைலை தொலைத்து விட்டது.

கலைத்துறையில் கோலோச்சி இருந்த சமூகம் விஸ்வகர்மாகி விட்டது. என்ன பயன்? எங்கு பார்த்தாலும்  மலையாளி யும் , ராஜசதானியும் நகைக்கடை வைத்திருக்கிறான். அதில் இரும்பும் உண்டு. ஈயமும் உண்டு. வியந்து வியந்து நாம் பார்த்து , பூரித்து நிற்கும் கோவில் சிற்பங்களை செதுக்கிய சமூகத்தில் 10% பேர் கூட இன்று அந்த தொழிலில் இல்லை . கதவுகளில் கூட கலைநயம் காட்டிய ஆசாரிக்கு கதவு எந்த மரத்தில் செய்ய வேண்டும், சாளரம் எதில் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை .

பூசாரி என்று ஒரு சமூகம் இருந்தது . அவர்களுக்கு தெரியும் விபூதியின் பயன்கள் என்னென்ன என்று ! இன்று அந்த பெயரே இல்லை.

இன்று விவசாயம் ஏன் படுபாதாளத்தில் இருக்கிறது தெரியுமா ? உழுவதற்கும், அறுப்பதற்கும் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. அதற்கான செலவுகள் அதிகம். ஏன் என்றால் , அந்த வேலையை செய்து வந்த பறையர் இனம் தான் இன்று துபாய் வளமைக்கும், சிங்கப்பூரின் பெருமைக்கும் காரணம்!

இப்படி கூறி கொண்டே போகலாம் . நம் தொழில் வளமை அப்படி!
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் அதன் பொருளாதாரத்தை முதலில் அழிக்க வேண்டும் என்பது வெள்ளையர்களின் கோட்பாடு .

சிறப்பாக நடந்து விட்டது. ஜாதியில் ஏற்ற தாழ்வு கூறி , அதில் இருந்து வெளியேற , அந்த தொழிலையே விட்டு , அந்நிய நாட்டு பொருளுக்காக ஏங்கி நிற்கிறோம்!

இப்போ சொல்லுங்க ! ஜாதியை அழிக்க  வேண்டுமா ? பட்டத்தை அழிக்க  வேண்டுமா என்று !
---------------------------------   - - -







குறிப்பு :
------------


இனம் என்றால் என்ன?

குலம் என்றால் என்ன ?

குல தெய்வம் என்றால் என்ன ?

தமிழில் பேசும் அத்தனை பேருக்கும் ஜாதி உண்டா? பட்டம் உண்டா?

குடும்ப பெயர் தமிழருக்கு உண்டா ?

இவ்வளவு கேள்விக்கும் பதில் தெரிஞ்சிட்டா ,


ஜாதி பிரச்னை இருக்காது .



உதாரணமாக ,

பிராமணன் என்பது இன பெயர்

பார்பனன் என்பது அவனது ஜாதி பெயர்

ஐயர் என்பது பட்டபெயர்.

இதில் இனபெயரும் , பட்ட பெயரும் தமிழுக்கு சொந்தமில்லை.

பார்பான் என்பது பிராமணர்களுக்கு தமிழ் நாட்டில் கொடுக்கப்பட்ட தொழிலுக்காகன பெயர்.

பார்பான் என்றால் , கணிகை பார்பான்.
ஆருடம் பார்பான்.
நாள் குறித்தும் , நேரம் குறித்தும் கணிப்பவன் என்று பொருள்.

இந்த இனம் தமிழ்நாட்டை தொடுவதற்கு முன்பே இந்த தொழில் , தமிழ் மக்களால் செய்யப்பட்டது தான்.

இன்றும் வேறு பிற சமூத்தை சேர்ந்தவர்களும் இந்த பணியை செய்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது .


அதே போல் கோவில்களில் , அர்ச்சகர் பணிக்கும் இவர்கள் அமர்த்தப்பட்டனர் .

ஆசிரியர் பணிக்கும் அமர்த்தப்பட்டனர்.

சுருங்க சொன்னால் , அமர்ந்த பார்க்கும் வேலைகள் அனைத்தும்  இந்த இனத்திற்கு ஒதுக்கபட்டது.

காரணம் அக்காலத்தில் , ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்க கூடிய வேலை என்பது மக்களால் வெறுக்கப்பட்டது. அதனால் , அது போன்ற வேலைகள் இழிவான வேலைகள் என்று கருதி , வேற்று இனத்தவர்களுக்கு அவ்வேலைகள் வழங்கப்பட்டன.

இன்று நிலை தலை கீழாக மாறிய தால் எல்லோரும் அவ்வேலையை செய்ய , ஆசை கொண்டு , அல்லாடுகிறார்கள் .









பெண்ணுக்கு ஜாதி இல்லை !

