Wednesday 25 July 2018

GDP பட்டியலின் முதல் 10 மாநிலங்கள்.2018

GDP குறைந்துவிட்டது, என்று புரளி பேசும் மக்கள் ,
மிக மிக கேவலமானவர்கள், இதிலே
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்று, அதே வாய்தான் பேசுகிறது.
இருப்பினும், அவர்களுக்கும் நிறைவுபட பொருளதார நிறைவு தர தமிழகத்தால் முடியும்.
Trending top most 2018 வழங்கியுள்ள GDP பட்டியலின் முதல் 10 மாநிலங்கள்.
1. மஹாராஷ்டிரம் - 16.8 lakhs crores
2. தமிழ்நாடு - 15.9 lakhs crores
3. உத்திர பிரதேஷ் _ 9.76 lakhs crores
4. மேற்கு வங்கம் - 8 lakhs crores
5. குஜராத் - 7.66 lakhs crores
6. கர்நாடகா - 7.02 lakhs crores
7. ராஜஸ்தான் - 5.7 lakhs crores
8. ஆந்திரம் - 5.2 lakhs crores
9. மத்திய பிரதேஷ் - 5.08 lakhs crores
10. டெல்லி - 4.5 lakhs crores
மிகவும் பின்தங்கிய நிலையில் பீகார், அசாம், மணிப்பூர், ஜம்மு போன்ற மாநிலங்கள் உள்ளன.
ஆண்டுக்கு இந்தியாவின் ஏற்றுமதி
302.8 பில்லியன் டாலர்கள்
இதில் 10% ஏற்றுமதி தமிழகத்தில் இருந்து செல்கிறது.
இதிலும் மஹாராஷ்டிரா மாநிலம் முந் நிலையிலையும், 2வது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த மொத்த தொழிற்சாலைகளில் 53% தொழிற்சாலைகள்
தமிழ்நாடு
மஹாராஷ்டிரம்
ஆந்திர பிரதேஷ்
குஜராத்
உத்திர பிரதேஷத்தில் மட்டுமே உள்ளது.
இதிலும் முந்நிலையில் இருப்பது
தமிழ்நாடு மட்டுமே.
அதிலும் தோல் பொருள்களையும்,
கடல் சார் பொருள்கள்,
டெக்ஸ்டைல்ஸ், எலக்ரானிக் பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வது
தமிழ்நாடு தான்.
இவ்வளவு இருந்தும்தமிழ்நாட்டு மக்களின் தனிநபர் வருமானத்தில் தமிழகம் 11வது இடத்தில் உள்ளது.
காரணம், நம் அரசியல்வாதிகள்
இலவசம் தருவதாக கூறி வாங்கி வைத்திருக்கம் கடன் தொகை கொஞ்சம் அதிகம் தான். இது அரசியல் ஊழல்செய்த பிரச்சினை.
அதே போல வேலை வாய்ப்பின்மை
2018 கணக்கின்படி,
1. திரிபுரா - 30.3%
2. ஹரியானா - 15.3%
3 . ஜம்மு - 15.1%
4. கேரளா- 10.8%
5 . அசாம் - 9.8%
6. பஞ்சாப் - 9.7%
7. ஹிமாசல பிரதேஷ் - 9.6 %
8. குஜராத் - 9.5%
9. மேற்கு வங்கம் - 8.8%
10. சண்டிகர் - 8%
11. பீகார் - 7.1%
12. கர்நாடகம் - 5%
13. உத்திர பிரதேஷ் - 4.5%
14. ஆந்திரம் - 4%
15. தெலுங்கானா - 3.7%
16. மஹாராஷ்டிரம் - 3.5%
17. மத்திய பிரதேஷ் - 2.9%
18. கோவா - 2.4%
19. தமிழ்நாடு - 2.3%
20. உத்தர்காண்ட - 1.2 %
மொத்தம் தமிழ் நாட்டின் வேலையில்லாத திண்டாட்டத்தை அனுபவிப்பவர்கள் 2.3% மட்டுமே.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 50000 சிறு தொழில்கள் மூடபட்டன, அது GST தந்த பரிசு, அதில் 500000 பேர் வேலை இழந்ததாக தமிழக முதல்வர் தன் அற்க்கையில் தெரிவித்துள்ளார்.
இதை தவிர்த்து தமிழக பொருளாதரம் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
1991 ன் கணக்கின்படி இன்றைய ஆலைகளை ஒப்பிட்டால்,
ஆலைகள்
2.5 மடங்கு, தமிழகத்தில் பெருகி
உள்ளன.
தமிழகத்தில் இல்லாத ஒரு வறுமையை, பல திரைபடங்கள் மூலம் காட்டிதான் ஆயிரகணக்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாகின. தமிழக மண்ணை உறிந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றன.
அதே டெக்னிக்கை மீண்டும்
பயன்படுத்தி
தமிழக வளங்களை அழிக்க முயற்சிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளும் , கழிவுகளும் - ௧


தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளும் , கழிவுகளும் - 1

தமிழ்நாடு முழுக்க உள்ள 350000 விசை தறி மூலமும் , சாய தொழிற்சாலைகள் மூலமும்
கோவை  , திருப்பூர் , ஈரோடு , சேலம் பக்கம்  கழிவுகள்  ஆற்றில் கலக்கப்படுகின்றன .




1975 ல தொடங்கப்பட்டு , 1995 ல் மூடப்பட்ட குரோமியம் ஆலை கழிவு மட்டும் கடந்த ஜூன் மாதம் வரை 2 .25 லட்சம் டன்னாக உள்ளது . இதனால் புற்று நோய் பரவுகிறது என்பதையும் , நிலத்தடி நீர் மாசுபடுவதையும் மாசு கட்டுப்பட்டு வாரியம் கூறியுள்ளது .
இந்த குரோமியம் ஆலை எதற்காக தொடங்கப்பட்டது .எனில்  1226 தோல் பதனிடும் ஆலைகள் இயங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது . இந்த தோல் தொழிற்சாலைகளால் , நோய்கள் பரவுகின்றன என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது . அதை தடுக்க 2 கோடியே 65  லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன  என்றும் 2015  ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலைகள்  மூலம் 5000 கோடி க்கு தொழில் பரிவர்த்தனை நடக்கிறது . அதில் 2000 கோடி , ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணி ஈட்டுகிறது . ஆனால் , பாதிப்பு இங்கு வாழும் மக்களுக்கு !

பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் :
தமிழ்நாட்டில் இருந்து 18000  கோடிக்கு பிளாஸ்டிக் உற்பத்தி நடக்கிறது . தென்னிந்தியாவிலேயே அதிக அளவில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் மக்களும் தமிழ் நாட்டு மக்கள் தான் . அதிக உற்பத்தியம் தமிழ்நாடுதான் .
அதன் பாதிப்பை அனுபவிப்பதும் தமிழ்நாடுதான் .
ஆண்டுக்கு 9 லட்சம் டன் பிளாஸ்டிக் உற்பத்தியில் ஈடுபடும் 155  பிளாஸ்டிக் நிறுவனங்களை தமிழ்நாடு பெற்றுள்ளது .
இதன் கழிவுகள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை .
மதுரை , கோவை , சென்னை , என்று பாரபட்சம் இல்லாமல் தன கழிவுகளை இறைத்து கொண்டு முன்னேறி வருகிறது பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் .

ரப்பர் தொழிற்சாலைகள் :
மதுரையும் , கோவையும் போட்டி போட்டு கொண்டு நூற்றுக்கணக்கான ரப்பர் தொழிற்சாலைகளை கொண்டுள்ளன .


---- தொடர்வோம் .





Monday 23 July 2018

மக்களின் முடிவு தவறா? வழங்கபட்ட பதில்கள் தவறா?

