Friday 7 April 2017

ரமணா படம் பாத்தீங்களா ?

ரமணா படம் பாத்தீங்களா ?


ரமணா திரைப்படம் 2002 ம் ஆண்டு AR .முருகதாஸ் இயக்கத்தில் , ஆஸ்க்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளி வந்த படம் .

முருகதாஸ் இதுவரையில் எடுத்துள்ள திரைப்படங்கள் , தீணா , ரமணா ,  7 ம் அறிவு , கஜினி , துப்பாக்கி அப்புறம் கத்தி இவ்வளவுதாங்க !

இதில் தீணா தவிர மற்ற படங்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்ப எதுக்கு இந்த தகவல் ?

காரணம் இருக்கு!

ரமணா திரைப்படத்தில் , ஹீரோவின் பின்னால் பல பேர் வேலை பார்க்கிறார்கள் என்பதை கண்டறிந்த ஒரு போலீஸ் மட்டும், அவர்கள் யார் யார் என்று தேட ஆரம்பிக்கும். முதலில் அவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்று கண்டறிந்து , அவர்களுக்குள் என்ன ஒற்றுமை உள்ளது என்று தேடும் போது , ஒரு ஒற்றுமையும் இருக்காது.

மீண்டும் தேடுவார் அந்த போலீஸ் காரர். அப்போது இரண்டாம் நிலை தகவலில் ஒன்றை கண்டறிவார். அது என்னவெனில் , அவர்கள் அனைவரும் ஒரே கல்லூரியில் ஒரே பேராசிரியரிடம் பயின்றவர்கள் . இந்த தகவல் தான் அவர்கள் யார் யார் என்று  கண்டு பிடிக்க உதவும் .

அதே கதை மீண்டும் துப்பாக்கி படத்தில் ஹீரோவின் துணை ஆள் என்பதில் இருந்து வில்லனின் ஆள்கள் என்று மாறி இருக்கும். இப்போது முருகதாஸ் அவர்களுக்கு பெயர் சூட்டுகிறார். அவர்கள் ஸ்லீப்பர் செல்கள் என்று கூறுவார். அதற்க்கு விளக்கமும் கொடுப்பர். தெரிந்தோ , தெரியாமலோ , நம்மை சுற்றி பலரும் அந்த வில்லன்களுக்காக வேலை பார்க்கிறார்கள் என்று கூறுவார்.

இந்த கதையை இப்படியே நினைவில் கொள்ளுங்கள்!

ஏனெனில் , இலுமினாட்டிகள் யார் யார் என்று எண்ணுகிறீர்களா , அல்லது சந்தேகம் கொள்கிறீர்களோ அவர்கள் யார் என்று கண்டறிவது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்களது வெளிப்புற முகவரி வேறு வேறாக இருக்கும். ஆனால் , இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும் .

இப்படியாக 13 நிலையில் வெவ்வேறு தரப்பு மக்கள் இதில் உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் உள்ளவர்கள் ,வெவேறு ஊர்களில் வேவேறு மொழிகளில் பிறந்தவர்கள் . ஆனால் அங்கு ஒரு ஒற்றுமை இருக்கும்.


அப்படி ஒரு நிலைதான் உள்ளவர்கள்:


அம்பானி

அதானி

டாடா

பிர்லா

வல்லபாய் படேல்

P  .B .கோத்ரேஜ்

இவர்கள் எல்லோரும் , தொழில் துறை மற்றும் அரசியல் துறையில் இருப்பவர்கள். அனால் இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது.

அது தாங்க இவங்க எல்லோரும் பார்சி இனம்.

இதில் முக்கியமாக இருவரை  விட்டுவிட்டு தான் கூறுகிறேன்.

ஒருவர்  முகம்மது அலி ஜின்னா .
மற்றொரு குடும்பம் வாடிய குடும்பம்.

நீங்கள் ஜின்னா வை நினைத்தாலே கோபம் கொள்பவரா ? எனில் இன்று முதல் பிரித்தானியா தயாரிப்புகளை உண்ணாதீர்கள்.

ஏன் எனில் ஜின்னாவின் பேரன் தான் பிரித்தானிய நிறுவன முதலாளி . டைகர் பிஸ்கட் உட்பட!


ஜின்னா தனது ஒரு தலைமுறைக்கு முன்பு தான் இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறியவர். முதல் தகவல் படி அவர் இஸ்லாமியர். இரண்டாம் தகவலின் படி அவர் பார்சி இனத்தவர்.

