Sunday 10 April 2016

ஜாதி வெறியும் விவசாய நிலங்களும் !





 தமிழ்நாட்டில் 10 ம் வகுப்பு தாண்டி விட்டால் , பணம் உள்ளவர்கள் மட்டும்தான் படிக்க முடியும். இந்த படிப்பு என்ற காரணத்திற்காக மட்டும் பல விவசாய நிலங்கள் விற்க படுகின்றன .

அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளே இங்கு அதிகம் . அதன் கட்டணங்கள் பகல் கொள்ளை . இதுவே நிலங்களை விற்க மூல காரணம் ஆகிறது . ஒரு விவசாயி , தன மகனுக்கு விவசாயம் சொல்லி தருவது என்ன குற்றம் கண்டது இந்த சமூகம் . 

ஆனால் , கல்வி நிறுவனங்கள் , இப்படிதான் மார்கெட் செய்தது . நீ படிக்காமல் போனால் , உருப்பட மாட்டாய் , நீ வாழ்கையை வீணடித்து கொள்வாய் என்று !

அதனை தொடர்ந்து , எதோ சேவை செய்வது போல் , முதலில் ஆரம்பித்து , பிறகு பணம் பிடுங்கி பணக்காரனாக பார்க்கிறது கல்வி நிறுவனங்கள் .

ஒருவனை ஏமாற்ற வேண்டுமாயின் அதற்கு மூன்று வழிகள் உள்ளன ;

1. அவனை பயமுறுத்த வேண்டும் 

2. அவனுக்கு ஆசை காட்ட வேண்டும் 

3. அவனை , அவன் பார்க்கும் வேலையை நாமே இழிபடுத்தி , நாமே அதற்க்கு ஆறுதல் கொடுத்து ஏமாற்ற வேண்டும் .

இவற்றை தான் சந்தையிடுதல் என்ற பெயரில் , செய்து வருகின்றனர் . 

இதிலே மூன்றாவது பார்முலவைதான் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன .

அதன் விளைவு , விவசாயம் செய்வது , படகு செய்வது , செருப்பு செய்வது , பானை செய்வது , கூரை வேய்வது , கூடை முடைவது , குளம் வெட்டுவது , கிணறு அமைப்பது ,முடி வெட்டுவது  என எல்லா பூர்வீக தொழில்களும் இழிவு படுத்த பட்டு , 

இறைவா இதில் இருந்து , எங்களை காப்பாற்ற மாட்டாயா ?

என்று மனம் நொந்து அழும் பொது , வந்து கைகொடுத்து , தலை எழுத்தை மாற்றுவதாய் கூறி பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்கள் என்ற பெயரில்  நம் நிலங்களை பறித்த அதி புத்திசாலி அமைப்புகள் தான் 

கல்வி நிறுவங்கள் !

மற்றொரு முக்கிய காரணம் வெளிநாடு செல்வோர் :

வெளி நாடு செல்வோர் எண்ணிக்கை பெருகி வருவதால் ,விவசாயம் செய்ய ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு , அதுவும் நிலங்களை விற்க காரணமாகிறது . 

ஏன் வெளி நாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .

ஒரு புறம் அவர்களுக்கு விதைக்கப்பட்ட பணத்தாசை ! 

ஆனால் இதுவல்ல முக்கிய காரணம் . 




நம் மக்கள் அனைவரும் ஜாதி வெறி பிடித்தவர்கள் அல்ல . ஆனால் ஜாதிய வெறிக்கு ஆளானார்கள் . இந்த அரும் பணியை ஒரு கூட்டம் செய்து வருகிறது . அது இப்போது வேண்டாம் .

சாதிக்கும் , நிலங்களை விற்பதற்கும் என்ன சம்பந்தம்?

விவசாய நிலங்களில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்கள் யார் தெரியுமா ?
80% பேர் பறையர் இனத்தை சேர்ந்தவர்கள்.
வா என்றால் வருவார்கள் 
போ என்றால் போவார்கள் 
நில் என்றால் நிற்பதும் 
உட்கார் என்றால் உட்காருவதும்  அவர்களுக்கு வழக்கம் . இதை அடிமை தனம் என்று கூறினாலும் , மிகுந்த விசுவாசிகள் . 

அந்த அளவிற்கு இறங்கி போகும் மக்களை பார்த்து , அவர்களை பேர் சொல்லி அழைக்காமல் , அவர்கள் ஜாதியின் பெயர் சொல்லி இழிவு படுத்துவது . அவர்களை அடிப்பது . என்று ஏகப்பட்ட தொந்தரவுகள் கொடுத்த நம் சமூகம் , இதை எல்லாம் கடந்து 

அவர்களை கொலையும் செய்தது . 

உயிர் பயம் ,எல்லோருக்கும் வருவது தானே இயல்பு !

இதன் விளைவு , இந்த சமயங்களை பயன்படுத்தி கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் , அவர்களுக்கு வேலை வாய்ப்பு நல்கியது . வெளிநாடுகளிலும் , அத்தனை பெரும் நல்ல நிலையில் இல்லை . இருந்த போதிலும் , இங்கு படும் இன்னல்களுக்கு வெளிநாட்டு துன்பம் பரவா இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் .

