Thursday 31 May 2018

ராவணன் எனும் புரிதல்

முதலில் ராவணன் தமிழன் தானா என்று ஆய்வு செய்யாதீர்கள் ?

இராவணனை தமிழன் இல்லை என நிரூபிக்க முயற்சிக்காதீர்கள்.
ஏனெனில், தமிழன் இலங்கையின் பூர்வகுடி இல்லை என்றும், அந்த சிங்கள நாடென்றும், இலங்கை உரிமை கொண்டாடி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ராவணன் எனும் கதாபாத்திரம், மிக பெரிய ஆதரமாக இங்கு நிற்கிறது.
மேலும், 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் கதையில், 10000 ஆண்டுகளாக வாழும் தமிழனும் உண்டு என்பதில், என்ன மாற்று கருத்து இருக்க முடியும்?

தமிழக ஜாதிகளை தேடி பாருங்கள், இந்தியா முழுக்க உண்டு

கால ஓட்டம், கலப்பால், எல்லோரும் பிரிந்தனர்
நாம் சுருங்கி விட்டோம். தமிழக மண்ணில் மட்டும் கலப்பு நிகழவில்லை.
ஆரியகலப்பு நிகழவிடாமல், பலர் தடுத்து இருக்கிறார்கள்
மிக பழைமையான வரலாறுகள் இருக்கிறது.


----------------------------------------------

ராவணன் வடஇந்தியனா ?

இல்லை .
ராவணன் என்பது தமிழ் பெயரே
ரா வண்ணன் என்றால்
கருப்பு என்றே பொருள்.

ராம என்பதும் தமிழ் பெயரே
தமிழை பின் னிருந்து முன்னோக்கி எழுதுவது தான் வடமொழி வழக்கம்

ராம = மாற

மாறன் என்னும் தமிழ் பெயரை கொண்டு இரு வேறு தமிழ் கூட்டங்களுக்குள் சண்டை மூட்ட உருவாக்கப்பட்டன கதை

என்றுமே, தமிழ் இனத்திற்குள், சண்டை மூட்டும் வழக்கம் வந்தேறிகளுக்கு உண்டு.


ராவணன் வாழ்ந்த காலம் வேறு , ராம எனும் மாறர்கள்  வாழ்ந்த காலம் வேறு .
தொடர்பே கிடையாது .

------------------------------------------------------------------


ராவணன் என்பவன் வாழ்ந்தானா ?

வாழ்ந்தது மட்டும் உண்மை
இந்தியா முழுக்க வே, ராவணன் எனும் கருப்பு  வணங்கபட்ட நிலையில்,

இங்கு வந்து குடியேறிய மக்கள்
ராவணன் குறித்து, சிறு அறிவும் இல்லாமல், மக்களின் பேச்சு வழக்கை மட்டும் கொண்டு,
ஹோமரின் கதைகளை திணித்து எழுதபட்ட காவியமே ராமாயணம் .
இதனை அக்காலத்திலேயே எதிர்த்து, அதனை பரப்பியவர்களை தண்டித்தவர்கள் தான் இலங்கை மக்கள், இதன் அடிப்படையில்,
இலங்கையே பூர்வீகமாக இருக்க வேண்டும்.
அன்று தண்டித்ததை பலி வாங்க தான்,
இலங்கை சபிக்க பட்ட பூமி என்று வர்ணித்தான் ரஜினி.
பலி வாங்கப்பட்டது.


------------------------------------------------------------------

ராவணன் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருக்கிறதா ?


 இலங்கையில் உள்ள, ராவணமலையை, தான் ஆதாரம் காட்டுகிறார்கள்.
மேலும் 5000 ஆண்டுக்கு முந்தைய கதை
யாரும் பெரிதாக ஆய்வு செய்யவில்லையே.
ஆனால்,
சீனாவில் உள்ள மருத்துவ புத்தகமும், வட இந்திய ராவண கோயில்களும்
தான், ஆதாரம் தருகின்றன.



