Monday 28 November 2016

ரொக்கமில்லாத வர்த்தகம் சாத்தியமா ?

நேற்று 2016 நவம்பர் 27 அன்று ,இந்தியா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் ரொக்கமில்லாத வர்த்தகம் பற்றியும் , அதற்கான இளைஞர்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறினார் .
அதன் சுருக்கம் :

 அவர் கூறியிருப்பதாவது

 இந்த ஆண்டு , இந்தியா ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினேன் என்று கூறியுள்ளார் .
காஷ்மீர் பஞ்சாயத்து தலைவர்கள் பலர் ஒன்று கூடி ,அவரை சந்தித்து பெருமை படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
500 , 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நோட்டாக அறிவித்துள்ளதால் , 4 பெண்கள் ஒன்று கூடி 2000 ரூபாய்க்கு பொருள்களை வாங்கி கொண்டு , அதன் செலவுகளை வீட்டில் வந்து பங்கிட்டு கொண்டதாகவும் ,
பீகார் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு A T M இயந்திரம் வேண்டும் என்றதால் அதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் ,

இவ்வாறு மக்கள் கேட்பதால் , நாட்டில் உள்ள மக்கள் டிஜிட்டல் முறைக்கு மாற தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் upi ,e -purse , rupay பற்றியும் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு வேண்டும் என்றும் , அதற்காக ஒவ்வொரு இளைஞரும் , ஒரு நாளைக்கு 10 குடும்பகளுக்கு , ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பற்றி சொல்லி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் .

பிரதமரின் உரைக்குள் பல விஷயங்கள்  உள்ளன .:

( ஒரு சராசரி இந்தியனின் சிந்தனை இது )

1. ரொக்கமில்லாத வர்த்தகம் நடைபெற எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும். ( தற்போது இந்தியாவில் 22 கோடி மக்கள் மட்டுமே ஸ்மார்ட் போன் பயன்படுகின்றன. இது இந்திய மக்கள் தொகையில் 17% மட்டுமே ஆகும் .மீதம் உள்ள தேவைகளை நீக்க முதியவர்கள் , குழந்தைகள் இவர்கள் எண்ணிக்கை போக , குறைந்த பட்சமாக ஒரு போன் 5490 ரூபாய் என்று கொண்டாலும் 27450 கோடி ரூபாய் ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு லாபமாக போய் சேரும் . நம் மக்கள் அத்தனை செலவு செய்வார்களா ?)

2.  இந்த வர்த்தகம் குறித்து வணிகர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்க வேண்டும் . இது அரசின் கடமை.

3.  கையெழுத்து கூட போட தெரியாமல் , வணிகம் செய்பவர்கள் தான் , இந்தியாவில் அதிகம் . இவர்களுக்கு ஒரு வழி கூற வேண்டும்.

4.  ஸ்மார்ட் போன் கையில் இருப்பதை விட , ரொக்கமில்லா வணிகம் தொடர்பான ஆப் மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும்.

5. குறிப்பாக எல்லா இடங்களிலும் வை பை வசதி இலவசமாக கிடைக்க வேண்டும் . ( குறைந்த பட்ச இணைய வசதி செய்வதாயினும் மொத்த செலவு 35000 கோடி ரூபாய் ஆகும் ) இதன் மூலம் சராசரி இந்தியனின் மாதாந்திர வருமானத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் அதிக செலவு ஆகும் .

6 .ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மாதந்தோறும் , வங்கிகள் பிடிக்கும் சேவை வரி கட்டணத்தை நிறுத்த வேண்டும்.( குறைந்த பட்சமாக 100 ரூபாய்க்கு 2 ரூபாய் வீதம் இந்தியாவின் மொத்த வர்த்தகத்துக்கும் அமெரிக்கா பெரும் லாபம் 1700 லட்சம் கோடி என்பதையும் அறிந்து கொள்வோம். இதன் மூலம் இந்தியாவின் அந்நிய செலாவணி குறைந்து பணமதிப்பும் குறையும் )

7. ஒருவர் பணத்தை , அவரது password பயன்படுத்தி , வேறு ஒருவர் எடுக்காமல் இருக்க வழி செய்ய வேண்டும். ( இது சார்ந்த வழக்குகள் பல நீதிமன்றம் வந்து செல்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. சராசரி இந்தியன் எப்படி அதை ஏற்பான் ? )

india pic with black money க்கான பட முடிவு


8. தனது வீட்டின் எதிர்புறத்தில் உள்ள பால் காரருக்கோ , கீரை விற்பவருக்கோ , பணம் கொடுக்க இடைத்தரகர் எனும் வங்கியை தேடுவது , எல்லோரையும் தனிமை படுத்தும் நடவடிக்கை போல் மாறும் .

9. அது மட்டும் அல்லாமல் , எவரும் இதை விரும்ப மாட்டார்கள்.

10. இதன் குழப்ப , முறைமைகளானது பண்டமாற்று முறைக்குத்தான் அழைத்து செல்லுமே ஒழிய , வங்கிகள் மூலம் நடைபெறுவது சற்று சாத்தியப்படாது.

11. என் வீடு , என் ஊர் , என் உறவுகள் , எனக்கு தெரிந்த மளிகை கடைக்காரர் , என் வீட்டோடு ரத்த பந்தம் இல்லாது , உறவு போல் நடந்து கொள்ளும் பால் காரர், என் வீட்டின் விழாக்களுக்கு சமைப்பவர், பாத்திரம் துல க்குபவர் என என் சார்ந்தவர்களோடு நான் செய்து கொள்ளும் ரொக்க பரிவர்த்தனைகளை , எங்கோ இருக்கும் யாரோ ஒருவர் பரிசோதிப்பதும், அவர் அதனை நிர்வகிக்க முற்படுவதும்  மனதளவில் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் வேறு ஒருவர் தலையிடுவது போலும்  உணர்வையே ஏற்படுத்துகிறது.

12. என்னிடம் உள்ள எல்லா பரிவர்தனைகளையும் , வங்கிகள் மூலம் காட்டுவது குடும்ப உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

13. மனைவிக்கு தெரியாமல் , தன உறவுகளுக்கும், தனது நண்பர்களுக்கும் உதவி செய்யும் கணவர்களுக்கும் , கணவருக்கு தெரியாமல் தன தாய் தகப்பனுக்கு பண உதவி செய்யும் மனைவிமார்களும் என எல்லோரும் கோர்ட் வாசலிலே நிற்க வேண்டும் .

14. நம் நாட்டின் பிரச்னை,  எல்லா மக்களும் , வங்கிகளை பயன்படுத்தே தீர வேண்டும் என்பது அல்ல . நாட்டின் கருப்பு பணம் இல்லாமல் இருப்பதே !

15. இதன் அடிப்படை தவறு செய்தவர்கள் மக்கள் அல்ல. கஸ்டம்ஸ் துறை அதிகாரிகள் . வருமான வரி அதிகாரிகள் . லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் . நன்கொடை என்ற பெயரில் மக்களை கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்களும் , அரசியல் வாதிகளும்.

16. என் நாட்டில் எல்லோருக்கும் இலவச கல்வி என்று கிடைக்கிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

17. என் நாட்டில் எல்லோருக்கு இலவச மருத்துவம் என்று கிடைக்கிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

18 . என் நாட்டின் விவசாயிகள் , என்றைக்கு சலுகை பொருள் எல்லாம் எனக்கு வேண்டாம் , எனது உற்பத்தி பொருளுக்கு நான் விலை வைக்க எனக்கு உரிமை வேண்டும் என போராட்டம் நடத்தி வெற்றி பெருகிறானோ , அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

19. கலாசார சீர்கேட்டால் , அநாதை பிள்ளைகளும் , ஊனமுற்ற பிள்ளைகளும் , வயது  முதிர்ந்த மக்களும் பெருகி விட்ட நாட்டில் , அவர்களுக்கான வாழ்க்கையை அரசு மட்டுமே கொடுக்கும் , தனியார் தேவை இல்லை என்று , என்றைக்கு சட்டம் வருகிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

20 . சினிமா நடிகர்களும், விளம்பரத்துறையினரும் , வணிக பெரு மக்களும், மத உணர்வாளர்களும்  நடத்தும் டிரஸ்ட் எனப்படும் அறக்கட்டளைகள் என்று இந்தியாவில் இருந்து ஒழிகிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும் .

21. என்று இந்திய கனிம வளங்கள் ஏற்றுமதி நிறுத்த படுகிறதோ , அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும் .

22. பிற  நாடுகளில் உள்ளது போல் 5 ஆண்டுகள் , 10 ஆண்டுகள் என வருமான வரியை முறையாய் செலுத்தியவர் ஓர் ஆண்டு வேலை இன்றி இருந்தால் அவருக்கு அரசு ஊதியம் தரும் என்று சட்டம் வருகிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும் .

23 . 5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்பர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் இந்தியாவில் , அவர்கள் கணக்குகள் வங்கிகள் மூலம் நடைபெற்றாலே போதும் கருப்பு பணம் ஒழிந்து விடும் .

24. எங்கும் , எவருக்கும் ரசிகர் மன்றங்கள் நடத்துவது கூடாது , அதற்கென வசூல் செய்வதோ , அதற்க்கு செலவு கணக்கு காட்டவோ கூடாது என்று கூறினாலே போதும் , கருப்பு பணம் ஒழிந்து விடும் .

25. வகுப்பில் , படிக்கும் மாணவர்களில் யாரெல்லாம் சரியாக படிக்க மாட்டார்கள் என்பது ஒரு ஆசிரியருக்கு தெரியாமல் இருக்காது. தெரிந்தும் எல்லா மாணவர்களுக்கும் தண்டனை கொடுப்பது சரியான ஆசிரியருக்கு அழகல்ல ! மன்னவனுக்கும் , மந்திரிக்கும் கூட இது பொருந்தும் !

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்ப செயல் .

-                                                    திருவள்ளுவர் 


Sunday 20 November 2016

உலக ஆண்கள் தினம்






உலக ஆண்கள் தினம் நவம்பர் 19 ம் தேதி கொண்டாடப்படுகிறது .

ஏன் என்று தெரியுமா ?


1907 ல் டிசம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த மேற்கு வெர்ஜினியாவில் உள்ள மோனங்கைத்  இருந்த சுரங்க தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தினால் 361 ஆண்கள் இறந்து போயினர். இதில் 250 பேர் தந்தையர் .

எனவே அவர்களுக்கு நன்றி சொல்லும் வண்ணம் , 1908 ம் ஆண்டு ஜூலை மாதம் 8 ம் தேதி கொண்டாடப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் 3 வது ஞாயிறாக மாறியது .இது 2015 ம் ஆண்டிக்கு பிறகே பிரபல மாக்கப்பட்டது .

எனில் தந்தை ஆகாத ஆண்கள் , நிலை என்ன ?

திருமணம் ஆகாத ஆண்கள் என்று கூற கூடாது . தந்தை என்ற நிலையை அடையாத ஆண்களும் அதில் இறந்து போயினர் அல்லவா ? அவர்களுக்கும் நன்றி சொல்லும் வண்ணம் கொண்டாடப்படுவதே ஆண்கள் தினம் .

ஆனால் இதை கொண்டாடித்தான் ஆண்களை பெருமை படுத்த வேண்டும் என்ற அவசியம் தமிழர்களுக்கு இல்லை .

இங்கு ஆணிடம் பெண் நடந்து கொள்ள வேண்டிய முறைகளும் ,
பெண்ணிடம் ஆண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளும்,

இருவரும் ஒருவருக்கொருவர் நன்றி கூறுவது எப்படி என்பதும் மரபாய் , மரபணுவோடு வளர்ந்து வருவது .

பெண்கள் தினம் , ஆண்கள் தினம் , அன்னையர் தினம், தந்தையர் தினம் இதெல்லாம் தமிழனுக்கு தேவை இல்லை .

வாழ்க தமிழ் இனம் !

