Friday 31 August 2018

பெருந்திணை எனும் பொருந்தா திருமணம் .

பெண்ணின் திருமண வயதை 18 என்றும் , ஆணின் வயதை 21 என்றும் மாற்றி விட்டதால் மட்டுமே குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது என்று கூறும் அரசும் , பெண்ணிய வாதிகளும் , ஆண், பெண் இருவருக்குமான வயது வித்யாசத்தை மட்டும் குறிப்பிடுவதே இல்லை .

ஒரு நாளில் ,இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுக்க 33000 பெண்கள் அதிலும் 15 வயதிற்குட்பட்ட பெண்கள் திருமணம் நடக்கிறதாம் . ஆனால் அந்த பெண்களின் கணவன் என்ற வரிசையில் வரும் , ஆண்களில் யாருக்கும் 18 வயது கிடையாது . ஐம்பது வயதை தாண்டியவ ர்களுடனும் திருமணம் நடக்கிறது .

இந்தியாவில் அதிகம் குழந்தை திருமணம் நடப்பதில் கேரளாவும் உண்டு . தமிழ்நாடும் உண்டு . தமிழ்நாட்டில் 2017 கணக்கின் படி 1600 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது . ஆனால் அவர்களில் பலர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை .இங்கு வந்து வாழும் வடஇந்திய மக்கள் .


அரசு திருமண வயதை நிர்ணயிப்பதை விட முக்கியம் , ஆண் பெண் இருவருக்கும் உண்டான வயது வித்யாசத்தை நிர்ணயிப்பது  .
பெண்ணியவாதிகள் இதையெல்லாம் பேசமாட்டார்களே!





Thursday 30 August 2018

அறக்கட்டளையும் வணிகமும் - 1






வணிக நிறுவனங்களின் , சினமா நடிகர்களின் அறக்கட்டளை என்பது மக்களை பொறுத்தவரை நன்மை தருவதாக இருந்தாலும் அது ஒரு ஏமாற்று வேலை .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகேஷ் அம்பானி மனைவி நீத்துஅம்பானி , கேரளாவிற்கு 71 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் . அதில் 21 கோடி ரூபாயை அரசிடம் நன்கொடையாக வழங்கி விட்டு , மீதம் 50 கோடி ரூபாயை , வீடு கட்ட , பள்ளி , மருத்துமனைகளுக்கு தேவையான பொருள்களாக தருவது என்று ஒதுக்கி உள்ளார்கள் .

வணிகம் என்பது இது தான் .
ஏற்கெனவே paytm  முதலாளி , தான் சிறந்த வணிகன் என்பதை நிரூபித்தது போலவே , அம்பானி தன்னை நல்ல நிர்வாகி என்பதை நிரூபித்து கொள்கிறார் .

ஒரு நாளைக்கு முகேஷ் அம்பானியின் வருமானம் 18 கோடி ரூபாய் .
அவர் அரசுக்கு ஆண்டுக்கு செலுத்தும் வரி வருமானம் 7827 கோடி ரூபாய் .
இந்த தொகையானது , அவர் செலுத்திய நன்கொடைக்கான 80c வரிவிலக்கிற்கு பிறகு செலுத்துவது .
அந்த நன்கொடையை அவர் எங்கு வழங்குகிறார் என்றால் ,
அவரது மனைவி நடத்தும் அறக்கட்டளைக்கு தான் . ஆண்டுக்கு 603 கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறார்.
இதில் ,
அவர் மனைவி நேரடியாக மக்களுக்கு உதவுவது போல ,
அம்பானியின் உற்பத்தி பொருள்களுக்கு விளம்பரமும் தருவார் , உதவி என்ற பெயரில் , மண்ணை சுரண்டும் போதும் எழும் போராட்டங்களை தடுக்கவும் செய்வார் .
ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் , மேட்டூரில் , சேலத்தில் செய்தது போலத்தான் இதுவும் .
ஸ்டெர்லைட் நிறுவனமும் , கேரளாவிற்கு  5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது .
ஆனால் ,
அம்பானி நிறுவனம் உதவுவது போல மக்களின் கண்களுக்கு தெரிந்தாலும் ,
இனி திருபாய் அம்பானி பள்ளியும் ,
ரிலையன்ஸ் பாவுண்டஷன்  மருத்துவமனையும் கேரளாவிற்கு வரவிருக்கிறது என்பது மட்டும் உறுதி .






சும்மா கிடைக்கவும் , கொடுக்கவும் இங்கு எதுவும் இல்லை .

