Thursday 29 April 2021

நடப்பு நிகழ்வுகள் 30 .4 2021

 நடப்பு நிகழ்வுகள் 30 .4 2021 


* இன்று  National Honesty Day ஐக்கிய நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது .



*.இன்று தேசிய அளவில் ஆயுஷ்மான் பாரத திவாஸ் அனுசரிக்கப்படுகிறது . பிரதான மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்ற திட்டம் இதில் சிறப்பு பெறுகிறது .


* 500  பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா இணைந்துள்ளார் .


* 2021 ம ஆண்டு உலக பருவநிலை உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் " எழுமின் விழுமின் " என்ற விவேகானந்தரின் வார்த்தைகளை பேசியுள்ளார் . கொரோனவில் இருந்து விடுபடுவதற்காக கூறப்பட்ட வாக்கியம் அது !

இந்த காணொளி வழி கூட்டத்தில் 40 நாடுகள் பங்கு கொண்டுள்ளன .


* ஆந்திராவில் 1 .6 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் , ஆந்திராவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது .


* 23 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது .




*கர்ப்பிணி பெண்களுக்கு இந்த கொரோன நேரத்தில் உதவி செய்ய தேசிய மகளிர் ஆணையம் ( NCW )  9354954224 என்ற வாட்சப் எண்ணை கொடுத்துள்ளது .


* துருக்கியில் நடைபெறும் இஸ்தான்புல் டென்னில் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில், ஸோரோனா சிருஷ்டி பட்டம் வென்றுள்ளார் .




The woman's History என்ற நூலை ரோசலான்ட் மில்ஸ் என்பவர் எழுதியுள்ளார் .



How to Avoid a Climate Disaste என்ற நூலை பில் கேட்ஸ் எழுதியுள்ளார் .

நடப்பு நிகழ்வுகள் 29 ஏப்ரல் 2021

 நடப்பு நிகழ்வுகள் 29 ஏப்ரல் 2021 


* அசாம் மாநிலத்தில் நேற்று 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .


 * உத்தரகாண்ட் மாநிலத்தில் இலவச தடுப்பூசிக்காக 400 கோடியை அந்த அரசு ஒதுக்கியுள்ளது .



* UPI மூலம் பணப்பரிவர்த்தனை ,  என்ற வகையில் ஒரு பில்லியன் பரிவர்த்தனைகள் phone pe மூலம் நடைபெற்றுள்ளது . இந்தியாவில் முதல் முறையாக ஒரு பில்லியன் தொட்டது phonepe செயலி தான் .


* கிரிப்டோ கர்ரெனசி முறையை துருக்கி நாடு தடை செய்துள்ளது .



* உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்ற இடத்தை பென் ஸ்டாக் பெற்றுள்ளார் .


* புதிய தடுப்பூசி - சீனாவின் சினோபார்ம் .


* ஆக்சிஜென் தேவைக்காக உலக நாடுகளிடம் டேங்கர் மற்றும் ஆக்சிஜென் தொடர்பான வசதிகளை கேட்டு வருகிறது . இதனை ஆக்சிஜென் மைத்திரி என்ற பெயரில் நடைமுறை படுத்துகிறது .


*WILD ELEMENTS  Foundation - சுற்றுசூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதாக கிருதி காந்த் என்ற பெண் 

விஞானிக்கு ,WILD Innovator Award'.  என்ற விருது வழங்கியுள்ளது . இதுவே அமைப்பிடம் இருந்து இந்தியா வில் , ஆசியாவில் பெறும் முதல் விருது .



* பைத்தான் 5 எனும் ஏவுகணை வெற்றிகரமான சோதனைக்கு பிறகு , 5 ம் தலைமுறை தேஜஸ் விமானத்தில் இணைக்கப்பட்டுள்ளது .


Wednesday 28 April 2021

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 28 2021

 நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 28 2021 


2030 க்குள் 50 மில்லியன் உயிர்களை காப்பாற்ற உலகளாவிய நோய் தடுப்பு மூலத்தை அறிவிக்க போவதாக WHO அறிவித்துள்ளது .