Monday 14 November 2016

சுண்டை வற்றல் குழம்பு - வயிற்று பூச்சியின் மருந்து





sundaivatral க்கான பட முடிவு



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றில் உள்ள பூச்சி .

இது குழந்தைகளுக்கு மட்டும்தான் வரும் என்று கூறுவது மிகத்தவறு .

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட எல்லோர் வீடுகளிலும் வாரத்திற்கு ஒரு முறை வயிற்று பூச்சிக்கு மருந்து சாப்பிட்டு வந்தனர் . இப்போது தான் நாகரிக மயக்கத்தில் அதை விட்டு விட்டோம்.

இது குறித்து கூறும்போது  இவ்வாறு கூறுவார்கள்.


தினமும் ஒரு முறை
வாரத்திற்கு ஒரு முறை
மாதத்திற்கு இரு முறை
ஆண்டுக்கு ஒரு முறை       என்று!


தினமும் ஒரு முறையாவது பற்களை சுத்தம் செய்

வாரம் ஒரு முறையாவது வயிற்றை சுத்தம் செய்

மாதம் இரு முறையாவது உடல் உறவு கொண்டு உடற்கழிவை சுத்தம் செய்

ஆண்டுக்கு ஒரு முறையாவது வீடுமுழுவதையும் சுத்தம் செய் !



இது சுத்தம் குறித்து வழக்கத்தில் இருக்கும் பேச்சு!


இதன் அடிப்படையில் , வாரத்திற்கு ஒரு முறை யாவது வயிற்றில் உள்ள பூச்சிகளை களைய வேண்டிய அவசியம் எல்லோருக்கும் உள்ளது.

ஆனால் அதை மருந்து வழிதான் செய்ய வேண்டும் என்ற அவசிய இல்லை .

சாப்பாடு மூலமாகவும்  வயிற்றில் உள்ள பூச்சிகளை விரட்டலாம் ..


அது தாங்க சுண்டை வற்றல் குழம்பு .

சுண்டைக்காயை இரண்டாக வெட்டாமல் , கொஞ்சமாக பிளந்து அதனை சாம்பாரில் போட்டு சமைத்து சாப்பிட பூச்சிகள் அழியும்.



ஆனால் எல்லா இடங்களிலும் சுண்டைக்காய் கிடைப்பதில்லை . ஆனால் சுண்டைவற்றல் கிடைக்கும்.

கொஞ்சம் சுண்டை வற்றல் எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள் .
கொஞ்சம் புளி கரைத்து வடிகட்டி , அதில் தக்காளி கரைத்து , அதனுடன் 2: 1 என்ற விகிதத்தில் மல்லி தூளும் ,மிளகாய் தூளும்  சேர்த்து சரியான அளவு உப்புடன் கலந்து ஒரு 5 நிமிடங்கள் ஊற விடுங்கள் .

அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு , கொஞ்சம் வெந்தயம் , கொஞ்சம் உரித்த பூண்டு , வெங்காயம் இட்டு வதக்கி அதில் ஏற்கெனவே கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி கொதிக்க விடுங்கள்.


வேறொரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சுண்டைக்காய்
வற்றலை மிதமான தீயில் வதக்கி , அதை கொதிக்கும் குழம்பில் விடுங்கள்.

கொஞ்சம் தேங்காயிம் , கொஞ்சம் சோம்பு ( பெருஞ்சீரகம் ) சேர்த்து அரைத்து இறக்கும் நேரத்தில் ஊற்றி ஒரு கொதி மட்டும் விட்டு இறக்கி விட வேண்டும்.

சுண்டை வற்றல் குழம்பு தயார்.

இதற்கு சுட்ட அப்பளம் , சரியாக இருக்கும்.


இது ஒரு சிறந்த மருந்து வயிற்று பூச்சிக்கு !

மற்றொரு மருந்து உண்டு .

தினமும் அல்லது வாரம் இரு முறையாவது பப்பாளி பழம் 
உண்ணுங்கள் .

அது வயிற்றில் புழு பூச்சி தங்க விடாது .


Friday 11 November 2016

இந்தியா ரூபாயின் வரலாறு ( சுருக்கமாக )- பல்வேறு நாடுகளின் பண மதிப்பு !

பணம் என்ற வார்த்தை , எல்லோருக்கும் வாழ்க்கையின் ஒரு அங்கம்.

அனால் இந்த பணம் சார்ந்த சில வித்யாசமான கருத்துக்கள் அறிவோமா ?

@   சந்திர குப்த மௌரியர் காலத்து நாணயங்களின் பெயர் பனாஸ் .

இந்த வார்த்தையில் இருந்து வந்தது தான் பணம் எனும் வார்த்தை.


@ உலகம் பணம் என்ற கருத்தாக்கத்தை இந்தியாவில் இருந்தே பெற்றது .

@ உலகில் முதன்முதலில் கி.மு. 3 ம் நூற்றாண்டிலேயே பணத்தையும் , நாணயங்களையும் பயன்படுத்தியது இந்தியா தான்.

@ அதற்க்கு ரூபாயி என்றும் ரூபாய் என்றும் பெயரிட்டது இந்தியாதான்.
ரூபா என்றால் அழகான உருவம் என்றும் , வடிவமைக்கப்பட்டது என்றும் அர்த்தம் .

@ தங்க நாணயங்கள் ஸ்வர்ண ரூபா என்றும் தாமிர நாணயங்கள் தாமிர  ரூபா இரும்பு நாணயங்கள்  சிச ரூபா என்றும்  வழங்கப்பட்டுள்ளன .

@ 1540 - 1545 வரை ஆட்சி செய்த சூரி வம்சத்தை சேர்ந்த ஷெர்ஷா சூரி என்ற மன்னரே இந்தியாவில் நாணய பயன்பாட்டை கொண்டு வந்தார் . இவர் தான் அஞ்சலகம் என்பதை ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Silver coins with raised writing


@ அதனை தொடர்ந்து மொகலாய மன்னர் அக்பர் அதனை பின்பற்றினார். 

@ ஆரியர் வருகைக்கு முன்னமே , இந்தியாவில் நாணய பயன்பாடு இருந்துள்ளது என்று கூறுகிறார் ராகுல் சாங்கிருத்தியாயன் .

@ கி.பி. 990 களில் தான் முதன்முதலில் , ராஜ ராஜன் சோழன் ஆட்சியின் போது நாணயங்கள் தயாரிக்கப்பட்டன என்று  பொன்னியின் செல்வன் வழியாக கூறுகிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி .
how foreign currencies are having indian language க்கான பட முடிவு



@  1934 களில் இந்திய ரிசெர்வே வங்கி தொடங்கப்படும் வரையிலும் கூட அந்தந்த மாகாணங்கள் தனியாக ரூபாய்கள் அச்சிட்டுள்ளன.


how foreign currencies are having indian language க்கான பட முடிவு



@ போர்த்துகீசியர்கள் தனியாகவும் , ஆங்கிலேயர்கள் தனியாகவும் , சீனா வங்கி கூட இந்தியாவில் செயல்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.





@ அந்த ரூபாய் தாள்களில் கூட ஹிந்தி மொழி இடம் பெற வில்லை.

@  பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் , இந்தியா ரூபாய் , பிரிட்டிஷார் எங்கெல்லாம் ஆட்சி செய்தனரோ அங்கெல்லாம் மதிப்புடையதாக இருந்துள்ளது .

@ இந்தியா சுதந்திரத்தின் போது அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய மதிப்பை 4 ரூபாய் என்று மாற்றியுள்ளார் அப்போதைய பிரதமர் நேரு .

@ 1967 ம் ஆண்டில் இந்திரா காந்தி 7 ரூபாய் 50 காசுக்கு மாற்றி யுள்ளார் . 

@ இவ்வாறு இந்தியா தன பண மதிப்பை குறைக்க முக்கிய காரணமாக கூறப்படுவது இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் இந்தியா சீனா போர் .

@ இப்போர்களை எதிர்கொள்ள ஆயுதங்கள் பெற வேண்டி இந்தியா தனது பண மதிப்பை குறைத்து , அக்காலகட்டத்தில் இருந்த அனா க்கள் ,, முறை மாற்றப்பட்டு முழுமையாக 100 பைசா 1 ரூபாய் என்று மாற்றப்பட்டது .
இதற்க்கு முன்பு 64 பைசா ஒரு ரூபாயாக இருந்தது . 

@ பின்னர் ஆண்டு தோறும் 1 ரூபாய் வீதம் குறைந்த இந்திய ரூபாயானது 1990 முதல் 1995 ம் ஆண்டுக்குள் 35  ரூபாயாக மாறியது . திரு . நரசிம்ம ராவ் ஆட்சியில் பண மதிப்பு மேலும் மேலும் குறைந்தது .

@ 1991 ல் நிதி அமைச்சராக இருந்த மன் மோகன் சிங் , பொருளாதார தாராள மயமாக்கல் , என்பதில் கையொப்பம் இட்டதன் விளைவு , படிப்படியாக பண புழக்கம் அதிகரித்தது. பண மதிப்பு குறைந்தது .

@ அதன் படி இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாயாக  சரிந்து உள்ளது .

@ நவம்பர் 8 , 2016 முதல்  பழைய 500 ரூபாய் , 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்றும் அதற்க்கு பதிலாக புதிய 1000 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது இந்தியா ரூபாயின் பண மதிப்பை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது 

------------------------------------------

மௌரீசியஸ் பணம் :


இதன் சிறப்பு என்னவெனில் , இந்த ரூபாய் நோட்டுகளில் ஹிந்தியிலும் , தமிழிலும் ரூபாயின் மதிப்பு எழுதப்பட்டிருக்கிறது .


how foreign currencies are having indian language க்கான பட முடிவு



2016 நவம்பர் 8 ன் தேதி முதல் புதிய 1000, மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன . கீழே காணப்படுவது 1970 களில் வெளியிடப்பட்ட புதிய 1000 ரூபாய் . அதுவும் , தற்போது வெளியிடப்பட்டது போலவே , ராஜா ராஜ சோழன் சதய திருவிழா அன்று வெளியிடப்பட்டது.

how foreign currencies are having indian language க்கான பட முடிவு


கீழே காணப்படுவது சிங்கப்பூர் டாலர். எப்போதும் போல் தமிழர்களுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் , அந்த டாலரில் தமிழிலும் சிங்கப்பூர் என்று அச்சிடப்பட்டிருக்கும் .



singapore dollar language க்கான பட முடிவு

இந்தியாவில் சில கருத்துக்கள் பேசவே தயங்கும் போது செக் குடியரசு வெளியிட்டுள்ள பணம் வித்தியாசமானது . செக்கஸ்லோவோக்கியாவின் இந்த பணத்தின் பெயர் செக் கொரோனா .




கீழ் காண்பவை இலங்கை ரூபாய் நோட்டு. இதில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காட்டிலும் , தமிழரின் கலைகளுக்கு இந்த ரூபாய்கள் சாட்சியம் கூறுகின்றன .


sri lankan currency notes க்கான பட முடிவு


கீழே காண்பவை குக் தீவின் ரூபாய் நோட்டு. இது நியூசிலாந்தை சேர்ந்தது.தென் பசிபிக் கடலில் உள்ள இந்த தீவானது , கடல் வாழ் உயிரினங்களின் மீது ஒரு பெண் பயணிப்பது  போலும் சித்தரிக்கப்பட்ட படத்துடன் தனது பணத்தை வெளியிட்டுள்ளது.

currency notes of different countries க்கான பட முடிவு



கீழே உள்ள தினார் எனும் பணமானது செர்பியாவின் பணமாகும் . இதன் பெயர் க்ராஜின தினார். யுகோஸ்லாவ் தினார் பணத்தை ஒத்த வடிவமைப்பு கொண்ட இந்த தினார் 1992 ல் 1 மில்லியன் வரை வெளியிடப்பட்டுள்ளது. 1994 முதல் பில்லியன் கணக்கில் வெளியிட்டுள்ளது இந்த அரசு .

currency notes of different countries க்கான பட முடிவு

செர்பிய  அரசை போன்றே துருக்கி அரசும் மில்லியன் கணக்கில் பணத்தை வெளியிட்டுள்ளது.


currency notes of different countries க்கான பட முடிவு




கீழே உள்ளது யுகோஸ்லாவியாவின் யம் எனும் பணம் . உலகத்திலேயே பண வீக்கம் என்பதை அதிக  அளவில் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்று. இது போஸ்னியா , ஹெரஸிகோவினா ,கிரொட்டியா , மாசிடோனிய , ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பண மதிப்பிற்கு மாற்றாக கருதப்படுகிறது. இந்த நாட்டின் 1 கோடி பணம் கொடுத்தால் இந்தியாவில் அது 2 லட்சத்து 50 ஆயிரமாக மட்டுமே மாறும் .


currency notes of different countries க்கான பட முடிவு

இந்த யம் நோட்டின் பணத்தை முடிந்தால் எண்ணி கொள்ளுங்கள் .



