Tuesday 20 February 2018

அலையாத்தி காடுகள்

அலையாத்தி காடுகள் - சதுப்பு நில காடுகள் - சுந்தரவன காடுகள்
பொக்கிஷங்கள்


சதுப்பு நில காடுகள் என்று வழங்கப்படும் காடுகளுக்கு, புராண இதிகாச காலங்களில் வழங்கப்பட்ட  பெயர் சுந்தரவன  காடுகள் .

இன்றைய தலைமுறைக்கு புரிய வேண்டுமானால் இதன் பெயர் Mangrove  Forest .

இதில் என்ன சிறப்பு ?

நதிகளை இணைத்து விடலாம் , விவசாயம் செழிக்கும் என்போர் கண்டிப்பாக இந்த காடுகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் .
நாம  ஏரிகளை , குளங்களை அழித்து , அதன் மீது வீடு கட்டி விட்டு , கடலுக்கு செல்ல வேண்டிய நீரை தடுப்போம் என்பது எத்தனை மடத்தனம் என்பதை விளக்கும் அழகிய காடுகள் தான்  இந்த சதுப்பு நில காடுகள் .

இந்த அலையாத்தி காடுகளை பற்றி முனைவர்.கு.இளங்கோவன் அவர்கள் கூறியதை உயிர் இதழ் பதிவிட்டு இருக்கிறது .
அதில் இருந்து சில வரிகள் :

நன்னீரும் , கடல் நீரும் சேரும் இடங்களில் , கடலின் அலைகளை தாங்கி கொண்டு , நல்ல திடமாக நிற்க கூடிய மரம் தான்  இந்த சுந்தர வனக்காடுகள் .

இந்த நன்னீரும் , கடல் நீரும் இணையும் இடத்தில உள்ள இந்த நீருக்கு உவர் நீர் என்று பெயர் . இந்த உவர் நீரில் 69 வகையான அலையாத்தி மரங்கள் வளர்கின்றன .

இதில் தமிழகத்தில் 17 வகையான மரங்கள் உள்ளன .

இதன் சிறப்பு என்னவென்றால் , உப்பு நீரை விடுத்து நல்ல நீரை மட்டும் உறிந்து  வாழக்கூடியது .

அதேபோல் கூவம் போன்ற இடங்களில் கூட கழிவு நீரை விடுத்து , நல்ல நீரை உறிந்து வளர கூடியது .

மேலும் இந்த மரங்கள் பற்றி பல அரிய தகவல்களை தருகிறது உயிர் இதழ் .

தமிழகத்தின் தற்போதைய மாசு பிரச்னை , மண் வள குறைபாடு மற்றும் காற்று , நீர் மாசுபாடு களை களைய  நல்ல திடமான காடுகளை உருவாக்க வேண்டும் .


அப்படி உருவாகும் பட்சத்தில் தான் தமிழக பிரச்சனைகள் தீரும் .
அப்படி எல்லா சூழ்நிலையும் வளரக்கூடிய காடுகள் இந்த அலையாத்திக்காடுகள் மட்டுமே !

தமிழக நீர் வளங்களை காக்க நதிகளை இணைத்தால் , அது இந்த சுந்தரவன காடுகளை அழித்து விடும் . அங்கு தான் முற்றிலும் பிரச்னை பெரிதாக ஆரம்பிக்கிறது .

எனவே நதிகளை இணைத்து கடலுக்கு நீர் செல்வதை தடுப்பது மிக தவறு !
அலையாத்திக்காடுகளை உருவாக்குவதே சிறந்த வழி !

இது தொடர்பாக மேலும் விவரம் அறிய உயிர் இதழ் படியுங்கள் !
அலையாத்தி காடுகள் ஆய்வாளர்களை தொடர்பு கொள்ளுங்கள் !

இந்த இதழ் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 72992 92364


20.2.2018



Monday 19 February 2018

ஹிந்தி கற்று கொள்ளுங்கள்


தமிழ் நாட்டில் பெருகி வரும் வடஇந்தியர்கள் .

திருப்பூர் , கோயம்பத்தூர் , சேலம் , சென்னை , கன்னியாகுமாரி என்று பெருகி வரும் வடஇந்திய மக்கள் 
ஊரையே நாசம் செய்து வருகிறார்கள் .

பலரும் கேட்கிறார்கள் , தமிழர் மட்டும் பிறமாநிலங்களில் வேலை பார்க்கலாம் .
தமிழநாட்டில் மட்டும் வேலை பார்க்க கூடாதா என்று ?

