Sunday 28 December 2014

திருக்குறள்






நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் 
பெருமை படைத்ததுஇவ் வுலகு      ( 336 )

நேற்று இருப்பார் இன்றில்லை இச்சொல்லின் அடிப்படை இக்குறள். நெருநல் எனும் வார்த்தை கன்னடம் மற்றும் தெலுங்கு  மொழிகளில் இன்றும் உள்ளது .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின்.     ( 280 )

மு.வரதராசனார் விளக்கம்: 
உலகம் பழிக்கும் தீய ஒழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடிப்பதும் சடை வளர்ப்பதும் வேண்டா.

 தமிழர்களின் சிறப்பை வெளிபடுத்துவது மீசை வளர்ப்பதும் தாடி வளர்க்காமல் இருப்பதும் .
ஆனால் நாம் வள்ளுவரையே தாடியுடன் வரைந்து அவரையும் பலிக்கு ஆளாக்கிவிட்டோம் .


ஆம் இன்று நாம் பார்க்கும் திருவள்ளுவர் படம் ,1975 ல் K .R .வேணுகோபால் ஷர்மா என்பவரால் வரையபட்டது . இவர் மாடர்ன் தேஎட்டர்சின் உரிமையாளர் . கருணாநிதி மற்றும் அறிஞர் அண்ணாவின் நண்பர் . அதன் விளைவாக இவர் வரைந்த படத்தையே பாட புத்தகங்களில் வள்ளுவன் என அடையாளம் காட்டியது திராவிட முன்னேற்ற கழகம் . 1975 க்கு முன்பு ஒரு வள்ளுவர் படம் இருந்துள்ளது . அதில் அவருக்கு தாடி கிடையாது . அதை வரைந்தவர் ஒரு ஆங்கிலேயர் .
who drew the picture of thiruvalluvar க்கான பட முடிவு

இது சமணர்களால் வரையப்பட்ட திருவள்ளுவர் படம் .
அனால் அவர் மொட்டையும் அடித்திருக்க வாய்ப்பில்லை . தாடி வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை .



ஏனெனில் மொட்டை அடிக்க வேறு பல காரணங்கள் இருக்கின்றன.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அந்தணர் என்போர் அறவோர்மற்   றெவ்வுயிருக்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் .     (30)

@@@@@@
மு.வரதராசனார் விளக்கம்: 
எல்லா வுயிர்களிடத்தும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவர். 
@@@@@@

அந்தணர் எனப்படுபவர் அறச்செயல் புரிபவர்கள். ப்ரோகிதம் செய்யும் அய்யர்களோ , பிராமனர்களோ அல்ல.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


 எண்ணி துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.      (467)

முதலில் களத்தில் இறங்குவோம் பிறகு யோசிப்போம் என்பது இழுக்கையே கொடுக்கும்.
இதற்கான பழமொழி  ஆழந்தெரியாமல் காலை விடாதே.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 
தீரா இடும்பை தரும்.     ( 510 )

ஆராயாது முடிவெடுப்பதும் முடிவெடுத்தபிறகு அதன் மேல் ஐயம் கொள்வதும் துன்பத்தையே தரும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் 
அல்லார்முன் கோட்டி கொளல்.     ( 720 )

யாரையேனும் திட்ட வேண்டுமாயின் இக்குறளால் திட்டலாம்.
ஏனெனில் நாம் பேசுவதை பொருட்படுத்தாமல் எவரேனும் இருக்கும் போது
கேட்காதவரிடம் பேசுவ்து குப்பையில் விலை உயர்ந்த பொருளை
( அமிழ்து  )  கொட்டுவதற்கு சமம் என்கிறார் வள்ளுவர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



Tuesday 23 December 2014

இதய தானம்

இறந்த குழந்தையின் இதயத்தை தானம் தந்த பெங்களூர் பெற்றோர்: தானம் பெற்ற சென்னை பெற்றோர். டிசம்பர் 19. 
(மாலை மலர் செய்தி ) 


எத்தனை பெரிய சாதனை!.  வர வர நம் சென்னை மருத்துவமனைகளில் இறந்த குழந்தையின் இதய துடிப்பை, மற்றொரு குழந்தைக்கு மாற்றும் போது துடிக்க வைக்கும் அளவுக்கு வல்லுனர்கள் பெருகி விட்டார்கள்.

