Friday 28 September 2018

ஆன்லைன் வர்த்தகம்

இந்தியாவில் பண மதிப்பு தொடர்ந்து குறைந்து வர முக்கிய காரணம்
ஆன்லைன் வர்த்தகம் .
இந்தியாவின் பிரபலமான ஆன்லைன் வர்த்தகம் எல்லாம் ,
வெளிநாடுகளை சேர்ந்தது .
அமேசான் , ஈபே , அமெரிக்கன் ஸ்வான் போன்ற அமைப்புகள் நேரடியாக நம் பணத்தை வெளிநாட்டிற்க்கே எடுத்து செல்கின்றன .
ஏனைய ஆன்லைன் வர்த்தக அமைப்புகள் , 
வெளிநாட்டு அமைப்போடு தொடர்புடையவை தான் .




இவ்வாறாக இந்தியாவில் மட்டும் 35 க்கும் மேற்பட்ட ஆன்லைன் வர்த்தக அமைப்புகள் இயங்கி வருகின்றன .
உள்ளூர் வணிகம் வளர்ந்தால் ,நம் பணம் இங்கேயே சுழலும் .
நம் பண மதிப்பு மாறாது .
அயலாரின் வணிகம் வளர்ந்தால் ,

ஒரு நாள் இங்கு எந்த மதிப்பும் இருக்காது .



மருந்து நிறுவனங்கள்

தனியார் மருந்து நிறுவனங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் .
ஏன்னா ,
ஆன்லைன் விற்பனை பெருகுவதால் , மக்கள் நேரடியாக மருந்து வாங்கி உண்கிறார்களாம் , அவர்கள் உடல் நிலை கெட்டுவிடுமாம் .
அதனாலதான் வேலை நிறுத்தம் ..
மக்கள் மீது அவ்வளவு அக்கறை .

நம்புறமாதிரி இல்லையே என்றால் கடைசியில் சொல்கிறார்கள் , 8 லட்சம் மருந்து ஊழியர்களும் , அதன் பின்னால் 40 லட்சம் பேரும் அவர் தம் குடும்பம் என்ற முறையில் மொத்தம்  ஒரு கோடி மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்க படுகிறார்களாம் .
தமிழ்நாட்டில் , மொத்தம் 7 கோடி மக்கள் .
இதில் பத்து பேரில் ஒருவர் சர்க்கரை நோயாளி .
மொத்தம் 7  லட்சம் பேர் ,
புற்றுநோய் 3 லட்சம் பேருக்கு
இன்னும் தைராய்டு , எயிட்ஸ் என்றும்
அதில் மருத்துவமனை பிரசவம் ( இதும் இப்போது நோய் வரிசையில் உள்ளது )
இப்படி தொடர் மருந்து உண்ணும் மக்களை உருவாக்கி
அதில் வாழும் 1 கோடி மக்களுக்காக
தமிழகத்தின்  7 கோடி மக்கள் தியாகம் செய்கிறார்கள் .
இதில் குறுக்க ஆன்லைன் மருந்து வந்தால்

என்னவாகும் ?
அதான் வேலை நிறுத்தம் .



ஆழி விரல் - மோதிர விரல்

வலம் புரி ஜான் வைத்த போட்டி இது . 2001 - 2002     ல் சன்டிவியில் ,காலை நேரங்கள் இவர் கூறும் காய்கறி மருத்துவத்தில் தான் தொடங்கியது . அப்போது இவர் வைத்த மருத்துவம் சார்ந்த குறிப்பு தான் இந்த விரல் அசைக்க முடியாத நிலை .

அணைத்து விரலையும் , ஒன்றாக வைத்து இந்த ஒரு விரலை மட்டும் தூக்கி அசைக்க முயற்சித்தால் , அது அசைக்க முடியாது .









அந்த நரம்பு தான் நம் இதயத்தோடு தொடர்புடையது .இதய துடிப்பு , அதோடு தொடர்புடையது . அதனால் தான் கிறிஸ்தவ மதத்தில் மோதிரம் மாற்றும் வழக்கம் வந்தது . திருமணத்தில் இதயத்தையே மாற்றி கொள்கிறார்களாம் .
இப்போதும் விபூதி இட்டாலும் , குங்குமம் இட்டாலும் இந்த மோதிர விரலால் செய்வதே வழக்கம் . தமிழக திருமணங்களில் , மோதிர விரலால் , மணமகன் மணமகளுக்கு குங்குமம் சூட்டும் வழக்கம் உள்ளது .
மோதிர விரல் அல்ல அது .
ஆழி விரல்
ஆழி என்றால் சுழற்சி என்று பொருள் . இதயத்தில் தான் எல்லா சுழற்சியம்  நடக்கிறது . இந்த உடலின் சுழற்சி நிகழ்கிறது .

அழகான தமிழ்
அறிவியலால் நிறைந்த தமிழ் .






சட்ட பிரிவு 497

இந்திய சட்ட பிரிவு 497 நீக்கப்பட்டுள்ளது .
உடனே எல்லோரும் எதோ , திருமணமான பெண்களால் இந்த கலாசாரமே சீர் கெட போகிறது , அதற்க்கு சட்டம் வழி செய்து விட்டது என்றெல்லாம் பதிவிட்டு , உணர்வுகளை அள்ளி இறைப்பதற்கு முன்பு ,

இந்த சட்டம் 1860 போடப்பட்டது . அப்போது இந்திய என்ற நாடும் இல்லை . இது எவர் போட்ட சட்டம் , இதெப்படி , சுதந்திர இந்தியா சட்டத்தில் வந்தது என்பதும் தெரியவில்லை . இது உண்மை எனில் , அம்பேத்கார் எழுதியது எல்லாம் பிரிட்டிஷார் எழுதிய சட்டமே என்றாகும் .

இரண்டாவது , ஒரு பெண் கணவனின் சொத்து என்று அந்த சட்டத்தில் உள்ளது . இங்கு விவாகரத்து வழக்குகளே லட்ச கணக்கில் இருக்கிறது . அது பெண் உரிமை . அதே சமயம் , சமீபமாக , வடஇந்தியாவில் , ஒரு குடிகாரன் தன மனைவியை வைத்து சீட்டாடி தோற்று விட்டான் . அதற்காக தன மனைவியின் சம்மதம் இன்றி  அவளை , வெற்றி பெற்றவனோடு செல்ல கட்டாயப்படுத்திய கொடுமையும் நிகழ்ந்துள்ளது .

மூன்றாவது , இந்த தவறில் , ஆண் மட்டுமே தண்டனைக்கு உட்பட்டவனாக இருந்தான் . அந்த தண்டனை சட்டம் நீக்கப்பட்டுள்ளது .

இதில் இருவரும் உடன்பட்டு நடக்கும் தவறில் , அல்லது பெண் செய்யும் தவறில் ஆண் மட்டும் தண்டனைக்கு உரியவன் என்பதால் , பல பெரிய நிறுவனங்களில் பெண்கள் செய்யும் தவறை ஆண்கள் சுமக்கிறார்கள் .


ஆகையால் , இந்தியாவின் சட்டங்கள் , தமிழகத்திற்கு அல்ல .
புகைந்தது போதும் , எரிவதை பிடுங்கி விடுங்கள் .
மனம் தூய்மையாகவும் , குடும்பம் என்ற அமைப்பின் மீது நம்பிகை கொண்டும்
இனிய இல்லறம் எல்லோருக்கும் அமையட்டும் .



Thursday 27 September 2018

இந்திய பணமதிப்பு குறைவு

இன்று (  sep  27 , 2018 )
இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட ரூபாய் 73 நெருங்க உள்ளது .
இந்த ஆண்டு மட்டும் ரூபாய் 12 என்ற அளவில் இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது .




இதனால் , வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருள்கள் இறக்குமதி செய்து உற்பத்தி செய்ய கூடிய தொழில்கள் பெரும் அளவில் பாதிப்பு அடைந்துள்ளது . பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வருகிறது .
இதற்காக இந்திய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .
அந்த வகையில்
ஏற்கெனவே ,

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ,இந்தியாவிற்கு பணம் அனுப்பும் பொழுது , டாலராக அனுப்புங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளது .
மீண்டும் , இறக்குமதியின் அளவை முற்றிலும் குறைத்தால் தான் , இந்திய மதிப்பு உயரும் என்ற அடிப்படியில் ,
19 ஆடம்பர  பொருள்களுக்கு சுங்க வரி அதிகரிப்பு செய்துள்ளது .
கார்கள் , டயர்கள் , குளிர்சாதன பெட்டிகள் , என்று 19 பொருள்களின் வரி விகிதம் உயர்ந்துள்ளது .



இந்நிலையில் தங்கத்தின் மீதான வரி , 10 % உயர்த்த முடிவு செய்துள்ளது .
gst உடன் சேர்த்து 15 % உயரும் வாய்ப்புள்ளது .
ஒரு புறம் இறக்குமதியை குறைக்கும் முயற்சி என்றாலும் ,
மற்றொரு புறம் ஏற்றுமதி பாதிப்படையும் .
ஏற்றுமதியும் பாதிக்க படுமேயானால் , மீண்டும் பணமதிப்பு வீழ வும் வாய்ப்புள்ளது .

ஆக மொத்தம் , தங்கத்தின் விலை உயரும் போதே ,
அணைத்து பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது .

இது ஒரு தற்காலிக சிக்கல் தான் , பண மதிப்பு  சீக்கிரம் கட்டுக்குள் வந்து விடும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது .



நம்மகிட்ட கலர் கலராக நகை இருந்தாலும் , அது மதிப்பில்லாத கவரிங் நகையாக இருந்தால் என்ன பயன் ?

சரி

உண்மையில் , இறக்குமதி , ஏற்றுமதி மட்டும் தான் இந்திய பணமதிப்பை பாதிக்கிறதா ?

ஆன்லைன் வர்த்தகம் வருவதற்கு முன்பு இது தான் உண்மை .
ஆனால் இன்று இந்தியாவில் 35 க்கும் மேற்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இருக்கின்றன .
இங்கு உள்ள  ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டை சேர்ந்தவை . அல்லது இந்திய நிறுவனங்களோடு இணைப்பில் உள்ளவை .




அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தகத்தை பற்றியம் , அதன் வழியாக , அயல் நாட்டிற்கு செல்லும் பணமதிப்பு அதிகமாகி வருவது பற்றியும் அரசு  மற்றும் பொருளாதார வல்லுநர்கள் பேசுவதே இல்லை .



