Monday 28 November 2016

ரொக்கமில்லாத வர்த்தகம் சாத்தியமா ?

நேற்று 2016 நவம்பர் 27 அன்று ,இந்தியா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் ரொக்கமில்லாத வர்த்தகம் பற்றியும் , அதற்கான இளைஞர்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறினார் .
அதன் சுருக்கம் :

 அவர் கூறியிருப்பதாவது

 இந்த ஆண்டு , இந்தியா ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினேன் என்று கூறியுள்ளார் .
காஷ்மீர் பஞ்சாயத்து தலைவர்கள் பலர் ஒன்று கூடி ,அவரை சந்தித்து பெருமை படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
500 , 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நோட்டாக அறிவித்துள்ளதால் , 4 பெண்கள் ஒன்று கூடி 2000 ரூபாய்க்கு பொருள்களை வாங்கி கொண்டு , அதன் செலவுகளை வீட்டில் வந்து பங்கிட்டு கொண்டதாகவும் ,
பீகார் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு A T M இயந்திரம் வேண்டும் என்றதால் அதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் ,

இவ்வாறு மக்கள் கேட்பதால் , நாட்டில் உள்ள மக்கள் டிஜிட்டல் முறைக்கு மாற தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் upi ,e -purse , rupay பற்றியும் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு வேண்டும் என்றும் , அதற்காக ஒவ்வொரு இளைஞரும் , ஒரு நாளைக்கு 10 குடும்பகளுக்கு , ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பற்றி சொல்லி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் .

பிரதமரின் உரைக்குள் பல விஷயங்கள்  உள்ளன .:

( ஒரு சராசரி இந்தியனின் சிந்தனை இது )

1. ரொக்கமில்லாத வர்த்தகம் நடைபெற எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும். ( தற்போது இந்தியாவில் 22 கோடி மக்கள் மட்டுமே ஸ்மார்ட் போன் பயன்படுகின்றன. இது இந்திய மக்கள் தொகையில் 17% மட்டுமே ஆகும் .மீதம் உள்ள தேவைகளை நீக்க முதியவர்கள் , குழந்தைகள் இவர்கள் எண்ணிக்கை போக , குறைந்த பட்சமாக ஒரு போன் 5490 ரூபாய் என்று கொண்டாலும் 27450 கோடி ரூபாய் ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு லாபமாக போய் சேரும் . நம் மக்கள் அத்தனை செலவு செய்வார்களா ?)

2.  இந்த வர்த்தகம் குறித்து வணிகர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்க வேண்டும் . இது அரசின் கடமை.

3.  கையெழுத்து கூட போட தெரியாமல் , வணிகம் செய்பவர்கள் தான் , இந்தியாவில் அதிகம் . இவர்களுக்கு ஒரு வழி கூற வேண்டும்.

4.  ஸ்மார்ட் போன் கையில் இருப்பதை விட , ரொக்கமில்லா வணிகம் தொடர்பான ஆப் மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும்.

5. குறிப்பாக எல்லா இடங்களிலும் வை பை வசதி இலவசமாக கிடைக்க வேண்டும் . ( குறைந்த பட்ச இணைய வசதி செய்வதாயினும் மொத்த செலவு 35000 கோடி ரூபாய் ஆகும் ) இதன் மூலம் சராசரி இந்தியனின் மாதாந்திர வருமானத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் அதிக செலவு ஆகும் .

