Thursday 3 December 2015

கனல் கொண்ட சென்னைவாசி

தன்னலமற்ற சென்னைவாசி

ஊழிகால சென்னைவாசி

இதுவல்ல இப்போது உன்பெயர்

கனல்  கொண்ட சென்னைவாசியாக நீ பேர் எடுத்திருந்தால் அதுதான் நீ சென்னைக்கு செய்யும் கடமை

சென்னை தானே உன்னை வாழவைத்தது
சென்னைதானே உன்னை பெருமை அடித்து கொள்ள செய்ததது
சென்னை தானே உனக்கு ஷாப்பிங் மாலையெல்லாம் அறிமுகம்  செய்ததது
சென்னைதானே உனக்கு பெப்சிக்கும், கோலாவுக்கும் பழக்கபடுத்தியது சென்னை தானே உனக்கு KFC யும், MCDONALD யும் சொல்லி தந்தது
                                     இதைத்தானே பெருமை என்று ஊருக்கெல்லாம் சொல்லி                                            கொடுத்தாய்


ஆனால் நீ செய்தது என்ன
குப்பை அடித்தாய் - இறக்கபடுகிறேன் பேர்வழி என்று குப்பை எடுப்பவர்களையும் வேலை செய்ய விடாமல் தடுத்தாய்

எவன் தப்பு செய்தாலும் சென்னை என்றால் இப்படிதான் என்று
சென்னைக்கு புதிய விளக்கம் கொடுத்தாய்

நடந்தவை கடந்து போகட்டும்.

இனி நீ உனக்கு வாழ்வழித்த சென்னையை மீட்டேக்க முயற்சிக்கலாமே !

ஏரியை மூடி உனக்கு ஒருவன் விலைக்கு விற்றான்

அவனை தேடி துவைத்து எடு.
      அப்போதுதான் மீண்டும் எவரிடமும் ஏரிக்கு விலை பேச மாட்டான்

கட்டிடம் கட்டி கொடுத்த engineer க்கு பாடம் புகட்டு
       அப்போதுதான் இது போன்ற இடங்களில் வீடு கட்டுவதை தவிர்ப்பான்

பில்டர் என்ற பெயரில் ரௌடிசம் செய்த ரௌடிகளைஎல்லாம் தேடு

குப்பை அள்ளாத மாநகராட்சியை அடிகடி நீ சென்று தூர்வாரு

எல்லாவற்றையும் அராசங்கமே செய்யாது நாமே செய்து கொள்ள வேண்டியதுதான் என்று யாரோ ஒருவர் இருவர் செய்யும் வேலைகளால் தான் மாநகராட்சி மெத்தனமாக யாரோ செய்து கொள்ளட்டும் என்று எல்லா இடங்களையும் குப்பையாக்கி அதிலே உன்னை மிதக்க வைத்துள்ளது

யார் எந்த வேலை செய்ய வேண்டுமோ அவரிடமிருந்து அந்த வேலையை வாங்க வேண்டும் . உனக்கு எந்த நிறுவனமும் சும்மா சம்பளம் கொடுக்க வில்லை

இக்கட்டான சூழ்நிலையிலும் அதிக விலைக்கு விற்கும் கடை வியாபாரிகளை குப்பைகளோடு குப்பையாக்கு

இப்போதும் வரி கேட்டு நிற்கும் சுங்க சாவடிகளை கடலோடு இணைத்து விடு

அதிக லாபம் பார்க்க போராடும் விடுதிகளையும் , பேருந்துகளையும் எறிகளுக்குள் எறிந்துவிடு

இதையெல்லாம் விடுத்து வடஇந்திய சானல்கள் நம்மை காட்டவில்லை என்று வருந்துவது
சினிமா நடிகர்களிடம் பிச்சை எடுப்பது
ஈழத்தமிழர்கள் நமக்கு ஒரூ பைசா கூட அனுப்பவில்லை என்று கூறுவது

இதெல்லாம் உன்னை நீயே ஏமாற்றிகொள்ளும் வழிவகை

இதுவல்ல உன் பிரச்சன்னைக்கு முடிவு

நீ முடிவெடு . சென்னைக்கு செய்யவேண்டிய கடமையை தீர்மானம் செய்.!

