Wednesday 15 March 2017

சுற்றுலா போக ஏற்ற இடம் -3



முருடேஸ்வர கோவில்



இது முருடேஸ்வர கோவில். 20 அடுக்கு கொண்ட இந்த கோவில் 123 அடி  உயரம் கொண்டது  .கர்நாடக மாநிலத்தில் ,உத்தர கர்நாடகத்தில் உள்ளது. ஒரு முறை போய் பாருங்க.சுத்தியும் கடல்.உயர்ந்த சிவன் சிலை .கமெரசியலா கூட கோவில்,கடல் ,போட்டிங்கன்னு சூப்பரா இருக்கும். இந்த 20 அடுக்கு கோபுரத்தின் உள்ளே செல்ல லிப்ட் வசதி உள்ளது.மேல போய் நின்னு ஊரை சுத்தி பார்க்கலாம் . கோடை விடுமுறைக்கு நல்ல இடம். மங்களூர் , மஞ்சுநாதர் கோவில் இதெல்லாம் வரலாறுகளை கடந்த இடங்கள் .இந்த இடமெல்லாம் பூர்வீக தமிழர் வாழ்ந்த இடங்கள். இந்த கோவிலில் வற்றாத நீர் ஊற்று ஒன்று உள்ளது. அதில் வருவது கங்கை நீர் என்றும், முன்னொரு காலத்தில் வாழ்ந்த எதோ ஒரு மன்னன் கங்கை நதியோடு இந்த நீர் ஊற்றை இணைத்துள்ளான் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள் .


குக்கி சுப்பிரமணியம் கோவில்

குக்கி சுப்பிரமணியர் கோவில் இருக்கும் மலையின் பெயர் கடம்ப மலை. இது கடம்ப வம்சாவழியினர் ஆண்ட இடம் .

குக்கி சுப்பிரமணியர் கோவில் , நாக தோஷம் உள்ளவங்களுக்கு ,தோஷம் நீங்க ஏற்ற இடம் . ரெண்டு கோவில் இருக்கு. மறக்காம பழைய சுப்பிரமணியர் கோவிலுக்கும் போங்க. கோவில் வாசலில் கடம்ப ஆறு ஓடுகிறது. அழகு அந்த இடம். கடம்ப மலை ஏற உதவி செய்யும் ஆட்களும் அங்கு உள்ளனர்.




இது கோவா .கடற்கரை ஓரம் விடுமுறையை கடக்க விரும்பினால் கோவா ஏற்ற இடம். ஒன்றா இரண்டா ,பார்க்கும் இடம் எல்லாமே பீச் தான்.30 க்கும் மேற்பட்ட பீச் இங்கு உள்ளது. பெய்ஜிங் போனவுடன் ஒரு இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கங்க .( ஒரு நாள் வாடகை 300 ரூபாய் தான் ) 3 நாள் வாடகை 5 நாள் வாடகைக்கு தர்றாங்க. நீங்க ஊருக்கு திரும்பும் போது போன் பண்ணினா அவங்களே வந்து எடுத்துப்பாங்க. அது வரையிலும் நீங்க பயன்படுத்திக்கலாம்.

தென்னை மரங்கள் நிறைந்து நிற்க , அந்த கடலில் கால் நனைப்பது சுகம். ரம்யமா இருக்கும். குட்டி குட்டி மலை பாறைகள். அதில் விளையாடும் நண்டுகளும் ,மீன்களும் கையில் பிடிக்க ஆசையாய் இருக்கும்.ஆனால் முடியாது.

பீச் க்கு மட்டும் சுத்தாதீங்க .அருகாமையில் வரலாற்று கால கோட்டைகள் உள்ளன. டால்பின் பார்க்க , அதுங்க விளையாட்டை பார்க்க கடலுக்கு உள்ள கொஞ்ச தூரம் அழைச்சிட்டு போறாங்க . அழகு .

