Tuesday 28 June 2016

பெண்ணியம்

பெண்ணியம்  எனும் கருத்தியல் வற்றாத ஜீவ நதி போல் எல்லா

காலங்களிலும் பேசிய , பேசுகின்ற , பேச போகிற ஒரு கருத்தாக்கம் .

காலத்திற்கு காலம் , இது மாறுபடும்.

ஆனால்

எத்தனை காலம் ஆனாலும்

ஒரு மட்டும்

மாற்றுவதே இல்லை !

அதாங்க

இந்த சட்டங்களை இயன்றுவது மட்டும்

ஆண்கள்தான்!

ஒவ்வொரு விலங்கினமும் கூட தான் என்ன செய்கிறோம் , என்ன செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு எடுக்கிறது .

ஆனால் பெண்ணுக்கு மட்டும் அப்படி ஒன்று வழங்கப்படவே இல்லை .

ஒரு ஆண் ஒரு பெண்ணை என்னவாக பார்கிறானோ அதை பொறுத்து அவளுக்கான பெண்ணிய கருத்துக்கள் வரையப்பட்டது .

வேத காலங்களில் , பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி பிரச்சனை இல்லை .

ஆனால் விச்வாமித்ரரும் , வசிஷ்டரும் , பெண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்றும் , எப்படி வாழ்தல் அவளை பத்தினி என்று உலகம் போற்றும் எனவும் கதை எழுதி இருக்கிறார்கள் .

நல்ல தெங்கால் கதை , நளாயினி கதை என பல கதைகள்  வட இந்தியாயாவில் எழுதப்பட்டன .

ஒரு படி மேலே போய் அகழிகை  கல்லாய் போன கதையும் , பரசுராமரின் தாய் தன் கணவனை தவிர்த்து வேறு ஒரு ஆணை பார்த்தாள்  என்ற ஒரே காரணத்திற்க்காக , பெற்ற மகனே அவளது தலையை வெட்டினான் என்பதும் , பெண் மீது திணிக்க பட்ட பய உணர்வுகள் .

இதுவும் பெண்ணுக்காக ஆண்கள் எழுதிய பெண்ணியம் .

ஆனால் , இக்காலம் முடிந்த பிறகு ,

இதே பெண்ணுக்கான கருத்தாக்கம் மாறுகிறது.
மகா பாரத கதையில் ,

கங்கை எனும் பெண் தன் 7 குழந்தைகளை  ஆற்றில் விடுகிறாள் .

மீனவ பெண் மாத்ரி  தன் கணவன் சாந்தனு வை மணம் புரிவதற்கு முன்பே , வேறு ஒரு முனிவர் மூலம் வியாசரை பெறுகிறாள் .

திருதுராஷ்டிரன் , மாற்றும் பாண்டுவின் தாய்மார்கள் இருவரும் , தன் கணவன் அல்லாத , கணவனின் அண்ணன் முறையில் உள்ள வியாசர்  மூலம் குழந்தை பெறுகிறாள் .

பாண்டுவின் மனைவி குந்தி , திருமணத்திற்கு முன்பே , சூரியனோடு உறவாடி கர்ணனை பெறுகிறாள்.

பாண்டுவின் மனைவிகள்  குந்தி மற்றும் மாதவி இருவரும் தன் கணவன் அல்லாத வேறு ஆண்கள் மூலம் குழந்தை பெறுகிறார்கள் . இது பாண்டுவுக்கு தெரிந்தே நடக்கிறது .

பாண்டுவின் 5 மகன்களையும் ஒரு பெண் மணக்கிறாள். அதனால் பாஞ்சாலி எனவும் பெயர் பெறுகிறாள் .

கம்சனின் தாய் , தன் கணவன் அல்லாத ஒரு ஆண் மூலம் கம்சனை பெறுகிறாள் .

தங்கள் கணவனாகிய நரகாசுரனை அழித்த , அவனது தகப்பன் முறையில் இருக்கும் கிருஷ்ணனையே 16000 பெண்களும் மணக்கிறார் . மாமனாரையே மருமகள் மணப்பது .

நரகாசுரனின் தாய் பூமாதேவி . தகப்பன் வேறு ஒருவர் . ஆனால் பூமா தேவியின் கணவன் கிருஷ்ணன் .

இதுவும் பெண்ணுக்காக ஆண்கள் எழுதிய பெண்ணிய கதைகள் .

வேத காலத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது 
மஹாபாரத காலத்தில் ஒரு பெண் , பல ஆண்கள் அங்கீகரிக்க பட்டது .

இவை எல்லாம் ஆரிய பெண்களுக்காக , ஆரிய ஆண்கள் எழுதியது .

இவை 2000 ஆண்டுகளுக்கு முன்பு , பௌத்தம் மற்றும் சமணத்தோடு சேர்ந்து தமிழகத்திற்குள் நுழைந்தது .

பெண் சுதந்திரம் இருந்த தமிழ் மண்ணில் , பெண்ணியங்கள் சற்றே தலை தூக்க ஆரம்பித்தது .

இருந்த போதிலும் , ஒரு போதும் தமிழ் பெண்கள் தன் சுதந்திரத்தை இழந்ததில்லை .

பதினெண் கீழ் கணக்கிலும் , பதினெண் மேல்கணக்கிலும் பெண்கள் எழுதிய பாடல்கள் உள்ளன .

நாயன்மார்களாக , ஆழ்வார்களாக பாடம் படித்தும் , பாடல்கள் எழுதியும் தற்சார்பு இழக்காமல் வாழ்ந்து வந்தனர் .


பாண்டியர் வம்சத்தில் மங்கையர்கரசியாரும் ,பல்லவர் குலத்தில் குந்தவியாரும் ,சோழர் வம்சத்தில் குந்தவை அம்மையாரும் , சிறப்புடன் வாழ்ந்தது வரலாறுகள் கூறுகின்றன .

எந்த நாளும் , பெண்கள் இப்படி வாழ வேண்டும் கட்டுக்கதைகள் எதுவும் எழுதப்படவில்லை . அதற்கு அவசியமும் ஏற்படவில்லை .

15 ம் நூற்றாண்டு வரை இதே நிலை இருக்க ,

நாயக்க வம்சம்

மராட்டி வம்சம்

முகலாய வம்சம்

இஸ்லாமிய படையெடுப்பு

பிரெஞ்சு படைகள்

டச்சு படைகள்

ஆங்கில அதிகாரிகள்

இப்படி ஒரு சில , வஞ்சகர்களிடம் இருந்து பெண்ணை காப்பாற்ற எண்ணி , பெண்கள் வீட்டிற்குள் முடக்க பட்டு ,

பின் பெண்ணிற்கான பெண்ணியம் தமிழகத்திலும் வந்து விட்டது .

புரியாத சில விஷயங்கள் இன்னும் நம்மோடு இருந்து கொண்டுதான் இருக்கின்றன .

இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதல் .

நாம் அதை கடந்து கொண்டு தான் இருக்கிறோம் .

ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது 35 வைது வயதில் 5 வயது சிறுமியாகிய சாரதா வை திருமணம்  புரிகிறார்.

அந்த பெண் இன்றும்  சாரதா  அம்மையார் என்று கொண்டாடப்படுகிறார்.

இதே போல் தான் பெரியார் என்று வழங்கப்படும் ராமசாமியும் செய்தார் .
ஆனால் இன்றும் தூற்றப்படுகிறார் .

இதே தவறை தான் கலைஞர் கருணாநிதியும் செய்தார். அவர் இன்றும் தேர்தலில் வெற்றி பெற்று கொண்டு தான் இருக்கிறார் . யாரும் அவரை வெறுக்க வில்லையே !

சுதந்திர போராட்ட காலத்தில்
சமுதாயத்திற்கு போதனைகள் செய்தார் அரவிந்தர்.
அவரை பற்றி கூட தெரியாத பலரும் , அன்னை அரவிந்தரை கொண்டாடுகிறார்கள் . இத்தனைக்கும் அரவிந்தர் தனது மடத்தில் அந்த ஜெர்மனியா பெண்ணிடம் தன் மரண தருவாயில் மட்டும் தான் பேசி உள்ளார்.

ராகவேந்தரை வணங்கும் இந்த உலகம் , அவர் பாதி வழியில் வாழ்க்கை எனும் பாதையில் விட்டு வந்தாரே , அவரது மனைவி அவரை பற்றி பேசுவதே இல்லை .



பெண் சுந்தந்திரம் பேசிய பாரதி தன் மனைவி பற்றி யோசிக்கவே இல்லையே !

உண்மையில்

வட இந்திய பெண் சாரதா  தேவி யை யும் , ஜெர்மானிய பெண் அன்னை அரவிந்தரையும் , வணங்கும் இந்த உலகிற்கு வணக்கத்திற்கு உரிய பாரதியின் மனைவி தெரியாமல் போனது வேதனை .





வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர் மனைவி

வ.உ.சிதம்பரம் பிள்ளை , தன் சொத்தை எல்லாம் விற்ற பிறகு , இந்த நல்லுலகம் அவரை தோற்கடித்தபின்னரும் அவருடன் தன செல்வ செழிப்பை இழந்து வாழ்ந்த அவரது மனைவி யார் கண்ணிற்கும் தெரியாமல் போவது இன்னும் வேதனை .

வேறு ஒரு பெண்ணுடன் போன கோவலனை மன்னன் தவறாக தண்டித்து விட்டான் என்றதும் , வேறு ஒரு பெண்ணுடன் போன் போது வராத கோவம் மன்னன் மீது வருகிறது கண்ணகிக்கு . இப்படித்தான் பெண்கள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசும் விரும்புவதால்தான் கண்ணகி மட்டும் நம் கண்களுக்கு தெரிகிறாள் .

எல்லாம் எழுதியது ஆண்கள் .

இதில் மறையாமல் மறைந்தது பெண்ணின் எண்ணங்கள் .

இப்போதும் அவளுக்கு என்ன வேண்டும் என்பது தெரியவில்லை .

ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை கான்னென்று கும்மியடி

என்று பாடியதும் பாரதி எனும் ஆண் தான் !

மீண்டும்

ஆணோடு போட்டி போட்டு படிக்கிறாள்
வேலைக்கு போகிறாள்
சிகரெட்டும் பிடிக்கிறாள்
மதுவும் அ ருந்துகிறாள்
திருமணத்திற்கு முன் உறவும் கொள்கிறாள்

ஆண் என்ன செய்கிறானோ

அதையே தானும் செய்கிறாள் !

இப்போதும் ஆணை துரத்தி கொண்டு ஓடுகிறாள்

அதை தவிர்த்து

தனக்கென தனி பயிற்சிகள் எதையும் அவள் தேடவில்லை !

அவள் மனம்
அவள் உடல்
அவள் அறிவு
அவள் வீரம்
அவள் பாதுகாப்பு
அவள் வாழ்க்கை

என்பது தனி உணர்வு

அதை ஒரு ஆணின் வழி தொடர வேண்டிய அவசியமில்லை !
தனக்கான பாதையை, தான் வடிக்கும் பெண் தான்

சாதனையாளர் ஆகிறாள் !
அவள் தான்
தனக்காகான
பெண்ணியத்தை
எழுதியவள் !