நாம் ஒரு கண்டைனர் பணம் என்பதை ஒரே ஒரு நோட்டாக சுமக்கிறது
யுகோஸ்லோவியா .

செர்பியா , துருக்கி போன்ற நாடுகளின் பணம் அதிக அளவிலான எண்ணிக்கைகளை சுமக்கிறது.

இதன் அர்த்தம் என்னவெனில் அங்கெல்லாம் பணத்திற்கு மதிப்பே இல்லை .
பண வீக்கம் அதிகமாய் உள்ளது.
பண வீக்கம்  என்றால் , அரசு வெளியிட்ட பணத்தை விட அதிக பணம் மக்களிடம் புழக்கத்தில் உள்ளது என்று அர்த்தம்.
உள்நாட்டு போர், பிற நாட்டுடன் போர்  மற்றும் அரசுடன் மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்ற மறைமுக பொருளும் உள்ளது.


இதே நிலையில் தான் இந்தியாவும் 1967 களில் இந்தியா சீன போர் காலத்தில் , தன பணமதிப்பை குறைத்தது. அப்போது போடப்பட்ட மிசா சட்டம் , அதனை தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு சட்டங்கள் மக்களுக்கு வெறுப்பை கொடுக்க , அந்த சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட பிறகும் கூட , இந்திய பண மதிப்பு     உயரவில்லை.

இன்று கருப்பு பண ஒழிப்பு என்ற கருத்து முன்னெடுக்கப்பட காரணமாக இருந்த அந்த கால கட்டம் தான் , இந்தியா வரலாற்றின் திருப்பு முனை காலம் ஆகும்.

இன்றைய நிலையில் இந்தியா பண வீக்கமானது 10% விட அதிகமாக உள்ளது. அதனால் தான் இந்தியா பண மதிப்பு குறைகிறது. இதன் அர்த்தம் அரசு 100 ரூபாய் வெளி இட்டால் 112 ரூபாய் புழக்கத்தில் இருக்கிறது என்பதாகும்.

இந்த பணவீக்கமானது இந்தியாவில் குறையவும், பண மதிப்பு அதிகரிக்கவும் ஒவ்வொரு இந்தியனும் துணை நிற்போமாக !


-------------------------


Friday 21 October 2016

சிவகாசி பட்டாசு

தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் , நம் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு மற்றும் புதிய ஆடைகள் மற்றும் இனிப்புகள்.

புதிய ஆடைகள், இனிப்புகள்  என்பவை கூட இப்போதெல்லாம் ஆடி மாதமும் , பிற பண்டிகைகளும் பங்கிட்டு கொள்கின்றன . அனால் பட்டாசுகள் அப்படி எந்த பண்டிகையாலும் பங்கிட முடியாத நிலையில் , தீபாவளியையே சார்ந்து உள்ளது. அதிலும் நம்ம சிவகாசி பட்டாசு இந்தியா முழுவதும் பிரபலம்.


sivakasi crackers க்கான பட முடிவு


கி.மு.200 களில் சீன மக்களால் கண்டறியப்பட்ட பட்டாசு , முதலில் பனை ஓலைகளில் தயாரிக்கப்பட்டு , பின்னர் காகிதத்திற்கு மாறியது . அதன் பின்னர் தான் உலகம் முழுவதும் பட்டாசுகள் பரவின .

19ம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட , பட்டாசு தொழிற்சாலையானது , 1940 களில் சிவகாசிக்கு மாற்றம் செய்யப்பட்டது.  இதற்க்கு குறிப்பிடப்படும் சில காரணங்கள் :

1. சிவகாசியின் காலநிலை . முற்றிலும் வறண்ட பூமி. அக்டோபர் , நவம்பர் , டிசம்பர் தவிர்த்து மற்ற மாதங்கள் முழுவதும் வெயில் காலந்தான்.

2. விவசாயம் பொய்த்து போனது. பருத்தி உற்பத்தியும் , சிறுதானிய உற்பத்தியும் மக்களுக்கு போதிய வருவாய் தரவில்லை.

3. போதிய வேலைவாய்ப்பின்மை காரணமாகவும் , பொருளாதார ஏற்ற தாழ்வு காரணமாகவும் , பூர்வீகத்தை அடிப்படியாக கொண்டு இங்கு அடிக்கடி நடந்த கலவரங்கள் . நாடார்களுக்கு , மறவர்களுக்கும் நடந்த சண்டையில் சிலர் மரணம் அடைந்துள்ளனர் .

4. இந்தியா வெடிபொருள் சட்டம் சிவகாசிக்கு உரிமம் வழங்கியது .

இது போன்ற காரணங்களால் தொடங்கப்பட்ட பட்டாசு தொழிசாலைகள் இன்று பல்கி பெருகி நிற்கின்றன. இந்தியா முழுவதும் பட்டாசுகள் இங்கிருந்து தான் செல்கின்றன.

உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக இங்கு தான் அதிக பட்டாசுகள் உற்பத்தி செய்ய படுகின்றன .

தற்போது 8000 உற்பத்தி மையங்கள் இங்கு உள்ளன. 500 நிறுவன உரிமையாளர்கள்  இங்கு உள்ளன.


இது மட்டும் அல்லாது , காகித உற்பத்தி இங்குதான் செய்யப்படுகிறது . இந்தியாவின் 30 % காகித தேவைகள் இங்கிருந்து சரி செய்ய படுகிறது .

டைரி உற்பத்தியும் , காலண்டர்கள் உற்பத்தியும் இங்கிருந்து தான் இந்திய முழுவதும் செல்கிறது .

தீப்பெட்டி தொழிற்சாலைகளும் , இந்தியாவிற்கு போதிய தேவைகளை தீர்கின்றன .


sivakasi crackers க்கான பட முடிவு


இவ்வாறாக , சிவகாசி மூலம் இந்தியாவிற்கு ஆண்டு வருமானம் , ரூபாய் 2000 கோடி ஆக உள்ளது .


குட்டி ஜப்பான் என்று வழங்கப்படும் , சிவகாசி , நமக்கு பட்டாசுகளையும் , இந்தியாவிற்கு வருமானத்தையும் தேடி தருகிறது.

அனால் தனக்குள் பல விபத்துக்களையும் சுமந்து நிற்கிறது .  1981 ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் படி இங்கு பணியாற்றிய குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இருப்பினும் , 1991 , மற்றும் 2004 ம் ஆண்டுகளில் குறைந்த பட்சம் 40 பேரை பலி கொடுத்திருக்கிறார்கள் இம்மக்கள் . ஏன் , ஆண்டு தோறும் இது போன்று விபத்துகள் தொடர்ந்து  இருக்கின்றன.

2 நாட்களுக்கு முன்பு கூட 19 - 10 - 2016 அன்றும் 9 பேர் உடல் கருகி இறந்துள்ளனர் .

இத்தனை கஷ்டங்களுக்கு இடையிலும் நம் அனைவர் மகிழ்ச்சியிலும் பங்கெடுக்கும் சிவகாசி பட்டாசுகளை மாற்றாக சீனா பட்டாசுகளை வலம் வருகின்றன .

 தமிழ்நாடு பட்டாசு தொழிசாலை சங்கத்தின்  மூத்த உறுப்பினர்
 K . மாரியப்பன் கூறுகையில் ,(Tamil Nadu Fireworks and Amorces Manufacturers Association (TNFAMA), Sivakasi, ) இதுவரையிலும் இந்தியா அரசாங்கம் , எந்த ஒரு நிறுவனத்திற்கும் இந்தியாவில் பட்டாசு இறக்குமதி செய்ய உரிமை வழங்கவில்லை என்று கூறி உள்ளார். 

எனில் நம் கைகளுக்கு கிடைக்கும் பட்டாசுகள் திருட்டு பட்டாசுகள் . இதை நாம் பயன்படுத்துவது , நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு நாம் செய்யும் தீங்கு .

நம் தமிழர்களுக்கு , நாமே செய்யும் கேடு !

சிவகாசி இருக்க
சீனா பட்டாசுகள் நமக்கெதற்கு ?


Ref : இந்தியா டுடே ( oct 14.2014 )

Wednesday 19 October 2016

சந்தன கடத்தல் வீரப்பன் நல்லவரா ?





வீரப்பன் (1952 - 2004)
இறந்த தினம் இன்று
'தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர்' , 'சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர்' என்று இந்திய அரசாலும், தமிழக மற்றும் அண்டை மாநில திராவிட அரசுகளாலும் அறிமுகமானார். 
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். 
...

தந்தங்களாகவும் , சந்தன மரங்களாகவும் இவர் மூலம் சுமார் 150 கோடி வணிகம் நடந்துள்ளது என்பது இவர் மீதுள்ள குற்றசாட்டு ! ஆனால் இவரோடு யாருக்கு வணிகம் இருந்தது என்பது குறித்து அரசும் இதுவரை தெரிவிக்க வில்லை !

அதே நேரம் ,

சமீப காலமாக வீரப்பன் குறித்து பல்வேறு நல்ல கருத்துக்கள் பகிர படுகின்ற்ன.

வீரப்பனால்தான் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வந்தது என்றும் ,
கர்நாடகம் அமைதி காத்தது என்றும் ,
ஏகப்பட்ட கருத்துக்கள் !

தமிழர்களுக்கு பாதுகாப்பு தர சொல்லியும் , கர்நாடகத்தில் வள்ளுவர் சிலை திறக்க சொல்லியும் போராடினார் என்றும் கூறப்படுகிறது !

புரியல !

அவர் இன்று உயிரோடு இல்லை என்பதால் தான் தமிழ் இனமே தாழ்ந்து விட்டது போலும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன !

இவர்கள் கருத்துப்படி பார்த்தால்
வீரப்பன் ஒன்றும்  சாதாரண மனிதர் அல்லவே !
அவர் நக்கீரன் கோபால் துணையோடு நிறைய வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். ஆனால் ஒரு வீடியோவிலும் தான் யாருக்காக செய்கிறோம் என்றோ , யாரிடம் வணிக தொடர்பு வைத்திருக்கிறோம் என்றோ கூற வில்லை.

ஏன் ?

அவருக்கு நன்றாக தெரியும் , அவர் பின்னால் இருப்பவர்கள் யாரும் நல்லவர்கள் இல்லை என்று ! அவரை எப்படியும் கொன்று விடுவார்கள் என்றும் தெரிந்திருக்கும்.! அப்படி இருக்க , அவர் எந்த திருடனையும் காட்டி கொடுக்காமல் சென்றது ஏன் ?செய்திருக்கலாமே ! இந்த கேள்வி தான் அவரை தவறான மனிதராக சித்தரிக்கிறது .

அவர் தனது குடும்பத்திற்காக ஏதும் செய்யவில்லை என்பதற்க்கு அவர் மனைவி தற்போது வாழும் வாழ்வே சாட்சி ! எனில் இத்தனை கோடி கொள்ளைக்கு துணை நின்ற வீரப்பன் , நேரடியாக கூறியிருந்தால் இந்த திராவிட கட்சிகளாவது ஒழிந்திருக்குமே !