6 .ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மாதந்தோறும் , வங்கிகள் பிடிக்கும் சேவை வரி கட்டணத்தை நிறுத்த வேண்டும்.( குறைந்த பட்சமாக 100 ரூபாய்க்கு 2 ரூபாய் வீதம் இந்தியாவின் மொத்த வர்த்தகத்துக்கும் அமெரிக்கா பெரும் லாபம் 1700 லட்சம் கோடி என்பதையும் அறிந்து கொள்வோம். இதன் மூலம் இந்தியாவின் அந்நிய செலாவணி குறைந்து பணமதிப்பும் குறையும் )

7. ஒருவர் பணத்தை , அவரது password பயன்படுத்தி , வேறு ஒருவர் எடுக்காமல் இருக்க வழி செய்ய வேண்டும். ( இது சார்ந்த வழக்குகள் பல நீதிமன்றம் வந்து செல்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. சராசரி இந்தியன் எப்படி அதை ஏற்பான் ? )

india pic with black money க்கான பட முடிவு


8. தனது வீட்டின் எதிர்புறத்தில் உள்ள பால் காரருக்கோ , கீரை விற்பவருக்கோ , பணம் கொடுக்க இடைத்தரகர் எனும் வங்கியை தேடுவது , எல்லோரையும் தனிமை படுத்தும் நடவடிக்கை போல் மாறும் .

9. அது மட்டும் அல்லாமல் , எவரும் இதை விரும்ப மாட்டார்கள்.

10. இதன் குழப்ப , முறைமைகளானது பண்டமாற்று முறைக்குத்தான் அழைத்து செல்லுமே ஒழிய , வங்கிகள் மூலம் நடைபெறுவது சற்று சாத்தியப்படாது.

11. என் வீடு , என் ஊர் , என் உறவுகள் , எனக்கு தெரிந்த மளிகை கடைக்காரர் , என் வீட்டோடு ரத்த பந்தம் இல்லாது , உறவு போல் நடந்து கொள்ளும் பால் காரர், என் வீட்டின் விழாக்களுக்கு சமைப்பவர், பாத்திரம் துல க்குபவர் என என் சார்ந்தவர்களோடு நான் செய்து கொள்ளும் ரொக்க பரிவர்த்தனைகளை , எங்கோ இருக்கும் யாரோ ஒருவர் பரிசோதிப்பதும், அவர் அதனை நிர்வகிக்க முற்படுவதும்  மனதளவில் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் வேறு ஒருவர் தலையிடுவது போலும்  உணர்வையே ஏற்படுத்துகிறது.

12. என்னிடம் உள்ள எல்லா பரிவர்தனைகளையும் , வங்கிகள் மூலம் காட்டுவது குடும்ப உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

13. மனைவிக்கு தெரியாமல் , தன உறவுகளுக்கும், தனது நண்பர்களுக்கும் உதவி செய்யும் கணவர்களுக்கும் , கணவருக்கு தெரியாமல் தன தாய் தகப்பனுக்கு பண உதவி செய்யும் மனைவிமார்களும் என எல்லோரும் கோர்ட் வாசலிலே நிற்க வேண்டும் .

14. நம் நாட்டின் பிரச்னை,  எல்லா மக்களும் , வங்கிகளை பயன்படுத்தே தீர வேண்டும் என்பது அல்ல . நாட்டின் கருப்பு பணம் இல்லாமல் இருப்பதே !

15. இதன் அடிப்படை தவறு செய்தவர்கள் மக்கள் அல்ல. கஸ்டம்ஸ் துறை அதிகாரிகள் . வருமான வரி அதிகாரிகள் . லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் . நன்கொடை என்ற பெயரில் மக்களை கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்களும் , அரசியல் வாதிகளும்.

16. என் நாட்டில் எல்லோருக்கும் இலவச கல்வி என்று கிடைக்கிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

17. என் நாட்டில் எல்லோருக்கு இலவச மருத்துவம் என்று கிடைக்கிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

18 . என் நாட்டின் விவசாயிகள் , என்றைக்கு சலுகை பொருள் எல்லாம் எனக்கு வேண்டாம் , எனது உற்பத்தி பொருளுக்கு நான் விலை வைக்க எனக்கு உரிமை வேண்டும் என போராட்டம் நடத்தி வெற்றி பெருகிறானோ , அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

19. கலாசார சீர்கேட்டால் , அநாதை பிள்ளைகளும் , ஊனமுற்ற பிள்ளைகளும் , வயது  முதிர்ந்த மக்களும் பெருகி விட்ட நாட்டில் , அவர்களுக்கான வாழ்க்கையை அரசு மட்டுமே கொடுக்கும் , தனியார் தேவை இல்லை என்று , என்றைக்கு சட்டம் வருகிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும்.