அப்புறம் போண்டாவில் ஒரு மூலிகை பண்ணை இருக்கு .அங்க போய் பாருங்க .எல்லா மூலிகை மரங்கள் குறித்தும் விளக்கம் தருவாங்க. அங்க விற்கும் எல்லா பொருள்களும் கலப்படம் இல்லாத பொருள்கள்.அங்க முந்திரி சாராயம் விக்கிறாங்க. குடிப்பதற்கும் இலவசமா கொஞ்சம் தர்றாங்க. ஒரு தனி நபர் 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் வாங்கி கொள்ளலாம். அவ்வளவுதான் அங்கிருந்து எடுத்து வர முடியும். ஊரை தாண்டி எடுத்து வர கூடாதுன்னு அந்த ஊர் சட்டம் சொல்லுது.

சனி கிழமை சாயங்காலம் , சந்தை போடுறாங்க .அங்க போங்க ! ஆனா எதுவும் வாங்காதீங்க .எல்லாம் கூடுதல் விலை. பேரம் பேசும் திறம் இருந்தால் பிரச்னை இல்லை.

இங்குள்ள சர்ச்சை எல்லாம் பாருங்க ! கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கும்.

ஆனா ஒன்னு மட்டும் மறந்துடாதீங்க ! ஏற்கனவே வெள்ளைய இருக்குறவங்க கறுப்பாகிடுவாங்க ! கருப்பா இருக்குறவங்க , கவலையே படாதீங்க ! இன்னும் கொஞ்சம் கருப்பு கூடும் .அவ்வளவு வெயில். குளிர் காலத்திலேயே தூக்கும்.வெயில் காலத்துல சொல்லவே வேண்டாம்.

( சின்ன வேண்டுதல் : பீச் க்கு போற ஆண் ,பெண் எல்லோரும் பீர் குடிச்சிட்டு கடலுக்குள்ள தூக்கி போடாதீங்க .பாவம் அங்குள்ள உயிர்கள் .)

கொஞ்சம் காஸ்ட்லீ .யாரும் ரொக்கமில்லா வர்த்தகம் அப்புடின்னு நம்பிக்கிட்டு கார்டு எடுத்துக்கிட்டு போகாதீங்க. எல்லாம் அங்க ரொக்கம்தான். wifi மட்டும் எல்லா இடத்துலயும் free .

போய் வா என்று சொல்லும் ஒரே ஊர் கோவா தாங்க ! போய்வாங்க ஒரு முறை!


Thursday 9 March 2017

ஆரியர் யார் ?- எழுத்தாளர் பா.பிராபகரன் பார்வையில் !

எப்படி திராவிடம் என்ற சொல் தமிழில் இல்லையோ , அப்படிதான் ஆரியம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் இல்லை .

ஆரியர்கள் என்று தங்களை கூறி கொள்பவர்கள் , ஈரானியர்கள் .

பாரசீக மொழியில் ஆரியன் என்றால் ஈரானியன் என்று பொருள் .
ஈரான் என்றால் பாரசீக தேசம் என்று பொருள்.

இதன் அடிப்படையில் பாரசீகம் ,ஈரான் ,  ஆரியம் எல்லாம் ஒரே பொருள் கொண்டவை .


ஆரியர்கள் கூற்றுப்படி , பிராமணர்கள், க்ஷ்த்ரியர்கள் , வைஷ்யர்கள் ,மற்றும் சூத்திரர்கள் என்ற பிரிவுகள் உள்ளன.

ஆனால் இன்று வரை பிராமணர்கள் மட்டும் தான் சமஸ்க்ரிதத்தில் பழகிவருகின்றனர். பிற ஜாதியினருக்கு சமஸ்க்ரிதம் தெரியவில்லை .

எனில் பிராமணர்கள் மட்டும்தான் ஆரியர் எனப்படும் ஈரானியர்களா என்று சந்தேகம் எழுப்புகிறார் பிராபகரன் அவர்கள் !

பிரிஹ்யூ என்னும் மொழி இன மக்களின் கணக்கெடுப்பை 1871 ல் 125000 பேர். ஆனால் இன்று 250000பேர் . மேலும் இறந்து போன தாக எண்ணப்பட்ட ஹீப்ரு மொழி கூட இன்று வழக்கத்தில் வந்து விட்டது. அப்படி இருக்க , சமஸ்க்ரிதம் எனும் மொழி வளர்ந்திருக்க வேண்டும் அல்லவா ?