இதை பார்த்த , தன்னை உயர்ந்த ஜாதி என்று அலட்டி கொள்ளும் மன்குனிகளும் வெளிநாடு செல்ல , விவசாயம் படு தோல்வியில் நிற்கிறது .

உடனே கை கொடுத்தது , விஞ்ஞானம் 

விதைக்கவும் இயந்திரம் 
நாற்று நட இயந்திரம் 
கலை எடுக்க இயந்திரம் 
கதிர அறுக்க இயந்திரம் 

எல்லாவற்றிற்கும் இயந்திரம் . இதில் என்ன வேடிக்கை என்றால் , 50 தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கூலியை ஒரு இயந்திரமே தின்று தீர்கின்றது . அறுவடை செய்தே ஆக வேண்டும் . 
அதற்கு வாடகை கொடுத்து இயந்திரம் வாங்கி , அந்த வாடகை கொடுக்க கடன் வாங்கி , அந்த கடனை அடைக்க நிலத்தையும் விற்கிறார்கள் .

இதே சமயத்தில் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

jewellery shops க்கான பட முடிவு


அதே போல் பெருகி வரும் நகை கடைகளின் எண்ணிக்கை . நிலங்களில்தான் நம்மால் பலன் காண முடியவில்லை என்று என்னும் மக்களின் கவலை தீர்க்க , நகைகளாக மாற்றி வைத்து கொள்ளுங்கள், அப்போதுதான் உங்கள் மகளை நல்ல படித்த மாப்பிளைக்கு கட்டி வைக்கலாம்  என்று ஆசையும் காட்டி , அதற்காக ஏகப்பட்ட நகைக்கடைகள் , விவசாய நிலங்களை விற்க தூண்டுகின்றன .

இவற்றையெல்லாம் தடுக்க அரசு எந்த முயற்சியும் எடுக்காது .

நாமாக முன்னிறங்கி , 
விவசாயத்தை நம் பிள்ளைகளுக்கும் கற்று கொடுப்பது,
ஜாதி வெறியை விட்டோழிப்பது
ஒரு விவசாயிக்கே பெண் கொடுப்பது  
சீதனங்களை தவிர்ப்பது
என்று முடிவெடுத்தால் மட்டுமே விவசாய நிலங்களை காக்க முடியும் .

இயந்திரங்களை நம்புவதற்கு , மனிதனையும் , மாடுகளையும் மதிக்கலாமே !
நம் உணர்வுகளை இயந்திரங்களா உணர போகிறது !
அனால் சக மனிதன் உணருவான் . 
அடுத்தவரை மதித்தால் நாமும் வாழலாம் , 
நம்மால் பிறரும் வாழலாம் .
இந்த நாடும் வாழும் . 
இந்த நாடும் நம்மை வாழ்த்தும் !


கடுக்காய் எனும் தாம்பத்திய காவலன்



கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம் என்று ஒரு பழமொழி உண்டு .

கடுக்காய் சிறந்த மருத்துவ குணம் கொண்டது . 

இதற்க்கு வேறு பெயர்களும் உண்டு . அவை விஜயன் மற்றும் பிருத்துவி  ஆகும் .

கடுக்காய் பல வகைகள் உண்டு . அவை :

கருங்கடுக்காய் 

செங்கடுக்காய் 


வரி கடுக்காய் 


பால் கடுக்காய் 


இவை அனைத்தும் வெவேறு வகைகளில் , நமக்கு பயன் தருவன .

நம் உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் , நம் மன ரீதியான 

பிரச்சனைக்கும் மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா ?

மல சிக்கல் தான் . 

மல சிக்கல் ஏற்பட்டால் , மன உளைச்சல்  ஏற்படும் 

அதனால் ரத்த அழுத்தம் ஏற்படும் 

அதனால் கோபம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் .

மலசிக்கலை விட மிகபெரிய பிரச்னை தம்பதிய குறைபாடு .

இந்த தாம்பத்திய குறைபாடு , விந்தணுக்கள் குறைவதால் ஏற்படுகிறது .

இதனால்  தாம்பத்தியத்தையும் பாதிக்க படுகிறது . 

மல சிக்கல் இன்றி இருந்தாலே , நம் முடிவுகள் பெரும்பாலும் சரியான முடிவுகளாக இருக்கும் . 

தாம்பத்திய குறைபாடு இன்றி இருந்தால் வாழ்வும் நன்முறையில் இருக்கும் .

கடுக்காய் இந்த பணியை சிறப்பாக செய்கிறது .

மல சிக்கல் தீர்க்கவும் , விந்தணுக்கள் பெருகவும் என. பல வகைகளில் இதன் பயன்கள் விரிந்து செல்கின்றன .

