Thursday 21 January 2016

தமிழ் மதம்

தமிழ் நாட்டில் வாழும் மக்கள் தான் தமிழர்கள் !
இவர்கள் உலகின் பல பகுதிகளிலும் வாழ்கிறார்கள் !
ஆனால் இவர்களுக்கு தான் தமிழன் என்பது தெரியாது !
அப்படிதான் பள்ளிகளில் பாடம் நடத்துகிறார்கள் .

நாமெல்லாம் திராவிடர்கள் என்று சொல்லி தருகிறார்கள் 
ஆனால் திராவிட மொழிகள் என்று கூறப்படும் வேறு எவரும் தன்னை திராவிடன் என்று கூறி கொள்வதில்லை .

இன்னும் சொல்லபோனால் ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ , கேரளாவிலோ இப்படி ஒரு வார்த்தையை கூறி விட்டால் போதும் உடனே அவர்கள் கூறும் மறுபதில் இதுதான் .

" இந்த தமிழர்களுக்கு வேறு வேலையே இல்லை . தமிழ் என்றாலே பிரச்சனைதான் '' 

ஆக தமிழன் திராவிடன் அல்ல .
திராவிடன் எனப்படுபவன் தமிழையும் , ஆரியத்தையும் கலந்து உருவான ஒரு இனம் .

இன்று நேற்று அல்ல . கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிருஷ்ணனின் குரு என்று கூறப்படும் அங்கிரா காலத்தில் இருந்து உருவானதுதான் இந்த கலப்பு  . இதை தடுக்கத்தான் சில பல வேதங்கள் உருவாகின என்ற கருத்தும் உள்ளது . எனில் யார் அந்த கலப்பு இனத்தவர்கள் .

கன்னடம் :

இவர்கள் திராவிடர்கள் .

இம்மொழி தான் தமிழில் இருந்து பிரிந்த பழைய மொழி . 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது .

கன்னடத்திலும் தமிழ் வார்த்தைகள் பல உள்ளன.
இன்னும் ஒரு படி மேலே போ ய் தமிழின் மரபு வார்த்தைகள் இன்றும் பயன்படுத்தபடுகிறன. ஆனால் சமஸ்கிருதம் கலந்து சில இடங்களில் தற்சார்பை இழக்கின்றது .

தெலுங்கு :

இவர்கள் திராவிடர்கள் . தமிழின் நிறைய வார்த்தைகள் இன்னும் தெலுங்கில் உள்ளது . ஆனால் லக்ஷ்மி நாராயண வழிபாடு என்பன போன்ற செய்முறைகள் ஆரியத்தை ஒத்தவை .

வடக்கில் தமிழ் கலந்து பேசப்பட்ட ஆரியம் வடுகதமிழ் ஆகி பின்னர் தெளிவடுகு என்று மாறி இன்று தெலுங்கு  என்றானது .
இம்மொழி உருவாகி 1600 ஆண்டுகள் ஆகின்றன . அதற்க்கு முன்பு இதுவும் தமிழே !

ஆனால் தெலுங்கு மொழி இலக்கணம்  கூறுகிறது அங்கு மூன்று லிங்கங்கள் இருக்கின்றன . இதை திரிலிங்க என்று சமஸ்க்ருதத்தில் சொல்ல முற்ப்பட்டு தெலுங்கு என்று மாறியது என்று .

மலையாளம் :
இம்மொழி உருவாகி 1000 ஆண்டுகள்தான் ஆகிகின்றன .
இது பிராமண தமிழ் . அவவையும் , இளங்கோவடிகளும் பிறந்த காலத்தில் இது தமிழின் மேன்மை பொருந்திய நாடு . ஏன் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் கூட இங்கு தமிழ் தான் இருந்திருக்கிறது . கேரளாவின் வீதிகளின் பெயர்கள் இதை சொல்கின்றன . கி.பி.1000 பிறகு அங்கு பிராமணர்களின் ஆதிக்கம் அதிகரித்தது . அதில் இருந்து விடுபட பலர் மதம் மாறினார் . அதன் விளைவு மலையாளம் என்ற தனி மொழி ஆரிய பழக்கவழக்கங்களோடு நம்மோடு பேசுகிறது .