     ஞானிகளும், யோகிகளும் பெருகி விட்டார்கள்.

இறந்தவர்களின் இதயத்தைஎல்லாம் துடிக்க வைக்க முடியும் எனில் , இறப்பு எனப்படுவதே எவருக்கும் இருக்காதே!

     காரணம் கூறி விட்டர்கள் இது மூளை சாவென்று.!
மருத்துவ உலகமே 

      நீங்களெல்லாம் சாதனை படைக்க தாங்கள் கண்டுபிடித்த புதிய சாதனமா  இந்த மூளை சாவு !

     நீங்கள் கண் தானம் என்றீர்கள்!

ஒப்பு கொண்டோம்.  இது இறந்த பின் நம் கண்கள் யாருக்கோ பயன்படும் என்றீர்கள் ! ஒப்பு கொண்டோம்.  ஆனால் அனைத்து மருத்துவர்களும் தத்தமது குடும்பத்துடன் கண் தானம் எழுதி கொடுத்தீர்கள் என்ற செய்தி வரவே இல்லையே? ஏன் உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையா?

     நீங்கள் உடல் தானம் என்றீர்கள்!

உடல் ஆய்வு செய்ய முன்வாருங்கள் என்று பார்க்கும் இடமெல்லாம் விளம்பர பலகைகளில் கூறுகிறீர்கள் . உங்களில் எத்தனை பேர் உடல் தானம் செய்தீர்கள் . உங்கள் உடல் மட்டும் பொன்னால் இளைக்க பட்டதா ?

     நீங்கள் கல்லீரல்  தானம் என்றீர்கள்!

இதை தானம் செய்தால் மீண்டும் மீண்டும் வளரும் என்றீர்கள் !

நீங்கள் தானம் செய்து உங்களால் எத்தனை உயிர் வாழ்ந்து இருக்கிறது.


     நீங்கள் சிறுநீரக  தானம் என்றீர்கள்!

இரண்டு சிறுநீரகத்தில் ஒன்றை தானம் செய்யலாம் என்றீர்கள்! உ ங்களில் யாரும் செய்யவில்லை .  உங்கள் தயவால் திருடர்களில் சிறப்பு பிரிவாக சிறுநீரக திருடர்கள் உருவானது தான் மிச்சம் .


எல்லாம் நடக்க ஒரு பிஞ்சு குழந்தையின் இதயத்தை எப்படி ஐயா  எடுத்தீர்கள்? அக்குழந்தை பேசாமல் அசையாமல் இருந்தாலும் அதன் வுடலிலே வுயிர் இருந்ததே! அந்த இதயத்தை எடுக்க உங்கள் இதயமெல்லாம் நடுங்க வில்லையா ?

வசூல் ராஜா எம்.பி .பி.எஸ். திரைபடத்தில் இது ஒரு கேஸ் என்று மருத்துவர் ஒருவரை காட்டுவார். ஆனால் அவருடன் அன்றாடம் பேசி பேசி இறுதி 
காட்சியில் அவர் கதாநாயகனுக்காக கண்களில் கண்ணீர் விடுவார் . இது கதை அல்ல. உண்மை. இதற்க்கு உங்களால் வேறு காரணம் காட்ட முடியம் . அதுவும் எங்களுக்கு தெரியும்.

நீங்களாக ஒருவருக்கு மயக்க ஊசி போட்டு கொண்டே இருந்தால் அவர் தொடர்ச்சியாக அசையாது இருக்க வாய்பிருக்கிறது அல்லவா ?

எனில் அடுத்த சிறப்பு பிரிவு திருட்டு இதய திருட்டு அல்லவா ?

உங்களின் பெயரும் புகழும்  பெருக வேண்டுஎன்றாவது ம் என்பதற்காக உங்கள் மருத்துவ மனை நற்பெயர் வுயரவேண்டும் என்பதற்காக மக்களையெல்லாம் சோதிக்கிறீர்களே ?  இது சரியா ? உங்களை கடவுளுக்கு சமமாக மதிக்கும் மக்களல்லவா நாங்கள் ?

எவனோ ஒருவன் கண்டறிந்த மருந்தை நீங்கள் சோதனை கூட செய்து பார்க்காமல் எங்களுக்கு எழுதி கொடுக்குறீர்கள் !  ஒப்பு கொண்டோமே!

