Thursday 9 August 2018

தற்சார்பு தேடுவோம் .

தற்சார்பு தேடுவோம் .

இயற்கை வழங்கிய நீரையும் , நெற்றி வேர்வை சிந்தி உழவன் திருத்திய நிலத்தையும் ,
கம்பெனியிடம் கொடுத்து விட்டு , மக்களுக்கு சத்துணவு தந்த மாடுகளை கறிக்கடைக்கு அனுப்பி விட்டு , ஆலைகளின் சாக்கடையை வயலுக்குள் பாய்ச்சி விளைந்த பொருளுக்கு விலை ஏறி விடாதபடி கட்டுப்பாடு விதித்து விட்டு உழவர்களை நிலத்தை விட்டு வெளியேற்றி , ஏற்றுமதி இறக்குமதிக்கு சாலை போட்டு ,

பசியை ஆற்றவும் மாற்றவும் போகிறோமா ? அல்லது
ஆலை தொழிற்சந்தையில் மனித எந்திரங்களை மலிவாக வழங்க போகிறோமா ?

குமரி முனையில் நிற்கும் 133 அடி வள்ளுவர் சிலையை இந்துமா கடலுக்குள் வீசுவோமா ? ஏனெனில்
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
திருக்குறள் - 739
( யாரையும் நாடாமல் வளம் மிக வாழ்வதே நாடு . )

என்று கூறிய வள்ளுவரின் வாக்கை பின்பற்றாமல் , வெறும் சிலையை வைத்து என்ன செய்ய போகிறோம் ?

ஐயா .நம்மாழ்வார்
உழவுக்கும் உண்டு வரலாறு .



No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...