மக்களின் முடிவு தவறா? வழங்கபட்ட பதில்கள் தவறா?
1970 - 1993-ம் ஆண்டு வரை ஏறத்தாழ 48 விவசாயிகள் தமிழகப் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
________ ___________________
1952 ல் ராஜாஜியால், மொழி பிரிவினை மாநிலம் கேட்டு, போராடிய மக்களுக்கு வழங்கப்பட்டது துப்பாக்கி சூடு
டால்மியாபுரத்தை கல்லகுடி பெயர் மாற்றும் போராட்டத்தில் துப்பாக்கி சூடு வழங்கி
அத்தோடு ராஜா ஜியின்
ஸ்வதந்திரா கட்சியை
தூக்கி எறிந்தனர் மக்கள்
1954-1963 காங்கிரஸ், காமராசர் தொடர்ந்து 1965 ல்பக்தவச்சலம்
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில்
துப்பாக்கி சூடு வழங்கி உள்ளார்
அத்தோடு
காங்கிரஸ் கட்சியை
தூக்கி எறிந்தனர் மக்கள்.
இப்போ, DMK அண்ணாதுரை இயற்கை மரணம் எய்தபிறகு,
தொடர்ந்து கலைஞர் கருணாநிதி
1970ல் நாராயணசாமி நாயுடு,
தொழில் துறைக்கு வழங்கும் மின்சாரம் அளவிற்கு, விவசாயத்திற்கும் வேண்டும் என்று போராடியபோது
துப்பாக்கி சூடு, ஆணை வழங்கி உள்ளார். 3 விவசாயிகள் உயிர் இழந்தனர்.
இப்போ கருணாநிதி தூக்கி எறியபட்டார்.
ADMK வந்தது,
1977 முதல் 1987 வரை எம்ஜிஆர் ஆட்சியில் மெரினா கடற்கரையை அழகுபடுத்த எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு,
அருப்புக்கோட்டை அருகே வாகைக்குளத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு,
திருச்சி சிம்கோ மீட்டர் ஆலைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு, சென்னை வியாசர்பாடியில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு என பல சம்பவங்கள் நடந்தன. அதில் பலர் உயிரிழந்தனர்.
பல துப்பாக்கி சூடுகளை நிகழ்ச்சி,
நக்சலைட்டுகளை அழித்தேன் என்று பெருமை கொண்டவர் எம்.ஜி.ஆர்.
நம்மாழ்வார் குறிப்பிட்ட துப்பாக்கி சூட்டை நிகழ்த்திய வரும் MGR தான்.
1987ல் வன்னிய சமூகத்தின் மீது, துப்பாக்கி சூடு, அச்சமயம் MGR அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தாராம்.
உத்தரவு தானாகவே அரங்கேறியுள்ளது.
இப்போ ஜெயலலிதா
அவரும் துப்பாக்கி சூட்டில் சளைத்தவர் இல்லை.
மீண்டும் கருணாநிதி
மீண்டும் 1999 மாஞ் சோலை துப்பாக்கி சூடு
மீண்டும் ஜெயலலிதா வெற்றி
மீண்டும்
2011ல் பரமகுடியில் துப்பாக்கி சூடு
இது
60 நாட்களுக்கு முன்பு நடந்த ஸ்டெர்லைட் வரை தொடர்ந்து விட்டது.
மக்களும்
மாற்றி மாற்றி முடிவெடுத்து ஒரு பயனும் இல்லை.
காரணம்
நாம் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற 4 வாய்ப்பையும் யாரோ ஒருவர்
தீர்மானிக்கிறார்.


Wednesday 11 July 2018

தைரொ கேர் நிறுவனம் - Tyrocare company

கோவை மாவட்ட அப்பநாயக்கன் பட்டிபுதூர் என்ற ஊரில் பிறந்தவர் தான் வேலுமணி . இவர் பாபா அட்டாமிக் ரிசெர்ச் சென்டரில் பணியாற்றியர் .
இவர் மனைவி சுமதி ராவ் . SBI யில் பணியாற்றியவர் .

