Tuesday 24 March 2015

இங்கிலீஷ் மோகம்

" தமிழன் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவான் "
"தமிழன் தன்னை பற்றியே தற்பெருமை பேசுவான் "
" தமிழனுக்கு வேறு மொழிகள் தெரியாது "
"தமிழனுக்கு தலைமை பண்பு கிடையாது"
"தமிழ் என்று கூறி விட்டால் தமிழனை எளிதில் ஏமாற்றி விடலாம் "
"தமிழன் தமிழ் புராணம் பாடுவான் "

இப்படி எல்லாம் பேசுபவர்கள் ஒரு புறம் இருக்க மற்றொருபுறம்

தமிழர்கள் குறிப்பாக தமிழ் பெண்கள் கூறுவதாவது ,

" நான் தான் ஹிந்தி படிக்க வில்லை , என் பிள்ளையாவது படிக்கட்டும்"
"நான் தான் இங்கிலிஷ்ல சரியாய் பேச முடியல , என் பிள்ளையாவது நல்ல இங்கிலீஷ் ஸ்கூல் ல படிச்சு , 5 வசுலையே டாக்டர் ஆகட்டும் என்று சிலர் கூறுகின்றனர் . 

இதையெல்லாம் தாண்டி , சிலர்

பிள்ளைகளை பிரெஞ்சு , ரஷ்ய மொழி , சீனா மொழி, சமஸ்கிருதம் என்றெல்லாம் படிக்க வைக்க முயற்சி எடுத்து சில பல லட்சங்களை செலவிடுகின்றனர்.

இன்னும் சிலர் வீட்டில் பிள்ளைகள் தமிழில் பேச கூடாது , தமிழ் புத்தகங்கள் படிக்க கூடாது , டிவி யில் தமிழ் நிகழ்ச்சிகள் பார்க்க கூடாது என்று கண்டிப்பதுடன் ,
"நீ தமிழ் படிச்சா உருபடவே மட்ட " என்று சாபத்தையும் சேர்த்து பரிசாக கொடுக்கிறார்கள் .

தமிழா ,

நம்மை போல் சாபம் பெற்றவன் இவ்வுலகில் இருக்கவே மாட்டான் 
\
நம்மை போல் தாழ்வு மனப்பான்மையால் , பிறரின் கற்பிதங்களை உடனே ஏற்பவன் இவ்வுலகில் பிறந்திருக்க மாட்டான் .

ஒரு கதை உண்டு

ஒருவன் அதிகாலையில் எழுந்து , குளித்து முடித்து அலுவலகம் கிளம்பினானாம் . அவன் வீட்டிலிருந்து வெளியில் வரும் போது அவன் பாட்டி  அவனிடம் கேட்கிறார் . " என்னப்பா உடம்புக்கு முடியலையா " முகம் சுணக்கமா இருக்குதே என்று " நான் நல்லதனே பாட்டி இருக்கேன் என்று கூறியவன் ,  பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கிறான் , அங்கு வரும் அவன் நண்பன் கேட்கிறான் " என்னடா டல்லா  இருக்கே ? உடம்புக்கு முடியலையா ?
இப்போது அவனுக்கு சிறிது சந்தேகம் வருகிறது. நம் முகம் வாடி இருக்கிறதோ என்று . இருந்தபோதிலும் , எனக்கென்னட நான் நல்லாத்தான் இருக்கேன் என்று பதில் கூறுகிறான்
பேருந்தில் ஏறியவன் அதே சிந்தனையில் இருக்கிறான் , அலுவலகம் சென்றதும் மேலும் இருவர் அப்படியே கேட்கிறார்கள் , மாலை வீடு திரும்புவதற்குள்ளாக 5 பேர் அவனிடம் கேட்டு விட்டனர். இரவு முழுவதும் அவன் தூங்க வில்லை . மறு நாள் காலையில் எழுந்த போது , அவனால் எழுந்திருக்க முடிய வில்லை , அவன் சோர்ந்து விட்டான் . அவன் உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது .


இந்த கதை போலதான் ஆகிவிட்டது தமிழனின் நிலையும் .
தமிழனுக்கு வேறு மொழிகள் தெரியாது, இது தெரியாது , அது தெரியாது என்று ஏகப்பட்ட கருத்து மழையில் நனைந்து , நனைந்து இன்று தமிழனின் அறிவில் எதுவும் நிரூபிக்க வழி தெரியாமல் போன நிலை வுருவாகி விட்டது .