பெண்களே நீங்கள் எழுது ங்கள் !
உங்களுக்காக
பெண்ணியத்தை !
ஆணை துரத்தாதே !
அது ஆணின் வழி !
அது
பெண்ணிற்கு பாதுகாப்பு அல்ல !
அதே வழியில் பெண்ணும்
செல்ல வேண்டுமாயின்
ஆண் தான்
பெண்ணை
பாதுகாக்க வேண்டும் !
ஆனால் அது
இன்று
நடக்காது !
எனவே
உனக்காக நீ
எழுது உன் பாதையை !

Monday 27 June 2016

பாலியல் வன்கொடுமை - தண்டனை

உலகின் முக்கிய 15 நாடுகளில் பாலியல் வன்கொடுமைகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து பார்க்கலாம்.
1. சீனா
ஒரு கட்சி ஆட்சி முறையைக்கொண்ட சீனாவில், பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. மேலும் சில பாலியல் குற்றவாளிகளுக்கு பிறப்புறுப்பு சிதைக்கப்படும் தண்டனையும் வழங்கப்படுகிறதாம்.
2. ஈரான்
ஈரானில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், பொதுஇடத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது அடித்துக்கொல்லப்படுவார்கள். அதேநேரம் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் 100 கசையடி அல்லது ஆயுள்தண்டனை வழங்கப்படும்.
3. நெதர்லாந்து
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில், பிரெஞ்ச் முத்தம் உள்பட எந்த வகையான பாலியல் குற்றங்களும், பலாத்காரமாகவே கருதப்படுகிறது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 4 வருடம் முதல் 15 வருடங்கள் வரை குற்றவாளிகளின் வயதை
பொருத்து தண்டனை வழங்கப்படுகிறது.
மற்ற நாடுகளில் பாலியல் தொழிலாளர்களை வன்கொடுமை செய்தால், பெரும்பாலான நாடுகள் அதை பெரிதாகஎடுத்துக்கொள்வதில்லை ஆனால், பாலியல் தொழிலாளிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கும் 4 வருடம் சிறைதண்டனை நெதர்லாந்தில் விதிக்கப்படுகிறது.
4. பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் பாலியல் வன்கொடுமை குற்றம் செய்பவர்களுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுவதுடன்,அவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாவார்கள். மேலும் வன்கொடுமையால் ஏற்பட்ட பாதிப்புகளை பொறுத்து 30 வருடங்கள் கூட தண்டனை கிடைக்கும்.
5.வட கொரியா
சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வடகொரியாவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை வழங்கப்படுவதில்லை.
உடனடி தண்டனை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணால், பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய நபர் தலையில்
சுட்டுக்கொல்லப்படுகிறார்.
6. ரஷ்யா
பலாத்காரத்திற்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பொறுத்து, 3 வருடங்களுக்கு மேல் 30 வருடம் வரை சிறை தண்டனை பாலியல் குற்றவாளிகளுக்கு ரஷ்யாவில் வழங்கப்படுகிறது.
7.ஆப்கானிஸ்தான்
நான்கு நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்ணால், பலாத்கார குற்றவாளி தலையில் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
8.நார்வே
பலாத்காரத்திற்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பொறுத்து, 4 வருடம் முதல் 15 வருடம் வரை சிறை தண்டனை
பாலியல் குற்றவாளிகளுக்கு நார்வேயில் வழங்கப்படுகிறது.
9.அமெரிக்கா
அமெரிக்காவில் மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் என இரண்டு விதமான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. தேசிய சட்டப்படி என்றால், 30 வருடம் வரை பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. மாநில சட்டப்படி ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்தவரை குற்றவாளிகளுக்கு தண்டனை மாறுடுகிறது.
10. இந்தியா
இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தொடர்ந்து தண்டனை கடுமையாகியுள்ளது. 14 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அரிதிலும் அரிதான பாலியல் குற்றவழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
11. சவுதி அரேபியா
சவுதி அரேபியால் பாலியல் குற்றவாளி என்று நிரூபணம் ஆனால் சில நாட்களிலேயே பொதுமக்கள் முன்னிலையில் கொல்லப்படுவார்.
12. எகிப்து
பொதுஇடத்தில் மக்கள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி தூக்கிலப்படுவார்.
13. இஸ்ரேல்
பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு நான்கு வருடம் முதல் 16 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
14. துபாய்
துபாய் நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தினால், அவர்கள் 7 நாட்களில் தூக்கிலடப்பட்டு கொல்லப்படுவார்கள்.
15. கிரீஸ்
ஐரோப்பிய நாடான கிரீஸில், பாலியல் குற்றவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

நன்றி 
புதிய தலைமுறை 
பதிவு நாள் 27.6.2016

இறைவிகளுக்காக !

சமீபத்தில் வந்த ஒரு திரைப்படம் இறைவி !

இந்த திரைப்படத்தில் , எந்த ஆணும் , தன் மனைவியை அடிக்க வில்லை , துன்புறுத்த வில்லை . ஆனாலும் பெண் நிம்மதியாக இல்லை .

ஏன்னென்றால் , எந்த ஆணும் தன் சார்ந்த கருத்தை , தன் சுயத்தை ஒரு பெண்ணுக்காக விட்டு கொடுப்பதில்லை . தன் விருப்பத்தை விட்டு கொடுக்க தயார் இல்லை . இது கூட பெண்ணுக்கு இளைக்க படும் துன்பம்தான் .

அவ்வளவு தான் இறைவி திரைப்படம் .






உண்மை தான் !

திரை துறை யில் எந்த ஆணும் , தன் விருப்பத்தை விட்டு கொடுத்ததில்லை .
இந்த திரைப்படம் எடுத்த , தயாரித்த எல்லா இறைவன் களுக்கும் ஒரே ஒரு கேள்வி தான் .

இதற்கு முன்பும் பெண் சுதந்திரம் குறித்து பேசிய எல்லா திரைத்துறையினருக்கும் சேர்த்துதான்  இந்த கேள்வி !

நீங்கள் படம் எடுப்பது தமிழ் நாட்டு பெண்களுக்காக !
உங்கள் படங்களை பார்ப்பதும் தமிழர்கள்தான் !

உங்கள் திரைப்படங்களில் எல்லாம் எங்கே தமிழ் பெண்கள் ?

உங்கள் விருப்பத்தை எவர் நிறைவேற்றுவார் என்றும்  , உங்கள் விருப்பத்திற்கு யார் உடன்படுவார் என்றும்  அலைந்து திரிந்து , தமிழ்நாட்டின் எத்தனையோ இறைவிகளின் திறமைக்கு மதிப்பளிக்க முடியாமல் ,  உங்களோடு உறவாட தயாராகும் பிற மொழி பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாய்ப்பு ,

திறமையை நாமும் வெளிக்கொணருவோம் என என்றென்றும் கனவு காணும் தமிழ் இறைவிகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா ?

ஒரு பாடல் பாட கூடவா தமிழ் பெண் கிடைக்க வில்லை உங்களுக்கு ?

நீங்கள் தேர்ந்தெடுப்பது எல்லாம் , ஜாதி பார்த்து , மொழி பார்த்து , உங்களோடு வரக்கூடிய வசதி பார்த்து , இத்தனையும் நீவீரெல்லாம் பார்த்து தமிழ் பெண்களின் உள்ள கிடங்கை வெளி படுத்துகிறோம் என்று கூறுவதும் , அவர் தம் வாழ்வியல் பற்றி பேசுவதும் ,

வெட்கமாக இல்லை உங்களுக்கு !

திரை துறையில் எந்த பெண்ணும் விரும்பினால் தான் கெட்டு போவார்கள் , இல்லை என்றால் அப்படி ஒன்று நடப்பதில்லை என்று வாய் கூசாமல் கூறும் நீங்கள்  ,
நீங்கள் யாரும் சுத்தம் இல்லை என்று ஒப்பு கொள்கிறீர்களா ?

தமிழ்நாட்டின் எந்த பெண்ணும் திறமைசாலி அல்ல என்று கூறும்
 உங்களுக்கு
தமிழக பெண்கள் குறித்து கருத்து கூறவும் உரிமை இல்லை !


இதன் தொடர்ச்சியாக வந்த ஒரு நாள் கூத்து எனும் திரைப்படத்தில் என்ன கூற வருகிறீர்கள் ?

தமிழ் பெண்களெல்லாம் , அதற்க்காக ஏங்குகிறார்கள் என்றா ?
இத்திரைப்படத்தில் ஒரு பெண் கூறுகிறாள்,

எனக்கு 26 வயது ஆகிறது . இதுவரையில் எந்த ஆணுடனும் நான் இருந்ததே இல்லை . இது தான் முதல் முறை .இதற்கு தான் திருமணம் என்ற பெயரில் இத்தனை அளப்பறையா ? என்று தன்னோடு படுக்கையில் இருக்கும் , திருமணம் செய்யாமல் உறவு கொண்ட ஒரு ஆணிடம் கூறுகிறாள் .

இத்தனை இழிவாக திரைப்படம் எடுத்து , அந்த உணர்வுகளையும் பிற மொழி பெண்களை கொண்டே வெளிப்படுத்திய நீவீரெல்லாம் , பெண்ணியம் பேசாமல் இருப்பதே , நலம் !. அதுவே

இறைவிகளுக்கு நீங்கள் செய்யும் நன்றியாக இருக்கும் !


---------------------



எல்லா வேலையும் நல்ல வேலையே !

500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ,  ஒரு திறமையான மன்னரின்  அரசவையில் , ஒருவர் தனக்கு வேலை வேண்டும் என்று கேட்டு வந்தார் .

சரி , உனக்கு என்ன வேலை வேண்டும் ?கேள் என்கிறார் மன்னர்.

அவர் சிறிதும் தாமதிக்காமல்

தங்கள் அரசவையில் அமைச்சராக வேண்டும் என்றார் .

அரசவை அதிர பலத்த சிரிப்பொலி எழுந்தது .

ஏன் ? அமைச்சர் பதவி தான் வேண்டுமா உங்களுக்கு ? என்ன தகுதி இருக்கிறது உமக்கு ? - மன்னர்

எனக்கு தெலுங்கு , கன்னடம் , சமஸ்க்ரிதம் , மற்றும் பாரசீகம் போன்ற மொழிகள் தெரியும் . ( அது பாரசீக மொழி , தற்போதுள்ள ஆந்திராவில் பரவிய காலம் . தற்போதுள்ள தெலுங்கில் , பாரசீகம் கலந்த காலம் என்றும் கூறலாம் . எனவே பாரசீகம் படிப்பது அப்போது சிறப்பு மொழி யாக கருதப்பட்டது .) மேலும் நிர்வாகவியலும் கற்றுள்ளேன் . என்றார் .

நீர் பாரசீகம் பயின்றுள்ளீரா ? மகிழ்ச்சி என்று மன்னர் கூறிய உடன் ,

மற்ற அமைச்சர்களுக்கெல்லாம் சற்றே கலக்கம் .

இதை கவனித்த மன்னர் ,

வேலை தேடி வந்தவரிடம் கூறினார் .

இப்போது அமைச்சர் வேலை எதுவும் இல்லை . என்றார் .

நிதானமாக நின்றார் வேலை தேடி வந்தவர்.

ஒன்று செய்யுங்கள் . இங்கு உள்ள கோழி பண்ணையில் ஒரு பணியிடம் உள்ளது . அங்கு வேலை பாருங்கள் என்று கூறினார் .

அரசவையில் மீண்டும் ஒரு சந்தோச காற்று வீசியது .