பிரபாகரன் தமிழ் இனத்திற்காக நேரடியாக போராடினார் . அதில் நியாயம் உள்ளது . அது தீவிரவாதம் அல்ல , அது ஒரு சுதந்திர போராட்டம் என்று , உலகமும் ஒப்பு கொண்டுவிட்டது .

ஆனால் ,

வீரப்பன் நிலை என்ன ? அவர்,

சந்தன கடத்தல் மூலம் போராட வேண்டிய அவசியம் என்ன ? அவரை தேடி வந்த காவல் துறை தான் , அங்கிருந்த பெண்களை துன்புறுத்தியது. அங்கு நடந்த தவறுகள் அனைத்திற்கும் அவரே மூல காரணம் . இதை தெரிந்தும் ஏன் அவர் சரண் அடைய வில்லை . அதற்க்கு பதிலாக , காவல் துறையினரை கொன்று நற்பெயர் தேடியது என்ன நியாயம் ?

வீரப்பன் போராட்டம் நிகழ்த்திய வீடியோ இருந்தால் பகிருங்கள் ! குறைந்த பட்சம் அவர் போராடிய நாட்களையாவது குறிப்பிடுங்கள் !

Thursday 22 September 2016

கருப்பு இட்லி சாப்டீங்களா ?

இட்லி நம் நாட்டின் பூர்வீக உணவு. நாம் இப்படி கூற இது இந்தோனேசியா உணவு என்று கூறுவோரும் உண்டு.  ஆனால் இந்தோனேசியா என்பது புராண காலங்களில் தமிழர்கள் வாழ்ந்த இடம் என்று கூறுபவர்களும் உள்ளனர்.

சரி விடுங்க !


இந்த உலகம் ஒப்பு கொண்ட உண்மை என்னவெனில் , குழந்தைகள் கூட உண்ண கூடிய உணவு எது எனில் அது இட்லி மட்டுமே !
 எத்தனை வகையான இட்லி சாப்புடுவீங்க ?

அரிசி மாவு இட்லி

காஞ்சிபுரம் இட்லி

ரவா இட்லி

ஓட்ஸ் இட்லி

மசாலா இட்லி

பட்டன் இட்லி

ரவாவும் உளுந்தும் கலந்து செய்தா அது ரவா இட்லி

idli க்கான பட முடிவு


ஓட்ஸை ஊற வைத்து அதில கொஞ்சம் மசாலா கலந்து செய்தா ஓட்ஸ் இட்லி .

idli க்கான பட முடிவு




அதே அரிசி மாவுல குட்டி குட்டி ஊற்றி சாம்பார்ல ஊற வச்சி சாப்பிட்ட அது பட்டன் இட்லி .

idli க்கான பட முடிவு


idli க்கான பட முடிவு

பட்டன் மசாலா இட்லி

ஓட்ஸ் அல்லது அரிசி , உளுந்து மாவில் பாலக் கீரையை சுத்தம் செய்து நரம்பு எடுத்து விட்டு அரைத்து சாறு கலந்து ஊற்றி எடுத்தா அது பாலக் இட்லி .

idli க்கான பட முடிவு

பாலக் ஒட்ஸ் இட்லி


அரிசி மற்றும் உளுந்து மாவில் கடுகு ,மிளகாய் தாளித்து அல்லது கேரட் துருவல் சேர்த்து கலந்த மாவை அதை இட்லி பானை வைத்து ஊற்றி எடுக்காமல் ,இதற்கென்று உள்ள குழாய் போன்ற ஒரு பாத்திரத்தில் ஊற்றி எடுத்து அதன் பிறகு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து எடுத்தால் அது தாங்க காஞ்சிபுரம் இட்லி .
kanchipuram idli க்கான பட முடிவு



kanchipuram idli க்கான பட முடிவு

காஞ்சிபுரம் இட்லி


இதுல மல்லிகைப்பூ மாதிரி இட்லி என்பது என்ன ?

மல்லிகை பூ மாதிரி வெள்ளையா இருக்கணுமா ?

மல்லிகைப்பூ எப்போ ரொம்ப வெள்ளையா இருந்திச்சி ?

யாராவது பார்த்த சொல்லுங்க . ஏன்னா மல்லிகை பூ வெளிர் மஞ்சள் நிறமாக தான் இருக்கும் .

அப்புறம் இட்லி வெள்ளையா இருக்க கூடாதுங்க !

ஏன்னா

மல்லிகை பூ இட்லி என்பது கூட , வெள்ளை கிடையாது . தூய மல்லி அரிசி என்ற ஒரு பாரம்பரிய அரிசி இருக்கு . அந்த அரிசியில் உளுந்து கலந்து செய்த இட்லிக்கு பெயர்தான்  மல்லி இட்லி .

பெயர் மருவி போய் மல்லிகை பூ இட்லி என்றாகி நம் வெள்ளை மோகத்தில் வந்து விழுந்ததுதான் விதவிதமான இட்லி வகைகள் .

டாக்டர் சிவராமன் கூறுகிறார் .

இட்லின்னா கொஞ்சம் கருப்பா இருக்கும்.

இட்லின்னா கொஞ்சம் சிவப்பா இருக்கும்

இட்லின்னா கொஞ்சம் காபி நிறமா இருக்கும் .

அப்புடின்னு !

ஆக

இட்லி என்பது வெள்ளையாகவே இருக்காது என்று கூறுகிறார்.

அதெப்புடி கருப்பா இருக்கும் ?

ஆமாங்க ! கொஞ்சம் கறுப்பரிசி போட்டு செய்யுங்க ! இந்த கருப்பு அரிசி என்பது கருப்பு கவுனி அரிசிங்க !

1 பங்கு  அரிசிக்கு 4 : 1 என்ற விகிதத்தில் உளுந்து , ஒரு ஸ்பூன் வெந்தயம் கலந்து ஊற வைச்சி அரைத்து இட்லி ஊற்றி எடுங்க . கருப்பு இட்லி தயார் .

அதே மாதிரி மூங்கில் அரிசி பயன்படுத்துங்க !

அதே அளவில் பூங்கார் அரிசி , மாப்பிளை சாம்பா , இலுப்ப பூ சம்பா  சிகப்பு கவுனி இதெல்லாம் பயன்படுத்துங்க !

குழந்தைங்க இதெல்லாம் சாப்பிட மாட்டாங்க !

அப்புடின்னு தோணும் !

இதில உங்க விருப்ப படி கேரட் சாறு , பீட்ரூட் சாறு , பாலக் சாறு , கொத்தமல்லி சாறு இதெல்லாம் கலந்து வண்ண வண்ணமா எடுங்க ! கண்டிப்பா குழந்தைகளுக்கு பிடிக்கும்.

இது நிஜமாகவே ரொம்ப சுவையாக இருக்கும் !

செய்முறை :

மறந்துறாதீங்க ! இது போன்ற அரிசி வகைகள் ஊறுவதற்கு ரொம்ப நேரம் எடுக்கும். அதனால் முதல் நாள் மாலை ஊறவைத்து மறுநாள் காலையில் அரைங்க !  வெள்ளை உளுந்தாக இருந்தால் 1 கிலோஅரிசிக்கு கால் கிலோ உளுந்து போடுங்க ! அதையும் 40 முதல் 50 நிமிடங்கள் மட்டுமே ஊற வைக்கணும் !

கருப்பு உளுந்தாக இருந்தால் , கால் கிலோ தேவை இல்லை 150 கிராம் முதல் 200 கிராம் போதுமானது .




இது பூங்கார் அரிசி இட்லி


இது ஆரோக்கியமான இட்லி . உடலுக்கும் , மனசுக்கும் புத்துணர்ச்சி தரும் .

பூங்கார் அரிசியில் இட்லி  கர்ப்பிணி பெண்களுக்கும் , குழந்தைகளுக்கும்  அவசியம் .

மாப்பிள்ளை சம்பா இட்லி , புது மாப்பிள்ளைக்கு அவசியம் .

மல்லி அரிசி இட்லி எல்லோருக்கும் அவசியம் .

இட்லியின் நிறம் வெள்ளை இல்லங்க !
அது நம் தமிழர்களின் நிறம் !


Thursday 15 September 2016

தகப்பன் இல்லா பிள்ளை போலும் தமிழ்நாடு !






இன்று 16  - 9 - 2016 ( வெள்ளி கிழமை )  தமிழகம் முழுவதும் பந்த் !

கர்நாடகத்தில் தமிழ் பதிவெண் இட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டதற்கும் , தமிழர்கள் தாக்கப்பட்டதற்கும் எதிரிப்பு தெரிவித்து !

ஆனால் யாரை எதிர்த்து என்பதை குறித்து யாரும் விளக்கம் கொடுக்க வில்லை .

கர்நாடக அரசை எதிப்பதாயின் , கர்நாடாவில் போராட வேண்டும் .

மத்திய அரசை எதிர்ப்பதாயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்க வேண்டும் .

தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்பட்ட போது தி மு க அரசு சென்னையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தியது .

இதனால் தமிழ்மக்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர்
காப்பாற்றப்பட்டார்களா ?

இப்போதும் அப்படிதான் நடக்கிறது !

அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளன .

ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன

தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன

தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன


யாருக்கு நஷ்டம் ?

கர்நாடக அரசுக்கா ?
மத்திய அரசுக்கா ?
பெரும் பணக்கார்களுக்கா ?
அரசியல் வாதிகளுக்கா ?

சாமான்ய தமிழன் இன்று ஒருநாள் ஊதியத்தை இழக்கிறான் !

இப்போராட்டத்தை நடத்தும் கட்சிகள் பெயர் வாங்குகின்றன.

பத்திரிகைகளும் , தொலைக்காட்சிகளும் காட்சி படுத்தி காசு பார்க்கின்றன  .

அஹிம்சா வழி போராட்டம் என்ற பெயரில் காந்தி அடிகள் இது போன்ற போராட்டங்களை சுதந்திரத்திற்கு முன் நடத்தினார் . அப்படி நடத்தியதால் பிரிட்டிஷாரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது .

இப்போது நடக்கும் போராட்டத்தால் எந்த பொருளாதாரம் பாதிக்க போகிறது .

இன்று மட்டும் குறைந்த பட்சம் 15000 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறுகிறார் வணிகர் சங்க தலைவர். இந்த நஷ்டத்தை யாருக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும் ?

கர்நாடகாவுக்கு !

மத்திய அரசுக்கு !

செய்தோமா ? இல்லை . இப்போதும் அறிவிலி தனமாக , எவனோ பெயர் வாங்க நம்மை நாமே நஷ்டப்படுத்தி கொண்டிருக்கிறோம் .

போராட விரும்பினால் , பொருளாதார போராட்டம் நடத்து !

இது ஒன்றும் மன்னராட்சி அல்ல !

நம் வீரத்தை காட்ட !

இது மக்களாட்சி !

ஓங்கி அடி ! பொருளாதாரத்தில் இடி போலும் அடி !

கர்நாடகாவுக்கு மட்டும் அல்ல !

ஒட்டு மொத்த இந்தியாவுக்கே கூறு !

இந்தியா ஒரு கூட்டு குடும்ப நாடு . இங்கு ஒருவரை ஒருவர் அடித்தால் வேடிக்கை பார்க்கும் மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து பாடம் நடத்து !

கர்நாடகத்தில் இருந்து வரும் பொருளை எல்லாம் நிறுத்து !

கர்நாடகத்திற்கு செல்லும் பொருளை எல்லாம் நிறுத்து !

மணல் லாரிகளே , நம் மண்ணை சுரண்டிதானே கர்நாடகத்தை வளமை படுத்தினாய் ! நிறுத்து ! மணல் கொடுப்பதை நிறுத்து !

மின்சாரம் வழங்குவதை நிறுத்து !

போக்குவரத்து சேவைகளை நிறுத்து !