இங்கிலாந்தில் உலகின் மிக சக்தி வாய்ந்த காலநிலை மாற்றத்தை அறிவிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் தயாராகி வருகிறது . இது மைக்ரோ சாஃப்ட் நிறுவனமும் , UK வானிலை அமைப்பும் இணைந்து தயாரித்து வருகினறன .


வில்வித்தை உலகக் கோப்பை போட்டி அமெரிக்காவில் குவாத்தமாலா நகரத்தில் நடக்கிறது .  3 தங்க பதக்கங்களை இந்திய அணி பெற்று தந்துள்ளனர் தீபிகா குமாரி , அங்கிதா பகத், கோமாளிக பாரி ஆகிய மூவரும் ! இதில் மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வெல்கிறார் தீபிகா குமாரி .

கலப்பு இரட்டையர் பிரிவில் அதானு தாஸ் மற்றும் அங்கீத பகத் இருவரும் இணைந்து வெண்கல பதக்கம் வென்றுள்ளனர் .

இந்த வெற்றியின் மூலம் அதானு தாஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட தேர்வாகி உள்ளார் .

அதானு தாஸ் மற்றும் தீபிகா குமாரி இருவரும் தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது .


ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் வெளியுறவு தணிக்கையாளராக திரு .கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார் .


சென்னையில் காரோண சிகிக்சையை கண்காணிக்க திரு தரேஸ் அகமது IAS அவர்கள் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் . முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளை இவர் கண்காணிப்பார் . மேலும் கொரோன சிகிச்சைக்காக ஒப்பந்த அடிப்படியில் 150 மருத்துவர்களும் 1560 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் .


இந்திய மற்றும் பிரெஞ்சு கடற்படை இரு தரப்பு பயிற்சியாக வருணா 21 பயிற்சி 19 வது பயிற்சியாக அரபி கடலில் ஏப்ரல் 25 முதல் 27 வரை நடைபெற்று முடிந்தது .


2022 ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பேர்கிங்கம் நகரில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் T 20 நடைபெற உள்ளது . இதில் இந்திய அணியும் பங்கு பெற உள்ளது . இந்த காமென்வெல்த் போட்டிகளில் மொத்தம் 72 நாடுகளை சேர்ந்த 4500 பேர் பங்கு பெற உள்ளனர் . ஜூலை 28 - ஆகஸ்ட் 8 2022 ல் நடைபெற உள்ளது.



உலக ஆற்றல் மாற்ற பட்டியலை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 115 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 87 வது இடம் பிடித்துள்ளது. முதல் 5 இடங்கள் பின்வருமாறு : ஸ்வீடன், நார்வே, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா . கடைசி இடம் ஜிம்பாபவே !


UNICEF நல்லெண்ண தூதர் திரு .டேவிட் பெக்காம் உலகளாவிய தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்து செல்ல விழிப்புணர்ச்சி செய்கிறார் .


இங்கிலாந்தில் நடைபெறும் லீக் கால்பந்து போட்டிகளில் மான்சேஸ்டெர் அணி வெற்றி பெற்றுள்ளது .



Living Mountain என்ற நூலை ஞான பீட விருது எழுத்தாளர் திரு .அமிதவ் கோஷ் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார் . இது நடப்பு கால உலகளாவிய பரவல் தொடர்பாக எழுதப்பட்டது .



Whereabouts என்ற நூலை ஜும்பா லாஹரி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் . இது ஏற்கெனவே இவரே இத்தாலி மொழியில் எழுதிய நாவல் ஆகும் .



Tuesday 27 April 2021

மண்ணுக்கான கல்வி

 ஒரு நாட்டின் கல்வி என்பதே அந்த மண்ணுக்கான கல்வியாக இருக்க வேண்டும் . அப்போது தான் அங்கு வளர்ச்சி என்பது சாத்தியம் ! அதென்ன மண்ணுக்கான கல்வி ? 

கல்விக்கும் வளர்ச்சிக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்  என்றால் , 

நீண்ட , தொலைநோக்கு தொடர்பு உண்டு .

