Thursday 26 January 2017

அரிசியும் மருந்தும்

சில சமயங்களில் விஷம் மருந்தாகிறது
பல சமயங்ககளில் மருந்துதான் விஷமாகிறது.

இவை நமக்கு வேண்டாம்.
உணவையே மருந்தாக்குவோம் என்கிறது தமிழ் மரபு .

நாம் உண்ணும் அரிசியே எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.
ஆனால் நாம் உண்ண வேண்டிய அரிசி எதுவென இன்று நமக்கு தெரியாமல் போனதுதான் வருத்தம்.

இப்போது தெரிந்து கொள்வோம் .

இந்தியாவில் மட்டும் லக்ஷக்கணக்கான நெல் ரகங்கள் ஒரு காலத்தில் இருந்துள்ளன.

ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் வேலையை அடி முதல் முடி வரை காட்டியதாலும் , சுதந்திரத்திற்கு பிறகு அவன் வேலையை தொடர்ச்சியாக நம்மால் தேர்தெடுக்கப்பட்ட இந்தியர்களே பசுமை புரட்சி என்ற பெயரில் செய்ததாலும் ஏறக்குறைய எல்லா நெல் ரகங்களையும் இழந்து விட்டோம் 

மீண்டும் திரு .நம்மாழ்வார் அவர்களின் முயற்சியாலும் திரு.ஜெயராமன் மற்றும் திருமதி .உஷா அவர்களாலும் கிட்டத்தட்ட 600 நெல் ரகங்கள் மீட்கப்பட்டுள்ளன .

அத்தைகைய நெல் ராகங்கள் அனைத்தும் மருந்தே.!

அவற்றில் ஒரு சில:rice pic க்கான பட முடிவு


மாப்பிளை சம்பா :
     உடலை பலபடுத்தும் மாமருந்து .
திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

கவுணி அரிசி :
     புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி .
இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் .

சிவப்பு கவுணி அரிசி :
     புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி .
இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது .

குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் .

சேலம் சன்னா :

     கர்ப்பகாலத்தில் உண்ண வேண்டிய அரிசி .
குழந்தை பேரு நன்முறையில் நடக்கும் .
களைப்பில்லாமல் வேலை செய்ய உதவும் .
இது நாய் கடி விஷத்தை முறிக்கும் .

பூங்காற் அரிசி :

     மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி .
தாய்பால் சுரக்கும் .

கட்ட சம்பா அரிசி :

    நோய் எதிர்ப்பு சக்தி தரும் .


சிங்கினி கார் அரிசி :
     எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி .
உடல் நலம் பெற உதவும் .

இலுப்பைபூ சம்பா அரிசி :

     சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து .
நரம்பு பிரச்சனையின் மருந்து .

காட்டுயானம் அரிசி :

     இந்த அரிசியில் காஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது .

சூரகுருவை அரிசி :

     நோய் எதிர்ப்பு சக்தி தரும் .

பனங்காட்டு குடவாழை அரிசி :

     தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி .
அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும் .

கருடன் சம்பா :

     நோய் எதிர்ப்பு சக்தி தரும்.
சாப்பாடு மற்றும் பலகார அரிசி .

கருங்குறுவை அரிசி :

இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம் 
    
 இது ஒரு மாமருந்து.
இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் . அது யானைக்கால் நோய்க்கான மருந்து .

குஷ்டதிற்க்கும் , விஷகடிக்கும் மாமருந்து.

உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது .

இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்க்கு 'அன்ன காடி 'என்று பெயர் .இது காலராவிர்க்கான
மருந்து .

இது கிரியா ஊ க்கியாக உள்ளது .


கார் அரிசி :
 
     சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான் களுக்கும் மருந்தாகும்.

தங்க சம்பா :

     இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும்.

தூயமல்லி அரிசி :

     மேல குறிப்பிட்ட எல்லா அரிசிகளும் சிவப்பரிசி . கட்ட சம்பா தவிர்த்து .
தூய மல்லி அரிசியானது இன்னும் மல்லிகை போல் பளபள வென இருக்ககூடியது .
மக்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா குணங்களும் கொண்ட ஒரு அரிசி .
தெவிட்டாத , நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி .

இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது.

மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது .

பாரம்பரிய அரிசி உண்போம் . உடலை வளர்ப்போம் . உயிரை காப்போம் .

( தொகுப்பாளர் ரா. பொன்னம்பலம் அவர்களின் 'நெல் அதிகாரம் 'என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது )

மேற்காணும் அரிசி வகைகள் அனைத்தும் , எல்லா இயற்கை உணவு அங்காடிகளில் கிடைக்கிறது . விலை சற்று அதிகம் . மருத்துவரிடம் கொடுப்பதில் பாதியை விவசாயிக்கும் கொடுக்கலாமே !


Wednesday 18 January 2017

பத்திரிகைகள் vs சமூக வலைத்தளங்கள் !

FOURTH எஸ்டேட் VS FIFTH எஸ்டேட்



கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் மட்டும் அல்ல , உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு வேண்டும் , என்றும் அதன் வழியாக காளை மாடுகளும் அதன் மூலம் அடுத்த தலைமுறையும் காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு , போராடி கொண்டு இருக்கிறார்கள் .

இந்த தருணத்தில் இந்த  FOURTH எஸ்டேட் பற்றி தெரிந்து கொள்வது நல்லது என்று கருதுகிறேன்.

இந்தியாவை பொறுத்த வரை FOURTH எஸ்டேட் எனப்படுவது பீரொக்ரசி
 ( BEAUROCRACY ) அப்போ மீதி 3 எஸ்டேட் என்னனு கேட்காதீங்க ? அது இந்தியாவின் ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

இப்படி மறைத்து வைக்க பட்ட விஷயங்களைத்தான் , சிலர் கையில் வைத்து கொண்டு இந்தியாவில் தவறான ராஜ்ஜியம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அதை விடுங்க ! நாம் இது குறித்து பின்பு பேசுவோம்!

இப்போ உலக அளவில் FOURTH எஸ்டேட் என்றால் அது பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் தாங்க !

இது எப்போது அறிவிக்கப்பட்டது என்று கேட்டால் நாம பிரெஞ்சு புரட்சி பற்றி பேச வேண்டும் .

பிரெஞ்சு புரட்சி நடைபெற்றது மே 5 1789 முதல் நவம்பர் 9 1799 வரை தாங்க !

அது என்ன பிரெஞ்சு புரட்சி என்றால் மக்களாட்சி கோரிக்கையின் அடிப்படை போர் இது. இதை நடத்தியவர்கள் jews இன மக்கள். அவர்கள்தான் இன்று அனைவரையும் ஆள துடித்து கொண்டு இருக்கிறார்கள் .





இதில் முதல் எஸ்டேட் என்று வழங்கப்பட்டது கில்லர்ஜி ( CLERGY) எனப்படும் மதகுருமார்கள் பேசும் சர்ச்சுகள் .போராட்டம் என்ற உணர்வை தூண்டிவிட்டது இந்த சர்ச்சுகள்தான் . ஆனால் நேரடியாக இல்லை. ஞாயிறு தோறும் சர்ச்சுக்கு வர வேண்டும் என்ற எழுதப்படாத கட்டளை , அன்றுதான் உருவாகியது . அங்கு பாதிரிமார்கள் அவர்களுக்கு கொன்செல்லிங்
( COUNSELING ) என்று சொல்லப்படும்  மூளை சலவை செய்வார்கள். இதை நன்மை என்றோ , தீமை என்றோ எடுத்து கொள்ளலாம். இந்த உலகை வெகு காலம் வரை ஆட்டி படைத்தது இந்த மதகுருமார்கள்  தான் .