வெளியில் போன தமிழன் , எங்கும் தன மொழியை பிறர் கற்று கொள்ள கட்டாயப்படுத்தவில்லை. எந்த ஊரையும் எச்சில் துப்பி அசிங்கம் செய்ய வில்லை. மாறாக , பல ஊர்கள் பசுமையாக , வளமாக, மாற மட்டும் தான் வேலை பார்க்கிறான். ஆனால் இங்கு வருபவர்கள் அப்படி செய்வதே இல்லை.

இந்த கோட்பாடுதான் கடந்த 40 , 50 ஆண்டுகளாக இங்கு நடக்கிறது.

அதே போல் , இது சாதாரண விஷயம் இல்லை . இந்த மண்ணை அழிக்க பல காலம் திட்டமிடப்பட்ட வழிகளில் இதுவும் ஒன்று. இந்த மண்ணை பற்றி தெரியாத ஒருவனால் , இந்த மண் அழிவதை தடுக்க முடியாது. 
அவனுக்கு தான் இந்த மண்ணை பற்றி எதுவுமே தெரியாதே ! 


எனில் நாம் மிகப்பெரிய சூழ்ச்சி வலையில் இருக்கிறோம் .


நம்மளும் ஹிந்தி படிப்போம். இது திருப்பூரின் நிலை அல்ல. 

நாளைய ஒட்டு மொத்த தமிழகத்தின் நிலை. 
மாவட்ட ஆட்சியர்கள் பலர் தமிழர் இல்லை. 
காவல் துறை தலைமையில் 
தமிழர் இல்லை. 
நீதிமன்றத்தில் தமிழர் இல்லை. 
அரசு அலுவலர்கள்கள் பலர் தமிழர் இல்லை . 
போதாதா குறைக்கு , VAO தேர்வில் கூட பிற மாநிலத்தவர் தேர்வு எழுதுகிறான் என்றால் , அவன் கண்டிப்பாக வேலைக்கு வர போகிறான் என்றே அர்த்தம் . 
அப்போ கிராம புற மக்களும் ஹிந்தி அறிந்து கொள்ள வேண்டும் . அதற்க்கு தான் கிராம்தோறும் நவோதயா பள்ளிகள் வர இருக்கின்றன .
நம்மை சுற்றி பல விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன . சூழ்ச்சி வலைக்குள் நிற்கிறோம் . 
அதனால் ஹிந்தி மொழியை கற்று கொள்ளுங்கள் .
மொழியை கற்று கொள்வதில் தவறில்லை. ஆனால் அங்கு நம் மொழியை அடிமை ஆகிவிடக்கூடாது . 

அதே போன்றதொரு  சூழ்ச்சி  வலைக்கு தமிழகமும் தயாராக வேண்டும் . அது வரை புத்திசாலித்தனமாக வாழ முயற்சிக்க வேண்டும் . அதற்க்கு அவன் மொழி நமக்கு புரிய வேண்டும் .

ஹிந்தி கற்று கொள்ளுங்கள் !



ஹிந்தி மொழியை கற்று கொள்ளுங்கள் .
மொழியை கற்று கொள்வதில் தவறில்லை. ஆனால் அங்கு நம் மொழியை அடிமை ஆகிவிடக்கூடாது . 

வி.எச் .குரூப் - V.H.GROUP



வி.எச் .குரூப்

1971 ம் ஆண்டு , புனே யில் பி. வி. ராவ் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் வி.எச் .குரூப் .
வெங்கடேஸ்வரா குரூப் என்றும் venky குரூப் என்றும் வழங்கப்படுகிறது .
இவர் இந்தியாவின் , கோழி பண்ணைகளின் தந்தை என்று வழங்கப்படுகிறார்.
அந்த அளவிற்கு கோழிகள் சார்ந்த எல்லா பொருள்களும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது .



கோழிக்கு தேவையான உணவு பொருள்கள்
கோழி முட்டை பவுடர்
கோழி முட்டை , மஞ்சள் கரு பவுடர்
முட்டை வெள்ளை கரு பவுடர்,
கோழிகளுக்கான தடுப்பூசிகள்
கோழிகளுக்கு தேவையான மருந்துகள் ,



வீட்டுவிலங்குகளுக்கு தேவையான பொருள்கள்
மற்றும் தடுப்பூசிகள் , மருந்துகள்
நாய்களுக்கான உணவு முதல் எல்லாம்
தயாரிக்கப்படுகிறது.
கோழி , வான்கோழி , ஆடு , முயல் என எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசி இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது .
இவர்கள் தான் தடுப்பூசிக்கான அட்டவணையும் வழங்குகிறார்கள் .
குழந்தைகளுக்கு அல்ல. வீட்டு விலங்குகளுக்கு !