பெட்ரோல் , இறக்குமதி தான் காரணம் என்பது போன்ற மாயை காரணங்கள் இருந்த போதிலும் ,
ஆன்லைன் வர்த்தகத்தை பற்றி யாருமே பேசாமல் இருப்பது ,
ஆச்சரியம் தான் .

Thursday 6 September 2018

விவசாய கடன் - கார்போரேட்டுகள்

2004 ம் ஆண்டு முதல் இந்தியாவில் விவசாய கடனை திருப்பி தர இயலாமல் அல்லது விவசாயத்தில் லாபம் பெற இயலாமல் என்று கிட்டத்தட்ட 18241 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் . கடன் கிடைக்காமலும் , தொடர்ந்து விவசாயம் செய்ய இயலாமலும் கூட தற்கொலைகள் தொடர்கின்றன .

இந்த ஆண்டு 2018 ஜனவரி தொடங்கி ஜூன் வரை மட்டும் 1607 பேர் மஹாராஷ்டிராவில் தற்கொலை செய்து இருக்கிறார்கள் .
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராடி , தள்ளுபடியும் பெற்றனர் .கிட்டத்தட்ட 35 லட்சம் விவசாயிகளுக்கு 13,782 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .
மகிழ்ச்சியான செய்தி இது .

ஆனால் இந்த தள்ளுபடி , விவசாயிகளுக்கா தான் நடந்ததா ? அவர்கள் போராட்டம் தான் வெற்றி பெற்றதா ? தெரியவில்லை .
காரணம் , தகவல் அறியும் சட்டத்தின் வழியாக ரிசெர்வே வங்கி  தந்துள்ள தகவல் ஒரு குறிப்பிட்ட தகவலை  கூறுகிறது .

அதாவது 2016 ம் ஆண்டு மட்டும் வங்கிகள் 615 பேருக்கு 58 ஆயிரத்து 561 கோடி ரூபாய் விவசாய கடனாக வழங்கி உள்ளது அதாவது ஒரு வங்கி கணக்கிற்கு  95 கோடி வீதம் விவசாய கடன் வழங்கியுள்ளது ஸ்டேட் வங்கி .
அந்த 615 பேர் யார் ?


இதில் 4 % பேர் கூட விவசாயிகள் இல்லை . எல்லோரும் கார்போரேட்டுகள் . பெரிய நிறுவனங்கள் . அம்பானியும் , அதானியும் , தாங்கள் விவசாய துறையில் ஈடுபடுவதாக கூறி கடன் பெற்று உள்ளார்கள் .
இந்தியாவில் 127 விதமான பழசாறு வகைகளை உற்பத்தி செய்கிறது ரிலையன்ஸ்  நிறுவனம் . இதற்காக மஹாராஷ்ட்ரா விவசாயிகளிடம் பெருவாரியாக நிலங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன . அந்த குத்தகை நில உரிமையாளர்கள் 200 பேர் கொண்டு தான் கடனும் பெறப்படுகிறது .

இப்போது விவசாய கடன் தள்ளுபடி எல்லாம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது . பெரிய நிறுவனங்களுக்கு தான் .


இது போன்ற கடன்களை மோடி அரசு மட்டுமல்ல ,அதற்கு முன்பு இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி யம் வழங்கி இருக்கிறது .

ஆக  மொத்தம் விவசாயிகள் எப்போதும் போல , எல்லா அரசுகளாலும்  ஏமாற்றப்படுகிறார்கள் . அவர்கள் பெயர் சொல்லி பெரிய நிறுவனங்களே நாட்டை சுரண்டுகின்றன .
விவசாயிகள் , குத்தகை என்று  பெரிய நிறுவனங்களிடமோ  , அரசே பார்த்து கொள்ளட்டும் என்றோ எண்ணி யாரிடமும் நிலங்களை கொடுக்க கூடாது . இறுதியில் , யாரோ பணக்காரன் ஆக , விவசாயிகள் பலிஆகுவர் .



Friday 31 August 2018

பெருந்திணை எனும் பொருந்தா திருமணம் .

பெண்ணின் திருமண வயதை 18 என்றும் , ஆணின் வயதை 21 என்றும் மாற்றி விட்டதால் மட்டுமே குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது என்று கூறும் அரசும் , பெண்ணிய வாதிகளும் , ஆண், பெண் இருவருக்குமான வயது வித்யாசத்தை மட்டும் குறிப்பிடுவதே இல்லை .

ஒரு நாளில் ,இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுக்க 33000 பெண்கள் அதிலும் 15 வயதிற்குட்பட்ட பெண்கள் திருமணம் நடக்கிறதாம் . ஆனால் அந்த பெண்களின் கணவன் என்ற வரிசையில் வரும் , ஆண்களில் யாருக்கும் 18 வயது கிடையாது . ஐம்பது வயதை தாண்டியவ ர்களுடனும் திருமணம் நடக்கிறது .

இந்தியாவில் அதிகம் குழந்தை திருமணம் நடப்பதில் கேரளாவும் உண்டு . தமிழ்நாடும் உண்டு . தமிழ்நாட்டில் 2017 கணக்கின் படி 1600 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது . ஆனால் அவர்களில் பலர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை .இங்கு வந்து வாழும் வடஇந்திய மக்கள் .


அரசு திருமண வயதை நிர்ணயிப்பதை விட முக்கியம் , ஆண் பெண் இருவருக்கும் உண்டான வயது வித்யாசத்தை நிர்ணயிப்பது  .
பெண்ணியவாதிகள் இதையெல்லாம் பேசமாட்டார்களே!





Thursday 30 August 2018

அறக்கட்டளையும் வணிகமும் - 1






வணிக நிறுவனங்களின் , சினமா நடிகர்களின் அறக்கட்டளை என்பது மக்களை பொறுத்தவரை நன்மை தருவதாக இருந்தாலும் அது ஒரு ஏமாற்று வேலை .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகேஷ் அம்பானி மனைவி நீத்துஅம்பானி , கேரளாவிற்கு 71 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் . அதில் 21 கோடி ரூபாயை அரசிடம் நன்கொடையாக வழங்கி விட்டு , மீதம் 50 கோடி ரூபாயை , வீடு கட்ட , பள்ளி , மருத்துமனைகளுக்கு தேவையான பொருள்களாக தருவது என்று ஒதுக்கி உள்ளார்கள் .

வணிகம் என்பது இது தான் .
ஏற்கெனவே paytm  முதலாளி , தான் சிறந்த வணிகன் என்பதை நிரூபித்தது போலவே , அம்பானி தன்னை நல்ல நிர்வாகி என்பதை நிரூபித்து கொள்கிறார் .

ஒரு நாளைக்கு முகேஷ் அம்பானியின் வருமானம் 18 கோடி ரூபாய் .
அவர் அரசுக்கு ஆண்டுக்கு செலுத்தும் வரி வருமானம் 7827 கோடி ரூபாய் .
இந்த தொகையானது , அவர் செலுத்திய நன்கொடைக்கான 80c வரிவிலக்கிற்கு பிறகு செலுத்துவது .
அந்த நன்கொடையை அவர் எங்கு வழங்குகிறார் என்றால் ,
அவரது மனைவி நடத்தும் அறக்கட்டளைக்கு தான் . ஆண்டுக்கு 603 கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறார்.
இதில் ,
அவர் மனைவி நேரடியாக மக்களுக்கு உதவுவது போல ,
அம்பானியின் உற்பத்தி பொருள்களுக்கு விளம்பரமும் தருவார் , உதவி என்ற பெயரில் , மண்ணை சுரண்டும் போதும் எழும் போராட்டங்களை தடுக்கவும் செய்வார் .
ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் , மேட்டூரில் , சேலத்தில் செய்தது போலத்தான் இதுவும் .
ஸ்டெர்லைட் நிறுவனமும் , கேரளாவிற்கு  5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது .
ஆனால் ,
அம்பானி நிறுவனம் உதவுவது போல மக்களின் கண்களுக்கு தெரிந்தாலும் ,
இனி திருபாய் அம்பானி பள்ளியும் ,
ரிலையன்ஸ் பாவுண்டஷன்  மருத்துவமனையும் கேரளாவிற்கு வரவிருக்கிறது என்பது மட்டும் உறுதி .






சும்மா கிடைக்கவும் , கொடுக்கவும் இங்கு எதுவும் இல்லை .

Thursday 9 August 2018

தற்சார்பு தேடுவோம் .

தற்சார்பு தேடுவோம் .

இயற்கை வழங்கிய நீரையும் , நெற்றி வேர்வை சிந்தி உழவன் திருத்திய நிலத்தையும் ,
கம்பெனியிடம் கொடுத்து விட்டு , மக்களுக்கு சத்துணவு தந்த மாடுகளை கறிக்கடைக்கு அனுப்பி விட்டு , ஆலைகளின் சாக்கடையை வயலுக்குள் பாய்ச்சி விளைந்த பொருளுக்கு விலை ஏறி விடாதபடி கட்டுப்பாடு விதித்து விட்டு உழவர்களை நிலத்தை விட்டு வெளியேற்றி , ஏற்றுமதி இறக்குமதிக்கு சாலை போட்டு ,

பசியை ஆற்றவும் மாற்றவும் போகிறோமா ? அல்லது
ஆலை தொழிற்சந்தையில் மனித எந்திரங்களை மலிவாக வழங்க போகிறோமா ?

குமரி முனையில் நிற்கும் 133 அடி வள்ளுவர் சிலையை இந்துமா கடலுக்குள் வீசுவோமா ? ஏனெனில்
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
திருக்குறள் - 739
( யாரையும் நாடாமல் வளம் மிக வாழ்வதே நாடு . )

என்று கூறிய வள்ளுவரின் வாக்கை பின்பற்றாமல் , வெறும் சிலையை வைத்து என்ன செய்ய போகிறோம் ?

ஐயா .நம்மாழ்வார்
உழவுக்கும் உண்டு வரலாறு .



சமையல்

வீட்டில் பெண்களின் சமையல் தான் மருந்து பொருள் .
பெண் தான் மருத்துவர் .
தமிழ்நாட்டில் சமையல் என்பதே , மருத்துவ கூடம் தான் .
ஒவ்வொரு வீடும் கோவில் என்றதன் அர்த்தம் இது தான் ,
ஏனெனில் கோவில்களில் தான் முன்பு மருத்துவம் செய்யப்பட்டது .