2 வது  எஸ்டேட் என்றால் நொபிலிட்டி . ( NOBILITY )இதில் கூட்டம் போட்டு மக்களுக்கு அறிவுரை மற்றும் கட்டளைகள் பிறப்பித்தது பணக்கார வர்க்கம்.
பணக்கார வர்க்கம் தனக்கு தேவையான போது எப்படி எல்லாம் மக்களிடம் பேசும் என்பது நாம் சொல்ல தேவை இல்லை .

3 வது எஸ்டேட் காமன்மேன்(  COMMON MAN )எனப்படும் நம்மோடு கலந்து விட்ட மக்கள் கூறும் கருத்துக்கள் . இவைதான் மக்களை ஆட்டிப்படைத்தவை .பிரெஞ்சு புரட்சி வரை .

4 வது எஸ்டேட் எனப்படும் பத்திரிக்கைகள் , பிரெஞ்சு புரட்சியில் சாதனை புரிந்தன .

இந்த 4 ஆவது எஸ்டேட் தான் நேற்று வரை , நமக்கு தகவல்கள் கொடுத்தன.

மேற்காணும் நான்கு எஸ்டேட்டுகளும் நம் நாட்டின் சுதந்திர போராட்ட காலத்திலும் நல்லவையாகவும், கெட்டவையாகவும் செயல்பட்டன.

ஆனால் 


இன்று 5 வது எஸ்டேட் உருவாகிவிட்டது.

அது தான் சமூக வலைத்தளங்கள் .ப்லோகுகள் 






இதோ ஜல்லிக்கட்டு போராட்டம் !
உலகெங்கும் உள்ளவர்களை , தமிழ்நாட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

இந்த 5 வது எஸ்டேட்டை முறியடிக்க ,மற்ற 4 எஸ்டேட்டுகளும்
தனது எதிர் ப்பை தெரிவித்து வருகின்றன.

முக்கியமாக, சர்ச்சுகள் , காளை த்திருவிழா கிறிஸ்தவ மதத்திற்கு ஆபத்து என்று போராடுகிறது.

பணக்காரர்களோ தனது லாபம் பாதிக்க படும் என்று சட்டத்தை வளைத்து போராடுகிறார்கள்.

இதில் அரசியல் பேசுபவர்களும்,

இவர்களுக்காகவே வாழ்ந்த பத்திரிகைகளும் ,

சமூக வலைத்தளங்கள் மீது எங்கேனும் குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று போராடுவதும் , அதற்காக தவறான செய்திகளை தருவதும் என்று வழக்கமாக கொண்டுள்ளன.

இது வெல்லும் !

வென்றால் 

தொழிற்புரட்சி தோற்கும்  

புசுமை புரட்சி தோற்கும் 

அரசியல் தவறுகள் தோற்கும் 

தோற்கட்டும் இதுவரை ஆண்ட நான்கு எஸ்டேட்டுகளும் !

வெல்லட்டும் 5 ம எஸ்டேட் !

வெற்றுக்கான போராட்டம் அல்ல இது 

வெற்றிக்கான  போராட்டம் 

வாழ்க 5 ம் எஸ்டேட்! 

வளர்க தமிழும், தமிழனும் !


Tuesday 17 January 2017

சினிமாவை விரட்டிய ஜல்லிக்கட்டு !

Peta வை எதிர்த்தும், ஜல்லிக்கட்டு நடத்த கோரியும் மதுரை அலங்காநல்லூரிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் நேற்று காலை ( 16 . 1.2017 ) முதல் நடைபெறுகிறது.

இது காளைகளுக்காக 
இளங்காளையர் நடத்தும் போராட்டம்!
சமூக வலைத்தளங்கள் 
சாதித்த போராட்டம்!
தமிழ்நாடு குறித்து 
அரசியல்வாதிகள் எல்லோர் மனதிலும் 
சலனத்தை ஏற்படுத்திய போராட்டம்!
இந்த சலனம் தான் சுப்ரமணிய சாமி போன்றோரை 
தமிழ் மக்கள் குறித்து 
கேவலமாக பேச தூண்டியது!
அந்த கேவலமானவர்கள் இப்போ நமக்கு 
வேண்டாம் !