2010 ம் ஆண்டு லண்டன் Blackburn Rovers  என்ற கால்பந்து குழுவை வாங்கியது
மும்பை நடைபெறும் பாக்ஸிங் மற்றும் டென்னிஸ் போட்டிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்குகிறது .

தற்போது இதன் நிறுவனர் காலமாகிவிட்டதால் , அவர் வாரிசுகள் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் .


Thursday 15 February 2018

நாம் மறந்து விட்ட மரங்கள்

நாம் மறந்து விட்ட மரங்கள்

உசில் , வேங்கை , மருதம் , தடசு, இலுப்பை , தோதகத்தி , வன்னி , குமில், கடுக்காய் , தாண்டி என்று ஆயிரக்கணக்கான மரங்கள் இந்த மண்ணுக்கு சொந்தம் .
தமிழர்களை இந்த மரங்களை எந்த அளவிற்கு நேசித்தார்கள் எனபதை நம் ஊரின் பெயர்கள் சொல்லும் .
உசில் மரங்கள் இருந்தால் அந்த ஊர் பெயர் உசிலம் பட்டி
இலுப்பை மரங்கள் அதிகம் இருந்தால் அந்த ஊர் பெயர் இலுப்பையூர்
விளாமரங்கள் இருந்தால் அந்த ஊர் பெயர் விளாத்தி குளம்
வேப்ப மரங்கள் அதிகம் இருந்தால் அந்த ஊர் வேப்பங்குளம்
தாழைமரங்கள் இருந்தால் அது தாழையூத்து
வாகை மரங்கள் இருந்தால் அது வாகை குளம்
ஆலமரங்கள் இருந்தால் அது ஆலங்குளம்
அத்திமரங்கள் இருந்தால் அது அத்தியூர்
அரசமரங்கள் இருந்தால் அது அரசம்பட்டி
தாண்டி மரங்கள் இருந்த ஊர் பெயர் தாண்டி குடி

இன்னும் எல்லா ஊருக்கு பின்னும் ஒரு மரம் இருக்கும் . அதே போல்
குறுஞ்செடிகள் மட்டும் 4000 த்துக்கும் மேற்பட்டவை தமிழகத்தில் இருந்துள்ளன . இருக்கின்றன .
மக்களுக்குத்தான் அடையாளம் காண தெரியவில்லை .

ஒவ்வொரு மரத்திற்கும் தனி பண்பு உண்டு .
வறட்சியில் கூட வளரும் , உசிலமரம் . ஆனால் பரந்து விரிந்து நிழல் தரும் .
வேங்கை மரத்தில் குவளை போல் செய்து அதில் நீர் நிரப்பினால் சில நேரம் கழித்து செந்நிறமாகும் . அதை குடித்தால் , சர்க்கரை நோய் தீரும், .
மருத மரத்தின் பட்டை புற்றுநோய்க்கு  சிறந்த மருந்து .
இலுப்பை மரத்தின் இருந்து எண்ணெய் எடுத்து தான் முன்பு விளக்கேற்ற பயன்படுத்துவாங்க .
அதில் கண் எரிச்சல் ஏற்படாது .
தோதகத்தி மரத்தில் எது செய்தாலும் , அது காலத்திற்கும் அழியாது .
துவாரகாவில் கண்டெக்கப்பட்ட பொருள்களில் ஒன்று , தோதகத்தி மரத்தில் செய்தது . 4000 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இருக்கிறது .
அது போல் துத்தி செடி போட்டால் , பார்த்தீனியம் வளராது .

உசில் மரத்தின் இலையை பொடி செய்து தலைக்கு தேய்த்தால் அதுதான் ஷாம்பு
வழுக்கை மரம் என்று வழங்கப்படும் தடசு மரம் பட்டை சுடுநீரில் போட்டால் ஷாம்பூ ரெடி .
மருத மரத்தின் பட்டையை காய வைத்து , கஷாயம் பண்ணி குடித்தால் கொழுப்பு குறையும் .
தாண்டி மரத்தின் தாண்டி பழம் மூல நோய்க்கு சிறந்த மருந்து .மேலும் , சளி , வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் .