வேலுமணி பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து டாடா மெமோரியல் மருத்துவனையில் , பரிசோதனை பிரிவில் பணிக்கு சேர்ந்து சில காலம் வேலை பார்க்கிறார் .
திடீரென , கணவனும் , மனைவியும் தங்கள் வேலையை விடுவது என முடிவெடுத்து , வேலையை விட்டு வெளியேறுகிறார்கள் .

1996 ம் ஆண்டு tyrocare  எனும் தைராய்டு பரிசோதனை நிறுவனத்தை தொடங்குகிறார்கள் .



அன்று முதல் பணம் கொட்டியது . நேபாளம் , பங்களாதேஷ் , மற்றும் மத்திய ஆசியா எங்கும் கிளை பரப்பி ,
2016 ம் ஆண்டு முதல் பங்கு சந்தையில் இடம் பிடித்து சாதனை புரிந்து வருகிறது .

இன்று நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிட்ட் என்ற நிறுவனத்தையும் நடத்துகிறார் .
இன்று இவருடைய சொத்து மதிப்பு 3300 கோடி ரூபாய் !
இவர் தன்னை தமிழன் என்றே அடையாளப்படுத்துகிறார் . ஏனெனில் இங்கு தான் தைராய்டு அதிகம் உள்ளது .


இப்போ தைரொய்ட் பிரச்னை வந்தவங்களுக்கு என்னென்ன அறிகுறிகள் தெரியும்என்று தெரிந்து கொள்ள வேண்டும் .
அதாவது ஞாபக மறதி, உடல் எடை , முடி உதிர்வது , தோல் வறட்சி , மூட்டு வலி .


இதில் அதிகப்படியாக ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பாதிக்க படுகிறார்கள் .
ஏனென்னில் அவர்கள் தான் வீட்டில் இருந்து கொண்டு , சீரியல் மற்றும் கண்ட கண்ட நிகழ்ச்சியையும் பார்த்து கொண்டு , கூட்டு குடும்பத்தை தொலைத்து விட்டு , தனிமையில் இருக்கிறார்கள் . சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்வது , உறங்குவது இரண்டும் செய்வது இல்லை .
அதனால் பெண்களுக்கு இந்த பிரச்னை வருவது என்பது சகஜம் .
ஆனால் இதை எல்லாம் கொண்டு , மருத்துவம் செய்து ,
அதற்க்கு பரிசோதனை செய்த நிறுவனத்தின் சொத்தே 3300  கோடி என்றால் ,
மருத்துவர் , மருந்து நிறுவன சொத்து எவ்வள்வு என்பது கணக்கில் அடங்காதது .
மருத்துவத்தின் எல்லா பாகங்களும்
வணிகம் ! இதில் நமக்கு தமிழன் முன்னேறி விட்டான் என்று பெருமை கொடுக்கிறார்கள் .