ஒரு கல்வி என்பது அங்கு ஓடும் ஆறுகள் , ஏரிகள் , குளங்கள் , மண் வளம் , வானியல் , மக்களுக்கான உணவு , அங்கு உள்ள காலநிலைக்கு ஏற்ற இருப்பிடம் , சூழல் சார்ந்த குறைபாடுகள் , அதை கண்டறியும் அறிவியல், அதற்கான மருத்துவம் என்று இருக்கும் போது தான் உற்பத்தி எனப்படுவது மக்களுக்கானதாக இருக்கும் .

அப்படி உள்நாட்டு மக்களுக்கு தேவையானதை மட்டும் உற்பத்தி செய்யும் போது தேவையற்ற ஏற்றுமதிக்காக மண்ணின் வளங்கள் முழுமையாக சுரண்டப்படாது . 

அது தற்சார்பியல் பொருளாதாரம் ஆகும் .  இந்த தற்சார்பியலில் வாழ்ந்த போது தான் டாலருக்கு இணையாக இந்திய மதிப்பும் இருந்தது ! 


புதிய கல்வி கொள்கை , பழைய கல்வி கொள்கை என்பதை விட அடிப்படை கல்வி கொள்கையே மாற வேண்டாமா ?


அதை விடுத்து,


நம் கல்வியானது மக்களின் வாழ்வியலுக்கான கல்வியாகவே இல்லை . இது பிறநாடுகள் சார்ந்த கல்வியாக உள்ளது . தொடர்பே இல்லாமல் தாமிரவருணியை பற்றியம், வைகையை பற்றியும் அறிந்து கொள்ளும் முன்னமே நைல் நதி பற்றியும் , அமேசான் பற்றியும் தெரிந்து கொள்வதால் யாருக்கு என்ன பயன் ?

இங்குள்ள காலநிலையை எந்த கருவியும் இன்றி கூறிய மக்கள் படிப்பறிவில்லாதவர்கள் .

கருவி வைத்து படித்து சொல்பவன் படித்தவன் என்பதே மாயை அல்லவா ?


உள்ளூரில்  உள்ள மரங்களை பற்றிய அறிவே வழங்கப்படாத போது , அது வெட்டப்படும் போது வேடிக்கை தானே பார்க்க தோன்றும் ! உள்ளூர் விலங்குகளை பற்றிய அறிவு என்பது என்ன ?

உடல்கூறா ? எல்லோரும் என்ன விலங்குகளுக்கு வைத்தியமா செய்ய போகிறார்கள் ! அதன் பயன்பாடுகள் என்ன ? அது இங்குள்ள மனிதர்களுக்கு இவ்வைகையில் எல்லாம் உதவியது என்பது தானே முக்கியம் !

செம்பருத்திக்கு என்று மருத்துவ குணம் உள்ளது . இன்றும் கேரள பகுதிகளில் சுற்றுச்சுவர் என்பதை வெறும் செம்பருத்தி செடிகளை வைத்தே அமைத்து இருக்கிறார்கள் ! ஏனெனில் அதில் இருந்து வரும் மணம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்கிறது .இந்த வாழ்வியல் அறிவு தானே முக்கியம் . அதன் ஆங்கில பெயர் மட்டும் தெரிந்து கொள்வதால் யாருக்கு என்ன பயன் ?


மாற்றம் கல்வியில் நிகழ்ந்தால் தான் மண்ணின் அறிவியல் !


வெறும் 35 மதிப்பெண்ணுக்காக தேர்வு எழுதுவதும் , ஒரு ஆண்டின் இலக்கு என்பது அந்த ஆண்டின் தேர்ச்சி தான் என்பதும் , அறிவு வளர்ச்சியா ? இதை  உருவாக்கத்தான் இவ்வளவு கல்வி கூடங்களா ?


நடப்பு நிகழ்வுகள் 27.4.2021

 நடப்பு நிகழ்வுகள் 27.4.2021




 *                    இன்று  கடல் பாலூட்டிகள் மீட்பு நாள் 27.4.2021.





* இந்தியாவிற்கு கொரோன உதவியாக 135 கோடியை அளிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.