பேராசிரியர் . கண்ணன்
பழனி மலை பாதுகாப்பு குழு
தமிழக மரங்களை காக்கும் தன்னார்வ அமைப்பு .


படத்தில் இருப்பது மருத மரம் .



Wednesday 14 February 2018

தமிழக பெண்களுக்கான மரியாதை உண்டா ?


இந்த உலகமே ஒரு பெண்ணின் குழு அமைப்பில் தான் ஆரம்பித்தது என்று மனித வரலாறுகள் கூறுகிறது . இப்பவும் , எத்தனை பேரு, ஒரு பிரச்னையின்னா அப்பா கிட்ட ஓடி போய் சொல்றோம் . ?
அம்மா தான் முதலில் , பிறகுதான் , அப்பாவிற்கு அந்த விஷயம் போகும் .

தமிழ்நாட்டின் பெண்கள் கை ஒங்க பல  காரணங்கள் இருக்கு . தமிழ்நாட்டில்தான் ஒரு கேரளா பிள்ளையை பார்த்தாலும் ,
தமிழ்நாடு பெண்களையெல்லாம் அசிங்கமாக பார்க்குறாங்க !
அப்போ தன சுய மரியாதைக்காக அவள் அடுத்த கட்டம் நோக்கி செல்கிறாள்

ஏன்னென்றால் , அவளும் வேறு ஒரு கேரளா ஆணை பார்க்க கூடாது என , எழுத படாதா சட்டம் , அவளே அவளுக்கு எழுதி கொண்டாள்.

அப்புறம் ,
திருமணம் ஆன பிறகும் பல பேர் மதிப்பதே இல்லை . அவள் கையில் காசு இருக்கும் பட்சத்தில் தான் ஒரு சிலருக்கு , சிறிதாக பயம் வருகிறது . அந்த இடம் தான் அவளுக்கு பிடிச்சிருக்கு .
நிறைய தவறுகள் , ஆண் பெண்ணுக்கு இழைத்து விட்டான் , அப்புறம் அவள் , மேல வரும் போது  தான் குடும்ப பிரச்சனைகள் உருவாகின்றன .

 முகநூலில் எத்தனை பேரு தன தங்கை , அக்கா , மனைவியை தன நட்பில் வைத்து இருக்கிறார்கள் ?
பாதி பேரு , தங்கைக்கும் , அக்காவிற்கும் கட்டளை போடுறான் , முகநூல் பயன்படுத்த கூடாது என்று !
மனைவிக்கு , 7000 ரூபாய்க்கு செல்போன் வாங்கி தர மாட்டேங்குறாங்க !
அதை சுய உதவி குழுக்கள் செய்யுது . தனக்காக மரியாதையை , தன கணவன் மற்றும் , சகோதர வடிவில் ஆண்கள் தட்டி பறிக்கும் போதும் , டாஸ்மாக் வாசலில் அடகு வைக்கும் போதும் ,
அதிகாரத்தை அவளே கையில் எடுக்கிறாள் .




உரிமைகளை கொடுக்க ஆண்கள் முன்வர வேண்டும் . அத விட்டுட்டு , ஒரு ஆண் காதல் செய்யலாம் , ஒரு பெண் செய்ய கூடாது , தேடி தேடி வெட்டுவேன் என்றால் , அவள் என்ன செய்வாள் ?

ஒரு பிராமண பெண்ணும் , ஒரு கேரளா பெண்ணையும் மனதிற்குள் வைத்து கொண்டு அதே போல் தன மனைவியும் இருக்கணும் , இல்லையின்னா , அந்த சமூகத்து பெண்ணையே மணந்து கொள்வேன் என்றால் , தமிழ் நாடு வாழ் பெண்களின் நிலை என்ன ? எப்பப்பார்த்தாலும் பிராமண பெண்கள் அழகு , அறிவு , என்று பேசுவது . கேரளா பெண்ணை போல் நளினம் வருமா என்று கேட்பது , தெலுங்கு பெண்ணை போல் பணக்காரியா வேண்டும் என்று கேட்பது , இதெல்லாம் ஆண்கள் திருத்தி கொள்ளாது போனால் , சொல்ல கூடாத தவறுகள் நடக்கும் .

தமிழ்  பெண்கள் தைரியமாக ஒரு குடும்பத்தை வழி நடத்துவாள் .
அவள் சிறந்த தொலைநோக்கு சிந்தனை உள்ளவள் .
சொல்ல  முடியாத ஒரு ரணத்தை அவளுக்கு இந்த சமூகம் செய்து கொண்டே இருக்கிறது .

