Wednesday 2 December 2015

நில வேம்பு எனும் சிரியா நங்கை








நிலவேம்பு குறித்து வாஸ்து கூறும் படம் இது. மிக கொடுமை அல்லவா இது ?


எந்த ஒரு தாவரமும் வீட்டை அடகு வைக்க சொல்லாது.

கணவனை இறந்து போக சொல்லாது .

இது அடிப்படையில் நம்மை பயமுறுத்துவதர்க்காக கூறபட்டிருக்கலாம் .

ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள் .

இது உண்மை அல்ல .

ஆமை நீரோட்டத்தை கண்டறியும் சக்தி கொண்டது . அது எந்த வழியாக போகிறதோ அந்த பாதையில் நம் முன்னோர்கள் வீடு கட்ட மாட்டார்கள்.

அப்படி கண்டுபிடித்து கட்டபட்டதால்தான் இன்றளவும் திருசெந்தூர் , ராமேஸ்வரம், ராமநாதபுரம் திருக்கோவில், தஞ்சை பெரிய கோவில், மதுரை கோவில்களெல்லாம் தாங்கி கொண்டு நிற்கின்றன.

இதனை அறிந்த ஒரு சில கூட்டம் ,நமக்கு ஆசிரியர் வேலை பார்கிறேன் என்று கூறி , மன்னர்களுக்கும் கூஜா தூக்கிய அந்த கூட்டம் சொன்னதுதான் ஆமை புகுந்த வீடு விளங்காது என்பது. அன்று முதல் ஆமை வளர்ப்பை விட்டுவிட்டோம். அதன் விளைவு நீரோட்டம் தெரியாமல் வீடுகள் கட்டி கட்டி , உதாரனமாய் இன்று மாறியுள்ளது சென்னை.

எதை எல்லாம் நமக்கு நம்பிக்கை ஆக்கி விட்டார்களோ அது இன்று மூட நம்பிக்கை வரிசையில் நிற்கிறது.

இதன் பின்னணியில் நம் கணிதமும், அறிவியல் அறிவும் மறைந்து நிற்கிறது.

இதே போல் உருவாக்கப்பட்டதுதான் வீடின் முன்னால் முள் செடி வளர்க்க கூடாது என்பது.

ஆமாங்க நம் முன்னோர்கள் எப்போதும் வீட்டின் முன்னால் கற்றாளை எனப்படும் முள்செடி வளர்த்தனர்.
அது மிகுந்த மருத்துவ குணம் கொண்டது.

அந்த கூட்டத்தில் சிலர் மருத்துவர்களாக ஆனார்கள் . அதன் விளைவு முல்செடிகள் வீட்டின் முன்னாள் இருந்து நீக்கப்பட்டது.

ஆனால் எல்லா தோல் வியாதி மருத்துவர்களும் இதையே தான் aloevera ஜெல் என்ற பெயரில் எழுதி கொடுக்கிறார்கள் . எல்லா அழகு சாதன கிரிம்களும் இதைதான் சுமந்து வருகிறது . நமக்கு கட்டளை இட்ட அந்த கூட்டத்தின் பெண்கள் மட்டும் இந்த கற்றாலையை எப்போதும் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றனர்,

அந்த வரிசையில் சேர்த்ததுதான் இந்த நிலவேம்புவை வீட்டில் வளர்க்க கூடாது என்பது. நீங்களே யோசித்து பாருங்கள் ,இதனை வளர்த்தால் மண் கெட்டுபோகும் என்றால் கூட பரவாயில்லை . கணவன் இறந்து போவான் என்பதும் மனைவி இறந்துபோவால் என்பதும்  எத்தனை பெரிய பயமுறுத்தல் . இன்னுமா நாம் நம்ப வேண்டும் ? முடியல! இன்னும் எத்தனை தவறுகள் நம்மிடத்தில் விதைக்கப்பட்டுள்ளனவோ ?


1 comment:

  1. கடந்த சில ஆண்டுகளாகவே நில வேம்பு என்பதைப் பற்றி டெங்கு சீசனின்போதும் கேள்விப் பட்டு வருகிறோம்.

    போலியோ சொட்டு மருந்து, மஞ்சள் காமாலைத் தடுப்பு ஊசி, பிளீச்சிங் பவுடர் போன்ற அரசால் புகழப்படும் நோய்த் தடுப்புப் பொருட்களைக் காட்டிலும் கூடுதலாகவே தமிழ்நாடு அரசு நில வேம்பினை சமீப காலத்தில் பிரபலப் படுத்தியுள்ளது.

    முழுச்செடி அல்லது இலைகளில் இருந்து எடுக்கப்படும் பொடியும், கஷாயமும் டெங்கு காய்ச்சலின் போது வெகு வேகமாக் கீழிறங்கும் ரத்த வட்டு அணுக்களின் எண்ணிக்கையை சரி செய்யும் தன்மையைக் கொண்டுள்ளன என்பதற்கான ஆய்வுகள் உள்ளன.

    என்றாலும், இன்றளவும் பெரும்பாலான மக்களால் இந்தத் தாவரத்தினைக் கண்டறிய முடியுமா என்பது சந்தேகமே.

    இதனை சாத்தயமாக்குவதற்காகவே இந்தக் காணொளி.

    https://youtu.be/ETuRjSQgWwU

    https://www.facebook.com/tunomedia/videos/330357430678908/

    ReplyDelete

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...