சளி பிடித்தால் - மிளகு ரசம்
வயிறு புண்ணுக்கு - மணத்தக்காளி சூப்
கால் வீக்கம் - சுரைக்காய் கூட்டு
சிறுநீர் பிரச்னை - வாழைத்தண்டு கூட்டு
உடல் சூடு - ஆட்டு கால் சூப்
உடல் குளுமை - கோழி கால் சூப்
நினைவாற்றல் பெருக - வல்லாரை துவையல்
இரும்பு சத்துக்கு - முருங்கை கீரை பொரியல்
அறிவு திறன் பெருக - பருப்பு சாம்பார்
உடல் பலம் பெருக - அசைவ உணவு
அதிக கழிவுக்கு - குதிரைவாலி அரிசி தயிர் சாதம்
மலச்சிக்கலுக்கு - கொள்ளு ரசம் .

எல்லாம் மருந்து ,
இதிலே என்ன அறிவியல் என்று எந்த பெண்ணுக்கும் தெரியாது ,
நான் உட்பட !
ஆனால் இதன் நன்மைகள் தெரியும் .
மரத்தின் வேர் இதுவரை செல்லும் , பூ எப்படி இருக்கும் , எந்தெந்த நாட்டில் விளையும் என்று சொல்லி தரும் அறிவியல் பாடத்தை விட , ஒரு மரம் எப்படி வளர்க்க வேண்டும் , என்னென்ன நன்மைகளோடு இந்த மரங்கள் வளர்கின்றன என்று சொல்லி தரும் தமிழ் பாடங்கள் ஆயிரம் மடங்கு மேலானவை .
அப்படி தான் தமிழ் மருத்துவமும் !
அறிவியல் பெயர்கள் எல்லாம் , ஐரோப்பியர்கள் இட்டவை .
அவன் வைத்த பெயர்கள் எங்களுக்கு தெரியவில்லை என்பதில் எங்களுக்கு வருத்தம் இல்லை .
ஏனெனில் அவனுக்கு , நாங்கள் வைத்திருக்கும் பெயர்கள் தெரியாது .
இதற்க்கு இடையில்
இடைத்தரகர் வேலை பார்க்கும் ,
ஐரோப்பிய மருத்துவம் சார்ந்த யாரும் , மெதுவடை குறித்தோ , பருப்பு சாமபார் குறித்தோ கிண்டல் பேசினால் ,
அது உங்களது அறியாமை !


shyamala prasanna


Wednesday 25 July 2018

GDP பட்டியலின் முதல் 10 மாநிலங்கள்.2018

GDP குறைந்துவிட்டது, என்று புரளி பேசும் மக்கள் ,
மிக மிக கேவலமானவர்கள், இதிலே
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்று, அதே வாய்தான் பேசுகிறது.
இருப்பினும், அவர்களுக்கும் நிறைவுபட பொருளதார நிறைவு தர தமிழகத்தால் முடியும்.
Trending top most 2018 வழங்கியுள்ள GDP பட்டியலின் முதல் 10 மாநிலங்கள்.
1. மஹாராஷ்டிரம் - 16.8 lakhs crores
2. தமிழ்நாடு - 15.9 lakhs crores
3. உத்திர பிரதேஷ் _ 9.76 lakhs crores
4. மேற்கு வங்கம் - 8 lakhs crores
5. குஜராத் - 7.66 lakhs crores
6. கர்நாடகா - 7.02 lakhs crores
7. ராஜஸ்தான் - 5.7 lakhs crores
8. ஆந்திரம் - 5.2 lakhs crores
9. மத்திய பிரதேஷ் - 5.08 lakhs crores
10. டெல்லி - 4.5 lakhs crores
மிகவும் பின்தங்கிய நிலையில் பீகார், அசாம், மணிப்பூர், ஜம்மு போன்ற மாநிலங்கள் உள்ளன.
ஆண்டுக்கு இந்தியாவின் ஏற்றுமதி
302.8 பில்லியன் டாலர்கள்
இதில் 10% ஏற்றுமதி தமிழகத்தில் இருந்து செல்கிறது.
இதிலும் மஹாராஷ்டிரா மாநிலம் முந் நிலையிலையும், 2வது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த மொத்த தொழிற்சாலைகளில் 53% தொழிற்சாலைகள்
தமிழ்நாடு
மஹாராஷ்டிரம்
ஆந்திர பிரதேஷ்
குஜராத்
உத்திர பிரதேஷத்தில் மட்டுமே உள்ளது.
இதிலும் முந்நிலையில் இருப்பது
தமிழ்நாடு மட்டுமே.
அதிலும் தோல் பொருள்களையும்,
கடல் சார் பொருள்கள்,
டெக்ஸ்டைல்ஸ், எலக்ரானிக் பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வது
தமிழ்நாடு தான்.
இவ்வளவு இருந்தும்தமிழ்நாட்டு மக்களின் தனிநபர் வருமானத்தில் தமிழகம் 11வது இடத்தில் உள்ளது.
காரணம், நம் அரசியல்வாதிகள்
இலவசம் தருவதாக கூறி வாங்கி வைத்திருக்கம் கடன் தொகை கொஞ்சம் அதிகம் தான். இது அரசியல் ஊழல்செய்த பிரச்சினை.
அதே போல வேலை வாய்ப்பின்மை
2018 கணக்கின்படி,
1. திரிபுரா - 30.3%
2. ஹரியானா - 15.3%
3 . ஜம்மு - 15.1%
4. கேரளா- 10.8%
5 . அசாம் - 9.8%
6. பஞ்சாப் - 9.7%
7. ஹிமாசல பிரதேஷ் - 9.6 %
8. குஜராத் - 9.5%
9. மேற்கு வங்கம் - 8.8%
10. சண்டிகர் - 8%
11. பீகார் - 7.1%
12. கர்நாடகம் - 5%
13. உத்திர பிரதேஷ் - 4.5%
14. ஆந்திரம் - 4%
15. தெலுங்கானா - 3.7%
16. மஹாராஷ்டிரம் - 3.5%
17. மத்திய பிரதேஷ் - 2.9%
18. கோவா - 2.4%
19. தமிழ்நாடு - 2.3%
20. உத்தர்காண்ட - 1.2 %
மொத்தம் தமிழ் நாட்டின் வேலையில்லாத திண்டாட்டத்தை அனுபவிப்பவர்கள் 2.3% மட்டுமே.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 50000 சிறு தொழில்கள் மூடபட்டன, அது GST தந்த பரிசு, அதில் 500000 பேர் வேலை இழந்ததாக தமிழக முதல்வர் தன் அற்க்கையில் தெரிவித்துள்ளார்.
இதை தவிர்த்து தமிழக பொருளாதரம் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
1991 ன் கணக்கின்படி இன்றைய ஆலைகளை ஒப்பிட்டால்,
ஆலைகள்
2.5 மடங்கு, தமிழகத்தில் பெருகி
உள்ளன.
தமிழகத்தில் இல்லாத ஒரு வறுமையை, பல திரைபடங்கள் மூலம் காட்டிதான் ஆயிரகணக்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாகின. தமிழக மண்ணை உறிந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றன.
அதே டெக்னிக்கை மீண்டும்
பயன்படுத்தி
தமிழக வளங்களை அழிக்க முயற்சிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளும் , கழிவுகளும் - ௧


தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளும் , கழிவுகளும் - 1

தமிழ்நாடு முழுக்க உள்ள 350000 விசை தறி மூலமும் , சாய தொழிற்சாலைகள் மூலமும்
கோவை  , திருப்பூர் , ஈரோடு , சேலம் பக்கம்  கழிவுகள்  ஆற்றில் கலக்கப்படுகின்றன .




1975 ல தொடங்கப்பட்டு , 1995 ல் மூடப்பட்ட குரோமியம் ஆலை கழிவு மட்டும் கடந்த ஜூன் மாதம் வரை 2 .25 லட்சம் டன்னாக உள்ளது . இதனால் புற்று நோய் பரவுகிறது என்பதையும் , நிலத்தடி நீர் மாசுபடுவதையும் மாசு கட்டுப்பட்டு வாரியம் கூறியுள்ளது .
இந்த குரோமியம் ஆலை எதற்காக தொடங்கப்பட்டது .எனில்  1226 தோல் பதனிடும் ஆலைகள் இயங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது . இந்த தோல் தொழிற்சாலைகளால் , நோய்கள் பரவுகின்றன என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது . அதை தடுக்க 2 கோடியே 65  லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன  என்றும் 2015  ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலைகள்  மூலம் 5000 கோடி க்கு தொழில் பரிவர்த்தனை நடக்கிறது . அதில் 2000 கோடி , ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணி ஈட்டுகிறது . ஆனால் , பாதிப்பு இங்கு வாழும் மக்களுக்கு !

பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் :
தமிழ்நாட்டில் இருந்து 18000  கோடிக்கு பிளாஸ்டிக் உற்பத்தி நடக்கிறது . தென்னிந்தியாவிலேயே அதிக அளவில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் மக்களும் தமிழ் நாட்டு மக்கள் தான் . அதிக உற்பத்தியம் தமிழ்நாடுதான் .
அதன் பாதிப்பை அனுபவிப்பதும் தமிழ்நாடுதான் .
ஆண்டுக்கு 9 லட்சம் டன் பிளாஸ்டிக் உற்பத்தியில் ஈடுபடும் 155  பிளாஸ்டிக் நிறுவனங்களை தமிழ்நாடு பெற்றுள்ளது .
இதன் கழிவுகள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை .
மதுரை , கோவை , சென்னை , என்று பாரபட்சம் இல்லாமல் தன கழிவுகளை இறைத்து கொண்டு முன்னேறி வருகிறது பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் .

ரப்பர் தொழிற்சாலைகள் :
மதுரையும் , கோவையும் போட்டி போட்டு கொண்டு நூற்றுக்கணக்கான ரப்பர் தொழிற்சாலைகளை கொண்டுள்ளன .


---- தொடர்வோம் .





Monday 23 July 2018

மக்களின் முடிவு தவறா? வழங்கபட்ட பதில்கள் தவறா?

