Monday 29 February 2016

தஞ்சாவூர்



தஞ்சாவூர் அப்புடின்னு சொன்ன உடனே எல்லோருக்கு என்ன தோணும்.





தஞ்சாவூர் பெரிய கோவில்

தஞ்சாவூர் விவசாய பூமி

தஞ்சாவூர் வேளாங்கண்ணி

தஞ்சாவூர் சோழர் ஆட்சி

இவையே நினைவுக்கு வரும் .

இதனை கடந்து

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

தஞ்சாவூர் ஓவியம்

தஞ்சாவூர் தட்டு

தஞ்சாவூர் சாம்பார்

நினைவுக்கு வரும் . ஆனால் இவை தஞ்சவுரின் பூர்விகங்கள் அல்ல .


தஞ்சாவூர் பற்றி நிறைய விஷயங்கள் யாரும் பேசுறதே இல்லை

ஏனோ தெரிய வில்லை . சோழர்கள் ஆட்சியுளும் ராஜா ராஜா சோழன் மட்டும்தான் இடம் பெறுகிறான். மற்ற எல்லா அடையாளங்களும் நாயக்கர்களும், மராட்டியர்களும் உருவாக்கியது .

ஒரு காலத்தில் பல்லவர்கள் ஆட்சியின் கீழ் சோழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பார்த்திபன் கனவில் கல்கி அவர்கள் குறிப்பிடுகிறார் . அதுவும் கூட உறையூர் பற்றியே சுற்றி வருகிறது .

சங்க  கால இலக்கியங்களில் தஞ்சாவூர் என்ற பெயர் இல்லை . ஆனால் தஞ்சையை சுற்றி உள்ள ஊர் பெயர்கள் அமைந்துள்ளன .

அந்த கால கட்டத்தில் தஞ்சாவூர் என்ற பெயர் சூட்டப்படவில்லை .

தஞ்சாவூர் தனித்துவம் வாய்ந்தது .

சோழர் ஆட்சிக்கு முன்பு இங்கு முத்தரையர் ஆட்சி இருந்தது .

தனஞ்சயன் எனும் மன்னரின் காலத்தில்தான் தஞ்சாவூர் , ஒரு ஊர் வடிவம் பெற்றது .

முக்கால்வாசி விவசாய பூமி . ஒருபுறம் முந்திரி காடுகள் .

பாம்புக்கும் , பூச்சிக்கும் சற்றும் குறைவில்லாத ஊர்.

image of the old city map

தஞ்சாவூர் வரைபடம்




நீர் இருக்கின்ற காலங்களில் , அதற்கு தகுந்த நஞ்சை பயிர்கள் விளையும்.

நீர் இல்லாத காலங்களில் , நீர் அதிகம் தேவைபடாத புஞ்சை பயிர்கள் விளையும் .

கிடைக்கின்ற நீருக்கு ஏற்ப விளைவை தரும் பூமி .

அங்கு எப்போது , என்ன விளையும் என்பது அங்குள்ள மக்களும் நன்கு அறிவர்.

தஞ்சை மண் பொன் விளையும் பூமி.

வேளாண் அறிவியலை விதைத்த பூமி தஞ்சாவூர் .


வணிகத்தில் சிறிதும் சளைக்காத ஊர்.

நாகபட்டினமும், அதிராம்பட்டினமும் துறைமுக நகரங்களாக விளங்கி வணிகத்தை வளர்த்துள்ளன .

இன்று எந்த வியாதி என்பதை கண்டறியவே சில பல லட்சங்களை செலவழிக்க வேண்டிய நிலையில்
மருத்துவ அறிவியலில் , அடிபடை கொடுத்த ஊர் தஞ்சாவூர் .


கலைகளிலும் சற்றும் குறைவில்லாதது .

கரகாட்டம் , நாதஸ்வரம் என கலைகளில் கொடி கட்டி பறந்த ஊர் .




இன்றைய பரதநாட்டியத்தின் தாய் சதுர் என்னும் நடனத்தின் சொந்த ஊர் .
மதுரையை சேர்ந்த ருக்மிணி தேவி அம்மையார்தான் , சதுர நடனத்தை பாரத நாட்டியமாக மாற்றியவர் .

உலகளாவிய ஒரு கலையின் தாயகம் தஞ்சாவூர் !



எல்லோரும் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் கால் வைத்தது

பிளாசி போர் , பக்சார் போர் வழியாக 1757 ல் கல்கத்தாவில் தான் என்று கூறுவார்கள் .

அனால் முதன்முதலில் அவர்கள் கால் வைத்தது தஞ்சையில் தான்.
இது இந்தியாவில் ஆங்கிலயர்கள் தடம் பதிக்க அஸ்திவாரம் .
வரலாற்று மாற்றத்தின் அடிப்படை தஞ்சாவூர் .


தமிழ்நாட்டின் அசைக்க முடியா நிலையில் இருந்த காங்கிரசை வீழ்த்த எண்ணி கருணாநிதியின் வெற்றி நிர்ணமானது இங்குதான்.
1962 ல் பரிசுத்த நாடாரை தோற்கடித்து வெற்றி கொண்டார் கருணாநிதி .
தமிழக அரசியல் மாற்றத்தின் அடிபடையும் தஞ்சாவூர்


நாளைய உலக அரசியல் மாற்றத்தின் அடிப்படையாய் அமைய போவதும் தஞ்சாவூர் தான் !


-----------------------------------------


தஞ்சவுரின் மிக பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று தஞ்சை வாழ்
ஆனந்த வள்ளி உடன் உரை தஞ்சபுரீஸ்வரர் .

தஞ்சபுரீஸ்வரருக்கு மற்றொரு பெயர் உண்டு.
குபேரபுரீஸ்வரர் .







இது குறித்து புராண கதைகள் கூறுவன :

ராவணனிடம் , தன சொத்துகள் அனைத்தையும் இழந்த அவனது மூத்த சகோதரன் குபேரன் இங்கு வந்து சிவனை வழிபட்டு , இழந்த தன சொத்துகளை மீண்டும் பெற்றான்.

எனவே இங்கு வந்து  குங்கிளியத்தில் தீபம் வைத்து வழிப ட்டால் இழந்த சொத்துக்களை மீண்டும் பெறுர் என்றும் சொத்து இல்லாதவர்கள் கூட சொத்து பெரும் வாய்ப்பை பெறுவர் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டுத்தான் குபேரனே சொத்துகளை பெற்றான் என்பதால் இந்த கோவிலின் மூலவர் குபேரபுரீஸ்வரர் என்று வழங்கபடுகிறார்.

தஞ்சம் அடைந்த வர்களை காப்பவன் என்பதால் தஞ்சபுரீஸ்வரர் என்றும் வழங்கபடுகிறார் .

இவர் பெயரால் தான் தஞ்சாவூர் என்ற பெயரும் வழங்கபடுகிறது என்றொரு கருத்தும் உள்ளது.

இக்கோவில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 4 கி.மீ தொலைவில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது.

இது 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்.

பிற்காலத்தில் நாயக்க ஆட்சின் கீழ் தஞ்சை வந்தபொழுது இக்கோவிலின் நேரெதிரில் பெருமாள் கோவிலும் எழுப்பப்பட்டுள்ளது .

இதே நாயக்கர்கள் ஆட்சியில் தான் இங்குள்ள ஆனந்தவல்லி அம்மன் ஆலயம் எழுப்ப பட்டுள்ளது.

இது தற்பொழுது கோடியம்மன் என்ற பெயரில் , தனி ஆலயமாக கோவிலின் இடது புறத்தில் கட்டப்பட்டுள்ளது.

கோடியம்மன் , தஞ்சபுரீஸ்வறரை பார்த்த வண்ணம் இருப்பாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

தஞ்சவூருக்குள் வருபவர்கள் தஞ்சபுரீஸ்வறரை வழிபட்ட பிறகுதான் , ஊருக்குள் வந்திருக்கிறார்கள் . ஆனால் இன்று இவ்வழக்கம் இல்லை.

ஆனால்  கோவிலின் பராமரிப்புகள் சற்றே சிறிய சேதங்களோடு இருந்த போதும்  ,எப்பொழுதும் போல் தஞ்சைக்குள் வருவோர் அனைவருக்கும் தஞ்சம் அளித்து கொண்டுதான் இருக்கிறார் தஞ்சபுரீஸ்வரர்.

----------------------------------------------


கர்நாடக இசையின் தந்தை என்று போற்றபடுபவர் புரந்தர தாசர்.
இவர் 1484 ல் கர்நாடகா மாநிலத்தின் சிமோக மாவட்டத்தில் பிறந்தவர்.
1564 ல் மறைந்தார் . இவர் 4 லட்சத்து 75 ஆயிரம் கீர்த்தனைகள் பாடினார் என்றும் , ஆனால் இப்போது 700 மட்டுமே உள்ளது என்றும் கூறுவார்.
கிருஷ்ணா தேவராயர் ஆட்சி காலத்தில் தான் இவரது இசை பணி நடந்துள்ளது.


இன்றும் கர்நாடக மாநிலத்தின் எந்த ஒரு கோவிலிலும் புரந்தர தாசர் மற்றம் அவரது சீடர் , (கனகபுரியின் அரசராக இருந்து பின் பக்தி மார்க்கத்திற்கு வந்த) கனக தாசரின் பாடல்களே கல்வெட்டுகளாக செதுக்கப்பட்டுள்ளன .




சங்கீத மும்மூர்த்திகள்



தியாகராஜர் - இவரும் இசை பணி  ஆற்றியவர் .1767 ல் தஞ்சையில் பிறந்த தெலுகு பிராமணர் . நாயக்கர்கள் தஞ்சையை ஆண்ட காலத்தில் , தஞ்சைக்கு வந்த தெலுங்கு மக்கள் பலர் இங்கேயே தங்கி விட்டனர். அப்படி இங்கேயே வாழ்ந்த மக்களில் தியாகராயரின் பெற்றோரும் உண்டு. 