20 . சினிமா நடிகர்களும், விளம்பரத்துறையினரும் , வணிக பெரு மக்களும், மத உணர்வாளர்களும்  நடத்தும் டிரஸ்ட் எனப்படும் அறக்கட்டளைகள் என்று இந்தியாவில் இருந்து ஒழிகிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும் .

21. என்று இந்திய கனிம வளங்கள் ஏற்றுமதி நிறுத்த படுகிறதோ , அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும் .

22. பிற  நாடுகளில் உள்ளது போல் 5 ஆண்டுகள் , 10 ஆண்டுகள் என வருமான வரியை முறையாய் செலுத்தியவர் ஓர் ஆண்டு வேலை இன்றி இருந்தால் அவருக்கு அரசு ஊதியம் தரும் என்று சட்டம் வருகிறதோ அன்று கருப்பு பணம் ஒழிந்து விடும் .

23 . 5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்பர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் இந்தியாவில் , அவர்கள் கணக்குகள் வங்கிகள் மூலம் நடைபெற்றாலே போதும் கருப்பு பணம் ஒழிந்து விடும் .

24. எங்கும் , எவருக்கும் ரசிகர் மன்றங்கள் நடத்துவது கூடாது , அதற்கென வசூல் செய்வதோ , அதற்க்கு செலவு கணக்கு காட்டவோ கூடாது என்று கூறினாலே போதும் , கருப்பு பணம் ஒழிந்து விடும் .

25. வகுப்பில் , படிக்கும் மாணவர்களில் யாரெல்லாம் சரியாக படிக்க மாட்டார்கள் என்பது ஒரு ஆசிரியருக்கு தெரியாமல் இருக்காது. தெரிந்தும் எல்லா மாணவர்களுக்கும் தண்டனை கொடுப்பது சரியான ஆசிரியருக்கு அழகல்ல ! மன்னவனுக்கும் , மந்திரிக்கும் கூட இது பொருந்தும் !

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்ப செயல் .

-                                                    திருவள்ளுவர் 


Sunday 20 November 2016

உலக ஆண்கள் தினம்






உலக ஆண்கள் தினம் நவம்பர் 19 ம் தேதி கொண்டாடப்படுகிறது .

ஏன் என்று தெரியுமா ?


1907 ல் டிசம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த மேற்கு வெர்ஜினியாவில் உள்ள மோனங்கைத்  இருந்த சுரங்க தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தினால் 361 ஆண்கள் இறந்து போயினர். இதில் 250 பேர் தந்தையர் .

எனவே அவர்களுக்கு நன்றி சொல்லும் வண்ணம் , 1908 ம் ஆண்டு ஜூலை மாதம் 8 ம் தேதி கொண்டாடப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் 3 வது ஞாயிறாக மாறியது .இது 2015 ம் ஆண்டிக்கு பிறகே பிரபல மாக்கப்பட்டது .

எனில் தந்தை ஆகாத ஆண்கள் , நிலை என்ன ?

திருமணம் ஆகாத ஆண்கள் என்று கூற கூடாது . தந்தை என்ற நிலையை அடையாத ஆண்களும் அதில் இறந்து போயினர் அல்லவா ? அவர்களுக்கும் நன்றி சொல்லும் வண்ணம் கொண்டாடப்படுவதே ஆண்கள் தினம் .

ஆனால் இதை கொண்டாடித்தான் ஆண்களை பெருமை படுத்த வேண்டும் என்ற அவசியம் தமிழர்களுக்கு இல்லை .

இங்கு ஆணிடம் பெண் நடந்து கொள்ள வேண்டிய முறைகளும் ,
பெண்ணிடம் ஆண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளும்,

இருவரும் ஒருவருக்கொருவர் நன்றி கூறுவது எப்படி என்பதும் மரபாய் , மரபணுவோடு வளர்ந்து வருவது .