இந்த உலகின் இயற்கை கொடுத்த அனைத்தும் பயன்பாடு கொண்டதே !
ஆனால்எப்போது  பயன்படுத்துகிறார்கள் , எப்படி பயன் படுத்துகிறார்கள் என்பது மிக முக்கியம் . இதன் அடிப்படை யிலே தான் ஒரு பொருள் விஷம் ஆவதும் , மருந்தாவதும் உள்ளது .

இதற்க்கு கடுக்காயும் விதி விலக்கல்ல !

எனவே இதை பயன்படுத்தும் விதம் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் .

சுக்குக்கு தோலில் விஷம்

கடுக்காய்க்கு கொட்டையில் விஷம் என்று  கூறுவது உண்டு .

எனவே இதன் கொட்டைகளை நீக்கி விட்டு தோல்  பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் .

எப்போது பயன்படுத்த வேண்டும் ?

காலையில் இஞ்சி தண்ணியும்

நன் பகலில் சுக்கு தண்ணியும்

மாலையில் கடுக்காய் தண்ணியும் குடிக்க , நம் வாழ்நாள் அதிகரிக்குமாம் .

( தேயிலை தீ நீருக்கு பதில் இதை அருந்துவதே சால சிறந்தது )

( கடுக்காய் பொடி எல்லா நாட்டு மருந்து கடைகள் மற்றும் இயற்கை பொருள் விற்பனை கடைகளில் கிடைகிறது )


Saturday 9 April 2016

நடிகர் சங்க கிரிகெட்










ஏப்ரல் 17 ம் தேதி 2016 அன்று சேப்பாக்கம் விளையாட்டு அரங்கத்தில் , தென்னிந்திய நடிகர் சங்கம் கிரிகெட் போட்டி நடத்தி அதன் மூலம் கிடைக்கும்  பணத்தை கொண்டு , நடிகர் சங்க கட்டிடத்தை 26 கோடி ரூபாய் செலவில் கட்ட உள்ளது .

இது குறித்து சினிமா விமர்சர்களும் , சினிமா விநியோகஸ்தர்களும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் விஷால் ரசிகர்களும் இன்னும் சில மானம் கெட்டவர்களும் , இதில் என்ன தவறு இருக்கிறது . இது உனக்கு பிடித்திருந்தால் போய் பாரு .
அடுத்தவரை பார்க்காதே என்று கூற உனக்கு உரிமை இல்லை என்று கூப்பாடு போடுகிறார்கள் .

இந்த கூப்பாடு போடுபவர்கள்தான் ,

எவர் எக்குடி கெட்டாலும் , தான் வாழ்ந்தால் போதும் என்று என்னும் சுயநலவாதிகள் .

இந்த மக்கள் தான் மதுவும் , புகையும் அவரவர் விருப்பம் , அதை தவறென்று கூற எவருக்கும் உரிமை இல்லை என்றும் முட்டாள்கள் !

மீதேன் எடுப்பதும் , தமிழ்நாட்டை சுரண்டுவதும் அவரவர் விருப்பம் என்று கூறும் அறிவு கெட்ட அடிமைகள்


மணல் கொள்ளை அடிப்பதும் , லஞ்சம் வாங்குவதும் அவரவர் விருப்பம் என்று கூறும் அடி முட்டாள்கள்

மலைகளை இடித்தால் எனக்கென்ன , மானத்தை இழந்தாலும் எனக்கென்ன என்று வாழும் நாதாரிகள் !


விவசாயி செத்தால் எனக்கென்ன , விவசாயம் அழிந்தால் எனக்கென்ன என்று வாழும் நம்பிக்கை துரோகிகள் !

சாலையில் விபத்து நடந்தால் என்ன , விபசாரமே நடந்தால் எனக்கென்ன  என்று வாழும் கூறு கெட்ட குப்பைகள் !



தமிழ்நாட்டின்  எந்த பிரச்சனைக்கும் தோள் கொடுக்க மாட்டேன் என்று கூறிய நடிகன் எனும் போர்வையில் வாழும் ,
எதிரிகளை கூட தோற்கடித்து விடலாம் .

ஆனால் நல்லவன் வேஷத்தில் திரியும் சில பல நாட்டமைகளை , முதலில் நண்பனாக இல்லை, பிச்சைகாரன் என்ற நிலையில் கூட ஏற்க கூடாது .


மேலும் எல்லா நடிகர்களும் பல கோடிகளோடுதான் வாழ்கிறார்கள் . இதை பற்றி கேட்கவும் கணக்கு பண்ணவும்  தமிழனுக்கு உரிமை உண்டு .

ஏன் என்று கேட்க இங்கு எவனுக்கு தகுதி இல்லை .

ஏன் தெரியுமா ?

தென்னிய நடிகர் சங்கத்திற்கு , தமிழ்நாட்டை 8 பாகமாக பிரித்து விளையாட எந்த உரிமையும் இல்லை .  

எல்லாம் அவங்க அவங்க விரும்பனு தான் தமிழ்நாடு முழுக்க மது கடை இருக்கு . இப்போ மது விலக்கு கேட்டு போராடும்  அவளவு பேரும் முட்டாளா ? மீதேன் என்ற ஒரு பிரச்னை இருக்கு ! இதுவும் அவரவர் விருப்பம் என்று எடுத்து கொண்டால் , நாளை தமிழ்நாடு என்ற ஒன்று இருக்காது என்று கூறும் தன்னார்வலர்களை கேலி செய்கிறீர்களா ?

