Thursday 26 April 2018

தமிழன்டா !

தமிழர்கள் , தமிழன்டா என்று காலரை தூக்கி விட்டு கொள்ள கூடிய இரு சம்பவங்கள் உள்ளன .

1 . நம்ம சுந்தர் பிச்சைக்கு கூகிள் நிறுவனம் தந்த பங்குகளை அவர் விற்று கொள்ள கூடிய காலம் வந்து விட்டது . இதன் மூலம் அவர் 2048 கோடிக்கு சொந்தக்காரர் ஆகிறார் .
தமிழ்நாட்டிற்க்கு ஒரு பிரயோசனமும் இல்லை .
இருந்தாலும் தமிழன்டா அப்படின்னு சொல்லிக்கலாம் .


2 . தற்போது இங்கிலாந்து வங்கியின் கவர்னராக இருக்கும் , கனடாவின் , மார்க் காரனே வின் பதவி காலம் 2019 ல் முடிவடைகிறது .
அந்த இடத்திற்கு , நம்ம RBI யின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இதுவும் தமிழ்நாட்டிற்கு பிரயோசனம் இல்லாத விஷயம் தான் .

இருந்தாலும் தமிழன்டா !






சராசரியாக ஒரு தமிழனால் , இதை எல்லாம் செய்ய முடியுமா ?
இங்கிலாந்து  வங்கிக்கு கவர்னர் என்ற பொறுப்பு என்பது வழங்கப்படுகிறது என்றால்
அவர்  ?


தமிழன்டா !

Wednesday 25 April 2018

ஆண்ட பரம்பரையா ?

இன்று இந்தியாவை ஆள்வது யார் என்று கேட்டால் ,
பார்சி இனம்
ஜைனம் - சமணம் - பௌத்தம் - திராவிடம் - ஜொராஷ்ட்ரியம் .

கி.பி.  7 ம் நூற்றாண்டு தருணத்தில் , தமிழகத்தின் சமண முனிவர்கள் பலர் கொலை செய்ய பட்டனர் .
அதன் பலி வாங்கும் நடவடிக்கை தான் இப்போது தமிழகத்தில் நடப்பது !



சிரியாவிலும் , பலிவாங்கும் நடவடிக்கை தான் நடக்கிறது .

 காஞ்சிபுரம் தான் இலக்கு ! இதற்காக தான் , போதி தருமர் கதையை  ஏழாம் அறிவு கதை மூலம் நமக்கு நினைவூட்டினார்கள். இதில் பல்லவம்சம் இன்னும் உயிரோடு இருக்கிறதா என்றும் ஆய்வு செய்து இருக்கிறார்கள் .
ஏனெனில் , சமணத்தை விரட்ட முடிவெடுத்து அதில் வென்றவர்கள் , பல்லவர்கள் , அவர்களுக்கு துணை நினறது பாண்டியர்களும் , முத்தரையர்களும் !
இதில் பாண்டியர்கள் , முழுவதும் கிறிஸ்வமாக மாற்றப்பட்டு விட்டனர் . அவர்களின் நேரடி கடைசி வாரிசு ஒரு பெண் . அவர் ஒரு ஆங்கிலேயனை திருமணம் செய்து விட்டார் .
அவ்வாறு சமணர்களை விரட்ட , போர் புரிய பயன்பட்டது தான் புதுகோட்டை .
நாலடியார் என்ற நூல் குறித்து ஒரு கதை உண்டு !
அந்த கதையில் ,  நானூறு சமணர்கள் , நாலடியார் நூலை எழுதி , அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கும் பொழுது , இதை கேள்வி யுற்ற மன்னன் அவர்களை கொலை செய்ய உத்தரவிடுகிறான் . இந்த செய்தி அறிந்த , சமணர்கள் , இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடி விடுகிறார்கள் .
ஆனால் நாலடியார் நூலை மட்டும் விட்டு விட்டு செல்கிறார்கள் .

70 ஆண்டுகளுக்கு முன்பு தான் , சாமிநாத ஐயர் இவற்றை எல்லாம் தேடி தொகுத்தார் .
தமிழகத்தில் இன்று புழக்கத்தில் இருக்கும் எல்லா நூல்களும் , சமணம் சார்ந்தவை .
இந்த மதம் தான் திராவிடம் . இதன் தகப்பன் தான் , பார்சி இனம் . ஜொராஷ்ட்ரிய மதம் .
தாமரை மலர் மீது தீபம் .

இங்கு தான் ஆண்டபரம்பரை என்று அலட்டி கொள்ளும் பலர் தானும் சிக்கி கொண்டு , தமிழகத்தையும் காவு கொடுக்க காத்து கொண்டு இருக்கிறார்கக்ள் .

Thursday 12 April 2018

தோனியின் சொத்து யார் தெரியுமா ?

தோணி தனக்கு சேர வேண்டிய 150 கோடியை தரவில்லை என்று , தான் விளம்பரதாராக 7 ஆண்டுகள் பணியாற்றிய உத்தரபிரதேச அம்ப்ராபாலி எனும் கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் .

ஐயா கிரிக்கெட் ரசிகர்களே ,
கொஞ்சம் யோசிங்க ! ஒன்று , இரண்டு அல்ல .150 கோடி . யாரிடம் இருந்து நிறுவனம் பெற்று தரும் . வாடிக்கையாரிடம் இருந்து பெற்று தரும் . அவ்வாறு தரும் போது , தன்னுடைய லாபத்தை ஒரு நிறுவனம் இழக்க விரும்பாது .
விளைவு , தரமற்ற கட்டிடம்  தான் மக்கள் கைக்கு போய் சேரும் .

எங்கு இருந்து இவருக்கு , 150 கோடிக்கு விலை பேச முடிகிறது ?
ரசிகர்கள் எனும் சொத்து !
ஒரு சினிமா நடிகர் , விளையாட்டு வீரர் நடிக்கும் ஒரு விளம்பரம் மூலம்  மக்களுக்கு வந்து சேரும் எந்த ஒரு பொருளும் தரமுடையாதாக இருக்காது .

இதற்க்கு காரணம் , இதன் குற்றவாளி
ரசிகன் எனும் நீங்கள் !






வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...