Tuesday 31 May 2016

மினிஸ்டர் வைட் - MINSTER WHITE




மினிஸ்டர் வைட் உரிமையாளர் யாருன்னு தேடி பாருங்க !

கலிபோர்னியா , ச்டோக்க்டன் ,

அப்பரெல் & பேஷன் என்ற நிறுவன பெயரும் ,

அதன் உரிமையாளர்

லா. ச்சே என்றும் வரும் .






தம்பி விஜய சேதுபதி , நம்ம சாமி, நம்ம மொழி அப்புடின்னு வசனமெல்லாம் பேசிட்டு , நம்ம ஊரு நெசவாளர்களுக்கெல்லாம் , வேஷ்டியே நெய்ய தெரியாத  காரணத்தால வெள்ளைகார கம்பெனியோட விளம்பரத்துக்கு ,
நம்ம ஊரு , நம்ம ஊரு அப்புடின்னு கூவி , கூவி யாவாரம் பாத்து கொடுக்குது .

இதுல எப்போதும் கருத்து வேறு , இவருக்கு ,

நடிகர்கள் பற்றி பேசி அடிச்சிகதிங்க மக்களே! அப்புடின்னு ! சொல்லிபுட்டு
வெள்ளகாரன நம்முர்காரன் தான் அப்புடின்னு அறிமுகம் செய்றாரு !





ஆனா இவரை விட , தமிழ் தமிழ் அப்புடின்னு உருகி உருகி வித்தவரு ,
நம்ம பாரதிராஜா தான் . ( இவரு தமிழ்நாட்டின் கிராமபுரங்களையும் படம் பிடுச்சி வித்தவர் தானே !முக்கியமாக மதுரை !)

அவரு அளவுக்கு தம்பிக்கு டிரைனிங் இல்லை .

*இவர மாதிரியே , யாரும் இங்கு அன்னியர் இல்லை என்று , 
பாட்டு பாடி , டான்ஸ் ஆடி , நாங்களும் , நீங்களும் ஒண்ணுதான் , அப்புடின்னு சொல்லியே 
வாங்க , சாப்புடுங்க 
டொமினோ பிட்சா என்று அழைக்கிறாங்க இன்னொரு பொண்ணு !

விஜய சேதுபதி எதோ தமிழர் விடுதலைக்காக குரல் கொடுத்தார் .என்பதெல்லாம் கூட அவருக்கு வெளி நாட்டு நிறுவனம் கொடுத்த அழுத்தம் தான். அவர் மக்கள் மனதில் பதிந்தால் தான் , அவர் கொடுத்த விளம்பரம் மக்களை சென்றடையும். என்னே  இவுங்க தமிழ் உணர்வு !

எப்புடி பார்த்தாலும் இவங்களுக்கு , அழகு தமிழில் , ஏமாற்று வார்த்தைகளை கத்துகொடுப்பது 
ஒரு நல்ல 
தமிழச்சி பெற்றெடுத்த 
தமிழன் தானே !

அவனை என்ன பண்ண முடியும் ?

சில வித்தியாசமான செய்திகள்

மே மாதம் 31 - 2016

இன்றைக்கு சில வித்தியாசமான செய்திகள் :

*  மந்தை வெளி காவல் துறை டெம்போ கார் திருடு போனது . அதே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .


இது காவல் துறைக்கு வந்த சோதனையா ?


*  திரைப்பட தயாரிப்பாளர் ஆபாவாணன் , வங்கியை ஏமாற்றி 3 கோடியே 46 லட்சம் பணம் பெற்று , அதனை திரும்ப கொடுக்காத வழக்கில் , அவருக்கு 2 கோடியே 10 லட்சம் அபராதம் மற்றும் , 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது . 


3 கோடி கடனுக்கே 5 ஆண்டு தண்டனையின்னா , 3000 கோடி கடன் வாங்கின நம்ம கர்நாடக ராஜ்ய சபை உறுப்பினர் மல்லையாவிர்க்கு , எத்தன வருஷ தண்டனை கொடுக்கணும் ? கணக்கு கொஞ்சம் இடிக்குதில்ல ?


*  காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் சேரன் கோர்டில் ஆஜரானார். மற்றும் வாயிதாவை  நீடிக்க அவகாசம் பெற்றுள்ளார் .  எத்தனை வாயிதா ?

எப்போதுமே , 
தன்னை நல்லவருன்னு காட்டிக்க சேரன் முயற்சி எடுப்பாரே ? அது என்ன ஆச்சி ?

*  தான் இறந்து விட்டதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார் நடிகர் செந்தில் .

அப்துல் காலம் உயிரோடு இருக்கும் போதே ,  ஒரு மாநிலத்தின் கல்வி துறை அமைச்சர் அவருடைய படத்துக்கு  மாலை போட்டு , இறுதி அஞ்சலி செலுத்தினாங்க . ஆனால் அதையெல்லாம் அவரே பெருசா எடுத்துக்கல !
என்னமோ போங்கையா ? 

கவுண்டமணி பற்றி வராத செய்தியா ?

அடுத்த தேர்தலில் , பாண்டே, அனிதா குப்புசாமி , செந்தில் , சிங்கமுத்து இவங்களுகேல்லாம் கண்டிப்பா சீட்டு  உண்டு . 

அதுவரைக்கும் இப்புடி தான் , தன்னை மக்களுக்கு ஞாபக படுத்திகிட்டே இருப்பாங்க !


* பழங்கால சிலைகள் ஏற்றுமதி செய்யபடும் போது , அது கடத்தல் சிலைகள் என கண்டறிய பட்டு , சிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் கைது செய்ய பட்டார். அவரிடத்தில் , போதிய ஆவணங்கள் இல்லை என கூறபடுகிறது.

அப்போ ஆவணங்கள் சரியாய் இருந்தால்  , நம் நாட்டின் பழங்கால சிலைகளை ஏற்றுமதி செய்யலாமா ? என்னப்ப இது நியாயம் ?

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...