Saturday 16 March 2019

பெண்ணுரிமை

பெண்ணுரிமை

பெண்ணின் திருமண வயது 18

1955 ம் ஆண்டு பெண்ணின் திருமண வயது 18, ஆணின் திருமண வயது 21 என்று சட்டம் இயற்றப்பட்டது .
ஏன் இந்த சட்டம்?
யாருக்காக இந்த சட்டம் ?
யாரால் முன்மொழியபட்ட சட்டம் ?
இதனால் பெண்கள் பலன் பெற்றார்களா ?
சமூகத்தின் தவறுகள் முடிவுக்கு வந்து விட்டதா ?

இது போன்று பல கேள்விகளை கொண்டுள்ளது இந்த திருமண வயது உச்ச வரம்பு சட்டம் .

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் ,
பெண்களின் நலன் என்ற ஒற்றை வார்த்தையே இதற்கு பதில் தரும் .

பெண்களின் சுதந்திரம் ,
அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை என்ற கோட்பாடு தான் பெண்ணின் திருமண வயதை தீர்மானிக்க வேண்டிய காரணிகளாக அமைந்துள்ளன .
-------------------------------


கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட  பெண்கள் கல்வி கூடம் செல்லவில்லை .
பெரிதாக ஞானம் பெறவில்லை .
ஒரே வேலை தான் அவளுக்கு !
பிள்ளை பெறும் இயந்திரம் போல் அவள் இருந்திருக்கிறாள் .

அதையும் கடந்து ,
ஆணுக்கு சேவகம் செய்ய பிறந்தவள் போலும் வாழ்ந்து இருக்கிறாள் .அதே சமயம் அவள் கணவன் இறந்து விட்டால் , சிறுவயது பெண்ணாக இருந்தால் கூட அவள் விதவை கோலம் கொள்ள வேண்டும் .
அத்தருணம் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறாள் பெண் ,
வடஇந்தியாவில் தென்னிந்தியாவை விட அதிக கொடுமைகள் அரங்கேறி உள்ளன .

கணவன் இறந்தவுடன் , மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்து விட வேண்டும் என்ற வழக்கம் பெரும்பாலும் இருந்துள்ளது .

இவற்றை மாற்ற வேண்டும் என்று எண்ணம் பல நல்ல உள்ளங்களுக்கு வந்துள்ளது . அவற்றில் முதன்மையானவர் ராஜாராம் மோகன்ராய் .
இவர் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் . அந்த போராட்டத்தில் வெற்றியும் பெற்றார் .

-------------------------------

சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க ராஜாராம் மோகன்ராய் போராடியதை போலவே , பெண் கல்வி வளர்ந்தால் பெண்களின் இழிநிலை மாறி விடும் என்று போராடியவர் ஜோதிபாய் பீலே .
இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் .

இவர் 19 ம் நூற்றாண்டின் மாகாத்மா .
20 ம் நூற்றாண்டில் தான் காந்தியடிகள் மஹாத்மா என்று வழங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . ஜோதி பாய் பீலே , தன மனைவியை ஐ படிக்க வைத்தார் .பெண்களுக்கென்று கல்வி கூடம் அமைத்து , பெண் கல்வி உயர போராடினார் .அவர் அமைத்த கல்வி கூட்டமே இந்தியாவில் பெண்களுக்கான முதல் கல்வி கூடம் ஆகும் .

மேலும் ஒருசில முக்கிய நபர்களை விடுத்து பெண்ணியம் , மற்றும் அதன் கண்ணியம் பற்றி பேசுவது சரியாகாது.

அப்படி ஒரு முக்கிய நபர் தான் அன்னிபெசன்ட் அம்மையார் , மற்றும் பாரதியார் .
முதல் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்ற போது ,
இந்தியாவின் போராளிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க பட்டதாம் . அப்போது அந்த கூட்டத்திற்கு பாரதியாருக்கும்  அழைப்பு விடுக்க பட்டதாம் .
அந்த கூட்டத்திற்கு வந்த அனைவரையும் அன்னிபெசன்ட் அம்மையார்  தனித்தனியாக சந்தித்து வரவேற்பு கொடுத்தாராம் .
பாரதியை பார்த்து எங்கே உங்கள் மனைவி என்று கேள்வி கேட்க ,
அவளுக்கு என்ன தெரியும் ? அவள் எதற்கு இந்த கூட்டத்திற்கு ?என்று பதில் சொன்னாராம் .
உடனே அன்னிபெசன்ட் , உமக்கு மட்டும் என்ன தெரியும் ? என்று கேட்டாராம் .
அந்த ஒற்றை கேள்வி பாரதியை அதிர வைத்துவிட்டது . அந்த கேள்வியின் விளைவு தான் பாரதி
பேசிய பெண்ணுரிமை !