துறைமுக சேவைகளை நிறுத்து !

தேனும் , மீனும் , காயும் , பழமும் வராது என்று கூறு !

கன்னட திரைப்படங்களை நிறுத்து !

கன்னட நடிகர்களை தமிழில் நடிக்க வைப்பதை நிறுத்து !
(அவன் யார் நமக்கு கருத்து சொல்ல ?)

இப்படி எல்லாம் செய்து விட்டால் , கர்நாடகம் ஒன்றும் இடிந்து விடாது .

வேறு ஒரு மாநிலத்தில் இருந்து இவற்றை எல்லாம் பெரும் . என்று எண்ணலாம் .!

ஆனால் அப்படி செய்ய இயலாது

தமிழகம் தான் மிக அருகில் உள்ளது . மற்றும் விலை குறைவாக பொருள் வழங்கும் மாநிலம் .

மற்ற மாநிலங்களில் வாங்கினால் விலை வாசி உயரும் !

அன்று ஏற்படும் பொருளாதார தடை ! அந்த நாளை உருவாக்கு !

ஏற்கனவே கர்நாடகம் , 75 % வறட்சி பூமிதான் !

சமீப காலமாக கணினி தொழில் நிறுவனங்கள் வந்து தான் கர்நாடகம் பெயர் பெற்றது .
அதையும்  மாற்றி காட்டு !

ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறையும் ,ஆட்சி மாற வேண்டும் என்ற நோக்கில் கர்னாடக அரசியல் வாதிகள் , காவிரி பிரச்சனையை கையில் எடுப்பதும், இதற்காக தமிழர்களை வதைப்பதும் சரியாகாது !

இதை சொன்னால் கன்னட மக்கள் காதிலும் விழாது !

ஏன் ?

இன்றைய நிலைக்கு இங்கு வாழும் பூர்வ குடி தமிழர்கள் கூட ஏற்பதில்லை .
அவர்களும் சேர்ந்து அடிக்க தயாராக உள்ளனர் .

நாம் புரிந்து கொள்ள வேண்டும் !

யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழன் போராடுகிறான் , இந்திய தூதரகத்தின் முன்!



பிரிட்டன் தமிழன் போராடுகிறான் இந்திய தூதரகத்தின் முன் !

மலேசியாவில் பேசுகிறான் தமிழன் , எப்படி போராட்டம் இருக்க வேண்டுமென்று !

இவர்களுக்கெல்லாம் தெரிகிறது , எங்கு பேச வேண்டும் , எங்கு போராட வேண்டும் என்று !

தமிழகத்தில் மட்டும் ஏன் இன்னும் பயனில்லா போராட்டங்கள் நடக்கின்றன ?

இதுதான் இன்னும் புரியவில்லை .
நமக்கு தேவை பாதிப்பில்லா போராட்டங்கள் !
அவை பயனில்லாமல் தான் முடியும் !

குறிப்பு :

இப்பிரச்சனை குறித்து தமிழக அரசியல் வாதிகளின் கருத்துக்கள் :

தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு இழப்பீடு, கர்நாடக அரசே வழங்க வேண்டும்: மத்திய இணையமைச்சர் 
பொன்.ராதாகிருஷ்ணன்


முழு அடைப்பு போராட்டத்தால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நிரந்தர தீர்வு தரும் : 
அன்புமணி


காவேரி விவகாரத்தில் ரஜினி தலையிட வேண்டும் - 
தமிழிசை சௌந்தர்ராஜன்  


அணைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மறுக்கிறார் தமிழக முதல்வர் . ஏன் என்பதுதான் புரியவில்லை ?
மு.க.ஸ்டாலின்

1983 ல் எதிர் கட்சி தலைவராக இருந்த போது , இது போன்ற பிரச்சனையில் நானே நேரடியாக தலையிட்டு , தண்ணீர் வழங்க கர்நாடகாவிடம் கேட்டேன் .
கலைஞர் கருணாநிதி

நடிகையாக இருந்த காலத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்தேன் . அதில் என்னை தமிழச்சி என்று குறிப்பிட்டதால் , கன்னட காரர்கள் வந்து மிரட்டினார்கள் . அப்போதும் நான் என்னை தமிழச்சி என்றே கூறி கொண்டேன்.
ஜெயலலிதா சார்பாக விகடன்


எல்லாம் பழைய கதை .
பயனில்லா கதை .
போராடு
என்ன விதைத்தாயோ அது தான் முளைக்கும் !
விதை சொத்தையாக இருக்க கூடாது
வீரிய விதைகளை விதை !
அது
முளைக்கட்டும் !
தமிழன் பெயர் சொல்லி
மரமாகி தழைக்கட்டும் !


தகப்பன் இல்லா பிள்ளை அல்ல தமிழ்நாடு !
தரணிக்கே
தகப்பன் போல்
வழி காட்டு ம் வெள்ளை உள்ளம் கொண்ட
உயர்வோடு
போராடு !

Thursday 4 August 2016

திராவிடம் விதைத்த விதை





"நம் நாட்டுக்கு,சமுதாயத்துக்கு,இனத் திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல 

என்பதாலும் நமக்கு அது ஒரு பொதுக் குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு 

உணர்ச்சிச்சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர,கர்நாடக, கேரள 

நாட்டு மக்களல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள்.



பின்னவர்கள் என்ன எண்ணங்கொண்டு எதிர்த்தாலும் அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு 

இருந்ததால் அதை வலியுறுத்துவதில்  எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த 

பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவையில்லை என்றாலும்,-

திரா விடன்-என்ற சொல்லை விட்டுவிட்டுத்- தமிழன்-.என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் 

பிரிக்கலாமென்றா ல் அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து (நானும் 

தமிழன்தான்) என்று கூறிக்கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.இந்த சங்கடத்திற்கு,தொல்லைக்கு 

என்ன செய்வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்."


விடுதலை 11.10.1955
பெரியார் .




பாவம் பாரதி எனும் பிராமணன் அன்று உயிரோடு இல்லை.

உ.வே.சுவாமிநாத அய்யர் அன்று உயிரோடு இல்லை.

சுப்ரமணிய அய்யர் அன்று உயிரோடு இல்லை.

தமிழ் தமிழ் என்று தமிழுக்காக வாழ்ந்து , தமிழ்நாடு மட்டுமே வாழ்வென்று வாழ்ந்த யாரும் உயிரோடு இருந்த வரை திராவிட காட்சிகள் உருவாக வில்லை.

திராவிடர்களே தமிழர்கள் இல்லை எனும் பட்சத்தில் , பிராமணர்கள் தமிழரா இல்லையா என்ற ஆய்வு செய்து அதை வெளிப்படுத்தி இருக்கிறார் பெரியார்.

பிராமணர்கள் தன்னையும் தமிழன் என்று கூறி கொள்கிறார்கள் என்று கூறிய பெரியார் , திராவிட கட்சிகளின் தாய் கட்சியாகிய தென்னிந்தியா நல  கழகம் , தெலுங்கு பிராமணர்களுடைய கூட்டமைப்பு தான் என்பதை மறந்து போயிருப்பாரோ ?

அல்லது தெலுங்கு பிராமணர்கள் தான் தனி ஆட்சி அமைத்து விட்டார்களே ஆந்திராவில் , இனி தெலுங்கு மக்களே தமிழ்நாட்டையும் ஆள வேண்டும் என்று முடிவெடுத்து அதற்க்கு குறுக்கே இந்த தமிழ் பிராமணர்கள் வருவதை தடுக்க நினைத்தாரா ?

ராஜகோபாலாச்சாரிக்கும் , காமராஜருக்கும் தான் தெரியும் , அன்று இந்த திராவிடம் என்னவெல்லாம் சொல்லி தமிழத்தை ஆட்டுவிக்க நினைத்தது என்று !

ஆனால் காமராஜர் பதவி விலகாமல் இருந்திருக்கலாம் !

காமராஜர் , தன மந்திரி சபையில் எதிர்க்கட்சி காரர்களுக்கும் மந்திரி பதவி தராமல் இருந்திருக்கலாம் .

பக்தவச்சலம் , அண்ணாவோடு நெருங்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் எல்லாம் நடந்து விட்டது.

பிராமணனும் ஆண்டான் !

திராவிடமும் ஆண்டான்!

பலன் என்ன ?

எப்போதும் போல் தமிழ் மக்கள்

பிராமணர்கள் திராவிடர்களை குறை சொன்னாலும் ஏற்று கொண்டார்கள்.

திராவிடர்கள் பிராமணர்களை குறை சொன்னாலும் ஏற்று கொண்டார்கள்.

இறுதியில்

இவருவரும் மட்டுமே ஆளும் கட்சி , எதிர் கட்சி என்றாகி

சட்டசபையிலும்

நீங்கள் 100 க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை வைத்திருக்கிறீர்கள் என்று

ஸ்டாலின் கூறுகிறார்.

நீங்கள் 89 பொம்மைகளை வைத்திருக்கீர்கள் என்று அதிமுக அமைச்சர்

கூறுகிறார்.

இதிலே நாம் தமிழர் என்று கட்சி மக்களை குழப்பி கொண்டு , இருக்கிறது.

இதில் தமிழர்களின் நிலை தான் மிக கொடுமையாக உள்ளது.

திராவிடம் விதைத்த விதை திராவிடம் அறுவடை செய்யுமா ?


செங்கமல நாச்சியம்மன் கோவில் - தஞ்சாவூர்





தஞ்சாவூர் சிறப்புகளில் ஒன்று இந்த செங்கமல நாச்சியம்மன் கோவில் .

இது ஒரு காவல் தெய்வம் என்று தான் கூற வேண்டும் . இது யாருக்கும்

குலதெய்வம் அல்ல .


இந்த கோவிலை சுற்றி வாழும் மக்கள் யாரும் , இந்த மண்ணின்

பூர்வீக மக்கள் அல்ல.

இங்கு கல்வெட்டுக்கள் இல்லை .

பெரிதாக யாரும் இதன் பூர்வீகத்தை எழுதியதும் இல்லை.

உண்மையில் மேற்காணும்  செங்கமல நாச்சியம்மன் கோவில் புதிதாய்

கட்டப்பட்ட கோவில் . இங்கு கல்வெட்டுகள் எப்படி இருக்கும்.?


இந்த கோவில் செங்கலாட்சி அம்மன் என்றே அழைக்கப்படுகிறது  .

இதோடு சேர்த்து சியாமளா தேவி அம்மன் கோவிலும் உண்டு

இவர்கள் இருவரும் அக்கா தங்கை என்றே கூறுவர் .

இந்த இருவரும் காது கேளாதவர்கள் , வாய் பேச முடியா இரட்டையர்கள் 

என்பதை கொண்டே பொன்னியின் செல்வன் கதையிலும் , மந்தாகினி 

என்பவரையும் அவரது சகோதரி கதாபாத்திரத்தையும் 

அமைத்திருப்பார் எழுத்தாளர் கல்கி .

அந்த கதையில் வர்ணிப்பது , மதுராந்தக சோழனை ஒரு ஊமை பெண் 

வளர்கிறாள் . அதே சமயம் ராஜா ராஜா சோழனையும் சிங்கள பெண் 

ஒருத்தி காப்பாற்றுகிறாள்.

இந்த இருவரும் அக்கா தங்கை . அவர்கள்தான் சிங்களாட்சி மற்றும் 

சாமளா தேவி என்று மறைமுகமாக தெரிவிக்கிறது அந்த கதை . 

வேறு சில கதைகளும் இதற்க்கு சொல்கிறார்கள் .