ஆனால் எந்த விதத்திலும் முன்னேற்றம் கொள்ளாத சமஸ்க்ரிதம் ஒருவேளை , கணக்கியல் மொழியாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறார். ( அதாவது இப்போதெல்லாம் நாம் பௌதீகம் , ராசாயனம் படிக்கும்போது பயன்படுத்தும் போர்முலா வாக இருக்கலாம் )

சமஸ்க்ரிதம் , எல்லா சடங்குகளுக்கும் , பயன்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு மொழியாக இருந்திருக்கலாம் .


நாகரீக தலைமை வகிப்பது யார் ?

சில பல ஆண்டுகள் அமைதியாக இருந்த உலகம் , 1500 களில் நாடு பிடிக்கும் விளையாட்டை ஆரம்பித்தது . இதனால் வெள்ளை இன மக்கள்தான் பெரிய மனிதர்கள் என்ற எண்ணத்திற்குள் வந்தனர். அந்த சமயம் இத்தாலியும், ஜெர்மனியும் தாமதமாக இந்த விளையாட்டை ஆட ஆரம்பித்தன .

வெள்ளையர்களின் பூர்வீக நாகரிகம் கிரேக்க நாகரீகம்,
கிரேக்கத்தின் பூர்வீகம் எகிப்து .
அங்கு இருப்பவர்களோ , கறுப்பர்கள் .
அவர்கள் வழிவந்த  நாகரீகத்தை ஜெர்மானியர்கள் ஒப்புக்கொள்ள வில்லை.

சரி சீனா நாகரிகம் கைகொடுக்குமா என்று தேடும் பொழுது , சீனர்கள் மற்றும் ஜெர்மானிய மக்களின்   உருவம்  வேறு வேறாக இருந்தது .

மிஞ்சி இருப்பது பாரசீகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த நாகரீகம் .

இப்போது இந்த மூன்றும் இணைந்தது  தான் ஆரிய நாகரீகம்.

ஏற்கெனவே ஈரானியர்கள் தான் பாரசீகர்கள் என்பது உலகம் அறியும் .
அதே பாரசீகர்கள் தான் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள்.
இவர்கள் வெள்ளை நிறம் மற்றும் அறிவு கோட்பாடுகள் பிடித்து போகவே ஜெர்மன் தன்னையும் , ஆரிய இனம் என்று கூறி கொண்டது.

(அன்று முதல் இந்திய ஆரிய இனம்
பெருமிதத்தின் உச்சிக்கே சென்று விட்டது )

இவர்களை தவிர இந்தியாவில் வாழ்ந்த ,பிற மக்கள் திராவிடர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் கூற ஆரம்பித்தனர் ஆரியர்கள் . ஒதுக்கி வைத்தனர்.

இப்போது தான் ஆரம்பிக்கிறது பிரச்னை.

1921ல் மார்ஷல் என்பவர் , ஹரப்பா மொஹஞ்சதாரோ இடங்களை கண்டறிந்து , அதற்க்கு சிந்து வெளி நாகரீகம் என்று பெயர் சூட்டினார். இது ஒப்பில்லா திராவிட நாகரீகம். இங்கு வாழ்ந்த மக்களை , குதிரையில் வந்த ஆரிய இனம் தெற்கு நோக்கி விரட்டி விட்டு , வடஇந்தியாவை ஆக்ரமித்துள்ளனர். அவர்கள் தான் ஆரியர் என்றார் .

இதனை ஒப்பு கொள்ள மனம் இல்லை யாருக்கும்.!

அதே சமயம் ,  ஆரியர்களின் வேதங்களிலும் சிந்து பகுதி மட்டுமே பதிவு செய்ய பட்டுள்ளது.

ஒருவேளை இவர்கள் சுமேரியர்களாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் பிரபாகரன் அவர்கள் .

சுமேரியன் - பாரசீகம் - ஈரானியன் - ஆரியன் - ஜெர்மானியன் - இத்தாலியன் 

 இவை எல்லாம் ஒன்றுதான் !

ஆரியன் என்றால் என்ன பொருள் ?

ஆரியன் என்றால்  நற்பண்பு கொண்டவர்கள்.
எல்லோரையும் விட மேலானவர்கள் !

என்று கூறுவது தவறான பொருள் !

ஆரியம் என்றால் குடிமகன் என்று பாரசீக மொழியும் லைசீய மொழியும் பொருள் தருகிறது.

எதோ ஒரு குலப்பெயர் . அவ்வளவுதான்.