வேலை தேடி வந்தவர் எதுவும் கூறவில்லை . வேலையை ஏற்று கொண்டார் .

தினமும் கோழி பண்ணையில் வேலை பார்த்தார் .

45 நாட்கள் கழிந்தன . மன்னர் தணிக்கை செய்ய எண்ணி , பண்ணைக்கு வந்தார் . முதலில் கணக்கு வழக்கு பார்க்க எண்ணி , கணக்குகளை ஆய்வு செய்தார் . மிக மிக குறைந்த செலவு கணக்கு .

கோபம் உச்சிக்கு ஏற்றியது .

என்ன இது ?
தீவன கணக்கே இல்லை .
இந்த பண்ணையில் கோழிகள் இருக்கிறதா ? இல்லை
அனைத்தையும் கொன்று விட்டீரா ? என்றார் மன்னர் .

சிறிதும் முகம் சுளிக்காமல்
வாருங்கள் மன்னா , பண்ணையில் வந்து பாருங்கள் என்று கூறினார் .

பண்ணைக்குள் நுழைந்தால் , கோழிகளின் எண்ணிக்கை இரு மடங்காகி இருந்தது . ஒவ்வொரு கோழியும் , குண்டு குண்டாக இருந்தது .

மன்னருக்கு ஆச்சரியம் .

ம் ம் இது எப்படி சாத்தியம் . நீர் தீவனமே  வாங்க வில்லையே
என்று கேட்டார் ?

ஒன்றுமில்லை மன்னா  நம் அரண்மையில் , ஒரு நாளைக்கு மட்டும் 200 பேருக்கு சமையல் செய்கிறார்கள் . அந்த கழிவுகளை , இந்த கோழிகளுக்கு கொண்டு வந்து போட்டேன் . அவ்வளவு தான் என்றார் பணிவாக !

இனி மேல் நீ இங்கு வேலை செய்ய வேண்டாம். நம் நூலகத்திற்கு வந்து வேலை பாரும் என்று கூறினார் .


மறுநாள் முதல் நூலக அலுவலர் வேலை .

ஒரு 30 நாட்கள் கழித்து , மன்னர் அங்கு வந்தார் . இந்த முறை நூலகத்தை பார்வை இட்டுவிட்டு பிறகு கணக்குகளை பார்க்கிறேன் என்றார் .

உள்ளே நுழைந்தார் . அனைத்து ஏடுகளும் , பட்டு துணியால் மடிக்கப்பட்டு , நூலகமே ஜொலிப்பது போல் இருந்தது.

மீண்டும் கோபமாக திரும்பி பார்த்தார் .
என்ன இது கோழி பண்ணையில் செலவுகளை குறைதீர் . நூலகத்தில் செலவு கணக்கை ஏற்றி விட்டீரோ என்றார் .

இல்லை மன்னா , நம் அரண்மனையில் தினமும் 50 ஆடைகளாவது தைக்கிறார்கள் . அவை அனைத்தும் பட்டு துணிகளே !அவற்றில் துண்டு விழும் துணிகள் தான் இவை ! பட்டு துணியில் சுற்றி வைத்தால் , ஏடுகள் பூச்சிகள் அரிக்காமல் இருக்கும் என்பதால் இப்படி செய்தேன் என்றார் .

அதற்கு மேலும் பொறுமை காக்க மன்னருக்கு விருப்பம் இல்லை .

நாளை முதல் நீ என் அமைச்சரவையின் பிரதான அமைச்சன் என்கிறார்.

அந்த அமைச்சன் தான் முல்லா .

ஒருவன் என்ன தான் படித்திருந்தாலும் , பட்டம் பெற்றாலும் , தனக்கு கிடைக்கும் வேளையில் முழு மனதோடு ஈடுபடும் போது தான் , அவன் எண்ணிய இடத்தை அவனால் அடைய முடியும் !

தன் படிப்பிற்கும் , வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்ற போதிலும் , கிடைத்த வேளையில் முழு ஈடுபாட்டை காட்ட வேண்டும் . ஏனென்னில் படிப்பு என்பது , அறிவை வளர்க்க தான் . தொழில் செய்ய அல்ல .

எந்த வேலை கிடைத்தாலும் ,

பலன் எதிர்பாராமல் பணி செய்தால்
நீ எதிர்பார்த்த பலன்
உன்னை தேடி வரும் .

கடமையை செய் ! பலனை எதிர்பாராதே !
அதுவே உன்னை தேடி வரும் .

Tuesday 21 June 2016

சட்ட சபை இப்படி நடந்தா ? எப்புடி ?

தமிழக சட்ட பேரவை - ஜூன் 21 - 2016

மிக முக்கிய பிரச்சனையாக பேச பட்டவை ":


கச்ச தீவை , இலங்கை வசம் விட்டது யார் ?
தி.மு.கா தான் என்று முதல்வர் ஜெயலலிதா திட்ட வட்டமாக கூறுகிறார் .

உடனே தி.மு.க MLA ,
சரி அதை விடுங்க
உச்ச நீதி மன்றத்தில் , வழக்கு பதிவு செய்தது தி.மு.க தான் என்கிறார்.

இப்போதும், 
2008 ல் நான் தனிப்பட்ட முறையில் , 
ADMK சார்பில் வழக்கு தொடர்ந்தே ன் .
1974 மற்றும் 1976 ல் ஆட்சியில் இருந்த கருணாநிதி , கட்ச தீவை , இலங்கை அரசிடம் தாரை வார்த்தார்  .என்று முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார் .

மீண்டும்
சரி அதை விடுங்க !
பிரபாகரனை , தூக்கில் இட வேண்டும் என்று ஜெயலலிதா தான் கூறினார் என்று  மீண்டும் தி.மு.க MLA துரைமுருகன் கூறுகிறார் .


இப்போ ADMK MLA வெற்றி வேல் , பிராபகரன் கொல்லப்பட்ட போது யார் ஆட்சியில் இருந்தது ,தி.மு.க தானே ? என்று கேட்கிறார் .

உடனே இரு கட்சி MLA களும் வாதம் செய்து , ஒரு வழியாக சட்டசபையை முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.


கடந்த 16 ஜூன் 2016 அன்று தொடங்கிய சட்ட சபை கூட்ட தொடர் ,
17 ம் தேதி அன்று இறந்த MLA க்களுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்க பட்டுள்ளது .

18, 19 சனி ஞாயிறு விடுமுறை .

20, 21 இரண்டு நாட்களும் , கட்ச தீவு பிரச்சனை மற்றும் இலங்கை தமிழர் இதை பற்றியே பேசி பேசி இன்று(22 ஜூன் ) மூன்றாவது நாளாக தொடர்கிறது .

நாளையொடு 23.ஜூன் 2016 இந்த கூட்ட தொடர் முடிவடைகிறது .

எங்க யாருமே , அடுத்து வர இருக்கும் பிரச்சனைகள் பற்றி பேசவே இல்லை . இனிமே தான் பேசுவாங்கன்னு நினைக்கிறேன் !

1974 முதல் கிட்டத்தட்ட நம் தமிழக சட்ட சபை 40 ஆண்டுகளாக , கட்ச தீவு பிரச்சனை பற்றி பேசி கொண்டே இருக்கிறது. அதற்கு முடிவு யாராலும் சொல்ல முடியாது . இன்னும் 40 அல்ல 400 ஆண்டுகள் ஆனாலும் , இப்படியே பேசி கொண்டே நாள்கள் நகரும் என்பது போல் உள்ளது நிலவரம் .

முடிவுகள் எடுக்காமல் , பேசுவதையே பேசி , நாட்கள் ஓட்டுவது , ரொம்ப சுலபமான வேலையாக இருக்கிறது.

அடுத்த தேர்தலில் எப்படியும்
ஒரு சீட் யார்கிட்ட யாவது கேட்டு வாங்கிறணும் !

ஏன்னா,

 5 வருஷம் தான் வேலை.

அதுவும் கூட ஒன்னு சும்மா உக்காந்துருக்கணும் !
இல்லையின்னா ,

இந்த காவேரி பிரச்சனை இருக்கு
கட்ச தீவு பிரச்சனை இருக்கு
ஈழ தமிழர்கள் பிரச்சனை இருக்கு

இதுல எதையாவது ஒன்னை எடுத்து திரும்ப , திரும்ப பேசணும் .

அதுக்கு மாத சம்பளம் இருக்கு !
allowance இருக்கு
முக்கியமா
வாழ்நாள் முழுக்க
பென்சன் இருக்கு !

கரும்பு தின்ன கசக்குமா என்ன ?

நீங்களும் முயற்சி எடுங்க !

தந்தையர் தினம்




ஸ்பெயினில் , ஜோசப் என்ற பாதிரியார் பெயரில் வருடந்தோறும் மார்ச் 19 ல் கொண்டாட பட்டது பாதர்ஸ் டே .

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்  , ஜூன் மாதம் 3 வது ஞாயிறு கிழமை கொண்டாடப்பட்டது. இதை தான் இந்தியாவிலும் கொண்டாடுகிறோம்.

அன்னையர் தினத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது தந்தையர் தினம்.
ஆனால் அதிகம் யாரும் கொண்டாடவில்லை.இது 14 மற்றும் 15 நூற்றாண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தொடரவில்லை .

பின்னர் அன்னையர் தினம் அனைவராலும் , கொண்டாடப்பட்ட பிறகு தந்தையர் தினமும் கொண்டுவரப்பட்டது .இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் 1907 ல் டிசம்பர் மாதம் சுரங்க தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தினால் 361 ஆண்கள் இறந்து போயினர். இதில் 250 பேர் தந்தையர் .

எனவே அவர்களுக்கு நன்றி சொல்லும் வண்ணம் , 1908 ம் ஆண்டு ஜூலை மாதம் 8 ம் தேதி கொண்டாடப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் 3 வது ஞாயிறாக மாறியது .இது 2015 ம் ஆண்டிக்கு பிறகே பிரபல மாக்கப்பட்டது .

எனில் தந்தை ஆகாத ஆண்கள் , நிலை என்ன ?
அதையும் ஏன் விட வேண்டும் என நவம்பர் மாதம் 19 ம் தேதி உலக ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது .



இது எல்லாம் வெள்ளையர்களின் நிலை ?

இந்தியாவில் , தமிழ்நாட்டில் அன்னையர் தினம் ,தந்தையர் தினம் என தனி நாள் எடுத்து கொண்டாட வேண்டிய அவசியம் என்ன ?

நமது பூர்விகம் அனைத்தையும் இழந்து கொண்டு இருக்கிறோம் .

ஐரோப்பியனும் , அமெரிக்கணும் அறிவாளிகள் என்றும் , அவன் செய்கின்ற அனைத்தும் சரியானது தான் என்றும் நாம் எண்ண ஆரம்பித்து விட்டோம் .

ஆனால் ஒரு நாளும் தமிழன் கொண்டாடும் ஒரு விழாவை , இந்தியா கூட கொண்டாடுவதில்லை.

கொண்டாடாட்டம் என்ற ஒரே ஒரு காரணத்திற்க்காக , யார் எதை கொண்டாடினாலும் நாமும் கொண்டாடும் , நிலைக்கு வந்து விட்டோம்.

ஹோலி கொண்டாடுகிறோம்!
தசரா கொண்டாடுகிரோம் !
திருமண சடங்கு கூட மாற்றி கொண்டு இருக்கிறோம் !