ஆனால் ஜின்னா , தன தலைமுறையில் தனக்கு திருமணம் ஆன பிறகு , ஒரு பார்சி பெண்ணை விரும்பி மணம் புரிந்து கொள்கிறார். காந்தி நல்லவரா , ஜின்னா நல்லவரா என்று யாரேனும் கேட்டால் , நான் ஜின்னாவை தான் குறிப்பிடுவேன் என்று கூறுகிறார் காந்தி மற்றும் ராஜாஜியின் பேரன்.
 ( காந்தியின் மகனும் , ராஜாஜியின் மகளும் காதல் திருமணம் செய்தவர்கள் . அந்த வகையில் இருவரும் சம்பந்தி )

அப்படி வாழ்ந்த ஜின்னாவிற்கு தெரியாமலேயே , அவரது மனைவி வழி உறவுகள் கொல்கத்தாவில் இந்து முஸ்லீம் பிரச்சனைக்கு வழிவகுத்தன. இதனை தொடர்ந்து பீகாரில் , முஸ்லீம்கள் கொல்லப்பட , அதை தொடர்ந்து மும்பையில் இந்துக்கள் கொல்லப்பட இவ்வாறு மாறி மாறி பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தது. இதன் விளைவு தான் பாகிஸ்தான் என்று வெளி தகவல் கூறுகிறது.

ஆனால் இந்த இடங்களில் ஜின்னா சரியான முறையில் பயன்படுத்தப்பட்டார். பிரிஷாரின் பிரித்தாளும் கொள்கை. இந்தியா வில் இருந்து , பஞ்சாப் , பலுசிஸ்தான், வங்கம் தனித்தனி நாடுகளாக மாறும் என்று வாக்கு கொடுத்தனர். இதை போன்றே , திராவிட நாடும் கிடைக்கும் என்று நம்பிய, அல்லது மக்களுக்கு நம்பிக்கை கொடுத்த திராவிடர்கள் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்தனர்.

இதே போன்றே இலங்கையில் , சிங்கள , தமிழ்நாடுகள் பிரியும் என்றும் ,

மலேசியாவில் மலாய் , தமிழ் , சீனா மக்களுக்கென நாடுகள் பிரித்து தரப்படும் என்று வாக்கு கொடுத்திருந்த ஆங்கிலேயர்கள் ,

ஜின்னாவை கொண்டு காய் நகர்த்தி , பாஞ்சாபையும் பலுசிஸ்தானையும் , பாகிஸ்தான் என்று பெயர் மாற்றினர் .

இலங்கை பிரியவில்லை. காரணம் , இந்து முஸ்லீம் போல் சிங்கள தமிழ் பிரச்னை இருக்காது என்று கூறினார்.

மலேசியாவிலும் வாக்கு பொய்யானது.

ப்போது தமிழர்கள் மற்றும் பஞ்சாப் இனம் பிரிக்க பட்டாகி விட்டது. இவர்கள் பிரிந்து தான் இருக்க வேண்டும் என  முடிவு செய்து தீர்மானம் நிறை வேற்றி இருந்தார்கள் போலும் !

பிறகு என்ன ? வேலை முடிந்து விட்டது .  ஜின்னா மகளின் பிறந்த தினத்திலேயே சுதந்திரம் வழங்கப்பட்டது .

ஆனால் ஜின்னாவும் நாட்டை ஆள வில்லை . அடுத்த 6 மாதங்களில் இறந்து போனார். அவருக்கு காசநோய் என்று கூறப்படுகிறது. உண்மையா என்பது அவருக்கு மட்டுமே தெரியும் !

இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை உருவாக்கிய மௌண்ட்பேட்டன் பிரபுவின் , மகன்தான் பிலிப் . அவர் மனைவி தான் ,

இங்கிலாந்து ராணி  எலிசபெத் !

அடுத்தது ஜின்னா வின் மருமகன் அந்த வாடியாவை பற்றி பாப்போம் !
இவரும் ஒரு பார்சி தான்.


இந்தியாவை பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் மாபெரும் குடும்பம்.இந்திய மருத்துவம்,தொழில்நுட்ப்பம் எல்லாம் இவர்களின் கைகளில்தான் உள்ளது.

போக்குவரத்து துறையும் இவர்கள்தான், காப்பீடு துறையும் இவர்கள் தான் !


நம் வரலாறு புத்தகம் நம்மிடம் ஏன் இதையெல்லாம் சொல்வதில்லை ?






