Monday 25 December 2017

வேலைகாரன்

வேலைகாரன் என்றொரு திரைபடம் பார்த்தேன். பாவம், Dr.சிவராமன், ஹீலர் பாஸ்கர் போன்றோரின் உழைப்பு வீணடிக்க வழி கூறும் திரைபடம் அது.


இந்த திரைப்படத்தில் சில முக்கிய விஷயங்கள் பேசப்படுகிறது .

1. தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் , பட்டியல் மக்கள் என்றும் வழங்கப்படுபவர்களை, அவர்களின் தலைவர்கள் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று  விளக்கப்பட்டுள்ளது.பாராட்டுக்கு உரியது.

2.  அதே போல் , அந்த தலைவர்கள் , கார்பரேட்டுக்காக வேலை பார்க்கிறார்கள் என்பதும் கூறப்பட்டுள்ளது அருமை .

3. பெண்களை கொண்டு நடத்தப்படும் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளின் உண்மை விளக்கப்படுகிறது . அதுவும் அருமை .

4. கடைகளில் பொருள்கள் எடுக்கப்படும் விதம் மற்றும் , விற்பனை முறை விளக்குவதும் அருமை .

5. 8 மணி நேர மார்க்கெட்டர் தான் 16 மணி நேர consumer என்று கூறுவதும், ஒருவர் பாக்கெட்டில் இருந்து , மற்றொருவர் பாக்கெட்டுக்கு பணம் மாற்றுவதே வணிகம் . இதுவும் அருமை .

ஆனால் ,




சினிமா எல்லா பிரச்சினைகளையும் சரியாக கூறி, தவறான தீர்வை மக்களுக்கு கொடுக்கும். அந்த Formula இந்த திரைபடத்திலும் உண்டு.
உற்பத்தியாளன் செய்ய கூடிய சந்தையிடுதல் (Marketing) பற்றி பேசாமல், விற்பனையாளனின் சந்தையிடுதலை நிறுவனம் விளக்குகிறது.
முதலாளிகளை குறை கூறாமல், பணியாளர்கள் மாற வேண்டும் என்று கூறுகிறது.
(Consumer ) நுகர்வோர் கடைசி வரை , தற்சார்புக்கு செல்லாமல், கடைகளில் விற்கும் Noodles, Jam, Bread, Biscuit, Energy Drink போன்றவற்றை தான் உண்ண வேண்டும் என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்திருக்கிறார்.
Junk Food வேண்டாம் என்று கூறி, விழிப்புணர்வு கொடுக்கும் Dr.சிவராமனை பேச வைத்து, அதை நல்ல முறையில் தயாரித்தால் உண்ணலாம் என்று தவறான முடிவு சொல்கிறது திரைபடம் .
Junk Food தொடர்ந்தால் மலட்டு தன்மை வரும் என்பதை மட்டும் கதையில் சொல்ல வே இல்லை.
வேலைகாரன்
கார்ப்பரேட்டுக்காக உழைத்து, மக்களை அதற்குள்ளேயே வைக்க
உழைத்திருக்கிறான்.
திரைபடத்தில் வோல்கா to கங்கா எனும் புத்தகம் பற்றியும், தாய் வழிசமூகத்தில் இரவில் பெண் எந்த ஆணுடன் இருக்க வேண்டும் என்பதை தானே முடிவெடுத்தாள் என்றும் கதாநாயகி கூறுகிறார்.
அது 4000 ஆண்டுகளுக்கு முன் உருவாகிய ஆரிய வம்சாவளி கதை
தமிழர்களுக்கும் அதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
வேலைக்காரன் தவறான மூளையை சொல்லி தருகிறான்.
பலபேரின் உழைப்பை உறிஞ்ச போராடுகிறான்.

Friday 15 December 2017

ராஜா ராஜா சோழன் என்ன ஜாதி ?

ராஜ  ராஜ சோழன் என்ன ஜாதி ?

இப்படி ஒரு பதிவை இன்று படிக்க நேரிட்டது.
அட அட அட என்னமா நம் மக்கள் சண்டை போட்டு கொல்கிறார்கள் .
பெருமையாகத்தான் இருக்கிறது.

சோழன் என்றாலே , நெல் , விளைவிப்பன் எனில்

வேளாளர் ஜாதியாம்.

அவன் கல்வெட்டுலேயே , பெரு உடையார் என்று தான் கூறி இருக்கிறான் .
அப்போ

உடையார் ஜாதி .

ராஜராஜ சோழனின் உண்மையான பெயர் , அருண்மொழி தேவன் .
எனில் ,

தேவர் ஜாதியாம்.