அதிலும் பெண்கள் சொல்லவே வேண்டாம் . எதோ எல்லோரும் லண்டனில் இருப்பது போலவும் , சொந்த தாய் மொழியே வராமல் அவதி படுவது போலவும் , அந்த ஸ்கூல் நல்ல இங்கிலீஷ் சொல்லி தர்றாங்களா இந்த ஸ்கூல் நல்ல இங்கிலீஷ் சொல்லி தர்றாங்களா என்று ஆய்வு செய்து , விடியற் காலை , கோழிகூவும் முன்பு ஸ்கூல் வாசலில் நின்று , ஸ்கூல் தனி பட்ட முறையில் விளம்பரம் எதும் செய்ய வேண்டியதே இல்லை . இங்கு வரிசையில் நின்று சேர்க்கை form வாங்கி இது தாங்க இந்த உலகத்திலேயே சிறந்த ஸ்கூல் என்று வுரெல்லாம் சொல்லி , அப்பப்ப இவர்கள் செய்யும் சேட்டைக்கு அளவில்லாமல் போய்விட்டது . தட்டி கேட்க ஆளே இல்லை தமிழ் நாட்டில் . இத்தனைக்கும் இன்றைய பெற்றோர் எல்லாம் படித்தவர்கள்.
முழுமையாக படிப்பறிவு இல்லாத இவர்கள் பெற்றோர், இவர்களையெல்லாம்
முன்னேற்றி விட்டது எதற்காக என்றால் , இலவசமாக சில பல பள்ளிகளுக்கு விளம்பரம் கொடுக்கத்தான் . இதேலே பெருமை வேறு .

எதோ வாஸ்கோட காம , இந்தியாவிற்கு வழிதேடிய போது , இந்தியாவின் எல்லா மொழிகளையும் கற்றுக்கொண்டு ,வந்தது போல ஒரு நினைப்பு . அப்படி அவன் கற்று கொண்டுதான் இந்தியாவிற்கு வழி தேடுவேன் என்று நினைத்திருந்தால் , இந்தியவிற்கு வழியே கண்டு  பிடித்துருக்க மாட்டான்.

முதலில் இவர்களெல்லாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் . தாய் மொழி அறியாதவன் , எம்மொழியிலும் முழுமை பெற முடியாது . எந்த கருத்தையும் ஆய்வு செய்ய இயலாது.


இதை விட முக்கிய செய்தி என்னவென்றால் ,  வருங்காலத்தில் அவர்கள் தலையாட்டி பொம்மைகளாய் மாறி போவார்கள் . ஏனெனில் அவனுக்கு தான் நல்லது கேட்டது எதுவும் தெரியாதே . பிற மொழி பேசுவான் . அவ்வளவு தான் . ஆனால் அது  அறிவு அல்ல .


இன்றைய பள்ளிகள் மொழியை கொடுக்கின்றன , அறிவை கொடுக்க வில்லை .
புதிதாக ஒரு ஊருக்குள் நுழையும் பொது அந்த நீர் நம் வுடலில் சேர என்ன செய்ய வேண்டும்
நீரிலே முழுகும் நிலையில் உள்ள ஒருவனை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்
திடீரென தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும்
விலங்குகளிடமிருந்து காப்பாற்றி கொள்ள என்ன செய்ய வேண்டும்
மற்றவர்களிடம் எப்படி உரையாட வேண்டும்
இரவு நேரங்களில் நம்மை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும்
குளிர் தருணங்களில் என்னென்ன வுட்கொள்ள வேண்டும்
வெயில் நேரத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும்
சிறு சிறு சட்ட பிரச்சனைகளை எப்படி அணுகுவது
தோட்டம் அமைப்பது எப்படி
நீர் தேங்காமல் காப்பது எப்படி
எந்தெந்த கனிகள் நம் வுடல் நலனுக்கு ஏற்றது
படித்து முடித்ததும் என்னென்ன வேலைகள் செய்யலாம்
எப்படி விற்பனை செய்யலாம்
அரசியல் என்றால் என்ன
வரதட்சினை என்றால் என்ன
சீதனம் என்றால் என்ன
இதையல்லாம் கடந்து ஒரு ஆண் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
ஒரு பெண் , ஒரு ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
இருவரும் அறிவு ரீதியாக சமம் ஆயினும், ( என்னதான் நாமெல்லாம் இங்கிலீஷ் இங்கிலீஷ் என்று கூவினாலும் , லண்டன் பெண்களை போல் நம் வீட்டு பெண்ணை ஒப்பு கொள்ள மாட்டோம். நம் வீட்டு ஆணை விட்டுவிட மாட்டோம் . இங்கு மட்டும் நாம் தமிழ் நாட்டில் வாழ்கிறோம் என்று நினைவுக்கு வந்து விடுவோம் .  வரதட்சினை பிரச்னை வரும்போது நாம் தமிழர்கள் ஆகி விடுவோம் . என்னே தமிழன்)