காவேரி, குடமுருட்டி ஆறு  ,வெண்ணாறு, வெட்டாறு , அரசிலாறு  என்று 5 ஆறுகளை கொண்ட தஞ்சையில் , இந்த ஐந்து ஆறுகளும் கூடும் திருவையாற்றில் பிறந்தவர்தான் தியாகராயர்.

இவர் 1000 மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள போதும் , இவரது பஞ்ச இரத்தின கீர்த்தனைகளே பிரபலமானவை. அனைத்தும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது. இன்றும் பெப்ருவரி மாதங்களில் தியாகராஜ ஆராதனை திருவையாற்றில் நடைபெறுகிறது.

ஷ்யாமா சாஸ்திரி 

1762 - 1827 வரை வாழ்ந்தவர். இவர் திருவாரூரில் பிறந்தவர்.
இவர் தமிழ் பேசும் பிராமணர். வேங்கட சுப்ரமனியனாக இருந்து பின் பெயர் மாற்றம் பெற்றவர்.

இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் காமாட்சி அம்மனை பற்றி பல பாடல்கள் எழுதி உள்ளார். இவர் ஸ்வர ஜதிகளை கொடுத்தவர்.

இவரை பின்பற்றி அவர் மகன் சுப்ப ராய சாஸ்திரி , மற்றும் பேரன் அன்னமைய சாஸ்திரி ஆகியோரும் இசை பணியாற்றி உள்ளனர்.

முத்துச்வாமி தீட்சதர் 

1775 - 1835 வரை வாழ்ந்த திவாரூர குருகுகர் . இவரும் தமிழ் பிராமணர். இவர் தனது பாடல்களை மணிபிரவாள நடையில் எழுதிஉள்ளார். 

மணி பிராவாள நடை எனப்படுவது தமிழும் சமஸ்க்ரிதமும் இணைந்தது .
நாயக்கர்கள் ஆட்சி காலத்தில்தான் தமிழில் அதிக சம்ஸ்கிருத வார்த்தைகள் கலந்தன . அதன் வெளிபாடே மணி பிராவள நடை தமிழ்.

இவர் எழுதிய மஹா கணபதி என்ற பாடலே தற்போதும் திரு . ஜேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிக்க நாம் கேட்டு கொண்டு இருக்கிறோம்.

சங்கீதம் என்றால் இந்த மும்மூர்த்திகள் மற்றும் புரந்தரதாசர் இவர்களோடு முடிவது போல் உள்ளது .


சங்கீத உலகம் 1400 களுக்கு முன்பு இல்லாதது போலும் , நயாக்கர்கள் ஆட்சியில் தான் சங்கீதம் வளர்ச்சி பெற்றது போலும் சித்தரிக்கின்றன வரலாறுகள்.

நாயக்கர்கலால்தான் சங்கீதம் வாழ்ந்தது எனில் தஞ்சையை தவிர , வேறு எங்கும் சங்கீதம் வளர்ச்சி பெற வில்லையே .
அவர்கள் சொந்த மண்ணில் கூட சங்கீதம் வளரவில்லையே , ஏன் ?

சங்கீதத்தின் பிறப்பிடம் தஞ்சை மண்.

நாயக்கர்கள் காலத்திலும் தெலுங்கு  மொழியில் எழுதப்பட்ட பாடல்கள் மட்டும் பிரபலபடுத்த பட்டுள்ளன.

ஒருவர் கூட வா தமிழில் பாடல் எழுதவில்லை.


கி. பி 2 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  சிலப்பதிகாரம் , சங்கீதம் காவிபூம்பட்டினத்தில் விழாவாக வாழ்ந்துள்ளது என்பதற்கு சாட்சி.

இன்றுள்ள சங்கீதத்தில்  முதல் எழுத்தாக உள்ளது.

ஆனால் கண்ணகி காலத்தில் முதல் எழுத்து ம 

இவை தான் வித்தியாசம் .

சோழர்கள் காலத்திலும் கண்ணகி கால வரலாறுகள் பாடல்களாகத்தான் கற்று தரப்பட்டுள்ளன.

நாயக்கர்கள் , தெலுங்கு மற்றும் பிராமணர்களின் இசையை மட்டுமே புகழ்ந்து அவற்றை மட்டுமே வளர்த்துள்ளனர்.

ஆனால் எல்லா சங்கீத கீர்தனைகளுக்கும் அடிப்படை தஞ்சை வாழ் மக்களின் கிராமப்புற பாடல்களே !


இன்றும் எல்லா விதமான இசை கருவிகளும்  இங்கு தயாரிக்கபடுகின்றன . இதனை தயாரிப்பவர் யாரும் பிராமணரோ , தெளுங்கரோ கிடையாது .

இது இம்மண்ணுக்கே சொந்தமான கலை !

----------------------------------------------------





ஒண்ணுமே புரியலையே


காட்டில் மனிதன்  உணவிற்காக  வேட்டையாடி உண்ட போது கூட எல்லா விலங்குகளும் அதிக எண்ணிகையில் இருந்தன .
இன்னைக்கு  விலங்கு பாதுகாப்பு சட்டமெல்லாம் இருக்கு , ஆனா விலங்குகள் எண்ணிக்கை குறையுதே ?
 ஒண்ணுமே புரியலையே
வீடு நிறைய சொந்தகாரங்க இருந்தப்ப தோட்டத்துக்கு நடுவில சின்னதா வீடு கட்டி வாழந்த மக்கள் ,
இன்னைக்கு எந்த சொந்தகாரனையும் வீட்டுக்கு வரவிடுறதே இல்ல !
இப்போ போ ய் 2400 சதுர அடியிலயும் வீட்டை கட்டி அடுத்த வீட்டு காம்பௌண்டை யும் சேர்த்து கட்டி வைக்கிறன்களே !
யாரக்க இருக்கும் ? 
ஒண்ணுமே புரியலையே !




எங்க போனாலும் தமிழ் மக்கள் மொழி வெறியர்கள்னு சொல்றாங்க !
ஆனா உலகம் முழுக்க எந்த நாட்லயும் அந்த நாட்டு மொழியை கத்துக்க மாட்டேன்னு  தமிழர்கள் சொன்னதே இல்லையே !

உதாரணமாக கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு , தமிழ் , தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 5 மொழிகள் சரளமாக வரும். இங்குள்ள பாட புத்தகத்தில் கன்னடம் தான் உள்ளது .யாரும் எதிர்த்ததே இல்லை.
மலேசியாவில் உள்ள தமிழர்கள் , தமிழ், மலாய் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திறன் படைத்தவர்கள் .

தமிழ் நாட்டுக்குள்ளேயும் சரிபாதி பேருக்கு ஹிந்தியும் , ஆங்கிலமும் தெரியும்.

 தாய் மொழி பள்ளிகள் தேடி அலையும் வடுகர்களை  விடுத்து , எங்க போனாலும் அந்த ஊரின் உள்ளூர் மொழியை கற்று கொள்ளாமல் , ஹிந்தி மே ராஷ்டிர பாஷா , இது தெரியாம இந்த ஊர் மக்கள் இருக்குறாங்களே என்று அலட்டி கொண்டு , எல்லா ஊர் மக்களையும் திட்டும் இந்த உத்திர பிரதேசம் , மற்றும் உத்தர்காண்ட் மக்கள் , இவங்களையெல்லாம் விட்டுட்டு 
தமிழ் மக்களை மொழி வெறியன்னு சொல்றாங்களே ! 
 ஒண்ணுமே புரியலையே

இந்தியாவில் கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தவிர்த்து எல்லோருமே, ஹிந்துக்கள்தான் ன்னு சொன்ன , ஏன் தமிழ்நாட்டை தாண்டி யாருமே ஆடிபெருக்கும், தை பூசமும் கொண்டாடுவதே இல்லை ?


 ஒண்ணுமே புரியலையே 

அர்த்தசாஸ்திரத்தில் , ஒரு சில தவறுகளுக்கு 14 ஆண்டுகள் காட்டில் சென்று வாழ வேண்டும் என்ற சட்டம் இருந்துள்ளது .
அதே 14 ஆண்டு கால கணக்கை ராமாயணம் சொன்னது . சரி 
அதே 14 ஆண்டு கால தண்டனையை மகாபாரதமும் சொன்னது . அதுவும் சரி .
இப்பவும் ஆயுள் தண்டனை அதே 14 ஆண்டு கால தண்டனை தான ? அப்போ அம்பேதகர் சொன்ன சட்டத்தின் நிலை தான் என்ன ?
 ஒண்ணுமே புரியலையே

முதல் 10 சட்ட திருத்தங்களில் குடியரசு தலைவரின் உரிமைகள் அனைத்தும் பிரதமருக்கு மாற்றி பாராளுமன்றத்தில் வாக்குரிமை பெற்று , அனைத்து முடிவுகளும் பிரதமருக்குதான் என்று மாற்றி விட்டுள்ளார் நேரு .
அதன் பிறகு ஏகப்பட்ட சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
அப்புறம் எதுக்கு அம்பேத்கரை விட்டு சட்டம் எழுத சொன்னாங்க !
இவங்களே எழுதி இருக்கலாமே ?

 ஒண்ணுமே புரியலையே 

ஒவ்வொரு கட்சியும் , வேறொரு கட்சியில் இருந்து பிரிந்து வரும் போது கொள்கை பிடிக்கலைன்னு சொல்லித்தான் வெளியில வருது.
அப்புறம் போய் திரும்பவும் கூட்டணி வச்சிகுதே .