* கிராம மக்கள் வாங்கும் சொத்துக்களுக்கு மின்னணு முறையில் அட்டை வழங்கும் திட்டத்தை இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்தார் . E - Property Card .

SVAMITVA Scheme ( Survey of Villages Abadi and Mapping with Improvised Technology In Village Areas ) ஏப்ரல்  24 பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இந்த பதிவு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இந்திய அரசு .


* ஜெகஜீவன் ராம் அபினவ் கிசான் புரஸ்கார் விருதை தெலுங்கானாவை சேர்ந்த மவுரம் மல்லிகார்ஜுன ரெட்டி பெற்றுள்ளார் . தெலுங்கானாவில் இருந்து விருது பெறும் முதல் விவசாயி  இவர் .  மென்பொருள் துறையில் பணியாற்றி கொண்டிருந்த இவர் அதை விட்டுவிட்டு இயற்கை விவசாயம் செய்து இந்த விருதை வென்றுள்ளார் .


*தேசிய காலநிலை பாதிப்பு அறிக்கையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் மாநிலம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது ஜார்கண்ட் .


* நாட்டின் 2 வது பெரிய கொரோன சிகிச்சை மையம் மத்தியபிரதேசத்தில்  இந்தூரில் அமைக்கப்படுகிறது . 6200 படுக்கை வசதிகளுடன் கட்டப்படுகிறது .45 ஏக்கர் பரப்பளவு .




* இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஸ்வாதி தியாகராஜன் துணை தயாரிப்பாளராக இருந்து தயாரிக்கப்பட்ட My octopus teacher என்ற ஆவண படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.


* ஆஸ்கார் விருதுகளில்  70 பெண்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 17 பெண்கள் ஆஸ்கார் விருது பெற்றுள்ளது இதுவே முதன் முறை !


* கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக் நகரில் கஞ்சார்  எனப்படும் 8 வது இந்தோ கிர்கிஷ் சிறப்பு பயிற்சி இந்தியாவிற்கும் கிர்கிஸ்தான் இடையே நடக்கிறது .ஏப்ரல் 17 முதல் இரெண்டு வாரத்திற்கு நடக்கிறது .


* இந்தியாவின் , தமிழ்நாட்டை சேர்ந்த அர்ஜுன் கல்யாண் 68 வது கிராண்ட் மாஸ்டராக  தேர்வாகியுள்ளார் . செர்பியா வில் நடைபெற்ற “Rujna Zora-3 2021” tournament வெற்றியின் மூலம் தேர்வாகியுள்ளார் .



* சீனா தனது முதல் செவ்வாய் ரோவருக்கு ஜூராங் என்று பெயர் இட்டுள்ளது .இது நெருப்பு கடவுளின் பெயர் ஆகும் . தற்போது சீனா ஆய்வு Tianwen-1 உள்ளது . பெப்ருவரி 24 ல் செவ்வாயின் முதல் சுற்று பாதையில் நுழைந்துள்ளது . இது மே  மாதத்தில் செவ்வாயில் நுழையும் .




Monday 26 April 2021

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 26 , 2021 - Current Affairs in Tamil

 நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 26 , 2021

சர்வதேச செர்நோபில் பேரிடர் நினைவு நாள் 





***ஏப்ரல் 26 , 1986 ம் ஆண்டு இன்றைய உக்ரைன் பகுதியில் உள்ள செர்நோபில் என்ற இடத்தில இருந்த அணுஉலை வெடித்தது . இன்று வரை அங்கு கதிர்வீச்சு உள்ளதாக கூறப்படுகிறது . அந்த நிகழ்வு மற்றும் அணுஉலை தொடர்பான விழிப்புணர்வு கொடுப்பதற்காக 2016 ம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது .


***சென்னை IIT  ஸ்டார்ட் அப் நிறுவனம் Guvi 10 லட்சம் பங்கேற்பாளர்களை கொண்ட மிகப் பெரிய ஆன்லைன் பயிற்சி கொடுத்து கின்னஸ் சாதனை செய்துள்ளது.