11982 ல் இந்திராகாந்தி அம்மையார் தஞ்சை வந்து சதயவிழாவில் பங்கு கொண்டபோது , தேவேந்திர குல வெள்ளாளர்கள் தான் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டாடினார்கள் . எனில் ,

தேவேந்திர குல வெள்ளாளர். மற்றும் பள்ளர் , மள்ளர் எல்லாம் !
பள்ளர் என்பதில் குடும்பர், குடும்பி என்னும் பல உள்ளது.
(  இந்த குடும்பர் ஜாதியும் ஆந்திர ரெட்டி ஜாதியும் ஒன்று என்று கூறிதான் , அதன் அடிப்படையில் விஷால் தமிழராம் .)

ராஜராஜ சோழன் பூ நூல் அணிந்து தான் அவனது சிலைகள் உள்ளன .
எனில் ,

பிராமணர்.

சோழர்களே தெலுங்கர்கள் தான் .
எனில்

தெலுங்கர்.

இன்னும் பலரும் ,

ஒரே சண்டை.

அப்பப்பா , முடியல ,
.
தேவர், தேவேந்திரர், தெலுங்கர், பிராமணர், உடையார் எல்லாரும் ஒண்ணா அடிச்சிக்கிட்டு கிடங்க !

தேவர் , தேவேந்திரர் , இதெல்லாம் ஜாதி கிடையாது. பட்ட பெயர்கள் .இதனை யார் வேண்டுமானாலும் போட்டு கொள்ளலாம். அதுவும் பிராமண சொம்புதூக்கிகளுக்கு கொடுக்கப்படுவது.
பிராமணர் தமிழர்களே கிடையாது.
தெலுங்கர் பார்சி ஒட்டு !
உடையார் என்ற வார்த்தையானது, ஜாதி அல்ல .
பெருமை உடையார் , கருத்து உடையார் என்பன போன்று

அங்கிருக்கும் சிவன் பல பெருமைகளை கொண்ட , பெரிய உருவம் உடையவர் என்று பொருள் தானே தவிர ஜாதி அல்ல.

தேவர் , தேவேந்திரர் போன்ற வார்த்தைகளே தமிழ் இல்லை . ராஜராஜசோழன் காலத்தில் , சைவம் , வைணவம் என்று பௌத்தத்தை அழிக்க வேறு மதங்களை பயன்படுத்த வேண்டிய நிலையில் ,
பிராமணர்களுக்கு முக்கித்துவம் கொடுக்கும் நிலையில் இருந்திருக்கிறார்கள் .
அதன் அடிப்படையில் , உயர்ந்தவர் என்று பொருள் கொள்ளும் தேவர் என்ற வார்த்தையை , சோழன் பயன்படுத்தினான் .
அதனால் அவன் தேவர் ஜாதி அல்ல .தேவர் என்பதும் , முக்குலத்தோர் என்பதும் ஜாதியே அல்ல. கள்ளர் , மறவர், அகமுடையார் இணைந்து வைத்து கொண்ட பட்ட பெயர்.

சோழர்கள் சில காலங்கள் ஆந்திராவை ஆண்டதும் , ராஜராஜ சோழனின் மகளை தெலுங்கு மன்னருக்கு  பெண் கொடுத்ததும் உண்மைதான் .
ஆனால் , ஆந்திராவிலேயே , நாங்கள் தெலுங்கு பேசுபவர்கள் அல்ல என்று அவர்களே கல்வெட்டில் குறித்து விட்டார்கள் .

ஆமா , இந்த தேவேந்திரன் யார் ?
தமிழருக்கும் , இவருக்கும் என்ன சம்பந்தம் ?
பள்ளர் , கள்ளர் , மள்ளர் எல்லாம் கூட பரவா இல்லை .
இந்த தேவேந்திர குல வெள்ளாளர் என்பது தான் மிகவும் குறையாக உள்ளது.

மக்களே ,

ராஜராஜன் என்ன ஜாதியாக இருந்தால் என்ன ?
இன்றைய நிலைக்கு ,
தன ஜாதி பெரியது என்று அலட்டி கொள்ள ஒருவனுக்கும் தகுதி இல்லை. தமிழ்நாடு தெலுங்கர் வாசமும், இஸ்லாமியர் வசமும் , ஆங்கிலேயர் வசமும் இருந்த போது அவர்களை எதிர்த்த ஜாதியெல்லாம் யார் ?


இன்று வசனம் பேசும் எல்லா சத்திரிய ஜாதிகளும் எங்கே போய் இருந்தன ?
வாள் தீட்டப்படாமல் இருந்ததா ?

உங்களில் ஒருவர் , கையில் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயனை எதிர்த்தேன் என்று கூற முடியுமா ? போர் செய்து என் குலமே அழிந்தது என்று கூற முடியுமா ?