சமீபமாக ஒரு சில பதிவுகள் படித்தேன் ! 
வேறு ஜாதி ஆண் வேண்டாம் என்று பெண்ணுக்கு அறிவுரை கூறும் பதிவு ஒன்று ! 
அந்த பதிவில் , பெண்ணே  பார் நம் ஜாதியில் உள்ள ஆண்கள் கேரளா பெண்களை திருமணம் செய்து கொண்டு எவ்வளவு சந்தோசமாக வைத்திருக்கிறார்கள் ! 
இப்படிப்பட்ட ஆண்களை விட்டுவிட்டு நீ வேறு ஜாதி ஆணை திருமணம் செய்து கொண்டால்  எப்படி நீ சந்தோசமாக இருக்க முடியும்  என்று அந்த பதிவு கூறுகிறது. 
மேலும் வேறு ஜாதி ஆணை திருமணம் செய்தால் அது நம் ஜாதிக்கு இழுக்கு என்பது போல் அந்த பதிவு முடிவுற்றது . 

இதில் வேடிக்கை என்னவென்றால் , அந்த பதிவிலேயே கூறி விட்டார்கள் , அவர்கள் ஜாதி ஆண்கள் கேரளா பெண்களை விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று ! பிறகு அறிவுரை மட்டும் ஒரு பெண்ணுக்கு கொடுக்க என்ன அருகதை இருக்கிறது ஒரு ஆணுக்கு ! ஜாதிய கோட்பாடுகள் எல்லாம் பெண்ணுக்குத்தான் இந்த சமுதாயம் கொடுத்திருக்கிறது . ஆணுக்கு அல்ல . அல்லவா ?

இது உண்மையா ?

இல்லை உண்மையில் ஜாதியை காக்க வேண்டுமாயின் ஆண் தான் ஜாதியை காக்க வேண்டும் . இது பெண்ணுக்கு இல்லை. 

பெண் ஜாதி இல்லாதவள்!
பெண் சாபம் இல்லாதவள் !
பெண் தோஷம் இல்லாதவள் !
எந்த ஒரு சம்ருதாயங்களும்  பெண்ணுக்கு பொருந்தாது !

ஆண் சமுதாயம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! எப்போதும் , எல்லா கோட்பாடுகளையும் பெண்ணுக்காக எழுத  கூடாது  ! அதை சொல்ல ஆண் ஒன்றும் ஆண்டவன் இல்லை ! 

ஆண்களுக்கு தான் இந்த சமுதாயம் ஜாதியை தன் பெயருக்கு பின்னால் போட்டு கொள்ள அனுமதி அளித்துள்ளது. எங்கேனும் , எந்த பெண்ணாகிலும் தன் பெயருக்கு பின்னால் ஜாதி போட்டு பார்த்து இருக்கிறோமா ?

இல்லை . ஒரு பெண் ஜாதியின் பெயரை தன் பெயருக்கு பின்னால் போடமாட்டாள் ! போடவேண்டிய அவசியமும் இல்லை . வடஇந்திய பெண்களை காட்டாதீர்கள் . அது ஜாதியின் பெயர் இல்லை குடும்ப பெயர். அது பெரிய வரலாறு கொண்டது. நம் சமூகத்தில் ஆண்கள்தான் ஜாதியை காக்க வேண்டும் . பெண் அல்ல. சரோஜினி நாயுடுவும் , முத்துலட்சுமி ரெட்டியும் தமிழ் சமூகம் இல்லை. வேலு நாச்சியார் இருந்தாரே ! என்றால் , அரசியை நாச்சியார் என்றும், மாதேவியார் என்றும்  அழைக்கும் வழக்கம் நம் தமிழ் சமூகத்தில் எப்போதும் உண்டு . குந்தவை நாச்சியார் ,இருந்துள்ளார். சிங்கள நாச்சியார் வாழ்ந்துள்ளார். இவைகள் ஜாதியின் பெயர்கள் அல்ல . இந்த அரசியார் கூட தன ஜாதி ஆணை 
மணக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது .

அதென்ன ஆணுக்கு மட்டும் ஜாதி உண்டா ? உண்டு . நாம்  என்ன தொழில் செய்கிறோமோ  , நம்  தலைமுறை என்ன தொழில் செய்து எந்த தொழிலை நமக்கும்  விட்டு சென்றதோ , எத்தைகைய மரபு சார் கல்வியை நமக்காக  விட்டு சென்றதோ அது தான் ஜாதி . இது நாம்  செய்யும் தொழில் . பெண்ணுக்கானது அல்ல . ஒரு வேலை நாமும் அந்த தொழிலில் இப்போது இல்லை . அது தொடர்பாக எந்த தகவலும் நமக்கு  தெரியாது என்று ஆண் நினைத்தால் ஆண்களுக்கும் ஜாதி பொருந்தாது .

தயவு செய்து பெண்ணை துரத்தாதீர்கள் ! ஆண் ஆதிக்கத்தை நிலை நாட்டை நம் வீட்டு பெண்ணையே பலி கொடுப்பது மிக அநியாயம் ! விட்டு விடுங்கள் ! எந்த ஜாதியில் திருமணம் செய்தாலும் , ஓரு பெண் பிறந்த வீட்டிற்கு சொந்தமில்லை . மறந்துவிடாதீர்கள் !



tamil ladies paintings க்கான பட முடிவு







வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...