Wednesday 8 April 2015

தமிழன் மட்டும் திராவிடனா?



தமிழ், தெலுங்கு , கன்னடம் , கோண்டு ,கோட்டா , குடகு , துருவம், துளு, ஓரவொன் இவை  அனைத்து மொழிகளு ம் , அவை சார்ந்த  இடங்களும் திராவிட மொழி குடும்பம் என்றும் , அங்கு வாழும் மக்கள் திராவிடர்கள் என்றும் கால்டுவேல் தன்னுடைய மொழி ஒப்பிலக்கணம் என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நடைமுறையில் தமிழன் மட்டுமே திராவிடன் என்று ஆகிவிட்டது . காரணம் தமிழனை ஆள்வதற்கு திராவிடர்கள் கையில் எடுத்த ஆயுதம் இது. தமிழனை நீ திராவிடன் என்று கற்ப்பித படுத்தி , அவனிடம் உள்ள சுய உணர்வை எரித்து விட்டு வேடிக்கை பார்கின்றனர். தமிழனை மட்டும் திராவிடன் என்று கூறி கூறி கொண்டாடி , கொண்டாடி ஆட்டம் போட்டு சுக  வாழ் கை   வாழ்வது, இரண்டு கூட்டங்கள் . ஒன்று சினமா கூட்டம் , மற்றொன்று அரசியல் கூட்டம்.   இன்னும் ஒருபடி மேலே போய் ,சினிமா கூட்டமும், கிரிகெட் கூட்டமும் நீ இந்தியன் என்ற பெயரையும் பயன்படுத்தி கொண்டு கோடி கோடியை சம்பாதித்து கொண்டாட்டம் போடுகிறது .

இவனை எழுந்திருக்க விடாமல் அரசியல்வாதிகள் சாராயம் ஊற்றி தருகின்றனர். சினிமா காரர்கள் உடம்பை காட்டுகின்றனர் . இளையராஜா எதனையோ பாடல்களுக்கு இசை அமைத்தார் . அனால் எத்தனை தமிழர்களுக்கு வாழ்வு கொடுத்தார் .? பிற மாநிலத்தவர்களை கொண்டடி தான் புகழ் சேர்த்து கொண்டார். அவரும் திராவிடத்தை பயன்படுத்தி கொண்டார் .அவரை அப்படியே பிற இசை அமைப்பாளர்களும் பின்பற்றுகின்றனர் .
ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் தமிழ் படம் என்று வேறு மாநிலத்தில் கூறி விடாதீர்கள். காரி உமிழ்வான் . அது ரஜினி  எனும் கன்னட க்காரனின் படம்.
விஜய் படம் தமிழ் படம் அல்ல. அது ஒரு மலையாளியின் திரைப்படம்.
அஜித் படம் தமிழ்படம் அல்ல . அவரும் மலையாளி .
விக்ரம் படம் தமிழ் படம் என்று கூறாதீர்கள் . பிரபுதேவா படம் தமிழ் படம் என்று கூறாதிர்கள் . அது கன்னட ரத்தம் . இன்னும் எம்.ஜி .ஆர் , ஜெயலலிதா என யாரும் தமிழன் இல்லை . பாடகர்களில் பலர் தமிழர் இல்லை . நடிகைகளில் தமிழச்சியே இல்லை . இவர்களெல்லாம் திராவிடத்தை சாதகமாக்கி காசு சம்பாதிப்பவர்கள் .

அரசியல் வாதிகள் கட்சி அனைத்தும் திராவிட கட்சிகள் ,. எங்கே கேரளாவிலோ, கர்நாடகத்திலோ,ஆந்திராவிலோ ஒரு திராவிட கட்சிஏனும்
தன் னை , நாமெல்லாம் திராவிடர்கள் என்று கூறி தன் கட்சியை நிருபித்து விட முடியுமா?


எல்லோருமே திராவிடன் என்றால்  ஏதோ தமிழன் மட்டும் கன்னடம், மலையாளம், தெலுங்கு என் அனைவரிடமும் ஒற்றுமை பாராட்ட வேண்டும் என்று கூறுவது சரியல்ல. பெரியார் பல புரட்சிகள் செய்தவர் . ஆனால் தமிழனிடம் மட்டும்தான் நீ திராவிடன் என்பதை விதைத்து இருக்கிறார். வைக்கத்தில் கூட யாரும் தன்னை யாரும் திராவிடன் என்று சொல்வதில்லை . ஏன் சற்று ஒரு படி மேலே போய் மூனாறு பகுதி வாழ் தமிழர்களுக்கு இரவை சந்திக்க சாலை ஓர விளக்குகள் கூட இல்லை. கர்நாடக அரச பற்றியோ, கன்னட மக்கள் பற்றியோ சொல்ல தேவையே இல்லை.ஆந்திராவின் எந்த ஒரு மனிதனும் தன்னை திராவிடன் என்று ஒப்பு கொள்வதில்லை. சமஸ்கிருதமும், லக்ஷ்மி வழிபாடும் , பெருமாள் பெருமையும் பேசும் போது தான் தெரிகிறது தமிழன் மட்டும்தான் திராவிடன் என்று . திராவிடத்தை  ஏற்று கொண்ட காரணத்தால் தமிழன் மட்டும் பிற திராவிட இனத்தவரிடம் தோல்வி அடைவது சரிதானா  ?