என்ன செய்வாள் அவள் ?

தமிழக பெண்கள் சிறந்த போராளிகள் .
ஆனால் அவள் கையில் இருக்கும் ஆயுதம் யாருக்காக வீச பட வேண்டும் என்பதை , தமிழக ஆண்கள் தான் சிந்திக்க  வேண்டும் .

மரியாதை எனப்படுவது ,
லஞ்சம் வாங்கி நகை வாங்கி தருவதில் இல்லை .
தனிக்குடுத்தனம் செல்வதில் இல்லை .
மாமியார் வீட்டுக்கும் காசு பணம் கொடுப்பதில் இல்லை .
அடுக்கடுக்காய் புடவை வாங்கி தருவதில் இல்லை .
பெரிய வீடுகளை அவள் விரும்புவதே இல்லை .

அன்போடும் , அழகோடும் பார்க்கும் பார்வையில் இருக்கிறது .
அவளை புகழும் சின்ன சின்ன பொய்களில் இருக்கிறது .

இந்த ஒன்றை ஈடு செய்ய முடியாமல் தான் ,
அது வேண்டும் , இது வேண்டும் என்று பெண்கள்
தேவைக்கு மிஞ்சிய எதோ ஒன்றை தேடுகிறாள் .
தேவைக்கு மிஞ்சிய இந்த தேடலை தான் யார் யாரோ பயன்படுத்தி கொள்கிறார்கள் .
வியாபாரிகள் உட்பட !
இதன் விளைவு , மிக பெரியதாக வளர்கிறது .

இந்த இயற்கையும் , சமூகமும் வாழ , உங்கள் வீட்டு
பெண்ணையும் கொஞ்சம் மரியாதை செய்யுங்கள் !


Tuesday 13 February 2018

அசுரன்

அசுரன் என்ற புத்தகத்தில் , 

ராவணன் தானே பேசுவது போல் பதிவு கொண்ட  புத்தகம் அது .
அதிலே கூறுவான் ராவணன் , 
அசுரருக்கும் , தேவருக்கும் சண்டை நடக்கும் போதெல்லாம் , 
முழுவதுமாக எல்லோரும் சண்டை இட வேண்டாம் , என்று கூறி 
இரு தலைவர்களும் சண்டை இட்டு கொள்வார்களாம் . 
அப்படி நடக்கும் சண்டையில் , அசுரர் படையும் , தேவர் படையும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்குமாம்.
அதிலே தேவர் படை தலைவன் , வெற்றி பெற போகிறான் என்றால் , முதலில் கைதட்டி , சிறந்த வீரன் என்று பாராட்டுவது அசுரர் படைகல் தானாம் .
அங்கே அசுரர் தலைவன் இறந்து கிடப்பானாம் .
அதுவே அசுரர் தலைவன் வெற்றி பெற போகிறான் என்றால் ,
தேவ படையில் இருந்து எல்லோரும் தீடிரென தாக்கி , அவர்கள் தலைவனை காப்பாற்றி விடுவார்களாம் .
எப்படி பார்த்தாலும் , தேவர்கள் வெற்றியாளர்கள் !

பத்மாவதி திரைப்படத்தின் கடைசி காட்சி இது தான் !
நாமெல்லாம் அசுரர்கள் !
நமக்காக போராடிய எவரையும் காப்பாற்ற மாட்டோம் . 
குறைந்த பட்சம் எதிரியை கொண்டாடாமல் ஆவது இருக்க வேண்டும் .
அதுவும் செய்ய மாட்டோம் .
அங்கு தான் நாம் அடிமை ஆகிறோம் .

ராவணன் விஷயத்தில் தமிழகம் ஒன்றே ஒன்று தான் இன்னும் செய்யவில்லை .
தசரா அன்று , ராவணன் சிலை செய்து தீ வைக்க வில்லை .
அதையும் விரைவில் செய்வோம் .


13.2.2018




Thursday 8 February 2018

கோழிகளுக்கான தடுப்பூசி முகாம்


பெப்ருவரி 1 முதல் 15 வரை கோழிகளுக்கான தடுப்பூசி முகாம் .தமிழக கால்நடை துறை அறிவிப்பு .
------------------------------------------------

கோழி வளர்பவர்களே உங்கள் கோழிக்கு தடுப்பூசி போட்டுடீங்களா ? இல்லையென்றால் உடனே உங்கள் அருகாமையில் கால்நடை மருத்துவமனையை அணுகவும் .
இப்படி சொல்ல விருப்பம் இல்லங்க !