Tuesday 10 July 2018

மண்ணின் மரங்கள்


மண்ணின் மரங்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.
1. வில்வம் (Vilvam) - Aegle marmelos
2. மஞ்சாடி (Manjadi) - Adenanthera pavonina
3. வாகை (Vaagai) - Albizia lebbeck
4. உசில் (Usil) - Albizia amara
5. ஏழிலைப்பாலை (Yezhilai Palai) - Alstonia scholaris
6. மந்தாரை (Mantharai) - Bauhinia purpurea
7. ஆத்தி (Aathi) - Bauhinia racemosa
8. இருவாட்சி (Iruvatchi) - Bauhinia tomentosa
9. புளிமா (Pulima) - Buchanania axillaris
10. பனை (Panai) - Borassus flabellifer
11. புரசு / முறுக்கு (Purasu) - Butea monosperma
12. புன்னை (Punnai) - Calophyllum inophyllum
13. சரக்கொன்றை (Sarakondrai) - Cassia fistula
14. செங்கொன்றை (Sengondrai) - Cassia roxburghii
15. பொறிஞ்சான் / கரும்புரசு (Purasa) - Chloroxylon switenia
16. நறுவல்லி / மூக்குச்சளி (Naruvali / Mookuchali) - Cordia dichotoma
17. மாவிலங்கம் (Mavilangum) - Creteva adansonii
18. கருங்காலி (Karungali) - Diospyros ebenum
19. வாகனை / வெந்துவரை (Vaganai / Venthuvarai) - Diospyros chloroxylon
20. கல் இச்சி (Kal Itchi) - Ficus amplissima
21. ஆற்று பூவரசு /ஆற்று வஞ்சி (Aatrupoovarasu ) - Hibiscus tiliaceous
22. ஆச்சா (Aacha) - Hardwickia binata
23. ஆய / ஆவி (Aya / aavi) - Holoptelea integrifolia
24. ஒதியம் (Odhiam) - Lannea coromandelica
25. பூ மருது (Poo Marudhu) - Lagerstroemia speciosa
26. பூவந்தி / கூகமுத்தி /நெய்க்கொற்றான் (Poovanthi / Koogamuthi /Neikottai) - Lepisanthes tetraphylla
27. விளா (Vila) - Limonia acidissima
28. பிசின் (Pisin pattai) - Litsea glutinosa
29. இலுப்பை (Illuppai) - Madhuca longifolia
30. பாலை (Paalai) - Manilkara hexandra
31. மகிழம் / இலஞ்சி (Magizham / Ilanji)
- Mimusops elengi -
32. கடம்பு (Kadambu) - Mitragyna parvifolia
33. மஞ்சணத்தி / நுணா (Manjanathi / Nuna) - Morinda pubescens
34. வெண்மஞ்சணத்தி வெண்நுணா (Vellai Nuna) - Morinda citrifolia
35. புங்கை (Pungam) - Pongamia pinnata
36. வன்னி (Vanni) - Prosopis cinerea
37. வேங்கை (Vengai) - Pterocarpus marsupium
38. வெண்ணணங்கு (Vennangu, Tada) - Pterospermum canescens
39. இருக்கொல்லி / கறிப்பாலை (Irukolli / Karippalai) - Puthranjiva roxburghii
40. மணிபுங்கம் (Manipungan, Soapu kai) -Sapindus emarginatus
41. அசோகம் (asoca) - Saraca asoca
42. பறை / பிரசு (Parai /Pirasu) - Streblus asper
43. எட்டி (Yetti) - Strychnos nuxvomica
44. நாவல் (Naval) - Syzygium cumini
45. தான்றி (Thandri) - Terminalia bellerica
46. வெண்மருது (Ven Marudhu) - Terminalia arjuna
47. சந்தன வேம்பு (Sandhana vembu) - Toona ciliate
48. பூவரசு / வஞ்சி (Puvarasu / Vanji ) -Thespesia populnea
49. வால்சுறா (Valsura) - Walsura trifolia
50. வெப்பாலை (Veppalai) - Wrightia tinctoria
51. தில்லை (Thillai) - xecaria agallicha
52. இலவு (Ilavu) = Bombax insigne
53. ஈச்சம் (Eecham) - Syzygium cumini
54. குமிழ் (kumizh) - Gmelina arborea
55. சந்தனம் (Santhanam)- Santalum album
56. நாட்டு கருவேலம் (Karuvel - Acacia nilotica
57. பெருநெல்லி (Nelli) - Phyllanthus emblica
58. அழிஞ்சில் (Azhinjil) - Alangium salviifolium -
59. வெள்வேலம் - Acacia leucophloea
60. கிளுவை (Kiluvai) - Commiphora caudata -
61. கோங்கம் (Kongam) - Cochlospermum gossypium
62. இலந்தை (Ilanthai) - Ziziphus mauritiana
63. மந்தாரை (Mantharai) - Bauhinia variegata
64. மரமல்லி (Maramalli) - Millingtonia hortensis
65. பலா (Palaa) - Artocarpus heterophyllus
நன்றி: பேராசிரியர் நரசிம்மன், சென்னை கிருத்துவ கல்லூரி.
இயல்வாகை / நாணல்
தொடர்புக்கு: 9942118080


தமிழர்களும் , ஆடைகளும் !