வீரம் பெண்ணிடம் காட்டப்படுகிறது.
இளம் காதலர்களிடம் காட்டப்படுகிறது.
அக்காலத்தில் இருந்த , எந்த மன்னனும் கூட ஒப்பு கொள்ளமாட்டான், உங்களின் வீரத்தை !




சண்டையிடும் பலரும் பல எழுத்தாளர்களையும், புத்தகங்களையும் உதாரணம் கூறும் போது  தான் தெரிகிறது,
எழுத்தாளர்களின் எழுத்தை தவறாக பயன்படுகிறார்கள் என்று!

ஐயா , ஆண்ட பரம்பரைகளே ,
எல்லா பரம்பரையும் எங்கோ தோற்று தான் போயிருக்கும் . தோற்றபிறகு வீராப்பு எதற்கு ?

சோழர் வம்சம் கூட முற்றிலும் அழிந்து விட்டது. அப்படி இருக்க , அவருக்கு , உரிமை கொண்டாடுவது அசிங்கம் .
தமிழனுக்கு , தமிழனே செய்யும் கேடு !





Wednesday 13 December 2017

தேவதாசிகளின் உண்மையான வரலாறு

தேவதாசிகளின் உண்மையான வரலாறு


தேவதாசிகள் உருவான கதை கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் அது தமிழ் ஏமாந்த கதை . தமிழர்கள் ஏமாற்றப்பட்ட கதை .

தொடக்க கால வரலாறு :


நம் இதிகாசங்கள் , புராணங்கள் கூறுகின்றன . நம் நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் அத்துணை பேருக்கும் 20000 முதல் 60000 மனைவி இருந்ததாக கூறுகின்றன. அத்தனை பேருடனும்  மன்னர் வாழ்ந்தாரா என்ற கேள்விக்கு எந்த காவியமும் பதில் எழுதவில்லை.
எப்படி ஒரு மன்னருக்கு இவ்வளவு மனைவியர் இருக்க முடியும் ?
எந்த பெண் வேண்டும் என்றாலும் திருமணம் என்ற பெயரில் அந்த பெண்ணை அரண்மனை அழைத்து வர மன்னருக்கு உரிமை உண்டு . அதன் அடிப்படையில் தான் தசரதனுக்கு 60000 மனைவி . க்ரிஷ்ணனுக்கு 16000 மனைவியாம்.

இதே அடிப்படையை ராவணன் பின்பற்றினால் மட்டும் அது தவறாம. என்ன நியாயம் இது ? இது தனி கதை .

சரி நம்ம கதைக்கு வருவோம்.

அவ்வாறு அழைத்து வரப்பட்ட பெண்களோடு மன்னர்கள் வாழ்வது கிடையாது. அழகிகள் , அறிவுள்ள பெண்கள் , எதிரியின் வீட்டு பெண்கள் இங்கு தான் இருக்க வேண்டும் .அது தான் அவர்களுக்கு மரியாதை .
அனால் , இவ்வளவு பெண்களுக்கும் உணவு ,  உடை என்று எவ்வளவு செலவுகள் ? ஒரு வேலையும் செய்யாமல் மன்னரின் கவுரவத்தை காப்பாற்ற அதீத செலவுகள் மன்னர்கள் செய்து வந்தனர் . இந்த செலவுகளை ஈடுகட்ட வரியும் அதிகம் விதித்தார்கள் .

அப்படிதான் கி.பி.590 களில் விக்ரமாதித்தன் என்று வழங்கப்பட்ட ஹர்ஷவர்தனும் பல மனைவியரோடு வாழ்ந்து வந்தான். அவரது அவையில் இருந்த புலவனும் , ஹர்ஷனின் நெருங்கிய நண்பனும் ஆகிய , பணப்பட்டான் , மன்னரிடம் எல்லா விஷயங்களும் பேசும் உரிமை பெற்றவன்.

அவன் , மன்னனிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான்.
ஏன் இவ்வளவு பெண்கள் ?
இவர்களால் மக்களுக்கும் வரி சுமை அதிகரிக்கிறது .
இதை தவிர்க்க கூடாதா ?

மன்னரோ ,
நான் என்ன செய்யட்டும் . இது வழக்கமாக இருப்பது தானே . இதற்க்கு என்ன வழி என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் இதை விடவும் முடியாது என்று பதில் கூறுவார்.

இந்நிலையில் பௌத்த மதம் தொடர்பாக பேசவும்,  மஹாபாரதம் பற்றி கூறவும் , தென்னிந்தியா விற்கு வந்தார் பணப்பட்டார்.
அதே சமயம் மத்தியில் ஆட்சி செய்து கொண்டு இருந்த , மேலை சாளுக்கிய மன்னன் 2 ம் புலிகேசியும் தென்னிந்தியாவிற்கு வந்திருந்தான்.

