Friday 21 October 2016

சிவகாசி பட்டாசு

தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் , நம் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு மற்றும் புதிய ஆடைகள் மற்றும் இனிப்புகள்.

புதிய ஆடைகள், இனிப்புகள்  என்பவை கூட இப்போதெல்லாம் ஆடி மாதமும் , பிற பண்டிகைகளும் பங்கிட்டு கொள்கின்றன . அனால் பட்டாசுகள் அப்படி எந்த பண்டிகையாலும் பங்கிட முடியாத நிலையில் , தீபாவளியையே சார்ந்து உள்ளது. அதிலும் நம்ம சிவகாசி பட்டாசு இந்தியா முழுவதும் பிரபலம்.


sivakasi crackers க்கான பட முடிவு


கி.மு.200 களில் சீன மக்களால் கண்டறியப்பட்ட பட்டாசு , முதலில் பனை ஓலைகளில் தயாரிக்கப்பட்டு , பின்னர் காகிதத்திற்கு மாறியது . அதன் பின்னர் தான் உலகம் முழுவதும் பட்டாசுகள் பரவின .

19ம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட , பட்டாசு தொழிற்சாலையானது , 1940 களில் சிவகாசிக்கு மாற்றம் செய்யப்பட்டது.  இதற்க்கு குறிப்பிடப்படும் சில காரணங்கள் :

1. சிவகாசியின் காலநிலை . முற்றிலும் வறண்ட பூமி. அக்டோபர் , நவம்பர் , டிசம்பர் தவிர்த்து மற்ற மாதங்கள் முழுவதும் வெயில் காலந்தான்.

2. விவசாயம் பொய்த்து போனது. பருத்தி உற்பத்தியும் , சிறுதானிய உற்பத்தியும் மக்களுக்கு போதிய வருவாய் தரவில்லை.

3. போதிய வேலைவாய்ப்பின்மை காரணமாகவும் , பொருளாதார ஏற்ற தாழ்வு காரணமாகவும் , பூர்வீகத்தை அடிப்படியாக கொண்டு இங்கு அடிக்கடி நடந்த கலவரங்கள் . நாடார்களுக்கு , மறவர்களுக்கும் நடந்த சண்டையில் சிலர் மரணம் அடைந்துள்ளனர் .

4. இந்தியா வெடிபொருள் சட்டம் சிவகாசிக்கு உரிமம் வழங்கியது .

இது போன்ற காரணங்களால் தொடங்கப்பட்ட பட்டாசு தொழிசாலைகள் இன்று பல்கி பெருகி நிற்கின்றன. இந்தியா முழுவதும் பட்டாசுகள் இங்கிருந்து தான் செல்கின்றன.

உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக இங்கு தான் அதிக பட்டாசுகள் உற்பத்தி செய்ய படுகின்றன .

தற்போது 8000 உற்பத்தி மையங்கள் இங்கு உள்ளன. 500 நிறுவன உரிமையாளர்கள்  இங்கு உள்ளன.


இது மட்டும் அல்லாது , காகித உற்பத்தி இங்குதான் செய்யப்படுகிறது . இந்தியாவின் 30 % காகித தேவைகள் இங்கிருந்து சரி செய்ய படுகிறது .

டைரி உற்பத்தியும் , காலண்டர்கள் உற்பத்தியும் இங்கிருந்து தான் இந்திய முழுவதும் செல்கிறது .

தீப்பெட்டி தொழிற்சாலைகளும் , இந்தியாவிற்கு போதிய தேவைகளை தீர்கின்றன .


sivakasi crackers க்கான பட முடிவு


இவ்வாறாக , சிவகாசி மூலம் இந்தியாவிற்கு ஆண்டு வருமானம் , ரூபாய் 2000 கோடி ஆக உள்ளது .


குட்டி ஜப்பான் என்று வழங்கப்படும் , சிவகாசி , நமக்கு பட்டாசுகளையும் , இந்தியாவிற்கு வருமானத்தையும் தேடி தருகிறது.

அனால் தனக்குள் பல விபத்துக்களையும் சுமந்து நிற்கிறது .  1981 ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் படி இங்கு பணியாற்றிய குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இருப்பினும் , 1991 , மற்றும் 2004 ம் ஆண்டுகளில் குறைந்த பட்சம் 40 பேரை பலி கொடுத்திருக்கிறார்கள் இம்மக்கள் . ஏன் , ஆண்டு தோறும் இது போன்று விபத்துகள் தொடர்ந்து  இருக்கின்றன.

2 நாட்களுக்கு முன்பு கூட 19 - 10 - 2016 அன்றும் 9 பேர் உடல் கருகி இறந்துள்ளனர் .

இத்தனை கஷ்டங்களுக்கு இடையிலும் நம் அனைவர் மகிழ்ச்சியிலும் பங்கெடுக்கும் சிவகாசி பட்டாசுகளை மாற்றாக சீனா பட்டாசுகளை வலம் வருகின்றன .