அவர்கள்  கெட்ட குணம் கொண்ட ஒருவரை கூறுவதாக இருந்தால் கூட , ஆரிய என்ற வார்த்தையை சேர்த்தே பயன்படுத்துகிறார்கள்.

ஆரியன் என்றால் தங்கள் கூட்டத்தவன் என்று பொருள் !
அனாரியன் என்றால் வேறு கூட்டத்தை சேர்ந்தவன் என்று பொருள் !

ரிக் , யசூர் வேதங்களில் , குலத்தை குறிப்பிடவே ஆரிய என்று கூறுகிறார்கள்.
புரு வம்ச மன்னன் சுதாஸ் , தங்கள் குலத்திற்கு உதவி செய்த யாதவ மற்றும் இஷுவாகு குலத்து மக்களை அனாரியன் என்றே குறிப்பிடுகிறார்.

ராமன் இஷுவாகு குலத்தில் பிறந்தான்.
கிருஷ்ணன் யாதவ குலத்தில் பிறந்தான்.

இருவரும் ஆரியர்கள் அல்லர்.

பிற்காலத்தில் , சாம , அதர்வண , பௌத்த , சமண நூல்கள் ஆரிய புகழ் பாட ஆரம்பித்தது .

ஆர் என்னும் இந்தோ இரானிய சொல் , சாமர்த்தியமாக ஒன்று சேர்ப்பவர்கள் என்று பொருள் தருகிறது.

கிரேக்கம் மற்றும் லத்தின் மொழியில் ஆர் என்றால் , சுலபமாக இடம்பெயர்பவர்கள் என்று பொருள் தருகிறது .

அர்த்த சாஸ்திரம் என்பதும் கூட , பல்வேறு தகவல்களை ஒன்று திரட்டுவது என்றே பொருள் கொள்ளலாம்.

இதனை எல்லாம் அடிப்படையாக கொண்டு ,

ஆரியர்கள் என்பவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு ஆற்று படுத்தப்பட்டவர்கள் என்று பொருள் கொண்டால்,

ஆற்றியர்கள் என்று வழங்கப்பட்டு பிற்காலத்தில் மருவி 

ஆரியர்கள் என்று மாறி இருக்கிறது.

ஆரியர்கள் என்றால் ,
பிராமணர்கள் என்றால்
ஈரானியர்கள் என்றால்
பாரசீகர்கள் என்றால்
இத்தாலியர்கள் என்றால்
ஜெர்மானியர்கள் என்றால்

மேலானவர்கள் என்று பொருள் இல்லை !
தங்கள் தேவைகளுக்காக ஒன்று சேர்ப்பவர்கள் .

இவர்கள் எல்லோரும் பாபிலோனிய நாகரிகத்தை அடிப்படையாக கொண்டவர்கள் . பாபிலோனிய மற்றும் யூதர்களுக்கு காளைகளை சுத்தமாக பிடிக்காது . அது  தீய சக்தி என்றே கருதுகின்றனர் . காளைகள் யூதர்களுக்கு மிக முக்கிய எதிரி !

இப்போது நமக்கு புரியும் மாடு சார்ந்த பிரச்சனைகள் ஏன் நடக்கின்றன என்று !

samaskirutham க்கான பட முடிவு


Wednesday 8 March 2017

விவசாயிகள் , தன்னை தானே வாழவைத்து கொள்ள வழிகள் !

பொருளாதார பயனற்ற திட்டம் இது ! - பகுதி 1 


பெப்ருவரி மாதம் 15 ம் தேதி இந்தியா பிரதமர் , ஹைட்ரோகார்பன் எனும் திட்டத்திற்கு கையெழுத்து போட்டார். இதில் 6 மாநிலங்களில் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உட்பட 31 இடங்களில் எடுக்க இருப்பதாக தகவல் தெரிவிக்க படுகிறது .

அவ்வாறு எடுக்க படும் ஹைட்ரோகார்பன் மூலம் இந்தியாவிற்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு 5000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.இதில் தமிழகத்திற்கு 10 % மும் , அதாவது 500 கோடி ரூபாயும் , அதில் ஒரு 10 % ஆகிய 50 கோடி ரூபாய் வருவாய் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் போய்சேரும் .