உன் வீட்டுக்குள் இருக்கும் வரை தான் , அது உன்னுடைய விருப்பம். அடுத்தவரை மறைமுகமாக ஏமாற்ற முயலும் போது  அது பொது பிரச்னை .

தனிப்பட்ட லாப கணக்கிற்காக  தமிழ்நாட்டை விற்க , தமிழானாய் இருந்தால் கூட உரிமை இல்லை !


Wednesday 6 April 2016

ரிலையன்ஸ்






இந்தியாவின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்று தான் ரிலையன்ஸ் .
1940 களில் திருபாய் அம்பானி யால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் , கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து , டெக்ஸ்டைல்ஸ் துறை,தொலைதொடர்பு துறை  , பெட்ரோலிய துறை ,  என்று பல துறைகளில் கால் பதித்து , இந்தியாவின் 20% ஏற்றுமதி இந்நிறுவனத்தால் தான் என்ற நிலையை அடைந்துள்ளது .


ஆனால் இந்நிறுவனதால் இந்திய அடைந்த பலன்களின் , மற்றொரு பக்கம் உண்டு . 


இந்தியாவின் பூர்விக தொழிலில் ஒன்னு தான் கப்பல் கட்டும் தொழில் ! அதை முடக்கிவிட்டு , ஒரு கப்பல் 700 கோடி ரூபாய்க்கு இந்தியாவிற்கே விற்கும் அதி புத்திசாலி நிறுவனம்தான் ரிலையன்ஸ் !

இவங்க பெட்ரோல் விற்பனைக்காக , கொஞ்ச கொஞ்சம் இருந்த நீர்வழி பாதைகளையும் அழித்து , சில பல தொழிலாளர்கள் வயிற்றில் அடித்ததும் ரிலையன்ஸ்தான் .

தேவை இல்லாதவன் கையில் கூட செல்போன்  என்பது , அனாவசியமாக எல்லோர் கையிலும் துப்பாக்கி இருப்பதற்கு சமம் . அந்த சாதனையை செய்து , அனாவசிய மன உளைச்சலால் மக்களை படுத்தி கொண்டு இருப்பதும் இந்த ரிலையன்ஸ்தான்.

கதர் ஆடையில் , இயங்கிய இந்தியாவில் மாற்று முறை புகுத்தி , தேவைக்கு மீறி ஆடைகள் எல்லோர் வீடுகளிலும் ஒரு துணி கடை இருப்பது போல் செய்தும் , இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட  விவசாயிகளில் 75% பேர் பருத்தி விவசாயிகள் . அந்த சாதனையை புகுத்தியதும் ரிலையன்ஸ்தான் !

இன்றைய நெசவாளர்களின் வாழ்வாதாரம் பறி போனதற்கு முக்கிய காரணமும் ரிலையன்ஸ்தான் !

இந்தியாவிலேயே அதிக கடன் வைத்திருப்பதும் ரிலையன்ஸ் தான் !

ஒரு தொழில் சார்ந்த பிரச்சனைக்கு , ஒரு பாக பிரிவினைக்கு இந்திய பிரதமரே வந்தார் என்றால்  , எந்த அளவிற்கு அரசியல் வாதிகளுக்கு துணை நின்று இருக்கும் இந்த அம்பானி குரூப் !

1 லட்சம் கடன் இருந்தாலே , தன குடும்பத்தை பிரிந்து 
எதோ ஒரு நாட்டில் , 
டாயலேட் கழுவும் வேலை எல்லாம் பார்க்கும் இந்தியர்கள் வாழும் நாட்டில் தான் 106000 கோடி கடன் இருந்தும் , பல அடுக்கு மாடி கட்டி ஆனந்தமாய் வாழ்கிறது அம்பானி குரூப் !

இவங்களுக்கு பத்ம பூசன் , பத்ம விபூசன் இதெல்லாம் கொடுக்க வேண்டியது தான் இந்திய விற்கே கௌரவம் !

அப்போ சொற்ப கடனுக்காக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி  , தொழிலாளி இவங்க நிலைமை எல்லாம் ,
எந்த கௌரவ கணக்கில் சேர்ப்பது !

சொல்ல இந்தியாவில் ஆளும் இல்லை

அதை காது கொடுத்து கேட்க எந்த ஆட்சியும் இல்லை !

வாங்க எல்லோரும் சொல்லுவோம் !
பாரத் மாத கி ஜெய் !


Tuesday 5 April 2016

நாதரிகளின் நட்சத்திர கிரிகெட்

தென்னிந்திய நடிகர் சங்கம் கிரிகெட்

2016 ஏப்ரல் 17 ம் தேதி சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் கிரிகெட் விளையாட்டு போட்டி நடத்த இருக்கிறது . ஒரு அணியில் 6 பேர் என 8 அணிகள் பிரிக்க பட்டுள்ளன .