மக்களின் முடிவு தவறா? வழங்கபட்ட பதில்கள் தவறா?
1970 - 1993-ம் ஆண்டு வரை ஏறத்தாழ 48 விவசாயிகள் தமிழகப் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
________ ___________________
1952 ல் ராஜாஜியால், மொழி பிரிவினை மாநிலம் கேட்டு, போராடிய மக்களுக்கு வழங்கப்பட்டது துப்பாக்கி சூடு
டால்மியாபுரத்தை கல்லகுடி பெயர் மாற்றும் போராட்டத்தில் துப்பாக்கி சூடு வழங்கி
அத்தோடு ராஜா ஜியின்
ஸ்வதந்திரா கட்சியை
தூக்கி எறிந்தனர் மக்கள்
1954-1963 காங்கிரஸ், காமராசர் தொடர்ந்து 1965 ல்பக்தவச்சலம்
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில்
துப்பாக்கி சூடு வழங்கி உள்ளார்
அத்தோடு
காங்கிரஸ் கட்சியை
தூக்கி எறிந்தனர் மக்கள்.
இப்போ, DMK அண்ணாதுரை இயற்கை மரணம் எய்தபிறகு,
தொடர்ந்து கலைஞர் கருணாநிதி
1970ல் நாராயணசாமி நாயுடு,
தொழில் துறைக்கு வழங்கும் மின்சாரம் அளவிற்கு, விவசாயத்திற்கும் வேண்டும் என்று போராடியபோது
துப்பாக்கி சூடு, ஆணை வழங்கி உள்ளார். 3 விவசாயிகள் உயிர் இழந்தனர்.
இப்போ கருணாநிதி தூக்கி எறியபட்டார்.
ADMK வந்தது,
1977 முதல் 1987 வரை எம்ஜிஆர் ஆட்சியில் மெரினா கடற்கரையை அழகுபடுத்த எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு,
அருப்புக்கோட்டை அருகே வாகைக்குளத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு,
திருச்சி சிம்கோ மீட்டர் ஆலைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு, சென்னை வியாசர்பாடியில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு என பல சம்பவங்கள் நடந்தன. அதில் பலர் உயிரிழந்தனர்.
பல துப்பாக்கி சூடுகளை நிகழ்ச்சி,
நக்சலைட்டுகளை அழித்தேன் என்று பெருமை கொண்டவர் எம்.ஜி.ஆர்.
நம்மாழ்வார் குறிப்பிட்ட துப்பாக்கி சூட்டை நிகழ்த்திய வரும் MGR தான்.
1987ல் வன்னிய சமூகத்தின் மீது, துப்பாக்கி சூடு, அச்சமயம் MGR அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தாராம்.
உத்தரவு தானாகவே அரங்கேறியுள்ளது.
இப்போ ஜெயலலிதா
அவரும் துப்பாக்கி சூட்டில் சளைத்தவர் இல்லை.
மீண்டும் கருணாநிதி
மீண்டும் 1999 மாஞ் சோலை துப்பாக்கி சூடு
மீண்டும் ஜெயலலிதா வெற்றி
மீண்டும்
2011ல் பரமகுடியில் துப்பாக்கி சூடு
இது
60 நாட்களுக்கு முன்பு நடந்த ஸ்டெர்லைட் வரை தொடர்ந்து விட்டது.
மக்களும்
மாற்றி மாற்றி முடிவெடுத்து ஒரு பயனும் இல்லை.
காரணம்
நாம் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற 4 வாய்ப்பையும் யாரோ ஒருவர்
தீர்மானிக்கிறார்.


Wednesday 11 July 2018

தைரொ கேர் நிறுவனம் - Tyrocare company

கோவை மாவட்ட அப்பநாயக்கன் பட்டிபுதூர் என்ற ஊரில் பிறந்தவர் தான் வேலுமணி . இவர் பாபா அட்டாமிக் ரிசெர்ச் சென்டரில் பணியாற்றியர் .
இவர் மனைவி சுமதி ராவ் . SBI யில் பணியாற்றியவர் .

வேலுமணி பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து டாடா மெமோரியல் மருத்துவனையில் , பரிசோதனை பிரிவில் பணிக்கு சேர்ந்து சில காலம் வேலை பார்க்கிறார் .
திடீரென , கணவனும் , மனைவியும் தங்கள் வேலையை விடுவது என முடிவெடுத்து , வேலையை விட்டு வெளியேறுகிறார்கள் .

1996 ம் ஆண்டு tyrocare  எனும் தைராய்டு பரிசோதனை நிறுவனத்தை தொடங்குகிறார்கள் .



அன்று முதல் பணம் கொட்டியது . நேபாளம் , பங்களாதேஷ் , மற்றும் மத்திய ஆசியா எங்கும் கிளை பரப்பி ,
2016 ம் ஆண்டு முதல் பங்கு சந்தையில் இடம் பிடித்து சாதனை புரிந்து வருகிறது .

இன்று நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிட்ட் என்ற நிறுவனத்தையும் நடத்துகிறார் .
இன்று இவருடைய சொத்து மதிப்பு 3300 கோடி ரூபாய் !
இவர் தன்னை தமிழன் என்றே அடையாளப்படுத்துகிறார் . ஏனெனில் இங்கு தான் தைராய்டு அதிகம் உள்ளது .


இப்போ தைரொய்ட் பிரச்னை வந்தவங்களுக்கு என்னென்ன அறிகுறிகள் தெரியும்என்று தெரிந்து கொள்ள வேண்டும் .
அதாவது ஞாபக மறதி, உடல் எடை , முடி உதிர்வது , தோல் வறட்சி , மூட்டு வலி .


இதில் அதிகப்படியாக ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பாதிக்க படுகிறார்கள் .
ஏனென்னில் அவர்கள் தான் வீட்டில் இருந்து கொண்டு , சீரியல் மற்றும் கண்ட கண்ட நிகழ்ச்சியையும் பார்த்து கொண்டு , கூட்டு குடும்பத்தை தொலைத்து விட்டு , தனிமையில் இருக்கிறார்கள் . சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்வது , உறங்குவது இரண்டும் செய்வது இல்லை .
அதனால் பெண்களுக்கு இந்த பிரச்னை வருவது என்பது சகஜம் .
ஆனால் இதை எல்லாம் கொண்டு , மருத்துவம் செய்து ,
அதற்க்கு பரிசோதனை செய்த நிறுவனத்தின் சொத்தே 3300  கோடி என்றால் ,
மருத்துவர் , மருந்து நிறுவன சொத்து எவ்வள்வு என்பது கணக்கில் அடங்காதது .
மருத்துவத்தின் எல்லா பாகங்களும்
வணிகம் ! இதில் நமக்கு தமிழன் முன்னேறி விட்டான் என்று பெருமை கொடுக்கிறார்கள் .




Tuesday 10 July 2018

மண்ணின் மரங்கள்


மண்ணின் மரங்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.
1. வில்வம் (Vilvam) - Aegle marmelos
2. மஞ்சாடி (Manjadi) - Adenanthera pavonina
3. வாகை (Vaagai) - Albizia lebbeck
4. உசில் (Usil) - Albizia amara
5. ஏழிலைப்பாலை (Yezhilai Palai) - Alstonia scholaris
6. மந்தாரை (Mantharai) - Bauhinia purpurea
7. ஆத்தி (Aathi) - Bauhinia racemosa
8. இருவாட்சி (Iruvatchi) - Bauhinia tomentosa
9. புளிமா (Pulima) - Buchanania axillaris
10. பனை (Panai) - Borassus flabellifer
11. புரசு / முறுக்கு (Purasu) - Butea monosperma
12. புன்னை (Punnai) - Calophyllum inophyllum
13. சரக்கொன்றை (Sarakondrai) - Cassia fistula
14. செங்கொன்றை (Sengondrai) - Cassia roxburghii
15. பொறிஞ்சான் / கரும்புரசு (Purasa) - Chloroxylon switenia
16. நறுவல்லி / மூக்குச்சளி (Naruvali / Mookuchali) - Cordia dichotoma
17. மாவிலங்கம் (Mavilangum) - Creteva adansonii
18. கருங்காலி (Karungali) - Diospyros ebenum
19. வாகனை / வெந்துவரை (Vaganai / Venthuvarai) - Diospyros chloroxylon
20. கல் இச்சி (Kal Itchi) - Ficus amplissima
21. ஆற்று பூவரசு /ஆற்று வஞ்சி (Aatrupoovarasu ) - Hibiscus tiliaceous
22. ஆச்சா (Aacha) - Hardwickia binata
23. ஆய / ஆவி (Aya / aavi) - Holoptelea integrifolia
24. ஒதியம் (Odhiam) - Lannea coromandelica
25. பூ மருது (Poo Marudhu) - Lagerstroemia speciosa
26. பூவந்தி / கூகமுத்தி /நெய்க்கொற்றான் (Poovanthi / Koogamuthi /Neikottai) - Lepisanthes tetraphylla
27. விளா (Vila) - Limonia acidissima
28. பிசின் (Pisin pattai) - Litsea glutinosa
29. இலுப்பை (Illuppai) - Madhuca longifolia
30. பாலை (Paalai) - Manilkara hexandra
31. மகிழம் / இலஞ்சி (Magizham / Ilanji)
- Mimusops elengi -
32. கடம்பு (Kadambu) - Mitragyna parvifolia
33. மஞ்சணத்தி / நுணா (Manjanathi / Nuna) - Morinda pubescens
34. வெண்மஞ்சணத்தி வெண்நுணா (Vellai Nuna) - Morinda citrifolia
35. புங்கை (Pungam) - Pongamia pinnata
36. வன்னி (Vanni) - Prosopis cinerea
37. வேங்கை (Vengai) - Pterocarpus marsupium
38. வெண்ணணங்கு (Vennangu, Tada) - Pterospermum canescens
39. இருக்கொல்லி / கறிப்பாலை (Irukolli / Karippalai) - Puthranjiva roxburghii
40. மணிபுங்கம் (Manipungan, Soapu kai) -Sapindus emarginatus
41. அசோகம் (asoca) - Saraca asoca
42. பறை / பிரசு (Parai /Pirasu) - Streblus asper
43. எட்டி (Yetti) - Strychnos nuxvomica
44. நாவல் (Naval) - Syzygium cumini
45. தான்றி (Thandri) - Terminalia bellerica
46. வெண்மருது (Ven Marudhu) - Terminalia arjuna
47. சந்தன வேம்பு (Sandhana vembu) - Toona ciliate
48. பூவரசு / வஞ்சி (Puvarasu / Vanji ) -Thespesia populnea
49. வால்சுறா (Valsura) - Walsura trifolia
50. வெப்பாலை (Veppalai) - Wrightia tinctoria
51. தில்லை (Thillai) - xecaria agallicha
52. இலவு (Ilavu) = Bombax insigne
53. ஈச்சம் (Eecham) - Syzygium cumini
54. குமிழ் (kumizh) - Gmelina arborea
55. சந்தனம் (Santhanam)- Santalum album
56. நாட்டு கருவேலம் (Karuvel - Acacia nilotica
57. பெருநெல்லி (Nelli) - Phyllanthus emblica
58. அழிஞ்சில் (Azhinjil) - Alangium salviifolium -
59. வெள்வேலம் - Acacia leucophloea
60. கிளுவை (Kiluvai) - Commiphora caudata -
61. கோங்கம் (Kongam) - Cochlospermum gossypium
62. இலந்தை (Ilanthai) - Ziziphus mauritiana
63. மந்தாரை (Mantharai) - Bauhinia variegata
64. மரமல்லி (Maramalli) - Millingtonia hortensis
65. பலா (Palaa) - Artocarpus heterophyllus
நன்றி: பேராசிரியர் நரசிம்மன், சென்னை கிருத்துவ கல்லூரி.
இயல்வாகை / நாணல்
தொடர்புக்கு: 9942118080


தமிழர்களும் , ஆடைகளும் !