     நாட்டு வைத்தியன் இதையும் இதையும் சாப்பிட்டால் இந்த வியாதி குணமாகும் என்று கூறுகிறான் . இதனை நிரூபிக்க முடியுமா கேள்வி கேட்கும் 
போதெல்லாம் நாமும் இதுவரை எந்த மருந்தையும் சோதனை செய்ததே இல்லையே என்று உங்களுக்கு தோன்றவில்லையா ?

உங்களுக்கு மருத்துவம் செய்யவே உரிமை வழங்கப்பட்டது. ஆனால் நீங்கள் 
மருத்துவ மனைக்குள்ளே மருந்து கடையும் வைத்தீர்கள் . நாங்கள் கேள்வியே கேட்க வில்லையே !

50 பைசாவுக்கு வாங்கும் ஊசியை ரூ.5 க்கும் 70 பைசாவுக்கு வாங்கும் ஊசியை 
ரூ.20 க்கும் விற்கும் போது நாம்தான் இவ்வளவு கட்டணம் வாங்குகிறோமே இந்த ஊசிக்கு பணம் வாங்காமல் இருக்கலாமே என்று உங்களுக்கு தோன்றியதே இல்லையா?

ஒவ்வொரு மருந்திலும் அடக்க விலையை போல் 10 மடங்கு 20 மடங்கு விலை வைத்து விற்கும்போதேல்லாம் கேள்வி கேட்காமல் கொடுத்து 
உங்களயெல்லாம் கோடீஸ்வரர் ஆக்கிய சமுதாயம் இது !


இந்த சமுதாயத்திற்காக ஒன்றே ஒன்று செய்யுங்கள் !

தலை மாற்று அறுவை சிகிச்சை செய்து சிவபெருமான் ஆகலாம் என்று எவரேனும் கனவு கண்டிருந்தால் விட்டு விடுங்கள் ! சிவபெருமான் கூட யானையின் தலையை தான் மாற்றினார்.  நீங்களெல்லாம் சிவபெருமானை விட வல்லவர்கள்.  இப்போது மூளை சாவு போல் , வேறு ஏதேனும் காரணம் கூறி பெற்றோர்கள் கண்ணெதிரிலேயே வுயிர் வாங்குவீர்கள் ! 

விட்டு விடுங்கள் இந்த அப்பாவி மக்களை ! பிழைத்து போகட்டும் !






Saturday 20 December 2014

மலாய் நாடும் தமிழ் மண்ணும்


உயர்ந்து நிற்கும் பனை மரங்கள்
     போட்டியிட்டு விஞ்சி நிற்கும் கட்டிடங்கள்!

தன்னையும் காட்டிக்கொள்ள முயற்சிக்கும் மலைகள் !
     அதனை முட்டிக்கொண்டு எட்டி பார்க்கும் மேகங்கள்!

உடலை சுட்டெரிக்கும் சூரிய கணைகள்!
     அதன் வேகத்தை தடுக்க போராடும் சில கனிகள் !

மொழி வேறு இனம் வேறாய் மனிதர்கள் !
     அவர்களை இணைத்து கொண்டே இருக்கும் அவர்தம் மனங்கள்!

இயற்கையும் இயல்பும் கூறுகிறது
     இம்மண் வாசனை நான் நுகர்ந ததென்று !

லங்காவி யாய்  அலொ ஸ்டாராய்  மாறிவிட்டதால்
     தமிழ் பெயர்கள் மாறிவிடாது.

கதா வாகி விட்டதால் கடாரம் இல்லை என்று ஆகாது!
     இடப் பெயர்கள் மாறியதால் தமிழ் அங்கு இல்லை என்று ஆகாது!

ஆண்டாண்டு காலமாய் மலாய் மொழியில் வாழ்கின்ற சொற்கள் !
     ஆயிரம் முறை மாற்றினாலும் மாறாத ஊர் பெயர்கள் !
     ஆணையிட்டு தடுத்தாலும் மீட்க முடியாத பழக்கங்கள் !

இவையெல்லாம் ,

     கூறிக்கொண்டே இருக்கும் இதுவும் குமரிகண்டம் என்று !

பரமேஸ்வரன் வரலாறில் இங்கு வரலாறு தொடக்கம் !
     மறைக்கப்பட்ட வரலாறில் தமிழும் அடக்கம் !