இதனை நடத்துவதற்கு முக்கிய காரணம் , நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட வேண்டும் . என்பதே ! எனவே அனைவரும் இந்த கிரிகெட் போட்டிக்கு வந்து நிதி தருவீர் என்று அழைப்பு விடுக்கிறார்  நடிகர் விஷால் .


ஆனால் மக்களின் கேள்வி இதுதான்:

ஒரு சங்க கட்டிடத்தை கட்ட அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் தான் பணம் தருவர் . ஏன் இதை தமிழக மக்களிடம் வசூல் செய்ய வேண்டும்.

இரண்டாவது , நடிகர்கள்  யாரும் ஏழைகள் அல்ல.


மூன்றாவது , தென்னிந்தியா நடிகர் சங்கம் என்றால் , தென்னிதியாவில் உள்ள கன்னட , தெலுங்கு , மலையாள நதிகளும் இதில் உள்ளடக்கம். எனில் ஏன் இதை தமிழ் நாட்டில் நடத்தி , தமிழ் மக்களிடம் நிதி திரட்ட வேண்டும் .

நான்காவது , தமிழ் நாட்டில் , தேர்தல் நடைபெறும் கால கட்டத்தில் தான் இதை நடத்த வேண்டுமா ?

ஐந்தாவது , நடிகர் சங்கம் எப்போதும் , வெளிநாடுகளில் தான் நிதி திரட்டும் . இம்முறை ஏன் இங்கேயே பிச்சை எடுக்கிறது . சாரி நிதி வசூல் செய்கிறது .

ரஜினிகாந்த் மட்டுமே கூட சில கோடிகள் கொடுக்கலாம் எனில் , 13 கோடி ரூபாய் வசூல்  என்ற இலக்கோடு நடிகர் சங்கம் கிரிகெட் நடத்த வேண்டிய அவசியம் என்ன ?

இது தான் காரணம் :


இந்த போட்டியை ஹைதராபாத்தில் வைக்கலாம்

இத போட்டியை பெங்களூரில் வைக்கலாம்

ஆனால் அப்படி செய்ய கூடாது . அங்கு போட்டி வைத்தால் அதனால் யாருக்கு என்ன பயன் ?

கேவலம் 13 கோடி என்பது நடிகர் சங்கத்தின் இலக்கு அல்ல .

தமிழக மக்களை குழப்பி , அரசியல் கருத்துகளை பகிர விடாமல் தடுப்பதே !

சென்னை வெள்ள பெருக்கின் பொது நடிகர் சிம்பு கைகொடுத்தார் .

அவரது பீப் பாடலை பேசி பேசியே தமிழகம் , சென்னை வெள்ளத்தையும் , அதனால் ஏற்பட்ட இழப்பையும் , அதன் பிறகு மத்திய அரசால் கொடுக்க பட்ட நிவாரண நிதி கணக்கையும் மறந்து போனது .


அதே போல தான் இப்போதும் , ஏப்ரல் 20 ம் தேதிக்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் அரசியல் சார் முடிவுகளும்  , அது சார்ந்த விவாதங்களும் காரசாரமாக நடக்க , அதை தடுக்க ஒரே வழி நடிகர்கள் கையில் தான் உள்ளது .

எப்போதுமே நடிகர்கள் தான் நம் அரசை காப்பாற்றி வருகிறார்கள் .

மக்கள் சேப்பாக்கம் சென்று பார்க்கா விட்டாலும் , தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் . நாம் எதோ , புத்திசாலி தனமாய் , நாம் தான் நேரில் சென்று பார்க்க வில்லையே என்று எண்ணி கொண்டு இருப்போம் .
ஆனால் தொலைக்கட்சிகள் , விளம்பர தாரர் மூலம் வசூல் செய்யும் . அதற்கான உரிமைக்காக நடிகர் சங்கத்திற்கு நிதி கொடுக்கும் .
தமிழனம் மறைமுகமாக ஏமாந்து போகும் .

இப்போதும் தமிழனம் எப்போதும் போல் நடிகர்கள் விளையாடியதை பற்றியும் , அவர்கள் வீர தீர செயல்கள் பற்றியும் அங்கு நடந்த பிரச்சனைகள் பற்றியும்  மட்டுமே பேசி கொண்டு , இப்போது எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளை சரி வர எடுக்க மாட்டோம் .

இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தஞ்சாவூர் டீம் , திருச்சி டீம் , கோயம்புத்தூர் டீம் , சென்னை டீம் என்றும் 8 பிரிவுகளாக தமிழகம் பிரிக்க பட இருக்கிறது .