அந்நேரம் தென்னிந்தியாவை ஆட்சி செய்தது பல்லவர்கள் .மஹேந்திர வர்ம பல்லவனின் ஆட்சி அது. பணப்பட்டர் நேரடியாக , அவைக்குள் வரவேற்கப்பட்டார். அப்போது தான் அது நடந்தது.

ஒரு அழகிய பெண், உடலை காக்கும் அத்துணை முத்திரைகளையும் பயன்படுத்தி நடனம் ஆடினாள் . என்ன ஆச்சர்யம் ! முத்திரைகளை கொண்டு நாட்டியமா ? வியந்து போனார் பணபட்டர் .

இதே நிகழ்ச்சியை பின்வாசல் வழியாக நோட்டம் விட்டு வேடிக்கை பார்த்தவன் புலிகேசி . அதன் பிறகு அந்த நாட்டிய பெண் கடத்தப்பட்டாள் . மத்திய இந்தியா முழுக்க இந்த நாட்டியத்தை பரப்பினான் புலிகேசி . அவளது ஒவ்வொரு முத்திரை அசைவையும் கொண்டு அஜந்தாவும் , எல்லோராவும் உருவாகின.

இதன் அழகிய பதிவுதான் திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய , சிவகாமியின் சபதம் .

அதே சமயம் , தான் கண்ட நிகழ்வை ஹர்ஷரிடம் கூறினான், பாணபட்டன்.
அதை நேரில் பார்க்க ஆசை கொண்டான். அங்கனமே , பல்லவ சாம்ராஜ்யம் உதவியது. இதனை கொண்டு , தன அரண்மனையில் இருந்த பெண்களுக்கெல்லாம் நடனம் கற்று தர பட்டது. பிறகு அப்பெண்கள் தேவர் அடியார்கள் என்று பெயர் சூட்டப்பட்டு , கோவிலில் நடனம் ஆட அனுமதிக்கப்பட்டனர்.

முதன் முதலில் , மத்தியபிரதேசம் , உஜ்ஜயினியில் உள்ள , மஹாகாளேஸ்வரர் என்ற ஜோதிர்லிங்கேஸ்வரர் கோவிலில் தான் தேவர் அடியார்கள் என்ற வரலாறு தொடங்கியது.


                                            மஹாகாளேஸ்வரர் திருக்கோவில்


இந்த காலகட்டத்திற்கு பின் , மன்னர்கள் அதிகஅளவில் திருமணம் செய்வது நிறுத்தப்பட்டது. ,மேலும் பெண்கள் கவுரவமாகவே நடத்தப்பட்டார்கள் .இம்முறையானது எல்லா மன்னர்களும் பின்பற்றினார்கள் . இஸ்லாமியர்கள் வரும்வரை !

சில இஸ்லாமிய படையெடுப்பில் இப்பெண்கள் , மற்றும் மன்னரின் மனைவியர் தவறாக நடப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன., இதற்க்கு பயந்து பலர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். அதுவும் கூட மொகலாய ஆட்சியில் இல்லை .

அதேசமயம் தமிழ்நாட்டில் , சோழர்கள் அப்பெண்களை , மிகுந்த மரியாதையோடு நடத்தினார்கள் . அவர்களுக்கு என்னென்ன செய்ய பட்டது என்றும் எவ்வளவு நிலங்கள் தரப்பட்டன என்பன போன்ற தகவல்கள் கொண்டுள்ளது சோழர்கள் கால கல்வெட்டுகள் .
ராஜராஜ சோழன் காலத்தில் மட்டும் 400 பெண்கள் நாட்டியம் ஆடி இருக்கிறார்கள்.

தவறான வாழ்க்கையின் துவக்கம் :

கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு பிறகு , இஸ்லாமியர், பிரிட்டிஷார் , மற்றும் போர்த்துகீசியர்கள் போன்றோரின் வருகை நம் நாட்டை புரட்டி போட்டது அனைவரும் அறிந்ததே ! இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

அவர்களின் சொத்தை எல்லாம் பறித்து கொண்ட பிரிட்டிஷார் , அவர்களை தவறாக பயன்படுத்தினர். அவர்களின் விருந்தாளிகளுக்கு பரிசாக மாற்றினர் .

தேவர் அடியார்களாகிய இருந்த , தலித் சமுதாய பெண்கள் மிகுந்த துன்பத்தை அனுபவித்தனர். அதிலிருந்தது விட , கிறிஸ்தவ மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டனர்.