இந்த தடுப்பூசி , ப்ராய்லர் கோழிக்கு தான் , நாட்டு கோழி எல்லாம் நல்லாத்தான் வளருது , அப்புடின்னு தான் நினைச்சோம் . ஆனால் நாட்டு மாடு முதல் கோழி , வாத்து வரை எல்லாவற்றிற்கும் தடுப்பூசி என்றால் என்ன நியாயம் ?

விவசாய மக்களுக்கு தெரியும் , உரம் விஷம் என்று , பூச்சி கொல்லி மருந்து விஷம் என்று !
ஆனா இன்று வரை அதை போட்டு தான் விவசாயம் பண்றங்க !
இதுல , விவசாயிகளிடம் அரிசி வாங்கி உண்ட மக்கள் இருக்கும் முன் விவசாயி இருந்து போகிறார்.
அவ்வளவும் பூச்சி கொல்லி மருந்து செய்யும் வேலை .
தெரிந்தும் , தானும் செத்து , மண்ணையும் அழித்து , அதை உணவாக கொண்ட மக்களையும் அழித்து ,
வாழும் இந்த வாழ்க்கை கேள்வி குறியாக இல்லையா ?
ஒவ்வொரு விவசாயியும் , உணவு வழங்கும் கடவுளுக்கு சமம் , எனில் கடவுள் விஷத்தை கொடுப்பாரா ?

நேற்று வரை யார் யாரோ போதித்தார்கள் , ஏமாந்து போனோம் .
என்பது கூட பரவா இல்லை . ஆனால் இன்றும் பூச்சி கொல்லி மருந்தும் , உரமும் போட்டு தான் , விவசாயம் செய்வேன் என்பது நியாயமா ?>


நெல்லுக்கு விஷம் போட்டு விஷம் போட்டு , மண்ணை முழுவதுமாக அழிச்சிட்டோம் .
அப்புறம்  கோழிக்கும் . மாட்டுக்கும் தடுப்பூசி போட்டு தான் வளர்ப்பேன் என்பது ,
நெல்லின் பூச்சி மருந்துக்கு சமம் இல்லையா ?

கிட்டத்தட்ட 50 புற்றுநோய் மருத்துவமனைகள் தமிழகத்தில் இயங்குகின்றன .
யாருக்காக ?
விவசாயிகளுக்காக !

வேண்டாம் உரம்
வேண்டாம் பூச்சி கொல்லி மருந்து
வேண்டாம் தடுப்பூசி .

2 லட்சம் பருத்தி விவசாயிகள் இறந்ததற்கு மூல காரணம் மருந்து என்பதை நினைவிற் கொள்ளுங்கள் !


Tuesday 6 February 2018

எல்லாம் அவன் செயல் !.

ஏழையும் பணக்காரனும் !

ஏழைகள் என்றால் மிகவும் கஷ்டத்தில் இருப்பவர்கள் .
பணக்காரர்கள் என்றால் மிகவும் சந்தோஷத்தில் இருப்பவர்கள் .

ஏழைகள் என்றால் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் 
பணக்காரர்கள் என்றால் எல்லா போராட்டத்தியும் வேடிக்கை பார்ப்பவர்கள் .

ஏழைகள் என்றால் அடிவாங்கி துன்பப்பட்டு , துயரப்பட்டு , மிதிபட்டு வாழ்வார்கள் 
பணக்காரர்கள் என்போர் வேடிக்கை பார்ப்பவர்கள் .

உண்மை என்ன தெரியுமா ?

ஏழை என்பவன் தான் சம்பாதித்தை அன்றே செலவு செய்து , ஒவ்வொரு நாளையும் ஆனந்தமாக கழிப்பவன் .
பணக்காரன் என்பவன் , அன்றாடம் தன் தேவைகளை சுருக்கி கொண்டு , சேமித்து வைப்பவன்.