Wednesday 2 December 2015

நில வேம்பு எனும் சிரியா நங்கை








நிலவேம்பு குறித்து வாஸ்து கூறும் படம் இது. மிக கொடுமை அல்லவா இது ?


எந்த ஒரு தாவரமும் வீட்டை அடகு வைக்க சொல்லாது.

கணவனை இறந்து போக சொல்லாது .

இது அடிப்படையில் நம்மை பயமுறுத்துவதர்க்காக கூறபட்டிருக்கலாம் .

ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள் .

இது உண்மை அல்ல .

ஆமை நீரோட்டத்தை கண்டறியும் சக்தி கொண்டது . அது எந்த வழியாக போகிறதோ அந்த பாதையில் நம் முன்னோர்கள் வீடு கட்ட மாட்டார்கள்.

அப்படி கண்டுபிடித்து கட்டபட்டதால்தான் இன்றளவும் திருசெந்தூர் , ராமேஸ்வரம், ராமநாதபுரம் திருக்கோவில், தஞ்சை பெரிய கோவில், மதுரை கோவில்களெல்லாம் தாங்கி கொண்டு நிற்கின்றன.

இதனை அறிந்த ஒரு சில கூட்டம் ,நமக்கு ஆசிரியர் வேலை பார்கிறேன் என்று கூறி , மன்னர்களுக்கும் கூஜா தூக்கிய அந்த கூட்டம் சொன்னதுதான் ஆமை புகுந்த வீடு விளங்காது என்பது. அன்று முதல் ஆமை வளர்ப்பை விட்டுவிட்டோம். அதன் விளைவு நீரோட்டம் தெரியாமல் வீடுகள் கட்டி கட்டி , உதாரனமாய் இன்று மாறியுள்ளது சென்னை.

எதை எல்லாம் நமக்கு நம்பிக்கை ஆக்கி விட்டார்களோ அது இன்று மூட நம்பிக்கை வரிசையில் நிற்கிறது.

இதன் பின்னணியில் நம் கணிதமும், அறிவியல் அறிவும் மறைந்து நிற்கிறது.

இதே போல் உருவாக்கப்பட்டதுதான் வீடின் முன்னால் முள் செடி வளர்க்க கூடாது என்பது.

ஆமாங்க நம் முன்னோர்கள் எப்போதும் வீட்டின் முன்னால் கற்றாளை எனப்படும் முள்செடி வளர்த்தனர்.
அது மிகுந்த மருத்துவ குணம் கொண்டது.

அந்த கூட்டத்தில் சிலர் மருத்துவர்களாக ஆனார்கள் . அதன் விளைவு முல்செடிகள் வீட்டின் முன்னாள் இருந்து நீக்கப்பட்டது.

ஆனால் எல்லா தோல் வியாதி மருத்துவர்களும் இதையே தான் aloevera ஜெல் என்ற பெயரில் எழுதி கொடுக்கிறார்கள் . எல்லா அழகு சாதன கிரிம்களும் இதைதான் சுமந்து வருகிறது . நமக்கு கட்டளை இட்ட அந்த கூட்டத்தின் பெண்கள் மட்டும் இந்த கற்றாலையை எப்போதும் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றனர்,

அந்த வரிசையில் சேர்த்ததுதான் இந்த நிலவேம்புவை வீட்டில் வளர்க்க கூடாது என்பது. நீங்களே யோசித்து பாருங்கள் ,இதனை வளர்த்தால் மண் கெட்டுபோகும் என்றால் கூட பரவாயில்லை . கணவன் இறந்து போவான் என்பதும் மனைவி இறந்துபோவால் என்பதும்  எத்தனை பெரிய பயமுறுத்தல் . இன்னுமா நாம் நம்ப வேண்டும் ? முடியல! இன்னும் எத்தனை தவறுகள் நம்மிடத்தில் விதைக்கப்பட்டுள்ளனவோ ?


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...