பெண்கள் தினம் , ஆண்கள் தினம் , அன்னையர் தினம், தந்தையர் தினம் இதெல்லாம் தமிழனுக்கு தேவை இல்லை .

வாழ்க தமிழ் இனம் !

Monday 14 November 2016

சுண்டை வற்றல் குழம்பு - வயிற்று பூச்சியின் மருந்து





sundaivatral க்கான பட முடிவு



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றில் உள்ள பூச்சி .

இது குழந்தைகளுக்கு மட்டும்தான் வரும் என்று கூறுவது மிகத்தவறு .

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட எல்லோர் வீடுகளிலும் வாரத்திற்கு ஒரு முறை வயிற்று பூச்சிக்கு மருந்து சாப்பிட்டு வந்தனர் . இப்போது தான் நாகரிக மயக்கத்தில் அதை விட்டு விட்டோம்.

இது குறித்து கூறும்போது  இவ்வாறு கூறுவார்கள்.


தினமும் ஒரு முறை
வாரத்திற்கு ஒரு முறை
மாதத்திற்கு இரு முறை
ஆண்டுக்கு ஒரு முறை       என்று!


தினமும் ஒரு முறையாவது பற்களை சுத்தம் செய்

வாரம் ஒரு முறையாவது வயிற்றை சுத்தம் செய்

மாதம் இரு முறையாவது உடல் உறவு கொண்டு உடற்கழிவை சுத்தம் செய்

ஆண்டுக்கு ஒரு முறையாவது வீடுமுழுவதையும் சுத்தம் செய் !



இது சுத்தம் குறித்து வழக்கத்தில் இருக்கும் பேச்சு!


இதன் அடிப்படையில் , வாரத்திற்கு ஒரு முறை யாவது வயிற்றில் உள்ள பூச்சிகளை களைய வேண்டிய அவசியம் எல்லோருக்கும் உள்ளது.

ஆனால் அதை மருந்து வழிதான் செய்ய வேண்டும் என்ற அவசிய இல்லை .

சாப்பாடு மூலமாகவும்  வயிற்றில் உள்ள பூச்சிகளை விரட்டலாம் ..


அது தாங்க சுண்டை வற்றல் குழம்பு .

சுண்டைக்காயை இரண்டாக வெட்டாமல் , கொஞ்சமாக பிளந்து அதனை சாம்பாரில் போட்டு சமைத்து சாப்பிட பூச்சிகள் அழியும்.



ஆனால் எல்லா இடங்களிலும் சுண்டைக்காய் கிடைப்பதில்லை . ஆனால் சுண்டைவற்றல் கிடைக்கும்.

கொஞ்சம் சுண்டை வற்றல் எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள் .
கொஞ்சம் புளி கரைத்து வடிகட்டி , அதில் தக்காளி கரைத்து , அதனுடன் 2: 1 என்ற விகிதத்தில் மல்லி தூளும் ,மிளகாய் தூளும்  சேர்த்து சரியான அளவு உப்புடன் கலந்து ஒரு 5 நிமிடங்கள் ஊற விடுங்கள் .

அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு , கொஞ்சம் வெந்தயம் , கொஞ்சம் உரித்த பூண்டு , வெங்காயம் இட்டு வதக்கி அதில் ஏற்கெனவே கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி கொதிக்க விடுங்கள்.


வேறொரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சுண்டைக்காய்
வற்றலை மிதமான தீயில் வதக்கி , அதை கொதிக்கும் குழம்பில் விடுங்கள்.

கொஞ்சம் தேங்காயிம் , கொஞ்சம் சோம்பு ( பெருஞ்சீரகம் ) சேர்த்து அரைத்து இறக்கும் நேரத்தில் ஊற்றி ஒரு கொதி மட்டும் விட்டு இறக்கி விட வேண்டும்.

சுண்டை வற்றல் குழம்பு தயார்.