கூவி கூவி கூறுகிறார் பலர் தமிழர் எண்ணிகையில் குறைவென்று !
     கூறி கூறி பாருங்களேன் அவர் பழக்கங்களில் ஏதேனும் குறை ஒன்று !

மறுத்தாலும் எதிர்த்தாலும் சட்டமிட்டு தடுத்தாலும்
     இயற்கை கூறும் இம்மண்ணும் தமிழ் மண் என்று !


@@@@@@@@@@@@

ஊர் பெயர்கள்

கோலாலம்பூர், செலாங்கூர் , ஜோகூர், பாகூர் , கேளந்தன் , கதா (கடாரம் ), செந்தூள் , சபா. (ஊர் என்று முடியும் பெயர் எந்த ஊருக்கு இருந்தாலும் அது தமிழன் வாழ்ந்த ஊர் )

கி.பி 1402 ல், பரமேஸ்வரன் என்னும் விஜய நகர பேரரசு மன்னன், இஸ்லாமிய மதம் மாறுகிறான் . அங்கிருந்து மட்டுமே வரலாறு தொடங்குவதாக இங்குள்ள அருங்காட்சியகம் கூறுகிறது . அதற்கு முன்பே இங்கு தமிழன் வாழ்ந்து இருக்கிறான்








Monday 15 December 2014

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்.( தொடர்ச்சி )

!!! கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க கூடாது.

கோ எனப்படும் மன்னனின் செல்வம் நிறைந்த இடத்திற்கும் 

கோவில் என்றே பொருள் கொள்ளப்பட்டது . 

மன்னனின் கருவூலங்கள் 

மன்னர்கள் கோவில்களிலேயே நாட்டின் செல்வத்தையெல்லாம் 

வைத்திருப்பார்.  ஏனெனில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு 

முன்பெல்லாம் போர் காலங்களில் சில விதி முறைகள் 

பின்பற்ற பட்டன.

அவை யாதெனில் 

1. பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் வுடல் வூனமுற்றூர் 

இவர்கள் மீது தாக்குதல்கள் நடத்த கூடாது.

2. கோவில்களை இடிக்க கூடாது.

3. தவறான எதையம் நீர்நிலைகளில் கலக்க கூடாது.

4. விவசாய நிலங்களை நாசபடுத்த கூடாது.

5.குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே போர் நடக்க வேண்டும்.

6. நூல்களை பாது காக்கும் இடங்களில் நுழைய கூடாது.

இவ்விதிமுறைகளின் அடிப்படையில் கோவில்கள் எந்த எதிரியின் 

தாக்குதல்களிலும் சிக்காது. என்ற நம்பிக்கையில் கோவில்கள் 

மன்னனின் கருவுலங்களாக மாறின.  ஆனால் 

கி.பி.5 ம் நூற்றாண்டு காலத்திலேயே இவ்விதிமுறைகள் 

மீறப்பட்டன.

எனவே ஒரு நாட்டின் கோவில்களை கொண்டே அந்நாட்டின் 

செல்வசெழிப்பை அறிந்து விடலாம் .  இக்கருத்தை கொண்டு 

பார்த்தால் கோவில்கள் அரசு கருவூலங்கள் ஆகும் .  

பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனும் தஞ்சை 

பெரிய கோவிலை  அரசு கருவூலமாக பயன்படுத்த 

எண்ணியதன் விளைவே பெரிய கோவிலை சுற்றிலும் 

அகழிகள் வெட்டி இருக்கிறான்.

எனவே கோவில்கள் செழிப்பாக இருந்தால் நாட்டு மக்களும் 

செழிப்பாகவே இருப்பார்.  அதன் விளைவாகவே 

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க கூடாது. என்ற கூற்று

வுருவானது.


!!! பரிகார ஸ்தலங்களுக்கும் கோவில்கள் என்றே பெயர்.

பரிகார ஸ்தலங்கள் என்பது என்ன?

அது ஒரு சிறப்பு மருத்துவ மனை ஆகும்.

எனவே மருத்துவமனை இல்லாத ஊரிலும் குடி இருக்க கூடாது.

!!!   எனில் நாம் வழிபடும் கோவில்கள் என்பதுதான் என்ன?