ஒன்று சாப்பிட பழகி விட்டோம்.
மற்றொன்று , எதுவாக இருந்தாலும் பரவாயில்லை , நாம சந்தோசமா இருந்தா போதும் என்ற நிலைக்கு வந்து விட்டோம்.


தந்தைக்கு நன்றி கூறும் நாள் தானே ? இதிலே என்ன தவறு இருக்கிறது ?

தமிழனும் தான் விலங்குகளுக்கு நன்றி சொல்லும் வண்ணம் , பொங்கல் கொண்டாடுகிறான் .உலகில் உள்ள எந்த நாடாவது , ஏன் விலங்குகள் நல அமைப்பானது கொண்டாடுகிறாதா ?

நீருக்கு நன்றி சொல்லும் வண்ணம் , ஆடி பெருக்கு கொண்டாடுகிறோம் 
உலகம் கொண்டாடுகிறதா ?

சூரியனுக்கு நன்றி சொல்லும் வண்ணம் சூரிய பொங்கல் வைக்கிறோம் 
உலகம் ஏற்று கொண்டதா ?

நட்சத்திரங்களை கூட விடாமல் , கார்த்திகை விழா கொண்டாடுகிறோம் 
எவர் கொண்டாடுகிறார் ?

தமிழன் இயற்கையை மதிப்பவன் !
அவற்றை காக்க நினைப்பவன் !
அதன் வலிமைகளை உலகிற்கு உணர்த்த நினைப்பவன் !
அதனால் கொண்டாடுகிறான்.!

ஐரோப்பாவும், அமெரிக்காவும் அன்னையர் தினம் , தந்தையர் தினம்
ஏன் கொண்டாடுகிறது தெரியுமா ?

ஒரு தகப்பனுக்கு , சில மனைவிகள்
ஒரு தாய்க்கும் சில கணவன்கள்

சில குழந்தைகள் தந்தையிடம் மட்டும் வளர்கிறது தாயில்லாமல் !
சில குழந்தைகள் தாயிடம் மட்டும் வளர்கிறது தந்தையில்லாமல் !
( நம் ஊரில் தகப்பனோ , தாயோ இறந்தால் மட்டும் தான் இப்படி நடக்கும் )

அன்னையர் தினத்தன்று , தந்தையிடம் வளரும் குழந்தைகள், தாயை பார்த்து கொஞ்சி கொள்ளும்.

தந்தையர் தினத்தன்று , தாயிடம் வளரும் குழந்தைகள் தன் தந்தையை தேடி செல்லும்.

இப்படி குழந்தைகளை , காப்பாளர்கள் கூட வளர்க்கிறார்கள் . அந்த குழந்தைகளுக்கு குழந்தை என்று கூட பெயரில்லை . WARD என்று பெயர் .

இந்த நாகரீகத்தையா , தமிழ் ஏற்று கொண்டு அவன் அறிவாளி என்று ஆராதிக்கின்றது .

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 

இது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல .

அன்றாடம் அவர்களை தெய்வம் போல் நினைத்தால் அது தான் அன்னையர் தினம்..

மகன் தந்தை ஆற்றும் நன்றி இவன் தந்தை 
என்நோற்றான் கொள்எனும்  சொல் 
என்கிறார் வள்ளுவர் .

நீ என்றைக்கு , இவனை பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று பிறர் கூற வாழ்கிறாயோ அது தான் ,தந்தையர் தினம் .

என்று ஒவ்வொரு பெண்ணுக்கும் மதிப்பளிக்கிறோமோ , என்று ஒவ்வொரு பெண்ணும் தன் பெண்மையை புரிந்து நடந்து கொள்கிறாளோ அது தான் மகளிர் தினம் !

சும்மா வாயால வடை சுடுறது தமிழுக்கு ஆகாது !

இதெல்லாம் போகட்டும் என்றால் ,

அரசியல் வாதிகள் , தந்தையர் தினம் என்பதை புதிய வடிவில் கொண்டு செல்ல எண்ணுகிறார்கள் . யார் அதிக பிள்ளை பெருகிறாரோ அவர்தான் தந்தையர் தினத்திற்கு தகுதியான ஆள் என்று ? என்ன கொடுமை இது ?
அப்புடி பார்த்தாலும் கலைஞர் கருணாநிதியை விட அதிக பிள்ளை பெற்றவர் எல்லாம் நாட்டில் இருக்கிறார்கள் !



மறக்காதே தமிழா ?
நம்மை , நம் பண்பாட்டை வேறு வடிவில் மாற்ற இந்த உலகம் முயற்சித்து கொண்டு இருக்கிறது .

கொண்டாட்டங்களுக்கு மயங்காதே !
கொள்கைகளை விட்டு விலகாதே !
நம் 10000 ஆண்டு பழமையான பாரம்பரியத்தை 
முந்தாநாள் வந்தவனுக்காக மாற்றாதே !
நம் கண்ணை வைத்தே நம் கண்ணை குத்த நினைக்கும் 
வஞ்சகரின் வலையில் விழுந்து விடாதே !
பெண்ணியம் பேசுவதும் 
பேதமை கலைவதும் 
தமிழனுக்கு தெரியாதா ?
விழித்து கொள் !

Sunday 19 June 2016

விஷால் கிருஷ்ணா ரெட்டி

தெலுங்கை தாய் மொழியாக கொண்டு ஆந்த்ராவில் பிறந்தவர்
 விஷால் கிருஷ்ணா ரெட்டி ,

மிகபெரும் பணக்காரர் G .K .ரெட்டியின்  ( தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ) இரண்டாவது மகன்.

இவருடைய அண்ணன் விக்ரம் கிருஷ்ணா ரெட்டி , திமிரு படத்தில் விஷாலை துரத்தும் ஷ்ரிய ரெட்டியை திருமணம் செய்து கொண்டார் .

29.8.1977 ல் பிறந்த விஷால் கிருஷ்ணா ரெட்டிக்கு தமிழ்நாட்டில் ஜால்ராக்கள் அதிகம்.

அதன் விளைவு , ஆரம்ப காலங்களில் பிறர் தயாரிப்பில் நடித்த விஷால் கடந்த 10 படங்களாக தானே தயாரிக்கிறார்.

தானே விரும்பி தயாரிக்கிறார் என்றாலும், இவரை வைத்து யாரும் படம் எடுக்க தயார் இல்லை என்பதை மனதில் கொண்டு ,

தெலுங்கு வம்சாவழி ஜெயம் ரவி க்கு அவரது அண்ணனே இயக்கி தயாரிப்பது போல , விஷால் கிருஷ்ணா ரெட்டிக்கு , அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணா ரெட்டி தயாரிப்பாளராக இருக்கிறார்.



இதில் , இவரை தூக்கி பிடித்து அதனால் மூக்கு உடைப்பட்ட குடும்பம் தான் ராதிகா சரத்குமார் குடும்பம்.

சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் வரலக்ஷ்மிக்கும் , இவருக்கும் இருந்த நட்போ , காதலோ , எதோ ஒன்றை அடிப்படையாக கொண்டு , ராதிகாவை எதிர்க்க வேண்டி , நடிகர் சங்கத்தில் புரட்சி செய்து, பொம்மை தலைவர் நாசரை உட்கார வைத்து , தானே ஆட்சி புரிகிறார் விஷால் கிருஷ்ணா ரெட்டி .
இப்படி எல்லாம் இருந்தால் தான் , தெலுங்கு படத்தில் நாசருக்கும் , சூர்யாவிற்கும், கார்த்திக்கும்,கோவை சரலாவிர்க்கும் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த நாதாரிகள் தான் , தன்னுடைய தனிப்பட்ட சுய லாபத்திற்காக , இந்த விஷால் ரெட்டியை தூக்கி பிடித்து ,கொண்டிருக்கிறது .

இது போன்ற குழுமத்தை ஏற்கனவே ரஜினிகாந்த் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிட தக்கது. அதில் ஜனகராஜ் , சரத் பாபு, நிழல்கள் ரவி, V .K .ராமசாமி ,மனோபாலா, கராத்தே மணி, கலைபுலி தாணு,, ரமேஷ் கண்ணா , K .S .ரவிகுமார் இன்னும் பலர் இருந்தார்கள். இவர்களுக்கு ஒரே வேலைதான். எங்கு சென்றாலும் ரஜினியை பற்றி புகழ வேண்டும் .

அதன் விளைவு , ரஜினியை தமிழக முதல்வர் ஆக்க  வேண்டும் என்று ஒரு சில அறிவாளிகள் போராடுகிறார்கள் .

ஏற்கனவே M .G .ராமச்சந்திரன் இதனை செய்திருந்தார். அதனை ரஜினிகாந்த தொடர்ந்தார். அதனையே தற்போது விஷால் கிருஷ்ணா ரெட்டியும் செய்கிறார்.

ஒரு மலையாளிக்கும், கன்னட காரனுக்கும் கொடுத்த இடத்தை தமிழகம் ஒரு தெலுங்கருக்கு மட்டும் மறுக்குமா என்ன ?

அதை நிரூபிக்க பத்திரிகைகள் அரும் பாடு படுகின்றன . ஜல்லிக்கட்டு தடை என்று பேசுகிறார் . அப்போதுதான் காளைகள் காப்பாற்ற படுமாம்.
பாவம் இவர் பல விலங்குகளை காப்பாற்றி இருக்கிறார் போலும் கனவில் !
இவருக்கு PETA வில் இருந்து , விருதும் வழங்கப்பட்டது. PETA வின் நோக்கம் , விலங்குகளுக்கு நிம்மதியான சாவு தருவது. அதில் தன்னை இணைத்து கொண்டு , தமிழக காளைகளுக்கு நிம்மதியான சாவு தர முயர்ச்சிகிறார் போலும் !




பிறகு விவசாயிகளுக்காக ஓடி வருகிறார் விஷால் என்று அவருக்கு அடிகடி கொடி பிடிக்கிறது ஊடகங்கள். நடிக்க வந்தால் ,நடிக்கின்ற வேலையை மட்டும் பார்ப்பது என்பது தமிழகத்தில் நடக்கவே நடக்காதா?

அவர் நல்லது செய்யவில்லை என்றாலும் , கெட்டதே செய்தாலும் , அவர் முகம் மட்டும் மக்கள் மனதில் நின்றால் போதும். அந்த வேலையை தான் ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன .

தினமும் எதோ ஒரு தலைப்பில் விஷால் பற்றி செய்தி தர வேண்டும் என்றும் , அதன் வழியாக விஷால் முகத்தை மக்கள் மனதில் நிலை நிறுத்த வேண்டும் . தமிழகத்தின் வருங்காலம் அல்லவா ? லாரன்ஸ் மற்றும் விஷால் குறித்து அடிகடி செய்தி வெளியிட வேண்டும் . இது பத்திரிகையின் கடமை . இப்படி செய்து தான் தமிழ் நாட்டில் சினிமா ஆள வழி காட்டியது பத்திரிகைகள் .

மீண்டும் சினிமா வழியில் திராவிடம் தான் தமிழகத்தை ஆளுமா ?

சினிமா மட்டுமே ஆண்டால் , திராவிடம் மட்டுமே ஆண்டால் ,

தமிழக
விவசாயி  ஒரு போதும் விளங்க மாட்டான்  !
மீனவன் ஒரு போதும் மீள மாட்டான் !
ஆறுகள் தன்னிலைக்கு திரும்பாது !
தமிழகம் மறுவாழ்வு பெறாது !