இவை போன்று இன்னும் எத்தனையோ வாழ்வியல் விசயங்கள் சொல்லிதர நம் பள்ளிகள் தயார் இல்லை. அதை ஒப்பு கொள்ள பெற்றோர் தயாரில்லை . குறிப்பாக தாய்மார்கள் . இன்று இவர்கள் தாய் மொழியை விட்டுகொடுக்க கூறுகிறார்கள் , நாளை அவன் தாயையும் சேர்த்து  தான் விடுவான் . மறந்து விடாதீர் . அவன் ஒன்றும் பொம்மை அல்ல . ஆட்டுவிக்க .

பாவம் குழந்தைகள் , அவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் வேலைக்கு சென்று காசு சம்பாதிக்க , குழந்தைகளையும் , அவர்கள் கல்வியையும் ஒரு காரணம் ஆக்காதீர்கள் .
 உங்களின் இது போன்ற , ஆசைகள் தான் , இன்று பல தவறுகளுக்கு காரணம் . வீட்டிற்குள் நுழையும் குழந்தைக்கு பேச கூட ஆள் இல்லை. அநாதை போல் அலைகிறான் . பெரிய பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று கூறி தாயும் வேலைக்கு சென்று , அவனை அநாதை ஆக்குவதை விட , சிறிய பள்ளியில் படிக்க வைத்து , குறைந்த பட்சம் தாயின் அன்பையவது கொடுங்களேன் .

பள்ளியிலும் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி தரப்போவது இல்லை
வீட்டில் தாயும் இல்லை . நாளை அவனுக்கு பெண்ணிடம் பேசும் முறைகள் கூட தெரியால் போகலாம்
 உங்கள் இங்கிலீஷ் மோகம் , ஒரு குழந்தையை கயவனாக மாற்றும்  ஒரு குழந்தையை முட்டாளாக மாற்றும்
உங்களை லஞ்சம் வாங்கவும் தூண்டும் .

வேண்டாம் , நாளைய தவறுகளை இன்றே சரி செய்வோம் .
அவன் நம் குழந்தை
இது நம்  மொழி
இது நம்  நாடு








Monday 9 March 2015

பெண்மையை மதிப்போம்

தீட்டு எனும் வழக்கம்  

ஒரு பெண் பூபெய்தும் போதும் , மாதந்தோறும் விளக்காகும் போதும் அது தீட்டு . 

இங்கு தவறான புரிதல்கள் கற்பிக்க பட்டுள்ளது. ஒரு பெண்ணின் உடல் நிலையானது மாதந்தோறும் சில ஓய்வு நிலைக்கு வரும் பொழுது , அவளை பிறர் துன்புறுத்தவோ , அவளுக்கு தொந்தரவுகள் கொடுக்கவோ கூடாது என்பதற்காக உருவாக்க பட்டது. இதில் பலன் அடைய வேண்டிய பெண் இக்காரணத்தாலேயே அவமானத்திற்கு ஆட்படுவது எப்படி.? எவரோ கொடுத்த கற்பிதங்கள் . இந்த அவமானத்தில் இருந்து வெளி வருதாய்  எண்ணி பெண்கள் அத்தருணங்களில் ஒய்வு எடுக்காமல் , எல்லா வேலைகளையும் செய்வது உடலுக்கு ஏற்படுத்தும் கேடு ஆகும். ஒய்வு நாளை ஓய்வாகவே அணுகலாமே. சமுதாயமும் இதை அனுமதிக்கலாமே !


ஒரு பெண் குழந்தை பெறும்போது அது தீட்டு .16 நாட்கள் அவள் வீட்டின்  கொல்லைபுறத்திலோ , அல்லது தனி அறையிலோ இருக்க வேண்டும் . 

