Friday 28 September 2018

ஆன்லைன் வர்த்தகம்

இந்தியாவில் பண மதிப்பு தொடர்ந்து குறைந்து வர முக்கிய காரணம்
ஆன்லைன் வர்த்தகம் .
இந்தியாவின் பிரபலமான ஆன்லைன் வர்த்தகம் எல்லாம் ,
வெளிநாடுகளை சேர்ந்தது .
அமேசான் , ஈபே , அமெரிக்கன் ஸ்வான் போன்ற அமைப்புகள் நேரடியாக நம் பணத்தை வெளிநாட்டிற்க்கே எடுத்து செல்கின்றன .
ஏனைய ஆன்லைன் வர்த்தக அமைப்புகள் , 
வெளிநாட்டு அமைப்போடு தொடர்புடையவை தான் .




இவ்வாறாக இந்தியாவில் மட்டும் 35 க்கும் மேற்பட்ட ஆன்லைன் வர்த்தக அமைப்புகள் இயங்கி வருகின்றன .
உள்ளூர் வணிகம் வளர்ந்தால் ,நம் பணம் இங்கேயே சுழலும் .
நம் பண மதிப்பு மாறாது .
அயலாரின் வணிகம் வளர்ந்தால் ,

ஒரு நாள் இங்கு எந்த மதிப்பும் இருக்காது .



மருந்து நிறுவனங்கள்

தனியார் மருந்து நிறுவனங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் .
ஏன்னா ,
ஆன்லைன் விற்பனை பெருகுவதால் , மக்கள் நேரடியாக மருந்து வாங்கி உண்கிறார்களாம் , அவர்கள் உடல் நிலை கெட்டுவிடுமாம் .
அதனாலதான் வேலை நிறுத்தம் ..
மக்கள் மீது அவ்வளவு அக்கறை .

நம்புறமாதிரி இல்லையே என்றால் கடைசியில் சொல்கிறார்கள் , 8 லட்சம் மருந்து ஊழியர்களும் , அதன் பின்னால் 40 லட்சம் பேரும் அவர் தம் குடும்பம் என்ற முறையில் மொத்தம்  ஒரு கோடி மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்க படுகிறார்களாம் .
தமிழ்நாட்டில் , மொத்தம் 7 கோடி மக்கள் .
இதில் பத்து பேரில் ஒருவர் சர்க்கரை நோயாளி .
மொத்தம் 7  லட்சம் பேர் ,
புற்றுநோய் 3 லட்சம் பேருக்கு
இன்னும் தைராய்டு , எயிட்ஸ் என்றும்
அதில் மருத்துவமனை பிரசவம் ( இதும் இப்போது நோய் வரிசையில் உள்ளது )
இப்படி தொடர் மருந்து உண்ணும் மக்களை உருவாக்கி
அதில் வாழும் 1 கோடி மக்களுக்காக
தமிழகத்தின்  7 கோடி மக்கள் தியாகம் செய்கிறார்கள் .
இதில் குறுக்க ஆன்லைன் மருந்து வந்தால்

என்னவாகும் ?
அதான் வேலை நிறுத்தம் .



ஆழி விரல் - மோதிர விரல்

வலம் புரி ஜான் வைத்த போட்டி இது . 2001 - 2002     ல் சன்டிவியில் ,காலை நேரங்கள் இவர் கூறும் காய்கறி மருத்துவத்தில் தான் தொடங்கியது . அப்போது இவர் வைத்த மருத்துவம் சார்ந்த குறிப்பு தான் இந்த விரல் அசைக்க முடியாத நிலை .

அணைத்து விரலையும் , ஒன்றாக வைத்து இந்த ஒரு விரலை மட்டும் தூக்கி அசைக்க முயற்சித்தால் , அது அசைக்க முடியாது .









அந்த நரம்பு தான் நம் இதயத்தோடு தொடர்புடையது .இதய துடிப்பு , அதோடு தொடர்புடையது . அதனால் தான் கிறிஸ்தவ மதத்தில் மோதிரம் மாற்றும் வழக்கம் வந்தது . திருமணத்தில் இதயத்தையே மாற்றி கொள்கிறார்களாம் .
இப்போதும் விபூதி இட்டாலும் , குங்குமம் இட்டாலும் இந்த மோதிர விரலால் செய்வதே வழக்கம் . தமிழக திருமணங்களில் , மோதிர விரலால் , மணமகன் மணமகளுக்கு குங்குமம் சூட்டும் வழக்கம் உள்ளது .
மோதிர விரல் அல்ல அது .
ஆழி விரல்
ஆழி என்றால் சுழற்சி என்று பொருள் . இதயத்தில் தான் எல்லா சுழற்சியம்  நடக்கிறது . இந்த உடலின் சுழற்சி நிகழ்கிறது .

அழகான தமிழ்
அறிவியலால் நிறைந்த தமிழ் .