மேலும் , மேலும் நசுக்கப்பட்டனர். பல பெண்கள் , வீதிகளில் பிட்சை எடுத்தனர். வீதிகளில் நடனம் ஆடினார். தவறான தொழிலும் புரிந்தனர்.
வறுமை தவறுக்கு வழி செய்தது.

1919 ம் ஆண்டு தேயோசோபிக்கால் சொசைட்டி நடத்திய நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் ஒரு தேவர் அடியார் ஆடுவதை பார்த்த

ருக்மணி தேவி எனும் பிராமண பெண், தானும் அந்த நடனத்தை கற்று கொள்ளவேண்டும் என்று அடம் பிடித்து கற்று கொண்டார். ஆனால் அது தேவர் அடியார்கள் ஆடிய சதுர் ஆட்டம் அல்லவா , பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள் ?

பெயர் மாற்றப்பட்டது .
பரதநாட்டியம் உருவானது . அன்றுதான் பரதநாட்டியம் என்ற பெயரே வைக்கப்பட்டது. அதற்குள் அதற்கு ஒரு புராணமம் எழுதி விட்டார்கள் . இது பாரத முனி கொடுத்தது என்று ! அபத்தம் !

உடை அமைப்புகளை மாற்றினார். இசை கருவி வாசிப்பவர்களை எப்படி எப்படி  அமர வேண்டும் என்று மாற்றி அமர வைத்தார்.




அவர் வெள்ளைக்காரனாகிய ஜார்ஜ் அருந்தலே என்பவரை மணந்து கொண்டார். அவர் தான் லண்டன் Animal Welfare Board ன்  தலைவர்.மிகுந்த செல்வாக்கு ஆங்கிலேயர்கள் மத்தியில்! அதன் பிறகு  வேலை துரிதமாக நடந்தது . கலாஷேத்ரா ஆரம்பிக்கப்பட்டது. அன்னிபெசன்ட் மற்றும் பல ஆங்கில பெண்மணிகள் உதவி புரிந்தனர். பிரமாணமும், பிரிட்டிஷும் இணைந்தது .

முழுமையாக நாட்டியம் கைமாறியது. இனியும் தேவர் அடியார்கள் இருப்பது ருக்மணிக்கு பிடிக்க வில்லை . 1935 ல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. இனி அவர்கள் வேறு வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள் . ஆனால் எந்த வேலையும் எவரும் தரவில்லை . தொடர்ந்து நடனம் ஆடினார்கள் .


பின் 1947 ம் முத்துலட்சுமி ரெட்டி , தேவதாசி முறை சட்ட படி குற்றம் என்று அறிவித்தார். ஆனால் 1949 ம் தஞ்சாவூர் பாலசரஸ்வதி ( வீணை தனம்மாள் அவர்களின் பேத்தி , தேவதாசி பரம்பரையை சேர்ந்தவர்.) ருக்மணியின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் . என்ன பயன் ? ருக்மணி இந்திய அரசின் , Animal Welfare Board யின் தலைவியாக நேரு அவர்களால் 1962 ல் அறிவிக்கப்பட்டார். அப்போ விதைத்த விதைதான் ஜல்லிக்கட்டு போராட்டம் .

ஆனால் ருக்மணியின் செல்வாக்கை அரசுதான் உயர்த்தியது. வெளியில் தேவதாசிகளின் நடனம் தான் செல்வாக்கோடு இருந்தது. இது பிராமண சமுதாயம் விரும்பவில்லை. எல்லா திரைப்படங்களிலும் , இழிவானவர்களாக சித்தரிக்க பட்டாட்கள் . அவர்கள் வாழ்க்கை , ரஜினி , கமல் போன்றோரால் விமர்சிக்கப்பட்டது. ( எதோ சினிமாவில் உள்ளவன் எல்லாம் யோக்கியன் போல ) பிறகு , அம்மக்கள் முற்றிலுமாக நடனத்தை இழந்தனர்.
வறுமை வாட்டும்போது நடனம் சாத்தியமா ?

முற்றிலும் பிரமாணம் அதிகாரம் செய்து திருடியது தமிழ் நடனத்தை , இசையை !

சதுர் நடனம் தன வாழ்வை தேவர் அடியார்களோடு சேர்ந்து இழந்தது !

இன்று தேவர் அடியார்களின் நிலை :

தமிழ்நாட்டில் முற்றிலும் இல்லை என்று கூறி , அரசு அம்மக்களையே அழித்து விட்டது.

கர்நாடகத்தில் , இம்மக்கள் கோவில்கள் கழுவி விட, சுத்தம் செய்ய போன்ற வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 16000 ரூபாய் வரை அரசு சம்பளம் கொடுக்கிறது.

