Thursday 22 September 2016

கருப்பு இட்லி சாப்டீங்களா ?

இட்லி நம் நாட்டின் பூர்வீக உணவு. நாம் இப்படி கூற இது இந்தோனேசியா உணவு என்று கூறுவோரும் உண்டு.  ஆனால் இந்தோனேசியா என்பது புராண காலங்களில் தமிழர்கள் வாழ்ந்த இடம் என்று கூறுபவர்களும் உள்ளனர்.

சரி விடுங்க !


இந்த உலகம் ஒப்பு கொண்ட உண்மை என்னவெனில் , குழந்தைகள் கூட உண்ண கூடிய உணவு எது எனில் அது இட்லி மட்டுமே !
 எத்தனை வகையான இட்லி சாப்புடுவீங்க ?

அரிசி மாவு இட்லி

காஞ்சிபுரம் இட்லி

ரவா இட்லி

ஓட்ஸ் இட்லி

மசாலா இட்லி

பட்டன் இட்லி

ரவாவும் உளுந்தும் கலந்து செய்தா அது ரவா இட்லி

idli க்கான பட முடிவு


ஓட்ஸை ஊற வைத்து அதில கொஞ்சம் மசாலா கலந்து செய்தா ஓட்ஸ் இட்லி .

idli க்கான பட முடிவு




அதே அரிசி மாவுல குட்டி குட்டி ஊற்றி சாம்பார்ல ஊற வச்சி சாப்பிட்ட அது பட்டன் இட்லி .

idli க்கான பட முடிவு


idli க்கான பட முடிவு

பட்டன் மசாலா இட்லி

ஓட்ஸ் அல்லது அரிசி , உளுந்து மாவில் பாலக் கீரையை சுத்தம் செய்து நரம்பு எடுத்து விட்டு அரைத்து சாறு கலந்து ஊற்றி எடுத்தா அது பாலக் இட்லி .

idli க்கான பட முடிவு

பாலக் ஒட்ஸ் இட்லி


அரிசி மற்றும் உளுந்து மாவில் கடுகு ,மிளகாய் தாளித்து அல்லது கேரட் துருவல் சேர்த்து கலந்த மாவை அதை இட்லி பானை வைத்து ஊற்றி எடுக்காமல் ,இதற்கென்று உள்ள குழாய் போன்ற ஒரு பாத்திரத்தில் ஊற்றி எடுத்து அதன் பிறகு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து எடுத்தால் அது தாங்க காஞ்சிபுரம் இட்லி .
kanchipuram idli க்கான பட முடிவு



kanchipuram idli க்கான பட முடிவு

காஞ்சிபுரம் இட்லி


இதுல மல்லிகைப்பூ மாதிரி இட்லி என்பது என்ன ?

மல்லிகை பூ மாதிரி வெள்ளையா இருக்கணுமா ?

மல்லிகைப்பூ எப்போ ரொம்ப வெள்ளையா இருந்திச்சி ?

யாராவது பார்த்த சொல்லுங்க . ஏன்னா மல்லிகை பூ வெளிர் மஞ்சள் நிறமாக தான் இருக்கும் .

அப்புறம் இட்லி வெள்ளையா இருக்க கூடாதுங்க !

ஏன்னா

மல்லிகை பூ இட்லி என்பது கூட , வெள்ளை கிடையாது . தூய மல்லி அரிசி என்ற ஒரு பாரம்பரிய அரிசி இருக்கு . அந்த அரிசியில் உளுந்து கலந்து செய்த இட்லிக்கு பெயர்தான்  மல்லி இட்லி .

பெயர் மருவி போய் மல்லிகை பூ இட்லி என்றாகி நம் வெள்ளை மோகத்தில் வந்து விழுந்ததுதான் விதவிதமான இட்லி வகைகள் .

டாக்டர் சிவராமன் கூறுகிறார் .

இட்லின்னா கொஞ்சம் கருப்பா இருக்கும்.