 ஒண்ணுமே புரியலையே


திராவிடர்கள் கட்சிதானே , மது பழக்கம் கெட்ட பழக்கம்ன்னு சொல்லி பனை மரங்களை எல்லாம் அழிசுது . அதுல பெரியார் கூட தன சொந்த பனை மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார் .
இப்போ மட்டும் எந்த டாஸ்மாக் கடையையும்
இடிக்க மாட்டேங்கிறாங்களே ?

 ஒண்ணுமே புரியலையே 


புராண கதைகளில் கூட பேய் பிசாசு கதைகளே கிடையாது . பூதம் என்று கூறுவார்கள் . அவர்கள் கொஞ்சம் மந்திரம் தெரிந்தவர்கள் என்று கூறினால் கூட நம்ப மறுக்கும் இந்த நவீன காலத்தில் தான் ,

வரிசை வரிசையா , பேய் படங்கள் வருது, அதையும் மக்கள் நம்பி பாக்குறாங்க ! அப்போ இவங்க படிச்சது பொய்யோ ? இல்ல அறிவியலே பொய்யா ?

 ஒண்ணுமே புரியலையே 

அகரம் என்ற அமைப்பின் மூலம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பேன்னு சொல்ர நடிகர் சூர்யா  பேய் படத்தில் நடித்ததின்  மூலம் பள்ளி மாணவர்களுக்கு மூட நம்பிக்கையை ஒழிக்க முயற்சி எடுத்தாரோ ?

ஒண்ணுமே புரியலையே 



தமிழ்நாட்டில் தான் ஜாதி வெறி பிடித்தவர்கள் இருந்து , கொடுமை எல்லாம் நடந்துருக்குன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா இப்பவும் தமிழ் நாட்டின் பூர்விக ஜாதி எல்லாமே தாழ்ந்த ஜாதி அட்டவணையிலேயே இருக்குதே !
அப்போ யார் நம்மை கொடுமைபடுத்தினான்களோ , அவங்கதான் இப்பவும் உயர்ந்த ஜாதி அட்டவணையில இருக்கங்களா ?

அப்புறம் இந்த மக்களாட்சி என்னதான் கிழிக்கிது ?



ஒண்ணுமே புரியலையே !


தமிழ்நாட்டின் ஜாதி கொடுமை தாங்க முடியாமதான் ஒரு சிலர் கிருஸ்தவ மதத்திற்கே மாறிட்டு வர்றாங்க லாம் . 
ஆனா உலகத்திலேயே அதிகபடியான ஜாதிகளை கொண்ட ஒரே மதம் கிறிஸ்தவம் தானாம் .!


 ஒண்ணுமே புரியலையே 

Tuesday 16 February 2016

ஆங்கிலேயனுக்கு அண்ணனும் , தம்பியும் !

தமிழனுக்கு தெரியாத  மேலாண்மையா ?
இது ஆங்கில ஆட்சிக்கு முன்பு வரை !
அதனால்தான் ஆங்கிலயர்கள் எங்கெல்லாம் காலனி ஆதிக்கம் செழுத்தினார்களோ அங்கெல்லாம் தமிழனை குடி அமர்த்தினார். அதிகபடியாக எங்கெல்லாம் மலைகளின் மீதும் , ஆறுகளின் மீதும் தடுபனைகளும் , பாலங்களும் கட்ட வேண்டி வந்ததோ அங்கெல்லாம் தமிழர்களை குடி அமர்த்தினர் .

ஆனால் இன்று அப்படி அல்ல .

மேலாண்மை மறந்து போனது .
திறமைகளை வளர்க்கும்  கல்வியை  தமிழனுக்கு போதிக்க அரசு தயார்
இல்லை .

நாயக்கர்கள் ஆட்சி காலத்திலேயே நாம் நம்முடைய பூர்விக அறிவை இழக்க ஆரம்பித்து விட்டோம் .
எதற்குமே தேவர்கள் , அசுரர்கள் , என்று கூறுகின்ற கதைகளை தவிர்த்து , உண்மையான விளக்கம் தெரியாத பிராமணர்களை ஆசிரியர் பதவியிலும் , மந்திரி பதவியிலும் அமர வைத்ததின் விளைவு எப்பொழுதும் போல் அவர்கள் அறிவாளிகள் என்று விளம்பரம் படுத்தி கொண்டார்களே தவிர , எந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை .

பிறகு மராட்டியர்கள் காலத்திலும் இது தொடர்ந்துள்ளது .

வீட்டிற்குள்ளேயே பருப்பு கீரைகளை விதைத்து பசுமையாக உண்ணும் நம் வழக்கத்தை மாற்றி , பருப்பு இறக்குமதி செய்து நம்மை பயன்படுத்த வைக்க
சாம்பாஜி கண்டறிந்த அறிய பொக்கிஷம் தான் சாம்பார் .




நம்மிடம் பசுமையாக இருந்த பருப்பை விட்டுவிட்டு , பதபடுத்தபட்ட பருப்பை பயன்படுத்த ஆரம்பித்தோம் .

அவன் மாரட்டிய மாநில பொருளாதரத்தை உயர்த்த , நம்மிடம் உலர்ந்த பருப்பை விற்றான் .
பதபடுத்தபட்ட  வெந்தயம்
பதபடுத்தபட்ட சீரகம்
பதபடுத்தபட்ட  சோம்பு
பதபடுத்தபட்ட பட்டை
பதபடுத்தபட்ட அன்னாசி பூ
பதபடுத்தபட்ட  லவங்கம்
பதபடுத்தபட்ட ஏலக்காய்

இவற்றையெல்லாம் விற்றான் .
உண்மையில் நம் வீட்டின் கொள்ளை புறத்தில் வெந்தயகீரை , சோம்பின்
கீரையாகிய சோலிய கீரை , சீரக கீரை இவையெல்லாம் விளைந்த பொழுதும் மராட்டியர்கள் விற்ற பதபடுத்தபட்ட பொருட்களையே வாங்க நிர்பந்திக்கப்பட்டு காலபோக்கில் நமக்கு இவையெல்லாம் பசுமையாக எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் போனது காலகொடுமை .

பசுமையாக ஏலக்காய் , பட்டை , லவங்கம் , மிளகு இவையெல்லாம் இன்று பலருக்கும் தெரியாமல் போனதின் விளைவு தான் கலப்படம் உருவாக காரணமாக இருந்தது .


இவர்கள் காட்டிய வழியில் தான் ஆங்கிலேயர்களும் பயணித்தார்கள் .


நம்மிடமே பஞ்சை வாங்கி , ஆடைகளாக மாற்றி நம்மிடமே அதிக விலைக்கு விற்றார்கள் .

நம்மிடமே மிளகை எடுத்து , நமக்கே அதிக விலைக்கு விற்றார்கள் .

நம்மை வைத்தே நம் மக்களையே அழித்தார்கள் .

இப்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது , ஆங்கிலயர்களுக்கு முன்பு நம்மை ஆண்ட அந்த ஆண்டிகளுக்கும் !

உடனே சுதந்திரபோர் !

இதற்கு முன்பு ஆண்ட இந்த அரசர்கள் செய்ததையே அப்படியே , ஒரு படி அதிகமாய் செய்தான் ஆங்கிலேயன் .

போராட்ட விளைவு என்று சொல்லமுடியாவிட்டாலும் நமக்கு சுதந்திரம் கிடைத்தது .

அதே வேலையை மக்காளாட்சி என்ற பெயரில் தொடர்ந்து செய்கிறார்கள் .

நம் வீட்டின் பின்னால் வாய்கால் ஓட, தெருவின் நடுவில் கிணறு இருக்க , கிராமத்தின் மத்தில் குளமும் , குட்டையும் இருக்க , ஊருக்கு வெளியில் எரிகள்  இருக்க

எதற்காக வீட்டிற்கு வீடு குழாய் நீர் !

அதன் விளைவு தான் வாய்க்கால்கள் மூடப்பட்டன .
கிணறுகள் தூர்ந்து போயின
குளங்களும் , குட்டைகளும் அசுத்தமாயின
எரிகள்  கல்லூரிகள் ஆகின .


கழிவுகளை வெளியேற்ற காடுகள் இருக்க கழிவறைக்கு பழகினோம் .

விளைவு காடுகள் அழிக்கும் போது நமக்கு கேள்வி தோன்ற வில்லை .

130 கோடி மக்கள் வாழும் நாட்டில் உரங்கள் இறக்குமதி செய்வது குறித்து நமக்கு தெரியவும் இல்லை .



நம்மிடமே போக்குவரத்திற்கு மாட்டு வண்டிகளும் , குதிரை வண்டிகளும் இருக்க

எதற்காக

அதிகம் தேவைபடாத ஊர்களுக்கு கூட போக்குவரத்து வசதி என்ற பெயரில் இயந்திர வாகனங்கள் !

போக்குவரத்து வசதிகள் என்ற பெயரில் மண் சாலைகள் , கற்களால் மூடப்பட்டது
மரங்கள் அழிக்கப்பட்டது .
நீர் மண்ணிற்குள் செல்ல வழிதெரியாமல் கடலுக்கு போனது .

மலை ஏறும் மக்களுக்கும் பஸ் வசதி .

மலைகள் உடைந்து போயின .

நீர் போக்குவரத்து உள்ள ஊரில்  பஸ் வசதி .

ஆறுகளும் ,ஏரிகள் தூர்வாராமல் மூடி போய் தண்ணீர பிரச்சனை வந்தன !

இதெல்லாம் கடந்து உழவிற்கும் டிராக்டர் என்ற அரக்கன் வந்ததால் இனி எதற்காக  இந்த காளைகள் என்ற கேள்வி வந்து பசுக்களின் கரு உருவாக்கத்திற்கு என்று வந்த அந்த பதில் தான் சினை ஊசியின் அடித்தளம் .