ஸ்டெர்லைட் ஆலையை , ஆக்சிஜென் உற்பத்திக்காக மட்டும் அடுத்த 4 மாதங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


***மே 1 முதல் , 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோன தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது . இதற்கு கோவின் மற்றும் ஆரோக்கிய சேது செயலியில் முன் பதிவு செய்வது அவசியம் .

***கடந்த புதன் அன்று ,( 21 - 4- 2021 ) இந்தோனேசியாவை சேர்ந்த கடற்படை நீர்மூழ்கி கப்பல் 53 பேருடன் பாலி கடலில்  பயிற்சியில் இருந்த போது தனது அதிகபட்ச எல்லையான 200 மீட்டரை தாண்டி சென்று மூழ்கி போனது . அது நேற்று 3 உடைந்த பாகங்களாக கிடைத்துள்ளதாக இந்தோனேஷியா அரசு தெரிவித்துள்ளது . அது 838 மீட்டர் ஆழத்திற்கு சென்றுள்ளதால் அதில் இருந்தவர்களும் உயிர் இழந்தனர் என்று அறிவித்துள்ளது .


***பத்திரிக்கை சுதந்திரம் பற்றி ஆய்வு பட்டியலை  Reporters Without Borders என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது . இதில் 180 நாடுகளின் பெயர் இடம் பெற்றுள்ளது . முதல் இடத்தில நோர்வே வந்துள்ளது . முதல் நான்கு இடங்களை ஸ்கேண்டிநேவியன் நாடுகள் எனப்படும் நார்வே, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் ஸ்கேண்டிநேவியன் பெனின்சுலா ஆகியன இடம் பெற்றுள்ளன . 

இதில் இந்தியா 142 வது இடம் பிடித்துள்ளது . கடைசி இடத்தை எரித்திரையா பிடித்துள்ளது.


***தன்னை வனங்களின் சகோதரன் என்று கூறி கொள்ளும் கோத்தகிரியை சேர்ந்த ராகுல் என்ற 13 வயது சிறுவன் , குழந்தை உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முதல் காணொளி கூட்டத்தில் பங்கெடுத்துள்ளான் . இந்தியாவில் இருந்து பேசிய ஒரே நபர் இந்த சிறுவன் மட்டுமே !




***மத்திய அரசின் , உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை பெயரில் சமூக வலைத்தளங்களில் பரவிய கொரோன தொடர்பான 100 தவறான  காணொளி , கட்டுரைகளை சுட்டுரை நிறுவனம் நீக்கியுள்ளது .மேலும் 500 கட்டுரைகளை நீக்கயுள்ளது .சுட்டுரை என்பது ட்விட்டர் .


***ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்து இல்லை . அதை பரிந்துரை செய்ய கூடாது என்று பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர். செல்வ விநாயகர் தெரிவித்துள்ளார் .

***ஈராக் தலைநகர் பாக்தாத்தில் - கொரோன மருத்துவமனையில் ஆக்சிஜென் சிலிண்டர் வெடித்து நேற்று இரவு 82 பேர் உயிர் இழந்துள்ளனர் .




***93 வது ஆஸ்கார் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்து வருகிறது . இதில் சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் இயக்கிய நோர்மண்டே திரைப்படம் 3 விருதுகளை பெற்றுள்ளது .

***இன்று : 26 . 4. 2021 

கணிதமேதை ராமானுஜர் இறந்த நாள் 

நில நடுக்க அளவுகோளான  ரிக்டர் அளவினை கண்டறிந்த சார்லஸ் ரிக்டர் பிறந்த நாள் . 


நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 24 - 2021

 நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 24 - 2021




அமைதிக்கான பன்முகத்தன்மை மற்றும் இராஜதந்திரத்தின் சர்வதேச நாள்

2018 ல் தொடங்கப்பட்டது . முதல் முறையாக ஏப்ரல் 24, 2019 ல் கொண்டாடப்பட்டது .



உலக கால்நடை மருத்துவர்கள் தினம் .

Theme : 

'The Veterinarian Response to the Covid-19 Crisis'.