ஆந்திராவில் அரசு 20000 ரூபாய் வரை சம்பளம் கொடுக்கிறது. அதே கோவில் பணிகளுக்காக !

மஹாராஸ்ராவில் , சுமார் 1735 பேர் 8000 ரூபாய் பென்ஷனாக வாங்குகின்றனர்.

ஒடிசாவில் , பூரியில் வாழ்ந்த ஒரு பாட்டி இருந்த பிறகு , முற்றிலும்
ஒழி க்கப்பட்டுவிட்டதாக அரசு கூறுகிறது.

தெலுங்கானாவில், மட்டும் இப்போதும் பொட்டுக்கட்டிவிடும் வழக்கத்தின் அடிப்படையில் சுமார் 80000 பெண்கள் இருக்கின்றனர். புதிய அரசு இது .பொறுமையாகத்தான் நடவடிக்கை எடுக்கும் .என்று கூறப்படுகிறது.

ஆமா , பொட்டுக்கட்டி விடுவது என்றால் என்ன ?


எங்கிருந்து இந்த பழக்கம் வந்தது ?


சிறு வயதிலேயே 8 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை , கோவிலில் விட்டுவிடுவது. அவர்கள் அப்பெண்ணுக்கு தாலி கட்டி , அவளை அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் மனைவி என்று அறிவிப்பார்கள் . அதன் பிறகு , ஊரில் பெருசுகள் எல்லாம் அந்த பெண்ணை பயன்படுத்தி கொள்ளும்.

ஊரில் உள்ளவர்கள் விவசாய வேலைக்கு அழைத்து செல்லலாம் . வீட்டு வேலைக்கு அழைத்து செல்லலாம். ஆனால் சம்பளம் தர வேண்டியது இல்லை. ஒரு வேலை சாப்பாடு . அதுவும் கூட தேவை இல்லை . அவர்கள் பிட்சை எடுத்து கொள்ள வேண்டும் .

இன்றும் இதே நிலைதான் தெலுங்கானாவில் உள்ளது. இது கொடுமை அல்லவா ?

கோவிலில் நடனம் ஆடும் பெண்கள் வேறு ! ஆனால் இவ்வாறு உருவாக்கப்படும் பெண்கள் வேறு ! ஆனால் இருவரையும் ஒன்றென கூறி , நாட்டியதை திருடி , பெண்குழந்தைகளை கேவலப்படுத்தும் முறைகளை எங்கிருந்து கற்றுக்கொண்டோம் .

நமக்கெல்லாம் பெண் விடுதலை , பெண் சுதந்திரம் என்றெல்லாம் வியாக்கியானம் சொல்லி தந்ததே அந்த வெள்ளை அரசு கொடுத்த பரிசு இது .
2011 ம் ஆண்டு போலந்து நாட்டில் ஒரு கன்னியாஸ்திரி ஹரே ராம , ஹரே கிருஷ்ணா என்ற அமைப்பின் மீது வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்தது .

நீதிபதி : என்ன வழக்கு ?
 கன்னியாஸ்திரி : ISKON அமைப்பை தடை செய்ய வேண்டும் .

என்ன காரணம் ? இது நீதிபதி

அதில் கிருஷ்ணன் 16000 மனைவியரை திருமணம் செய்து கொள்கிறார். இது பண்ணை இழிவு படுத்தும் விதமாக உள்ளது. இது கன்னியாஸ்திரி .

சரி தானே , இதற்க்கு உங்கள் கருத்தென்ன ,  ISKON அமைப்பின் வழக்கறிஞரை பார்த்து கேட்கிறார் நீதிபதி .

 ISKON வழக்கறிஞர், அந்த கன்னியாஸ்திரியிடம் கேட்கிறார்,

நீங்கள் கன்னியாஸ்திரி ஆகும் போது என்ன உறுதிமொழி எடுப்பீர்கள் ? அதை கொஞ்சம் சத்தமாக கூற வேண்டும் . அது ஒன்று மட்டும்தான் எனது கேள்வி . முடித்து விட்டார்.

சத்தமாக கூறினார். வழக்கு முடிந்து விட்டது.  ISKON அமைப்பை தடை செய்ய இயலாது என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

என்ன உறுதிமொழி தெரியுமா ?

கன்னியாஸ்திரியாக மாறும் நான் இன்று முதல் ஜீசஸின் மனைவியாகிறேன் .

என்பது. எனில் ஏசு கிறிஸ்துவிற்கு எத்தனை மனைவிகள் ?