அக்கா தங்கை இருவரும் சிங்கள மன்னன் ஒருவரையே திருமணம்

செய்து கொண்டு வாழ்ந்து வரும் பொழுது  , சோழ மன்னனை காண

சென்ற அவர்களது கணவன் மீண்டு வரவில்லை . ஆகையால் இந்த இரு

பெண்களும் இங்கேயே சமாதி ஆகினர் . என்றும்

தன கணவனுடன் வந்த சிங்கள  பெண்கள் இருவரும் , இந்த மண்ணில் 

வாழ்வதே தங்களுக்கு விருப்பம் என்று கூறி மீண்டும் இந்த மண்ணை 

விட்டு வரமாட்டோம் என்று கூறியதாகவும் , அதன் நிமித்தம் அவர்கள் 

விரும்பிய படியே உரல் சத்தமும் , உலக்கை சத்தமும் கேட்காத இடத்தில் 

அவர்களது கணவனோடு அவர்கள் வாழ்ந்து அங்கேயே சமாதி 

அடைந்தனர் என்றும்  கதைகள் உண்டு .

இந்த கதைகள் எப்படி இருந்தாலும் ,

இந்த கோவில் 20 ஏக்கர் பரப்பளவுள்ள காட்டிற்குள் இருந்ததால் இது காட்டு கோவில் என்றே அழைக்கப்படுகிறது .

தற்போது உள்ள குந்தவை நாச்சியார் கல்லூரி  தான் அந்த இடம் . 1960 களில் இங்கு ஒரு கல்லூரி எழுப்ப வேண்டும் என்று அரசு முடிவு எடுத்ததன் விளைவாக இந்த சாமதி கோவில் ஒரு ஓரமாக ஒதுங்கிவிட்டது . அது வரையிலும் எடுத்து கட்டவேண்டிய அவசியம் இல்லாத சூழலில் , அதன் பின்னர் சிறுசிறு வேலைகள் பார்த்து அங்கு நிறைய வேல்கள் எல்லாம் நட்டு வைக்கப்பட்டுள்ளது  .

அந்த இடத்திலும் , கல்லூரி நிர்வாகம் புதிய கட்டிடம் எழுப்ப தீர்மானித்தால் , அதற்க்கு எதிராக வழக்கு தொடர்ந்து 2000 ம் வது  ஆண்டு தீர்ப்பு கொடுத்தது தஞ்சை நீதி மன்றம். இப்போது இருக்கும் கோவில் இடத்தை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் , மேலும் விஸ்தரிக்கவோ , பெரிது படுத்தவோ கூடாது எனவும்  ஆணை பிறப்பித்தது .

இந்த கோவில்தான் காட்டு கோவில் . இன்றும் இங்கு தான் இரவு பூஜைகள் வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதம் 2 ம் செவ்வாய் கிழமை நடக்கிறது .
5 நாள் திருவிழாவாக இந்த கோவில் விழா கொண்டாடப்படுகிறது .

இந்த கோவிலில் வழிபாடு நடத்துபவர்கள் , இன்று வடக்கு பூக்கார தெரு மற்றும் தெற்கு பூக்கார தெரு என்று வழங்கப்படும் இடத்தில் வாழும் அம்பலக்கார்கள் .
இந்த பகுதி முன்பு அம்பலகார தெரு என்றே வழங்கப்பட்டது .

அந்த தெருவிலும் ஒரு கோவில் உள்ளது . அது தான் பிறந்த இடம் என்றும் , இந்த காட்டு கோவில் கணவனோடு வாழ வந்த இடம் என்றும் கூறுவர் .
அந்த கோவிலும் 1960 வரையிலும் மிகவும் பழைய நிலையில் இருந்து அப்போது M .L .A வாக இருந்த திரு பரிசுத்த நாடார் அவர்களால் , மேற்கூரை அமைக்க பட்ட , தற்போது தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதா அவர்களின் உதவியோடு கோவிலாக கட்டப்பட்டு கொண்டு இருக்கிறது. துர்முகி  ஆண்டு ஐப்பசி மாதம் 1 ம் தேதி  அன்று
 குபாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

மேலும் இந்த அம்பலகார்களின் குலதெய்வம் கருப்பு சாமியின் கோவில்தான் அந்த காடு . மிகப்பெரிய ஆலமரத்தின் கீழ் இருந்த கருப்ப சாமி கோவில்தான் , இன்றைய E .B இடம் . இப்போது இங்கு மாலை வேளைகளில் , வாகன ஓட்டும்  பயிற்சிகளும் , கிரிக்கெட் விளையாட்டும் நடக்கிறது . ஆனால் இன்றும் ஆடி மாதம் 3 வது வெள்ளிக்கிழமை இங்கு பூஜை நடைபெறுகிறது.

இங்குள்ள கோவில்கள் , பெரிதாக வெளியில் தெரியாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
1. ஜாதி பிரச்னை
2. கல்வி அறிவில்லா மக்கள் ( தற்போது இந்த நிலை மாறி உள்ளது )
3. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள்
4. ஆங்கிலேயர்கள் காலத்தில் , உணவுக்கு வழி இன்றி , இந்த காட்டில் மறைந்து பலரும் , இவ்வழியாக செல்லும் வண்டிகளில் திருடும் வழக்கம் கொண்டிருந்தனர் என்றும் கூறுவர் .
5. இந்த கோவிலில் வழிபடும் மக்கள் , முற்காலத்தில் போர்வீர்களாக இருந்தவர்கள் .
( இவர்களை அடிப்படையாக கொண்டே பூக்கார தெருவிற்கு அருகில் இருப்பது லாயம் என்று பெயர் பெற்றது )
மன்னராட்சி முடிந்து , வெள்ளையர்கள் ஆள தொடங்கிய போது , அவர்கள் ஒடுக்க நினைத்த ஒரு இனம் போர்வீரர்கள் இனம் .
எங்கெல்லாம் , யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களை எல்லாம் குற்றவாளி ஆக்கினார்.
மேலும் மேலும் குற்றவாளி என்று பெயர் சூட்டப்பட்டு ஒரு கட்டத்தில் இந்த கோவில் , மற்றும் இதனை வழிபடும் மக்களும்  ஒதுக்கப்பட்டனர் .
6. இங்கிருந்து மண்ணெடுத்து , புதிதாக ஒரு கோவில் கட்டப்பட்டது. அந்த கோவிலை மட்டும் தான் அனைத்து மக்களும் வழிபடுகின்றனர்.
(இந்த புதிய கோவிலுக்கு வண்டிக்கார தெரு கோவில் என்று பெயர். அங்கிருக்கும் மக்கள் தான் இதனை ஆரம்ப காலங்களில்  சிரத்தையோடு விழா எடுத்து வழிபாடு நடத்தினர் .)
7. இங்கு சிலைகள் கிடையாது.
8. இது சமாதி கோவில்.
9.ஒரு காலத்தில் பாம்புகள் அதிகம் இருந்தது . இன்று இல்லை .
10. இரவு பூஜை பலராலும் பயமுறுத்தப்பட்டது .
11. இங்கு அர்ச்சகர்கள் கிடையாது.
12. கல்லூரி நிர்வாகம் , பெண்கள்  கல்லூரி என்பதால் , கொஞ்சம் நெருக்கடி கொடுக்கிறது .


எது எப்படி இருந்தாலும் , ஒரு கோவிலோ , ஒரு தெய்வமோ அதனை வழிபடும் மக்களின் ஜாதி , பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை நிலை இவற்றை பொறுத்தே , பெருமைக்கு உட்படுகிறது. அதற்க்கு இந்த கோவிலும் விதி விலக்கு அல்ல.

( இப்போது இந்த கோவிலை அதிகம் வழிபடுவது, குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகளே என்பது குறிப்பிடத்தக்கது )

சிங்கள நாட்சி என்பவள் அக்கா .
இவள் சாந்த சொரூபிணி .
இவள்தான் மதுராந்தகனை வளர்ந்தவள் .
புது ஆற்று ஓரம் மிகப்பெரும் பூந்தோட்டம் அமைத்து அங்கு வாழ்ந்து வந்தாள் .
இவள் ஒரு மருத்துவச்சி.
இவள் தான் செங்கலாட்சி என்று அழைக்கப்பட்டு செங்கமல நாட்சி என்று பெயர்பெற்றாள் .

சிங்கள தேவி என்பவள் தங்கை .
மிகுந்த கோவக்காரி .
அனால் யாருக்கும் துன்பம் தராதவள்.
இவள் தான் அருள்மொழி தேவனை காப்பாற்றியவள் .
இவள் தான் சியாமளா தேவி என்று பெயர் பெற்றாள் .

புது ஆற்று கரையோர மக்கள் இன்றும் செங்கலாட்சி அம்மனை மட்டுமே பிரதானமாக கொண்டு வழிபடுகிறார்கள்.

அரண்மனை சுற்றி உள்ள இடங்களில் வாழும் மக்கள் சியாமளா தேவி அம்மனை மட்டுமே பிரதானமாக கொண்டு வழிபடுகிறார்கள்.

இவ்விரு இடங்களிலும் தனி தனியே இவர்களுக்கு கோவில்கள் இருப்பதை தஞ்சையில் காணலாம்.


Monday 1 August 2016

சரபம் எனும் பறவை



சரபம் என்பது ஒரு வித்தியாசமான பறவை. தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான  உதயண குமார காவியாத்திலும், அதே கதையை கொண்ட பெருங்கதை என்னும் நூலிலும் இந்த பறவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது .

உதயணன் என்பவனின் தாய் கரு உற்றிருக்கும் போது , அவளை தூக்கி கொண்டு சென்றது ஒரு பறவை . அது காட்டிற்குள் சென்று , அவளை கீழே கிடத்தி உண்ண எத்தனிக்கும் போது , அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதை அறிந்து ,அவளை அப்படியே போட்டு விட்டு பறந்து விடுகிறது. அங்கு தான் உதயணன் பிறக்கிறான் .

ஒரு பெண்ணை அதுவும் கருவுற்ற பெண்ணை தூக்கும் அளவிற்கு வலிமை கொண்ட இந்த பறவை தான் சரபம் ஆகும் .


இதற்க்கு 2 முகங்கள் , 8 கால்கள், 32 கைகள் 
என்று குறிப்பிடப்படுகிறது . இதிலே 4 கால்கள் பறக்கும் . 4 கால்கள் நடக்கும் வகையில் இருப்பதாகவும் , ஒரு முகம் சிங்கத்தை போலவும் , மற்றொரு முகம் யானை  போலவும் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது . 

மற்றும் சில கதைகளில் யாழி போன்ற உருவம் எனவும், 8 கால்கள் கொண்ட மான் உருவம் எனவும் குறிப்பிடப்படுகிறது .

இது சிங்கத்தையும் , யானையையும் கூட கொல்லும் வலிமை உள்ளது . இதனை தமிழ் இலக்கியங்களில் சிம்புள் என குறிப்பிடுகிறார்கள் . அதாவது 8 கால் பறவை . இதை தமிழக, கர்நாடக  மற்றும் இலங்கை தமிழ் கோவில்களின் சிற்பங்களில் காணலாம் .

சரப புராணம் 

வட மொழி நூல்களில் இதே சரபம் சார்ந்த குறிப்புகளும் , அதற்கென புராணமும் உள்ளது .

அதாவது , இரணியனை கொல்வதற்காக அவதாரம் எடுத்தார் நரசிம்மர். அந்த அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிய பிறகும் , பிரகலாதனாலும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் , நரசிம்மர் மேலும் மேலும் எல்லோரையும் கொன்று குவித்து கொண்டிருக்கையில் , அனைவரும் சிவபெருமானிடம் வேண்டி கொண்டதன் பேரில் , சிவன் சரபமாக மாறி , நரசிம்மரை கொல்கிறார் . அப்போது உருவானதுதான் இந்த சரபம் எனும்  பறவை என்று
வட மொழி கதைகள் கூறுகின்றன.


சரபேஸ்வர மூர்த்தி.jpg



சரபேஸ்வரர்


இதே சமயத்தில் , அப்போது உருவான சிவனது உருவமான சரபேஸ்வரரை எப்போது எண்ணி வழிபட்டாலும் , உடல் வியாதிகள் தீரும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது . குழந்தை பேறு பெறுவர் . திருமண தடைகள் அகலும். கடன் தொல்லைகள் முற்றிலும் தீரும் .