இந்த போராட்டத்திற்காக ,
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பேரவையினர் 
அழைப்பு விடுத்து இருந்தனர். அதன் அடிப்படையில் 
தமிழ்நாடு முழுக்க இளைஞர்கள் குழுமி 
மிகுந்த அமைதியுடனும் 
நீருமின்றி , சோறுமின்றி 
வாடிவாசலில் கூடி 
போராடும் போது , இதை சிறு சலனமென நினைத்து 
காவல துறையை ஏவிவிட்டு 
வேடிக்கை பார்த்த தமிழக அரசு , மத்திய அரசு 
காவல்துறையும் கூட 
மக்களின் மனதில் இருந்து தூக்கியெறிய பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க !

நேற்று வரை ,
இது குறித்து பேசாத நடிகர் கூட்டம்,
அரசியல் கூட்டம் திடீரென ,
எதோ கோமாவில் இருந்து எழுந்ததுபோல் 
வாடிவாசல் நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது.

கருணாஸ்  என்றும் நடிகன் 
தற்போது, ஜெயலலிதாவால் சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்கப்பட்ட 
இந்த கருணாஸ் 
இரவு 11.50 மணிக்கு , 
கடுங்குளிரில் போராட்டத்தில் இருந்த மாணவர்ககளை 
சந்தித்து பேசுகிறார்.








பிறகு விடியற்காலை அங்கிருந்த மாணவர்கள் 
காவல்துறையால் கைது செய்யப்பட 
இத்தோடு இந்த போராட்டம் முடியப்போகிறது 
என்று எண்ணிய நடிக கூட்டம் , அரசியல் கூட்டம் 
அதிர்ந்து போக ,
கைது செய்தவர்களை ,விடுவிக்க கோரியும் 
பீட்டாவை தடை செய்ய கோரியும் 
மீண்டும் மாணவர்கள் 
தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் 
சென்னையின் மெரினாவிலும்
போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக 
சுடாலின் போராட்ட காலத்திற்கு வருகிறார்!
வாடிவாசலுக்கு 
இசை அமைப்பாளர் பிரகாஷ் குமார் 
வருகிறார்!
சரத்குமார் 
வருகிறார்!
சூர்யா ஆதரவு தருகிறார்!
ஆர்யா மன்னிப்பு கேட்கிறார்!
திரிஷா , நான் தவறாக எதுவும் பேசவே இல்லை என்று மழுப்புகிறார்!
சீமான் , அமீர், கவுதமன் 
இவர்களெல்லாம் ஏற்கெனவே களத்தில் இருந்த போதும் 
வாடிவாசலிலேயே தங்குகிறார்!

இன்னும் பலர் 
வாடிவாசல் நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறார்!

சொல்ல முடியாது!
ரஜினிகூட 
நாளை களத்தில் 
இருக்கலாம்!

சினிமா மோகத்தில் ,
மிதந்த அந்த பழைய தலைமுறை இல்லை இது!

அவர்கள்கூட ,
சினிமாக்காரன் ஒரு துரோகி என்று தெரியாமல்தான் 
ரசித்தான் !

இனி அதுவும் நடக்காது !
சினிமா உலகமே 
உன் நடிப்பை எல்லாம் 
திரையோடு நிறுத்தி விடு !
இல்லையேல் 
திரைக்கு பின்னால் கூட 
நீ நிற்க 
இடமில்லாமல் செய்வோம் !
இது ரஜினி பார்த்த கூட்டம் இல்லை!
எம்ஜிஆரை ரசித்த கூட்டம் இல்லை !
ஜெயலலிதாவை அரியணையில் 
அமரவைத்து கூட்டம் இல்லை!

தனித்தமிழ் கூட்டம்!
தன்மான கூட்டம்!
தன்னம்பிக்கை கூட்டம் !
தமிழையும் வாழவைத்து 
தமிழோடு சேர்ந்து 
தன தலைமுறையை 
வாழவைக்க போராடும் கூட்டம்!

காளைகளும் ,
எம் இனம்!
அதை வாழவைக்க போராடும் 
இந்த போராட்டத்தில் 
சினிமாவே 
மிதிபட்டு நசுங்கிவிடாதே !