ஆடை இன்றி இருந்தார்களா ?

ஆடைகள் இருந்தன,
4000 ஆண்டுகளுக்கு முன்பே பருத்தியை பயன்படுத்தி ஆடைகளை செய்திருக்கிறார்கள், ஆரிய இனம் ஆடையின்றி அலைந்த காலத்திலே,

பருத்தியில் வண்ண வேலைபாடுகள் செய்து அணிந்து இருக்கிறார்கள்
ஆனால், வேட்டி, சேலை, 7 கஜம், 8 கஜம், பிளவுஸ்
விதவித ஆடை எதுவும் கிடையாது.
தேவைக்கு ஏற்பவே,
ஒன்று, இரண்டு ஆடைகள் நெய்து உடுத்தி இருக்கிறார்கள்.
வள்ளுவர் பற்றி குறிப்பிடும் போதே, அவர் நெசவு தொழில் செய்தவர் என்பர்,
அதே போல, பாரியின் மகள்கள் இருவரும், ஒரே ஆடையை மாற்றி மாற்றி உடுத்தி கொண்டார்களாம்.
இதையும் தாண்டி,
வண்ணார் என்ற ஜாதியும்
புலையன் என்ற பெயரும்
ஆடைகள் உடுத்தி இருந்ததையே குறிக்கும்.



தஞ்சாவூர் அரண்மனை கேலரியில், சோழர் கால சிலை உடை, நாயக்கர் கால சிலை உடை
வேறுபாடு காட்டும்


ராஜா ராஜ சோழனும் அவனது மனைவியும் !


சோழர்கள் காலம் வரையிலும் , கூட மெல்லிய ஆடைகளே பயன்படுத்த பட்டுள்ளன .
அதன் பிறகு நாயக்கர் காலத்தில் தான் 
கஜ கஜமாக நூல் நூற்க பட்டு , அவை ஆடைகளாக மாறின .

மேலும் மராத்தியர்கள் காலத்தில் , இந்த ஆடை வடிவைப்பு முறை மாறியுள்ளது .



அதை தொடர்ந்து ஆங்கிலேயர்கள் காலத்திலும் , 
இந்தியாவில் 19 ம் நூற்றாண்டு தொடக்கத்தில் , நுஸ்ரத் வாடியா என்பவரால் , தையல் இயந்திரம் அறிமுகம் செய்ய பட்டுள்ளது .

அதன்பிறகு தான் , விதவிதமாக ஆடைகள் வந்தன . அதன் அடிப்படையாக பஞ்சாலைகள் பெருகின . 

இதற்க்கு இடையில் இஸ்லாமிய வருகையும் , 
ஆடை வடிவமைப்பில் முக்கிய இடம் பிடிக்கிறது .

ஆரிய , திராவிட , பார்சி , இஸ்லாமிய இனம் எல்லாமே இரானிய தொடர்புடையவை .
இந்த உலகில் ஆடை வடிவமைப்பு மற்றும் கலை துறையில் பெரிதும் சாதித்தவர்கள் 
இரானியர்களே !