காஞ்சிபுரம் அருகில் உள்ள லிங்கபுரத்தில் சரபேஸ்வரர் லிங்க வடிவில் உள்ளார்.

தஞ்சை மாவட்டம் , திருபுவனத்தில் கம்பகேஸ்வரர் ஆலயத்தில் சரபேஸ்வரர் சன்னதியும் உள்ளது . இந்த கோவில் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது . கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளை தொட இருக்கிறது இக்கோவில்.


உத்தர காமிக ஆகமம் , இந்த சரபேஸ்வரரை ஆகாச பைரவர் என்று கூறுகிறது . மேலும் இதன் கால்களில் ஒன்று அனைத்திருப்பது  துர்க்கை அம்மனை என்றும் , இந்த வடிவத்தின் சக்தி தேவி அரிப்ரணாசினி என்றும் கூறுகிறது .

பிரத்யங்கரா தேவி எனும் தெய்வ வடிவினை கூட சரபேஸ்வரர் வடிவம் என்ற கூறுவோரும் உளர் .

கர்நாடக அரசு சின்னம் :




இது கர்நாடக அரசின் சின்னம்.  மஞ்சள் நிறதில் சிங்கத்தின் பிடரியை கொண்ட யானை யாக நிற்பது சரபா .



இதே சின்னத்தையே மைசூர் பல்கலைக்கழகமும் பெற்றுள்ளது .

ஆக 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை சரபம் என்னும் பறவை பற்றியும் , சரபேஸ்வரர் பற்றியும் தமிழ் மக்கள்  அதிகம் தெரிந்து வைத்திருந்தனர் .

அதனாலேயே இன்றும் கர்நாடக அரசின் சின்னமாக சரபம் உள்ளது . 

உண்மையில் இப்படி ஒரு பறவை இருந்ததா இல்லையா என்பதை விட , 2000 ஆண்டுகளாக இப்படி ஒரு பறவை குறித்து நம்மிடம் விதைக்கப்பட்டிருக்கிறது என்பது வியப்புக்குரியது.

மேலும் 2 தலை 
8 கால்கள் 
32 கைகள் 
இறக்கைகள் 
என்று எண்ணிப்பார்க்கவே பிரமாண்டமாக உள்ளது . இது குறித்து தமிழனத்தின் அறிவும் , 
( ஆங்கில படங்களில் வரும் கற்பனைக்கும் விஞ்சியது )
பெருமைக்குரியதாகவே உள்ளது .


Monday 18 July 2016

மலேசியா வரலாறு - I






கிட்டத்தட்ட 40000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது மலேசியா.

மலேசியா வரலாறு , மற்றும் இந்தோனேசியா , சிங்கபோர வரலாறுகள் தெரியாமல் தமிழ் வரலாறு பேச முடியாது.

சிதறிய தமிழனத்தின் ஒரு பகுதி தான் இந்த தெற்காசிய நாடுகள்.

குமரி கண்டம் ,என்பதின் மிச்சம் இந்த நாடுகள் .

ஆனால் இது இஸ்லாமிய நாடு. எப்படி ? தமிழ் இனத்தோடு ஒப்பிட முடியம் ?

கடந்த 500 ஆண்டுகளாகத்தான் இந்நாடு இஸ்லாமிய மதத்தை தழுவ ஆரம்பித்தது .

பல்லவ கால வரலாறுகள் , மலேசியா வரலாற்றையும் சேர்த்து குறிப்பிடுகின்றன.

ஸ்வர்ண தீவு என்று வழங்கப்பட்ட மலேசியா தற்போது கோல்டன் பெனின்சுல என்று வழங்கபடுகிறது. அர்த்தம் ஒன்றுதான் . ஆங்கிலத்தில் கொஞ்சம் ஸ்டைலாக மாறி விட்டது.

2 மற்றும் 3 ம் நூற்றாண்டுகளில் லங்கா சுகா என்பவர் , கம்போடியாவுடன் சேர்த்து கதாவை ஆட்சி புரிந்துள்ளார். அந்த கால கட்டத்தில் 30 அரசுகள் மலேசியாவில் இருந்துள்ளன. அந்த மன்னர் ஆண்ட பகுதிகள் இப்போதும் , லங்காவி என்ற பெயரில் உள்ளன.

இது பௌத்தமும் , சமணமும் தலைதோங்கிய காலம் . தமிழ்நாடு, இலங்கை என்று எல்லா நாடுகளிலும் பௌத்தம் பரவியது.
மலேசியாவும் அதில் விதிவிலக்கு அல்ல .

அப்போது இருந்த முக்கிய மொழி சமஸ்கிருதம் . தமிழுடன் சமஸ்கிருதம் கலந்த ஒரு கலப்பினம் உருவாகிய காலம் அது .

அதன் பிறப்புகள் தான் கன்னடமும் , மலாய் மொழியும் !

மலாய் மொழி கன்னட மொழியின் சாயலை சுமந்து கொண்டு இருக்கிறது .

பேராக் மற்றும் பஹ்ருஸ் கங்கா நெகரா என்ற ராஜ்யத்தின் கீழ் ராஜா கன்ஜி சர்ஜுராவால் உருவாக்கப்பட்டது .

மலாக்கா , ஸ்ரீ விஜயம் என்ற நாட்டோடு இணைந்து இருந்தது .
இந்த மலாக்கா என்ற பெயர் எப்படி வந்தது என்பதை இங்குள்ளவர்கள் இப்போதும் கூறுகிறார்கள் . அமலாக்காயுர் என்ற வழங்கப்பட்டது தான் இந்த ஊர் . அமலாக்காய் என்றால் நெல்லிக்காய் என்று பொருள் . ஊர் முழுக்க நெல்லி மரங்கள் நிறைந்து இருந்ததால் , அமலாக்காயுர் என்று வழங்கப்பட்டு , பின்னர் இப்பெயர்  மலாக்கா என்று மாற்றம் பெற்றதாகவும் கூறுகிறார்கள் .

ஆம்லா என்று நெல்லிக்காய்க்கு ஹிந்தியிலும் , ஆங்கிலத்திலும் பெயர் வழங்கப்படுவது இதனால்தான் !

சுமத்ரா தீவின் கிழக்கு பகுதியாகிய மலாக்கா , ஸ்ரீ விஜய அரசின் வணிக மையமாக விளங்கியது . கி.பி.7 ம் நூற்றாண்டிற்கும் 13 ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இப்பகுதி மிகுந்த செல்வாக்கோடு ,வணிக நிலையமாகவும் , பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் இடமாகவும்  விளங்கி உள்ளது .

கி.பி.2 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் , மலேசியா மற்றும் தமிழகத்திற்கு இருந்த வணிக உறவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன .அதில் காழகம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது கடாரம் தான் என்று கூறுகிறது வரலாறு .

11 ம் நூற்றாண்டில் ராஜா ராஜா சோழன் I , மலேசியாவுடன் நட்புறவு கொண்டிருந்தார் .ஆனால் ஸ்ரீ விஜய மன்னருடன் ஏற்பட்ட மாணவருத்தத்தால்  பின்னர் ராஜேந்திர சோழன் I , கடாரத்தை கைப்பற்றினார் . இதன் பின்னர் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆண்ட சோழர்கள் மலேசியா முழுமையும் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர் .

ஆனால் சோழர்கள் இங்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை . மொழியையும் பரப்பவில்லை .


பின்னர் 14 ம் நூற்றாண்டில் நிலை மாறியது .
தமிழகத்தில் சோழர்களின் ஆட்சி மாறி , நாயக்க ஆட்சி வளர ஆரம்பித்தது .
அதன் தொடர்ச்சியாக ,( இன்றைய சிங்கப்பூர் ) தெமாசிக் யில் ஆட்சியில் இருந்த பரமேஸ்வரன் , மலாக்கா மற்றும் அதன் கீழ் இருந்த எல்லா பகுதிகளையும் தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தான் .

இவர் தான் விரும்பிய பெண்ணை மணக்க வேண்டி இஸ்லாமிய மதத்திற்கு மாறியதால் , இங்குள்ள மக்களும் பிற்காலத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் .

15 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் , மீண்டும் தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் இருந்த செட்டியார் சமூக மக்கள் , மலேசியா சென்று வணிகம் செய்ய ஆரம்பித்தனர் . அதன் விளைவாக அங்குள்ள பெண்களை மணந்து கொண்டு மலேசிய செட்டி என்று ஒரு இனம் உருவாக வழிவகுத்தனர்.

இன்றும் ஒரு சில இடங்களில் விநாயகரின் பெயர் செட்டி பிள்ளையார் என்ற பெயரில் மலேசியாவில் உள்ளது .

15 ம் நூற்றாண்டில் ஜோஹோர் உருவானது . போர்த்துகீசிய மக்களும் வணிகம் கருதி மலேசியா வில் நுழைய ஆரம்பித்தனர் .

மிக விரைவில் 16 ம் நூற்றாண்டின் மத்தியில் , ஜோஹோர் , மலாக்கா , மற்றும் புருனே ஆகியவை போர்த்துகீசியர்கள் ஆளுகைக்குள் வந்தது .
மலாக்கா கடற்கரை கோட்டைகள் இதனை பறைசாற்றுகின்றன .



இந்த காலகட்டத்தில் ஜோஹோர் மிகுந்த செல்வாக்கோடு , சக்தி வாய்ந்த இடமாக இருந்தது .

அப்போது அங்கிருந்த சுல்தான் மஹுட் கொல்லப்பட்டார் .

இதன் விளைவாக ( தற்போதைய இந்தோனேசியா ) சுலவாசி மக்கள் புர்கிஸ் கிளர்த்தெழுந்தனர் . இதன் விளைவாக , போர்த்துகீசிய மக்களிடமிருந்து மீண்ட ஜோஹோர் வார்சுஉரிமை போருக்குள் சிக்கி கொண்டது .

சுல்த்தான் மஹுட் மகன்கள் அப்துல் கேஸில் மற்றும் அப்துல் ஜலீல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களால்
அப்துல் ஜலீல் கொலை செய்யப்பட்டார் .

மீண்டும் மக்கள் போராட ஆரம்பித்து அப்துல் ஜாலிலின் மகன் அப்துல் சுலைமான் ஆட்சிக்கு வந்தார் . இவரது ஆட்சி வரலாறுகளில் மிகவும் குறிப்பிட தக்க தாக உள்ளது .

17ம் நூற்றாண்டு தொடக்கத்தில் கால் பதித்த பிரிட்டிஷ் , 1786 ல் பினாங்கு பகுதியை கைப்பற்றியது .

1819 ல் சிங்கப்பூரை கைப்பற்றினர் .

1840 , 1841 ல் புருனே , சரவாக் ஆகின பிரிட்டிஷ் ஆளுகைக்குள் வந்தது .

1860 களில் மீண்டும் தமிழர்களை , தோட்ட வேலை பார்க்கும் பொருட்டும் , வணிகம் செய்யவும் , அரசு வேலை பார்க்கவும் , செங்கல் சூளைகளில் வேலை செய்யவும் , செம்பனை மரங்கள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் , காப்பி தோட்டங்கள் வளர்க்கவும் , பாலங்கள் கட்டவும் என பல்வேறு காரணங்களுக்காக பிரிட்டிஷ் அரசு மலேசிவிற்கு அழைத்து சென்றது .

1941 ல் ஜப்பான் மலேசியா மற்றும் சிங்கப்பூரை கைப்பற்றியது .
அதன் விளைவாக ஜப்பான் ஆட்சி வந்தது . சுதந்திர போராட்டம் வலுக்க ஆரம்பித்தது .

1957 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் நாள் மலேசிய சுதந்திரம் பெற்றது .

இதற்கு இடையில் சீனர்களின் வசம் சில ஆண்டுகள் மலேசியா இருந்தது .