வருமானம் என்ற அடிப்படையில் இதில் தமிழ்நாட்டிற்கு எந்த பலனும் இல்லை. அதே சமயம் , இதன் மூலம் இந்தியா பயன் பெரும் என்றால் எந்த கேள்வியும் யாரும் கேட்கபோவதும் இல்லை.

ஆனால் இந்தியாவிற்கும் இந்த திட்டத்தால் பெரிய பலன் இல்லை . காரணம் அடுத்த 15 ஆண்டுகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் தனியார் நிறுவனம் பெற போகும் வருமானம் பன்மடங்கு பெரும் . கிட்டத்தட்ட 30000 கோடியை தாண்டும் .

சில அறிவாளிகள் கூறுகிறார்கள் . இந்திய வருமானம் பெறுக போகிறது. மோடிஜி இந்தியாவை வல்லரசு ஆக்கப்போகிறார் என்று  !

ஆனால் அது உண்மை இல்லை. இந்தியா முதலில் , இந்த திட்டத்தை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும் ? தானே செய்யலாம் .
அதைவிடுத்து, தான் செய்ய போவதாக மக்களிடம் பொய் கூறி நிலங்களை வாங்கி , அதனை தனியாருக்கு தாரை வார்க்கிறது .

சரி தனியார் நிறுவனங்கள் இந்த ஹைட்ரொகார்போனை எடுத்து என்ன செய்யும் ?

இந்தியாவிற்கு விற்கும் . அதனை இந்தியா அதீத விலை கொடுத்து வாங்கும் !

எனில் அரசுக்கு நட்டம் .

ஏற்கெனவே நடைமுறை உள்ள நிலக்கரி  நிறுவனம் பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்று மோடிஜி கருப்பு பண ஒழிப்பு பற்றி பேசுகிறார். அதனை ஒழிக்க நடவடிக்கை எடுக்க படும் என்று கூறி சில உதவாத திட்டங்களையும் கொடுத்திருக்கிறார்.  ஆனால் அவருக்கு தெரியும் எங்கெல்லாம் கருப்பு பணம் இருக்கிறது என்று !

சரி , இந்த நிலக்கரி நிறுவனத்தில் என்ன நடக்கிறது ?

இந்த உலகத்திலேயே நிலக்கரி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு நம் இந்தியா .
இந்த உலகத்திலேயே நிலக்கரி அதிகம் இறக்குமதி செய்யும் நாடும் நம் இந்தியா தான் !

வியப்பாக இருக்கிறதா ?

ஆமாம் இந்த உலகமும் அப்படிதான் நம்மை வியந்து பார்க்கிறது ! இது எப்படி சாத்தியம் என்று ?

மேற்கு வங்கத்தில் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது . ஆனால் எங்கும் அது ஏற்றுமதி செய்யப்படுவதில்லை . ஆனால் ஏற்றுமதி செய்யப்பட்டு , வேறு நாட்டிற்கு சென்று , அதற்க்கு இடையில் இடைத்தரகர் இருப்பது போல் பேசி மீண்டும் இந்தியாவிற்கு வருவது போல் காட்டப்படுகிறது.

இதனால் இந்தியாவிற்கு எப்போதும் நட்டம் .ஆனால் இடைத்தரகர்கள் , கலால் வரி துறையினர் இப்படி பலபேருக்கு இதில் வருவாய் வருகிறது. இதன் மூலம் அதிக கருப்பு பணமும் சுற்றி வருகிறது .
இது இந்தியாவில் நடைபெற்ற , நடைபெறுகின்ற மிகப்பெரிய ஊழல் !

இப்படித்தான் , ஹைட்ரோகார்பன் திட்டமும் மாற இருக்கிறது.

அரசு தான் செய்யாமல் , தனியாரை செய்ய வைத்து ,
பிறகு அங்கிருந்து இறக்குமதி செய்து அதே காஸ் அதே நெடுவாசலுக்கு , பன்மடங்கு விலையில் வரும் . இது தான் மத்திய அரசின் திட்டம்.

எனவே இந்த திட்டத்தால் இந்தியா வல்லரசு ஆகும் என்று கூறும் அறிவாளிகளே தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள் . இந்த திட்டத்தால் பொருளாதார ரீதியாக 10 பைசாவுக்கு பிரயோசனம் இல்லை .