சினிமாவே !
மறந்து விடு தமிழர்களை!
ஓடிவிடு 
தமிழகத்தை விட்டு  !



Monday 16 January 2017

இந்தியாவின் பூர்வீக நடனங்கள்

wangala laho க்கான பட முடிவு


இந்த நடனம் வங்காள  லஹோ எனப்படும் மேகாலயா மக்களின் பூர்விக நடனம் .


tippani dance க்கான பட முடிவு

இது திப்பாணி நடனம் . குஜராத்தி மக்களின் பூர்விக நடனம் .




Koodiyattam


இது கூடிஆட்டம் அல்லது கூத்து ஆட்டம்.கேரளா மக்களின் பூர்வீக நடனம் .
அதாவது தமிழ் கலாசாரம் . கூத்து என்றால் நாடகம் என்று பொருள். ஆட்டம் என்றால் ஆடுதல் என்று பொருள் . இதன் கட்டமைப்புபிற்காலத்தில் மாற்றப்பட்டது.


sadir dasi attam க்கான பட முடிவு

இதோ  இது தான் சதிர் ஆட்டம். இது எந்த ஊர் நடனம்  தெரியுமா ? தமிழ்நாட்டின் பூர்வீக நடனம். அனால் இன்று இதன் பெயர் மாறி விட்டது . அதன் பெயர் பரதநாட்டியம். மாற்றியவர் ருக்மிணி தேவி  அருந்தலே . 1935ம் ஆண்டு வரை இதன் பெயர் சதிர் ஆட்டம் தான். அம்மையார் இதன் பெயரை பாரத நாட்டியம் பெயர் மாற்றி , இந்தியாவிற்கு சொந்தமாக்கினார் . அருந்தலே எனும் பிரிட்டிஷாரை மணந்தார். இவர் 1935ல் விலங்குகள் நல அமைப்பின் உறுப்பினர். ருக்மிணி தேவியும் விலங்குகள் மீது    அன்பு கொண்டவர். த்ரிஷா போல் !



 பாவ்ரி ஆட்டம் . மகாராஷ்டிரா மக்களின் நடனம். இவர்கள் பாம்பாட்டிகள் .


இது தெறடாளி நடனம். ராஜஸ்தானின் நடனம் .


Tuesday 10 January 2017

ப்ளூ சிப் கம்பெனிகள்

 ப்ளூ சிப்  என்றால் , தரமானது . நீண்ட வாழ்வு கொண்டது என்று பொருள்.

அப்போ ப்ளூ சிப் நிறுவனங்கள் என்றால் , நமக்கு புரிந்திருக்கும்  நல்ல நிறுவனம். தரமானது என்று !

இதை பொருளாதார அடிப்படையில் இப்படி கூறுகிறார்கள் . ப்ளூ சிப் என்ற அடிப்படையில் ஒரு நிறுவனம் வருகிறது என்றால் அதன் லாபம் அதிகமாக உள்ளது . அந்நிறுவனத்தில்  நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் எந்தவித பொறுப்பும் ( கடனும் ) இல்லை என்று அர்த்தம்.

இந்த பொருளியல் கோட்பாடுகளின் அடிப்படையில் , ப்ளூ சிப் நிறுவனங்களில் தைரியமாக நாம் பங்குகளை ( shares )  வாங்கலாம் . அதன் டிவிடெண்ட் ( லாபம் ) குறையாது . மற்றும் பங்குகளின் விலையும் வீழ்ச்சி அடையாது .