இட்லின்னா கொஞ்சம் சிவப்பா இருக்கும்

இட்லின்னா கொஞ்சம் காபி நிறமா இருக்கும் .

அப்புடின்னு !

ஆக

இட்லி என்பது வெள்ளையாகவே இருக்காது என்று கூறுகிறார்.

அதெப்புடி கருப்பா இருக்கும் ?

ஆமாங்க ! கொஞ்சம் கறுப்பரிசி போட்டு செய்யுங்க ! இந்த கருப்பு அரிசி என்பது கருப்பு கவுனி அரிசிங்க !

1 பங்கு  அரிசிக்கு 4 : 1 என்ற விகிதத்தில் உளுந்து , ஒரு ஸ்பூன் வெந்தயம் கலந்து ஊற வைச்சி அரைத்து இட்லி ஊற்றி எடுங்க . கருப்பு இட்லி தயார் .

அதே மாதிரி மூங்கில் அரிசி பயன்படுத்துங்க !

அதே அளவில் பூங்கார் அரிசி , மாப்பிளை சாம்பா , இலுப்ப பூ சம்பா  சிகப்பு கவுனி இதெல்லாம் பயன்படுத்துங்க !

குழந்தைங்க இதெல்லாம் சாப்பிட மாட்டாங்க !

அப்புடின்னு தோணும் !

இதில உங்க விருப்ப படி கேரட் சாறு , பீட்ரூட் சாறு , பாலக் சாறு , கொத்தமல்லி சாறு இதெல்லாம் கலந்து வண்ண வண்ணமா எடுங்க ! கண்டிப்பா குழந்தைகளுக்கு பிடிக்கும்.

இது நிஜமாகவே ரொம்ப சுவையாக இருக்கும் !

செய்முறை :

மறந்துறாதீங்க ! இது போன்ற அரிசி வகைகள் ஊறுவதற்கு ரொம்ப நேரம் எடுக்கும். அதனால் முதல் நாள் மாலை ஊறவைத்து மறுநாள் காலையில் அரைங்க !  வெள்ளை உளுந்தாக இருந்தால் 1 கிலோஅரிசிக்கு கால் கிலோ உளுந்து போடுங்க ! அதையும் 40 முதல் 50 நிமிடங்கள் மட்டுமே ஊற வைக்கணும் !

கருப்பு உளுந்தாக இருந்தால் , கால் கிலோ தேவை இல்லை 150 கிராம் முதல் 200 கிராம் போதுமானது .




இது பூங்கார் அரிசி இட்லி


இது ஆரோக்கியமான இட்லி . உடலுக்கும் , மனசுக்கும் புத்துணர்ச்சி தரும் .

பூங்கார் அரிசியில் இட்லி  கர்ப்பிணி பெண்களுக்கும் , குழந்தைகளுக்கும்  அவசியம் .

மாப்பிள்ளை சம்பா இட்லி , புது மாப்பிள்ளைக்கு அவசியம் .

மல்லி அரிசி இட்லி எல்லோருக்கும் அவசியம் .

இட்லியின் நிறம் வெள்ளை இல்லங்க !
அது நம் தமிழர்களின் நிறம் !


Thursday 15 September 2016

தகப்பன் இல்லா பிள்ளை போலும் தமிழ்நாடு !






இன்று 16  - 9 - 2016 ( வெள்ளி கிழமை )  தமிழகம் முழுவதும் பந்த் !

கர்நாடகத்தில் தமிழ் பதிவெண் இட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டதற்கும் , தமிழர்கள் தாக்கப்பட்டதற்கும் எதிரிப்பு தெரிவித்து !

ஆனால் யாரை எதிர்த்து என்பதை குறித்து யாரும் விளக்கம் கொடுக்க வில்லை .

கர்நாடக அரசை எதிப்பதாயின் , கர்நாடாவில் போராட வேண்டும் .

மத்திய அரசை எதிர்ப்பதாயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்க வேண்டும் .

தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்பட்ட போது தி மு க அரசு சென்னையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தியது .