தமிழ்நாட்டில் இருந்துதான் பெங்களுருக்கு மின்சாரம் அளிக்க படுகிறது. ஆனால் அவர்கள் தண்ணிர் தர மாட்டார்கள் .
தமிழ்நாட்டில் இருந்துதான் கேரளாவிற்கு காய்கறிகள், அசைவ உணவு பொருளென கொண்டாடும் மாடுகள் அனுப்பபடுகின்றன. ஆனால் அவர்கள் கூல்ட்ரிங்க்ஸ் நிறுவனத்தின் கைக்கூலியாக வேலை பார்க்க முல்லை பெரியாறு பிரச்சனையை இடைவிடாமல் எழுப்புகின்றனர் .
இன்னும் சற்று முன்னேறி ,
ஆந்த்ராவும் தன் பங்கிற்கு ,தமிழனை சுட்டு தள்ளி கொண்டு இருக்கிறது .

தமிழ்நாடுதான் இந்தியாவில் இருக்கிறது . அதனால் இதன் இயற்கை வளங்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சொந்தம் . ஆனால் தமிழன் இந்தியன்தானே . ஏன் இவனுக்கு மட்டும் பிற மாநிலங்கள் எதையும் தர மறுக்கிறது .

 தமிழர்களே இனி வரும் காலங்களில் தமிழன்  நம்மை ஆள வழி செய்வோம் . தமிழ் வுணர்வுகளையும் , தமிழனின் தன்மானத்தையும் நிலை நிறுத்துவோம் . ( ipl கிரிகெட் இந்திய சார்பாக விளையாடுவது கூட இல்லை . எவனோ கம்பெனி காரன் , எவனையோ விலைக்கு வாங்கி நம்மை எம்மாற்றி விட்டு , விளையாட்டு திடலிலும் சம்பாதிக்கிறான் .அவன் விற்பனை செய்யும் பொருளிலும் சம்பாதிக்கிறான் . 
ஒவ்வொரு முறை தமிழன் தன்னை வுணர முற்படும் போதும் கிரிகெட்டும் நம்மை மதிமயங்க செய்கிறது . என்ன செய்வது எப்போதும் மயக்கதில்லேயே தமிழன் வாழ்ந்து பழகிவிட்டான் .)


Tuesday 7 April 2015

மார்க்கெட்டிங் எனும் பேய்



கழுதைகளை குதிரைகளாய் காட்டும்
குதிரைகளை கோட்டன்களாக்கும்
கோட்டான்களை குருவிகாளாய் காட்டும்
குருவிகளை குரங்குகளாக்கும்
குரங்குகளை கோபுரமாக்கும்
கோபுரத்தை குப்பை மேடாய்  காட்டும்
குப்பை மேட்டை குளம் போல் காட்டும்
குளங்களை எல்லாம் கானல் நீராய் காட்டும்
கானல் நீரை கடல் போல் காட்டும்
கடலை கூட கட்டாந்தரை யாக்கும்
கட்டாந்தரை எல்லாம் செழிப்பாய் தெரியும்







செழிப்பான இடமெல்லாம் சுவர்களாக மாற்றும்
சுவர்களையும் நாளை சுவடு இல்லாமல் மாற்றும்

அனைத்தும் கண்முன்னே நடக்கிறது - நம்
கண்களும் நம்மை ஏமாற்றுகிறது

அறிவை மங்க செய்யும் ஆசான் அவன்
அழகு உணர்விற்கு அடிமையாக்கும் ஆசிரியன் அவன்
ஒழுக்கமெல்லாம் தவறென்று போதிப்பவன் அவன்
தாய்மொழியில் பேசினால்கூட தவறென கூறும் குரு அவன்
ஏன் என்று கேட்க நாவிற்கு திறனில்லை






ஏனெனில் போதிக்கும் இடத்தில் அவன்
கேட்கும் இடத்தில் நாம்
மாற்றவே முடியாது
மாறவும் முடியாது
மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறியே
நம்மையெல்லாம் மாற்றியவன் அவன்
அவன்தான்
மார்க்கெட்டிங் எனும் பேய் !


வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...