Monday 7 June 2021

மொழி

 இரெண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை படித்தேன் .அதில் கன்னியாகுமரி ,நாகர்கோவில் ,மக்கள் தவிர பிறருக்கு மீன் குழம்பு வைக்கவே தெரியாது .என்று கூறி இருந்தார்கள்.

பிறகு ஒரு பதிவில் ,தென் மாவட்டங்களில் அகத்தி கீரை என்ற ஒன்றை சமைப்போம் .அது உடலுக்கு மிகவும் நல்லது என்று பதிவு செய்து இருந்தார்கள்.
இது போலவே மதுரை ஆண்கள் தான் வீரமானவர்கள் !
தஞ்சையில் மட்டும் தான் விவசாயம் நடந்தது.நடக்கிறது.

என்பதெல்லாம் என்ன மாதிரியான சிந்தனை என்றே புரிய வில்லை.
இதே போலவே தமிழும் திண்டாடி நிற்கிறது.

தென்  மாவட்டத்தில் தான் தமிழ் தோன்றியது .
என்று அலட்டி கொள்ளும் யாரும் தமிழின் அறிவியல் பற்றி பேசுவதே இல்லை .முற்றிலும் அலோபதி மருத்துவம் தான் சிறந்தது என்று கூறி கொள்கிறார்கள்.


மொழிகள் சமகாலத்தில் இருந்திருக்கலாம்.
இன்று கிருஷ்ணகிரி மக்களின் மொழியும்,திருவண்ணாமலை மக்களின் மொழியும் ,குமரி மாவட்ட மக்களின் மொழியும் ,தஞ்சை மாவட்ட மக்களின்
மொழியும் ஓரளவிற்கு வேறுபடவே செய்கிறது.

இதில் காலப்போக்கில்,அவரவர் வாழும் இடத்திற்க்கு ஏற்ப உச்சரிப்பு மாறி இருக்கலாம் .

எனவே ஒன்றை விட ஒன்று உயர்ந்தது .இங்கு மட்டும்தான் எல்லாம் தோன்றியது என்று எண்ணினால் ,அது மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு பயன்படாது.










No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...