Thursday 31 March 2016

மாலை நேர சிற்றுண்டி வகைகள்

டாக்டர் சிவராமன் அவர்கள் தனது ஆறாம் திணை புத்தகத்தில் மாலை நேர சிற்றுண்டி வகைகளை  வகைபடுத்தி இருக்கிறார் .

உடலுக்கு நல்ல ஆரோக்கியமான , சுவையான உணவுகளை அடுக்கி இருக்கிறார் !

பழ  அப்பம் , தேங்காய் பால் அப்பம் , இளநீர் அப்பம்


appam க்கான பட முடிவு
அரிசி பணியாரம்

சோள பணியாரம் :





செய்முறை : அரிசி பணியரத்தின் அதே செய்முறை . அரிசிக்கு பதில் சோளம் பயன்படுத்த வேண்டும் . மக்கா சோளம் அல்ல. இது காக்கா சோளம் . 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து 7 மணி நேரம் புளிக்க வைத்து காரம் கலந்து , ஊற்றி எடுத்தால் சோள பணியாரம் தயார் .





ராகி அடை




உக்களி
செய்முறை : பாசி பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து , கொஞ்சம் நீர் விட்டு அரைத்து , அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் , கொஞ்சம் உப்பு கலந்து இட்லி மாதிரி ஊற்றி எடுத்து , அதை நன்கு உடைத்து அதில் ஏலக்காய் , சர்க்கரை , மற்றும் முந்திரி கலந்தால் உக்களி தயார் .

பாசி பருப்பு அல்வா:



இது தாங்க அசோக அல்வா .



கும்மாயம்





 செய்முறை : 1  கப் பாசி பருப்பை நல்ல வறுத்து எடுத்து , அதில் கொஞ்சம் உளுந்து , கொஞ்சம் அரசி இதையும் வறுத்து எடுத்து நல்ல பொடியாக அரைத்து எடுத்து வைக்க வேண்டும் . பிறகு வெல்ல பாகு காய்ச்சி அதில் இந்த பொடியை கொட்டி , கிளறி எடுத்தால் கும்மாயம் தயார் .


சீடை




மோதகம்



கொழுக்கட்டை வகைகள் :

செய்முறை : பச்சரிசி மாவில் , கடலைபருப்பு கலந்த வெல்லம்  , ஏலக்காய் சேர்த்து செய்வது . வெவ்வேறு இலைகளில் வைத்து செய்யப்படும் போது , வெவ்வேறு நன்மைகள் நமக்கு உண்டு . குறிப்பாக பெண்களின் கருப்பை கோளாறுகள் அகலும் .கடலை பருப்புக்கு பதில் பேரிசை , எள் ,தேங்காய் ஆகியன சேர்த்து கொள்ளலாம் .


சாமை கொழுக்கட்டை : இதே முறையை சாமை அரிசி பயன்படுத்தினால் அது சாமை கொழுக்கட்டை .






பனை இலை கொழுக்கட்டை



வாழை இலை கொழுக்கட்டை



பூவரசு இல்லை கொழுக்கட்டை




நீர் கொழுக்கட்டை


செய்முறை : சிகப்பரிசி மாவில் கொழுக்கட்டை பிடித்து ( பூரணம் இல்லாமல் ) வேகவைத்தால் நீர் கொழுக்கட்டை .


பால் கொழுக்கட்டை





செய்முறை : இட்லி அரிசி ஊறவைத்து அரைத்து நல்லெண்ணையில் வதக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் நீரில் வேகவைத்து , அப்படியே அதில் வெல்லம் , ஏலக்காய் , தேங்காய் பால் கலந்தால் , அப்படி ஒரு சுவையாக இருக்கும் .


இன்னும் பல வகைகளை , கூறுகிறார் டாக்டர் சிவராமன் அவர்கள் !
இவை எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் , கடலை மிட்டாய் , எள்ளுரண்டை இவற்றையாவது சாப்பிட பரிந்துரைக்கிறார் டாக்டர் சிவராமன் .
இவையெல்லாம் சிற்றுண்டிகள் அல்ல . உடலை வலுவாக்கும் பேரு பெற்ற உணவுகள் .

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...