தெய்வத்தை  இங்கே வந்துதான் வழபட வேண்டும் என்று 

கூறக்கூடிய எந்த இடமும் இந்து மதத்தில் இல்லை. 

இறைவன் எனபடுபவன் இந்த இயற்கையாய்  இருக்கிறான்.

அவன் எல்லா இடத்திலும் இருப்பான் .நீராக , நெருப்பாக

காற்றாகநிலமாக,விண்ணாக நம்மோடு இருப்பவன். நாம் 

விரும்பினால் அதை இறைவனாக பார்க்கலாம். இல்லையெனில் 

இயற்கையாகவே பார்க்கலாம். 

இந்து மதம் இயற்கை வழிபாட்டு மதம். 

இதில் எல்லாம் மதிப்பு பெரும். 

இதில் எல்லாம் சமம். உயர்வு தாழ்வு என்பதே இல்லை.





கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்.


கோவில் என்றால் என்ன 

கோவின் இல்லம் 

வெளிபடையாக பார்த்தால் கோவில் எனப்படுவது தெய்வம் வாழும் இடம்.

இந்த தெய்வங்களும் முன்பொரு காலத்தில் மன்னர்களாக   

வாழ்ந்தவர்கள்தான். அறிவியல் அறிந்த மன்னர்கள் !

அந்த மன்னனின் இல்லம் எந்த ஊரில் இருக்கிறதோ அந்த ஊர் எல்லா 

பிரச்சினைகளிலும் எளிதில் தப்பிக்கும். அப்படி பட்ட ஊர்களில் வாழ்வதையே 

மக்களும் விரும்பினர். அதுவே பிற்காலத்தில் 

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று கூற்று வர 

காரணம் ஆகியது.



!!!. எப்பொழுதுமே ஒரு தலைவனின் கீழ் வாழ்வதே மிகவும் சிறந்தது.

எனவே ஒரு மன்னனும் இல்லாத ஊரில் குடி இருக்க கூடாது.

அது மக்களுக்கு ஒழுக்க ரீதியாக , பொருளாதார ரீதியாக , பகை நாட்டார் 

வழியாக ஆபத்து.

எனவே கோவின் இல்லம் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது.





!!!  கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் 


கோ என்றால் பசு மாடு என்று பொருள் .

பசுக்கள் இல்லாத ஊரில் குடி இருக்க கூடாது.

பசு ஒன்று வீட்டில் இருந்தால் போதும்.  பொருளாதாரம் வளரும்.

பசுவின் மூலம் நாம் பெரும் பால், அது சார்ந்து நமக்கு கிடைக்கும் 

தயிர், மோர் , வெண்ணை , நெய் முதலியன பொருள் வளர்க்க உதவும்.

ஆனால் இவற்றையெல்லாம் கடந்து பசுக்கள் எப்பொழுதும் இம்மண்ணில் 

உள்ள அணு கதிர் வழியாக ஏற்படும் வியாதிகளில் இருந்து நம்மை 

காப்பாற்றுகின்றன. இம்மண்ணில் நன்மை தரும் கதிர்கள் வெளிவருவது 

போல் எதிர் வினை கொண்ட கதிர்களும் வெளி வந்து கொண்டே 

இருக்கின்றன.  அதனை தடுத்து நம்மை காப்பாற்றும் மருந்து பசு மாட்டின் 

கோமியம் மற்றும் சாணம். 

எனவே கோவாகிய பசுக்கள் இல்லாத ஊரிலும் குடி இருக்க கூடாது.




தெய்வத்தை வழி பட விதிமுறைகள் இல்லை

 எல்லா இடத்திலும் தெய்வம் இருக்கிறது.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.

எனில்








கோபுர தரிசனம் கோடி புண்ணியம் 

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் 

இந்த கூற்றுக்கள் எதற்காக

எத்தனை முரண் பட்ட கருத்துக்கள்

கோவிலுக்குள் மட்டும் தான் இறைவன் இருக்கிறானா ?

பார்க்கும் இடத்திலெல்லாம் இல்லையா ?

எனில்

பார்க்கும் இடமெல்லாம் இருந்தால் கோவில்கள் எதற்காக ?

அங்கு சென்று வழி  பட என்ன அவசியம் இருக்கிறது ?