இங்கும் பெண் ஏதோ தவறிளைதவள் போல அணுகப்பட்டு இந்நிலையும் மாறி விட்டதனால் , குழந்தை பிறந்த 7 தினங்களுக்குள் அவள் ஒய்வு நிலை மறுக்க படுகிறது.
குழந்தை பிறந்தவுடன் , பெண்ணுக்கு ரத்தபோக்கு அதிக அளவில் இருக்கும். அதோடு மட்டுமல்லாது பிறந்த குழந்தைக்கும் , பால் அருந்த ஏற்றவாறு பெண் தன் உடல் நிலையை தயார் செய்ய வேண்டும்.
பிள்ளை பிறந்ததால் ஏற்பட்ட உடல் மாற்றத்தை அந்த 16 நாட்களுக்குள் அவள் குறைக்க முயற்சிக்க வேண்டும் .
தாயின் வயிற்றில் இருந்து வெளியில் வந்த வுடன் , அந்த குழந்தை அவள் வுடல் அசைவுகளை தேடி கொண்டே இருக்கும் . அதில் இருந்து அக்குழந்தை வெளி வர 16 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்.
குழந்தையின் தொப்புள் கொடி கீழே விழுவதற்கு குறைந்த பட்சம் 7 நாட்கள் முதல் அதிக பட்சம் 16 நாட்கள் ஆகும்.
16 நாட்களுக்குள் குழந்தை வெளி வுலகிற்கு பழகி விடும் . இந்த வெப்பத்தை, இந்த காற்றை, இந்த குளிர்ச்சியை தன் வுடளுக்குள் ஒப்பு கொள்ளும். அதற்க்கு முன்னதாக பலரும் குழந்தையை தூக்கவோ , எடுக்கவோ செய்தால் அது குழந்தையின் வுடல் நலத்திற்கு நல்லது அல்ல .
மேற்காணும் காரணங்கள் பெண்ணின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டவை. இது தீட்டு அல்ல . மருத்துவமனையில் வெளியில் செருப்பை கழற்றி போடுவதால் உள்ளே இருப்பவர்களெல்லாம் தீட்டனவர்கள் அல்ல

மரணம் நிகழ்ந்த வீடு. தீட்டு , அங்கு தண்ணீர் குடிக்கவோ , 16 நாட்கள் வரை வுனவருன்தவோ கூடாது. இது சம்மந்தி புறத்தாருக்கு மட்டும். பங்காளி உறவுகளுக்கு அல்ல.

இது கொஞ்சம் சரிங்க . ஒருவர் இறந்த வீட்டில் , இறந்தவரின் உடலில் இருந்து வெளியேறும் துர்நீரானது , அவ்விடத்தில் சுழன்று கொண்டே இருக்கும் . அதிலும் இறந்தவர் தொற்று நோய்க்கு ஆளாகி இறந்திருந்தால் கண்டிப்பாக இதை அனுசரிக்க வேண்டும் . இறந்தவறின் , நெருங்கிய வுறவுகளாகிய மனைவி, குழந்தைகள் ஆகியோர் அடுத்த 16 நாட்கள் வரை வீட்டை சுத்தம் செய்து , அன்றாடம் தலை குளித்து நோய் தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லை என் தந்தையோ , தாயோ  எந்தவித தொற்று நோயினாலும் இறக்க வில்லை என்று நிரூபிக்க விரும்புபவர்கள் மொட்டை அடித்து தலை முதல் பாதம் வரை நான் சுத்தமாகவே இருக்கிறேன் என்று வெளி உலகிற்கு காட்டுகின்றனர் . அதற்கக்காக இறந்தவருக்காக மரியாதை செய்வதை தவிர்க்க கூடாது. வருபவர் எவரும் எவ்வித பாதிப்புக்கும் ஆளாக கூடாது என்பதற்காகத்தான் குழந்தைகள் கைகளில் நெய் பந்தம் கொடுக்கிறார்கள். அது தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கும். அதையும் கடந்து வந்தவர்கள் அனைவரும் வீட்டிற்க்கு  வந்தததும் குளித்து திருநீறு இட வேண்டும்.

ஆனால் எல்லா இடங்களிலும் பெண்ணை தண்டிப்பது நியாயம் அல்ல. காரணங்கள் அறிந்து கொள்வோம் . பெண்ணிற்கு தேவையான நேரங்களில் ஒய்வு கொடுப்போம். இதிலிருந்து விடுதலை அளிப்பதாய் எண்ணி கொண்டு நீ இத்தருணங்களில் கூட வேலை செய்யலாம் என்று அறிவாளிதனமாய் கூறி, அவளது ஓய்வை தட்டி பறிக்க வேண்டாம் . அவளை தனியே ஒதுக்கவும் வேண்டாம் .