இதனையும் கடந்து இந்த காளைகள் இருக்க காரணமாக இருந்த ஏறுதழுவுதலும் தடை செய்ய மூல காரணம் , விலங்கினங்களின் அழிவு என்பதை  கடந்து பயனற்ற உயிரின் ஆயிட்காலம் குறைவு என்பதுதான் !

இதிலே மிக முக்கியமான சாதனை என்னவென்றால் உலகத்தின் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த இந்தியாவின் இயற்கை மருத்துவம்  மற்றும் சித்த மருத்துவம் பெரிய அளவில்  இல்லை .

மூன்றாம்  இடம் பெற்ற சாமுவேல் ஹானிமன் என்பவரால் கண்டறியப்பட்ட சீனா மருத்துவம் அக்குபஞ்சர் மருத்துவம் கூட சொல்லி கொள்ளும் அளவிற்கு  இல்லை

நான்காம் இடத்தில் ஹிப்போகிரடிஸ் கண்டறிந்த ஆங்கில மருத்துவம் நம்மிடமிருந்து  காசை வாரி கொட்டி கொண்டிருக்க  காரணம் என்ன  ?

இந்த ஆங்கில மருத்துவத்தால் , மூலிகைகள் நமக்கு தெரியவில்லை .
நாமே அவற்றில் பல மரங்களை அழித்திருக்கிறோம் .
காரணம் புரியாமல் !


நாயக்கர்களை தொடர்ந்து மராட்டியர்கள் பாதையை ஆங்கிலேயர்கள் பின்பற்றினர் .
பிறகு  ஆங்கிலேயன் பின்பற்றிய பாதையை அரசு பின்பற்றியது .
ஆனால் தற்போது எல்லாம் நாமே முடிவெடுக்கிறோம் .
நிறைய படித்து விட்டோம் இல்லையா ?


எங்கோ நீர் கிடைக்காத ஊரில் பாட்டில் நீர் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக நாமும் அவற்றை பயன்படுத்துவது  !

எங்கோ உணவு கிடைக்காத இடத்தில் டப்பாவில் அடைத்த உணவை உண்டால் நாமும் அப்படியே செய்ய நினைப்பது  .

நம்மிடம் போதுமான நெசவாளர்களும் , தேவையான அளவு ஆடைகளும் இருக்க , எதற்காக இன்று திருப்பூர் போன்ற நூற்பாலை நகரங்கள்  நொந்து நூலாகி கொண்டு இருக்க வேண்டும் .

நம்மூரில் நல்ல மீன்கள் கிடைக்க அடுத்த ஊர் மீனுக்கு ஆசைப்பட்டதன் விளைவு தான் நமக்கு தெரிகிறதா ?

நம் ஊரில் மீன் விவசாயம் குறைந்து போனது . இது கூட பரவா இல்லை . வேற ஊர் மீன்களும் நல்ல நிலையில் யாருக்கும் கிடைப்பதில்லை .

இந்த மீன்கள் விஷயத்தில் நம் மக்கள் ஒரு படி மேல போய் சால்மான் மீன்கள் தான் நாங்கெல்லாம் சாப்பிடுவோம் என்று கூறும்போது சிரிப்புதான் வருகிறது சால்மான் மீன்கள் கரடிகளின் உணவு .  பனி கரடிகள் ஆறு மாத காலங்கள் வரை இந்த மீன்களை  உண்டு விட்டு , அடுத்த ஆறு மாதத்திற்கு குகையை விட்டு வெளியே வராது . அந்த அளவிற்கு கொழுப்பு சத்தை கொடுக்க வல்லது சல்மான் மீன்கள் .
salmon fish க்கான பட முடிவு






இவற்றை மனிதன் உண்ணக்கூடாது . அந்த அளவிற்கு செரிமானம் ஆகாது .
அதன் கொழுப்பு மனிதனுக்கு கேடு தரும் .

இந்த கோழி உணவுகள் இப்போது சரியான முறையில் இல்லை என்பதால் பலரும் காடை உணவிற்கு மாறி இருக்கிறார்கள் .

தயவு செய்து கடின உழைப்பு இல்லாதவர்கள் காடை கோழியோ , காடை முட்டையோ அதிகம் சேர்க்காதீர்கள் .
இது மலை ஏறும் மக்கள் உண்ணும் உணவு . 5 காடை முட்டைகளை உண்டு விட்டு மலை ஏறி திரும்பும் வரை பசி எடுக்காது என்று கூறுகிறார்கள் மலை ஏறும் மக்கள் .

ஒன்று மட்டும் உண்மை . நம்மிடம் உள்ளவற்றை பயன்படுத்தவேண்டும் .

நம்மிடம் ஒரு பொருள் இருக்க , அடுத்தவர் கூறுகிறார் என்பதற்காக , அடுத்தவர் செய்கிறார் என்பற்காக செய்தால் , அதன் விளை வு நம்மிடம் இருக்கும் பொக்கிஷத்தை நாம் இழக்க நேரிடும் .

பயன் இல்லாத எந்த ஒரு உயிரினமும் , இந்த பூமியில் நிலைபதில்லை .
பயன்படுத்தாமல் விட்ட மண்ணும் நம்மிடம் இல்லை .
பயன்படுத்தாமல் விட்ட மலையும் நம்மிடம் இல்லை .
பயன்படாமல் போனால் நாம் கூட நாளை இல்லை !

தற்சார்போடு வாழ போதிய அளவிற்கு மட்டும் வீடு கட்டுவோம் !
காய்கள் பயிரிட பழகுவோம் .
நீர் வரத்தை பெருக்க வழிசெய்வோம்
சூரிய ஒளி சக்தியை பயன்படுத்துவோம் !
பிறரை சாராமல் வாழ வழி செய்வோம் !
நம் அடுத்த தலைமுறை பதபடுத்தாத
பசுமையான உணவை உண்ணட்டுமே !


Monday 15 February 2016

வேளாண்மை அறிவோம் - நம்மாழ்வார்


சமீபகாலமாக ஏகப்பட்ட குளறுபடிகள்.
விவசாயிகளை முன்வைத்து ,
அவர்களின் அறியாமையை பயன்படுத்தி ,
நாட்டை சூறையாடும் திட்டங்கள்.
அரசும் அறியாமையால் செய்கிறது என்று வைத்து கொண்டால் கூட அறிவியலில் நாம் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல .
வேளாண் விஞ்ஞானம் என்பது படிப்பறிவில்லாத பாமரனும் அறிந்ததே !
இருந்தும் துணிந்து தவறுகள் நடகிறது என்றால் , நம் படிப்பறிவு எங்கோ ,தவறு செய்திருக்கிறது என்று அர்த்தம் .!





விவசாயிக்கான அடையாளங்களை , அவமானபடுத்தியது முதல் அவர்களுக்கான அங்கீகாரத்தையும் கொடுக்க தவறியது  வரை !
இதன் விளைவு அவர்களுக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையை பயன்படுத்தி கொண்ட அன்னியர்கள் .அவர்களுக்கு கைகூலியாக வேலை பார்த்த அரசும் , அரசு ஊழியர்களும் கிட்டதட்ட வேளாண்மை என்பது அழிந்தால் பரவாஇல்லை என்று கூறும் இடத்திற்கு வந்து விட்டார்கள் .

இதிலிருந்து விடுபட இன்று பற்பல இயக்கங்கள் உருவாகி , மீண்டும் வேளாண்மை வழிசெல்ல , நமக்கு துணை புரிய தயாராய் இருக்கின்றன .

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக  இருந்து வழிகாட்டிய திரு.நம்மாழ்வார் அவர்கள் வேளாண்மை குறித்து கூறிய கருத்துகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன .

வேளாண்மை செய்யாவிட்டாலும் வேளாண்மை குறித்த அறிவை பெற வேண்டிய அவசியத்திற்கு இன்று வந்துவிட்டோம் .

பயிர்களின் வகைகள் :

பாரம்பரிய வேளாண்மை பிரிவுகள்

குறுவை , சம்பா , மற்றும் தாளடி பயிர்கள் .

தாளடி பயிர்கள் ஒரு ஆள் உயரத்திற்கு வளர கூடியது .

90 நாள் பாரம்பரிய ரகங்கள் கருங்குறுவை , செங்குறுவை

60 நாள் பயிர் அறுபதாம் குறுவை

நீண்ட நாள் பயிர் கிச்சடி சம்பா,, சீரகசம்பா

கடல் நீர் சேரும் கடற்கரை பகுதியில் விளைவன : குழியடிச்சான் , குடைவாழை

நீர் குறைந்த பகுதிக்கு ஏற்றது வாடன்சம்பா , மாப்பிள்ளை சம்பா, புழுதி விரட்டி , ஒசக்குதாளை

நெய்வேலி காட்டாமணக்கை வெட்டி வாழை மட்டையில் போட்டால் எந்த உரமும் இல்லாமல் பயிர் விளையும்.


வேளாண்மையின் முக்கிய தருணங்கள் :


புதுக்கோட்டை மாவட்டம் வீரபட்டியில் சக்திகணபதி என்பவர்  வயிலில் மீன் வளர்கிறார் .  வயலில் மீன் வளர்த்தால் , மீனின் கழிவுகள் , உரமாகவும் , மீன்கள் அங்குள்ள பூச்சிகள் உண்பதால் அது சிறந்த பூச்சி கொல்லியாகவும் பயன்படும் .
அதே நேரம் மீன் விவசாயம் சிறந்த பலன் தரும் .