(சோராப்ஜி, மோடி, காமா, வாடியா, ஜீஜீப்ஹோய், ரெடிமனி, டாடிசெத், பெட்டிட், பட்டேல், மேத்தா, ஆல்ப்லெஸ், டாட்டா மற்றும் பலர் பார்சி இன பிரிவினர் )


-------------------------------

ரஜினி காந்த்  - இலுமினாட்டியா ?

சமீப காலமாக , ஹீலர் பாஸ்கர் , சீமான் இவர்கள் உரை, கார்த்திக் ஸ்ரீனிவாச போன்ற எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள்  மற்றும் you tube கூறும் சில கருத்துக்களின் அடிப்படையில் மக்களுக்கு ஓரளவுக்கு இலுமினாட்டிகள் யார் என்பதும், அவர்களின் நோக்கம் என்ன என்பதும் எல்லோருக்கும் தெரிகிறது.

இந்நிலையில் இந்தியாவில் யார் யார் இந்த குரூப்பில் இருக்கிறார்கள் என்றும் ஒரு சிலர் கருத்து கூறுகிறார்கள் .

அதே சமயம் , தமிழகத்தில் உள்ளவர்கள் யார் என்று கூறும்போதும் அதில் ரஜினி முதல் இடம் பெறுகிறார். ஒரு வேளை ரஜினி தான் தமிழகத்தில் இருந்த முதல் இலுமினாட்டியா என்றால் மிக மிக தவறு .அவருக்கு முன்பே 100 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இன்னும் சொல்ல போனால் மிக பெரிய  வரலாறே உள்ளது.

சரி , அதை பற்றி கொஞ்சம் கொஞ்சமா பார்க்கலாம்.

அதுக்கு முன்னாடி , ரஜினி பற்றி பேசுவோம்.

ரஜினி காந்த ஒரு இலுமினேட்டி என்று வடஇந்திய எழுத்தாளர் ஒருவர் 4 ஆண்டுகளாக எழுதி வருகிறார். ஆனால் தமிழ்நாட்டிலோ , தென் இந்தியா விலோ இலுமினேட்டி என்றாலே என்ன வென்று யாருக்கும் தெரியாது .

அந்நிலை இன்று இல்லை என்று நிச்சயமாக கூறலாம். முழு விவரம் தெரியாவிட்டாலும் ,ஓரளவிற்கு இலுமினேட்டி என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரிவது என்பது ஹீலர் பாஸ்கர் என்ற மாமனிதனால் தான் என்றால் அது மிகை ஆகாது .

முதலில் இலுமினாட்டிகளின் சின்னங்கள் என்னென்ன என்று பாப்போம். பிறகு நீங்களே புரிந்து கொள்வீர்கள் ரஜினி ஒரு இலுமினேட்டி என்று !

ஒற்றை கண்

பிரமிடு

ஐந்து முக நட்சத்திரம்

 ஆறு முக நட்சத்திரம்

காபாலா எனும் ரகசிய மதம்

பெண் கடவுளுக்கு தரும் நரபலி

சாத்தானின் கொம்பு

V எனும் வெற்றி குறியீடு

கருமை வெண்மை கொண்ட சதுரங்கம்

சிகப்பு நிற சூரியன்

இரட்டை தலை கழுகு

நாய்

666 என்ற எண்

இதை எல்லாம் கடந்த , சாத்தானின் மீது உள்ள நம்பிக்கை.பேய்களை நல்லவர்கள் என்று நம்புவது.

மாயா ஜாலங்கள் நிறைந்தது தான் இந்த இலுமினாட்டிகளின் வாழ்க்கை .


இப்போ ரஜினிக்கும் இதற்கும் என்ன தொடர்பு என பாப்போம்.

ரஜினி யின் முழு பெயர் சிவாஜி ராவ் காய்க்வாட் . இந்த காய்க்வாட் என்பது குடும்ப பெயர். இவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்திருந்தாலும் , குஜராத் தான் இவரது பூர்வீகம். ( மகாராஷ்டிரம் பிரிக்கப்படும் இருந்த ஒருங்கிணைக்க பட்ட மாநிலம் )இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் . குஜராத் மாநிலம்  , இந்தியா வரலாற்றில் முக்கிய இடம் .


ரஜினி , சிவாஜி ராவ் என்ற பெயரில் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றும் போது , குஜராத் மக்களின் ரகசிய குழு என்ற பெயரில் மும்பையில் ஒரு குழு இயங்கி வருவதை அறிந்து , நண்பர் ஒருவரின் உதவியுடன் தனது முதல் மாத சம்பளத்தில் 666 ரூபாய் செலுத்தி இலுமினேட்டி குழுவில் உறுப்பினர் ஆகி உள்ளார். அப்போது பெற்ற அந்த சான்றிதழ் ரஜினியின்  வீட்டில் இப்போதும் இருப்பதாக அந்த வடஇந்திய எழுத்தாளர் கூறுகிறார். மேலும் அங்கு தான் இவருக்கு ரஜினி காந்த என்று பெயர் மாற்றப்படுகிறது.