மார்ச் மாதத்தில் பல்வேறு காரணங்களால் நாட்டின் நுகர்வோர் விலை குறியீட்டின் பணவீக்கம் தொடர் உயர்வில் 5.52 சதவீதத்தை அடைந்துள்ளது. இது ஜனவரி மாதம் 4.06 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.




தமிழக மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஆக்சிஜன் தேவைப்படுவோர் உடனடியாக 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.




அறநிலைய துறை ஆணையராக கோவை மாவட்ட முன்னாள் கலெக்டர் திரு. ராஜாமணி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் .


நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 25 - 2021 For Govt exams

 நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 25 - 2021



IFFCO - THE INDIAN FARMERS FERTILISER COOPERATIVE LTD. நான்கு plant அமைத்து அக்சிஜேன் தயாரிக்க திட்டமிட்டு, அதன்படி, ஒடிசா விலும், குஜராத்திலும் தொடங்கிய பிறகு, தற்போது உத்தர பிரதேஷில் இரண்டு plant அமைத்து கொண்டு இருக்கிறது. May 30 முதல் அனைவருக்கும் இலவச அக்சிஜேன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


வரும் காலங்களில் பசுமை குடில் வாயுக்கள் வெளியேறுவதை 80 % குறைக்க போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது .



MANAS - Mental Health and Normalcy Augmentation System 

என்ற செயலியை அரசு சார்பாக அரசின் அறிவியல் துறை முதல்வர் திரு .கே.விஜய் ராகவன் வெளியிட்டுள்ளார் .





இன்று உலக மலேரியா தினம் . உலக சுகாதார அமைப்பு 2007 ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஏப்ரல் 25 ல் 

கடைபிடிக்கிறது .


இன்று உலக பென்குவின் தினம் .




இன்று உலக பிரதிநிதிகள் தினம். ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்து இடங்களிலும் பிரதிநிதிகள் தான் கலந்து கொள்கிறார்கள் .


நாடு முழுவதும் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.


லிக்விட் எரிபொருளுக்கு பதிலாக, கேஸ் மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த சவூதி அரேபிய திட்டமிடுவதாக அந்த நாட்டு நிதியமைச்சர் கூறியுள்ளார்.


ஜெகன்னா வித்யா தீவென்ன திட்டம் என்ற திட்டத்தை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி உள்ளார் . இதன் படி , நிதி நெருக்கடி காரணமாக , கல்வி கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் .14 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள் .


உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் பனிப்பாறை வெடிப்பு நிகழ்ந்துள்ளது . இது நிதி பள்ளத்தாக்கில் நிகழ்ந்துள்ளது .



Wednesday 7 April 2021

உலக நீர் தினம்

 உலக நீர் தினம் இன்று!

சந்தையில் 150 வகையான பிரபல நீர் பாட்டில்கள் கிடைகின்றன. இது அல்லாது ஒருங்கினைந்த நிறுவனம் என்ற வகையில் 3000 பாட்டில் நீர் நிறுவனங்களும், பதிவு செய்யப் படாமலேயே 12000 நிறுவனங்களும் இயங்கி வருகின்றன

_--------------------------------------


இன்றைய தேதிக்கு, நீரின்றி அமையாது இவ்வுலகு என்று கூறக் கூடாது.

பாட்டில் நீரின்றி அமையாது இவ்வுலகு என்று தான் கூற வேண்டும்.


சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலி நிறுவனம் bisleri யை, felice bisleri என்பவர் தொடங்கினார்.


இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தொடங்கப்பட்ட தொழில்களில் மிக முக்கிய நிறுவனம் parle G எனும் நிறுவனம்.

இன்றும் உலகின் பிஸ்கட் விற்பனை யில் முதலிடம் பெற்றுள்ள நிறுவனம் parle G.


இன்னிறுவனம் 1965 ல் bisleri நிறுவனத்தை வாங்கியது.

1969முதல் இந்தியாவில் தனது bottle water விற்பனையை தொடங்கி சிறப்பாக செய்து வருகிறது Parle G நிறுவனம்.