சட்ட பிரிவு 497

இந்திய சட்ட பிரிவு 497 நீக்கப்பட்டுள்ளது .
உடனே எல்லோரும் எதோ , திருமணமான பெண்களால் இந்த கலாசாரமே சீர் கெட போகிறது , அதற்க்கு சட்டம் வழி செய்து விட்டது என்றெல்லாம் பதிவிட்டு , உணர்வுகளை அள்ளி இறைப்பதற்கு முன்பு ,

இந்த சட்டம் 1860 போடப்பட்டது . அப்போது இந்திய என்ற நாடும் இல்லை . இது எவர் போட்ட சட்டம் , இதெப்படி , சுதந்திர இந்தியா சட்டத்தில் வந்தது என்பதும் தெரியவில்லை . இது உண்மை எனில் , அம்பேத்கார் எழுதியது எல்லாம் பிரிட்டிஷார் எழுதிய சட்டமே என்றாகும் .

இரண்டாவது , ஒரு பெண் கணவனின் சொத்து என்று அந்த சட்டத்தில் உள்ளது . இங்கு விவாகரத்து வழக்குகளே லட்ச கணக்கில் இருக்கிறது . அது பெண் உரிமை . அதே சமயம் , சமீபமாக , வடஇந்தியாவில் , ஒரு குடிகாரன் தன மனைவியை வைத்து சீட்டாடி தோற்று விட்டான் . அதற்காக தன மனைவியின் சம்மதம் இன்றி  அவளை , வெற்றி பெற்றவனோடு செல்ல கட்டாயப்படுத்திய கொடுமையும் நிகழ்ந்துள்ளது .

மூன்றாவது , இந்த தவறில் , ஆண் மட்டுமே தண்டனைக்கு உட்பட்டவனாக இருந்தான் . அந்த தண்டனை சட்டம் நீக்கப்பட்டுள்ளது .

இதில் இருவரும் உடன்பட்டு நடக்கும் தவறில் , அல்லது பெண் செய்யும் தவறில் ஆண் மட்டும் தண்டனைக்கு உரியவன் என்பதால் , பல பெரிய நிறுவனங்களில் பெண்கள் செய்யும் தவறை ஆண்கள் சுமக்கிறார்கள் .


ஆகையால் , இந்தியாவின் சட்டங்கள் , தமிழகத்திற்கு அல்ல .
புகைந்தது போதும் , எரிவதை பிடுங்கி விடுங்கள் .
மனம் தூய்மையாகவும் , குடும்பம் என்ற அமைப்பின் மீது நம்பிகை கொண்டும்
இனிய இல்லறம் எல்லோருக்கும் அமையட்டும் .



Thursday 27 September 2018

இந்திய பணமதிப்பு குறைவு

இன்று (  sep  27 , 2018 )
இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட ரூபாய் 73 நெருங்க உள்ளது .
இந்த ஆண்டு மட்டும் ரூபாய் 12 என்ற அளவில் இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது .




இதனால் , வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருள்கள் இறக்குமதி செய்து உற்பத்தி செய்ய கூடிய தொழில்கள் பெரும் அளவில் பாதிப்பு அடைந்துள்ளது . பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வருகிறது .
இதற்காக இந்திய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .
அந்த வகையில்
ஏற்கெனவே ,

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ,இந்தியாவிற்கு பணம் அனுப்பும் பொழுது , டாலராக அனுப்புங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளது .
மீண்டும் , இறக்குமதியின் அளவை முற்றிலும் குறைத்தால் தான் , இந்திய மதிப்பு உயரும் என்ற அடிப்படியில் ,
19 ஆடம்பர  பொருள்களுக்கு சுங்க வரி அதிகரிப்பு செய்துள்ளது .
கார்கள் , டயர்கள் , குளிர்சாதன பெட்டிகள் , என்று 19 பொருள்களின் வரி விகிதம் உயர்ந்துள்ளது .



இந்நிலையில் தங்கத்தின் மீதான வரி , 10 % உயர்த்த முடிவு செய்துள்ளது .
gst உடன் சேர்த்து 15 % உயரும் வாய்ப்புள்ளது .
ஒரு புறம் இறக்குமதியை குறைக்கும் முயற்சி என்றாலும் ,
மற்றொரு புறம் ஏற்றுமதி பாதிப்படையும் .
ஏற்றுமதியும் பாதிக்க படுமேயானால் , மீண்டும் பணமதிப்பு வீழ வும் வாய்ப்புள்ளது .

ஆக மொத்தம் , தங்கத்தின் விலை உயரும் போதே ,
அணைத்து பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது .

இது ஒரு தற்காலிக சிக்கல் தான் , பண மதிப்பு  சீக்கிரம் கட்டுக்குள் வந்து விடும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது .



நம்மகிட்ட கலர் கலராக நகை இருந்தாலும் , அது மதிப்பில்லாத கவரிங் நகையாக இருந்தால் என்ன பயன் ?