ஆடை இன்றி இருந்தார்களா ?

ஆடைகள் இருந்தன,
4000 ஆண்டுகளுக்கு முன்பே பருத்தியை பயன்படுத்தி ஆடைகளை செய்திருக்கிறார்கள், ஆரிய இனம் ஆடையின்றி அலைந்த காலத்திலே,

பருத்தியில் வண்ண வேலைபாடுகள் செய்து அணிந்து இருக்கிறார்கள்
ஆனால், வேட்டி, சேலை, 7 கஜம், 8 கஜம், பிளவுஸ்
விதவித ஆடை எதுவும் கிடையாது.
தேவைக்கு ஏற்பவே,
ஒன்று, இரண்டு ஆடைகள் நெய்து உடுத்தி இருக்கிறார்கள்.
வள்ளுவர் பற்றி குறிப்பிடும் போதே, அவர் நெசவு தொழில் செய்தவர் என்பர்,
அதே போல, பாரியின் மகள்கள் இருவரும், ஒரே ஆடையை மாற்றி மாற்றி உடுத்தி கொண்டார்களாம்.
இதையும் தாண்டி,
வண்ணார் என்ற ஜாதியும்
புலையன் என்ற பெயரும்
ஆடைகள் உடுத்தி இருந்ததையே குறிக்கும்.



தஞ்சாவூர் அரண்மனை கேலரியில், சோழர் கால சிலை உடை, நாயக்கர் கால சிலை உடை
வேறுபாடு காட்டும்


ராஜா ராஜ சோழனும் அவனது மனைவியும் !


சோழர்கள் காலம் வரையிலும் , கூட மெல்லிய ஆடைகளே பயன்படுத்த பட்டுள்ளன .
அதன் பிறகு நாயக்கர் காலத்தில் தான் 
கஜ கஜமாக நூல் நூற்க பட்டு , அவை ஆடைகளாக மாறின .

மேலும் மராத்தியர்கள் காலத்தில் , இந்த ஆடை வடிவைப்பு முறை மாறியுள்ளது .



அதை தொடர்ந்து ஆங்கிலேயர்கள் காலத்திலும் , 
இந்தியாவில் 19 ம் நூற்றாண்டு தொடக்கத்தில் , நுஸ்ரத் வாடியா என்பவரால் , தையல் இயந்திரம் அறிமுகம் செய்ய பட்டுள்ளது .

அதன்பிறகு தான் , விதவிதமாக ஆடைகள் வந்தன . அதன் அடிப்படையாக பஞ்சாலைகள் பெருகின . 

இதற்க்கு இடையில் இஸ்லாமிய வருகையும் , 
ஆடை வடிவமைப்பில் முக்கிய இடம் பிடிக்கிறது .

ஆரிய , திராவிட , பார்சி , இஸ்லாமிய இனம் எல்லாமே இரானிய தொடர்புடையவை .
இந்த உலகில் ஆடை வடிவமைப்பு மற்றும் கலை துறையில் பெரிதும் சாதித்தவர்கள் 
இரானியர்களே !

Tuesday 3 July 2018

மருத்துவமனையில் லாபம்

இந்த வாரம் ( 2.7.2018 டு 7.7.2018 ) எந்தெந்த நிறுவன பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வரும் ? லாபம் தரும் என்று பங்கு சந்தை ஜோதிடர்கள் சில நிறுவனங்களை  கூறுகிறார்கள் .
அந்த வகையில் , டாடா ஸ்டீல் , ஆதித்ய பிர்லா குரூப் , ஹீரோ நிறுவனம் , IDFC  கேப்பிடல் பிரஸ்ட்  ஆகியன நல்ல லாபம் தரும் பங்குகள் என்று கூறி விட்டு ,



அப்போல்லோ மருத்துவமனை பங்குகளும் அதிக லாபம் தரும் வாய்ப்பை பெறுகிறது என்றும் கூறுகிறார்கள் .
மற்றவையெல்லாம் தொழில் .
ஆனால் மருத்துவமனையில்  லாபம் என்றால் , அங்கு வரும் ஒவ்வொரு நோயாளியும் தான் , முதலீட்டாளர்களின் இடுபொருளா ?
மருத்துவமனைகள் வேண்டாம் எனும் போது ,
பங்கு சந்தையில் லாபம் தரும் பட்டியலில் உள்ள மருத்துவமனை மற்றும் கல்லூரிகளை புறந்தள்ளுக !


அந்நிய நேரடி முதலீடு 2018

2017 - 2018 ம் ஆண்டுதான் இந்திய வரலாற்றிலேயே மிகவும் குறைந்த அளவு , அந்நிய நேரடி முதலீடு நடந்து இருக்கிறது .
அந்நிய நேரடி முதலீடு என்பது இந்தியாவிற்கு நல்லது அல்ல என்ற போதிலும் , 2016 ம் ஆண்டு நாவேம்பரில் பணமதிப்பிழப்பு நடந்த போது கூட அதிக அளவிலான முதலீடு பெற்ற இந்தியா , இன்று முதலீடு குறையும் நிலைக்கு வந்துள்ளது .


2017 ம் ஆண்டு , சீனாவின் 600 நிறுவனங்கள் 85 பில்லியன் டாலர்களை  இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்ததாக தகவல் தருகிறது  economic Times .
ஆனால் இன்று இல்லை .

2018  ஆண்டு கணக்கின் படி மொரீசியஸ், நெதர்லாந்து , சிங்கப்பூர் , அமெரிக்கா , ஜப்பான் மட்டுமே அதிக அளவில் முதலீடு செய்துள்ளன . அதிலும் மொரீசியஸ் மட்டுமே அதிகப்படியாக 14 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது . அமெரிக்காவும், ஜப்பானும் முறையே 2 பில்லியன் , 1 . 5 பில்லியன் டாலர் அளவிலேயே முதலீடு செய்துள்ளன .

மாறாக , இந்தியாவில் உள்ள தனி நபர்கள் , உலகம் முழுக்க செய்துள்ள முதிலீடு 11 பில்லியன் அளவில் எட்டியுள்ளது .
இந்த முரண்பாடு ஏன் ?

வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்கள் ஏன் இந்தியாவில் முதலீடு செய்வது இல்லை ?
பதில் இல்லை .

அதே சமயம் , குறைந்த அளவு வெளி நாடு முதலீடு என்பது , இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு போதுமான சலுகை இல்லாததாலேயே ஏற்படுகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்களாம் .
இதையே காரணமாக கொண்டு , வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மேலும் பல சலுகைகள் வழங்க இந்தியாவும் முயற்சிக்கிறது ,

இதில் ஒரே ஒரு சந்தேகம் தான் ,
அப்போ , கடந்த 4  ஆண்டுகளாக , பிரதமர் மோடி பல நாடுகள் சென்று போட்ட ஒப்பந்தங்கள் என்ன ஆனது ?


எல்லா சிவனும் ஒன்றல்ல



இப்போ நம்ம ஊரில் , நிறைய பேரு சிவா , முருகன் , சரவணன் , நாராயணன் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள் . இவர்கள் எல்லோரும் , அந்த கடவுளின் வடிவமும் அல்ல . அந்த கடவுளின் பிரதி பிம்பமும் அல்ல . இப்போ ஏசு ராஜ ன்னு ஒருத்தர் பேரு வைக்கிறார்ன்னு வைச்சிக்குவோம் . அவருக்கும் ஏசு பேசிய மொழிக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா ?
அப்படிதான் ,
சிவனுக்கு தமிழ் தெரியாது என்பதும் !
ஜக்கி சொல்லும் சிவனுக்கு தமிழ் தெரியாது . ஏனெனில் அவர் நேபாளத்தை சேர்ந்தவர் .
அவர் தமிழ் பேசவே இல்லை .
இங்கு வாழ்ந்ததாக கூறப்படும் சிவன் , காலத்தால் முற்பட்டவர் , அவரின் காலம் , அல்லது உருவம் கணிப்பிற்கு உரியது அல்ல . ஆனால் , அந்த பெயர் உலகம் முழுக்க பரவிய காலத்தில் , எல்லோரும் அதே பெயரையே சூட்டி கொண்டனர் .
அப்படி சிவன் என்று பெயர் வைத்து கொண்ட ஒருவரை பற்றி தான் ஜக்கி பேசுகிறார் .

ஆரிய , பார்சி பெரும் கூட்டத்தின் வேலையே இது தான் .
பிற்காலத்தில் இருந்த வரலாறுகளை , உண்மையான வரலாறுகளுக்குள் திணித்து விட்டு ,
வரலாறுகளை குழப்புவது , தவறான விஷயங்களை பரப்புவது .
எல்லா சிவனும் ஒன்றல்ல !

நாகர்களின் ரகசியம் புத்தகத்தில் , வடக்கர்களே விளக்கி இருக்காங்க !


Monday 2 July 2018

பயோ சிப்

பயோ சிப் என்பது ஒரு சிறிய சிம் கார்டு போன்ற ஒன்றை உடலில் செலுத்தி கொள்வது . அதன் மூலம் , பொருத்தி கொண்டார் சார்ந்த எல்லா தகவல்களும் , அவர் என்னென்ன செய்கிறார் என்பது உட்பட அனைத்தையும் அறிய முடியும் .
இதை தற்சமயம் ஸ்வீடெனில் உள்ள அமெரிக்க நிறுவனத்தின் மூலம் 2500  பேர் பொருத்தி கொண்டு உள்ளனர் .
விரைவில் நாடு முழுவதும் பரவுமாம் .