1975 ல் அபூர்வ ராகங்கள் என்ற கலாசார சீர்கேடு சார்ந்த தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆகிறார்.

பிறகு சில படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் , தானே திரைப்படங்களுக்கு பெயர் வைப்பேன் என்ற ஒப்பந்தத்தின் பெயரில் தான் திரைப்படங்களில் நடிக்கிறார்.

1978ம் ஆண்டு ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரை படத்தில் , ( இது ஒரு பேய் படம் ) இருந்து தன்னுடைய குழுமத்திற்கு விசுவாசியாக மாறுகிறார்.

ஆனால் மக்களிடம் எம்ஜிஆர் பெற்ற பேரை பெற வேண்டும் என்ற  எண்ணத்தில் ,

அதே ஆண்டு வெளியான பைரவி என்ற திரைப்படத்திற்கு , தாணுவை வைத்து தனக்கு தானே சூப்பர் ஸ்டார் என்று பெயர் சூட்டி கொள்கிறார். அதே படத்திற்கு அண்ணா சாலையில் 80 அடி உயர கட்டவுட் வைக்கிறார். இது தான் கட் அவுட் கலாச்சாரத்தின் சாதனைகள் வளர காரணமாக அமைந்தது.

இந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும், இலுமினாட்டிகளின் சின்னமே.
பைரவி என்பது நாய் என்று பொருள் படும்.

மீண்டும் வெண்மையும் கருமையும் கொண்ட சதுரங்கம் கொண்ட போஸ்டரோடு வெளியாகிறது சதுரங்கம் திரைப்படம் .  இதுவும் 1978 ல் தான் வெளியாகிறது. ( இன்றும் விசுவநாதன் ஆனந்த பயன்படுத்தும் சதுரங்கமும் இது தான் என்பது வியப்பாய் உள்ளது . )

பிறகு அல்லாவுதீனும் அற்புத விளக்கும் என்ற திரைப்படத்தில் மாயாஜாலங்களோடு நடித்தார் .

காளி என்னும் திரைப்படம் , இலுமினாட்டிகளின் பெண் தெய்வத்தை குறிக்கவும், டைகர் திரைப்படம் மீண்டும் நாயை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.

1980 ல் இவர் நடித்த திரைப்படத்தின் பெயர் நட்சத்திரம். இதுவும் இலுமினேட்டி சின்னம்




நாம் நினைப்பது போல் முரட்டு காளை திரைப்படம் , ஜல்லிக்கட்டில் பெருமை பேசுவது அல்ல. 1980 ல் தான் இந்த திரைப்படம் வெளிவந்தது . அதில் ரஜினி இரண்டு கொம்புகளோடுதான் நிற்பார். இலுமினேட்டி களின் முக்கிய சின்னம் இது.

1981 ல் கழுகு என்ற திரைப்படம் வெளிவந்தது . கழுகும் இவர்களது சின்னம்தான். அதே சமயம் இந்த திரைப்படத்தில் முழுவதுமாக நரபலி கொடுப்பது குறித்தும், யார் யாரை நரபலி கொடுக்கிறார்கள் என்பது குறித்தும் கூறியுள்ளார்.

1981 சுதந்திர தினத்திற்கு வெளிவந்த திரைப்படம்தான் நெற்றிக்கண் . ஒற்றை கண் அல்லது நெற்றி கண் இதுவும் முக்கிய சின்னம் தான்.

1982 ல் கெட்டவர்களை எல்லாம் நல்லவனாக காட்ட வேண்டிய சூழ்நிலையில் , வடஇந்திய ரௌடிகள், துடி துடிக்க காவல்துறை அதிகாரியின் குழந்தைகளை நடு ரோட்டில் கொன்ற ரங்கா வின் பெயரை ஹீரோ என்ற அந்தஸ்திற்கு கொண்டு வந்தார்.

பின்னர் , தன்னை குறித்து மூன்று முகம் , நான் மகான் அல்ல , நான் சிவப்பு மனிதன் என்று பெயர் கொடுத்தார் ரஜினி.

சிவப்பு சூரியன் திரைப்படமும் , மாவீரன் திரைப்படமும் கூட இலுமினேட்டி சின்னங்கள். இந்த ஊர்காவலன்  என்றால் knight templers என்று பொருள்.