ஊழல் தான் பெருகும் . கருப்பு பணம் வளரும் !





பகுதி 2:

இந்த திட்டம் மக்களுக்கு பாதிப்பு தரும் . எவ்வாறு என்று பல விழிப்புணர்வு காணொளிகள் வந்து விட்டன.
பூமிக்கு அடியில் 2500 அடியில் துளை யிட்டு , அதில் 650 க்கும் மேற்பட்ட ரசாயன கலவைகளை கொட்டி , அதில் இருந்து ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்க படும். அப்படி எடுக்கப்படும்போது , அதில் இருந்து வெளிவரும் நஞ்சு , அருகில் உள்ள நீர்நிலைகள் முதல் விவசாய நிலங்களையும் பாதிக்கும். இதனை தொடர்ந்து உட்கொண்டாலோ , சுவாசித்தாலோ காசநோய் வருவது உறுதி .

இது 2010 முதல் நம்மாழ்வார் அய்யாவின் பரப்புரை ஆகும் . இப்படி சொல்வோரெல்லாம் அறிவாளியா ? விஞ்ஞானி யா என்று ஒரு கூட்டம் கேட்கிறது .

இது குறித்து விளக்கம் கொடுத்த நம்மாழ்வார் ஐயா,இயற்கை வேளாண் விஞ்ஞானி தான்  .

ஆகையால் , இந்த திட்டம் கைவிட பட வேண்டும் என்று பெப்ருவரு 17 ம் தேதி முதல் நெடுவாசல் மட்டும் இன்றி உலகின் எல்லா தமிழர்களும் போராடி வருகிறார்கள் .

ஆனால் இன்று வரை அரசு பதில் கூற வில்லை.

மாறாக ,

பாரதீய ஜனதாவை சேர்ந்த தமிழிசையும், பொன்ராதா கிருஷ்ணனும்,
H .ராஜாவும்

சரமாரியாக , தமிழக மக்களை தேச துரோகிகள் என்று கூறி வருகின்றனர்.

தமிழர்கள் தேசத்துரோகி எனில் தமிழிசை யார் ?


பகுதி - 3

இதற்க்கு முடிவு என்ன ?

போராட்டம் தொடங்கி , இதோ நெருங்கி விட்டோம் ஒரு மாதத்தை , ஆனால் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது.

மாநில அரசோ , உண்டு , உறங்கி மகிழ்ந்து வருகிறது .

எனில் , இந்த போராட்டத்தை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

அப்படியாயின் போராடும் முறையில் தவறு உள்ளது.

தண்ணிக்குள் நின்று போராட்டம்!

உண்ணாவிரத போராட்டம்!

பாடை கட்டும் போராட்டம் !

கோலம் போடும் போராட்டம் !

இது போன்ற போராட்டத்தால் யாருக்கு நட்டம் !

இந்த போராட்டத்தால் யாருக்கும் நட்டம் இல்லை விவசாயியை தவிர்த்து !

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது , எல்லா இளைஞர்களும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தனர். அது என்ன முடிவு ?

இனி பெப்சி கோக் போன்ற அந்நிய பானங்களை தொட மாட்டோம்.என்று !

இந்த செய்தி பிபிசி வரை ஒளிபரப்பானது .

எனில் , இந்த போராட்டத்திலும் , 

விவசாயிகள் 5 முடிவுகள் எடுத்தால் ,
மத்திய மாநில அரசுகள் , 
நெடுவாசல்  போராட்டத்தை திரும்பி பார்க்கும் !


முதலில் , விவசாயம் சார்ந்த எல்லா மானியங்களையம் , சலுகைகளையும் வேண்டாம் என்று  முடிவு எடுக்க வேண்டும்.

இரண்டாவது , அரசு விலை நிர்ணயம் செய்ய கூடாது .

மூன்றாவது கரும்பு உற்பத்தியை நிறுத்த வேண்டும். ஏனெனில் , ஒரு ஆண்டிக்கு விவசாயிகளுக்கு , கொடுக்கப்படும் இலவச மின்சாரம் 2851 கோடி ரூபாய் ஆகும். அதே போல் கரும்பு ஒரு டன்னுக்கு அவர்கள் கொடுக்கும் பணம் ரூபாய் 2600 . எனில் தமிழகம் முழுமைக்கும் உற்பத்தி செய்யப்படும் கரும்புக்கு இவர்கள் கொடுக்கும் மொத்த விலை
 208 கோடி ரூபாய் .