சரி

உண்மையில் , இறக்குமதி , ஏற்றுமதி மட்டும் தான் இந்திய பணமதிப்பை பாதிக்கிறதா ?

ஆன்லைன் வர்த்தகம் வருவதற்கு முன்பு இது தான் உண்மை .
ஆனால் இன்று இந்தியாவில் 35 க்கும் மேற்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இருக்கின்றன .
இங்கு உள்ள  ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டை சேர்ந்தவை . அல்லது இந்திய நிறுவனங்களோடு இணைப்பில் உள்ளவை .




அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தகத்தை பற்றியம் , அதன் வழியாக , அயல் நாட்டிற்கு செல்லும் பணமதிப்பு அதிகமாகி வருவது பற்றியும் அரசு  மற்றும் பொருளாதார வல்லுநர்கள் பேசுவதே இல்லை .



பெட்ரோல் , இறக்குமதி தான் காரணம் என்பது போன்ற மாயை காரணங்கள் இருந்த போதிலும் ,
ஆன்லைன் வர்த்தகத்தை பற்றி யாருமே பேசாமல் இருப்பது ,
ஆச்சரியம் தான் .

Thursday 6 September 2018

விவசாய கடன் - கார்போரேட்டுகள்

2004 ம் ஆண்டு முதல் இந்தியாவில் விவசாய கடனை திருப்பி தர இயலாமல் அல்லது விவசாயத்தில் லாபம் பெற இயலாமல் என்று கிட்டத்தட்ட 18241 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் . கடன் கிடைக்காமலும் , தொடர்ந்து விவசாயம் செய்ய இயலாமலும் கூட தற்கொலைகள் தொடர்கின்றன .

இந்த ஆண்டு 2018 ஜனவரி தொடங்கி ஜூன் வரை மட்டும் 1607 பேர் மஹாராஷ்டிராவில் தற்கொலை செய்து இருக்கிறார்கள் .
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராடி , தள்ளுபடியும் பெற்றனர் .கிட்டத்தட்ட 35 லட்சம் விவசாயிகளுக்கு 13,782 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .
மகிழ்ச்சியான செய்தி இது .

ஆனால் இந்த தள்ளுபடி , விவசாயிகளுக்கா தான் நடந்ததா ? அவர்கள் போராட்டம் தான் வெற்றி பெற்றதா ? தெரியவில்லை .
காரணம் , தகவல் அறியும் சட்டத்தின் வழியாக ரிசெர்வே வங்கி  தந்துள்ள தகவல் ஒரு குறிப்பிட்ட தகவலை  கூறுகிறது .

அதாவது 2016 ம் ஆண்டு மட்டும் வங்கிகள் 615 பேருக்கு 58 ஆயிரத்து 561 கோடி ரூபாய் விவசாய கடனாக வழங்கி உள்ளது அதாவது ஒரு வங்கி கணக்கிற்கு  95 கோடி வீதம் விவசாய கடன் வழங்கியுள்ளது ஸ்டேட் வங்கி .
அந்த 615 பேர் யார் ?


இதில் 4 % பேர் கூட விவசாயிகள் இல்லை . எல்லோரும் கார்போரேட்டுகள் . பெரிய நிறுவனங்கள் . அம்பானியும் , அதானியும் , தாங்கள் விவசாய துறையில் ஈடுபடுவதாக கூறி கடன் பெற்று உள்ளார்கள் .
இந்தியாவில் 127 விதமான பழசாறு வகைகளை உற்பத்தி செய்கிறது ரிலையன்ஸ்  நிறுவனம் . இதற்காக மஹாராஷ்ட்ரா விவசாயிகளிடம் பெருவாரியாக நிலங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன . அந்த குத்தகை நில உரிமையாளர்கள் 200 பேர் கொண்டு தான் கடனும் பெறப்படுகிறது .

இப்போது விவசாய கடன் தள்ளுபடி எல்லாம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது . பெரிய நிறுவனங்களுக்கு தான் .


இது போன்ற கடன்களை மோடி அரசு மட்டுமல்ல ,அதற்கு முன்பு இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி யம் வழங்கி இருக்கிறது .

ஆக  மொத்தம் விவசாயிகள் எப்போதும் போல , எல்லா அரசுகளாலும்  ஏமாற்றப்படுகிறார்கள் . அவர்கள் பெயர் சொல்லி பெரிய நிறுவனங்களே நாட்டை சுரண்டுகின்றன .
விவசாயிகள் , குத்தகை என்று  பெரிய நிறுவனங்களிடமோ  , அரசே பார்த்து கொள்ளட்டும் என்றோ எண்ணி யாரிடமும் நிலங்களை கொடுக்க கூடாது . இறுதியில் , யாரோ பணக்காரன் ஆக , விவசாயிகள் பலிஆகுவர் .



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...