எல்லோரும்க்கு ம் உள்ள ஊர் பாசம் , தமிழக முடிவு என்ற முடிவில் இருந்து பிரிக்க பட இருக்கிறது .  அனால் இதில் இருக்கும் எந்த நடிகனும்  அந்த ஊர் காரனாக இருக்க மாட்டான் . இவனுக்கு பின்னால் ரசிகர் மன்றங்களும் , அதன் உறுப்பினர்களும் என்று தமிழக இளைஞர்கள் பிரிக்க பட இருக்கிறார்கள் . இந்த இளைஞர் கூட்டம் , அரசியல் பேசுவதை விடுத்து என் தலைவன் அணிதான் வெற்றி பெரும் என்றும் , என் ஊர் தான் வெற்றி பெரும் என்றும் , அதை மட்டுமே பேசி பேசி , அழிய இருக்கிறது .

இதனால்

கடைசி நேர முடிவுகள் தவறுதலாக முடியும்


எப்படி பார்த்தாலும் தமிழனத்தை ஏமாற்ற தென்னிந்தியா முயற்சித்து கொண்டே இருக்கிறது !


ஒரு நடிப்பு துறை சார்ந்த முதல்வர் இருக்கும் வரைதான் நடிகளுக்கு மதிப்பு !

ஆகவே அவர்களை காப்பாற்ற நடிகர்கள் போராடுகிறார்கள் .
அப்போதுதான் நாளை அவர்களும் அந்த இடத்திற்கு வர முடியும் !

எனவே தமிழனை சிந்திக்க விடாமல் செய்வதே நடிகர்களின் நோக்கம்.

நடிகர்களிடமிருந்து தமிழனம் மீள வேண்டும் !



அட போங்கடா !


கேடு கேட்ட நடிகர் இனமே ,
நாடக தமிழை அழித்த நடிகர்களே
எம்மக்களை உனக்கு கீழே அடிமையாக்கி உள்ள நடிகர் கூட்டமே

உனக்கும் அழிவு வருகிறது
அதை தர போவது வேறு யாரும் அல்ல
உனது ரசிகர் கூட்டமே !

காத்திரு !
இந்த கூட்டம் உனக்கு அடிமை அல்ல
உன்னையும் , உன்னை ஆட்டி வைப்போரையும்
அடக்க போகும் கூட்டம் !
அழிக்க போகும் கூட்டம் !

Saturday 2 April 2016

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளணுமா ?

2016 தேர்தலை எதிர்நோக்கும் இந்நேரத்தில் , ஒரு முக்கிய கருத்து மையபடுத்த படுகிறது .

அது தாங்க

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளணுமா ?

இந்த கேள்விக்கு ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் .

இந்த கேள்வி மிகவும் தவறானது . இன வெறியை தூண்ட கூடியது என்பது தொடங்கி , இதனால் வரும் பின்விளைவுகள் வரை பேசி , இறுதியில் பயமுறுத்தலோடு முடிகிறது . பால் தாகரே போல் ஆகபோகிறது என்று .

 ஏன தமிழ்நாட்டில் ஒரு தமிழனின் ஆட்சி வர கூடாது . அதில் என்ன தவறு இருக்கிறது .

இது குறித்து எதிப்பு தெரிவிப்போர் , மற்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆரூடம் கூறுவோர் அனைவருமே தெலுங்கர்கள்  மற்றும் கன்னடர்கள் .

தமிழ் நாட்டில் நாங்கள் வந்து குடியேறி 500 ஆண்டுகள் ஆகிவிட்டது . என் மொழி தமிழால் தொலைந்து விட்டது . என் உறவுகள் , என் பூர்வீக விவரங்கள் அனைத்தும் , இந்த தமிழ்நாட்டால் இழந்து விட்டோம் . அப்படி எனில் எனக்கு இங்கு ஆட்சி புரிய எல்லா அதிகாரமும் உண்டு  . இதுதான் இவர்களின் வாதம் .

சரிதான் . 

ஏன் நீங்கள் உங்கள் மொழியை இழந்தீர்கள் . 
தமிழ் மீது கொண்ட காதலா ?

ஏன் உங்கள் உறவுகளை இழந்தீர்கள் ?. 
தமிழ்நாட்டில் வாழ்வது தான் எனக்கு பிடித்திருக்கிறது 
என்று அன்போடும் , ஆசையோடும் வந்ததாலா ?

நாயக்கர்கள் ஆட்சியில் மிகுந்த செல்வா செழிப்போடும் , மரியோதையோடும் நீங்கள் வாழ்வதற்காக , இங்கு வந்தீர்கள் .

அதே போல் தமிழர்களும் தான் பிற நாடுகளில் வாழ்கிறார்கள் என்று கூறாதீர்கள்

எந்த தமிழனும் ,
எந்த நாட்டிலும் ,
இது எங்கள் அரசனின் ஆட்சி ,
இதில் எங்களுக்கு மரியாதை உண்டு
என்று போகவில்லை .

ஆங்கிலேயன் அவனுக்கு வேலை பார்க்க வேண்டி  அழைத்து சென்றான் . பல உயிர்களை பலி கொடுத்து வாழ்ந்து வருகிறான் .

நீங்கள் தமிழ்நாட்டிற்குள் வந்த நோக்கத்தையும் , தமிழர்கள் இங்கிருந்து சென்று வேறு நாடுகளில் வாழ்கின்ற காரணத்தையும் ஒப்பிடாதீர்கள் .