Tuesday 3 July 2018

மருத்துவமனையில் லாபம்

இந்த வாரம் ( 2.7.2018 டு 7.7.2018 ) எந்தெந்த நிறுவன பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வரும் ? லாபம் தரும் என்று பங்கு சந்தை ஜோதிடர்கள் சில நிறுவனங்களை  கூறுகிறார்கள் .
அந்த வகையில் , டாடா ஸ்டீல் , ஆதித்ய பிர்லா குரூப் , ஹீரோ நிறுவனம் , IDFC  கேப்பிடல் பிரஸ்ட்  ஆகியன நல்ல லாபம் தரும் பங்குகள் என்று கூறி விட்டு ,



அப்போல்லோ மருத்துவமனை பங்குகளும் அதிக லாபம் தரும் வாய்ப்பை பெறுகிறது என்றும் கூறுகிறார்கள் .
மற்றவையெல்லாம் தொழில் .
ஆனால் மருத்துவமனையில்  லாபம் என்றால் , அங்கு வரும் ஒவ்வொரு நோயாளியும் தான் , முதலீட்டாளர்களின் இடுபொருளா ?
மருத்துவமனைகள் வேண்டாம் எனும் போது ,
பங்கு சந்தையில் லாபம் தரும் பட்டியலில் உள்ள மருத்துவமனை மற்றும் கல்லூரிகளை புறந்தள்ளுக !


அந்நிய நேரடி முதலீடு 2018

2017 - 2018 ம் ஆண்டுதான் இந்திய வரலாற்றிலேயே மிகவும் குறைந்த அளவு , அந்நிய நேரடி முதலீடு நடந்து இருக்கிறது .
அந்நிய நேரடி முதலீடு என்பது இந்தியாவிற்கு நல்லது அல்ல என்ற போதிலும் , 2016 ம் ஆண்டு நாவேம்பரில் பணமதிப்பிழப்பு நடந்த போது கூட அதிக அளவிலான முதலீடு பெற்ற இந்தியா , இன்று முதலீடு குறையும் நிலைக்கு வந்துள்ளது .


2017 ம் ஆண்டு , சீனாவின் 600 நிறுவனங்கள் 85 பில்லியன் டாலர்களை  இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்ததாக தகவல் தருகிறது  economic Times .
ஆனால் இன்று இல்லை .

2018  ஆண்டு கணக்கின் படி மொரீசியஸ், நெதர்லாந்து , சிங்கப்பூர் , அமெரிக்கா , ஜப்பான் மட்டுமே அதிக அளவில் முதலீடு செய்துள்ளன . அதிலும் மொரீசியஸ் மட்டுமே அதிகப்படியாக 14 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது . அமெரிக்காவும், ஜப்பானும் முறையே 2 பில்லியன் , 1 . 5 பில்லியன் டாலர் அளவிலேயே முதலீடு செய்துள்ளன .

மாறாக , இந்தியாவில் உள்ள தனி நபர்கள் , உலகம் முழுக்க செய்துள்ள முதிலீடு 11 பில்லியன் அளவில் எட்டியுள்ளது .
இந்த முரண்பாடு ஏன் ?

வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்கள் ஏன் இந்தியாவில் முதலீடு செய்வது இல்லை ?
பதில் இல்லை .

அதே சமயம் , குறைந்த அளவு வெளி நாடு முதலீடு என்பது , இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு போதுமான சலுகை இல்லாததாலேயே ஏற்படுகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்களாம் .
இதையே காரணமாக கொண்டு , வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மேலும் பல சலுகைகள் வழங்க இந்தியாவும் முயற்சிக்கிறது ,

இதில் ஒரே ஒரு சந்தேகம் தான் ,
அப்போ , கடந்த 4  ஆண்டுகளாக , பிரதமர் மோடி பல நாடுகள் சென்று போட்ட ஒப்பந்தங்கள் என்ன ஆனது ?