------------------------------------

மனித வாழ்கையின் மனநிறைவு :

மனித வாழ்கையின் மனநிறைவு :




வீதிகள் வெறிசோடி கிடக்கின்றன . முன்பு போல் குழந்தைகள் வீதிகளில் விளையாடுவது இல்லை . 
மிதிவண்டி ஒட்டி உரசி கொள்வது இல்லை . 
குழந்தைகளை பார்வையிட சில தாய்மார்கள் வீதிகளில் அமர்ந்து பேசிக்கொள்வதும் இல்லை . 

சிறு குழந்தைக்கு சோறு ஊட்ட நிலவை காட்ட எந்த அம்மாவும் வீதிக்கு வருவதே இல்லை .
இரவில் மீந்து போன உணவை உண்ண , எந்த நாய்கள் கூட்டமும் இல்லை . இரவில் பிட்சை கேட்பவர்கள் இல்லை .
வீதி எங்கும் ஒரே அமைதி .

மாலை ஆறு மணிக்கு விளக்கு ஏற்றி வைத்தால்தான் , மஹாலட்சுமி வருவாள் , செல்வம் பெருகும் என்று கூறி கொண்டு , 
மாலை வேளையில் , வாசல் தெளித்து சுத்தம் செய்வோர் இல்லை .

மாறாக வீட்டில் உள்ள எல்லோரும் வேலை பார்த்தால் தான் செல்வம் பெருகும் என்று உழைப்பிற்கு முக்கியத்தும் கொடுத்து , 
எல்லோருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பதால் , 
வீட்டில் விளக்கு ஏற்றவோ , வாசலில் லைட் போடவோ ஆளே இல்லை .

ஒரே உழைப்பு ! 
விளக்கு போடவே ஆள் இல்லாத வீட்டில் , வெளியில் விளையாட குழந்தைகள் எப்படி வரும் ? அம்மா எங்கே நின்று யாருடன் பேசுவாள் ?

இதையெல்லாம் எதிர்பார்த்தால் ,
அது முட்டாள்தனம் தானே !
இன்றைய சூழலில் ,
பணம் சம்பாதிப்பது கூட பேராசை இல்லை .
ஆனால் 
இரவை ரசிப்போம் வாங்க ! என்று அழைப்பு விடுக்க நினைப்பது பேராசையின் உச்ச கட்டம் .!

பேராசை பெரு நஷ்டம் ஆகும் .
யாரிடமாவது இது குறித்து பேசினால் ,
நம்மை மிக கேவலமாக பேசுவார்கள் .
அதோடு நம்மிடம் எப்போதாவது ஒருமுறை பேசுவது கூட நின்று விடும் .

சத்தம் இல்லாமல் ,
தனியாக ரசித்து விட்டு கடந்து விட வேண்டும் .
ஆனால் ,
இந்த இயற்கைக்கோ ஒரு கெட்டபழக்கம் ,
தனியாக ரசிப்பதை விட , கூட்டமாக ரசிக்கும்போது தான் இன்பம் அதிகம் கிடைக்கும் .

தனிமரம் எப்படி சுகமான காற்றை தருவதற்கு கடினப்படுமோ ?
அப்படிதான் , தனியாக அந்த காற்றின் ஆனந்தத்தை அனுபவிப்பதும் மிகவும் கடினம் .

ஆனால் என்ன செய்வது ?

எல்லோரும் சமம் என்ற கோட்பாடு ,
இயற்கையின் முன்னால் ,
என்பது எல்லோருக்கும் மறந்தே விட்டது.
பகுத்தறிவின் உச்சத்தில் நிற்பதால் , பணரீதியாக சமம் என்று எல்லோருக்கும் கற்பித்தபடுத்தப்பட்டுள்ளது .
---------------------


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...