இந்த தகவலால் இந்தியாவில் என்ன நிகழ இருக்கிறது ?
ஏற்கெனவே ஆதார் என்னும் சான்று , நம் அனைவரின் தகவல்களையும் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறது .
அதில் மேலும் , நொடிக்கு நொடி நம் உடல் , செயல் சார்ந்த அனைத்தும் பதிவு செய்யப்பட இருக்கிறது . இது கடந்த 2010 ம் ஆண்டே இந்தியாவில் பேசப்பட்டுள்ளது . அதன் பிறகு 2012 லும் 2017 ம் ஆண்டும் இது குறித்து , மென்பொருள் நிறுவன திருட்டை தடுக்க பயன்படுத்த படும் என்ற தகவலுடன் பகிரப்பட்டுள்ளது .


இதன் அடிப்படையாக , மருத்துவ துறையில் இந்த பயோ சிப் முறையானது , மிக சிறிய அளவில் பயன்படுத்த படுகிறது .
Tiens  எனும் சீன பயோ டெக்னாலஜி நிறுவனம் , ஒரு சிறு கருவி மூலம் , உடலில் பொருத்திய நிமிடங்களில் சர்க்கரை அளவு  முதல் உடலில் நிகழும் எல்லா மாற்றங்களையும் கூறுவதாக , கூறி அம்முறையை பயன்படுத்தி , மருந்தும் விற்பனை செய்கிறது .

ஆனால் , அந்த தகவல் நோயாளிக்கு மட்டும் செல்ல போவது இல்லை . அதை தாண்டி , வேறு பிறருக்கும் செல்ல வாய்ப்பு இருக்கிறது .
இதை நம் மக்களே , மருத்துவ சந்தையில் கொண்டு செல்வது தான் கொடுமை !





RFID = Radio frequency identification = bio chip



Monday 25 June 2018

பகுத்தறிவு விதைத்தது திராவிடம் அல்ல

நேற்று 25.6.2018

சத்தியம் தொலைக்காட்சியில் ஒரு விவாத நிகழ்ச்சி .
ஆளுநரை எதிர்த்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை என்று அறிவித்துள்ளார் ஆளுநர் .
இது சரியா என்பது குறித்து ஒரு விவாதம் .
அதில் சவுக்கு சங்கர் மற்றும் நாராயணன் பேசிய விவாதம் கண்டு ஆச்சர்ய பட்டு போனேன் .

சவுக்கு : ஆளுநரை எதிர்த்தால் தண்டனை என்பது மிரட்டல் . கருப்பு கொடி                        காட்டி எதிர்ப்பு தெரிவிப்பது நம் மரபு . அதை செய்ய கூட உரிமை                        இல்லையா ? ஒரு விஷயத்திற்கு நீங்களே பதில் சொல்லுங்க ,                                     நிர்மலா தேவி பேசிய உடன் , ஆளுநர் எதற்கு விசாரணை கமிஷன்                       வைக்க வேண்டும் . தப்பு பண்ணின ஆளே , அவருக்கே விசாரணை                     கமிஷன் வைப்பார்களா ? இந்த இடத்தில எதிர்த்தால் , சிறை                                      தண்டனையா ?

உடனே ,

நாராயணன் இடை மறித்து ,

எப்படி நீங்க ஆளு என்றெல்லாம் பேசலாம் . ஆளுநர் என்ற மரியாதை கூட இல்லையா ? முதலில் அந்த வார்த்தையை வாபஸ் வாங்குங்க !

சவுக்கு : முடியாது , நான் வாபஸ் வாங்க முடியாது . அவரே ஏன் விசாரணை                        கமிஷன் வைத்ததின் அர்த்தம் என்ன ?

நாராயணன் : இங்க பாருங்க . நிர்மலா தேவி குறிப்பிட்டது ஆளுநரை !                                              விசாரணை கமிஷன் வைத்தது , ஆளுநர் கிடையாதுங்க !                                          பல்கலை கழக துணை வேந்தர் . இரண்டையும் போட்டு                                             குழப்பாதீங்க !


இந்த பதில் வந்த உடன் தான் எனக்கு புரிந்தது ,
பகுத்தறிவு விதைத்தது திராவிடம் அல்ல . ஆரியம் என்பது !
இனிமே எந்த திராவிடம் அலட்டி கொள்ளாதீர்கள் . பகுத்தறிவு விதைத்தது நாங்கள் தான் என்று !
உங்களுக்கு அப்பா ஒருத்தர் இருக்கார் . ஆரியர் .
இரெண்டு பெரும் சேர்ந்து தமிழர்களை ஏமாற்றும் கலைக்கு பெயர் தான்
பகுத்தறிவு !

( ஆளுநர் மற்றும் பல்கலை கழக துணை வேந்தர் இரண்டுமே
பன்வாரி லால் புரோகித அவர்களே )




Wednesday 6 June 2018

surname in tamil

surname enraal சார்ந்த நாமம் என்ற தமிழ் கலந்த சமஸ்க்ரித பெயர் தான் . யாரை சார்ந்து இருக்கிறோம் என்பதை தான் குறிப்பிட வேண்டும் . உலகின் எல்லா மூலையிலும் யாரை கேட்டாலும் , அவன் செய்கின்ற தொழிலை தான் சொல்லுவான் . ஆமா , நான் என தொழிலை மட்டுமே நம்பி வாழ்கிறேன் . நான் உழைத்து உண்பவன் என்பதே , அதன் மறுபொருள் . இதன் அடிப்படையில் , தமிழத்தின் எல்லா ஜாதிகளும் , தொழில் சார்ந்தே விதிக்க பட்டவை .

100 ஆண்டுகளுக்கு முன்பு , தமிழகத்தின் தொழில்கள் அழிக்கப்பட திட்டமிடப்பட்ட போது தான் , ஜாதிகள் வேண்டாம் என்று பரப்புரையும் செய்ய பட்டது . ஒரு தொழில் சார் விஷயத்தை , ஏற்ற தாழ்வுக்குள் கொண்டு சென்று ,
ஜாதி போடுவது மடமை என்ற எண்ணத்தை உருவாக்கி , அதன் மூலம் தன குலத்தொழிலை தானே மறைக்கும் அறிவு போதிக்கப்பட்டது .

அதை விட கொடுமை , surname என்ற இடத்தில , தகப்பனாரின் பெயரை மட்டும் போட்டு கொள்ள , நமக்கு பரிந்துரைக்க பட்டது தான் ! காலாகாலத்துக்கும் , எல்லோரும் அப்பாவை மட்டுமே சார்ந்து வாழ்கிறோம் என்றே பொருள் வருகிறது .
surname  எனும் தொழில் சார்ந்த ஜாதி பெயர் போடுவது தவறு இல்லை . 
அதில் ஏற்ற தாழ்வு பாராட்டி சண்டையிடுவது , உயிருக்கு ஊரு விளைவிப்பது என்பது மிக மிக  தவறு


Thursday 31 May 2018

ராவணன் எனும் புரிதல்

முதலில் ராவணன் தமிழன் தானா என்று ஆய்வு செய்யாதீர்கள் ?

இராவணனை தமிழன் இல்லை என நிரூபிக்க முயற்சிக்காதீர்கள்.
ஏனெனில், தமிழன் இலங்கையின் பூர்வகுடி இல்லை என்றும், அந்த சிங்கள நாடென்றும், இலங்கை உரிமை கொண்டாடி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ராவணன் எனும் கதாபாத்திரம், மிக பெரிய ஆதரமாக இங்கு நிற்கிறது.
மேலும், 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் கதையில், 10000 ஆண்டுகளாக வாழும் தமிழனும் உண்டு என்பதில், என்ன மாற்று கருத்து இருக்க முடியும்?

தமிழக ஜாதிகளை தேடி பாருங்கள், இந்தியா முழுக்க உண்டு

கால ஓட்டம், கலப்பால், எல்லோரும் பிரிந்தனர்
நாம் சுருங்கி விட்டோம். தமிழக மண்ணில் மட்டும் கலப்பு நிகழவில்லை.
ஆரியகலப்பு நிகழவிடாமல், பலர் தடுத்து இருக்கிறார்கள்
மிக பழைமையான வரலாறுகள் இருக்கிறது.


----------------------------------------------

ராவணன் வடஇந்தியனா ?

இல்லை .
ராவணன் என்பது தமிழ் பெயரே
ரா வண்ணன் என்றால்
கருப்பு என்றே பொருள்.

ராம என்பதும் தமிழ் பெயரே
தமிழை பின் னிருந்து முன்னோக்கி எழுதுவது தான் வடமொழி வழக்கம்

ராம = மாற

மாறன் என்னும் தமிழ் பெயரை கொண்டு இரு வேறு தமிழ் கூட்டங்களுக்குள் சண்டை மூட்ட உருவாக்கப்பட்டன கதை

என்றுமே, தமிழ் இனத்திற்குள், சண்டை மூட்டும் வழக்கம் வந்தேறிகளுக்கு உண்டு.


ராவணன் வாழ்ந்த காலம் வேறு , ராம எனும் மாறர்கள்  வாழ்ந்த காலம் வேறு .
தொடர்பே கிடையாது .

------------------------------------------------------------------


ராவணன் என்பவன் வாழ்ந்தானா ?

வாழ்ந்தது மட்டும் உண்மை
இந்தியா முழுக்க வே, ராவணன் எனும் கருப்பு  வணங்கபட்ட நிலையில்,

இங்கு வந்து குடியேறிய மக்கள்
ராவணன் குறித்து, சிறு அறிவும் இல்லாமல், மக்களின் பேச்சு வழக்கை மட்டும் கொண்டு,
ஹோமரின் கதைகளை திணித்து எழுதபட்ட காவியமே ராமாயணம் .
இதனை அக்காலத்திலேயே எதிர்த்து, அதனை பரப்பியவர்களை தண்டித்தவர்கள் தான் இலங்கை மக்கள், இதன் அடிப்படையில்,
இலங்கையே பூர்வீகமாக இருக்க வேண்டும்.
அன்று தண்டித்ததை பலி வாங்க தான்,
இலங்கை சபிக்க பட்ட பூமி என்று வர்ணித்தான் ரஜினி.
பலி வாங்கப்பட்டது.


------------------------------------------------------------------

ராவணன் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருக்கிறதா ?