அதனால்தான் மலேசியா மலாய் மக்கள் தவிர்த்து , சீனர்கள் , ஜப்பானியர்கள் மற்றும் இந்தியர்கள் என்று வழங்கப்படும் தமிழர்களோடு வாழ்கிறது .

Tuesday 28 June 2016

பெண்ணியம்

பெண்ணியம்  எனும் கருத்தியல் வற்றாத ஜீவ நதி போல் எல்லா

காலங்களிலும் பேசிய , பேசுகின்ற , பேச போகிற ஒரு கருத்தாக்கம் .

காலத்திற்கு காலம் , இது மாறுபடும்.

ஆனால்

எத்தனை காலம் ஆனாலும்

ஒரு மட்டும்

மாற்றுவதே இல்லை !

அதாங்க

இந்த சட்டங்களை இயன்றுவது மட்டும்

ஆண்கள்தான்!

ஒவ்வொரு விலங்கினமும் கூட தான் என்ன செய்கிறோம் , என்ன செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு எடுக்கிறது .

ஆனால் பெண்ணுக்கு மட்டும் அப்படி ஒன்று வழங்கப்படவே இல்லை .

ஒரு ஆண் ஒரு பெண்ணை என்னவாக பார்கிறானோ அதை பொறுத்து அவளுக்கான பெண்ணிய கருத்துக்கள் வரையப்பட்டது .

வேத காலங்களில் , பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி பிரச்சனை இல்லை .

ஆனால் விச்வாமித்ரரும் , வசிஷ்டரும் , பெண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்றும் , எப்படி வாழ்தல் அவளை பத்தினி என்று உலகம் போற்றும் எனவும் கதை எழுதி இருக்கிறார்கள் .

நல்ல தெங்கால் கதை , நளாயினி கதை என பல கதைகள்  வட இந்தியாயாவில் எழுதப்பட்டன .

ஒரு படி மேலே போய் அகழிகை  கல்லாய் போன கதையும் , பரசுராமரின் தாய் தன் கணவனை தவிர்த்து வேறு ஒரு ஆணை பார்த்தாள்  என்ற ஒரே காரணத்திற்க்காக , பெற்ற மகனே அவளது தலையை வெட்டினான் என்பதும் , பெண் மீது திணிக்க பட்ட பய உணர்வுகள் .

இதுவும் பெண்ணுக்காக ஆண்கள் எழுதிய பெண்ணியம் .

ஆனால் , இக்காலம் முடிந்த பிறகு ,

இதே பெண்ணுக்கான கருத்தாக்கம் மாறுகிறது.
மகா பாரத கதையில் ,

கங்கை எனும் பெண் தன் 7 குழந்தைகளை  ஆற்றில் விடுகிறாள் .

மீனவ பெண் மாத்ரி  தன் கணவன் சாந்தனு வை மணம் புரிவதற்கு முன்பே , வேறு ஒரு முனிவர் மூலம் வியாசரை பெறுகிறாள் .

திருதுராஷ்டிரன் , மாற்றும் பாண்டுவின் தாய்மார்கள் இருவரும் , தன் கணவன் அல்லாத , கணவனின் அண்ணன் முறையில் உள்ள வியாசர்  மூலம் குழந்தை பெறுகிறாள் .

பாண்டுவின் மனைவி குந்தி , திருமணத்திற்கு முன்பே , சூரியனோடு உறவாடி கர்ணனை பெறுகிறாள்.

பாண்டுவின் மனைவிகள்  குந்தி மற்றும் மாதவி இருவரும் தன் கணவன் அல்லாத வேறு ஆண்கள் மூலம் குழந்தை பெறுகிறார்கள் . இது பாண்டுவுக்கு தெரிந்தே நடக்கிறது .

பாண்டுவின் 5 மகன்களையும் ஒரு பெண் மணக்கிறாள். அதனால் பாஞ்சாலி எனவும் பெயர் பெறுகிறாள் .

கம்சனின் தாய் , தன் கணவன் அல்லாத ஒரு ஆண் மூலம் கம்சனை பெறுகிறாள் .

தங்கள் கணவனாகிய நரகாசுரனை அழித்த , அவனது தகப்பன் முறையில் இருக்கும் கிருஷ்ணனையே 16000 பெண்களும் மணக்கிறார் . மாமனாரையே மருமகள் மணப்பது .

நரகாசுரனின் தாய் பூமாதேவி . தகப்பன் வேறு ஒருவர் . ஆனால் பூமா தேவியின் கணவன் கிருஷ்ணன் .

இதுவும் பெண்ணுக்காக ஆண்கள் எழுதிய பெண்ணிய கதைகள் .

வேத காலத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது 
மஹாபாரத காலத்தில் ஒரு பெண் , பல ஆண்கள் அங்கீகரிக்க பட்டது .

இவை எல்லாம் ஆரிய பெண்களுக்காக , ஆரிய ஆண்கள் எழுதியது .

இவை 2000 ஆண்டுகளுக்கு முன்பு , பௌத்தம் மற்றும் சமணத்தோடு சேர்ந்து தமிழகத்திற்குள் நுழைந்தது .

பெண் சுதந்திரம் இருந்த தமிழ் மண்ணில் , பெண்ணியங்கள் சற்றே தலை தூக்க ஆரம்பித்தது .

இருந்த போதிலும் , ஒரு போதும் தமிழ் பெண்கள் தன் சுதந்திரத்தை இழந்ததில்லை .

பதினெண் கீழ் கணக்கிலும் , பதினெண் மேல்கணக்கிலும் பெண்கள் எழுதிய பாடல்கள் உள்ளன .

நாயன்மார்களாக , ஆழ்வார்களாக பாடம் படித்தும் , பாடல்கள் எழுதியும் தற்சார்பு இழக்காமல் வாழ்ந்து வந்தனர் .


பாண்டியர் வம்சத்தில் மங்கையர்கரசியாரும் ,பல்லவர் குலத்தில் குந்தவியாரும் ,சோழர் வம்சத்தில் குந்தவை அம்மையாரும் , சிறப்புடன் வாழ்ந்தது வரலாறுகள் கூறுகின்றன .

எந்த நாளும் , பெண்கள் இப்படி வாழ வேண்டும் கட்டுக்கதைகள் எதுவும் எழுதப்படவில்லை . அதற்கு அவசியமும் ஏற்படவில்லை .

15 ம் நூற்றாண்டு வரை இதே நிலை இருக்க ,

நாயக்க வம்சம்

மராட்டி வம்சம்

முகலாய வம்சம்

இஸ்லாமிய படையெடுப்பு

பிரெஞ்சு படைகள்

டச்சு படைகள்

ஆங்கில அதிகாரிகள்

இப்படி ஒரு சில , வஞ்சகர்களிடம் இருந்து பெண்ணை காப்பாற்ற எண்ணி , பெண்கள் வீட்டிற்குள் முடக்க பட்டு ,

பின் பெண்ணிற்கான பெண்ணியம் தமிழகத்திலும் வந்து விட்டது .

புரியாத சில விஷயங்கள் இன்னும் நம்மோடு இருந்து கொண்டுதான் இருக்கின்றன .

இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதல் .

நாம் அதை கடந்து கொண்டு தான் இருக்கிறோம் .

ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது 35 வைது வயதில் 5 வயது சிறுமியாகிய சாரதா வை திருமணம்  புரிகிறார்.

அந்த பெண் இன்றும்  சாரதா  அம்மையார் என்று கொண்டாடப்படுகிறார்.

இதே போல் தான் பெரியார் என்று வழங்கப்படும் ராமசாமியும் செய்தார் .
ஆனால் இன்றும் தூற்றப்படுகிறார் .

இதே தவறை தான் கலைஞர் கருணாநிதியும் செய்தார். அவர் இன்றும் தேர்தலில் வெற்றி பெற்று கொண்டு தான் இருக்கிறார் . யாரும் அவரை வெறுக்க வில்லையே !

சுதந்திர போராட்ட காலத்தில்
சமுதாயத்திற்கு போதனைகள் செய்தார் அரவிந்தர்.
அவரை பற்றி கூட தெரியாத பலரும் , அன்னை அரவிந்தரை கொண்டாடுகிறார்கள் . இத்தனைக்கும் அரவிந்தர் தனது மடத்தில் அந்த ஜெர்மனியா பெண்ணிடம் தன் மரண தருவாயில் மட்டும் தான் பேசி உள்ளார்.

ராகவேந்தரை வணங்கும் இந்த உலகம் , அவர் பாதி வழியில் வாழ்க்கை எனும் பாதையில் விட்டு வந்தாரே , அவரது மனைவி அவரை பற்றி பேசுவதே இல்லை .



பெண் சுந்தந்திரம் பேசிய பாரதி தன் மனைவி பற்றி யோசிக்கவே இல்லையே !

உண்மையில்

வட இந்திய பெண் சாரதா  தேவி யை யும் , ஜெர்மானிய பெண் அன்னை அரவிந்தரையும் , வணங்கும் இந்த உலகிற்கு வணக்கத்திற்கு உரிய பாரதியின் மனைவி தெரியாமல் போனது வேதனை .





வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர் மனைவி

வ.உ.சிதம்பரம் பிள்ளை , தன் சொத்தை எல்லாம் விற்ற பிறகு , இந்த நல்லுலகம் அவரை தோற்கடித்தபின்னரும் அவருடன் தன செல்வ செழிப்பை இழந்து வாழ்ந்த அவரது மனைவி யார் கண்ணிற்கும் தெரியாமல் போவது இன்னும் வேதனை .

வேறு ஒரு பெண்ணுடன் போன கோவலனை மன்னன் தவறாக தண்டித்து விட்டான் என்றதும் , வேறு ஒரு பெண்ணுடன் போன் போது வராத கோவம் மன்னன் மீது வருகிறது கண்ணகிக்கு . இப்படித்தான் பெண்கள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசும் விரும்புவதால்தான் கண்ணகி மட்டும் நம் கண்களுக்கு தெரிகிறாள் .

எல்லாம் எழுதியது ஆண்கள் .

இதில் மறையாமல் மறைந்தது பெண்ணின் எண்ணங்கள் .

இப்போதும் அவளுக்கு என்ன வேண்டும் என்பது தெரியவில்லை .

ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை கான்னென்று கும்மியடி

என்று பாடியதும் பாரதி எனும் ஆண் தான் !

மீண்டும்

ஆணோடு போட்டி போட்டு படிக்கிறாள்
வேலைக்கு போகிறாள்
சிகரெட்டும் பிடிக்கிறாள்
மதுவும் அ ருந்துகிறாள்
திருமணத்திற்கு முன் உறவும் கொள்கிறாள்

ஆண் என்ன செய்கிறானோ

அதையே தானும் செய்கிறாள் !

இப்போதும் ஆணை துரத்தி கொண்டு ஓடுகிறாள்

அதை தவிர்த்து

தனக்கென தனி பயிற்சிகள் எதையும் அவள் தேடவில்லை !

அவள் மனம்
அவள் உடல்
அவள் அறிவு
அவள் வீரம்
அவள் பாதுகாப்பு
அவள் வாழ்க்கை

என்பது தனி உணர்வு

அதை ஒரு ஆணின் வழி தொடர வேண்டிய அவசியமில்லை !
தனக்கான பாதையை, தான் வடிக்கும் பெண் தான்

சாதனையாளர் ஆகிறாள் !
அவள் தான்
தனக்காகான
பெண்ணியத்தை
எழுதியவள் !




பெண்களே நீங்கள் எழுது ங்கள் !
உங்களுக்காக
பெண்ணியத்தை !
ஆணை துரத்தாதே !
அது ஆணின் வழி !
அது
பெண்ணிற்கு பாதுகாப்பு அல்ல !
அதே வழியில் பெண்ணும்
செல்ல வேண்டுமாயின்
ஆண் தான்
பெண்ணை
பாதுகாக்க வேண்டும் !
ஆனால் அது
இன்று
நடக்காது !
எனவே
உனக்காக நீ
எழுது உன் பாதையை !

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...