இதற்கு சுட்ட அப்பளம் , சரியாக இருக்கும்.


இது ஒரு சிறந்த மருந்து வயிற்று பூச்சிக்கு !

மற்றொரு மருந்து உண்டு .

தினமும் அல்லது வாரம் இரு முறையாவது பப்பாளி பழம் 
உண்ணுங்கள் .

அது வயிற்றில் புழு பூச்சி தங்க விடாது .


Friday 11 November 2016

இந்தியா ரூபாயின் வரலாறு ( சுருக்கமாக )- பல்வேறு நாடுகளின் பண மதிப்பு !

பணம் என்ற வார்த்தை , எல்லோருக்கும் வாழ்க்கையின் ஒரு அங்கம்.

அனால் இந்த பணம் சார்ந்த சில வித்யாசமான கருத்துக்கள் அறிவோமா ?

@   சந்திர குப்த மௌரியர் காலத்து நாணயங்களின் பெயர் பனாஸ் .

இந்த வார்த்தையில் இருந்து வந்தது தான் பணம் எனும் வார்த்தை.


@ உலகம் பணம் என்ற கருத்தாக்கத்தை இந்தியாவில் இருந்தே பெற்றது .

@ உலகில் முதன்முதலில் கி.மு. 3 ம் நூற்றாண்டிலேயே பணத்தையும் , நாணயங்களையும் பயன்படுத்தியது இந்தியா தான்.

@ அதற்க்கு ரூபாயி என்றும் ரூபாய் என்றும் பெயரிட்டது இந்தியாதான்.
ரூபா என்றால் அழகான உருவம் என்றும் , வடிவமைக்கப்பட்டது என்றும் அர்த்தம் .

@ தங்க நாணயங்கள் ஸ்வர்ண ரூபா என்றும் தாமிர நாணயங்கள் தாமிர  ரூபா இரும்பு நாணயங்கள்  சிச ரூபா என்றும்  வழங்கப்பட்டுள்ளன .

@ 1540 - 1545 வரை ஆட்சி செய்த சூரி வம்சத்தை சேர்ந்த ஷெர்ஷா சூரி என்ற மன்னரே இந்தியாவில் நாணய பயன்பாட்டை கொண்டு வந்தார் . இவர் தான் அஞ்சலகம் என்பதை ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Silver coins with raised writing


@ அதனை தொடர்ந்து மொகலாய மன்னர் அக்பர் அதனை பின்பற்றினார். 

@ ஆரியர் வருகைக்கு முன்னமே , இந்தியாவில் நாணய பயன்பாடு இருந்துள்ளது என்று கூறுகிறார் ராகுல் சாங்கிருத்தியாயன் .

@ கி.பி. 990 களில் தான் முதன்முதலில் , ராஜ ராஜன் சோழன் ஆட்சியின் போது நாணயங்கள் தயாரிக்கப்பட்டன என்று  பொன்னியின் செல்வன் வழியாக கூறுகிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி .
how foreign currencies are having indian language க்கான பட முடிவு



@  1934 களில் இந்திய ரிசெர்வே வங்கி தொடங்கப்படும் வரையிலும் கூட அந்தந்த மாகாணங்கள் தனியாக ரூபாய்கள் அச்சிட்டுள்ளன.


how foreign currencies are having indian language க்கான பட முடிவு



@ போர்த்துகீசியர்கள் தனியாகவும் , ஆங்கிலேயர்கள் தனியாகவும் , சீனா வங்கி கூட இந்தியாவில் செயல்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.





@ அந்த ரூபாய் தாள்களில் கூட ஹிந்தி மொழி இடம் பெற வில்லை.

@  பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் , இந்தியா ரூபாய் , பிரிட்டிஷார் எங்கெல்லாம் ஆட்சி செய்தனரோ அங்கெல்லாம் மதிப்புடையதாக இருந்துள்ளது .