Thursday 9 August 2018

தற்சார்பு தேடுவோம் .

தற்சார்பு தேடுவோம் .

இயற்கை வழங்கிய நீரையும் , நெற்றி வேர்வை சிந்தி உழவன் திருத்திய நிலத்தையும் ,
கம்பெனியிடம் கொடுத்து விட்டு , மக்களுக்கு சத்துணவு தந்த மாடுகளை கறிக்கடைக்கு அனுப்பி விட்டு , ஆலைகளின் சாக்கடையை வயலுக்குள் பாய்ச்சி விளைந்த பொருளுக்கு விலை ஏறி விடாதபடி கட்டுப்பாடு விதித்து விட்டு உழவர்களை நிலத்தை விட்டு வெளியேற்றி , ஏற்றுமதி இறக்குமதிக்கு சாலை போட்டு ,

பசியை ஆற்றவும் மாற்றவும் போகிறோமா ? அல்லது
ஆலை தொழிற்சந்தையில் மனித எந்திரங்களை மலிவாக வழங்க போகிறோமா ?

குமரி முனையில் நிற்கும் 133 அடி வள்ளுவர் சிலையை இந்துமா கடலுக்குள் வீசுவோமா ? ஏனெனில்
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
திருக்குறள் - 739
( யாரையும் நாடாமல் வளம் மிக வாழ்வதே நாடு . )

என்று கூறிய வள்ளுவரின் வாக்கை பின்பற்றாமல் , வெறும் சிலையை வைத்து என்ன செய்ய போகிறோம் ?

ஐயா .நம்மாழ்வார்
உழவுக்கும் உண்டு வரலாறு .



சமையல்

வீட்டில் பெண்களின் சமையல் தான் மருந்து பொருள் .
பெண் தான் மருத்துவர் .
தமிழ்நாட்டில் சமையல் என்பதே , மருத்துவ கூடம் தான் .
ஒவ்வொரு வீடும் கோவில் என்றதன் அர்த்தம் இது தான் ,
ஏனெனில் கோவில்களில் தான் முன்பு மருத்துவம் செய்யப்பட்டது .



சளி பிடித்தால் - மிளகு ரசம்
வயிறு புண்ணுக்கு - மணத்தக்காளி சூப்
கால் வீக்கம் - சுரைக்காய் கூட்டு
சிறுநீர் பிரச்னை - வாழைத்தண்டு கூட்டு
உடல் சூடு - ஆட்டு கால் சூப்
உடல் குளுமை - கோழி கால் சூப்
நினைவாற்றல் பெருக - வல்லாரை துவையல்
இரும்பு சத்துக்கு - முருங்கை கீரை பொரியல்
அறிவு திறன் பெருக - பருப்பு சாம்பார்
உடல் பலம் பெருக - அசைவ உணவு
அதிக கழிவுக்கு - குதிரைவாலி அரிசி தயிர் சாதம்
மலச்சிக்கலுக்கு - கொள்ளு ரசம் .

எல்லாம் மருந்து ,
இதிலே என்ன அறிவியல் என்று எந்த பெண்ணுக்கும் தெரியாது ,
நான் உட்பட !
ஆனால் இதன் நன்மைகள் தெரியும் .
மரத்தின் வேர் இதுவரை செல்லும் , பூ எப்படி இருக்கும் , எந்தெந்த நாட்டில் விளையும் என்று சொல்லி தரும் அறிவியல் பாடத்தை விட , ஒரு மரம் எப்படி வளர்க்க வேண்டும் , என்னென்ன நன்மைகளோடு இந்த மரங்கள் வளர்கின்றன என்று சொல்லி தரும் தமிழ் பாடங்கள் ஆயிரம் மடங்கு மேலானவை .
அப்படி தான் தமிழ் மருத்துவமும் !
அறிவியல் பெயர்கள் எல்லாம் , ஐரோப்பியர்கள் இட்டவை .
அவன் வைத்த பெயர்கள் எங்களுக்கு தெரியவில்லை என்பதில் எங்களுக்கு வருத்தம் இல்லை .
ஏனெனில் அவனுக்கு , நாங்கள் வைத்திருக்கும் பெயர்கள் தெரியாது .
இதற்க்கு இடையில்
இடைத்தரகர் வேலை பார்க்கும் ,
ஐரோப்பிய மருத்துவம் சார்ந்த யாரும் , மெதுவடை குறித்தோ , பருப்பு சாமபார் குறித்தோ கிண்டல் பேசினால் ,
அது உங்களது அறியாமை !


shyamala prasanna


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...