Thursday 5 March 2015

ராமாயணம் - கொஞ்சம் யோசிப்போம்


  • இராவணன் எனும் தமிழன் பிறன்மனை நோக்கிய பாவியா?
  • ராவணனின் தந்தை குறித்த கருத்துக்கள் :
  • பெயர் : விஷ்ரவா ( வேசமுனி ) பிராமண தந்தை
  • மனைவிகள் : மூவர்
  • முதல் மனைவி : பிராமண பெண்
  • பிள்ளைகள் : குபேரன்
  • இரண்டாவது மனைவி : தைத்யா ( ராக்ஷசி )
  • பிள்ளைகள் : ராவணன். சூர்ப நகை , கும்ப கர்ணன், அதிரவன்
  • மூன்றாம் மனைவி : பிராமண பெண்
  • பிள்ளைகள் : விபீஷணா , காரா, துஷானா , கும்பினி
  • ராவணன் குறித்த கருத்துக்கள் :


  • முதல் மனைவி : மண்டோதரி
  • இரண்டாவது மனைவி : மாயா 
  •   
  • மூன்றாம் மனைவி : தன்ய மாலினி 
  • மகன்கள்
  • மேஹநாத் , அதிகயா , அக்ஷய குமாரா , தேவந்தகா , நரந்தகா, திரிசிரா, பிரகஸ்தா  
  • வால்மீகி எந்த ஊரை வர்ணித்தாரோ அந்த ஊரின் பெயர் சாகேதம்
  • இவை எல்லாம் வால்மீகி தன்னுடைய ராமாயணத்தில் கூறியவை.
  • ஆனால் வேத காலத்தில் இது போன்ற பெயர்கள் புழக்கத்தில் இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.
  •   
  • வால்மீகி எந்த ஊரை வர்ணித்தாரோ அந்த ஊரின் பெயர் சாகேதம் 
  • ராமாயணம் எழுதப்படும் வரை அயோத்திய என்ற ஊர் பெயரே கிடையாது. 
  • அது மன்னன் புஷயமித்ரனின் தலை நகரம் . வால்மீகி அவனது அவைக்கள புலவர் . எனவே தலைநகரதிற்கு பெயர் மாற்றி வர்ணித்து இருக்கிறார். 
  • தசரதன் என்ற மன்னன் வாழ்ந்தது உண்மை. ஆனால் அவன் ஜாதக வம்சத்தை சேர்த்தவன் என்றும் , அவன் ஆண்டது காசியை என்றும் வரலாறு கூறுகிறது. 
  • ராவணன் எனும் மன்னன் வாழ்ந்தது உண்மை . அதை இலங்கையின் மலை குகை கள் கூறுகின்றன. 
  • இராவணன் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியன் . அவனிடத்தில் புஷ்பக விமானம் இருந்துள்ளது.
  • இசையிலும், கல்வியிலும், சிறந்தவன்,
  • அதற்கு காரணம் கூறுகிறார் வால்மீகி. ராவணனின் தந்தை பிராமணன் . அதனால் அவன் கல்வியிலும், இசையிலும் சிறந்து விளங்கினான்.
  • ஆனால் அவன் தாய் ஒரு ராக்ஷசி . அதனால் அவனிடத்தில் கெட்ட குணங்கள் வந்தது என்று 
  • சில கேள்விகள் :

  • 16000 திருமணம் செய்து கொண்ட தசரதன் நல்லவனா? எப்படி அவ்வளவு பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும்.
  •  இதற்க்கான விடையை இன்று வரை நம் திருமணங்களில் வேதம் ஓதும் புரோகிதர்கள் கூறி கொண்டு இருக்கிறார்கள். அதாவது நம் திருமணங்களில் ஓதப்படும் மந்திரத்தின் அர்த்தம் இதுதான். இந்த பெண்ணானவள் அக்னிக்கு மனைவி ஆகிறாள் . இரண்டாவதாக மன்னனுக்கு மனைவி ஆகிறாள். மூன்றாவதாக வேதம் ஓதும் பிராமணனுக்கு மனைவி ஆகிறாள். பிறகு எனக்கு மனைவி ஆகிறாள். இதைதான் திருமணத்தின் போது மணமகன் கூற வேண்டிய மந்திரமாக புரோகிதர் சொல்லி தருகிறார். இந்த மந்திரத்தின் படி மணமகள் மன்னனுக்கு மனைவி . அந்த அடிப்படையில் தான் தசரதனுக்கு ஏகப்பட்ட மனைவிகள். ராமனின் தந்தை ஊரில் உள்ள அடித்தட்டு மனிதனின் மனைவியையும்  தன் மனைவியாக மாற்றுகிறான் எனில் தசரதன் செய்தது சரியாய் தெரிந்ததா  ராமனுக்கு ?
  •          
  •  ராவணன் ஆட்சி செய்த இடம் , அந்த எல்லையானது வடஇந்தியா வரை பரவி இருந்ததாக வால்மீகியே எழுதுகிறார். அப்படி இருக்க சீதையை, தவறான எண்ணத்தோடு கடத்துவதற்கு கானகம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • ராவணன் என்றால் அழுமூஞ்சி என்று சமஸ்கிருதம் பொருள் கூறுகிறது . ஒரு பிராமண தந்தை அழுமூஞ்சி என்றா  பெயர் வைக்கிறார்.
     ராவணன் என்றால் இறால் வண்ணன் என்றும் வீரம் பொருந்தியவன் என்றும் தமிழ் அல்லவா     பொருள் கூறுகிறது. எனில் ராவணின் தந்தை பிராமணன்  அல்ல. நாட்டில் எவர் திறமைசாலியாக இருந்தாலும் சரி அவனுக்கு தந்தை பிராமணன் தான் என்று கூறும் வழக்கம் ஆரியர்களுக்கு ஒன்றும் புதிது அல்ல.