 இலங்கையில் உள்ள, ராவணமலையை, தான் ஆதாரம் காட்டுகிறார்கள்.
மேலும் 5000 ஆண்டுக்கு முந்தைய கதை
யாரும் பெரிதாக ஆய்வு செய்யவில்லையே.
ஆனால்,
சீனாவில் உள்ள மருத்துவ புத்தகமும், வட இந்திய ராவண கோயில்களும்
தான், ஆதாரம் தருகின்றன.



ராவண கோயில்கள் கூட இங்கு இல்லை,
இது இரு வேறு இன குழுக்கள்செய்த வேலை,
விழாக்கள், கோயில்கள் கட்டுவது நமக்கு வழக்கம் இல்லை
அதனால் தென்னிந்தியா, மற்றும் இலங்கையில்  இல்லை
ஆனால், சுங்க வம்ச காலத்திற்கு முந்தைய காலத்தில் மெளரியகுலம் , கிரேக்க தொடர்பு கொண்டதால் கோயில் கட்டும் வழமைக்கு வந்துள்ளது.
அதுதான் தொடர்கிறது .எல்லாம், 1800 ஆண்டுகள் கொண்ட வரலாறு தான்
, உண்மையில் ராவணன் காலம் வேறு,
இவர்கள் கூறும் கதையின் காலம் வேறு,
எந்த கருப்புக்கும் இன்று வரை நாம் கோயில் கட்டுவது இல்லை



ராவணன் என்பவன் ஒரு கருப்பு 

ராமாயணம் . சுங்க வம்ச பிராமணர்களால் எழுதப்பட்டது .
அவர்கள் யூத கலப்பு கொண்டவர்கள் .
அங்கு இருந்து ஆரம்பித்த  பிரச்னை இன்று வரை தொடர்கிறது .



Sunday 27 May 2018

தமிழர் வணிகம் என்றால் என்ன ?

பலர் வணிகம் என்றதும் , கார்பொரேட் பொருள்களை வாங்கி விற்பது என்று எண்ணி கொள்கிறார்கள் .

உற்பத்தியை கையில் எடுக்க வேண்டும் .
அப்படியும் , உற்பத்தியை கையில் எடுத்த பலர் ,
முதலில் உள்ளூரில் விற்கவோ , உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றவோ தயார் இல்லை .

மாறாக ஏற்றுமதி செய்து , தான் மட்டும் முன்னேறி கொள்ளவே முயற்சிக்கிறார்கள் .
2017 ம் மட்டும் , திருப்பூர் பின்னல் ஆடை உற்பத்தி செய்தவர்கள் , ஏற்றுமதி செய்தது மட்டும் 12500 கோடி ரூபாய் . அதே ஆடைகள் , வெளி நாடு சென்று மீண்டும் , பிராண்டு பெயர் மாற்றி , நம்மிடமே விற்பனைக்கு வருகிறது . இந்த உற்பத்தியால் என்ன பயன் ? தஞ்சை மற்றும் திருச்சியில் இருந்து மலர்கள் எல்லாம் ஏற்றுமதி செய்யப்பட்டு , உள்ளூரில் கிலோ 500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் வரை விற்பனை ஆகிறது .

இயற்கை வழி உற்பத்தியும் சரி , தொழில் நுட்ப உற்பத்தியும் சரி , உள்ளூர் தேவைகளை நிறைவு செய்யாமலேயே , வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது . அங்கு இருந்து , மீண்டும் வணிகமாக மாறி நம் பணத்தை சுரண்டுகிறது .

தொடர்ந்து இதை செய்ய மட்டுமே , இந்திய அரசு ஊக்குவிக்கிறது . நாம் வாங்கும் பொருள்கள் , நேரடி உற்பத்தியாளரிடம் இல்லை . அதே சமயம் , உற்பத்தி செய்பவர்களும் விற்பனை செய்ய தயார் இல்லை . இதனை பயன்படுத்தி ஏற்றுமதி செய்யும் எல்லா பொருளுக்கும் 10 % மானியமாக அரசு வழங்குகிறது . மேலும் இந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் வரை , ஏற்றுமதி க்கு தேவையான , கட்டமைப்பு செய்ய மட்டும் அரசு ஒதுக்கியுள்ளது .

உற்பத்தியை விட முக்கியம் , அதை யாருக்கு செய்கிறோம் என்பதில் உள்ள புரிதல் !

தமிழர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் எனில் ,
தமிழர் உற்பத்தி பொருள்
தமிழருக்கே முதலில் என்றும் ,
எஞ்சியவையே ஏற்றுமதி ஆகும் என்றும்
நம்மால் கூற முடியுமேயானால்

அது தான்
தமிழர் உற்பத்தி வணிகம் !


Saturday 26 May 2018

வளர்ச்சி தேவை இல்லை

தூத்துக்குடி ஸ்டெர்லிட் ஆலையை மூடி விட்டால் , காப்பருக்கு என்ன செய்வீர்களாம் ? உங்கள் வீட்டில் உள்ள அணைத்து மின்சாதன பொருள்களும் இதனை கொண்டுதான் இயங்குகிறது தெரியுமா ? காப்பர் உடம்புக்கு நல்லது என்று சொன்னால் ஏற்று கொள்கிறீர்கள் ! ஆனால் ஆலை மட்டும் வெண்டோமோ என்று
அறிவாளி தனமாக கேள்வி கேட்கப்பர்வர்களை காணும் போதும் ,

மீத்தேன் இல்லாமல் எப்படி , சமையல் செய்வீர்களாம் என்று கேள்வி கேட்பவர்களை காணும் போது ,

வளர்ச்சி இன்றி போனால் தமிழகம் அழிந்து விடும் என்று கூறும் போதும் ,

இத்தனை பெரிய முட்டாள்களோடு , இந்த தமிழகம் வாழ்கிறதே என்று அருவருப்பாக உள்ளது .

20 ஆண்டுக்கு முன்பு வந்தது தான் இந்த ஆலைகள் , காஸ் , வளர்ச்சி எல்லாம் !

பல ஆயிரம் ஆண்டுகளாக ,
இதே மீத்தேன் , இதே தாமிரம் எல்லாம் பயன்படுத்திய இனம் இது !
அவை எல்லாம் இயற்கை வழி !

அதன் பயன் வணிகம் அல்ல ! எங்கோ உள்ள லண்டனில் , உள்ள பணக்காரன் வாழ அல்ல !
பின்விளைவு தராத அறிவியலை பயன்படுத்திய இனத்திற்கு ,
நோய்களோடு வரும் வளர்ச்சி தேவை இல்லை !



Thursday 24 May 2018

தற்சார்பை நோக்கி நட !

தூத்துக்குடி மட்டும் அல்ல ,
தமிழகத்தையே காப்பாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்தால் ,
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் .

தமிழகத்தில் இருந்து , இனி வருமானம் வரக்கூடாது .
எனில்
வரி செலுத்துவதை நிறுத்த வேண்டும் .
வரி என்றவுடன் எல்லோரும் வருமான வரியை பற்றி மட்டுமே பேசுகிறோம் .
அது ஒரு பெரிய விஷயமே இல்லை .
ஏனெனில் , இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் வருமான வரி செலுத்துவோர் மொத்தம் 5 % கூட கிடையாது .
மறைமுகமாக , நாம் செலுத்தும் GST தான் முக்கிய வருவாய் !



பாக்கெட்டில் , பாட்டிலில் , டியூபுகளில் அடைக்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருளையும் வாங்காதீர்கள் .
ஏனெனில் அந்த பொருள்களில் தான் வரி சேர்த்து வாங்கப்படுகிறது .
வரி விதித்து அரசுக்கு சேவை செய்வதாக கூறும் உணவகங்களில் உண்ணாதீர்கள் !
அவசர சிகிச்சை அல்லாத , வேறு எந்த ஒரு விஷயத்திற்கும் மருத்துவமனை தேடாதீர்கள் . ஒவ்வொரு மருந்து பொருளொடும் , நம் பணம் , முதலாளிகளின் திமிரை அதிகரிக்கிறது .
கட்டாயம் அல்லாத எந்த ஒரு காப்பீடும் போடாதீர்கள் !
கட்டாயம் அல்லாத சேமிப்பு என்ற பெயரில் , உங்கள் பணத்தை கொண்டு முதலாளிகளை வளர்க்காதீர்கள் !
அந்த வரி பணமும் , விற்பனை விலையும்தான்  திட்டமும் தீட்டப்
உதவுகிறது .

உள்ளூரில் உள்ள விற்பனையாளர்களை தேடுங்கள் !
உங்கள் அருகாமையில் மாடு வைத்து இருப்பவரிடம் பால் வாங்குங்கள் !
( பாக்கெட் பால் கூட வேண்டாம் )
உங்கள் வீட்டில் , காய்கறி , பழம் தரும் மரங்களை வளருங்கள் !

ஏனெனில் ,
நாளை நாமும் 144 க்கு கீழ் வரலாம் .
கற்பக விருட்சமும் ( பனை மரம் ), காம தேனுவும் ( எருமை மாடுகள் ) இருந்த , கொற்கை
தூத்துக்குடி யாக மாறி ,
இன்று 144 எதிர்கொண்டு நிற்கிறது .
நாளை நாமும் ,
ஏன் என்ற கேள்வி இல்லாமல் , சட்டத்திற்குள் அடைக்கப்படலாம் .அல்லது சூழ்நிலைகள் உருவாக்கப்படலாம் .

தற்சார்பு என்று பலபேர் கத்தியத்தின் அர்த்தம் ,
இன்று தூத்துக்குடியில் !
நாளை நம்ம ஊரிலும் !


Thursday 26 April 2018

தமிழன்டா !

தமிழர்கள் , தமிழன்டா என்று காலரை தூக்கி விட்டு கொள்ள கூடிய இரு சம்பவங்கள் உள்ளன .

1 . நம்ம சுந்தர் பிச்சைக்கு கூகிள் நிறுவனம் தந்த பங்குகளை அவர் விற்று கொள்ள கூடிய காலம் வந்து விட்டது . இதன் மூலம் அவர் 2048 கோடிக்கு சொந்தக்காரர் ஆகிறார் .
தமிழ்நாட்டிற்க்கு ஒரு பிரயோசனமும் இல்லை .
இருந்தாலும் தமிழன்டா அப்படின்னு சொல்லிக்கலாம் .