சில சமயங்களில் இந்துக்களாகிய நாம் சில விசயங்களை புரிந்து கொள்ள

வேண்டும் . புரிதல் இல்லாமல் போனதாலே பற்பல கேள்விகளும்

முரண்பட்ட விடைகளும் நமக்குள்ளே இருக்கின்றன.


எந்த கடவுளும் எனக்காக பூஜை செய் என்று  கூறவில்லை 

எந்த கடவுளும் எனக்காக இதை செய் அதை செய் என்று கேட்டதில்லை 

கேட்பதும் இல்லை. இனி ஒரு போதும் கேட்க போவதும் இல்லை.

எனில்

தெய்வத்தை வணங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எவரும்

கோவிலுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை.

இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான் . கோவிலுக்குள் மட்டும் இல்லை.

அப்படி கோவிலுக்குள் மட்டும்தான் இறைவன் இருகின்றான் என்றால் நம் 

நாட்டில் துறவியரும் ஞானியரும் யோகியரும் கோவிலுக்குள்ளேயே 

தவம் செய்திருப்பார். காட்டிற்குள் வாழ்ந்திருக்க மாட்டார்கள் .

தெய்வத்தை வழிபட , பக்தியை வெளிபடுத்த கோவிலுக்குள் செல்ல

வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .


அதனால்தான் இந்து மதத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நாளில்

கோவிலுக்கு வரவேண்டும் என்ற விதிமுறைகள் இல்லை. இப்படிதான்

இருக்க வேண்டும் என்று கட்டாய படுத்தாத மதம். இப்படியெல்லாம்

 பாட  வேண்டும் இப்படியெல்லாம் அழைக்க வேண்டும் என்று கட்டாய

படுத்தாத மதம்.

எனில்

கோவில்கள் எதற்காக ? கோவில் என்றால் என்ன ?

கோவிலில் உள்ள விதிமுறைகள் யாருக்காக ?

வழி படும் முறைகள் ஏன் வந்தன ?

நம்மிடம் பலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் இருக்கிறதா ?

சாதிகள்  இதில் எப்படி வந்தன  வர்ணாசிரம கொள்கை ஏன் வந்தன ?

நமக்குள் உண்மையாகவே பாகுபாடுகள் இருந்தனவா ?

நம்மை கேள்விகளால் துளைக்கும் நம் அறிவுக்கும் மனதுக்கும் இடையில்

நடக்கும் போருக்கு  தெய்வத்தின் பெயர் சொல்லி சமாதானம் தேடுவது சரியா?



Saturday 13 December 2014

தஞ்சை மண்

தஞ்சை மண்
அழகிய ஊர் நான் ! 
பசுமைக்கு பஞ்சமில்லை!
பண்பாட்டில் வஞ்சமில்லை !

பலகாலம் கண்பட்டு கண்பட்டு 
கயமையில் 
சிக்கி கொண்டேனோ !












மீத்தேன் மீத்தேன் என்று காதில் விழுகிறது! 

ஓ!

என் உடலை கிழிக்கும் ஆயத்த பணிகள் நடக்கின்றனவா?
அதுதான் அந்த சத்தமா ?


பாலம் கட்டும் வேலையும் சாலைகள் போடும் வேலையும் 
இன்னுமா முடியவில்லை?

என் காதுகளை நான் அடைத்து சில காலங்கள் ஆகிவிட்டன.
எனை விற்று என் பிள்ளைகள் 
தன் பிள்ளைகளை இன்ஜினியரிங் படிக்க வைத்தனர்.

தமிழை  இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்றான் !
தாயையே விற்றவனை கேள்வி கேட்போரே இல்லை !
அது தான் நானும் காதுகளை அடைத்து கொண்டேன் !

எனை விற்க தூண்டியர்கள் இனி என்ன  செய்வர் !
என் வளம் இனி இருக்க போவதில்லை !
என் மடியில் தவழ்ந்த என் பிள்ளைகள் இனி இருக்க போவதில்லை
இனி எதை விற்க சொல்லி தூண்டி விடுவர் ?




ஆயிரம் ஆண்டு பழமையானது என கூறி
 பெரியகோவிலை தத்தெடுத்த UNESCO
இனி அதனை என்ன செய்யும் ?
பாலைவன கோவில் என கூறி சுற்றி காட்டுமா ?