Friday 17 June 2016

நாகர்கள் -2- குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவில்


murugan க்கான பட முடிவு

நாகர்கள் எனும் இனம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட நிலையில் , அது எங்கோ , தன பெயரை மாற்றி கொண்டோ , தன அடையாளங்களை மறைமுகமாக காட்டி கொண்டோ , வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .

அதன் ஒரு அங்கம் தான்
குக்கி சுப்பிரமணியர் கோவில் .

இது தெற்கு கர்நாடகாவில் உள்ளது.


சுப்ரமணிய சுவாமி என்பதை தமிழ் இனம் முருகன் என்றே கூறும் .

இது தமிழ் நாடு வரை மட்டுமே !

தமிழ்நாட்டை கடந்து விட்டால் சுப்பிரமணி சுவாமி என்பது நாகம் .
நாகர்கள் இனம் தான் , வித்தியாசமான உடல் அமைப்பை கொண்டவர்கள் என்றும் , 6 தலை கொண்டவர்கள் , 12 கை கொண்டவர்கள் என்றெல்லாம்  வட இந்திய கதைகள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் தான் முருகனுக்கும் 6 தலை , 12 கையும் இருக்கு. ( ஏன் , விநாயகர், காளி இவங்களும் இந்த லிஸ்ட்லதான் வர்றாங்க ! இதுக்கு கீழ் ராவணனும் உண்டு . அவனுக்கும் வித்யாசமான கோவில்கள் மத்திய பிரதேசத்தில் உள்ளது. இன்றளவும் , சில நாட்களில் மட்டும் பூஜையும் நடைபெறுகிறது. )


kukke subramanya க்கான பட முடிவு

இது கொக்கி சுப்ரமணிய சுவாமி . 5 தலை நாகத்தின் கீழ் மயிலில் அமர்ந்திருப்பது  முருகன்தான் . ஆனால் இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன.
புதிய கோவிலில் தான் இந்த மயில் மீது முருகன் உள்ளார்.
பழைய கோவிலில் வெறும் நாகம் மட்டுமே உள்ளது.


இது அமைந்துள்ள இடம் , குமார பர்வதம் ( பர்வதம் என்றால் மலை ) ஆகும். இங்குள்ள ஆறு , குமாரதார ஆறு. மிக அழகான ஆறு. ஒரு நீரோடை போல் கோவில் வாசலில் ஓடுகிறது. பார்க்கவே ரம்யமாக இருக்கும். இவை எல்லாம் பழைய கோவிலில் தான் உள்ளது.

பல பேருக்கு பழைய கோவில் இருக்கும் இடமே தெரிவதும் இல்லை . அங்கு பலர் செல்வதும் இல்லை.உண்மையில் இந்த பழைய கோவில் தான் , சக்தி வாய்ந்தது. அந்த மலையின் காற்றும், ஆற்றின் நீரும் நோய் தீர்க்கும் என்று கூறுகிறார்கள் .

( குமரன் மலை என்பதும், குமார ஆறு என்பதும் தமிழ் மொழிக்கு சொந்தம் )

பல இடங்களில் சுப்ரமன்யக்க சுவாமி என்றால் , அங்கு நாகம் மட்டும்தான் இருக்கும்.

தமிழ்நாட்டில் , சனி ஈஸ்வர பகவானுக்கு தான் எள் விளக்கு போடுவோம். அவரை சாஸ்தா என்றும் அழைப்போம். ஆனால் , கேரளாவில் சாஸ்தவிர்க்குதான் எள் விளக்கு போடுகிறார்கள் . எனில் சாஸ்தா தான் சனி ஈஸ்வர பகவானா ? 

அப்படிதான் சுப்பிரமணிய சுவாமியும் நாகமாக காட்சி தருகிறார்.

தமிழ்நாட்டை கடந்து இந்திய முழுக்க சுற்றும் போது நாம் அதிகபடியான கோவில்களில்  கடவுளின் சிலைக்கு பின்பு நாகம் இருப்பதை பார்க்கலாம் . தமிழ்நாட்டில் மட்டும்தான் முருகன் 5 தலை நாகத்தில் இல்லை .


பெரும்பாலும் சிவனுக்கு சிலை வடிவங்கள் கொடுத்துள்ளனர். அதனால் நாகம் உள்ள கோவில்கள் மிக மிக பழமை வாய்ந்தவை என்பதை எளிதில் கண்டு கொள்ளலாம். இந்த சிலை வடிவுள்ள , உருவம் கொண்ட இறைவன் திபெத்திய பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர் என்றும், இவர் தான் ருத்ராட்சம் என்பதை பயன்படுத்தினார் என்றும் கதைகள் உண்டு. இவர் இங்கு வருவதற்கு முன்பே , இந்தியாவில் நாகர்கள் இருந்ததும், அவர்களுக்கு கோவில்கள் இருந்ததையும் , வட இந்திய கதைகளே கூறுகின்றன. 

இந்தியாவிற்குள் ஆரிய இனம் வருவதற்கு முன் இருந்த இனம் நாகர் இனம். இன்றைய தமிழ் இனத்தின் பழைய பெயராக கூட இருக்கலாம்.

ஏன் எனில் , தமிழ்நாட்டில் பல அரசியல் மாற்றங்களால் , கோவில்கள் மற்றும் அதன் பெயர்கள் , மாற்றம் பெற்று விட்டன .

ஆனால் பிற பகுதிகளில் , அவற்றை அப்படியே விட்டுள்ளனர். பல வற்றுக்கு விளக்கம் புரியாமல் தான்.

இந்த குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவில் , கால சர்ப்ப தோசத்திற்க்கு நிவர்த்தி அளிக்கும் என்பதால் , நாக தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு உள்ள ஆற்றில் நீராடி , இங்கு பூஜை செய்கிறார்கள்.

உண்மையில் தோஷ நிவர்த்தி ஆலயங்கள் எழுப்புவது தமிழர்களின் வழக்கம்.  பழனி மலை போல் , மலைகளின் மீது மருந்து உள்ளது என்பதை கண்டு , அதை தெய்வ திருத்தலங்களாக மாற்றியது தமிழர்கள் .

அவ்வண்ணமே , இத்திரு கோவிலும் தமிழர்கள் வழி வந்தது.

நாக தோஷம் , மற்றும் சர்ப்ப தோஷம் என்பது மனசோர்வு மற்றும் உடல் சோர்வையே குறிக்கும். உடலில் நரம்பு கோளாறுகள் ஏற்படும்போது உடல் சோர்வும் , மன சோர்வும் ஏற்படும் .சில தோல் நோய்கள் ஏற்படும் .
அதை தீர்க்கும் , அருமருந்தை கொண்டதே , குமார பர்வதம் மற்றும் குமார தீர்த்தம் ஆகும்.

ஒரு முறை சென்று வாருங்கள் குக்கி சுப்பிரமணிய சுவாமி  கோவிலுக்கு !
பழைய கோவிலுக்கு செல்லுங்கள் !
உடல் சோர்வு தளர்த்தி உற்சாகமாக வாழுங்கள்!

மறைந்து கிடக்கும் தமிழனின் மருத்துவ அறிவை பெறுங்கள் !
மன நிறைவாய் வாழுங்கள் !


( சுப்ரமன்யக்க சுவாமி என்பது பின்னாளில் சுப்பிரமணி ஐயர் என்று மாற்ற பட்டுள்ளது . )

Wednesday 15 June 2016

வள்ளுவர் யார் ?

இன்று நாம் பார்க்கும் திருவள்ளுவர் படம் யார் சாயல் என்று யாராவது சொல்ல முடியுமா ?





2000 ஆண்டுகளாக வள்ளுவர் எப்படி இருப்பார் யாருமே வரைய வில்லை. சிலை  வடிக்க வில்லை.சிற்பங்களும் இல்லை.

ஏன் உ.வே.சாமிநாதையர்,சிதம்பரம் பிள்ளை ,இவர்களெல்லாம் உயிரோடு இருக்கும் வரை வராத வள்ளுவர் படம் ,

ஒரு நாள்

திடிரென இந்திய அரசால் அஞ்சல் தலையாக வெளிவந்தது .

இந்த படத்தை வரைந்தவர் யார் ?


கே.ஆர் .வேணுகோபால் ஷர்மா
,
இவர் அப்போதைய மாடேர்ன் திடேர்ஸ் உரிமையில் பங்குதாரராக இருந்தவர் .

1930 ம் ஆண்டு முதல் அவருக்கு இருந்த ஆசை வள்ளுவர் படத்தை வரைய வேண்டும் என்பது.

அதன் பிறகு காந்தி அடிகளின் படத்தை வரைந்து அதை அவரிடமே நேரில் கொடுத்தார். அதை காந்தி ஏலத்தில் விட்டு அதில் வந்த பணத்தை ஹரிஜன சேவைக்கு பயன்படுத்தினார்.

இவை எல்லாம் ராஜ கோபாலசாரியருக்கும் , காமராஜருக்கும் முன்னால் நடந்தவை .

அதன் பிறகு 1953 ம் ஆண்டு வள்ளுவர் படத்தை வரைந்தே தீருவேன் என்று தீர்மானமாக இருந்தார். அதன் விளைவு ,1959 ல் திரு .ப்க்தவசலம் அவர்களிடம் , அறிஞர் அண்ணா வின் ஒத்துழைப்பால் இப்படத்தை அறிமுகம் செய்தார் வேணுகோபால் ஷர்மா .

உடன் 1960 களில் இந்த படம் இந்திய அரசால் அஞ்சல் தலையாக வெளி வந்தது .

அப்போது இருந்த அரசு காங்கிரஸ் அரசு .
இதை பரிந்துரை செய்தவர்களோ திராவிட கட்சிகள் .

பிறகு எப்படி ? உடன் தீர்மானம் கொண்டு வரப்பட்டது . இத்தனைக்கும் , காமராஜர் அப்போது தமிழக முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிட தக்கது .

1963 ல் காமராஜர் பதவி விலகினார். அதனை பயன்படுத்தி கொண்ட , திராவிடர் கழகம் , காமராஜரை பற்றி அவதூறு பரப்பியது .

அதன் விளைவு 1967 ம் ஆண்டில் அண்ணா ஆட்சிக்கு வந்தார்.
அதன் பிறகு தான் தமிழக பாட புத்தகங்களில் வள்ளுவர் படம் வலம் வர ஆரம்பித்தது .

(அதே போல் திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் மணக்குடவர். ஏன் வ.உ.சிதம்பரம் பிள்ளை கூட உரை எழுதி இருக்கிறார்.
நாம் படிக்கின்ற உரைகள் இவை அல்ல. கலைஞர் எழுதிய உரைகள் .)


இதன் பிறகு தானே , வள்ளுவர் படத்தின் காப்புரிமை பெற்றவர் என்பதால் , அந்த படத்தை யார் வரைந்தாலும் , நாளேடுகளில் பதித்தாலும் ஷர்மாவிற்கு பணம் கொடுக்க பட்டது .

(இதனை அடிப்படியாக கொண்டு ஒரு வழக்கும் நடந்துள்ளது .)
Source : K.R. Venugopala Sarma vs Sangu Ganesan on 3 November, 1971


( இன்றளவும் சமண மதத்தவர்கள் வள்ளுவர் தங்கள் மதத்தை சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது .)