இந்தியாவில் உள்ள தலை சிறந்த 10 ப்ளூ சிப்  நிறுவனங்களின் பெயர்கள் இதோ : ( இது 30.4.2015 அன்று இருந்த நிலவரப்படி )

1. T C S ( டாடா கன்சுலேட்டன்சி சர்விஸ் )

டாடா நிறுவனம் சுதந்திரம் போராட்டம் நடந்த காலத்திலும் , சுதந்திர இந்தியாவிலும் கோலோச்சி இருப்பது இந்நிறுவனம். இந்தியாயாவின் பல்வேறு மலை பிரதேசங்கள் இதற்க்கு சொந்தம் . எப்படி ? இயற்கை ஒரு தனிப்பட்ட நபருக்கு சொந்தமாகும் . அருவி எல்லாம் சொந்தமாகுமா என்ன ? கட்டிட மூலப்பொருள்கள் அனைத்தும் உற்பத்தி செய்கிறது .
தேயிலை உற்பத்தி பல மலைகளை சூழ்ந்து நிற்கிறது . நம்மாழ்வார் கூறுகிறார் , என்று தேயிலைக்காக மலைகளின் மீது இருந்த காடுகள் அழிக்கப்பட்டனவோ , அன்றுதான் நாடு மழை என்ற வளத்தை இழக்க ஆரம்பித்தது என்று . தங்க முதலீடும் மக்களை தவிப்பில் ஆழ்த்தி கொண்டு இருக்கிறது .

                லாபம்     3.1 டாலர் பில்லியன்


                முதல்      482, 571 .81 கோடி ரூபாய் .


2.  ரிலையன்ஸ் நிறுவனங்கள்

      இதன் முக்கிய தொழில்களில் ஒன்று ஹைட்ரோகார்பன் ஆய்வு , பெட்ரோகெமிக்கல்ஸ் . பெட்ரோலிய சுத்திகரிப்பு , தொலைத்தொடர்ப்பு   கப்பல் கட்டுதல் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைப்பது . ( இந்நிறுவனம் கடன் வாங்கி இருப்பதாக வங்கிகள் கூற , கொடுக்க வேண்டிய அளவிற்கு கடன் ஏதும் இல்லை என இந்நிறுவன பைனான்சியல் ஸ்டேட்மென்ட் கூறுகிறது )


லாபம்  : 28731 கோடி ரூபாய்

முதல்  : 279, 064 கோடி ரூபாய்


3.  O N G C  ( ஆயில் அண்ட் நச்சுரல் கேஸ் கார்பொரேஷன் )

உலகிலேயே நச்சுரல் எனர்ஜி யை வெளிக்கொணரும் 250  நிறுவனங்களில் இது 21 வது இடத்தை பெற்று உள்ளது. ( மண்ணில் உள்ள பொருள்கள் மக்கள் அனைவருக்கும் சொந்தம் . ஆனால் இதை அதிகம் சுரண்டியது யார் என்பதில் இந்நிறுவனத்திற்கு முன்னுரிமை . இருந்தும் இந்தியா ஆயிலை இறக்குமதி தான் செய்கிறது )

11.2.2014 அன்று மஹா ரத்னா , நவ ரத்னா என்ற விருதினை பெற்று உள்ளது .

அதென்ன ரத்னா விருது ?  ( 2010 முதல் அரசு அறிவித்தது )


தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் லாபம் ஈட்டும் நிறுவனத்திற்கு மினி ரத்னா I விருது வழங்கப்படும் . இந்த விருது பெற்றவர்கள் , அரசின் அனுமதி பெறாமலேயே 300 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் 30  கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனத்திற்கு மினி ரத்னா II விருது வழங்கப்படும் . இவர்கள் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யலாம் .

தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் 5000 கோடி ரூபாய் லாபம் ஈட்டினால் மஹா ரத்னம் விருது வழங்கப்படும் .

இவ்விருது பெற்றவர்கள் 1000 கோடி முதல் தனது மொத்த மூல தனத்தில் 15% வரை முதலீடு செய்யலாம் .

ரவரத்ன விருது என்பது இந்நிறுவனம் தனது  முதலில் 60% லாபமாக காட்டுகிறதோ ( வரிக்கு முன்பு ) அந்நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

இந்த வகையில் O N G C  நவரத்ன விருதை பெற்றுள்ளது .

முதல் : 2 60 086 கோடி ரூபாய் .