2 . தற்போது இங்கிலாந்து வங்கியின் கவர்னராக இருக்கும் , கனடாவின் , மார்க் காரனே வின் பதவி காலம் 2019 ல் முடிவடைகிறது .
அந்த இடத்திற்கு , நம்ம RBI யின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இதுவும் தமிழ்நாட்டிற்கு பிரயோசனம் இல்லாத விஷயம் தான் .

இருந்தாலும் தமிழன்டா !






சராசரியாக ஒரு தமிழனால் , இதை எல்லாம் செய்ய முடியுமா ?
இங்கிலாந்து  வங்கிக்கு கவர்னர் என்ற பொறுப்பு என்பது வழங்கப்படுகிறது என்றால்
அவர்  ?


தமிழன்டா !

Wednesday 25 April 2018

ஆண்ட பரம்பரையா ?

இன்று இந்தியாவை ஆள்வது யார் என்று கேட்டால் ,
பார்சி இனம்
ஜைனம் - சமணம் - பௌத்தம் - திராவிடம் - ஜொராஷ்ட்ரியம் .

கி.பி.  7 ம் நூற்றாண்டு தருணத்தில் , தமிழகத்தின் சமண முனிவர்கள் பலர் கொலை செய்ய பட்டனர் .
அதன் பலி வாங்கும் நடவடிக்கை தான் இப்போது தமிழகத்தில் நடப்பது !



சிரியாவிலும் , பலிவாங்கும் நடவடிக்கை தான் நடக்கிறது .

 காஞ்சிபுரம் தான் இலக்கு ! இதற்காக தான் , போதி தருமர் கதையை  ஏழாம் அறிவு கதை மூலம் நமக்கு நினைவூட்டினார்கள். இதில் பல்லவம்சம் இன்னும் உயிரோடு இருக்கிறதா என்றும் ஆய்வு செய்து இருக்கிறார்கள் .
ஏனெனில் , சமணத்தை விரட்ட முடிவெடுத்து அதில் வென்றவர்கள் , பல்லவர்கள் , அவர்களுக்கு துணை நினறது பாண்டியர்களும் , முத்தரையர்களும் !
இதில் பாண்டியர்கள் , முழுவதும் கிறிஸ்வமாக மாற்றப்பட்டு விட்டனர் . அவர்களின் நேரடி கடைசி வாரிசு ஒரு பெண் . அவர் ஒரு ஆங்கிலேயனை திருமணம் செய்து விட்டார் .
அவ்வாறு சமணர்களை விரட்ட , போர் புரிய பயன்பட்டது தான் புதுகோட்டை .
நாலடியார் என்ற நூல் குறித்து ஒரு கதை உண்டு !
அந்த கதையில் ,  நானூறு சமணர்கள் , நாலடியார் நூலை எழுதி , அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கும் பொழுது , இதை கேள்வி யுற்ற மன்னன் அவர்களை கொலை செய்ய உத்தரவிடுகிறான் . இந்த செய்தி அறிந்த , சமணர்கள் , இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடி விடுகிறார்கள் .
ஆனால் நாலடியார் நூலை மட்டும் விட்டு விட்டு செல்கிறார்கள் .

70 ஆண்டுகளுக்கு முன்பு தான் , சாமிநாத ஐயர் இவற்றை எல்லாம் தேடி தொகுத்தார் .
தமிழகத்தில் இன்று புழக்கத்தில் இருக்கும் எல்லா நூல்களும் , சமணம் சார்ந்தவை .
இந்த மதம் தான் திராவிடம் . இதன் தகப்பன் தான் , பார்சி இனம் . ஜொராஷ்ட்ரிய மதம் .
தாமரை மலர் மீது தீபம் .

இங்கு தான் ஆண்டபரம்பரை என்று அலட்டி கொள்ளும் பலர் தானும் சிக்கி கொண்டு , தமிழகத்தையும் காவு கொடுக்க காத்து கொண்டு இருக்கிறார்கக்ள் .

Thursday 12 April 2018

தோனியின் சொத்து யார் தெரியுமா ?

தோணி தனக்கு சேர வேண்டிய 150 கோடியை தரவில்லை என்று , தான் விளம்பரதாராக 7 ஆண்டுகள் பணியாற்றிய உத்தரபிரதேச அம்ப்ராபாலி எனும் கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் .

ஐயா கிரிக்கெட் ரசிகர்களே ,
கொஞ்சம் யோசிங்க ! ஒன்று , இரண்டு அல்ல .150 கோடி . யாரிடம் இருந்து நிறுவனம் பெற்று தரும் . வாடிக்கையாரிடம் இருந்து பெற்று தரும் . அவ்வாறு தரும் போது , தன்னுடைய லாபத்தை ஒரு நிறுவனம் இழக்க விரும்பாது .
விளைவு , தரமற்ற கட்டிடம்  தான் மக்கள் கைக்கு போய் சேரும் .

எங்கு இருந்து இவருக்கு , 150 கோடிக்கு விலை பேச முடிகிறது ?
ரசிகர்கள் எனும் சொத்து !
ஒரு சினிமா நடிகர் , விளையாட்டு வீரர் நடிக்கும் ஒரு விளம்பரம் மூலம்  மக்களுக்கு வந்து சேரும் எந்த ஒரு பொருளும் தரமுடையாதாக இருக்காது .

இதற்க்கு காரணம் , இதன் குற்றவாளி
ரசிகன் எனும் நீங்கள் !






Saturday 31 March 2018

கருப்பு கொடி கலாசாரம்

சுப்ரமணிய சாமி தெளிவாக தான் சொல்றார்.
நீ நிலத்திற்கு தண்ணீர் கேட்காதே !
அது தர மாட்டோம் .
நிலத்திற்கு தண்ணீர் வந்தால் , மீத்தேன் எடுக்க முடியாமல் போகும் .
அதனால் நிலத்தடி நீர் கிடையாது .

குடிக்க நீர் வேண்டும் என்றால் ,
தர முயரிசிக்கிறோம்.
அப்பவும் , நிலத்தடி நீரோ , காவிரி நீரோ தர மாட்டோம்.
கடல் நீரை , நன்னீராக்கி தருகிறோம் .

அதுவும் இஸ்ரேல் உதவியுடன் !

எத்தனை பெரிய திட்டத்தை , அழகாக கூறி விட்டார் .
அவங்க முடிவில் எவ்வளவு தெளிவாக இருக்காங்க !

நம்ம ஆளு கருப்பு கொடி வாசலில் கட்டி விட்டால் ,
காவேரி தண்ணீர் வந்து விடும் என்கிறான் .
மிஸ்ஸுடு கால் கொடுத்தால் ,
நதிகள் இணையும் என்பது போல் உள்ளது கருப்பு கொடி !





Friday 30 March 2018

காவேரி நதி நீர் போராட்டம் - புதுமை புதுமை , அத்தனையும் புதுமை .

ஏப்ரல் மாதம் போராட்ட மாதம் என்று அறிவிப்போமாக !
அவ்வளவு போராட்டமும் வைட்டிங் லிஸ்ட் ல இருக்கு !
------------------------------------------

ஏப்ரல் 2 மருந்து கடைகள் மூடப்படும்.
ஏப்ரல் 3 உண்ணாவிரத போராட்டம் - அதிமுக
ஏப்ரல் 11 கடையடைப்பு போராட்டம் - பாமக
ஏப்ரல் 15 ல் கருப்பு கொடி கட்டும் போராட்டம் - திமுக
வருமான வரி அலுவலக முற்றுகை - மே 17 இயக்கம் .
வீட்டுக்கு வீடு கருப்பு கொடி கட்டும் போராட்டம் - பாமக
செல்போன் டவர் கைப்பற்றும் போராட்டம் - தவாக
அப்புறம் ரயில் மறியல் போராட்டம்
பஸ் மறியல் போராட்டம்
நிறையவே இருக்கு !
எல்லாமே நம்ம வயிற்றில் நாமே அடித்து கொள்ளும் போராட்டம் .
இதில் விவசாயிகள் செய்யும் போராட்டம் ரொம்ப புதுமையானது .
உலகமே அசந்து போகுது .
ஒப்பாரி போராட்டம்,
கருப்பு கொடி போராட்டம் ,
பாடை கட்டும் போராட்டம்,
கோலம் போடும் போராட்டம்,
அரை நிர்வாண போராட்டம்,
மண்டையோடு அணியும் போராட்டம்,
வேப்பிலை அணியும் போராட்டம்,
மொட்டை அடிக்கும் போராட்டம்,
உண்ணா விரத போராட்டம்,
மெழுவர்த்தி ஏற்றும் போராட்டம்
ஆற்றில் இறங்கும் போராட்டம்,
கடலில் இறங்கும் போராட்டம்,
முட்டிகாலில் நிற்கும் போராட்டம்
அதிகப்படியாக போனால் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் .
என்னய்யா உங்க போராட்டம்!
இந்த போராட்டங்கள் எல்லாம் பிரிட்டிஷாரை எதிர்த்தபோது கூட யாரும் இப்படி செய்ய வில்லை.
எந்த காலத்தில்,
தமிழினம் இப்படி போராடிய வரலாறு உள்ளது என்றே தெரிய வில்லை.
எவ்வோளவோ தொழில்நுடபத்திற்கு மாறி விட்டோம் .
ஆனால் போராடும் போது மட்டும் ,
யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நோகாமல் போராட ,
நம் பகுத்தறிவு நம்மை வழிநடத்துகிறது போலும் !
ஆங்கிலேயனை எதிர்க்க சொன்னால் ,
நம்ம ஊர் பனை மரங்களையும் , தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தி ,
நம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தவர்கள் தானே !
அப்படிதான் சொல்லி தருவார்கள் .
போராட்ட முறைகளை மாற்றுங்கள் !
இல்லையேல் ,
போராட்டங்களையெல்ல்லாம் புறக்கணிப்பு செய்யுங்கள் !
ஆக்கபூர்வ வழி தேடுங்கள் !
( நம்மை அழிக்க வழி சொல்லும் திராவிட
பகுத்தறிவை புறக்கணிப்பு செய்வோம் .)
HELP ஏலம் ஏப்ரல் 3 ல் முடிவடையும் .
பின்னால் ஒரு நாள் இதற்கும் போராடுவோம் .
அப்போதும் இந்த திராவிட போராட்டத்தை அரசியல் கொண்டு வரும் .
நினைவிற் கொள்க .
காலத்தில் கிடைக்காத நீதி அநீதிக்கு சமம் .
வரும் முன் போராடுவது , நம் மூலதனம் .
வழிகளை எல்லாம் அடைக்கிறது , பகுத்தறிவு மனம் !


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...