ஆக இவைதான் திராவிடம் .

தமிழ் திராவிடம் அல்ல .

தமிழனும் இந்து அல்ல .

ஆரியர்களும் , திராவிடர்களும் சேர்ந்ததுதான் இந்து மதம் .

இந்த திராவிடர்கள் எல்லாம் ஆரிய விழாக்களை கொண்டாட , தமிழனோ இயற்கையை வழிபட்டான் .

இதனால் இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் , இஸ்லாமியர்கள் தவிர அனைவரும் இந்துக்கள் என்று 1830 ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அறிவித்தது .


ஆனால் பௌத்தர்கள் இதை ஏற்கவில்லை . சமணர்கள் ஏற்கவில்லை .
ஆனால் தமிழன் மட்டும் தன்னையும் இந்து என்று ஒப்புகொண்டான் .
இப்படி கூறுவதை விட அவனுக்கே தெரியாமல் , அவன் பெயரோடு அது இணைக்க பட்டது .

அதனால்தான் இன்று வரை அவனுக்கு இம்மதத்தின் எந்த அடிபடையும் புரியவில்லை . எதற்கும் விளக்கம் தெரியவில்லை . 

தன் அடையாளங்களை தொலைத்தவன் யாரிடமாவது , பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருப்பான். 

அறிவுக்காக , பணத்திற்காக என்று . 

இதன் காரணமாகத்தான் இன்று ஜல்லிக்கட்டு கோவில் சார்ந்த விஷயம் இல்லை என்று கூறும்பொழுது யாரும் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை .

நம்மை நாம் தொலைத்ததால் தான் , ஆரிய பூஜைகள் எப்படி செய்வது என்று அன்றாடம் யாரோ ஒரு சாமியாரிடம் கேட்டு கொண்டு இருக்கிறோம் .

ஊரெல்லாம் சில்லறை தட்டுபாடு .மீதி காசுக்குபதில் எல்லாரும் சக்லட்  கொடுக்கிறான் . என்னவென்று பார்த்தல் நம்ம வீர தமிழச்சிங்கலெல்லாம் மகாலட்சுமி பூஜை செய்வதும் , வரலக்ஷ்மி நோன்பு இருக்கவும் கற்றுகொண்டார்களாம் . மகாலட்சுமி படத்தை வைத்து அல்லது சிலையை வைத்து எல்லா சில்லறை காசையும் போட்டு பூஜை செய்கிறார்கள் .
இவர்கள் கணவர்கள் எல்லாம் வேலை வெட்டி பார்க்காமலேயே பணக்காரர்கள் ஆவதற்கு மகாலக்ஷ்மியிடம்  வரம் கேட்கிறார்கள் .
இதிலே பெருமை வேறு .

ரொம்ப கேவலமாக இருக்கிறது . உழைப்பிற்கும் , இயற்கைக்கும், நம்மை சுற்றியுள்ள விலங்குகளையும் ,மதித்து அவற்றுடன் இணைந்து வாழ்வதுதான் தமிழ் மதம் .

அதை தமிழன் உணர்ந்து கொள்ளும் காலம் விரைவில் வரும்.

எனில் தமிழுக்கு கடவுள் யார் ?
இம்மதத்தின் அடிப்படைதான் என்ன ?
எப்படி இத்தனை குழப்பத்தை சுமக்கிறது ?
விடை தேட வேண்டியது தமிழர்களின் பொறுப்பு .


காமெடியன்கள் தான் மக்களின் வில்லன்கள்



காமெடியன்கள் தான் மக்களின் வில்லன்கள் . இவர்கள் புகழ்ந்து புகழ்ந்து, ஒரு நடிகனை , மக்களுக்கு தலைவன் ஆக்குகிறார்கள் .