எல்லா சிவனும் ஒன்றல்ல



இப்போ நம்ம ஊரில் , நிறைய பேரு சிவா , முருகன் , சரவணன் , நாராயணன் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள் . இவர்கள் எல்லோரும் , அந்த கடவுளின் வடிவமும் அல்ல . அந்த கடவுளின் பிரதி பிம்பமும் அல்ல . இப்போ ஏசு ராஜ ன்னு ஒருத்தர் பேரு வைக்கிறார்ன்னு வைச்சிக்குவோம் . அவருக்கும் ஏசு பேசிய மொழிக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா ?
அப்படிதான் ,
சிவனுக்கு தமிழ் தெரியாது என்பதும் !
ஜக்கி சொல்லும் சிவனுக்கு தமிழ் தெரியாது . ஏனெனில் அவர் நேபாளத்தை சேர்ந்தவர் .
அவர் தமிழ் பேசவே இல்லை .
இங்கு வாழ்ந்ததாக கூறப்படும் சிவன் , காலத்தால் முற்பட்டவர் , அவரின் காலம் , அல்லது உருவம் கணிப்பிற்கு உரியது அல்ல . ஆனால் , அந்த பெயர் உலகம் முழுக்க பரவிய காலத்தில் , எல்லோரும் அதே பெயரையே சூட்டி கொண்டனர் .
அப்படி சிவன் என்று பெயர் வைத்து கொண்ட ஒருவரை பற்றி தான் ஜக்கி பேசுகிறார் .

ஆரிய , பார்சி பெரும் கூட்டத்தின் வேலையே இது தான் .
பிற்காலத்தில் இருந்த வரலாறுகளை , உண்மையான வரலாறுகளுக்குள் திணித்து விட்டு ,
வரலாறுகளை குழப்புவது , தவறான விஷயங்களை பரப்புவது .
எல்லா சிவனும் ஒன்றல்ல !

நாகர்களின் ரகசியம் புத்தகத்தில் , வடக்கர்களே விளக்கி இருக்காங்க !


Monday 2 July 2018

பயோ சிப்

பயோ சிப் என்பது ஒரு சிறிய சிம் கார்டு போன்ற ஒன்றை உடலில் செலுத்தி கொள்வது . அதன் மூலம் , பொருத்தி கொண்டார் சார்ந்த எல்லா தகவல்களும் , அவர் என்னென்ன செய்கிறார் என்பது உட்பட அனைத்தையும் அறிய முடியும் .
இதை தற்சமயம் ஸ்வீடெனில் உள்ள அமெரிக்க நிறுவனத்தின் மூலம் 2500  பேர் பொருத்தி கொண்டு உள்ளனர் .
விரைவில் நாடு முழுவதும் பரவுமாம் .

இந்த தகவலால் இந்தியாவில் என்ன நிகழ இருக்கிறது ?
ஏற்கெனவே ஆதார் என்னும் சான்று , நம் அனைவரின் தகவல்களையும் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறது .
அதில் மேலும் , நொடிக்கு நொடி நம் உடல் , செயல் சார்ந்த அனைத்தும் பதிவு செய்யப்பட இருக்கிறது . இது கடந்த 2010 ம் ஆண்டே இந்தியாவில் பேசப்பட்டுள்ளது . அதன் பிறகு 2012 லும் 2017 ம் ஆண்டும் இது குறித்து , மென்பொருள் நிறுவன திருட்டை தடுக்க பயன்படுத்த படும் என்ற தகவலுடன் பகிரப்பட்டுள்ளது .


இதன் அடிப்படையாக , மருத்துவ துறையில் இந்த பயோ சிப் முறையானது , மிக சிறிய அளவில் பயன்படுத்த படுகிறது .
Tiens  எனும் சீன பயோ டெக்னாலஜி நிறுவனம் , ஒரு சிறு கருவி மூலம் , உடலில் பொருத்திய நிமிடங்களில் சர்க்கரை அளவு  முதல் உடலில் நிகழும் எல்லா மாற்றங்களையும் கூறுவதாக , கூறி அம்முறையை பயன்படுத்தி , மருந்தும் விற்பனை செய்கிறது .

ஆனால் , அந்த தகவல் நோயாளிக்கு மட்டும் செல்ல போவது இல்லை . அதை தாண்டி , வேறு பிறருக்கும் செல்ல வாய்ப்பு இருக்கிறது .
இதை நம் மக்களே , மருத்துவ சந்தையில் கொண்டு செல்வது தான் கொடுமை !





RFID = Radio frequency identification = bio chip



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...