உங்கள் வாழ்க்கை பட்டு விரிப்பில் நிகழ்ந்தது .
தமிழர்கள் வாழ்க்கை முள் மீது நிகழ்ந்தது .

தமிழ்நாட்டில் உள்ள எந்த கோவிலிலாவது உங்கள் கை விரல்கள்கள் பதிந்துருக்குமா ? உங்கள் மீது சேறு விழுந்திருக்குமா ?

ஆனால் மலேசியாவிர்க்கும் , ஆஸ்திறேலியாவிர்க்கும் அழைத்து செல்ல பட்ட மக்கள் , பாலங்கள் கட்டுவதற்காக அழைத்து செல்ல பட்டனர். அதில் எத்தனையோ உயிர்கள் பறிபோய் இருக்கின்றன .

அங்கிருக்கும் பாலங்கள் தமிழரை புதைத்த மண் மீது நிற்கிறது .
அதில் குழந்தைகள் , பெண்கள் என்ற வேறுபாடெல்லாம் இல்லை .

நீங்கள் தமிழ்நாட்டில் வந்து வாழ்வதற்கும் , தமிழர்கள் பிற நாடுகளில் வாழ்வதற்கும் ஆயிரம் வித்யாசம் உள்ளது .

பிறகு நாங்கள் எங்கள் மொழியை இழந்து விட்டோம் . என்பது . அப்பட்டமான பொய். 
ஒன்று நீங்கள் , உங்களை தமிழன் போலவே காட்டி கொள்ள முயற்சி எடுத்தீர்கள் .
இரண்டு , வீட்டிற்குள் இப்போதும் தெலுங்கு ஒலித்து கொண்டுதான் இருக்கிறது .
மூன்று  தமிழ் பெண்களை மணந்து கொண்டு தமிழனாய் வாழ்வது போல் நடித்து கொண்டு இருக்கிறீர்கள் .

பல நேரங்களில் ஜாதி பிரிவினைக்கும் வழிவகுத்து கொண்டு இருக்கிறீர்கள் .

ஒருநாளும் , உங்களில் ஒருவருக்கும் தமிழ் மீது அன்போ , அக்கறையோ இருந்ததே இல்லை .

அதெல்லாம் போகட்டும் ,

ஏன்

 தமிழர்களுக்கு ஆளும் திறன் இல்லை என்றும்
அப்படியே ஆண்டாலும் ஜாதியால் அடித்து கொள்வார்கள் என்றும்
மத பிரச்னை வரும் என்றும் அவதூறு பேசவும் ,
நாம் அனைவரும் இந்து என்றும் 
நாம் அனைவரும் இந்தியர்கள் என்றும்  ஒரு போர்வைக்குள் ஒழிந்து கொள்ளவும் முயற்சிக்கிறீர்கள் .


நீங்கள் கேட்கும் இதே கேள்வியைத்தான் ஆங்கிலேயனும் கேட்டான்.
இந்தியர்களுக்கு ஆளத் தெரியுமா என்று !

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேணுமா என்று எவரும் கேட்காதீர்கள் .
உங்களுக்கு பின்னால் 
இந்தியாவை இந்தியன் தான் ஆள வேண்டுமா என்று கேட்க பலர் வரிசையில் நிற்கிறார்கள் .

அவர்களுக்கு ஒரு இந்தியனாய் என்ன பதில் சொல்ல்வீர்களோ அதே பதில் தான் தமிழர்கள் , திராவிடர்களுக்கு கூறுவது . 


மேலும் 

நீங்கள் எடுக்கும் இழிவான  முயற்சிதான் , ஏன் ஒரு தமிழன்  என் பூமியை ஆளக்கூடாது  கேள்வியையே கேட்க வைக்கிறது .

தமிழ்நாடு தமிழனின் ஆட்சியின் கீழ் என்பது குற்றமா ?
குற்றம் என்று நீங்கள் கூற கூற , இதன் வீரியம் அதிகரிக்கத்தான் செய்யும் .!

Friday 1 April 2016

அட ! நம்மூரு காய்கறிகளா !

கரிகாய் பொறித்தாள்
கன்னிக்காய் தீய்த்தாள்
பரிக்காய் பச்சடி செய்தாள்
உருக்கமுள்ள அப்பைக்காய் நெய் துவட்டல் ஆக்கினாள் !

                        --------------  காள மேக  புலவர்


அத்திக்காயில் பொறி யல் செய்து

வாழைக்காயில் தீயல் செய்து

 மாங்காயில் பச்சடி செய்து

கத்திரிக்காயில் நெய் துவட்டல் செய்து  , என வகைவகையாய்

உண்டிருக்கிறார் காளமேக புலவர் .

 இது  போன்ற காய்கறிகள் தான் உள்ளூர் காய்கறிகள் !

கத்தரிக்காயில் மட்டும் 500 வட்டார வகைகள் இருந்துள்ளது .

பொய்யூர் கத்தரி

 கண்ணாடி கத்தரி

வரி கத்தரி

பச்சை கத்தரி ,,,,, இப்படி இந்த கத்தரி வகைகளே மிக நீளம் !