பிறகு 1973 ல் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976 ல் கட்டி முடிக்கப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

வள்ளுவர் கோட்டம் , திருவாரூர் தேரின் சாயலை ஒத்தது .128 அடி உயரம் கொண்டது வள்ளுவர் கோட்டம்.

மதங்களை வெறுக்கும் திராவிட கட்சிகள் , மதங்களை பற்றி எழுதாத வள்ளுவருக்கு திருவாரூர் தேர போல் , ஒரு கோட்டம் அமைக்க காரணம் என்ன என்று ஆயிரம் கேள்விகள் வந்த பொழுதும் , அதனை கட்டி முடிக்க ஆணை இட்டார் கருணாநிதி .


( இதனை கட்டியவர் , காரைக்குடியை சேர்ந்த கணபதி ஸ்தபதி .
இவர் தான் அண்ணா வளைவு மற்றும்
கன்னியாகுமரி வள்ளுவர் சிலையையும் வடிவமைத்தவர்.
மாமல்ல புறம் சிற்ப கல்லூரியில் பணியாற்றியவர். )


இது போல் வள்ளுவருக்கும் , திராவிட கட்சிகளுக்கும் தீராத இணைப்பு .
இது இன்னும் தொடரும் ..

குறிப்பு :


1973 ம் ஆண்டு பெரியார் இறந்தார்.

அதே போல் மற்றொரு கருத்தையும் , கருத்தில் கொள்க !

நீட்டலும் , மழித்தலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

என்று கூறுகிறார் வள்ளுவர். தாடி வைப்பதும் வேண்டா ! மீசை எடுப்பதும் வேண்டா ! என்று கூறுகிறார் வள்ளுவர். ஆனால் வள்ளுவருக்கு தாடியா ?

( வள்ளுவரின் படத்தில் பெரியாரின் சாயல் , உங்கள் கண்களுக்கு தெரிந்தால் அது எங்கள்  பிழை அல்ல )




Tuesday 14 June 2016

உப்புள்ள காய்கறிகள்

நாம் மருந்து சாப்பிடும் பொழுது , தேன் கலந்து உண்ணலாம் .

சீனி , போன்ற இனிப்பு கலந்து உண்ண கூடாது என்று ஒரு வழக்கம் பின்பற்ற பட்டது.

ஆனால் இன்று நடைமுறையில் சிலர் குளிர் பானங்களுடன் , மருந்து பொருளை எடுத்து கொண்டு , மருந்து வேலை செய்ய வில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மருந்தே தவறுதான், அதிலும் குளிர்பானம் கலந்த மருந்து முற்றிலும் தவறு .

அனால் தேன் மட்டும் கலந்து உண்ணலாமா ? என்று கேட்டால் உண்ணலாம் .



ஏன்னெனில் , எந்த ஒரு மருந்தையும் , இனிப்பு கலந்து உண்ணக்கூடாது . தேன் இனிப்பு அல்ல. கசப்பு சுவை நிறைந்தது .

வெளியில் பார்க்கும் எல்லாம் உண்மை அல்ல என்பதற்கு இதுவே சாட்சி!

தேன் , நாவிற்கு இனிக்கும் , உள்ளே சென்றால் கசப்பு சுவையாக மாறி விடும் .

 நெல்லி காய் நாவிற்கு புளிக்கும் , உள்ளே துவர்க்கும் .

அதே போல் எல்லா காய்கறிகளும் தன்னகத்தே சில சுவைகளை கொண்டுள்ளது.


அவற்றில் சில உப்புசுவை கொண்டவை .

ஆதலால் தான் , சில சமயங்களில் சரியான அளவு உப்பிட்டு சமைத்த பொழுதும் , உப்பு கரிப்பது போல் உணர நேரிடுகிறது .

அவ்வாறு உப்பு சுவை உள்ள சில காய்கறிகள் கீழ்கான்பவை :







முள்ளங்கி

தனியா

பூசணிக்காய்

வாழை தண்டு

கீரை தண்டு

பீர்க்கங்காய்

சுரைக்காய்

முள்ளங்கி கீரை

தண்டு கீரை எனப்படும் முளை கீரை

முருங்கை கீரை

நெல்லிக்காய்

புடலங்காய்

பாகற்காய்

பரங்கி காய்

கோவை காய்

இன்னும் பல உள்ளூர் காய் கறிகள் ......

இவை எல்லாம் , தன்னுள்ளே சிறிது உப்பு சுவையை கொண்டுள்ளன்ன .

இது போன்ற கொடி காய்கறிகளை பயன்படுத்தும் பொது உப்பின் அளவை குறைத்து சமைக்க வேண்டும் .

அதே போல் இறைச்சி வகைகள் எதுவாக இருந்தாலும் , உப்பு அதில் ஏற்கனவே இருக்கும் என்பதை நினைவிற் கொள்க

முட்டையில் கூட உப்பிட்டு சமைக்க கூடாது .


நம் உடலிலும் போதுமான அளவு உப்பு உள்ளது என்பதை நினைவிற் கொண்டு  உப்பின் அளவை குறைத்தாலே , போதும் ரத்த அழுத்தம் ஏற்ற ,இறக்கத்திற்கு செல்லாது .


( கடல் உப்பை விட மலை உப்பையே அதிகமாக் பயன்படுத்தினோம் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் வெள்ளையர் ஆட்சிக்கு பிறகு , அவர்கள் நமக்கு காட்டிய வழி தான் கடல் உப்பு.  மலை உப்பில் தான் அதிகபடியான கனிம சத்துக்கள் உள்ளன. அதை அறிந்து கொண்ட பிரிட்டன் , நமக்கு கடல் உப்பை அறிமுகம் செய்தது . இன்று உலகிலேயே கடல் உப்பை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா  . ஹிமாலய உப்பு இந்தியாவை தவிர உலகம் முழுவதும் பயன்படுத்தபடுகிறது .)

LUX என்றால் LUXURY





இந்த டோயலேட் சோப்பு விளம்பரங்களில் , முதன் முறையாக நடித்த பெண் , வட இந்திய நடிகை லீலா சிட்னிஸ் .

L U X  சோப்பு லேவர் ப்ரோதேர்ஸ் என்பவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.


இது இந்திய வரலாற்றின் முக்கிய கட்டம் . ஆனால் வரலாறுகள் ஏனோ , வணிகம் , விளம்பரம் இவற்றிற்கும்  இந்திய வரலாறுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் நமக்கு காட்டுகின்றன .

இந்திய தலை எழுத்தை ஒவ்வொரு முறையும் மாற்றுவது யார் ?

வணிக நிறுவனங்கள்

இந்திய மக்களின் வாழ்க்கை பாதைகளை மாற்றுவது யார்?

வணிக நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரங்கள் .

1888 ல் சன் லைட் சோப்பு என்று ஆரம்பிக்க பட்டு , lifebuoy ,விம் , pears , hudson போன்ற சோப் க்களையும் அறிமுகம் செய்து ,

பிறகு 1930 களில் dutch  நிறுவனமான மார்கரின் uni யுடன் இணைத்து unilever எனும் பிரிட்டிஷ் நிறுவனமாக மாறியது .

ஆனால் இந்நிறுவனம் தன்னை ஹிந்துஸ்தான் உனிலெவெர் என்று கூறி கொள்கிறது .





இந்நிறுவனத்தின் கீழ் எல்லா முக்கிய நடிகைகளும் , தங்கள் அழகிற்கு இது தான் காரணம் கூறி மக்கள் மனதில் இதை பதிய வைக்க பாடு பட்டுள்ளனர் .


LBIL ( Lever Brothers India Ltd ) வனஸ்பதி தயாரிக்க ஆரம்பித்தது .

அதன் பெயர் ஹிந்துஸ்தான் வனஸ்பதி .

இவை இனைந்து ஹிந்துஸ்தான் உனிலெவெர் ltd எனும் பிரிட்டன் நிறுவனமாக மாறியது .கொள்ளை லாபம் கொட்டியது.

1959 surf அறிமுகம் செய்தது

1969 களில் Rin சோப்பு அறிமுகம் செய்தது .

1985 ல் LIPTON ஐ அறிமுகம் செய்தது .

1991 ல் பற்கள் சார்ந்த நிறுவனங்களுடன் இணைவு செய்து

1992 ல் pepsodent அறிமுகம் செய்தது .

1993 ல் TATA OIL MILLS ஐ இணைத்து .

1994 ல் Brook Band ஐ இணைத்து Lipton brook band Ltd ஆக மாறியது .

1996 அமெரிக்க நிறுவனமான johnson & sons நிறுவனத்துடன் 50:50 என்ற
முறையில் இணைந்தது .

1998 fuel lubricant supplaiyil ஈடுபட்டது .

ஒருபுறம் ஆயில் supply செய்து கொண்டே Kwality icecream supply யும் செய்தது .

2000 வது ஆண்டு Fair & Lovely Fairness Cream கொடுக்க ஆரம்பித்தது .

மேலும்

Ponds Talcum Powder , Rexona , Godrej , Lakme sunlight Cream ஆகியனவும் கொடுத்தது .

2001 முதல் parax Agri Seeds LTd உடன் இணைந்து விதைகளை விற்க ஆரம்பித்தது .

2002 ல் அன்னபுர்ண உப்பை அறிமுகம் செய்தது .

இதே ஆண்டு sunsilk shampoo மற்றும் அதன் உற்பத்தி பொருட்களை தன நிறுவனத்துடன் இணைத்து கொண்டது .

மேலும் மத்யப்ரதேஷ அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு , விந்தய வல்லே , umbrella brand உணவு பொருட்களை அறிமுகம் செய்தது .

கிரீன் லபெல் டி deluxe Green Label ஆக மாறியது .

திடீரென

மக்கள் ஆயுர்வேத பொருகள் மேல் கவனம் செலுத்தியதால்
ஆயுர்வேதிக் அறிவியல் நிலையம் ஆரம்பித்து ayus ஆயுர்வேதிக் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது .




2004 ஆம் ஆண்டு Mr .Fruit என்ற பெயரில் மங்கோ ஜூஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று சந்தையில் கிடைக்கும் எல்லா மங்கோ ஜூஸ் க்கும் சொந்தகாரர்கள் இந்த unilever நிறுவனத்தார்.

powerful surf excel , Vim power , surf பவுடர் என்று அதன் முந்தைய எல்லா பொருட்களிலும் அதிக சக்தி கொண்டது கூறி கூடுதல் ரசயனதுடன் அறிமுகம் செய்தது .

2005 ம் ஆண்டு ஐஸ் டீ , பாட்டில் களில் கிடைக்க ஆரம்பித்தது .

தொடர்ந்து , சோப்பு கள் , அழகு சாதனா பொருட்கள் , பற்பொடிகள் , ஆயில் , உணவு பொருட்கள், சிக்கன் பொருட்கள் , விதைகள் , juice பாட்டில்கள் , தண்ணீர் பாட்டில்கள் ,பெப்சி , ஆயுர்வேத பொருட்கள், உப்பு ,  ஆகிய அனைத்தும் இந்நிறுவனத்தால் மட்டுமே இந்தியாவிற்குள் supply செய்யபடுகிறது .

2015 ல் swachh Aadad , மற்றும் Swachch barath திட்டத்தை கொடுத்ததும் இந்நிறுவனமே !

1885 ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் , இன்று வரை இந்தியாவில் , தான் மட்டுமே ஆளுவேன் என்ற நிலையில் உள்ளது .