4. I T C ( இம்பீரியல் டொபாக்கோ கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் )

உணவு பொருள் உற்பத்தி மற்றும் இன்போர்மஷன் டெக்னாலஜி , அழகு சாதனா பொருள் உற்பத்தி இதன் பிரதான தொழில் ஆகும் .

( புகை பிடிப்பது கேடு தரும் என்று விளம்பரம் செய்யும் அரசு , இந்நிறுவனத்தை தடை செய்திருக்கலாமே )

முதல் : 258, 380 கோடி ரூபாய்

5. H D F C ( ஹௌசிங் டெவெலப்மென்ட் அண்ட் பைனான்ஸ் கார்பொரேஷன் )

இந்தியா முழுவதும் 3659 கிளை களையும் , 2287 ATM மையங்களையும் பெற்றுள்ளது . பைனான்ஸ் ஆசியா பூல் நடத்திய ஆய்வின் படி ( பெஸ்ட் மேனஜ்டு பப்ளிக் லிமிடெட் இன் இந்தியா ) என்ற விருதை பெற்றது .

ஹௌசிங் கடன் பெற்றால் வரி விலக்கு வழங்குகிறது இந்தியா . இந்நிறுவனம் வளர்ச்சி பெறுகிறது .

முதல் : 247, 842 கோடி ரூபாய் .






6. COAL INDIA 

உலகம் முழுவதும் பயன்படுத்தும் நிலக்கரியில் 81%  நிலக்கரி இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது . கல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய மாநில அரசு சார்ந்த  நிறுவனம் இது . பங்காளதேஷோடு , மேற்கு வங்கத்தை இப்போதும் இணைப்பது இந்நிறுவனம். ( இருந்தும் இந்தியா நிலக்கரி இறக்குமதி செய்கிறது )

இந்திரா காந்தி ராஜ் பாஷா விருதை பெற்றுள்ளது .

மொத்த தொழிலாளர்கள் : 337 900 பணியாளர்கள்

முதல் : 229, 126 கோடி ரூபாய்






7. SUN PHARMA 

150 சந்தைகளை உலகம் முழுவதும் பெற்றுள்ளது . 45 இடங்களில் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது . 30000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் .
3000 வகையான உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
( மருந்து வணிகம் நோயை பெருக்குகிறது )

இதன் நிறுவனர் திலிப் சங்கவி சிறந்த நிறுவனர் என்ற விருதை 2014 ம் ஆண்டு பெற்றார் .

முதல் : 225, 898 கோடி

8 . INFOSYS 

இது உலகம் முழுவதும் 50 நாடுகளில் இயங்கி வருகிறது .
இதன்  மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 176 000 துக்கும் மேல் !
லாபம் : 8.7.பில்லியன் டாலர்
முதல் : 223, 062 கோடி ரூபாய்

9. SBI ( ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா )

உலகின் 73 வது மிகப்பெரிய வங்கி இது .
முதல் : 204, 098 கோடி ரூபாய்

10.  ICICI  ( இண்டஸ்ட்ரியல் கிரிடிட் இன்வெஸ்ட்மென்ட் கார்பொரேஷன் ஆப் இந்தியா )  
தனியார் வங்கிகளில் மிகப்பெரிய வங்கி இது .
இதன் கிளைகள் :4050
ATM மையங்கள் : 12589

முதல் : 192,063 கோடி ரூபாய்


         இவை மட்டும் அல்ல , இன்னும் சில பல நிறுவனங்கள் ப்ளூ சிப் என்ற தர சான்றிதழோடு , இந்தியாவில் , இந்தியா என்ற பெயரையும் இணைத்து கொண்டு , இந்தியா வின் சொந்த நிறுவனம் என்று மக்கள் நம்பும் வண்ணம் , இந்தியாவில் இயங்கி வருகின்றன .



Monday 2 January 2017

காந்திக்கு முன் இந்திய மஹாத்மா !

சுதந்திர இந்தியாயாவில் , மட்டும் அல்ல உலகம் முழுக்க மஹாத்மா என்றால் அது காந்தியடிகளையே கூறுவார்.

ஆனால் அவருக்கு முன்னாலேயே , இந்தியா ஒரு மஹாத்மா வை பெற்றிருந்தது .