@ இந்தியா சுதந்திரத்தின் போது அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய மதிப்பை 4 ரூபாய் என்று மாற்றியுள்ளார் அப்போதைய பிரதமர் நேரு .

@ 1967 ம் ஆண்டில் இந்திரா காந்தி 7 ரூபாய் 50 காசுக்கு மாற்றி யுள்ளார் . 

@ இவ்வாறு இந்தியா தன பண மதிப்பை குறைக்க முக்கிய காரணமாக கூறப்படுவது இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் இந்தியா சீனா போர் .

@ இப்போர்களை எதிர்கொள்ள ஆயுதங்கள் பெற வேண்டி இந்தியா தனது பண மதிப்பை குறைத்து , அக்காலகட்டத்தில் இருந்த அனா க்கள் ,, முறை மாற்றப்பட்டு முழுமையாக 100 பைசா 1 ரூபாய் என்று மாற்றப்பட்டது .
இதற்க்கு முன்பு 64 பைசா ஒரு ரூபாயாக இருந்தது . 

@ பின்னர் ஆண்டு தோறும் 1 ரூபாய் வீதம் குறைந்த இந்திய ரூபாயானது 1990 முதல் 1995 ம் ஆண்டுக்குள் 35  ரூபாயாக மாறியது . திரு . நரசிம்ம ராவ் ஆட்சியில் பண மதிப்பு மேலும் மேலும் குறைந்தது .

@ 1991 ல் நிதி அமைச்சராக இருந்த மன் மோகன் சிங் , பொருளாதார தாராள மயமாக்கல் , என்பதில் கையொப்பம் இட்டதன் விளைவு , படிப்படியாக பண புழக்கம் அதிகரித்தது. பண மதிப்பு குறைந்தது .

@ அதன் படி இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாயாக  சரிந்து உள்ளது .

@ நவம்பர் 8 , 2016 முதல்  பழைய 500 ரூபாய் , 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்றும் அதற்க்கு பதிலாக புதிய 1000 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது இந்தியா ரூபாயின் பண மதிப்பை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது 

------------------------------------------

மௌரீசியஸ் பணம் :


இதன் சிறப்பு என்னவெனில் , இந்த ரூபாய் நோட்டுகளில் ஹிந்தியிலும் , தமிழிலும் ரூபாயின் மதிப்பு எழுதப்பட்டிருக்கிறது .


how foreign currencies are having indian language க்கான பட முடிவு



2016 நவம்பர் 8 ன் தேதி முதல் புதிய 1000, மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன . கீழே காணப்படுவது 1970 களில் வெளியிடப்பட்ட புதிய 1000 ரூபாய் . அதுவும் , தற்போது வெளியிடப்பட்டது போலவே , ராஜா ராஜ சோழன் சதய திருவிழா அன்று வெளியிடப்பட்டது.

how foreign currencies are having indian language க்கான பட முடிவு


கீழே காணப்படுவது சிங்கப்பூர் டாலர். எப்போதும் போல் தமிழர்களுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் , அந்த டாலரில் தமிழிலும் சிங்கப்பூர் என்று அச்சிடப்பட்டிருக்கும் .



singapore dollar language க்கான பட முடிவு

இந்தியாவில் சில கருத்துக்கள் பேசவே தயங்கும் போது செக் குடியரசு வெளியிட்டுள்ள பணம் வித்தியாசமானது . செக்கஸ்லோவோக்கியாவின் இந்த பணத்தின் பெயர் செக் கொரோனா .