ஏழைகள் இருப்பதால் தான் டாஸ்மாக் இயங்குகிறது.
இந்த வருமானத்தை சேமிக்க எந்த ஏழையும் யோசிப்பதே இல்லையே !
மனக்கவலை மறக்க , உடல் வலி குறைய என்று காரணங்கள் பல இருக்க ,
ஒரு நாள் வருமானம் மட்டும் 70 கோடி ரூபாய் . மதத்திற்கு 2100 கோடி ரூபாய் . ஆண்டுக்கு 25200 கோடி ரூபாய் .
இவை எல்லாம் , எதிரில் நின்று சிந்தியுங்கள் , அது ஏழைகளின் சேமிப்பு பணம் . மற்றொருவரின் வருமானமாக மாறுகிறது.
யாரேனும் கட்டாயப்படுத்தினார்களா , நீயே டாஸ்மாக் போய் தான் ஆகவேண்டும் என்று !

நான் ஏழையாக இருக்கிறேன் என்று நாமே , நம் கையிருப்பை எவரிடமோ ஒப்படைத்தால் அதன் பெயர் விதியா ?

பணக்காரன் என்பவன் தான் உண்மையிலேயே ஏழை . அவன் தன வருமானத்தை , தன சுகதிற்காக கூட அனுபவிக்காமல் ,யாரோ முன்னேற , வங்கியில் சேமித்து வைக்கிறான் . தன சுகங்களை கட்டுப்படுத்தி அவன் சேமித்த பணத்திற்கு கூட வரி செலுத்துகிறான் .
அவர்கள் தான் வட்டி வாங்குகிறார்கள் என்று கேட்காதீர்கள் . அது வட்டி அல்ல . இவனை ஏமாற்ற கண்டுபிடிக்க பட்ட திட்டம் \

என்றேனும் , ஏழைகள் தன்னுடைய வருமானத்திற்கு வரி செலுத்தியது உண்டா ? அப்படி என்றால் என்ன என்றே தெரியாது. 

விற்பனை செய்யப்படும் பொருள்களில் மறைமுக வரி எல்லோராலும் செலுத்த படுகிறது. 
 உண்மையில் இங்கு ஏழையும் , பணக்காரனுக்கு ஒன்று தான் .
இவன் ஏழை என்றும் இவன் பணக்காரன் என்றும் , எங்கோ ஒருவரால் தீர்மானிக்கப்படுகிறது.

அந்த ஒருவன் , ஏழை என்பவனிடம் அன்றாடம் எப்படி மகிழ்வாய் வாழ்வது என்று சொல்லி தருகிறான் .
பணக்காரன் என்பவனிடம் , எப்படி சுகத்தை சுருக்கி கொள்வது என்று சொல்லி தருகிறான் .
இருவராலும் அந்த ஒருவனுக்கே ஆதாயம் !

இவன் டாஸ்மாக் கில் கொடுத்தாலும் அவனுக்கு லாபம்தான் !
அவன் வங்கியில் சேமித்தாலும் அவனுக்கு லாபம்தான் !

இந்த ஏழை என்ற வர்க்கம் , எப்போதுமே அந்த ஒருவனுக்கு வேண்டும் .
அப்போது தான் திட்டங்கள் என்ற பெயரில் , சலுகைகள் என்ற பெயரில் ,
இலவசம் என்ற பெயரில் கொள்ளை அடிக்க முடியும் .
எனில் அவன் எப்போதுமே ஏழையாக இருக்க வேண்டும் . அதற்காக தான் , அரசு மதுக்கடைகளை வைத்து , மருத்துவத்தையும் வைத்து , 
தன வாழ்நாளை நீடிக்க வகை செய்து கொள்கிறது.



அதே போல் , பணக்காரன் வரையறை செய்யப்பட்டவன் , வாழ்நாள் முழுக்க ஓடி கொண்டே இருக்கிறான் . சேமிப்பு. இன்சூரன்ஸ் , முதலீடு , பங்குகள் என்று ஓடி ஓடி வாழ்க்கையை தொலைகிறான். 
இவனை இப்படியே வைத்திருந்தால்தான் , அரசுக்கு  மேலும் மேலும் வரி வருமானமும் , இதரப்பிர வகையிலும் வருமானம் கிடைக்கும் .

இந்த அரசு என்பது ஏன் ஏழைகளையும் , பணக்காரனையும் வைத்து விளையாட வேண்டும் ?
ஏழை , பணக்காரன் என்ற இரட்டை மாட்டுவண்டியில் , வண்டி ஓட்டுவது தான் அரசு . பயணிப்பவன் யார் ?

கார்ப்பரேட் எனும் வணிகம் !
இப்போ யோசித்து பாருங்கள் !
ஏழையும் , பணகாரனும் அந்த மாட்டு வண்டியில் சமமாக தானே கட்டப்பட்டு இருக்கிறார்கள் .
இருவரும் ஒன்று தானே !