இதனால் தமிழ்மக்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர்
காப்பாற்றப்பட்டார்களா ?

இப்போதும் அப்படிதான் நடக்கிறது !

அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளன .

ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன

தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன

தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன


யாருக்கு நஷ்டம் ?

கர்நாடக அரசுக்கா ?
மத்திய அரசுக்கா ?
பெரும் பணக்கார்களுக்கா ?
அரசியல் வாதிகளுக்கா ?

சாமான்ய தமிழன் இன்று ஒருநாள் ஊதியத்தை இழக்கிறான் !

இப்போராட்டத்தை நடத்தும் கட்சிகள் பெயர் வாங்குகின்றன.

பத்திரிகைகளும் , தொலைக்காட்சிகளும் காட்சி படுத்தி காசு பார்க்கின்றன  .

அஹிம்சா வழி போராட்டம் என்ற பெயரில் காந்தி அடிகள் இது போன்ற போராட்டங்களை சுதந்திரத்திற்கு முன் நடத்தினார் . அப்படி நடத்தியதால் பிரிட்டிஷாரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது .

இப்போது நடக்கும் போராட்டத்தால் எந்த பொருளாதாரம் பாதிக்க போகிறது .

இன்று மட்டும் குறைந்த பட்சம் 15000 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறுகிறார் வணிகர் சங்க தலைவர். இந்த நஷ்டத்தை யாருக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும் ?

கர்நாடகாவுக்கு !

மத்திய அரசுக்கு !

செய்தோமா ? இல்லை . இப்போதும் அறிவிலி தனமாக , எவனோ பெயர் வாங்க நம்மை நாமே நஷ்டப்படுத்தி கொண்டிருக்கிறோம் .

போராட விரும்பினால் , பொருளாதார போராட்டம் நடத்து !

இது ஒன்றும் மன்னராட்சி அல்ல !

நம் வீரத்தை காட்ட !

இது மக்களாட்சி !

ஓங்கி அடி ! பொருளாதாரத்தில் இடி போலும் அடி !

கர்நாடகாவுக்கு மட்டும் அல்ல !

ஒட்டு மொத்த இந்தியாவுக்கே கூறு !

இந்தியா ஒரு கூட்டு குடும்ப நாடு . இங்கு ஒருவரை ஒருவர் அடித்தால் வேடிக்கை பார்க்கும் மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து பாடம் நடத்து !

கர்நாடகத்தில் இருந்து வரும் பொருளை எல்லாம் நிறுத்து !

கர்நாடகத்திற்கு செல்லும் பொருளை எல்லாம் நிறுத்து !

மணல் லாரிகளே , நம் மண்ணை சுரண்டிதானே கர்நாடகத்தை வளமை படுத்தினாய் ! நிறுத்து ! மணல் கொடுப்பதை நிறுத்து !

மின்சாரம் வழங்குவதை நிறுத்து !

போக்குவரத்து சேவைகளை நிறுத்து !

துறைமுக சேவைகளை நிறுத்து !

தேனும் , மீனும் , காயும் , பழமும் வராது என்று கூறு !

கன்னட திரைப்படங்களை நிறுத்து !

கன்னட நடிகர்களை தமிழில் நடிக்க வைப்பதை நிறுத்து !
(அவன் யார் நமக்கு கருத்து சொல்ல ?)

இப்படி எல்லாம் செய்து விட்டால் , கர்நாடகம் ஒன்றும் இடிந்து விடாது .

வேறு ஒரு மாநிலத்தில் இருந்து இவற்றை எல்லாம் பெரும் . என்று எண்ணலாம் .!

ஆனால் அப்படி செய்ய இயலாது

தமிழகம் தான் மிக அருகில் உள்ளது . மற்றும் விலை குறைவாக பொருள் வழங்கும் மாநிலம் .

மற்ற மாநிலங்களில் வாங்கினால் விலை வாசி உயரும் !