இந்திய வேளாண்மை மிக சிறந்த வேளாண்மை முறை  என்று  பாராட்டிய ஆங்கிலேயர்
ஜான் அகஸ்டஸ் வோல்கர்
மற்றொருவர் ஆல்பர்ட் ஒவார்ட்

இன்று அந்த சிறந்த வேளாண்மையைதான் தான் தேடி கொண்டிருக்கிறோம் .

---------------தொடர்வோம் 

Thursday 11 February 2016

டாய்லெட்

டாய்லெட்  - இது பற்றி பேசுறது கொஞ்சம் அசிங்கம்னு நினைக்கலாம் .
ஆனால்
அடிப்படை தேவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவது 
உணவு , உடை , உறையுள் எனப்படும் தங்கும் இடம் .
இது தவிர அடுத்த கட்ட தேவை செல்வசெழிப்பான வாழ்கை . அதாவது கார் , வீடு என்று வசதியாக வாழ்வது . 
மூன்றாம் கட்ட அடிப்படை தேவை ஸ்டேடஸ் எனப்படும் சமுதாய அந்தஸ்து .
இதன் அடிப்படையில் தான் இன்று உலகமே உணவு தேவை முடிந்தவுடன் பணம் பணம் என்று அழைந்து கொண்டு இருக்கிறது .

ஆனால் உண்மையில் அடிப்படை தேவை என இறைவன் நமக்கு தெரிவிக்கும் தேவைகள் வேறு .
1. உணவு 
2.கழிவு வெளியேறுவது . ( சிறுநீர் , மலம் , மாதவிடாய் காலம் )
3.உடல் உறவு 

இவ்வளவு தான் இறைவன் நமக்கு தந்த தேவைகள் .

இதை கடந்து மனிதன் விலங்குகளிடமிருந்தும் , குளிர் மழை இவற்றில் இருந்து பாதுகாக்கவும் ஆடைகளையும் , தங்கும் இடங்களையும் அமைத்து கொண்டான் .

இதனை கடந்து ஒரு மனிதனுக்கு வேறு என்ன வேண்டும் ?

ஆனால் இந்த  உணவு பிரச்னைக்கு பிறகு பேசப்படும் பிரச்சனைகளே வேறு .

உடல் உறவு என்பது ஒழுங்கு கட்டுப்பாடுகளுக்குள் வரவேண்டியது . அது மற்றொரு விதமாதாய் அணுக வேண்டியது .

ஆனால் கழிவு வெளியேற்றுவது குறித்து பேச இந்தியாவில் ஆளே இல்லை என்றுதான் கூற வேண்டும் .







யாரும் இதைஒரு பொருட்டாக கொள்வதில்லை .
ஏன் என்று புரியவில்லை?

அப்படி என்ன பாவம் கண்டது இந்த சமுதாயம் !

எந்த அரசும் , இது குறித்து பெரிதாக எடுத்து கொளவதில்லை .

ஒரு சில இடங்களில் இது எதோ பெண் சம்பந்தப்பட்ட பிரச்சனை போல் பேசபடுகிறது .

சாதாரண பள்ளிகளில் கழிவறை என்பதே இல்லை . இருந்தாலும் யாரும் சுத்தம் செய்வதில்லை 
தனியார் பள்ளிகளில் இருக்கின்ற கழிவறைகள் பற்றி மாணவர்கள் பெரிதாக பேசிகொள்வதில்லை . அது அவமானம் என கருதுகின்றனர் .

ஒரு KG பள்ளிகளில் சிறு குழந்தைகளுக்காக வைக்கப்படும் கழிவறை நன்றாக இருந்தாலும் ,தொடர்ந்து 2 நாட்கள் ஒரு குழந்தை பள்ளி கழிவறையை பயன்படுத்தி விட்டால் அதுத்த நாள் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்குகிறது நிர்வாகம்.
காலையில் எழுந்தவுடன் வெந்நீர் கொடுங்கள் வீட்டிலேயே கழிவு வெளியேற்றும் பழக்கத்தை கொண்டுவாருங்கள் . அது ஒன்றுதான் நல்ல பழக்கம் என்று கூறி பெற்றோரை அவமதிக்கிறது பள்ளிகள் .

வயதுக்கு வந்த பெண்களின் நிலையோ இன்னும் கேவலம் . கதவு இருப்பதில்லை . நீர் வருவதில்லை . கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு இது குறித்து எந்த அக்கறையும் இல்லை . காசுக்காக வேலை பார்பவர்கள் தானே .!
சமூக அக்கறை எங்கிருந்து வரபோகிறது . பெண்கள் ஆண் ஆசிரியரிடம் பேசுவதில்லை . பெண் ஆசிரியர்கள் முற்றிலும் வேஸ்ட் !
பல ஆசிரியர்கள் , அந்த வேலைக்கு தகுதி என்பதே இல்லாதவர்கள் .

ஆண்கள் நிலையும் விதிவிலக்கு அல்ல. கழிவறை இல்லாத நிலையில் சாலையோரங்களை பயன்படுத்தி கெட்டபெயரையும் சேர்த்து எடுக்க வேண்டியுள்ளது .

பள்ளிகள் நிலையோ கேவலம் என்றால் , கண்டிப்பாக கழிவறை இருக்க வேண்டிய மற்றொரு இடம் மருத்துவ மனை .

எல்லா மருத்துவமனைகளிலும் கழிவறை உள்ளது . ஆனால் எங்கு இருக்கிறது என்று பத்து பேரிடமாவது விசாரிக்கும் அளவிற்கு மருத்துவமனையின் எதோ ஒரு மூலையில் உள்ளது . அத்தனை அசிங்கமான விஷயமா என்ன ?

ரத்தபரிசோதனை நிலையங்களில் ஒரு பெண் நோயாளி கழிவறை எங்கு இருக்கிறது என்று கேட்க வெட்க பட வேண்டி உள்ளது . 

மிகபெரிய ஷாப்பிங் மால்களில் கூட 4 மாடிக்கு செல்லுங்கள் .என்று கூறும்போது அங்கு பொய் சேரவே 10நிமிடங்கள் ஆகும் நிலை ! இதற்க்கு முக்கித்துவம் கொடுத்திருந்தால் ஒவ்வொரு மாடிக்கும் ஒரு கழிவறையாவது வைத்திருப்பார்கள் .

கோவில்கள் நிலை சொல்லவே வேண்டாம் . இதற்கு இந்து கிறிஸ்தவன் என்ற வேறுபாடெல்லாம் இல்லை .  எல்லா கோவில்களிலும் , ஒரு குழந்தைக்காகவோ , வயது முதிர்ந்தவர்களுக்காகவோ கழிவறை தேடினால் , அரை மணி நேரம் நடந்தால் , அங்கும் ஒரு மூலையில் எதோ கொலை குற்றங்கள் நடக்கும் இடம் போல்  உள்ளது கழிவறைகள்  .

வெறும் வார்த்தைகளால் சொல்லி விடலாம் , உடல் கழிவையும் , உள்ள கழிவையும் வெளியேற்றி விட்டுதான் கோவிலுக்குள் நுழையவே வேண்டும் என்று .!

அனால் இது எப்படி குழந்தைக்கும், முதியவர்களுக்கும் பொருந்தும் ?.

சிந்திக்க எவருக்கும் நேரம் இல்லை . பக்தியில் திளைத்து , முக்தி  அடைவது ஒன்றே நோக்கம் !.அவ்வளவு பக்திமான்கள் !

சரி , குழந்தைக்கும் , முதியவருக்கும் டையபர் போட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டாலும் , டையபர் உடலுக்கு நல்லதுதானா ?


ஹோட்டல் களில் , பெரிய ஹோட்டல்களில் கூட கை கழுவும் இடம் வரை நீர் வருகிறதா என்று சரிபார்க்கும் நிர்வாகம் கழிவறை பற்றி கவலை கொள்ள வதில்லை . எவரேனும் சத்தம் போடும் போது மீண்டும் வேலை நடக்கிறது .

நிறைய பணம் கட்டி கிளப்களில் மெம்பெர் என்றாலும் கூட அங்கும் கழிவறை மீது அக்கறை சற்று குறைவுதான் !

இவையெல்லாமே இப்படி என்றால் அரசு அலுவலகங்களில் , அரசு ஊளியர்களுக்கே  அங்கு சரியான கழிவறை இல்லை . இதிலே வந்து செல்லும் பொது மக்கள் குறித்து கவலைப்பட யாரேனும் இருப்பார்களா என்ன ?  முக்கியமாக நகராட்சி அலுவலகம் !

சினிமா தியேட்டர் , exhibition ,zoo , park  , bus stand , railway station என்று எந்த அரசு சார்ந்த , சாராத நிறுவனமும் விதிவிலக்கு அல்ல !

ஏன்  toilet போறது அப்படி ஒன்றும் குற்ற செயல் அல்ல !
எல்லாரும் அரிசிக்காக போராடியது போல் போராட கூட வேண்டாம் !
Toilet போறத கேவலம்னு நினைக்காம இருந்தா போதும் !
Toilet எங்க இருக்குன்னு கேட்ட சிரிக்காம இருந்தா போதும் !
இந்த கழிவறை புரிதல் இல்லாமல் போனதால்தான் 
பல இடங்களில் பெண் கற்பழிப்புகள் நடந்துள்ளன !
இந்த கழிவறைகள் தூய்மை இல்லாமல் போனதால்தான் 
பேய் இருக்கும் இடம் போல் மாறி 
கொலைகள் நடக்கும்  இடம் போல் மாறின !


வீதிக்கு ஒன்று , இரண்டு பள்ளிகள் !
வீதிக்கு எல்லா மதத்திற்கும் கோவில்கள் !
வீதிக்கு மருத்துவமனை !
வீதிக்கு இரண்டு மருந்தகம் !
வீதிக்கு நான்கு ஹோட்டல்கள் !
வீதிக்கு ஒரு தாங்கும் விடுதி !
வீதிக்கு ஒரு மது கடை !