1965 ல் மட்டும் அமெரிக்காவில் 200000 பேர் கன்னியாஸ்திரிகளாக இருந்துள்ளனர்.
இன்று  அமெரிக்கா , ஐரோப்பா எல்லாம் கூட்டினாலும் 50000 கூட வராது.

காரணம் ? அதை விடுங்க ! யாருக்கும் சேவை செய்ய புடிக்கல !

கன்னியாஸ்திரியாக மாறும் நாள் அன்று , மணப்பெண் போல் அலங்காரம் செய்யப்பட்டு , தேவாலயம் அழைத்தது வரப்பட்டு , அங்கு அவர்களுக்கு மோதிரம் அணிவிக்கப்படுகிறது. யார் போடுவார்? தேவாலயத்தில் உள்ள பாதிரியார் .




இப்போ , நம் நாட்டின் பொட்டு கட்டி விடும் பழக்கத்தை ஒப்பிட்டு பாருங்கள் .
இரண்டும்  ஒன்று என்பது எல்லோருக்கும் புரியும் .
எனில் இந்த பழக்கம் யார் நமக்கு தந்தது ?
ஆங்கிலேயர்கள்  தந்த கொடிய வழக்கம் இது!

இதில் நாட்டியம் ஆடிய பெண்களும் கலக்கப்பட்டு , மிகப்பெரிய சமுதாய சீரழிவை செய்து விட்டு , பெண் விடுதலை , பெண் சுதந்திரம் இதெல்லாம் பேசுகிறது ஆங்கில கலாசாரம். என்ன கொடுமை இது ?

கன்னியாஸ்திரிகள் நிலை என்ன என்று தெரியுமா ?

உள்ளே ஆயிரம் நடக்கிறது. எல்லாம் ரகசியம் . ஆனால் அதையும் மீறி கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் , AMEN ( தி ஆட்டோ பிரோக்ராபி ஆப் எ நன் )  புத்தகம் எழுதி உள்ளார்.
அதில் ஒரு கன்னியாஸ்திரியை உடல் ரீதியாக என்னென்ன கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள் என்று எழுதி உள்ளார். முற்றிலும் தேவதாசி முறை !




மற்றொரு கன்னியாஸ்திரி , கூறுகையில் , குளிக்கும் போது அதை படம் எடுப்பது, இன்னும் ஏகப்பட்ட விஷயங்களை அவர் பதிந்து இருக்கிறார்.மேலும் அவர் , ஒரு நாள் கன்னியாஸ்திரி உலகம் வாயை திறக்கும் . அன்று ஒரு சுனாமி உருவாகவும் என்றும் கூறுகிறார்.



எந்த மதமாக இருந்தாலும் பெண்ணை இழிபடுத்துவது மிக கொடுமை !

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ,
தமிழர்கள் இழிவு செய்வது மிக அபத்தம் !

நம் நடனம் திருடப்பட்ட , ஒரு சமுதாயம் இழிவு படுத்தப்பட்டு , இன்றும் இந்த கேவலத்தை சுமந்து கொண்டு வாழ்வதா ?

சிந்திப்பீர் தமிழர்களே !
நம் கலாசார உரிமைகளை மீண்டும் உயிர்ப்பிப்போம்.!






Friday 8 December 2017

குமரி மீனவா !

மீனவர்கள் மறந்த தொலைத்து விட்ட கடல்சார் அறிவியல் .
பல்வேறு காரணங்களுக்காக மதம் மாறிய தமிழன் ,
தமிழ் இனம் தந்த அறிவியலை தொலைத்தது ஏனோ?

மதம் மனிதனின் மனதை கட்டு படுத்தத்தான், அறிவை மறைக்க அல்ல .

விவசாயிகள் மறந்து போயினர் . ஆண்டுக்கு ஒரு முறை நிலத்தை விவசாயம் செய்யாமல் விடவேண்டும் என்பதை !
அதனால் தானே சித்திரை வைகாசி ஆனி முடிந்து ஆடியிலே பட்டம் காட்டினார்கள் .
அதனால் தானே அந்த மூன்று மாதங்களிலும் கோவில் திருவிழாக்கள் , திருமண விசேஷங்கள் நடத்தினார்கள் .
அனால் இன்று விவசாயி , எல்லா நாளும் உரத்தை நம்பி விவசாயம் செய்து , மண்ணை மலடாக்கி விட்டு , நஷ்ட ஈடு கேட்டு அழைந்து கொண்டு இருக்கிறான்.