இன்னிறுவனத்தை தொடர்ந்து coca cola வின் kinley water

Pepsico வின் Aquafina water

Himalayan water,

Kingfisher என்று பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பாட்டில் நீர் விற்பனையை இன்று வரை அமோகமாக செய்து வருகின்றன.


Parle G க்கு மட்டும் இந்தியா முழுவதும் 140 இடங்களில் water plants உள்ளது.

மொத்த மாக எல்லா நிறுவனங்களும் சேர்த்து இந்தியாவில் கிட்டத்தட்ட 1000 -திற்கும் மேற்பட்ட water plants அமைத்துள்ளன.


சந்தையில் 150 வகையான பிரபல நீர் பாட்டில்கள் கிடைகின்றன. இது அல்லாது ஒருங்கினைந்த நிறுவனம் என்ற வகையில் 3000 பாட்டில் நீர் நிறுவனங்களும், பதிவு செய்யப் படாமலேயே 12000 நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.


1990-91 ல் தான் முதல் முதலாக 20லிட்டர் தண்ணீர் can விற்பனைக்கு கொண்டு வந்தது bisleri நிறுவனம்.

இந்த 20 லிட்டர் can தான், தண்ணீர் can வரலாற்றை வேகமாக வளர்ச்சி பெற செய்தது.


அதே போல வட்டார மொழிகளில் விளம்பரம் என்ற யுக்தியை பயன்படுத்தி முதல் முதலாக 14 மொழிகளில் label ஒட்டியதும் bisleri நிறுவனம் தான்!


இப்போ குடிக்கிற தண்ணீர் முற்றிலும் விற்பனைக்கு வந்து விட்டது. அடுத்து விவசாயம், borewell கொண்டு வரப்பட்டது. பிறகு, பாசனம் என்பது சொட்டு நீர் என்ற வரையறையின் கீழ் வருகிறது.


மூன்றாவது, பயன்பாட்டு நீர்!

1954ல் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் தான் Degremont நிறுவனம்.

Paris நகரில் 1939 ஆம் ஆண்டு Suez' என்ற நீர் நிறுவனம் தொடங்கப்பட்டது.

சம காலத்தில் தமிழகத்திலும் வீட்டுக்கு வீடு குழாய் நீர் அமைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த Suez நிறுவனம் ஏற்கெனவே 2012 முதல் டெல்லி, பெங்களூரு போன்ற ஊர்களில் தன் பணியை தொடங்கி விட்டது.

இந்நிலையில் 2018 ல் கோவை நகரை நாங்கள் தான் காப்போம் என்று கூறி 26 ஆண்டு கால ஒப்பந்தம் ஒன்றை தமிழக அரசுடன் செய்துள்ளது. அதுவும் 400மில்லியன் டாலர் செலவில்!


பாக்டீரியா என்ற ஒருவன் தான்,

பாட்டில் நீர் என்ற ஒருவனை வாழ வைக்கிறது.


எனவே, இனி வருங்காலங்களில் 

Bottle நீரும், நிறுவனங்களும் இன்றி வாழாது இவ்வுலகு!


நன்றி.

 தகவல்கள் அனைத்தும், விக்கிபீடியா விற்கு சொந்தம்!


22.3.2021

வானிலை மாற்றம்

 வானிலை மாற்றம் :


மழைக்காடுகள் இல்லை யெனில்  8 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடும் கூட வளி மண்டலத்தில் நின்று வெப்பதை கொட்டி தீர்த்து விடும்.

=====================


ஒவ்வொரு ஆண்டும் 32பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறதாம்.


இதில் 15பில்லியன் டன்கள் வளி மண்டலத்தில் தங்கி விடுகிறது.

மீதி 17 பில்லியன் டன்களில் சரி  பாதியை கடல் சுமக்கிறது.

மீதம் 8 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு எங்கே செல்கிறது என்று ஆய்வு நடத்தப்பட்டதாம்.


அப்போது தான் தெரிந்தது,

மழைக்காடுகள் தான் இந்த வேலையை செய்கின்றன என்பது!