 தமிழ்நாடு பட்டாசு தொழிசாலை சங்கத்தின்  மூத்த உறுப்பினர்
 K . மாரியப்பன் கூறுகையில் ,(Tamil Nadu Fireworks and Amorces Manufacturers Association (TNFAMA), Sivakasi, ) இதுவரையிலும் இந்தியா அரசாங்கம் , எந்த ஒரு நிறுவனத்திற்கும் இந்தியாவில் பட்டாசு இறக்குமதி செய்ய உரிமை வழங்கவில்லை என்று கூறி உள்ளார். 

எனில் நம் கைகளுக்கு கிடைக்கும் பட்டாசுகள் திருட்டு பட்டாசுகள் . இதை நாம் பயன்படுத்துவது , நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு நாம் செய்யும் தீங்கு .

நம் தமிழர்களுக்கு , நாமே செய்யும் கேடு !

சிவகாசி இருக்க
சீனா பட்டாசுகள் நமக்கெதற்கு ?


Ref : இந்தியா டுடே ( oct 14.2014 )

Wednesday 19 October 2016

சந்தன கடத்தல் வீரப்பன் நல்லவரா ?





வீரப்பன் (1952 - 2004)
இறந்த தினம் இன்று
'தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர்' , 'சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர்' என்று இந்திய அரசாலும், தமிழக மற்றும் அண்டை மாநில திராவிட அரசுகளாலும் அறிமுகமானார். 
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். 
...

தந்தங்களாகவும் , சந்தன மரங்களாகவும் இவர் மூலம் சுமார் 150 கோடி வணிகம் நடந்துள்ளது என்பது இவர் மீதுள்ள குற்றசாட்டு ! ஆனால் இவரோடு யாருக்கு வணிகம் இருந்தது என்பது குறித்து அரசும் இதுவரை தெரிவிக்க வில்லை !

அதே நேரம் ,

சமீப காலமாக வீரப்பன் குறித்து பல்வேறு நல்ல கருத்துக்கள் பகிர படுகின்ற்ன.

வீரப்பனால்தான் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வந்தது என்றும் ,
கர்நாடகம் அமைதி காத்தது என்றும் ,
ஏகப்பட்ட கருத்துக்கள் !

தமிழர்களுக்கு பாதுகாப்பு தர சொல்லியும் , கர்நாடகத்தில் வள்ளுவர் சிலை திறக்க சொல்லியும் போராடினார் என்றும் கூறப்படுகிறது !

புரியல !

அவர் இன்று உயிரோடு இல்லை என்பதால் தான் தமிழ் இனமே தாழ்ந்து விட்டது போலும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன !

இவர்கள் கருத்துப்படி பார்த்தால்
வீரப்பன் ஒன்றும்  சாதாரண மனிதர் அல்லவே !
அவர் நக்கீரன் கோபால் துணையோடு நிறைய வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். ஆனால் ஒரு வீடியோவிலும் தான் யாருக்காக செய்கிறோம் என்றோ , யாரிடம் வணிக தொடர்பு வைத்திருக்கிறோம் என்றோ கூற வில்லை.

ஏன் ?

அவருக்கு நன்றாக தெரியும் , அவர் பின்னால் இருப்பவர்கள் யாரும் நல்லவர்கள் இல்லை என்று ! அவரை எப்படியும் கொன்று விடுவார்கள் என்றும் தெரிந்திருக்கும்.! அப்படி இருக்க , அவர் எந்த திருடனையும் காட்டி கொடுக்காமல் சென்றது ஏன் ?செய்திருக்கலாமே ! இந்த கேள்வி தான் அவரை தவறான மனிதராக சித்தரிக்கிறது .

அவர் தனது குடும்பத்திற்காக ஏதும் செய்யவில்லை என்பதற்க்கு அவர் மனைவி தற்போது வாழும் வாழ்வே சாட்சி ! எனில் இத்தனை கோடி கொள்ளைக்கு துணை நின்ற வீரப்பன் , நேரடியாக கூறியிருந்தால் இந்த திராவிட கட்சிகளாவது ஒழிந்திருக்குமே !

பிரபாகரன் தமிழ் இனத்திற்காக நேரடியாக போராடினார் . அதில் நியாயம் உள்ளது . அது தீவிரவாதம் அல்ல , அது ஒரு சுதந்திர போராட்டம் என்று , உலகமும் ஒப்பு கொண்டுவிட்டது .

ஆனால் ,

வீரப்பன் நிலை என்ன ? அவர்,

சந்தன கடத்தல் மூலம் போராட வேண்டிய அவசியம் என்ன ? அவரை தேடி வந்த காவல் துறை தான் , அங்கிருந்த பெண்களை துன்புறுத்தியது. அங்கு நடந்த தவறுகள் அனைத்திற்கும் அவரே மூல காரணம் . இதை தெரிந்தும் ஏன் அவர் சரண் அடைய வில்லை . அதற்க்கு பதிலாக , காவல் துறையினரை கொன்று நற்பெயர் தேடியது என்ன நியாயம் ?

வீரப்பன் போராட்டம் நிகழ்த்திய வீடியோ இருந்தால் பகிருங்கள் ! குறைந்த பட்சம் அவர் போராடிய நாட்களையாவது குறிப்பிடுங்கள் !

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...