மீனவர்களும் அப்படிதான்.
ஐப்பசியில் அடைமழை ,
கார்த்திகையில் கனமழை என்பதை மறந்து போயினரோ?
கார்த்திகையில் மீன் பிடிக்கலாமா ?
மீன்கள் இன விருத்திக்காக மற்றும் காலநிலை மாற்றத்திற்கேற்ப வேறு இடங்களுக்கு சென்று விடும். கடலின் தூர பகுதிகளுக்கு சென்று மீன் பிடிப்பதும் ஆபத்து.
இது மீனவர்கள் அறிய மாட்டார்களா ?
மோட்டார் வாகனங்கள் கொடுத்த தைரியம் , நம் விவசாயிகளுக்கும் , மீனவர்களுக்கும் !
விவசாயி தொலைத்த காளை இனத்திற்காகத்தானே ,ஜல்லிக்கட்டு போராட்டம் !
இதே ஆண்டின் இதில் மீனவர்கள் தொலைத்த , அதே அறிவியலுக்காக
கன்னியாகுமரியில் போராட்டம் !

நம்மை காக்க எவரும் தேவை இல்லை .
நம் அறிவியல் கைகொடுக்கும்.
வலு பார்த்து கடலுக்குள் இருங்க கற்று கொள்வோம்.
நீரோட்டம் பார்த்து , படகுகள் எடுக்க பழகி கொள்வோம்.
கால் கட்டை விறல் அழுத்தி , கடல் அலை எது வரை வரும் என்பதை அறிந்து கொள்வோம்.
மின்னல் திசை அறிய பழகி கொள்வோம்.
மீண்டும் பழமைக்கு வாருங்கள் !

அரபி கடல் ஓரம் மீனவர்கள் , மோட்டார் படகுகளில் செல்லும் போது பயந்து ஓடுகின்ற டால்பின்கள் பாவம் இல்லையா ?
கடலை அசுத்த படுத்தி , இரட்டை வலை யிட்டு ,
வணிகத்திற்கு உதவியாக வாழ்வது
 அதர்மம் இல்லையா ?



கன்னியாகுமரி மீனவர்கள் கேரளத்தோடு இணைக்க கோருகிறார்கள் .

யார் இதன் மூல காரணம் :

கிறிஸ்த பாதிரியார்கள் .
யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கூறுவதும்,
யாரை விரட்ட என்று கூறுவதும்,
எப்போது போராட வேண்டும் ,
எப்போது போராட்டத்தை கைவிடவேண்டும் என்று கூறுவதும் ,
எப்போதும் மக்களை , வாலை ஆட்டும் நாய்கள் போல் வைத்திருப்பதும்,
பிரசங்கம் என்ற பெயரில் , மக்களை மயக்கத்திலேயே வைத்திருப்பதும் ,

பாதிரியார்கள் .

கன்னியாகுமரி , நாகர்கோவில் இவற்றை ஆள்வது யார் ?
மத்திய மாநில அரசுகளா ?
இல்லை ,
கிறிஸ்த பாதிரியார்கள் !

அதனால்தான் ,
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பேச்சுக்கு போராடியது குமரி .
முதலில் வாபஸ பெற்றதும் குமரி யே !

பி.ஜெ.பி க்கு தமிழகத்திற்குள் நுழைய தைரியம் கொடுத்தது குமரி !

எந்த மீனவனுக்காகவும் போராடாமல் ,
பாதிரியார்கள் பின்னால் சென்றதும் குமரியே !

இன்றும் போராட்டம் ஆரம்பித்ததும் ,
அதே போதிரியார்களால் தான் !

எத்தனை முறை ராமேஸ்வர மீனவன் , குண்டடி பட்டு இறந்து போய் இருப்பான் .
ஏன் ?
இன்று ரயில்வே தண்டவாளத்திற்கு வந்த தலைகள் ஒருநாள் கூட ,
ராமேஸ்வர மீனவர்களுக்காக வரவே இல்லையே ? ஏன் ?

கடலில் எண்ணெய் கொட்டி , நொச்சி குப்பம் மீனவர்கள் கஷ்ட்ப்பட்டபோது குமரி மீனவர்களுக்கு அப்படி நடந்த செய்தியே தெரியாதே ! ஏன் ?

ஏன் என்றால் ,

பாதிரியார்கள் சொன்னால்தான் எல்லாம் நடக்கும்.

மத மாற்றம் என்பது ,
தமிழனின் அறிவியலை அழித்து, வணிகத்தின் அடிமையாக வைக்கத்தான் .

மீண்டும் தமிழனாக மாறு !
அன்றுதான்
விவசாயிகளுக்கும்,மீனவர்களுக்கும் விடிவு காலம் !
அது தமிழகத்தின் சுதந்திர காலம் !




பங்காரு அடிகளும் , நிதியானத்தாரும்  மக்களை மயக்குகிறார்கள் எனில் 
பாதிரியார்களும் அதே வரிசையே !



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...