ராவண கோயில்கள் கூட இங்கு இல்லை,
இது இரு வேறு இன குழுக்கள்செய்த வேலை,
விழாக்கள், கோயில்கள் கட்டுவது நமக்கு வழக்கம் இல்லை
அதனால் தென்னிந்தியா, மற்றும் இலங்கையில்  இல்லை
ஆனால், சுங்க வம்ச காலத்திற்கு முந்தைய காலத்தில் மெளரியகுலம் , கிரேக்க தொடர்பு கொண்டதால் கோயில் கட்டும் வழமைக்கு வந்துள்ளது.
அதுதான் தொடர்கிறது .எல்லாம், 1800 ஆண்டுகள் கொண்ட வரலாறு தான்
, உண்மையில் ராவணன் காலம் வேறு,
இவர்கள் கூறும் கதையின் காலம் வேறு,
எந்த கருப்புக்கும் இன்று வரை நாம் கோயில் கட்டுவது இல்லை



ராவணன் என்பவன் ஒரு கருப்பு 

ராமாயணம் . சுங்க வம்ச பிராமணர்களால் எழுதப்பட்டது .
அவர்கள் யூத கலப்பு கொண்டவர்கள் .
அங்கு இருந்து ஆரம்பித்த  பிரச்னை இன்று வரை தொடர்கிறது .



Sunday 27 May 2018

தமிழர் வணிகம் என்றால் என்ன ?

பலர் வணிகம் என்றதும் , கார்பொரேட் பொருள்களை வாங்கி விற்பது என்று எண்ணி கொள்கிறார்கள் .

உற்பத்தியை கையில் எடுக்க வேண்டும் .
அப்படியும் , உற்பத்தியை கையில் எடுத்த பலர் ,
முதலில் உள்ளூரில் விற்கவோ , உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றவோ தயார் இல்லை .

மாறாக ஏற்றுமதி செய்து , தான் மட்டும் முன்னேறி கொள்ளவே முயற்சிக்கிறார்கள் .
2017 ம் மட்டும் , திருப்பூர் பின்னல் ஆடை உற்பத்தி செய்தவர்கள் , ஏற்றுமதி செய்தது மட்டும் 12500 கோடி ரூபாய் . அதே ஆடைகள் , வெளி நாடு சென்று மீண்டும் , பிராண்டு பெயர் மாற்றி , நம்மிடமே விற்பனைக்கு வருகிறது . இந்த உற்பத்தியால் என்ன பயன் ? தஞ்சை மற்றும் திருச்சியில் இருந்து மலர்கள் எல்லாம் ஏற்றுமதி செய்யப்பட்டு , உள்ளூரில் கிலோ 500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் வரை விற்பனை ஆகிறது .

இயற்கை வழி உற்பத்தியும் சரி , தொழில் நுட்ப உற்பத்தியும் சரி , உள்ளூர் தேவைகளை நிறைவு செய்யாமலேயே , வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது . அங்கு இருந்து , மீண்டும் வணிகமாக மாறி நம் பணத்தை சுரண்டுகிறது .

தொடர்ந்து இதை செய்ய மட்டுமே , இந்திய அரசு ஊக்குவிக்கிறது . நாம் வாங்கும் பொருள்கள் , நேரடி உற்பத்தியாளரிடம் இல்லை . அதே சமயம் , உற்பத்தி செய்பவர்களும் விற்பனை செய்ய தயார் இல்லை . இதனை பயன்படுத்தி ஏற்றுமதி செய்யும் எல்லா பொருளுக்கும் 10 % மானியமாக அரசு வழங்குகிறது . மேலும் இந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் வரை , ஏற்றுமதி க்கு தேவையான , கட்டமைப்பு செய்ய மட்டும் அரசு ஒதுக்கியுள்ளது .

உற்பத்தியை விட முக்கியம் , அதை யாருக்கு செய்கிறோம் என்பதில் உள்ள புரிதல் !

தமிழர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் எனில் ,
தமிழர் உற்பத்தி பொருள்
தமிழருக்கே முதலில் என்றும் ,
எஞ்சியவையே ஏற்றுமதி ஆகும் என்றும்
நம்மால் கூற முடியுமேயானால்

அது தான்
தமிழர் உற்பத்தி வணிகம் !


Saturday 26 May 2018

வளர்ச்சி தேவை இல்லை

தூத்துக்குடி ஸ்டெர்லிட் ஆலையை மூடி விட்டால் , காப்பருக்கு என்ன செய்வீர்களாம் ? உங்கள் வீட்டில் உள்ள அணைத்து மின்சாதன பொருள்களும் இதனை கொண்டுதான் இயங்குகிறது தெரியுமா ? காப்பர் உடம்புக்கு நல்லது என்று சொன்னால் ஏற்று கொள்கிறீர்கள் ! ஆனால் ஆலை மட்டும் வெண்டோமோ என்று
அறிவாளி தனமாக கேள்வி கேட்கப்பர்வர்களை காணும் போதும் ,

மீத்தேன் இல்லாமல் எப்படி , சமையல் செய்வீர்களாம் என்று கேள்வி கேட்பவர்களை காணும் போது ,

வளர்ச்சி இன்றி போனால் தமிழகம் அழிந்து விடும் என்று கூறும் போதும் ,

இத்தனை பெரிய முட்டாள்களோடு , இந்த தமிழகம் வாழ்கிறதே என்று அருவருப்பாக உள்ளது .