ஏழைகளை இழிவுபடுத்தும் பணக்காரனும் , 
பணக்காரனை சபிக்கும் ஏழையும் 
ஒன்றுதான் !

இந்த இருவரும் இப்படி இருக்கும் வரைதான் வணிகம் என்னும் பயனாளி 
ஆண்டவனாகவே இருக்க முடியும் !

எல்லாம் அவன் செயல் !.


Monday 5 February 2018

பக்தி இயற்கையை அழிக்குமா ?


சபரி மலை , பழனி மலை , மேல்மருவத்தூர், வேலூர் அம்மா , வேளாங்கண்ணி ,என்று நம் சுயலாபத்திற்காக , பெரிய பணக்காரன் ஆகணும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு இறைவனை தேடி செல்லும் பக்த கேடிகளே ,
தயவு செய்து , பிளாஸ்டிக் பொருள்களை மலைகளிலோ , கடலிலோ கொட்டாதீர்கள் .
உங்களால் அங்கு வாழும் உயிர்கள் அழிகின்றன .

2004 சுனாமி யில் அதிக நஷ்டம் ஏற்பட மூலகாரணம் , வேளாங்கண்ணி விரிவாக்கப்பட்டதுதான் . சுற்றிலும் பாதுகாப்பிற்காக இருந்த மரங்களை அழித்து தான் , பக்தர்களுக்காக வேளாங்கண்ணி விரிவாக்கப்பட்டது. 

இன்று திருவண்ணாமலை , சுற்றிலும் கிரிவலத்திற்க்காக , பல்வேறு வகையான மரங்கள் அழிக்கப்படுகின்றன .

சமயபுரத்தில் , ஒரு ஆறே மூடப்பட்டு பக்தகோடிகளுக்காக ஏதோதோ வேலை நடக்கிறது.

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் வழி நெடுகிலும் எவ்வளவு புண்ணை மரங்கள் இருக்கும் தெரியுமா ? சமுத்திரக்கரை நிறைய நீரோடும் தெரியுமா ? அத்தனையும் பக்தகோடிகளுக்காக சாலைகள் விரிவாக்கம் என்ற பெயரில் அழிக்கப்படுகிறது.


இயற்கையை அழித்து பக்தகோடிகளுக்காக வேலை நடக்கிறது என்றால் தெரிந்து கொள்ளுங்கள் , 
அங்கு நடப்பது வழிபாடு அல்ல . 
வியாபாரம் !
ஆம் பக்தி என்பது வியாபாரம் .
போக்குவரத்து தொழில் வளர்கிறது . தேவை இல்லாமல் உயோகிக்கப்படும் பெட்ரோல் கூட , இயற்கை அழிவே !
ஹோட்டல்கள் பணம் பார்க்கிறது . அந்த கட்டுமானம் கூட மரங்களை அழித்து தான் !
கோவில்களில் , வழிபாடும் நேரத்தை விட அதிக நேரம் , ஷாப்பிங் நேரம் .
அதன் பெயர் , சொல்லி தெரியவேண்டியதில்லை .

நீங்கள் இறைவனை வணங்கும்  நுகர்வோராக இருக்க ,
இயற்கை அழிக்கப்பட்டால் ,
எந்த இறைவனும் உங்களுக்கு ஆசி வழங்கமாட்டான் . 
சாபம் தான் கொடுப்பான் .

எந்த ரிஷி முனிவராவது இறைவனை தேடி கோவில்களில் தவம் செய்த கதையை எங்காவது நீங்கள் கேட்டது  உண்டா ? 
காடுகளுக்குள் , நீருக்குள் , நெருப்பிற்குள் தான் தவம் செய்வார்கள் .

ஆனால் நவீன கால பக்தர்கள்தான் , காட்டையும் , நீரையும் அழித்து விட்டு இறைவனை தேடுகிறார்கள் .

முதலில் எப்போப்பார்த்தாலும் , கோவிலுக்கு போகணும்னு அவசியம் இல்லை .
அப்படி நீங்க அடிக்கடி கோவிலுக்கு போவது உங்கள் வழக்கம் எனில் , உங்களுக்கு 
கோவில் என்றால் என்ன என்று தெரியவில்லை என்றே பொருள் !

கோவில் பிரசாரம் , 
இயற்கையை அழிக்கும் எனில் அப்படி ஒரு வழக்கம் தேவை இல்லை .



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...