     ஹனுமான் என்னும் திறமைசாலி .இவன் பிறந்தது தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனுமன் மலை.

     அவன் தந்தையும் வாயு என்னும் பிராமணன் தான் என்கிறார் வால்மீகி.

     பிராமணர்களால் பிறக்கும் குழந்தைதான் அறிவாளி , திறமைசாலி, பலசாலி 
     உலகின் எந்த மூலையில் ஒரு திறமையானவன் பிறந்தாலும் அவன் தாய் களங்கம் கற்பிக்க படுகிறாள் . என்ன நியாயம் இது.? { தொல்காப்பியரின் தந்தைகூட பிராமணன் தானாம் .} { பல்லவ சாம்ராச்சியத்தின் தலைசிறந்த மன்னன் மகேந்திரவர்ம பல்லவன் கூட பிராமணன் தானாம் . குறிப்பாக மகாபாரதத்தில் இறந்து போகாமல் தப்பிய அஸ்வத்தாமன் வழிவந்தவனாம் . இந்த கதையலேயே காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவர்களை தமிழ்தான் என்று சொல்ல சிறு தயக்கம் ஏற்படுகிறதாம். }






     புஷ்யமித்திரன் ஆட்சி வந்த காலத்தில் மக்கள் எல்லோரும் ராவணன் என்பவன் மீது கொண்டிருந்த அதித நம்பிக்கையை அழிக்க வேண்டி அவன் அவைக்கள புலவரால் இக்கதை எழுத பட்டிருக்கலாம்,
   
     அவன் மிகவும் நல்லவனயிற்றே என்று கேள்வி எழும்பியதால் அவன் தந்தை கதையும் எழுதுகிறார் வால்மீகி. { அவன் கெட்டவனாயின் இன்று வரை மகாராஷ்டிர மாநிலத்தில் கன்யா குப்ஜா பிராமணர்கள் ராவணனுக்கு தினமும் பூஜை செய்ய மாட்டார்கள். கன்யா குப்ஜா பிராமணர்கள் எனப்படுபவர்கள்  தசரத மன்னன் காசியை ஆண்ட காலத்தில் காசியில் வாழ்ந்த மக்கள் . தங்கள் பெருமை எங்கு போனாலும் தெரிய வேண்டும் என்பதற்க்காகவே தங்கள் பெயருக்கு பின்னால் கன்யா குப்ஜா என்று இணைத்து கொண்டவர்கள். }
     
     ராமாயண இடங்கள் எல்லாம் கி.பி.12 ம் நூற்றாண்டிற்கு முன்பு வுருவான இடங்கள் அல்ல . 
  • எந்த கருத்தையும் காலத்தை வைத்து குறிப்பிடுங்கள்.
  • ராமேஸ்வரம் பாலம் கட்டியது ராவணன் என்னும் தமிழ் மன்னன் என்றால் ஒப்புகொள்ள கூடாதா?
  • சோழர் காலத்திற்கு முன்பு ராம வரலாறு தமிழ்நாட்டிற்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை 
  • பல்லவர்களால் மகாபாரதம் மட்டுமே பரவி இருந்தது
  • கம்பரின் ராமாயணம் வந்த பிறகுதான் ராம வரலாறு , சோழர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் பரவி இருக்க வேண்டும் . 
    

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...