20 ஆண்டுக்கு முன்பு வந்தது தான் இந்த ஆலைகள் , காஸ் , வளர்ச்சி எல்லாம் !

பல ஆயிரம் ஆண்டுகளாக ,
இதே மீத்தேன் , இதே தாமிரம் எல்லாம் பயன்படுத்திய இனம் இது !
அவை எல்லாம் இயற்கை வழி !

அதன் பயன் வணிகம் அல்ல ! எங்கோ உள்ள லண்டனில் , உள்ள பணக்காரன் வாழ அல்ல !
பின்விளைவு தராத அறிவியலை பயன்படுத்திய இனத்திற்கு ,
நோய்களோடு வரும் வளர்ச்சி தேவை இல்லை !



Thursday 24 May 2018

தற்சார்பை நோக்கி நட !

தூத்துக்குடி மட்டும் அல்ல ,
தமிழகத்தையே காப்பாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்தால் ,
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் .

தமிழகத்தில் இருந்து , இனி வருமானம் வரக்கூடாது .
எனில்
வரி செலுத்துவதை நிறுத்த வேண்டும் .
வரி என்றவுடன் எல்லோரும் வருமான வரியை பற்றி மட்டுமே பேசுகிறோம் .
அது ஒரு பெரிய விஷயமே இல்லை .
ஏனெனில் , இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் வருமான வரி செலுத்துவோர் மொத்தம் 5 % கூட கிடையாது .
மறைமுகமாக , நாம் செலுத்தும் GST தான் முக்கிய வருவாய் !



பாக்கெட்டில் , பாட்டிலில் , டியூபுகளில் அடைக்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருளையும் வாங்காதீர்கள் .
ஏனெனில் அந்த பொருள்களில் தான் வரி சேர்த்து வாங்கப்படுகிறது .
வரி விதித்து அரசுக்கு சேவை செய்வதாக கூறும் உணவகங்களில் உண்ணாதீர்கள் !
அவசர சிகிச்சை அல்லாத , வேறு எந்த ஒரு விஷயத்திற்கும் மருத்துவமனை தேடாதீர்கள் . ஒவ்வொரு மருந்து பொருளொடும் , நம் பணம் , முதலாளிகளின் திமிரை அதிகரிக்கிறது .
கட்டாயம் அல்லாத எந்த ஒரு காப்பீடும் போடாதீர்கள் !
கட்டாயம் அல்லாத சேமிப்பு என்ற பெயரில் , உங்கள் பணத்தை கொண்டு முதலாளிகளை வளர்க்காதீர்கள் !
அந்த வரி பணமும் , விற்பனை விலையும்தான்  திட்டமும் தீட்டப்
உதவுகிறது .

உள்ளூரில் உள்ள விற்பனையாளர்களை தேடுங்கள் !
உங்கள் அருகாமையில் மாடு வைத்து இருப்பவரிடம் பால் வாங்குங்கள் !
( பாக்கெட் பால் கூட வேண்டாம் )
உங்கள் வீட்டில் , காய்கறி , பழம் தரும் மரங்களை வளருங்கள் !

ஏனெனில் ,
நாளை நாமும் 144 க்கு கீழ் வரலாம் .
கற்பக விருட்சமும் ( பனை மரம் ), காம தேனுவும் ( எருமை மாடுகள் ) இருந்த , கொற்கை
தூத்துக்குடி யாக மாறி ,
இன்று 144 எதிர்கொண்டு நிற்கிறது .
நாளை நாமும் ,
ஏன் என்ற கேள்வி இல்லாமல் , சட்டத்திற்குள் அடைக்கப்படலாம் .அல்லது சூழ்நிலைகள் உருவாக்கப்படலாம் .

தற்சார்பு என்று பலபேர் கத்தியத்தின் அர்த்தம் ,
இன்று தூத்துக்குடியில் !
நாளை நம்ம ஊரிலும் !


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...