கீழ் காண்பவை இலங்கை ரூபாய் நோட்டு. இதில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காட்டிலும் , தமிழரின் கலைகளுக்கு இந்த ரூபாய்கள் சாட்சியம் கூறுகின்றன .


sri lankan currency notes க்கான பட முடிவு


கீழே காண்பவை குக் தீவின் ரூபாய் நோட்டு. இது நியூசிலாந்தை சேர்ந்தது.தென் பசிபிக் கடலில் உள்ள இந்த தீவானது , கடல் வாழ் உயிரினங்களின் மீது ஒரு பெண் பயணிப்பது  போலும் சித்தரிக்கப்பட்ட படத்துடன் தனது பணத்தை வெளியிட்டுள்ளது.

currency notes of different countries க்கான பட முடிவு



கீழே உள்ள தினார் எனும் பணமானது செர்பியாவின் பணமாகும் . இதன் பெயர் க்ராஜின தினார். யுகோஸ்லாவ் தினார் பணத்தை ஒத்த வடிவமைப்பு கொண்ட இந்த தினார் 1992 ல் 1 மில்லியன் வரை வெளியிடப்பட்டுள்ளது. 1994 முதல் பில்லியன் கணக்கில் வெளியிட்டுள்ளது இந்த அரசு .

currency notes of different countries க்கான பட முடிவு

செர்பிய  அரசை போன்றே துருக்கி அரசும் மில்லியன் கணக்கில் பணத்தை வெளியிட்டுள்ளது.


currency notes of different countries க்கான பட முடிவு




கீழே உள்ளது யுகோஸ்லாவியாவின் யம் எனும் பணம் . உலகத்திலேயே பண வீக்கம் என்பதை அதிக  அளவில் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்று. இது போஸ்னியா , ஹெரஸிகோவினா ,கிரொட்டியா , மாசிடோனிய , ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பண மதிப்பிற்கு மாற்றாக கருதப்படுகிறது. இந்த நாட்டின் 1 கோடி பணம் கொடுத்தால் இந்தியாவில் அது 2 லட்சத்து 50 ஆயிரமாக மட்டுமே மாறும் .


currency notes of different countries க்கான பட முடிவு

இந்த யம் நோட்டின் பணத்தை முடிந்தால் எண்ணி கொள்ளுங்கள் .



நாம் ஒரு கண்டைனர் பணம் என்பதை ஒரே ஒரு நோட்டாக சுமக்கிறது
யுகோஸ்லோவியா .

செர்பியா , துருக்கி போன்ற நாடுகளின் பணம் அதிக அளவிலான எண்ணிக்கைகளை சுமக்கிறது.

இதன் அர்த்தம் என்னவெனில் அங்கெல்லாம் பணத்திற்கு மதிப்பே இல்லை .
பண வீக்கம் அதிகமாய் உள்ளது.
பண வீக்கம்  என்றால் , அரசு வெளியிட்ட பணத்தை விட அதிக பணம் மக்களிடம் புழக்கத்தில் உள்ளது என்று அர்த்தம்.
உள்நாட்டு போர், பிற நாட்டுடன் போர்  மற்றும் அரசுடன் மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்ற மறைமுக பொருளும் உள்ளது.


இதே நிலையில் தான் இந்தியாவும் 1967 களில் இந்தியா சீன போர் காலத்தில் , தன பணமதிப்பை குறைத்தது. அப்போது போடப்பட்ட மிசா சட்டம் , அதனை தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு சட்டங்கள் மக்களுக்கு வெறுப்பை கொடுக்க , அந்த சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட பிறகும் கூட , இந்திய பண மதிப்பு     உயரவில்லை.

இன்று கருப்பு பண ஒழிப்பு என்ற கருத்து முன்னெடுக்கப்பட காரணமாக இருந்த அந்த கால கட்டம் தான் , இந்தியா வரலாற்றின் திருப்பு முனை காலம் ஆகும்.

இன்றைய நிலையில் இந்தியா பண வீக்கமானது 10% விட அதிகமாக உள்ளது. அதனால் தான் இந்தியா பண மதிப்பு குறைகிறது. இதன் அர்த்தம் அரசு 100 ரூபாய் வெளி இட்டால் 112 ரூபாய் புழக்கத்தில் இருக்கிறது என்பதாகும்.

இந்த பணவீக்கமானது இந்தியாவில் குறையவும், பண மதிப்பு அதிகரிக்கவும் ஒவ்வொரு இந்தியனும் துணை நிற்போமாக !


-------------------------


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...