தன் எல்லையை மிஞ்சி புகழ்ந்ததில் மனோரமாவுக்கும் , நாகேஷுக்கும் தனி இடம் உண்டு . இது எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி காலத்தில் !







ஜனகராஜ் மற்றும் ஒய் .ஜி .மகேந்திரன் இருவரும் ரஜினிக்கும்,கமலுக்கும் ஏகப்பட்ட விளம்பரம் கொடுத்தவர்கள் .

இதை தொடர்ந்து பல நகைசுவை நடிகர்கள் இந்த சேவையை செய்திருக்கிறார்கள் .

இன்று இருக்கும் ஒரு சிலர் அதை செய்யமாட்டேன் என மறுப்பு தெரிவித்து அதன் விளைவாக வடிவேலும் விஜய்காந்தும் சண்டையிட்டு கொண்டது அனைவரும் அறிந்ததே !

இந்த நகைசுவை நடிகர்களை விட மோசமானவர்கள் பாடல் எழுதும் கவிங்கர்கள் . 

வாலி முதல் அனைவரும் நடிகர்களை உயர்த்தி விட்டவர்கள் .




நான் ஆணையிட்டால் பாடல் கொடுத்த பின்விளைவும் நமக்கு தெரியும் .
நான் கைவைச்ச அது நடக்கும் இது நடக்கும் என இன்று இருக்கும் இளைய நடிகர்கள் எல்லாரும் ஒரு பில்ட் அப்பு கொடுப்பதற்கு காரணமும் இந்த பாடல் எழுதுபவர்கள்தான் .

இன்றும் கன்னடம் , தெலுங்கு ,மலையாளம் , போன்ற மொழிகளில் ஹீரோ பாடும் பாடல் தற்பெருமை பாடல் அல்ல . ஒன்று மொழி பெருமை பேசும் பாடலாக இருக்கும் . அல்லது ஊர் பெருமையாகத்தான் இருக்கும் .
இதில் தமிழ் மக்கள் தான் மிகவும் மோசம் .

தற்பெருமை பேசக்கூடாது என்று சொல்லி தரும் ஒரே மொழி .

ஆனால் வருபர்கள்,போவோர்கள் எல்லாம் தற்பெருமையுடந்தான் பேசவே ஆரம்பிக்கிறார்கள் . இதையும் காதில் போட்டு கொண்டு , மூளையில் சுமந்து கொண்டு அரசியலிலும் , அவர்களுக்கு ஒட்டு போடும் ஒரே ஏமாளி கூட்டம் இந்த தமிழுக்கு சொந்தக்காரர்கள் என்று அலட்டிகொள்ளும்  தமிழர்கள்தான் .!

மேற்படி பத்திரிகைகள் கொடுக்கும் அக்கபோரு பெரிய அக்கபோரு !

2008 மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்ற போது இந்த
பட ம் எடுக்க பட்டுள்ளது .


கோவிலுக்குள் செருப்பு இல்லாமல் போவது அத்தனை பெரிய விஷயமா?
இதை பெரிய விஷயமென செருப்பில்லாமல் நடக்கும் ஐஸ்வர்யா ராய் என விளம்பரம் கொடுக்கிறது ஊடகம்.

டிசம்பர் 2015 சென்னை வெள்ளத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செருப்பில்லாமல் நடந்து சென்று விட்டாராம் ஹன்சிகா .
என்ன கொடுமை இது !இதெல்லாம் ஒரு செய்தியா ?
ஆயிரகணக்கான மக்கள் இறந்து போ ய் இருக்க செருப்பில்லாமல் நடந்து போனதை ஒரு செய்தி என்று வெளியிடுவதில் எந்த பத்திரிக்கையும் வெட்க படவே இல்லை .


நம் கண்ணையும் , கருத்தையும் மறைத்து கலாசாரத்தை அழிக்கும் சினிமா தேவையா ?


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...