அவர் தான் ஜோதி  பாய் பூலே  ஆவார் . ( 1827 - 1890 )


                          ஜோதி பாயும் அவரது மனைவி சாவித்திரி பாயும் .



1827 ஆம் ஆண்டு காணவாடி ( தற்போது மஹாராஷ்ட்ரா ) என்ற இடத்தில பிறந்த ஜோதி பாய் , தனது 12 வது வயதில் , 9  வயது பெண்ணாகிய சாவித்திரி பாயை மணந்து கொண்டார். 

ஆனால் அவர் தனது மனைவிக்கு , எழுத , படிக்க கற்று கொடுத்தார்.

அக்கால கட்டத்தில் , வயது வரும் முன்னே விதவை கோலம் என்பது சர்வ சாதாரணமாக இருந்தது மஹாராஸ்ராவில் .
ஜாதி கொடுமைகள் 

உயர் ஜாதி பெண் என்றாலும் , விதவை கோலம் , கொடூரத்தையே கொடுத்தது .

தனது 21 வது வயதில் , 1848 ம் ஆண்டு அவர் படித்த ஒரு புத்தகம் , மாபெரும் மாற்றத்திற்கு வழிவகுத்தது . அந்த புத்தகம் தாமஸ் எழுதிய " ரைட்ஸ் ஆப் மேன் "

அதே ஆண்டு இவரும் ,இவர் மனைவி  சாவித்திரி பாயும் சேர்ந்து , ஒரு பள்ளி ஆரம்பித்தனர் .அது பெண்களுக்கான பள்ளி . இது இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி .

அங்கு ஜாதி கொடுமைகளை எதிர்க்கவும் ,

விதவை மறுமணம் குறித்தும் போதிக்கப்பட்டது. 

அது தாழ்ந்த ஜாதி , உயர்ந்த ஜாதி வேறுபாடுகளை கலைந்தது .

சத்யசோதக் சமாஜ் மதம் 


மத மற்றும் ஜாதியின் அடிப்படியில் நடக்கும் , தீண்டாமை , விதவை கொடுமைகளை தீர்க்க , வேண்டி தானே ஒரு புதிய மதத்தையும் உருவாக்கினார். அந்த மதம் தான் சத்யசோதக் மதம் .

தலித் 


தலித் என்றால் மராத்தி மொழியில் உடைத்து விடு , நசுக்கி விடு என்று பொருள் . இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் ஜோதி பாய் தான் . தீண்டாமை என்னும் கொடுமை நிகழும் போதெல்லாம் அதை உடைத்து விடு என்று குரல் எழுப்பினார்.


பல்வேறு புத்தகங்களை படைத்த இவருக்கு மஹாத்மா என்ற பட்டத்தை
 1888 ம் ஆண்டு v .k .வந்தேங்கர் என்பவர் வழங்கினார்.

தன வாழ்நாளின் இறுதி வரை பெண்ணுக்கு மரியாதை கொடுத்து , பெண் கல்வி பேசி , விதவை திருமணங்கள் நிகழ்த்தி , ஜாதியில் இருந்து வெளியே வா என்று அழைத்த ஜோதி பாய் , அவரது எண்ணத்திற்கு ஏற்றார் போல் , தனது மனைவிக்கு முழு சுதந்திரம் கொடுத்து , அவரையும் தனது பயணத்தில் பங்கெடுக்க வைத்தார்.







இன்று மஹாராஷ்டிரா மாநிலம் , இவர்கள் இருவருக்கும் முழு மரியாதையும் செலுத்தி கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் பின்னாளில் நடைபெற்ற , அத்தனை புரட்சிக்கும் அடிப்படையாக வாழ்ந்தர்கள்தான் 

ஜோதி பாயும் , சாவித்திரி பாயும் !

3.1.2017 சாவித்திரி பாயின் பிறந்த நாள். 

நாமும் அந்த மகாத்மாக்களை வணங்க கடமைப்பட்டுள்ளோம்.!





 ! 

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...