அதே போல் இவரது எல்லா படங்களிலும் சம்பந்தமே இல்லாமல் மாய ஜால காட்சிகள் சில இருக்கும். குருசிஷ்யன் படத்திற்கும் , அதன் இறுதி காட்சிக்கும் என்ன சம்பந்தம்?

அதிசய பிறவி , இறப்பிற்கு பின் என்ற நோக்கோடு எடுக்கப்பட்டது.

பாபா படம் சொல்லவே வேண்டாம்.

சந்திரமுகி படமும் பேய் கதைதான்.

இதில் கடைசியில் சேர்ந்தது தான் கபாலி . இதுவும் அவர்களது கடவுளின் பெயர் ஆகும்.

நீங்களே ஒப்பிட்டு பாருங்கள் , ரஜினி தன ரகசிய குழு சார்ந்த பெயர்களை மட்டுமே தனது திரைப்படத்திற்கு வைப்பார் .

அது மட்டும் இல்லாமல் சம்பந்தம் இல்லாத மாயாஜால காட்சிகளும், இரட்டை மனைவி ஆதரவும்  இவரது திரைப்படங்களில் காணலாம்.

கபாலி திரைப்படம் முடிந்ததும் , ரஜினியும் அவரது மகளும் அமெரிக்காவில் ஓய்வெடுக்க சென்றனர். யாரவது தனது மகளோடு ஒய்வு நாட்களை கழிப்பார்களா ? மனைவியுடன் அல்லவா செல்ல வேண்டும். அப்படி சென்றதால் தான் , இரண்டு மாதங்கள் கழித்து தமிழ்நாடு திரும்பும் போது ஐஸ்வர்யா ரஜினி ஐ .நா வில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு செயலர் ஆனார். 

இதற்க்கு முன்பு சென்ற பயணத்தில் தான் சௌந்தர்யா விலங்குகள் பாதுகாப்பு நல செயலர் ஆனார்.

ஆனால்  இன்றும் தமிழ்நாட்டில் சிலர் , ரஜினி ஒன்றுமே தெரியாத அப்பாவி என்பது போல் பேசி வருகின்றனர்.

அது தான் வேடிக்கையாக உள்ளது.

யோசித்து பாருங்கள் ஐ.நா வில் நுழைவது சுலபமா ?
ஒருவர் தனது பாஸ்போர்ட்டை மறந்து விட்டால் அந்த விமானம் காத்திருக்குமா ?

ரஜினி அந்த அளவிற்கு முக்கியமானவர் . இலுமினாட்டிகளின் கை எங்கேல்லாம் ஓங்கி உள்ளதோ அங்கெல்லாம் இவர் எதையும் பெறுவார். இதன் அடிப்படையில் தான், மலேசியா மன்னர் இவருக்கு விருந்து வைத்தார்.

ஒபாமா வும் கபாலி படம் பார்த்தார்.

ஜப்பானில் ரஜினி கொடிகட்டி பறக்கிறார்.

அமெரிக்காவில் இவரது திரைப்படம் வெளியாகிறது.

இதோடு இல்லாமல் இவர் , இவரது குழுவில் இல்லாதவர்களுக்காக பேசுவதும் கிடையாது .பார்ப்பதும் கிடையாது.

ஷாருக் கானும் சந்திக்கிறார். தோனியும் சந்திக்கிறார்.

இவர் எமன் படத்தையும் பாராட்டினார்.

மொட்டை சிவா கெட்ட சிவனையும் பாராட்டினார்.

குற்றம் 23 யம் பாராட்டினார்.

அது மட்டும் அல்ல , சமீபமாக , பல நடிகர்கள் ரஜினி நடித்த அதே பெயரில் நடிப்பதும், அவரது பாடல்களை ரீமிக்ஸ் செய்வதும் ஏன் தெரியுமா ?

இப்போது சேர்ந்திருக்கும் நடிகர்கள் எல்லாம் , டாப் மோசட் சீனியரின் படத்தை, பட பெயர்களை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று சட்டம் உள்ளது போலும்.

லாரன்ஸின் படங்கள் எல்லாம் பேய் படங்கள் என்பதையும் நினைவிற்கொள்க !

G.v பிரகாஷ் , சூர்யா , தமன்னா , பிரபு தேவா , விஜய் சேதுபதி , என்று பேய் படத்தில் நடிப்பவர்கள்  லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம் !


radhamania.blogspot.com/.../superstar-rajnikant-is-illuminati





வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...