இதே போல் வெண்டைக்காயும் வகைகளில் சளைத்தது இல்லை .

கண்ணாடி வெண்டை

பச்சை வெண்டை

சிகப்பு வெண்டை

கஸ்தூரி வெண்டை ........ இப்படி இதன் வகையும் மிக நீளம் .

நீர் காய்கறிகள் கூட்டு செய்ய ஏற்றது .

அதென்ன நீர் காய்கறிகள் :

அதாங்க பூசணிக்காய் , வெள்ளரிக்காய் , சுரைக்காய் , பீர்கங்காய் , கோவைக்காய், அத்திக்காய் ஆகியன .

இவை எல்லாம் ரொம்ப விலை குறைவு . ஆனா பெண்களின் உடல் சார்ந்த நோய்களுக்கும், சிறுநீர் பிரச்சனைக்கும் இந்த காய்கறிகள் கொடுக்கும் மருத்துவ சத்துக்கள் மிக  அதி கம் .



இதுல வெண் பூசணி காய் வெள்ளை படுதலை  நீக்கும் .
சுரைக்காய் உப்பு நீரை வெளியேற்றும் . சிறுநீர கல்லை கரைக்கும்.
பீர்கங்காய்  உப்பு கனிம சத்தை கொடுக்கும் 
கோவைக்காய் சர்க்கரையை கட்டுபடுத்தும் 
அவரைக்காய் கொழுப்பை குறைக்கும் 


இந்த உள்ளூர் காய்கறிகள் , கேரட் , முள்ளங்கி , காலிபிளவர்,முட்டைகோஸ் , நூல்கோல், ப்ரக்கொலி இவற்றையெல்லாம் விட பன்மடங்கு அதிக சத்து நிறைந்தது .

வண்ண காய்கறிகளில் மட்டும்தான் சத்துகள் உள்ளது என்று கூறியே ,மருத்துவ உலகம் நம் நாட்டின் இறக்குமதி காய்கறிகளை பெருக்கி அந்நிய செலாவணிக்கும் கேடு விளைவிக்கிறது .

 இதை விட முக்கியமானது நம் நாட்டு கீரைகள் .




"தாளி முருங்கை தளை தூதுணம் பசலை வாளி வறூ கீரை
நெய்வார்த்துண்ணில் ஆளிஎனவிஞ்சுவார் போகத்தில் "

கீரைகள் விந்தணுவை அதிகரிக்க செய்யும் . இவை பக்க விளைவுகள் இல்லாத வயாகரா !

"பொன்னாங்கன்னிக்கு புளியிட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் உழக்கு "

என்று கூறிய வரிகளில் பெண்ணுக்கு , பொன்னாகன்னி கீரை எந்த அளவுக்கு முக்கியம் என்று கூறுகிறது தமிழ் மருத்துவம் .

"போன கண்ணும் திரும்புமாம் , பொன்னாங்கன்னியிலே " என்று கூறும் 

போது 

பொன்னாங்கன்னி கீரை கண்ணுக்கு மிகவும் நல்லது என்பது தெரிகிறது .

நாம் காய்கள் என்று எண்ணி உண்ணும் சில கனிகள்  :

நெல்லிக்காய் கூட்டு : பாசிபருப்புடன் சேர்த்து , கொட்டைகளை நீக்கி நெல்லிக்காய் சமைத்தால் நெல்லி கூட்டு அருமையாக இருக்கும்.

அத்திக்காய் கூட்டு :  அத்திக்காய் பொரியல்  செய்தால் அதுவும் அருமை

தேங்காய் : இது சமைக்காமலே உண்பது சால சிறந்தது .

 எப்புடி எல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா ?

புளியில் ஊறாத காய்
ஏலக்காய் இல்லாத இனிப்பு
பட்டை போடாத பிரியாணி
மல்லி தழை இல்லாத ரசம்
கறிவேப்பிலை இல்லாத சட்னி

இப்புடி சாப்பிட கூடாதாம் !


நம்மில் ஊடுருவி நிற்கும் உள்ளூர் காய்கறி போன்று வெளிநாட்டு காய்கறிகள்

ஐரோப்பாவில் இருந்து வந்த டீ , காபி , மற்றும் தக்காளி
சிலியில் இருந்து வந்த மிளகு போன்ற காய் , மிளகாய்
சீனாவில் இருந்து வந்த முள்ளங்கி
பெர்சியாவில் இருந்து வந்த பெரிய வெங்காயம்
ஜப்பானில் இருந்து வந்த சேனை கிழங்கு
.......................................................இன்னும் நீள்கிறது இந்த பட்டியல்

நம் நாட்டின் கொடியில் விளையும் காய்கறிகளுக்கும் 
மரத்தில் விளையும் முருங்கை கீரைக்கும் 

இணையான உணவு இந்த உலகில் இல்லை 
இனி வரபோவதும் இல்லை !

( இது டாக்டர் . சிவராமன் அவர்களின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது )



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...