இந்த மழைக்காடுகள் இல்லியெனில் அந்த 8 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆசைடு கூட வளி மண்டலத்தில் நின்று வெப்பதை கொட்டி தீர்த்து விடும்.


பெட்ரோல் போன்ற சுரங்கங்கள்  வெளியிடும் வெப்பத்தில் ஐந்தில் ஒரு பங்கு காடுகள் சுமந்து கொள்கின்றன.


இந்தியாவிலேயே அதிக அளவில் பெட்ரோல் உற்பத்தி நடைபெறும் இடம் அசாம். ஆனால் அங்கு வறட்சி இல்லை. ஏனெனில் அங்கு மழைக்காடுகள் உள்ளன.


அதை விடவும் குறைந்த அளவில் பெட்ரோல் கிணறுகள் உள்ள ராஜஸ்தான் தண்ணீர் தேடி அலைகிறது.

தண்ணீர் தேட வேண்டும் என்ற ஓரே நோக்கத்திற்காக அங்கு பள்ளிக்கு படிக்க செல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு!


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், தமிழ்நாட்டில் வறட்சி என்பதை எதிர்நோக்கி எப்போதும் எச்சரிக்கை கொடுக்கும் அரசு தான் 341 ஹைட்ரோகார்பன் கிணறு வெட்டவும் அனுமதி கொடுத்துள்ளது.


எனில் அதில் இருந்து வெளியேற போகும் கார்பன் டை ஆக்சடை சுமக்க வனங்கள் பெருக வேண்டும்!


மரம் இல்லாமலே மழை வரும்!

அதுவும் தேவை இல்லை. அரசியல் மூலம் காவேரி வரும்!

என்று எண்ணி விட்டால் கர்நாடகா குளிராக இருக்கும். வறட்சி இன்றி இருக்கும்!

ஆனால் தமிழ்நாட்டில் வானிலை மிகவும் பாதிக்கப் படும்.


இதை ஏற்கெனவே நம்மாழ்வார் கூறியுள்ளார்.

மலை காடுகள் உள்ளவரை பருவ மழை வரும்.

அது போன பிறகு இங்கு புயல் மழை மட்டும் தான் வரும் என்று!


வானிலை மாற்றம் என்பது வனங்களால் மட்டுமே நிகழ்த்த இயலும்.


உலக வானிலை தினம்!


நன்றி

தகவல்கள், படங்கள் vikaspedia, விக்கிபீடியா, indian express இவற்றிற்கு சொந்தம்!


உலக வானிலை தினம் மார்ச் 22, 2021




தஞ்சாவூர் காடுகள்

 தமிழகத்தில் காடுகளின் அளவு மிக மிக அளவில் உள்ள மாவட்டம் தஞ்சாவூர்.

பரப்பளவில் 1% அளவிற்கு கூட காடுகள் இல்லை.

பிள்ளையார்பட்டி பகுதியில் உள்ள காடுகள் மட்டுமே உள்ளது.

இதற்கு சில காரணங்கள் உள்ளன.

1. மராத்திய ஆங்கிலேயர் ஆட்சியில் விதிக்கப்பட்ட வரியினை ஈடுசெய்ய விவசாய நிலங்களை பெருக்கி இருக்கிறார்கள்.

2. உற்பத்தி பெருக பெருக, பல பேருக்கு உணவளிக்கிறோம் என்ற எண்ணம், விவசாயத்தை பெருக்க வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கி உள்ளது.

3.பிற மாவட்டங்களில் இருந்து வந்து குடியேறிய மக்களுக்காக உருவான ரியல் எஸ்டேட்.

தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில்  வளர்ச்சியும் காடுகளின் அளவை குறைக்க முக்கிய காரணங்களில் ஒன்றாகும் :

1959 ஆம் முதல் முறையாக அருளானந்த நகர் உருவான போது அதன் விலை ஒரு சதுர அடி 1.50அனாவாம்.

இன்று ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெருகி விட்டதால்,

பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதால்,விலை 350முதல் 2500வரை வளர்ச்சி அடைந்துள்ளது.





வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...