சோப்புகள் , ஆறுகள் , குளங்களில் பயன்படுத்த கூடாது என்ற நிலை மாற்ற ,ஆறு குளங்களே அழிக்கப்பட்டுள்ளது.

பற்பசை விற்பனைக்காக , நம் பூர்வீக முறைகள் , முட்டாள் தனம் என்று அறிமுகம் செய்யப்பட்டது .

இவர்கள் அழகு பொருட்கள் விற்பனைக்காக , கருப்பு அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மை விதைக்கப்பட்டுள்ளது .

கடல் உப்பு பயன்படுத்திய நம்மை அயோடின் உப்பு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது .

இன்று fuel விலை நிர்ணயம் கூட இவர்களால் தான் செய்யப்படுகிறது.

இந்த நிறுவனங்களுக்காக , மக்கள் தன மீது கொண்ட நம்பிக்கையை விற்பனை செய்தவர்கள் தான் , நம் நாட்டின் அரசியல் வாதிகளும் , நடிகர்களும்.

இதில் மிக கொடுமை என்னவெனில் , இந்நிறுவனத்தின் chemical research centre , தான் மஹா ராஷ்டிர மாநில நீரையெல்லாம் உறிஞ்சுவதும் , அன்னீரையெல்லம் கெடுப்பதுமாக  உள்ளது .

இன்று மஹா ராஷ்டிர மாநிலம் ,வறட்சியின் உச்ச கட்டத்தில் உள்ளது .

இப்போது கூறுங்கள் இந்தியாவிற்கு , பிரிட்டன் அரசு விடுதலை கொடுத்து விட்டதா ?

இன்றும் நம்மை ஆள்வது அவர்களே !


( இந்நிறுவனதிர்க்காக உழைத்த மக்களுக்கு , லண்டன் வாக்ஸ் museum தில் சிலை வைக்கபடுகிறது. இதில் ஐஸ்வர்யா ராய், அமிதாபச்சன்,ஷாரூக் கான், சல்மான் கான், கதிரின கைப்,பிரின்யங்க சோப்ர , மைக்கல் ஜாக்சன், ஏன் காந்தி மற்றும் டெண்டுல்கர் சிலைகளும் இங்கு உள்ளன. தற்போது , மோடி அவர்களுக்கு சிலை வைக்க அளவெடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது. இதில் ரஜினி காந்தின் சிலை ஏன் இன்னும் வைக்க வில்லை என்ற சர்ச்சையும் நடந்து கொண்டிருக்கிறது .)

Thursday 9 June 2016

ஜாதி என்பது தொழிற் பெயரா ?

தமிழன் கொஞ்சம் ஜாதி வெறி பிடித்தவன் .

கொஞ்சம் என்பது கொஞ்சம் தவறு . ரொம்ப வெறி பிடித்தவன் .

ஆமா

ஜாதி வெறின்னா என்ன ?

ஜாதின்னா என்ன ?

வேறு எந்த நாட்டிலும் , எந்த மொழியிலும் ஜாதி இல்லையா ?

ஏன் தமிழர்கள் மட்டும்  இப்புடி இருக்காங்க ?




உண்மையில்

ஜாதியே தமிழ்நாட்டில் இல்லை. ஜாதி என்பது தமிழனின் அடையாளம் அல்ல என்று ஒரு சாரார் கருத்து கூறுகிறார்கள் . ஜாதி தமிழனின் அடையாளம் . ஜாதிய வேறு பாடுகளோ , அடிதடியோ தமிழனின் அடையாளம் அல்ல .

பிரிட்டிஷார் தான் ஜாதி குறித்து வரைந்து வரைத்து புத்தகங்கள் வெளியிட்டது. ஏனெனில் அவர்களுக்கு புதிது . அதனால் இதெப்படி சாத்தியம் .கூடாது என்று முடிவு எடுத்தனர். அதன் விளைவாக அவர்களே ,உயர்ந்த ஜாதி என்றும் தாழ்ந்த ஜாதி என்றும் பிரிவினையோடு புத்தகங்கள் எழுதினார். அதை நடைமுறை படுத்த இடஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்தனர். ஆங்கலேயர்களிடம் பேச வரும் போது , குறைந்த பட்சம் 2 தாழ்ந்த ஜாதியினர் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் . அன்று ஆரம்பித்தது இடஒதுக்கீடும் , ஜாதிய வேறுபாடும் ! நமக்கு உதவுவது போலவே சிண்டு முடித்து விடுவதில் வல்லவர்கள் ஆங்கிலேயர்கள் .

Castes and Tribes of Southern india - எழுதியவர் Edgar Thurston - ஆண்டு 1909

எங்கே நம் தமிழிலக்கியங்களில் ஜாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இது தாழ்ந்தது என்றோ உயர்ந்தது என்றோ எங்கேனும் குறிப்பு இருக்கிறதா ?தேடுங்கள் !

இதை தேடுவதற்கு முன்னால் ,

இனம் என்றால் என்ன?

ஜாதி என்றால் என்ன ?

பட்டம் என்றால் என்ன ?

வர்ணாசிரமம் என்றால் என்ன ?

குலம் என்றால் என்ன ?

குல தெய்வம் என்றால் என்ன ?

தமிழில் பேசும் அத்தனை பேருக்கும் ஜாதி உண்டா? பட்டம் உண்டா?

குடும்ப பெயர் தமிழருக்கு உண்டா ?

இவ்வளவு கேள்விக்கும் பதில் தெரிஞ்சிட்டா ,


ஜாதி பிரச்னை இருக்காது .

இதற்க்கு பின்னால் இருக்கும் உலக அரசியல் முடிவுக்கு வரும் .

உலக அரசியலில் , தமிழனின் ஜாதி ஒளிந்து கிடக்கிறது .

தேடுங்கள் !

--------------------------------------------------------------------------------------------------------------------


உதாரணமாக ,

பிராமணன் என்பது இன பெயர்

பார்பனன் என்பது அவனது ஜாதி பெயர்

ஐயர் என்பது பட்டபெயர்.

இதில் இனபெயரும் , பட்ட பெயரும் தமிழுக்கு சொந்தமில்லை.

பார்பான் என்பது பிராமணர்களுக்கு தமிழ் நாட்டில் கொடுக்கப்பட்ட தொழிலுக்காகன பெயர்.

பார்பான் என்றால் , கணிகை பார்பான்.
ஆருடம் பார்பான்.
நாள் குறித்தும் , நேரம் குறித்தும் கணிப்பவன் என்று பொருள்.

இந்த இனம் தமிழ்நாட்டை தொடுவதற்கு முன்பே இந்த தொழில் , தமிழ் மக்களால் செய்யப்பட்டது தான்.

இன்றும் வேறு பிற சமூத்தை சேர்ந்தவர்களும் இந்த பணியை செய்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது .


அதே போல் கோவில்களில் , அர்ச்சகர் பணிக்கும் இவர்கள் அமர்த்தப்பட்டனர் .

ஆசிரியர் பணிக்கும் அமர்த்தப்பட்டனர்.

சுருங்க சொன்னால் , அமர்ந்த பார்க்கும் வேலைகள் அனைத்தும்  இந்த இனத்திற்கு ஒதுக்கபட்டது.

காரணம் அக்காலத்தில் , ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்க கூடிய வேலை என்பது மக்களால் வெறுக்கப்பட்டது. அதனால் , அது போன்ற வேலைகள் இழிவான வேலைகள் என்று கருதி , வேற்று இனத்தவர்களுக்கு அவ்வேலைகள் வழங்கப்பட்டன.

இன்று நிலை தலை கீழாக மாறிய தால் எல்லோரும் அவ்வேலையை செய்ய , ஆசை கொண்டு , அல்லாடுகிறார்கள் .

இதே போல் , செட்டியார் என்பதும் , முதலியார் என்பதும் , தேவர் என்பதும் , ஜாதி பெயர்கள் அல்ல . பட்ட பெயர்கள் ஆகும் .


எந்த ஜாதி பெயரை குறிப்பிட்டாலும் , அது சார்ந்த தொழில் நமக்கு விளங்கவில்லையாயின் அது பட்ட பெயர் ஆகும் .

வன்னியர் சமூகம் மட்டும் 500 வகையான பட்டப்பெயர்களை பெற்றுள்ளது .

செட்டியார் இன மக்களும், சேட்டு இன மக்களும் ஒன்று தான் என்ற ஐயப்பாடு கொண்டு , ஒரு சில ஆய்வுகளும் வந்துள்ளன.
இதுவும் பட்ட பெயர்தான்.

முதலியார் எனப்படும் பட்ட பெயர் , கிருஷ்ணா தேவராயர் காலத்தில் , மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் , நாயக்க மக்களுக்காக பணியாற்றிய வெள்ளாள ஜாதி மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்ட பெயர்.
இந்த காலத்திற்கு முன்பு முதலியார் எனும் பட்ட பெயர் தமிழ் மக்கள்
 மத்தியில் கிடையாது .

பட்டப்பெயர்கள் என்பது காலத்திற்கு காலம் ,ஆளும் அரசனை பொறுத்து அவருக்கு வேண்டியவர்களை பொறுத்து , பல்வேறு நபர்கள் பெற்றுள்ளார்கள் . ஆனால் அது ஜாதி அல்ல .

உண்மையில் தமிழ்ச்சமூகத்தில் எந்த ஜாதி மக்களும் அடித்து கொள்ளவில்லை. இந்த பட்ட பெயர் வாங்கிய மக்கள்தான் , தன ஜாதி என்ன என்பதை மறந்து விட்டு , இல்லை தொலைத்து விட்டு , அந்த பட்டப்பெயர் சொல்லி அடுத்தவரை அடிப்பதும் , கொள்வதுமாக இருக்கிறார்கள்!

உண்மையில் தமிழ் சமூகம் அழிக்க வேண்டியது ஜாதியை அல்ல .

பட்ட பெயர்களை !

இங்கு ஜாதி எல்லாம் இழிவு படுத்த பட்டுவிட்டது. அதன் விளைவாக பல தொழில்கள் தமிழ்நாட்டில் இல்லை .
மீனவ சமூகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 500 பிரிவினர் இருந்தாராம். இன்று இல்லை. அவர்களை இழிவு படுத்தி அவர்கள் மதம் மாறி , இனம் மாறி இன்று கப்பல் கட்டும் தொழில் என்பதை நாம் தொலைத்து விட்டோம். இவர்கள் இருந்ததால் தானே அன்று ராஜராஜ சோழன் கப்பல் படை வைத்திருந்தான் .
இன்று கப்பல் எந்த மரத்தில் செய்வது என்பது மீனவ நண்பர்களில் பலபேருக்கு தெரியாது.

பனைமரத்தின் கதை ஊர் அறிந்தது . இன்று பனைமரம் வளர்க்க வேண்டும் என்று கூறியவுடன் எதிர்ப்பது யார் தெரியுமா ? அந்த மக்கள் தான் ! மீண்டும் நம்மை தாழ்த்தி விடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள் . அதன் நுட்பங்கள் எல்லாம் கிட்டத்தட்ட அழிந்து விட்டது.

மருத்துவர் என்று ஒரு ஜாதி ,ஊரில் யாருக்கு என்ன நேர்ந்தாலும் , நாடி பிடிக்கும் முன் , முகம் பார்த்து கூறி விடுவான். இன்று அந்த ஜாதி இல்லை .

