Sunday 6 June 2021

சூப்பர் நெல்

 இஸ்ரேல் இப்போ புதிய வகை நெல்லை கண்டுபிடித்து விட்டது .அதனால்,நெல் உற்பத்தியின் மீது மிகப்பெரும் குற்றச்சாட்டு வந்துள்ளது.அரிசி உற்பத்தியினால் தான் உலகம் வெப்பம்அடைகிறதாம்.




தொழிற்சாலைகளோ ,சுரங்கம் அமைப்பதோ ,மீத்தேன் ,பெட்ரோல் எடுப்பதோ காரணம் இல்லை போல !நெல் உற்பத்தி செய்வது தான் காரணமாம்.அதிக படியான நீரை நெல்லுதான் உறிந்து இந்த மண்ணின் நீர் வளத்தை கெடுகிறதாம்.

ஏற்கெனவே,எங்கெல்லாம் தொழிற்சாலைகள் அதிகமோ அங்கெல்லாம்,மக்கள் நீர் பிரச்னைச்சை எழுப்ப கூடாது என்பதற்காக ,சொட்டு நீர் பாசனம் அறிமுகப்படுத்தி அம்மக்களிடம் இருந்து வர வேண்டிய கேள்விகளை தடுத்தாகி விட்டது.

இப்போ அதையும் தாண்டி புதிய வகை நெல்லை இஸ்ரேல் கண்டுபிடித்து விட்டது.




இங்கு விவசாயத்தில் நடந்த எல்லா மாற்றங்களும் இஸ்ரேல் அவங்க நாட்டின் பற்றாக்குறை நீர் ஆதாரத்துக்காக கண்டுபிடித்தது.

ஆனால் அங்கு பலன் தர'வில்லை.

அதனால் இஸ்ரேலுக்கு ஏற்ற சிறந்த சந்தையாக இந்தியா விளங்குகிறது .

இப்போ இஸ்ரேல் புதிய நெல் வகையை கண்டுபிடித்துள்ளது.நீர் அதிகம் தேவையில்லாத விதை அது .அந்த 

சூப்பர் நெல் தான் உலகம் வெப்பமயமாதலை தவிர்க்குமாம்.

எனவே 

புதியவகை நெல்லுக்கு அறிமுகமாக ,நெல் உற்பத்திதான் அதிக மீத்தேனை வெளியிடுகிறது என்று கூறப்படுகிறது .

எனில் இங்கு தண்ணீர் பிரச்சனையே இருக்காதாம் !இது அப்பட்டமான பொய் அல்லவா?

கார் உற்பத்தி,பேப்பர் உற்பத்தி ,ஆடை உற்பத்தி என்று ஏகப்பட்ட நிறுவனங்கள் இருக்க நெல்லின் மீது பழி போடுவது ஏன்?

ஏனெனில் புதிய  நெல் வருவது மட்டும் காரணம் அல்ல.

அதிகஅளவில் மின்சார கார்களும் உற்பத்தி ஆகப்போகிறது. எனவே விவசாயத்திற்கு போக வேண்டிய நீர், நீர்மின்சக்திக்கு பயன்படப்போகிறது.

மின்சார கார் மாசை கட்டுப்படுத்தும் என்று எண்ணினாலும்,அதன் உற்பத்தி பயன்தரும் என்றாலும் ,

புதிய வகை நெல்லில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பது விளைச்சலுக்கு பிறகே வெளியில் வரும்.


https://www.bbc.com/tamil/science-57365399





தண்ணி இல்லாமல் ,மண்ணு இல்லாமல் விவசாயம் செய்வது என்று எதுவெல்லாம் இயற்க்கைக்கு எதிரானதோ அதையெல்லாம் ,மக்களிடம் விற்பனை செய்ய இப்போ கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் போல,
இந்த உலகம் வெப்ப மயமாதல் !




No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...