அது எப்படி சாத்தியம் ?
1000 அடியில் தோண்ட போகிறான்
3 அடி அடித்தளத்தில்
அ  இ உ என்னும் அடிப்படை எழுத்தயும்
216 அடி வுயரத்தில் உயிர் மெய்யையும் சுமந்த பெரியகோவில்
1000 அடி சரிவை தாங்கி நிற்குமா ?
சரிவு பெரிகோவிலுக்கு மட்டுமா அதில் ஒளிந்திருக்கும்
தமிழுக்கும் கணிதத்திற்கும் தான் !

இனி கரைநாட்டு சங்கீதம் 
கர்நாடக சங்கீதம் என்ற வாதம் வேண்டியதில்லை

கரை நாடே இருக்க போவதில்லை  எனவே அது
கர்நாடக சங்கீதமாகவே இருக்கட்டும் !

தியாகராஜர் சந்நிதியை என்ன செய்வர்
கலைஞர் குடும்பத்திற்கே அதிகாரம் உண்டு
தான் பிறந்த மண்ணை என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க!

தென்னிந்திய துவாரகா 
மன்னார்குடி 
ராஜகோபால சுவாமியை என்ன செய்வீர் !
இனி தியாகராஜர் உற்சவம் எங்கு நடக்கும் ?




எனை அழித்து முடித்தவுடன் நிம்மதி பெருமூச்சு விடுவார்களா ?
எனை விற்ற அரசியல்வாதிகளும், கட்சிக்காரர்களும், அவர்தம் குடும்பமும் !

அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடபட்டுள்ளன !
தான் விளைவித்த பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்வேன் என்று குரல் கொடுக்காமல்
இலவசங்களை அள்ளி பருகிய என் பிள்ளைகளுக்கு
விவசாயத்தை விட்டு விடுங்கள் என்று 
அரசியல்வாதிகள் கூறியதன் அர்த்தம் புரியவில்லை !

அப்பாடா! இனி காவிரி நதிநீர் பிரச்சனை இல்லை.
இனி தாரளமாக அனுமதி கொடுங்கள் காவிரியின் மீது அணை கட்டுவதற்கு
இனி அவள் என்னை தேடி வருவதில் பலனில்லை அல்லவா !

கல்லணைக்கும் இனி மதிப்பில்லை!
கரிகாலனை நினைவு கோர வேண்டிய 
அவசியமும் இல்லை.

இனி காவிரி பிரச்சனையை காரணம் காட்டி சினிமாகாரர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதில்லை!
பாவம் கர்நாடக அரசியல்வாதிகள்! இனி எதை நிலை நிறுத்துவேன் என கூறி  வாக்கு கேட்பர் !
ஒன்று மட்டும் என் மனதை வதைக்கிறது ! நான் வளர்த்த என் பிள்ளைகள் என்னை மதிக்க தெரியாமல் என்னை
விற்றுவிட்டனர். ஒருவேளை என்னை மதித்திருந்தால் என்னை போற்றி காத்திருப்பர் .
கண் கெட்ட பின் சூரிய வணக்கம் தேவையில்லை .

போகட்டும் !
எவரையும் நம்பி இருப்பவள் நான் இல்லை !
எனை காக்க மறுக்கும் 
இவர்களிடம் 
கெஞ்சி கேட்கும் 
பேதை அல்ல 
நான் !

அய்யோ பாவம் என சொல்லும் 
கவயர்களிடம் 
அனுதாபம் தேடும் 
கோழை அல்ல
 நான் !

அத்தனை பாவமும் அவர்களை போய் சேரும்
அனைத்து தவறுக்கும் தண்டனை உண்டு !




எனை அழிக்க நினைபோரிடமிருந்து எனை நானே காப்பேன்

புயலென மாறுவேன் ! கடும்
மழையென பொழிவேன் ! பேர்
இடியென இடிப்பேன் ! கொடும்
மின்னலென கண்ணை பறிப்பேன் !
நிலநடுக்கமாய் பிளப்பேன் !
சுனாமியாக சீறுவேன் !

நான்

தஞ்சை மண் 

ஆரம்பம்

வணக்கம்,

நீண்ட நாட்களாக blog ஆரம்பிக்க வேண்டும் என்ற எனது  ஆசை இன்று நிறைவேறியது.  

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...