பள்ளர் சமூகம் இன்று தேவேந்திர குல வெள்ளாளராக மாறி விட்டது. விளைவு எந்த ஆற்றிலும் பராமரிப்பு இல்லை . குளங்கள் இல்லை . ஏரிகள் என்பது ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது.

கோனார் சமூகம் யாதவ சமூகம் ஆகி விட்டது. இன்று நாமெல்லாம் நாட்டு மாடு வேண்டும் என்று கூவி கொண்டு இருக்கிறோம். இதில் என்ன சிறப்பு என்றால் செஞ்சி மலையை ஆண்ட ஆனந்த கோனார் எனும் மன்னர் தன பெயரை ஆனந்த கோன் என்று அந்த காலத்திலேயே ஸ்டைலாக வைத்திருந்தாராம் .அந்த சமூகம் தன ஸ்டைலை தொலைத்து விட்டது.

கலைத்துறையில் கோலோச்சி இருந்த சமூகம் விஸ்வகர்மாகி விட்டது. என்ன பயன்? எங்கு பார்த்தாலும்  மலையாளி யும் , ராஜசதானியும் நகைக்கடையும் வைத்திருக்கிறான். அதில் இரும்பும் உண்டு. ஈயமும் உண்டு. வியந்து வியந்து நாம் பார்த்து , பூரித்து நிற்கும் கோவில் சிற்பங்களை செதுக்கிய சமூகத்தில் 10% பேர் கூட இன்று அந்த தொழிலில் இல்லை . கதவுகளில் கூட கலைநயம் காட்டிய ஆசாரிக்கு கதவு எந்த மரத்தில் செய்ய வேண்டும், சாளரம் எதில் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை .

பூசாரி என்று ஒரு சமூகம் இருந்தது . அவர்களுக்கு தெரியும் விபூதியின் பயன்கள் என்னென்ன என்று ! இன்று அந்த பெயரே இல்லை.

இன்று விவசாயம் ஏன் படுபாதாளத்தில் இருக்கிறது தெரியுமா ? உழுவதற்கும், அறுப்பதற்கும் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. அதற்கான செலவுகள் அதிகம். ஏன் என்றால் , அந்த வேலையை செய்து வந்த பறையர் இனம் தான் இன்று துபாய் வளமைக்கும், சிங்கப்பூரின் பெருமைக்கும் காரணம்!

இப்படி கூறி கொண்டே போகலாம் . நம் தொழில் வளமை அப்படி!
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் அதன் பொருளாதாரத்தை முதலில் அழிக்க வேண்டும் என்பது வெள்ளையர்களின் கோட்பாடு .

சிறப்பாக நடந்து விட்டது. ஜாதியில் ஏற்ற தாழ்வு கூறி , அதில் இருந்து வெளியேற , அந்த தொழிலையே விட்டு , அந்நிய நாட்டு பொருளுக்காக ஏங்கி நிற்கிறோம்!

இப்போ சொல்லுங்க ! ஜாதி வேண்டுமா ? ஜாதி வெறி வேண்டுமா என்று !
---------------------------------   - - -





சாதிக்கும் , தொழிலுக்கும் என்ன சம்பந்தம் ?


ஒரு மருத்துவ மனைக்குள் செல்கிறோம் என்றால் , அங்கு யாரெல்லாம் இருப்பார்கள் . மருத்துவர்கள்,செவிலியர்கள் ,உதவியாளர்கள் , ரத்த பரிசோதனை செய்பவர்கள் , அறுவை சிகிச்சை உதவியாளர்கள் மற்றும் சுத்தம் செய்பவர்கள் , மருந்து தருபவர் , இப்படி பலர் இருப்பார். அவர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் தான் ஒரு நோயாளி குணமடைய முடியும் . அப்படி வேலை செய்பவர்களுக்கு நாம் ஒவ்வொரு பெயர் கொடுக்கிறோம் அல்லவா ! அந்த பெயர் தான் ஜாதி யின் பெயர் . நம் நாட்டின் பூர்விக தொழில் புரிவோர் அனைவருக்கும் , அவர் இன்ன தொழில் புரிகிறார் என்பதை சுட்டி காட்ட வைக்க பட்ட பெயர் தான் ஜாதி . இது தமிழர் மரபு .


மாறாக ஆரியர்கள் , கொண்டு வந்த வர்ணாசிரமம் என்பது , தமிழ் சமூகத்தில் அரவும் கிடையாது . ஆரிய ஜாதி பிரிவுகள்தான் , நம்மை குழப்பி , நம் தொழில்களை நாம் அழிக்க காரணமாக அமைந்தன . நாடார் இனத்தை இழிவு படுத்தி தான் , பனை மரங்கள் அழிக்க பட்டன .மீனவர்கள் , பள்ளர்கள் , மல்லர்கள் இவர்களை விட்டு கொடுத்துதான் ,  ,நீர் வழி போக்குவரத்தை அழித்து , தரை வழி போக்குவரத்து மட்டுமே வைத்து பெட்ரோல் நம்மை ஆள்கிறது. இன்னும் பல ஜாதிகள் அழிந்து விட்டன . மீதம் உள்ள தொழில்களையாவது காப்பாற்ற வேண்டாமா ?



----------------------------------------------------------

ஹளபேடு

   

துவார சமுத்ரா என்பது ஒரு அழகிய எரி . இதன் அழகில் இளைப்பாற ஆசை கொண்ட ஹோய்சால மன்னர் விஷ்ணுவர்த்தன் , தன வம்சத்தை நிலை நிறுத்த உதவிய இறைவனுக்கு நன்றி சொல்லும் வண்ணம் ஒரு கோவில் எழுப்பினான் . அவ்வாறு எழுப்பட்ட கோவில்தான் ஹோயசாலேஸ்வரர் கோவில் .
இங்கிருக்கும் இறைவனுக்கு ஹோயசாலேஸ்வரர் என்று பெயரிட்டு , அந்த ஊரையே தனது தலைநகராக மாற்றினான். ஆனால் இந்த கோவிலில் மற்றொரு சிவ லிங்கமும் உண்டு . அதன் பெயர் சாந்தலேஸ்வரர் . யார் இவர் என்றால் மன்னனின் அன்பு மனைவி சாந்தலா தேவியின் பெயரால் உருவாக்கப்பட்ட இறைவன் அவர் .

இரண்டு இறைவனுக்கும் தனி தனியே அழகிய நந்தியும் உண்டு . கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலானது , இன்னும் கூட  இடங்களில் முடிக்கப்படாத நிலையில் உள்ளது .




இந்த கோவிலின் உள்புறத்தில் , மேல்மாடத்தில் ராசிகள் பொறிக்கப்பட்டுள்ளன . அதே போல் தரையில் விளையாட்டுகள் அனைத்தும் செதுக்கப்பட்டுள்ளன .




இந்த கோவிலின் வெளி புறத்தில் 35000 அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முருகன் , இராவணன், அர்ஜுனன் , கிருஷ்ணன் , சிவபெருமானின் நடன சிற்பங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது .






இங்குள்ள் தூண்கள் , கணித வேலைபாடுகளுடன் செய்யப்பட்டுள்ளது. அந்த தூண்களின் அருகில் நாம் நின்றால் , நம் உருவம் தலை கீழாக தெரியும் .


டெல்லி சுல்தான்களாலும் , இஸ்லாமிய படையெடுப்பாலும் இந்த ஊர் சிதைக்கபட்டதால் , தலைநகரம் வேறு ஊருக்கு மாற்றப்பட்டதால் , இந்த ஊருக்கு ஹளபேடு என்று பெயர் சூட்டப்பட்டது .

ஹளபேடு என்றால் பழைய நகரம் என்று அர்த்தம் .

Monday 6 June 2016

சோமாலியா - இறக்குமா ?




தமிழக ஊடகமெல்லாம் ஆந்திராவை சேர்ந்த  விஷாலையும், கர்னாடக வை சேர்ந்த லாரன்ஸையும் எப்படி தலைவர்கள் ஆக்குவது என்று யோசிப்பதிலேயே நேரம் போதாமல் தவித்து கொண்டு இருக்கின்றன . மேலும் ,
இருக்கின்ற அரசும் , தமிழக மக்களை தாங்குகிறது என்று கூறி அதன் பெருமைகளை பறை சாற்றவே அவர்களுக்கு நேரம் இல்லை .இதெல்லாம் யோசிப்பது சாத்தியமில்லை !

இந்திய ஊடகங்களுக்கோ , அமிதாப்பச்சனை இந்திய குடியரசு தலைவர் ஆக்க வேண்டிய பொறுப்பு உள்ளது . சல்மான் கான் , சாருக்கான் , ஐஸ்வர்யா ராய் , பிரியங்கா சோப்ர இவர்களின் கருத்துகளை மக்களின் மனதில் பதிய வைப்பதே பெரும் பாடாக உள்ளது. 

உலக ஊடகங்களுக்கோ , இலங்கையின் திருகோண மலை போலும் , இலங்கையே அமெரிக்காவிற்கு கீழ கொண்டு வர வேண்டிய வேலை உள்ளது. உலக அழகிகள் பற்றி எழுத வேண்டி உள்ளது . ஒரு மண்ணுக்கும் பிரயோசனம் இல்லாத ஒருவனை, திடிரென எப்படி உலகம் முழுக்க கொண்டு செல்வது  . அப்படி கொண்டு செல்லப்பட்ட ஒருவனை எப்படி எல்லாம் பயன்படுத்தி கொள்வது என்று யோசிக்கவே நேரம் போதவில்லை.
இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறியே எல்லா தவறுகளையும் , மறைக்க வேண்டிய வேலை உள்ளது .


ஊடமெ ல்லாம் இருக்கட்டும் , நான் தான் உலகம் முழுக்க தலைமை தாங்குவேன் என்று கூறி , எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் அமெரிக்கவிற்கும் இதை பற்றி பேச விருப்பம் இல்லை .

அமெரிக்காவிற்கும் , கட்டளை போடும் பிரிட்டிஷ் அரசாங்கமோ , ஐரோப்போவில் இருந்து பிரிய வேண்டும் என்று , அந்த வேலையில் ஒரே பிசியாக உள்ளது .

ஆனால் இயற்கை என்ன சொல்கிறது தெரியுமா ?

உலகம் முழுக்க நடத்துகின்ற , அணு குண்டு பரிசோதனை , மற்றும் ரசாயன பரிவர்த்தனைகளால் பூமியின் கீழ் உள்ள பிளேட்டுகள் எல்லாம் ஆடி கொண்டு இருக்கிறதாம் .

முதலில் உடைய இருப்பது அமெரிக்க, அதனை தொடர்ந்து பிரிட்டிஷ் உள்ள ஐரோப்பா , பிறகுதான் சோமாலிய எல்லாம் என்று கூறுகிறது .

சில இழப்புகளை சோமாலிய சந்திக்கலாம் .
ஆனால்
இயற்கை மீண்டும் சோமாலியாவிற்கு கைகொடுக்க
பிரார்த்திப்போம் !
நல்ல எண்ணத்தோடு நாம் செய்யும்
எல்லா வேண்டுதலும்
நிச்சயம் நடக்கும் !



அந்த குழந்தைகளை பார்க்க நமக்கே
கொடுமையாக இருக்கும் பொழுது
பூமித்தாய் இன்னும்
கருணை உள்ளவள்
நிச்சயம் துணை புரிவாள் !

சோமாலிய இறக்காது !
மீண்டும்
வரும் !

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...