ஆக மொத்தம் மின்சார செலவு + உற்பத்தி விலை இரண்டையும் கூட்டினால் கூட 3100 கோடியை தாண்டாது . அனால் கரும்பை வாங்கி கொண்டு , அதன் மூலப்பொருள் களை கொண்டு தயாரிக்க படும் , டாஸ்மாக் வருமானம் 30000 கோடி ரூபாய் .

ஒவ்வொரு விவசாயியும் கரும்பு உற்பத்தியை நிறுத்தி விட்டு , வேறு புன்செய் பயிர்கள் விளைவிக்க முடிவெடுத்தால் , தமிழ்நாட்டின் எல்லா சாராய உற்பத்தி நிலையங்களையும் மூட வேண்டி வரும் . ஏனெனில் , மூல பொருளுக்கென்று 10 பைசா செலவில்லாமல் இந்த சாராய உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அடுத்த மாநிலத்தில் இருந்து மூலப்பொருள் வாங்கி இந்த சாராய ஆலைகள் இயக்க மாட்டார்கள்.

இந்தியாவிலேயே கரும்பு உற்பத்தியில் 4 வது இடம் தமிழகத்திற்கு .

கரும்பு ஒரு முறை பயிரிட்டால் அடுத்த 3 அல்லது 5  ஆண்டு காலத்திற்கு அடி மரத்தை விட்டு விட்டு அறுவடை செய்தால் , மீண்டும் மீண்டும் விளையும் . அதற்க்கு பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் உரம் போட்டால் போதுமானது .இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் , அரபு நாடுகளில் பணியாற்றி மேலும் மேலும் பணக்காரர் ஆகிவிடலாம் என்று பரப்புரை செய்தே , கரும்பு உற்பத்தியை மத்திய மாநில அரசுகள் ஊக்குவிக்கின்றன. அப்படி செல்லும் விவசாயிகள் தான் அரபு நாடுகளின் கட்டிட கலையிலும் , விவசாயத்திலும் ஈடுபடுத்த படுகின்றனர்.

கரும்பு உற்பத்தி இனி நடக்காது , அரபு நாடுகளில் கூலி வேலை செய்யும் நம் விவசாயிகள் , உள்நாட்டில் மட்டுமே வேலை பார்ப்பார்கள் என்று முடிவு எடுத்தால் ,

மத்திய மாநில அரசுகள் ஓடி வந்து , தமிழக பிரச்சனைகளை தூர்வாரும்.

நான்காவது , இத்தனை நாள் போராட்டம் நடந்தும் , எந்த ஒரு கிராமத்திலும் டாஸ்மாக் விற்பனை குறையவே இல்லை.

நம்மால்  ஒரு டாஸ்மாக்கை கூட விட்டு தர முடியவில்லையாயின் , நம்  பிரச்சனைகள் தீராது .

ஐந்தாவது , யூரியா , பொட்டாஷ் DAP போடுவதை நிறுத்துங்கள் !
இயற்கை வழியில் அரிசி உற்பத்தி செய்யுங்கள் .

விதை நெல் வாங்காதீர்கள் !

IR 8, IR 20 போன்ற இஸ்ரேளுக்கு சொந்தமான இன்டர்நேஷனல் அரிசி ஆய்வு மையத்தின் எந்த ஒரு விதையும் வாங்காதீர்கள்.

பாரம்பரிய நெல் விதை இப்போதும் கிடைக்கிறது.

முடிவு எடுங்கள் ! உங்கள் கையில் தான் இந்த நாளைய சந்ததியே உள்ளது !

மாற்று வழி எல்லாம் அரசு செய்யாது!

அரசு என்ன செய்ய வேண்டும் என்று நாம் முடிவு எடுக்க கூடாது !

நாம் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமே நம் கையில் உள்ளது !

விவசாயிகளே இது உங்கள் வாழ்க்கை மட்டும் அல்ல!

தமிழக மக்களின் வாழ்க்கை !

வாழ வைப்பதும், வாழ்வை அழிப்பதும் உங்கள் கைகளில் !



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...