வீதிக்கு ஒரு கழிவறை எங்கே ?


 .தூய்மை இந்தியா எனபடுவது மக்கள் மட்டும் குப்பைகளை , குப்பை தொட்டியில் போடும் விஷயம் அல்ல .!
வீட்டிற்க்குள் எல்லாரும் கழிவறை கட்டுங்கள் 
என்று வரும் விளம்பரங்களில் அல்ல !
வீதிக்கு ஒரு கழிவறையும் 
நான்கு வீட்டிற்கு ஒரு குப்பைதொட்டியும் வைப்பதுதான் !


செய்யுமா அரசு ? 





Tuesday 9 February 2016

நாகர்கள்






நாகர்கள் எனும் பெயரை அடிகடி நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.அனால் யாரும் இவர்கள் யார் என்று பெரிதாக கூறியதில்லை .

புராணங்களை பொறுத்தவரை

                  ராவணின் இளைய சகோதரன் நாக லோகத்தின் தலைவனாக இருந்தான் என்று ராமாயணம் கூறுகிறது .

                  மகாபாரததிலோ நாகர்கள் இருந்த இடத்தில்தான் , அவர்களை அழித்து விட்டு இந்திரப்ரஸ்தம் எனும் பாண்டவர்களுக்கான நகரம் உருவாகபடுகிறது .

                அதே கதையில்தான் பீமன் சிறுவனாக இருக்கும் பொழுது , துரியோதனன் அவனுக்கு விஷம் கொடுத்து கொன்று நதியில் வீசும் பொழுது , நாகர்களின் தலைவனால் காப்பாற்றபடுகிறான் .

               ஆனால் பிற்காலத்தில் நாகர்களை அழித்து தான் இந்திரபிரஸ்தம் கட்டபடுகிறது . ( இன்றைய டெல்லி ) இது நாகர்கள் வாழ்ந்த இடம். நாகர்களின் தலைநகரம் .

              பிறகு மகாபாரத யுத்தத்தில் , கர்ணனுக்கு நாகஸ்திரம் கொடுக்கிறான் நாகர்களின் தலைவன் .









                 கிருஷ்ணா புராணத்தில் சிறுவயதில் கிருஷ்ணன் காளியா எனும் பாம்பை வெல்கிறான் .



               கிருஷ்ணனின் அண்ணனாக வரும் பலராமன் முற்பிறவியில் ஆதிஷசன் எனும் பாம்பாக இருந்தவர் என்றும் அப்புராணம் கூறுகிறது .
           
               தேவர்களுக்கு தேவாமிர்தம் எடுக்க உதவியது வாசுகி எனும் பாம்பு.

               கார்கோடகன் எனும் பாம்பானது வானிலை அறிந்து கூறக்கூடியது என்றும் புராணங்கள் கூறுகிறது .

             
                 முடிந்தவரை பாம்புகள் வாழும் இடம்தான் பாதாள லோஹம் என்றும் நாக லோகம் என்றும் வழங்கப்பட்டுள்ளது .


இவையெல்லாம் நாகர்கள் குறித்து புராணங்கள் கூறுவன .

நாகர்கள் எனப்படுபவர்கள் புராணங்கள் கூறுவது போல் பாம்பு அல்ல.

அவர்களும் மனித இனம்தான் .

இன்றும் நமக்கே தெரியாமல் நாம் சில ஊர் பெயர்களை நாகர்களின் பெயரால்தான் அழைத்து வருகிறோம் .

நாக்பூர்
nagas க்கான பட முடிவு
நாகலாந்து - நாகர் இன பழங்குடி மக்கள்

நாகர்கோவில்

நாகபட்டினம் ( தமிழில் பட்டினம் என்றால் துறைமுகம் என்று அர்த்தம் . நாகபட்டினம் நாகர்களின் துறைமுகம் .)

நாகர்பாவி

நாகர் கிராமம் - ஹிமாச்சல பிரதேஷ் .

இந்த வூர் பெயர்களின் வழியாக நாகர்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது .

அவர்களுகென்று கடலோர நகரம் பட்டினம் என்று அழைக்கப்பட்டுள்ளது .

இன்னும் நாகலாந்து பகுதியில் நாகர் இன மக்கள் வாழ்கிறார்கள் .
nagas க்கான பட முடிவு


இலங்கையின் பலபகுதிகளிலும் , தென் இந்தியாவிலும் நாகர்கள் எனும் இன மக்கள் SC  / ST என்ற பிரிவின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள் .

வட இந்தியாவிலும் , நாகர்களுடன் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஆரிய இனம்  ஒதுக்கப்பட்ட இனமாக மாற்றப்பட்டுள்ளது .
பிராமணராகவோ , ஆரியன் என்று கூறி கொள்ளவோ தடை செய்ய பட்டுள்ளதாக வோல்கவிளிருந்து கங்கை வரை எனும் புத்தகத்தில் ராகுல் ஜி குறிப்பிடுகிறார் .

நாகர்கள் எனும் மக்கள் யார் ?

நாகர்கள் எனப்படுபவர்கள் அதீத உடல் உறுப்பு கொண்டவர்கள் .

நாகர்களுக்கு மூன்று கண்கள் , ஆறு கைகள் , மூக்கிற்கு பதிலாக யானையின் துதிக்கை , பனிரண்டு கைகள் , இரண்டு தலைகள் என இயல்பாக ஒரு மனிதனுக்கு உள்ள உறுப்புகளை விட அதிக உறுப்புகள் இருக்கும் .

இப்படிதான் நாகர்கள் குறித்து விளக்கம் தருகிறார் நாகர்களின் ரகசியம் எனும் புத்தகத்தின் ஆசிரியர் .


ஆ னால் , இந்த நாகர்கலின் தலைவன்தான் 'தக்ஷகன் 'என்பவன் எனும் கருத்தில் எந்த வித மாற்று கருத்தும் எந்த புராணமும் தரவில்லை .

தக்ஷக் என்றால் தெற்கு பகுதி என்பதும் சமஸ்கிருதமே கூறும் பொருள் .

எனில் தெற்கு பகுதியில் வாழ்ந்த மக்களின் தலைவன்தான் நாகர்களுக்கும் தலைவன் .

தெற்கு பகுதியில் யார் வாழ்ந்தார்கள் . தமிழர்கள் .

இரான் , இராக் பகுதியிலும், பாகிஸ்தானின் ஒரு பகுதியிலும் , இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும் அகழ்வாராட்சி செய்த பொழுது அங்கு 100 கணக்கான எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன .

எந்த ஒரு செயலுக்கும் எதிர்பதம் கூற வேண்டுமாயின் 'அ  ' எனும் எழுத்தை இணைத்து கூறும் வழக்கம் கொண்டவர்கள்தான் ஆரியர்கள் .

அப்படிதான் வட மேற்கு பகுதியில் வாழ்ந்தவர்களை அசுரர்கள் என்று கூறி அழித்தனர் .
அசுரர்கள் என்றால் என்ன அர்த்தம் - வீரமற்றவன் .
ஆரியர்கள் , தெய்வ பிறப்பு எனில் வீரம் இல்லாத அசுரர்களை கண்டா பயந்தார்கள் . எனில் யார் வீரம் அற்றவர்கள் ?

ராவணனா அசுரன் .?

வீரமில்லாத அசுரர்களை கொள்வதற்க்கா தெய்வமே , பிறப்பெடுத்து வந்தது .

ஆனால் அங்கு வாழ்ந்த இனம் அசுரர்கள் என கூறி அழிக்கப்பட்டுள்ளனர் .

இதே போல்தான் நாகர்கள் ,இந்தியாவின் எல்லா இடங்களிலும் வாழ்ந்த மற்றொரு தமிழ்  மரபு சார்ந்த இனம் .

இந்த இனமும் பாம்புளோடு ஒப்பீடு செய்யப்பட்டு , கொடூர இனம் போல் அடையாளம் தெரிவிக்க படுகிறது .


navalan theevu க்கான பட முடிவு



இந்தியா முழுவதும் , ஒருகாலத்தில் ,குமரி கண்டம் இருந்த காலத்தில் நாவல் மரங்கள் மட்டுமே அதிகம் . அதை கருத்தில் கொண்டே நாவலந்தீவு எனும் பெயரும் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது . இப்பகுதியில் வாழ்ந்த மக்களைத்தான் நாவலர்கள் என்று அழைக்க ஆரம்பித்து நாகர்கள் என்று உரு மாற்றம் பெற்றுள்ளது .

இந்த நாகர் இனத்திற்கு வேறு குனாதீசியங்கள் கொடுப்பதும் ,
இவர்கள் கொடுமைகார்கள் என்று கூறுவதும்
இவுலகில் இருந்து அழிக்க பட வேண்டியவர்கள் என்பதும் இன்று வரை தொடர்கிறது .

பாவம் ஒரு இனத்தை பகுதி பகுதியாக அழிக்க 4000 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது தேவர் இனத்திற்கு . இவர்கள்தான் உயர்சாதியினரா ?



Monday 8 February 2016

ஹிந்தி

இன்றைக்கு இருக்கும் ஹிந்தி , கிட்டத்தட்ட உலகின் 4 வது மிக பெரிய மொழி . மாண்டரின் எனப்படும் சீனா மொழி , ஸ்பானிஷ் மொழி , ஆங்கிலம் அந்த வரிசையில் ஹிந்திக்கு  4 வது இடம் . 1967 ல் அறிஞர் அண்ணா தமிழக முதல்வர் ஆகும் வரை தமிழக பள்ளிகளில் பாடமாக இருந்தது  ஹிந்தி. .தமிழகத்தின் மும்முனை மொழிகளாக இருந்தது  தமிழ் , ஆங்கிலம் ,மற்றும்  ஹிந்தி  1967 க்கு பிறகு இருமொழிகளாக மாற்றப்பட்டு ஹிந்தி பள்ளி பாடங்களில் இருந்து நீக்கப்பட்டது .