அன்று ஏற்படும் பொருளாதார தடை ! அந்த நாளை உருவாக்கு !

ஏற்கனவே கர்நாடகம் , 75 % வறட்சி பூமிதான் !

சமீப காலமாக கணினி தொழில் நிறுவனங்கள் வந்து தான் கர்நாடகம் பெயர் பெற்றது .
அதையும்  மாற்றி காட்டு !

ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறையும் ,ஆட்சி மாற வேண்டும் என்ற நோக்கில் கர்னாடக அரசியல் வாதிகள் , காவிரி பிரச்சனையை கையில் எடுப்பதும், இதற்காக தமிழர்களை வதைப்பதும் சரியாகாது !

இதை சொன்னால் கன்னட மக்கள் காதிலும் விழாது !

ஏன் ?

இன்றைய நிலைக்கு இங்கு வாழும் பூர்வ குடி தமிழர்கள் கூட ஏற்பதில்லை .
அவர்களும் சேர்ந்து அடிக்க தயாராக உள்ளனர் .

நாம் புரிந்து கொள்ள வேண்டும் !

யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழன் போராடுகிறான் , இந்திய தூதரகத்தின் முன்!



பிரிட்டன் தமிழன் போராடுகிறான் இந்திய தூதரகத்தின் முன் !

மலேசியாவில் பேசுகிறான் தமிழன் , எப்படி போராட்டம் இருக்க வேண்டுமென்று !

இவர்களுக்கெல்லாம் தெரிகிறது , எங்கு பேச வேண்டும் , எங்கு போராட வேண்டும் என்று !

தமிழகத்தில் மட்டும் ஏன் இன்னும் பயனில்லா போராட்டங்கள் நடக்கின்றன ?

இதுதான் இன்னும் புரியவில்லை .
நமக்கு தேவை பாதிப்பில்லா போராட்டங்கள் !
அவை பயனில்லாமல் தான் முடியும் !

குறிப்பு :

இப்பிரச்சனை குறித்து தமிழக அரசியல் வாதிகளின் கருத்துக்கள் :

தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு இழப்பீடு, கர்நாடக அரசே வழங்க வேண்டும்: மத்திய இணையமைச்சர் 
பொன்.ராதாகிருஷ்ணன்


முழு அடைப்பு போராட்டத்தால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நிரந்தர தீர்வு தரும் : 
அன்புமணி


காவேரி விவகாரத்தில் ரஜினி தலையிட வேண்டும் - 
தமிழிசை சௌந்தர்ராஜன்  


அணைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மறுக்கிறார் தமிழக முதல்வர் . ஏன் என்பதுதான் புரியவில்லை ?
மு.க.ஸ்டாலின்

1983 ல் எதிர் கட்சி தலைவராக இருந்த போது , இது போன்ற பிரச்சனையில் நானே நேரடியாக தலையிட்டு , தண்ணீர் வழங்க கர்நாடகாவிடம் கேட்டேன் .
கலைஞர் கருணாநிதி

நடிகையாக இருந்த காலத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்தேன் . அதில் என்னை தமிழச்சி என்று குறிப்பிட்டதால் , கன்னட காரர்கள் வந்து மிரட்டினார்கள் . அப்போதும் நான் என்னை தமிழச்சி என்றே கூறி கொண்டேன்.
ஜெயலலிதா சார்பாக விகடன்


எல்லாம் பழைய கதை .
பயனில்லா கதை .
போராடு
என்ன விதைத்தாயோ அது தான் முளைக்கும் !
விதை சொத்தையாக இருக்க கூடாது
வீரிய விதைகளை விதை !
அது
முளைக்கட்டும் !
தமிழன் பெயர் சொல்லி
மரமாகி தழைக்கட்டும் !


தகப்பன் இல்லா பிள்ளை அல்ல தமிழ்நாடு !
தரணிக்கே
தகப்பன் போல்
வழி காட்டு ம் வெள்ளை உள்ளம் கொண்ட
உயர்வோடு
போராடு !

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...