விளைவு ஹிந்தி ஒன்றும் தமிழ்நாட்டில் இருந்து ஒழிந்து விடவில்லை .மாறாக தாரளமாக தனியார் பள்ளிகள் தாங்கள் நடத்த தயார் என விளம்பரபடுத்தி கொள்ளை லாபம் தேடி கொள்கின்றன . சரி பாதி தமிழர்கள் தங்கள் குழந்தைகளை அங்குதான் கல்வி பயில அனுப்புகின்றனர் .ஆக தமிழ்நாட்டில் யாரும் ஹிந்தியை வெறுக்க வில்லை . எல்லா சமுதாயத்தினருக்கும் அம்மொழி சென்று சேராமல் தடுக்கப்பட்டுள்ளது .

மொழி பிரச்சாரம் சாதித்தது ஒன்றுதான் எந்த அரசு பள்ளியிலும் , தமிழை தவிர வேறு மொழி சொல்லிதரவில்லை . அரசு பள்ளிகளில் என்ன பணக்காரர்களா படிக்கிறார்கள் ?. ஏழைகளை வேறு மொழி தெரியாதவன் என்றும் , மூடன் , முட்டாள் என்றும் கூறுவதற்கு உதவியதுதான் மொழி மோகம் .

இது ஒரு புறம் இருக்கட்டும் , மற்றொரு புறம் ஹிந்தி படித்த பலரும் எதோ தான் சாதித்து விட்ட மமதைக்கு ஆளாவது இன்னும் கொடுமை .

ஹிந்தியின் எழுத்து வடிவம் தமிழ் !
ஹிந்தியின் பல்வேறு வார்த்தைகள் தமிழ் !
ஹிந்தி , சம்ஸ்கிருத வழிவந்தது என்றாலும் எல்லாம் தேவநாகிரி எழுத்தை அடிப்படையாக கொண்டது .

hindi and sanskrit க்கான பட முடிவு

தேவநாகிரியும் , கிரந்தம் , பிராமி  எழுத்தும் சம காலத்தை சார்ந்தவை . இன்னும் சொல்ல போனால் தமிழ் என்று பெயரிடபடாத காலகட்டத்தில் இருந்த எழுத்து வடிவங்கள்தான் ஹிந்தியும் , ஏன் ஆங்கிலமும் கூட !

உண்மையில் தமிழும் , தமிழை மூல மொழியாக கொண்டு வாழும் தமிழர்களும்  அறிவாளிகள் !  இல்லை அனுபவசாலிகள் !


இந்தியாவின் எந்த மூலைக்கு சென்று யாரை கேட்டாலும் , 200 ஆண்டுகள் பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமையாக இருந்தது என்றுதான் கூறுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆங்கிலயனிடம் அடிமையாக இருந்தோம் என்று கூறுவார்.

இன்று இருக்கும் பிரிட்டிஷ் மக்கள் ஒரு காலத்தில் அங்கிலன் எனும் நாட்டில் இருந்து இங்கிலாந்திற்கு குடி புகுந்தவர்கள் . அவர்கள் பேசும் மொழியின் 70 % தமிழ்தான் என நிருபிக்கப்பட்டுள்ளது . எத்தனை ஆண்டுகாலம் தமிழன் இந்த உலக மக்களோடு தொடர்பு வைத்திருந்தால் ஒருவன் , தற்போது வாழும் இடத்தை விட அவனது பூர்விகத்தையே சொல்வான் . எந்த அளவிற்கு தமிழனுக்கு பிற நாட்டு மக்களை பற்றிய அறிவு இருந்திருக்கிறது . இன்றும் ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் , நமது பேச்சு வழக்கின் மூலமாகவும் , பழக்க வழக்கத்தாலும் நம்மிடையே விதைக்கபட்டுதான் கொண்டு இருக்கின்றன .

நாம் நேரடியாகவே , அவற்றின் உண்மை விளக்கங்களை விரைவில் அறிவோம்.

அதற்கு முன்னதாக வேறு மொழிகள் என்றாலே அது நமக்கு புரியாது என்றும் , அதை நம்மால் பேசவோ , எழுதவோ முடியாது என்று நமக்குள் விதைக்கப்பட்டுள்ளது . உண்மை அதுவல்ல எல்லா மொழிக்கும் தமிழ்தான் அடிப்படை எனில் , நம்மா ல் மிக சுலபமாக பிற மொழிகளை படிக்கவும் , பேசவும் முடியும் .

கர்நாடாகாவில் பேசும் கன்னடமும் , ஆந்திராவில் பேசும் தெலுங்கும் , கேரளத்தின் மலையாளமும் மிகசுலபமாக நமக்கு புரியும் . ஆனால் தெலுங்கில் பாரசீக மொழியும் , கன்னடத்திலும் , மலையாளத்திலும் சமஸ்கிருதமும் கலந்து இருப்பதால் நமக்கு புரியாதது போல் தோன்றும் .

உண்மையில் சமஸ்கிருதம் , தமிழின் மற்றொரு வடிவம்தான் . இதோ எண் வடிவங்கள் பார்ப்போம் . சமஸ்கிருதம் , ஹிந்தி , ஆங்கிலம் மூன்றுக்கும் மூலம் தமிழ்தான் .

ஒன்று
          பிரதமை 
          ஏக் (  க் + ஏ  = கா ) இது தான் தமிழின் ஒன்று எனும் எண் வடிவம்.
          ஒன்
           
          ----------------  ஒன்று
இரண்டு
          துவிதி
          தோ
           டூ
            --------------- தோ -  தோடு ,தோள்கள் , தோல் , தோது , தோகை -இரட்டை செயல் . இரட்டை பொருள் ஒன்றாக இணைதல்

மூன்று
          திரிதி
          தீன்
          த்ரீ   
          ----------------- திரி . திரி கடுகம் , திரிதல் , திரிபு , மூன்று பொருள் இணைத்துள்ளது என்று பொருள் .
நான்கு
          சதுர்த்தி
          சார்
          போர்
           ------------------ சதுர் ஆட்டம் ( இந்த ஆட்டம் தான் தற்போது பாரத நாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .இது தமிழர்களின் ஆட்டம்.) , சதுரம் , சதுரங்கம் , .நான்கு பக்க இணைப்பு என்று பொருள்
       
ஐந்து
          பஞ்சமி
          பாஞ்ச்
          பைவ்
          -------------------- நேரடியாகவே தமிழின் ஐந்து என்பது அஞ்சு என்று மாறி பாஞ்சு என்றும் அது ஆங்கிலத்தில் பைவ் ஆகா திறந்துள்ளது .
ஆறு
          சஷ்டி
         சே
          சிக்ஸ்
           ---------------------  6 ம் தலைமுறை தாத்தாவை சேயோன் என்று அழைப்பர். அதுமட்டுமல்ல ஏதேனும் 6 செயலின் இணைப்பு நிகழும் இடங்களில் சே எனும் எழுத்தை இணைத்தே வழங்குவது வழக்கம் .
உதாரணமாக சேவல் ,- ஆறு காலத்தையும் நமக்கு தெரிவிக்கும் அறிவு கொண்டது .
ஏழு
           சப்தமி
          சாத்
          செவென்
          --------------------- செவ்வானம் எனப்படுவது வானவில் வரக்கூடிய ஏழு வண்ண நிலையில் உள்ள வானம் . ஆனால் இப்பொழுது சிகப்பான வானம் என்று மட்டுமே நடைமுறையில் உள்ளது .
எட்டு
          அஷ்டமி
          ஆட்
           எய்ட்
            ------------------- எட்டு என்னும் வார்த்தை நேரடியாக அஷ்ட் என்றும் எய்ட் என்றும் திரிபு நிலை கொண்டது .
ஒன்பது
          நவமி
          நவ்
          நயன்
          ------------------ நாவாய் எனப்படும் கப்பல் .ஒன்பது வகையான மரங்களின் ஒட்டுமொத்த இணைப்புதான் நாவாய் .
நாவல் எனப்படும் தொப்புள் நம் மரபுப்படி நம் உடலின் ஒன்பதாவது ஓட்டை .
பத்து
           தசமி
          தஸ்
         டென்
          ----------------  தை மாதம் தமிழ் மாதங்களில் பத்தாவது மாதம் .
பத்து மாதங்கள் முடிந்து குழந்தை பிறந்தவுடன் ஒரு பெண் தாய் எனும் நிலைக்கு வருகிறாள் . தை என்பதே தஸ் என்றாகி தன் என்று மாறி டென் ஆகியுள்ளது .

தமிழில் எண் வரிசை எனப்படுவது வேறு.
அந்த எண்களின் இணைப்பில் உருவாகும் பொருளுக்கு , செயலுக்கு , விளைவுக்கு கொடுக்கப்பட்ட பெயர் வேறு.
இதனால் ஒரு விளைவின் பெயரை கேட்கும் பொழுதே அது , எத்தனை காலம் எடுக்கும் என்பதையோ அல்லது எத்தனை குணம் கொண்டது என்பதையோ அறிந்து கொள்ளலாம் .

ஆனால் சமஸ்கிருதம் , ஹிந்தி இவையெல்லாம் தனக்கென தனி எண்கள் இல்லாதவை . ஒரு கூட்டு பொருளின் விளைவிற்கான பெயரையே , எண் களின் பெயராக கொண்டவை .
       

மேலும் ஹிந்தி தமிழன் reverse என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் மறுமுனையில் இருந்து திரும்பிய வார்த்தைகளையே சுமந்துள்ளது .


ஹிந்தி அறிவோம் தமிழ் வழியாக !

ஹிந்தி                                    தமிழ்                   பொருள்

ஆவ்  =  ஆ + வ்       =      வ் + ஆ = வா       =    வாருங்கள்

ஆம்  =   ஆ + ம்      =       ம் + ஆ =  மா        =      மாம்பழம்

தேரு = தே + ரு    =        ர + த  =  ரத           =      தேர்

சாறு =  சா + ரு     =       ர + ச  = ரச               =       சாறு

ரக்த  = ர + க +த     =     கு  + ரு+தி= குருதி =       ரத்தம்

ஏக்  = ஏ  + க்          =  க்  + ஏ   = கா


நேரடி தமிழ் வார்த்தைகள் :

குணம்  = குணம்

உருவம்  =  ரூப

உலகம்  =  லோக

பூமி  = பூமி


இது போன்று பற்பல சொற்கள் சமஸ்கிருதத்திலும் , அதன் பின்புலம் கொண்ட மொழிகளிலும் , ஆங்கிலத்திலும் உள்ளது .

மீண்டும் தொடர்வோம் ........


Wednesday 3 February 2016

நவீன ஆசிரியர்களும், corporate பள்ளிகளும் !

முன்னொரு காலத்தில் , இப்படித்தான் தொடங்க வேண்டும் .

ஆசிரியர்களை குரு என்று அழைத்தோம். காரணம் , அவர்  மாணவர்களுக்கு என்ன போதித்தாரோ அப்படிதான் வாழ்ந்தார் . அது ஒரு அழகிய நிலா காலம் என்றும் சொல்ல முடியாது . அப்போது ஜாதிய வேறுபாடுகள் கல்வியை அனைவருக்கும் கொடுக்க தடை விதித்தது .
ஆனால் கல்வி தரம் வாய்ந்தது .

இடைக்காலத்தில் , ஆசிரியர்கள் நடத்துவது போல் வாழ முடியா விட்டாலும் , இது நல்லது , இது கெட்டது என்பதை மட்டும் சொல்லி தந்தார்கள் . பிறகு புத்தகத்தில் உள்ளவற்றிற்கு விளக்கம் மட்டும் கொடுப்பதே ஆசிரியரின் வேலை யாகி போனது . இது மாணவர்களுக்கு ரெண்டும் கெட்டான் நிலை .


ஆனால் இன்று ஆசிரியர்கள் என்றால் ,

வாய் நிறைய லிப்ஸ்டிக் .

ப்லோடிங் புடவை 

புரிந்து கொள்ள  முடியாத இங்கிலீஷ் , அவர்களுக்கும் பாதி நேரம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரிவதில்லை .


கொஞ்சம் நேரம் டைரி எழுதனும் . இது பெத்தவங்களுக்கு அவங்க குடுக்கிற evidence 

வாரத்திற்கு ஒரு நாள் ஒரு விழா நடத்தனும் . ஆடனும்,பாடனும் .

பாடம் நடத்துறோமா , இல்லையா , இதெல்லாம் பிரச்சனையே இல்லை

எந்த பெற்றோரும் சந்தேக பட கூடாது .  இது ஒன்னு தான் அவர்களுக்கு.
 வேலை .

குருக்கள் பணத்தை விட கெளரவம் முக்கியம்னு நினைச்சாங்க !

அப்புறம் கொஞ்சம் பணத்திற்கும்,கொஞ்சம் கௌரவத்திற்கும் இடையில் போராடினாங்க !

இப்பவெல்லாம் நேரடியாவே சொல்றாங்க , இதுவும் ஒரு corporate தான் என்று !

teachers pictures க்கான பட முடிவு



சரி விட்டுவிடலாம்னு பார்த்த , இவங்க நடத்துற இங்கிலீஷ் , ரொம்ப புதுமையாதான் இருக்கு

நம்மெல்லாம் A for Apple ன்னு படிச்சோம் .

அப்போ நடத்துன இந்த அகர வரிசையானது பெயர்ச்சொல் சார்ந்தது .
அது பொருட்பெயராகவும் இருக்கும்.

அங்கு வினைபெயராகவோ  , அல்லது சினைபெயரகவோ, தொழில் பெயராகவோ  இருக்காது .

ஆனா இப்போ எந்த இலக்கணமும் இல்லை , புதுமையா நடத்துறோம் என்ற பெயரில் , A for Arm என்றும் , F for fin ,S for sap என்றும் நடத்துறாங்க !
இந்த Sap அப்புடின்ன என்ன அப்புடின்னு பார்த்த ஒரு இலையை செடியில் இருந்து பிடுங்கும் பொது சொட்டும் ஒரு சொட்டு பால் போன்ற திரவம் .
இது 4 வயது 5 வயது குழந்தை புரிந்து கொள்கிறதா என்பது போன்ற கவலையெல்லாம் corporat க்கு கிடியாதாம் .

இது கூட பரவாஇல்லை , குழந்தைகளை Ward என்று அழைக்கிறார்கள் .

காரணம் கேட்டால் வார்ட் என்றால் குழந்தை என்று அர்த்தம் . மேல் நாடுகளில் இப்படிதான் குழந்தைகளை அழைக்கும் வழக்கம் உள்ளது என்று கூறுகிறார் nursery பள்ளியின் ஆசிரியர் .

உண்மையில் வார்ட் என்றால் , ஒரு குறிப்பிட்ட இடம் என்று பொருள் . அந்த இடம் சார்ந்து அந்த பெயரை ,

வார்டு கவுன்சிலர் என்றும்

வார்ட் நோயாளி என்றும் ,

வார்ட் கைதி என்றும் அழைக்கலாம் .

மேலை நாடுகளில் , ஒரு குழந்தையை , அதன் பெற்றோர் வளர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் , சட்ட ரீதியாக , நீதி துறையின் வாயிலாக ஒருவரை நியமித்து , அவர் வழியாக கண்காணிக்க படும் குழந்தையை வார்டு என்று அழைப்பர் .

அப்படி ஒரு குழந்தை அழைக்கபடுமாயின் அக்குழந்தை , சட்டத்தின் பாதுகாப்பில் உள்ளது என்று  பொருள் . ரொம்ப கொடுமை , இப்படி ஆசிரியர்கள் அழைப்பதை பெற்றோரும் ஒப்புகொள்வது .

இதுதான் புதுமையா ?

குழந்தையை பார்த்து , நீ நன்றாக சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பாய் என்று கூறுவதை , முன்பெல்லாம் healthy ஆக இருக்கணும் என்று சொல்லி கொடுத்தார்கள் . இப்போ சொல்லி தருவது hu nk ஆக இருக்கணும் .

இந்த hunk என்பதன் பொருள் கட்டுமஸ்தான , கவர்ச்சியான ஆண் என்பது .

ஆரோக்கியமான உடலை பற்றி இப்போது பிரச்னை இல்லை
ஆசிரியர்களுக்கு .

கவர்ச்சியான ஆணாக வளர கூறுவதும் ,
சிறு சிறு விஷயங்களில் கூட சிறப்பு என்பதற்கு Exclusive என்பன போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதும் , கொஞ்சம் தவறான கல்விக்கு அடிப்படை தருகிறது .

இந்த புதுமை என்ற பெயரில் , மாற்று வார்த்தைகள் பயன்படுத்துவதை தடுக்க வழி தேடினாலும் , இது போன்ற பள்ளிகளில் படிக்க வைக்காமல் இருப்பதே நலம் என்று தோன்றுகிறது .

ஆனால் இதை பெற்றோர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும், இது பெற்றோர்களில் கௌரவத்திற்கு இழுக்கு என்றும், corporate பள்ளிகள் உறுதியாக நம்புகின்றன.

இன்றைய கல்வியானது , பெற்றோர்களின் கௌரவத்திற்கும்,

பள்ளிகளின் லாபத்திற்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகிறது .

யாருக்கும் குழந்தைகளின் கல்வி மீது அக்கறை இல்லை .

படிக்காத பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைகள் டியூஷன் அனுப்புவது கிடையாது .

ஆனால் படித்த தாய்மார்கள் அத்தனைபேரும் தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவதே இல்லை .

வெறும் சைக்கிள் மட்டுமே வைத்திருக்கும் அப்பாக்கள் கூட , தன குழந்தையை ஸ்கூல் வேனில் அனுப்பதில்லை . ஆனால் பைக் வைத்திருக்கும் எல்லா அப்பாக்களும் , ஸ்கூல் வேனில் தான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் .காரணம் ஸ்கூல் 10 km தள்ளி இருக்கிறது . பைக்கில் சென்று வருவது அப்பாவிற்கே பிடிக்க வில்லை . அதை எப்படி குழந்தையின் உடலும், மனமும் ஏற்கும் என்பதை பற்றி பெற்ற தகப்பனுக்கே அக்கறை இல்லை .

7 அல்லது 8 km தள்ளி போய் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் , உண்பதை எல்லாம் விட்டுவிட்டாலும்  சரியாக , கழிவு வெளியேற்ற முடியாத அவசரத்திற்கு தள்ள படுகிறது .

எவ்வளவு உனக்கு கஷ்டம் வந்தாலும் , அது குறித்து கவலை இல்லை , எனக்கு என்னுடைய கௌரவம்தான் முக்கியம் என்று என்னும் தாயும் , தகப்பனும் இருக்கும் வரை , corporate பள்ளிகள் லாபத்திற்காக இன்னும் பல புதுமையான பாடங்களை நடத்தி கொண்டுதான் இருக்கும் .

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...